புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெங்காயம் சுக்கானால்...... Poll_c10வெங்காயம் சுக்கானால்...... Poll_m10வெங்காயம் சுக்கானால்...... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வெங்காயம் சுக்கானால்...... Poll_c10வெங்காயம் சுக்கானால்...... Poll_m10வெங்காயம் சுக்கானால்...... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வெங்காயம் சுக்கானால்...... Poll_c10வெங்காயம் சுக்கானால்...... Poll_m10வெங்காயம் சுக்கானால்...... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வெங்காயம் சுக்கானால்...... Poll_c10வெங்காயம் சுக்கானால்...... Poll_m10வெங்காயம் சுக்கானால்...... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வெங்காயம் சுக்கானால்...... Poll_c10வெங்காயம் சுக்கானால்...... Poll_m10வெங்காயம் சுக்கானால்...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெங்காயம் சுக்கானால்...... Poll_c10வெங்காயம் சுக்கானால்...... Poll_m10வெங்காயம் சுக்கானால்...... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
வெங்காயம் சுக்கானால்...... Poll_c10வெங்காயம் சுக்கானால்...... Poll_m10வெங்காயம் சுக்கானால்...... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
வெங்காயம் சுக்கானால்...... Poll_c10வெங்காயம் சுக்கானால்...... Poll_m10வெங்காயம் சுக்கானால்...... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வெங்காயம் சுக்கானால்...... Poll_c10வெங்காயம் சுக்கானால்...... Poll_m10வெங்காயம் சுக்கானால்...... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
வெங்காயம் சுக்கானால்...... Poll_c10வெங்காயம் சுக்கானால்...... Poll_m10வெங்காயம் சுக்கானால்...... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயம் சுக்கானால்......


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 11, 2010 10:10 am

வெங்காயம் சுக்கானால்......


சர்வசாதாரணமா நமக்கு என்னென்ன நோய் வருகிறது என்று பார்த்தால் முக்கியமாகத் தலைவலி. எண்சான் உடலுக்குத் தலையே பிரதானம்என்று கூறுவதைக் கேட்டு இருப்போம். ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றி பேசும்போது, அது ஒரு பெரிய தலைவலி என்று அடிக்கடிசொல்ற அளவுக்கு ரொம்ப பிரசித்தி பெற்றது இந்தத் தலைவலி.

ஒரு சிலருக்கு அடைமழை போல லேசான தலைவலி நாள் முழுவதும்இருந்து கொண்டே இருக்கும். இது நம்மைப் பறபறப்பாக ஓடவும் விடாது. ஓரிடத்தில் உட்காரவும்விடாது.

இன்னும் சிலருக்கு உண்மையாகவே இரண்டு பேர் தலைக்குள்சுத்தியலால் முடிஞ்ச்வரைக்கும் பலமா அடிப்பது போல இருக்கும். இது இடி ரகத் தலைவலி.கிராமப்புறத்தில் இதனை மண்டை இடி என்று கூறுவார்கள். சிலருக்குக் கழுத்தில் தொடங்கிகண்கள், உச்சந்தலைவரைக்கும் நரம்பு வழியாக ஒரு தலைவலி எக்ஸ்பிரஸ் பாஸ் ஆகும். இது மண்டைக் குத்தல் ரகம். இது குளித்த பின்பு சரியாகத்தலை துவட்டாமல் விடுவதால், தலையில்நீர் கோத்துக் கொள்வதால் ஏற்படுகிறது. எக்ஸ்பிரஸ்ஸோ பாசஞ்சரோ எதுவாக இருந்தாலும் வந்துட்டாஒரே தலைவலிதான்.

எண்சான் உடலில் ஒரே ஒரு சாண் தான்வயிறு. இதில் தான் இருக்கிறது உயிர் பொம்மலாட்டத்தின் சூட்சுமக் கயிறு. ஒரு பெண்துறவியாய்ச் சுற்றித் திரிந்த ஒளவையாருக்கே தொல்லை கொடுத்த உறுப்பு வயிறு என்றால்நம்புவீர்களா? வயிறுபடுத்தும் பாடு பற்றி ஒளவை பாடுவதைப்பாருங்கள்.

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்
ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர்
- என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது.

என்னதான்வயிறோட வாழ்ந்து குப்பைக் கொட்ட முடியாது என்று ஒளவை சொன்னாலும் வயிறை நாம்குப்பைக் கூடை போல் நிரப்பிக் கொண்டே இருந்தால்!? உபரி உணவுகளான நொறுக்ஸுக்குத்தடை போடுவது தான் நல வாழ்வுக்கு ஒரே விடை என்று எவ்வளவு தான் படித்தாலும் நம்மூளைக்குப் புரியும் அளவு நாசமாப் போன நாவுக்குப் புரிவது இல்லையே.

”பந்தியில்நின்றாய் முந்தி
பரிசாய்ப்பெற்றாய் நல் தொந்தி,
அதுகுருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில்இயங்கும் இதயம் விந்தி
முடிவில்சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும்இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய்பந்திக்குச் சற்றே பிந்தி

என்றபுதுப்பாடலும் உணவுக் கட்டுப்பாட்டினைப் பற்றிக் கூறுவதே.

அட நொறுக்குத் தீனிகளை விடுங்க, முதன்மை உணவேகூட அளவுக்கு அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும், அல்லது உருளை, சேனை என்றுஎதையாவது நாக்கு ருசி பார்த்து விட்டாலும் சரி வயிற்றுக்குள் வாயு பகவானின் ஆட்சி ஆரம்பித்து விடும். அசிடிடி,அப்புறம் ஒரே உப்பிசமாக இருக்கிறது என்பார்கள், நெஞ்சைக் கரிக்கிறது என்பார்கள்,நெஞ்சுக்குத்தல் என்பார்கள், நெஞ்செரிப்பு என்பார்கள்.. தொப்புளைச் சுற்றி குத்திவலிக்கிறது என்பார்கள். பசியேப்பம் என்பார்கள், புளியேப்பம் என்பார்கள். ஒரேபுலம்பல்ஸ்தான் போதுமா வயிறு தொடர்பான நோய்கள்.

காது, மூக்கு, தொண்டை (ENT – ear , nose, throat) என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத்தொடர்புடையது. அதிலும் மூக்குத் தொடர்பான நோய்கள் உடனடியாகத் தொண்டைக்கு வேட்டுவைக்கும் சக்தி வாய்ந்தன. சளியினால் தொண்டையினால் கரகரப்பு, இருமல் கபம், மூச்சுஇரைப்பு போன்றவை. காதையும் பாதிக்கத் தவறாது. காது குத்தல் இது அதிக பனி, வாய்வுபோன்றவற்றால் ஏற்படுகிறது.

இந்த நோய்கள் மட்டுமல்ல, மூலம், வாதம்,காய்ச்சல் போன்ற அனைத்து நோய்களின் நிவாரினி யார் என்று கேட்டால் தி ஒன் அண்ட்ஒன்லி சுக்குதான் என்கிறது தமிழ் மருத்துவம். ’சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்ல; சுப்பிரமணியனுக்கு மிஞ்சியகடவுளுமில்லை” என்றபழமொழியும் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

தீபாவளி அன்று கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும்முக்கிய இடத்தைப் பிடிப்பது தீபாவளி மருந்து. இது சித்தர்கள் சொன்னது மட்டுமல்ல.நம்ம வீட்டு சித்திகள் வீட்டிலேயே கிண்டுவதும்தான். இந்த லேகியத்தில் பெரும்பங்குவகிக்கும் பலசரக்குப் பொருள் சுக்குதான். தீபாவளி அன்று அதிகாலையில் நாம்விழுஙகிடும் அத்த்னை பண்டங்களையும் ஜீரணிக்கும் சக்தி நம் வயிற்றை விட இந்தச்சுக்குத்தான் அதிகம்.

பொதுவாக எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டியகைமருந்து சுக்குப் பொடி. வயிறு தொடர்பான நோய் எதுவாக இருந்தாலும் உடனே வெந்நீரில்சுக்குத்தூளைக் கலக்கிக் குடித்தால் அஜீரணம், ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்றுஉப்பிசம், வ்யிற்று வலி, நெஞ்சுக்கரிப்பு, நெஞ்சு எரிச்சல் போன்றவை நீங்கும்.முக்கியமாக வாயு பகவானுக்கு முக்கிய எதிரி இந்தச் சுக்கு. வாயுவினால் ஏற்படும்நெஞ்சுக்குத்தலுக்கு உடனடி நிவாரணம் இதனால் கிடைக்கும்.

சுக்கை நன்றாகப் பொடி செய்து அதனுடன்வெல்லத்தையும் சிறிதளவு நெய்யையும் சேர்த்து ஒரு எழுமிச்சம்பழ அளவு தின்றால்நாவுக்குச் சுவையாகவும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும். பித்தத்தினால் ஏற்படும்வாய்க் கசப்பு நீங்கி நன்கு பசி எடுக்கும்.

சுக்குத்தூளைச் சூடான பாலில் கலந்துகுடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி போன்ற தொண்டை தொடர்பான நோய்கள் நீங்கும்.

வெறும்வாயில் சுக்கைப் போட்டு மென்று அதன் சாறை மட்டும் விழுங்க, குரல் கரகரப்பு,தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.

சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் எந்த தலைவலியானாலும் பறந்து போகும். சுக்குப் பற்றால் முழங்கால் மூட்டுவலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.


சிறிதளவு சுக்கினை லேசாகத் தட்டித் தண்ணீரில்போட்டுக் கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு (இரண்டும் இல்லாவிட்டால்சாதா வெல்லம்) தேவையான அளவு சேர்த்து வடிகட்டி குடித்தால் உடல் சுறுசுறுப்பாகஇருக்கும்.

காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு என்ற பழம்பாடல் ஒன்று நாள்தோறும்சுக்கு நம் உணவில் அமைய வேண்டிய அவசியத்தைக் கூறும். இஞ்சியின் உலர்ந்த நிலையேசுக்கு என்பது அனைவரும் அறிந்ததே. இத்தனை மருத்துவ குணம் கொண்ட சுக்கின் மருத்தகூறும் பாடல் இதோ.

சூலைமந்தம் நெஞ்செரிப்பு தோடஏப்பம் மழலை
மூலம் இரைப்பிருமல் மூக்குநீர் –வாலகப
தோடமதி சார்த்தொடர் வாத குன்மநீர்த்
தோடமஆ மம்போக்குஞ் சுக்கு

இப்போதுபுரிந்து இருக்கு ஏன் இத்தனை நோய்களுக்கான் பீடிகை என்று. மனிதனின் உள நோயைப்போக்கும் அறநூல் ’திரிகடுகம்’.
திரிகடுகம் என்பது மூன்று காரமான மருந்துப் பொருள்கள். சுக்கு, மிளகு, திப்பிலிஇம்மூன்றும் உடல் நோயைப் போக்கும் குணம் கொண்டவை என்றாலும் இம்மூன்றினுள்ளும்முதலிடம் பிடித்துள்ளது சுக்கே.

இது சிஞ்சிபெரசியே (Zingeberaceae) என்ற தாவரக் குடும்பத்தைச்சேர்ந்தது. இதன் தாவரப் பெயர் சிஞ்சிபெர் அசுபிசினேல்.(Zingiber officinale).நாகரம், விசுமஞ்சுண்டி, நல்லகோடதரம்,வேர்க்கொம்பு, சீதரம், சிங்கிகம், மாதிசம், அலறகட்டி, தன்னப்பி, சவுண்டம்,அருக்கன், அதகம், ஆர்த்ரகம், உபகுல்லம், உலர்ந்த இஞ்சி, கடுபத்திரம், சுண்டி,சொண்டி, செளவர்ணம், நவசுறு என்று பல பெயர்களில் தமிழ் நூல்களில்வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பு. ‘சுக்குபுற நஞ்சு; கடுக்காய் அகநஞ்சு’ என்பார்கள்.சுக்கின் தோலில் நஞ்சு இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக இஞ்சியைச் சமையலுக்குப்பயன் படுத்தும் போது தோல் எடுத்த பின்பே பயன்படுத்துவோம். ஆமாம் இஞ்சியில் இருந்துதோலை உரித்து விடலாம். சுக்கில் இருந்து எப்படி என்று கேட்பது புரிகிறது. கல்லில்இருந்தே நாரை உரிப்பவர்கள் இருக்கிறார்களே! சுக்கிலிருந்து முடியாதா? கொஞ்சம்முயற்சி செய்து பாருங்கள். அதுசரி..இதையும் நானேதான் கூற வேண்டுமா? சுக்கைச்சிறிதளவு தட்டிவிட்டு மிக்ஸியில் போட்டுத் தூளாக்கிய பின்பு சல்லடையில் போட்டுச்சலித்தால் தோல் எல்லாம் மேலே நின்று விடும்.

சளிபிடிக்க விடாமல் தடுக்கும் சக்தி சுக்குக்கு உண்டு சுக்கு உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்குகிறது. இதன் மூலம் சிக்கன்குனியா, பன்றிக்காய்ச்சல் இரண்டையும்கட்டுப்படுத்தும் குணம் சுக்குக்கு உண்டு என்று கண்டறிந்துள்ளனர்.

மாரல்: நீர் நிறைந்த இந்த உடலை வெங்காயம் என்பது சித்தர் பாணி. இந்த வெற்று உடலைச் சுக்காக்குவது அவர்களுக்குக்கை வந்த கலை. நாமும் சுக்கை நாள் தோறும் பயன் படுத்தி வந்தால் சித்தர் பேணுவது போலநம் உடலும் சுக்காக சிக்கென இருக்கும். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்... இத்தனைநோய்களுக்கு மருந்தாக இருக்கும் சுக்கை நாம் அன்றாடம் உணவில் பயன் படுத்தாமல்இருக்கலாமா? யோசிங்க..... திரும்பவும் வரேன் வேற மருந்துப் பொருளோட... இப்ப..வரட்டா....



ஆதிரா..

நன்றி குமுதம் ஹெல்த்.




வெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Tவெங்காயம் சுக்கானால்...... Hவெங்காயம் சுக்கானால்...... Iவெங்காயம் சுக்கானால்...... Rவெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Empty
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 10:22 am

நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 12, 2010 9:04 pm

karthikharis wrote: நன்றி அன்பு மலர்
நன்றி கார்த்திக்..



வெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Tவெங்காயம் சுக்கானால்...... Hவெங்காயம் சுக்கானால்...... Iவெங்காயம் சுக்கானால்...... Rவெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 9:36 pm

Every head has its own kind of headache.
என்பது அராபியப்பழமொழி. அத்தகைய தலைவலிக்கு அருமருந்தளித்த ஆதிரையாருக்கு நன்றிகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 9:44 pm

பழமொழி:

’சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்ல; சுப்பிரமணியனுக்கு மிஞ்சியகடவுளுமில்லை”

‘சுக்குபுற நஞ்சு; கடுக்காய் அகநஞ்சு’

மருத்துவம்:

காது, மூக்கு, தொண்டை (ENT – ear , nose, throat) என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத்தொடர்புடையது. அதிலும் மூக்குத் தொடர்பான நோய்கள் உடனடியாகத் தொண்டைக்கு வேட்டுவைக்கும் சக்தி வாய்ந்தன. சளியினால் தொண்டையினால் கரகரப்பு, இருமல் கபம், மூச்சுஇரைப்பு போன்றவை. காதையும் பாதிக்கத் தவறாது. காது குத்தல் இது அதிக பனி, வாய்வுபோன்றவற்றால் ஏற்படுகிறது

சித்த மருத்துவம்:

வெந்நீரில்சுக்குத்தூளைக் கலக்கிக் குடித்தால் அஜீரணம், ஏப்பம், வயிற்றுப் பொறுமல், வயிற்றுஉப்பிசம், வ்யிற்று வலி, நெஞ்சுக்கரிப்பு, நெஞ்சு எரிச்சல் போன்றவை நீங்கும்.முக்கியமாக வாயு பகவானுக்கு முக்கிய எதிரி இந்தச் சுக்கு. வாயுவினால் ஏற்படும்நெஞ்சுக்குத்தலுக்கு உடனடி நிவாரணம் இதனால் கிடைக்கும்.

சுக்கை நன்றாகப் பொடி செய்து அதனுடன்வெல்லத்தையும் சிறிதளவு நெய்யையும் சேர்த்து ஒரு எழுமிச்சம்பழ அளவு தின்றால்நாவுக்குச் சுவையாகவும் வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும். பித்தத்தினால் ஏற்படும்வாய்க் கசப்பு நீங்கி நன்கு பசி எடுக்கும்.

சுக்குத்தூளைச் சூடான பாலில் கலந்துகுடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி போன்ற தொண்டை தொடர்பான நோய்கள் நீங்கும்.

வெறும்வாயில் சுக்கைப் போட்டு மென்று அதன் சாறை மட்டும் விழுங்க, குரல் கரகரப்பு,தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.

சுக்கை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் எந்த தலைவலியானாலும் பறந்து போகும். சுக்குப் பற்றால் முழங்கால் மூட்டுவலிக்கும் நிவாரணம் கிடைக்கும்.

சிறிதளவு சுக்கினை லேசாகத் தட்டித் தண்ணீரில்போட்டுக் கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு (இரண்டும் இல்லாவிட்டால்சாதா வெல்லம்) தேவையான அளவு சேர்த்து வடிகட்டி குடித்தால் உடல் சுறுசுறுப்பாகஇருக்கும்.

இலக்கியம்:

”ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்
ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர்
- என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.”

”பந்தியில்நின்றாய் முந்தி
பரிசாய்ப்பெற்றாய் நல் தொந்தி,
அதுகுருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில்இயங்கும் இதயம் விந்தி
முடிவில்சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும்இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய்பந்திக்குச் சற்றே பிந்தி”

அறிவியல்:

இது சிஞ்சிபெரசியே (Zingeberaceae) என்ற தாவரக் குடும்பத்தைச்சேர்ந்தது. இதன் தாவரப் பெயர் சிஞ்சிபெர் அசுபிசினேல்.(Zingiber officinale).



ஒரு கட்டுரையில் இவ்வளவு விடயங்களைத் தொகுத்துத் தர உங்களைத் தவிர வேறு யாரால் அக்கா முடியும்!
வெங்காயம் சுக்கானால்...... 678642 வெங்காயம் சுக்கானால்...... 678642 வெங்காயம் சுக்கானால்...... 678642 வெங்காயம் சுக்கானால்...... 678642



ஒளவையாருக்கே தொல்லை கொடுத்த உறுப்பு வயிறு என்றால்நம்புவீர்களா?

உங்களுக்குமா அக்கா....!!! வெங்காயம் சுக்கானால்...... 230655



வெங்காயம் சுக்கானால்...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 02, 2010 2:05 pm

கலை wrote:Every head has its own kind of headache.
என்பது அராபியப்பழமொழி. அத்தகைய தலைவலிக்கு அருமருந்தளித்த ஆதிரையாருக்கு நன்றிகள்...!
மிக்க நன்றி கலை. தலை வலி போனா சரி.. இப்ப எனக்குத் தலைவலிக்குது.



வெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Tவெங்காயம் சுக்கானால்...... Hவெங்காயம் சுக்கானால்...... Iவெங்காயம் சுக்கானால்...... Rவெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 02, 2010 2:09 pm

தகவலுக்கு மிக்க நன்றி அக்கா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 02, 2010 2:15 pm

சிவா wrote:பழமொழி:


மருத்துவம்:

சித்த மருத்துவம்:

இலக்கியம்:

”ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் எலாய்
ஒருநாளும் என்நோ அறியாய்; இடும்பைகூர்
- என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.”

”பந்தியில்நின்றாய் முந்தி
பரிசாய்ப்பெற்றாய் நல் தொந்தி,
அதுகுருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில்இயங்கும் இதயம் விந்தி
முடிவில்சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும்இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே
இருப்பாய்பந்திக்குச் சற்றே பிந்தி”

அறிவியல்:

இது சிஞ்சிபெரசியே (Zingeberaceae) என்ற தாவரக் குடும்பத்தைச்சேர்ந்தது. இதன் தாவரப் பெயர் சிஞ்சிபெர் அசுபிசினேல்.(Zingiber officinale).


ஒரு கட்டுரையில் இவ்வளவு விடயங்களைத் தொகுத்துத் தர உங்களைத் தவிர வேறு யாரால் அக்கா முடியும்!
வெங்காயம் சுக்கானால்...... 678642 வெங்காயம் சுக்கானால்...... 678642 வெங்காயம் சுக்கானால்...... 678642 வெங்காயம் சுக்கானால்...... 678642



ஒளவையாருக்கே தொல்லை கொடுத்த உறுப்பு வயிறு என்றால்நம்புவீர்களா?

உங்களுக்குமா அக்கா....!!! வெங்காயம் சுக்கானால்...... 230655
ஒரு கட்டுரையை இவ்வளவு அழகாக விமர்சனம் செய்வது என்பது உங்களைத்தவிர வேறு யாரால் முடியும் சிவா. என் படைப்பையும் படித்துவ்ப் பாராட்டியமைக்கு மிக்க ந்ன்றி சிவா.

ஒளவையாருக்கே தொல்லை.. எனக்கு இருக்காதா? என்ன கேள்வி இது? வெங்காயம் சுக்கானால்...... 139731



வெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Tவெங்காயம் சுக்கானால்...... Hவெங்காயம் சுக்கானால்...... Iவெங்காயம் சுக்கானால்...... Rவெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 02, 2010 2:21 pm

நான் நிறைய eno மருந்து உபயோகபடுத்தி வந்தேன் வயிறு புண்ணாகியது தான் மிச்சம் இனி சுக்குக்கு மாறிவிடுகிறேன் நன்றி இவ்வளவு தகவல்கள் செகரிததர்க்கும் பகிர்ந்து கொண்டதற்கும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 19, 2010 12:10 am

ரபீக் wrote:தகவலுக்கு மிக்க நன்றி அக்கா
மிக்க நன்றி ரபீக். வெங்காயம் சுக்கானால்...... 678642



வெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Tவெங்காயம் சுக்கானால்...... Hவெங்காயம் சுக்கானால்...... Iவெங்காயம் சுக்கானால்...... Rவெங்காயம் சுக்கானால்...... Aவெங்காயம் சுக்கானால்...... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக