புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:14 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» கருத்துப்படம் 23/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» அரைக்கீரை அல்வா
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:04 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 3:23 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 23
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» மனைவிதான் சந்தோசத்தையும் துக்கத்தையும் தரமுடியும்.
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:39 am

» துள்ளுவதோ இளமை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறை பிடிக்கும் சிங்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» சிந்தனை 1000 - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» அவள் மன வானில் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» பெருமை கொள் பெண்ணே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:11 am

» உனக்கென்ன உரிமை - புதுக்கவி
by ayyasamy ram Yesterday at 9:10 am

» இயற்கையின் இயக்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am

» எல்லைக்கோடுகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by Balaurushya Mon Jul 22, 2024 10:36 pm

» இது உங்களுக்கே நியாயமா படுதா...
by ayyasamy ram Mon Jul 22, 2024 5:12 pm

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:52 pm

» மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:51 pm

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:50 pm

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:48 pm

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:46 pm

» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:44 pm

» வாழ்க்கை எனும் வகுப்பறை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:42 pm

» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:41 pm

» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:40 pm

» ஓ.டி.டி யில் இந்த வாரம் எந்த படம் பார்கலாம்? தியேட்டரில் ரிலிசில் எது பெஸ்ட்?
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:39 pm

» அடுத்தவருக்கு உணவளி!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm

» புற்களை அநாவசியமாய் மிதித்ததில்லை!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm

» வானம் இயற்கை…!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:36 pm

» அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்..
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jul 22, 2024 3:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 2:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jul 22, 2024 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 1:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jul 22, 2024 1:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Jul 22, 2024 12:37 pm

» பாயச வகைகள்…
by ayyasamy ram Sun Jul 21, 2024 5:26 pm

» ஆடியில் அம்மனுக்குப் படைக்க பாயச வகைகள்
by ayyasamy ram Sun Jul 21, 2024 5:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
31 Posts - 46%
heezulia
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
28 Posts - 42%
prajai
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
1 Post - 1%
Balaurushya
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
409 Posts - 50%
heezulia
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
302 Posts - 37%
Dr.S.Soundarapandian
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
22 Posts - 3%
T.N.Balasubramanian
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
18 Posts - 2%
i6appar
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
13 Posts - 2%
prajai
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
11 Posts - 1%
kavithasankar
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_m10மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!  Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி - ஜெயலலிதா அறிக்கை!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 15, 2010 9:13 pm

2011ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி உருவாக்கிட அதிமுகவினர் அனைவரும் சபதமேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உழைப்பால் உயர்ந்தவரும், மக்களைக் கவரும் காந்த சக்தி படைத்தவரும், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியும், தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் நாயகனாக தொடர்ந்து விளங்குபவருமான, “மக்கள் திலகம்‘ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓங்கு புகழ் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனது 38 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2010 அன்று அகவை 39-ல் அடியெடுத்து வைக்கிறது

இந்த நன்னாளில், கழகம் கடந்து வந்த வெற்றிப்பாதைகளின் பெருமிதங்களையும், எதிர்கொண்டு இடர் சாய்த்த பெருமைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

அதே வேளையில், நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காக வியர்வை சிந்தி உழைத்திட்ட செயல் மறவர்களையும், இயக்கப் பணிகளின் போது உயிர் நீத்திட்ட உத்தமத்தொண்டர்களின் தியாகங்களையும் நம் நெஞ்சில் நினைவுறுத்துவதோடு, கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் அனை வருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை இந்த நன்னாளில் தெரிவித்துக் கொள்வதில் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தன் முதல் வெற்றியை பெற்றது. எக்குக் கோட்டையாய் கழகத்தைக் கட்டிக்காத்து வந்த நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கழகத்தின் கொள்கை- கோட்பாடுகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக என்னை 1983-ல் அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளராக்கி மாநிலம் முழுவதும் வலம் வர வைத்தார்.

இவ்வேளையில், 1984-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பொதுத்தேர்தல் வந்தது. நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். களத்தில் இல்லாத நேரத்தில் நடந்த ஒரு உக்கிரமான போரில், எதிரிகளிடமிருந்து கழகத்தை சேதாரமில்லாமல் கட்டிக்காத்து அவரிடம் ஒப்படைக்கும் பெரும் வாய்ப்பினை உங்கள் அன்புச்சகோதரியாகிய நான் பெற்றேன்.

புரட்சித் தலைவர் நலமாக இருப்பதாகவும், அவர் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று, உங்கள் திருமுகம் பார்ப்பதற்கு விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையூட்டும் பிரச்சாரத்தையும் தமிழகம் முழுவதும் நான் செய்து வந்ததின் விளைவாக, பொய்ப்பிரசாரம் முறியடிக்கப்பட்டு, அ.தி.மு.க. அமோக வெற்றியை ஈட்டியது.

கழகக் கண்மணிகளாகிய உங்களின் உறுதுணையாலும், ஓய்வில்லாத உழைப்பாலும், இடைவிடாத போராட்டங்களாலும், 1989-ல் பிளவுற்றுக் கிடந்த கழகத்தை ஒன்றுபடுத்தி, இழந்த “இரட்டை இலை” சின்னத்தை மீட்டு, பூட்டப்பட்ட கட்சி அலுவலகத்தையும் திறந்து, புதிய மறுமலர்ச்சியை கழகத்திற்கு ஊட்டியதன் விளைவாக, மதுரை கிழக்கு, மருங்காபுரி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அன்றைய ஆளும் கட்சியான திமுகவை அபாரமாய் தோற்கடித்து மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றிப்பாதைக்கு நான் அழைத்து வந்ததை நீங்கள் அறிவீர்கள்.

1991ல் எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அ.தி.மு.க. அரசு, தமிழகத்திற்கு ஒரு பொற்கால ஆட்சியை வழங்கும் பொருட்டு, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைத்தது; உலகம் போற்றும் அன்னை தெரசாவே மனம் திறந்து பாராட்டும் வண்ணம் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை செயல்படுத்தியது, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தி வைத்திருந்தது, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு சட்டப்பாதுகாப்பு கொடுத்தது; எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது. 1996-ல் நம் கழகம் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது.

ஆனாலும், மனம் தளர்ந்துவிடாது, செயல் சோர்ந்துபோகாது, தொண்டர்களை தட்டிக்கொடுத்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தொண்டர்களுக்கு ஊட்டி, அதன் மூலம் மீண்டும் கழகத்தை எழுச்சிப்பாதைக்குள் கொண்டு வந்து, 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பெரும் வெற்றிகளை நான் குவிக்கச் செய்தேன்.

2001 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், நமது மாசற்ற மக்கள் இயக்கம் எனது தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச்செய்தது. தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சியை மனதில் கொண்டு எண்ணற்ற புரட்சிகர திட்டங்களை தமிழகத்திற்கு தந்தோம்.

மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தரக்கூடிய வலிமையும், வல்லமையும் கொண்ட ஒரே அரசியல் பேரியக்கம் அ.தி.மு.க. தான் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை. எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின் எத்தனையோ இன்னல்களையும், இடர்பாடுகளையும், சோதனைகளையும் எதிர்கொண்டு இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் வெற்றியை நோக்கி என்னால் அழைத்துச் செல்ல முடிகிறது என்றால், அதற்கான ஊக்க சக்தியாக இருப்பது உத்தமத் தொண்டர்களாகிய உங்களின் கள்ளமில்லா அன்பும், கடமை உணர்வோடு கூடிய ஒத்துழைப்பும், என் மீது எந்நாளும் நீங்கள் கொண்டிருக்கும் மாசற்ற பற்றும் தான்.

அ.தி.மு.க.வின் 39ஆவது ஆண்டு தொடக்க விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கழகக் கொடிக்கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து மக்கள் பணியாற்றுங்கள்; ஒரு பொன்னான எதிர்காலம் நமக்காக காத்திருக்கிறது. 2011-ல் அமையப்போகும் புதிய அரசிற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட இந்நாளில் நாம் அனைவரும் சபதமேற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக