புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_m10உலகப் பழமொழிகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் பழமொழிகள்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:15 am

First topic message reminder :

அங்கேரி


* அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.
* ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
* குருடர் உலகில் ஒற்றைக் கண்ணன் அரசன்.
* சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை.
* சமாதானம் விலைகொடுத்து வாங்கத் தகுந்தது.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* சொந்தக் குழந்தை இல்லாதவன் மிகவும் அபாக்கியவான்.
* தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
* தேன் இனித்தபோதிலும் அதை முள்ளோடு ஏற்காதே!
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.
* நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய உதவியும் உதவியே.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:19 am

# நல்ல புத்தகத்தைக் காட்டிலும் நம்பிக்கையுள்ள மனிதன் உலகில் எதுவுமில்லை.
# வழக்கம் என்பது முதலில் ஓட்டை. பிறகு இரும்புச் சங்கிலி.
# செயலழகைத் தவிர வேறு அழகில்லை.
# போட்டியிடு! பொறாமைப்படாதே!
# பொறுமையால் அதிகம் சாதிக்க முடியும்.
# குழந்தைகளுக்கு செவிகள் அகலமானவை. நாக்குகள் நீளமானவை.
# மனிதனுக்கு மேலே இருக்கும் சிற்றரசன் அவனது மன சாட்சி.
# தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை.
# தாய்க்காக மனைவியை வெறுப்பவன் பழைய மிருகம். மனைவிக்காக தாயை வெறுப்பவன் புதிய மிருகம்.
# பணிவான சொல், செல்லும் பாதையை எளிமை ஆக்குகிறது.
# உலகம் ஒரு பயணிகள் விடுதி.
# நீயும் நானும் ஒத்துப் போய்விட்டால் வழக்கறிஞர் எதற்கு?
# கத்தி சானைக்கல்லைத் தின்கிறது. சாணைக்கல் கத்தியைத் தின்கிறது?
# அடுத்தவன் தாடியில் தீ பிடித்தால் உன் தாடியை நீரில் நனைத்துக்கொள்.
# பழக்கம் ஒரு முழு வளர்ச்சியடைந்த மலை. அதைத் தாண்டுவதும் கடினம். தகர்ப்பதும் கடினம்.
# தேவையும் துன்பமும் ஒருபோதும் நம்மைவிட்டுப் பிரியாது.
# பணத்தைத் தவிர மற்ற யாவும் உன்னைத் திருப்திப்படுத்தும்.
# எவ்வளவு பணம் வைத்திருக்கிறோமோ அவ்வளவு பணம் மேலும் உனக்குத் தேவைப்படும்.
# குழந்தைகள் தெய்வங்களோடு பேசுகின்றன.
# வீரனின் வியர்வை இரத்தம்.
# பணம் பனி போன்றது.
# தான் தின்னி திருடன்.
# பொய்கள் ஈக்களைப்போல் இரைகின்றன. ஆனால், சத்தியத்தில் சூரியப் பிரகாசம் உண்டு.
# உதட்டினால் மட்டும் செய்யப்படும் பிரார்த்தனை, பிரார்த்தனை அல்ல.
# உன்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டு இறைவனிடம் உதவிகேள்.
# ஏழ்மைப் பார்த்துச் சிரிப்பவன் அதைத் தன் க்கம் இழுக்கிறான்.
# பத்து வலிமை மிக்க மனிதர்களைவிட தன்னிச்சையாகச் செயல்படுபவனே மேலானவன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:19 am

# இட்டப் பணியைச் செய்து முடித்தால் இன்பமான தூக்கம்.
# மூப்பு- இது நோய்கள் சேரும் துறைமுகம்.
# சோதிடம் உண்மை- ஆனால், அதனைச் சோதிடர்கள் கண்டுபிடிக்க முடியாது.
# இயந்திரங்கள் சுழல்வதால் கெடாது; உராய்வதால் கெடும்.
# சரிகை ஆடைகளுடன் எரியூருக்குப் போவதைவிட கூந்தல்களுடன் விண்ணுலம் செல்வது மேல்.
# குண்டூசியை எடுக்கக் குனிய முடியாத மனிதன், ஒரு பவுன் கூட சேர்க்க முடியாது.
# செல்வங்கள் சிரமப்பட்டு சேர்க்கப்படுகின்றன. கவலையுடன் பாதுகாக்கப்படுகின்றன. துக்கத்தோடு இழக்கப் பெறுகின்றன.
# உங்களுடைய உடை உங்களுடைய தொழிலுக்கு ஏற்றபடி பார்த்துக்கொள்ளவும்.
# குலப் பெருமை பேசுபவன் உருளைக் கிழங்கு போன்றவன். கிழங்கைப் போலவே அவன் பெருமையும் மண்ணக்குள் மறைந்திருக்கும்.
# புரியாத காரியத்திற்குத் தாமதமாக் கற்பித்துக்கொள்ளும் வழக்கம் மூட நம்பிக்கை. அது காலம் கடந்தும் தங்கி நிற்கும்.
# கடவுள் நமக்கு உறவினரைத் தந்துள்ளார். ஆனால் அன்பர்களை மட்டும் நாமே தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
# நண்பர்களைப் பற்றி நல்லது பேசு. விரோதிகளைப் பற்றி ஒன்றும் பேசாதே!
# இளமையில் ரோஜா மலர்களின் மீது படுக்க விரும்பினால் முதுமையில் நீங்கள் முட்களின் மீது படுக்க வேண்டிவரும்.
# மூட நம்பிக்கை மனவலிமையற்றவர்களின் மதம்.
# நூறு ஆசான்களுக்கு ஒப்பானவர் பொறுப்பு மிக்க தந்தை.
# காரியங்கள் தாமாக நடப்பதில்லை. நடக்கச் செய்ய வேண்டும்.
# மிகக் குறைந்த முட்டாளே அறிவாளி.
# மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு நீ மேலே ஏற முடியாது.
# செல்வத்திற்குப் பின்னால் வறுமை வருவதைக் காட்டிலும் வறுமைக்குப் பின் செல்வம் வருவது மேல்.
# நாற்பது வயதிற்கு மேல் மனிதன் த்த்துவ ஞானியாக மாறுவான். அல்லது முட்டாளாக மாறுவான். இல்லையெனில் இறந்துவிடுவான்.
# குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.
# குழந்தைகளே ஏழையின் செல்வங்கள்.
# குழந்தையை கொண்டாடினால் தாயின் அன்பைப் பெறலாம்.
# குழந்தை இல்லாதவனுக்கு அன்பு என்றால் என்ன வென்றே தெரியாது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:20 am

# இரண்டு தொட்டில்களை ஆட்டுவதைவிட கலப்பை பிடிப்பது மேல்.
# பெண் தேடி வெகுதூரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிறான்.
# குற்றத்தை கடவுள் மன்னிக்கிறார். ஆண்கள் சிறுகச் சிறுக மறக்கிறார்கள். பெண்களோ உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொள்கிறார்கள்.
# விதவை, துக்கம் ஆறும் முன் மணம் செய்துகொள்ள வேண்டும்.
# பொதுவாக எல்லோரும் சந்திக்குமிடம் சமாதிதான்.
# ஆயிரத்தில் ஒரு நல்லவனை அறிந்து கொள்ளலாம். ஆனால், ஒரு பெண்ணை அறிந்துகொள்ள முடியாது.
# ஒருவருக்கு ஆகாரமாவது மற்றொருவருக்கு நஞ்சாகும்.
# குழந்தைகள் கண்களைத்தான் உபயோகிக்க வேண்டும். செவிகளை அல்ல.
# கரங்கள் சுத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கடவுள் பார்க்கிறார். நிறைவாக இருக்கின்றனவா என்பதையல்ல.
# ஒரு சிறு குறை நீண்டகால சேவையை அழிக்கிறது.
# எந்தத் தவறை நீ எங்கு கண்டாலும் அதை உன்னிடம் நீ திருத்திக்கொள்.
# உலகின் நல்லறிவுகள் எல்லாம் பழமொழிகளாக்கப்பட்டிருக்கின்றன.
# வாக்களிப்பது கடன்படுவதுபோல.
# பேச்சில் தங்கம், கொடுப்பது செம்பு.
# நோயின் தந்தை யாரோ? தவறான உணவுதான் அதன் தாய்.
# பழமொழிகள் அனுபவத்தின் குழந்தைகள்.
# கோபக்காரனிடமிருந்து கொஞ்சம் விலகி இரு. மௌனம் இருப்பவனிடமிருந்து என்றுமே விலகி இரு.
# ஓர் ஏழைக்கு மற்றொரு ஏழை உதவும்போது கடவுள் சிரிக்கிறார்.
# தர்மம் ஒருபோதும் ஏழை ஆக்கியது இல்லை. செழுமை ஒருபோதும் அறிவாளியாக்கியது இல்லை.
# கவலைக்கு மிகப் பாதுகாப்பான மருந்து வேலையில் ஈடுபடுதல்
# மகிழ்ச்சி வீட்டில் செய்யப்பட்ட ஒரு பண்டம்.
# எப்போதும் பயந்துகொண்டிருப்பதைவிட ஆபத்தை ஒரு தடவை துணிவாக எதிர்ப்பது மேலானது.
# தாயின் செல்லக் குழந்தைகள் இறுதியில் வெண்ணெய் வெட்டு வீர்ர்களாகவே இருப்பார்கள்.
# பெண் குழந்தைகளும் கோழிக்குஞ்சுகளும் எப்பொழுது தின்றுகொண்டே இருக்கும்.
# நீண்ட கேசம் பெண்ணிற்கு ஒரு கருவூலம்.
# கணவன் இருந்தால் ஒய்யாரம் இறந்தால் ஒப்பாரி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:20 am

# எட்டாம் பேறு பெண் என்றால், எட்டிப் பார்த்த வீடு குட்டிச் சுவர்
# அறிவைக் கொண்டவள் சிங்காரி. அகந்தை கொண்டவள் அலங்காரி.
# பெண்ணுகு எதிரி அவள் அழகு.
# கடன் மோசமான வறுமை.
# தண்ணீரைவிட நெருப்புக்குக் கப்பல் அஞ்சுகிறது.
# ஆட்டை கொடுப்பதைவிட கம்பளி கொடுப்பது மேல்.
# ஊதாரி பிச்சைக்காரனாகவே இருக்கிறான்.
# பறவைகளின் காரணமாக உலோபி விதைப்பதில்லை.
# குடிசையைப் பெருக்கிக் கூட்டுபவன் துடைப்பத்தின் மேல் உட்காரக் கூடாது.
# நான் துணி அணிந்த நாளிலிருந்து ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை.
# விதி விரும்பியதை வழி நடத்துகிறது. விரும்பாததை இழுத்துக் கொண்டு செல்கிறது.
# போகவிட்ட ஒரு சொல்லும் ஒரு கல்லும் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாதவை.
# தொழிலை நேசிக்காதவனை தொழிலும் நேசிக்காது.
# நாய் குரைக்காததும் குதிரை கனைக்காததுமான நகரத்தில் நீ வசிக்காதே!
# பதற்றத்துடன் வருபவன் திடீரென விழுகிறான்.
# எல்லா விலைகளையும் கணக்குப் பார்ப்பபவன் ஒருபோதும் கலப்பையை மண்ணில் வைக்க மாட்டான்.
# பூமித்தாயின் தொழில் உறவுகொண்ட ஒருவரும் நஷ்டமடைந்து வெளியேறியதில்லை.
# உண்மை எப்போதும் ஒரு நொண்டித் தூதுவன் மூலம் வருகிறது.
# உண்மை ஒரு கீறலான முகத்தைப் பெற்றிருக்கிறது.
# சரியான பொய்யைச் சொல்வதைவிட கொடூரமான உண்மை பேசுவது மேல்.
# பாதி உண்மை முழுப் பொய்.
# துருப்பிடித்த வாள், காலியான பணப்பை உடன்படிக்கைகளை எதிர்த்துப் பேசும்.
# உன் உணவை உண்பதற்கு ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை.
# ஆபத்துக்களையும் அபாயங்களையும் பற்றி முன்கூட்டியே ஆராய்ந்து கொண்டிருப்பவன் ஒருபோதும் யாத்திரை செல்ல மாட்டான்.
# எங்கே ஆதாயம் பின்தொடர்கிறதோ, அங்கே வலிமறக்கப்படுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:21 am

# கடன் வாங்கிய ஆடைகள் ஒருபோதும் நன்கு பொருந்தாது.
# பிறருக்காக இரக்கப்படுவன் தன்னையும் எண்ணிப் பார்த்துக்கொள்ளட்டும்.
# ஆன்மாவைவிட உடல்தான் அதிகமாக ஆடை அணிந்திருக்கிறது.
# ஆன்மா எங்கு வசிக்கிறதோ அந்த இடத்தில் அது இல்லை. அது நேசிக்கும் இடத்தில் ஆன்மா இருக்கிறது.
# மூடுபனிக்கு வழியனுப்பு விழா. அடுத்தது சுகமான பருவகாலம்.
# தனது அறிவைப் பாராட்டிக் கொள்பவன் அவனுடைய அறியாமையைத் தம்பட்டம் அடிக்கிறான்.
# அறம் மிகவும் விலை உயர்ந்த ஆபரணம்
# அறம் தன்னுள் எல்லாப் பொருட்களையும் பெற்றிருக்கிறது.
# கோழையின் அறம் ஐயத்திற்குரியது.
# பாவமாவது அறத்தின் பழக்கத்தால் அடிக்கடி உடைந்து போகிறது.
# ஒரு நல்ல மனிதனுக்கு அவனுடைய தவற்றைச் சுட்டிக்காட்டு. அவன் அதை அறமாக மாற்றுவான்.
# பொருள் இலாபம் கருதும் மனிதனின் மனத்திலிருந்து அறம் பறந்துபோகிறது.
# அறம் மட்டுமே உண்மையான குடிமை.
# காதலிலும் போரிலும் எல்லாமே அழகுதான்.
# அச்சத்திற்கு மருந்தில்லை.
# புலியின்மேல் சவாரி செய்பவர் கீழே இறங்குவதற்கு அஞ்சுகிறார்.
# அவன் என்னவாக இருக்கிறான் என்பதை அவனது உரையாடல் காட்டுகிறது.
# குற்றத்தின் மூலம் எவன் ஆதாயம் அடைகிறானோ, அவனே அக்குற்றத்தைச் செய்கிறான்.
# சம்பவம் நடந்த பிறகு புத்திசாலியாக இருப்பது சுலபமே!
# நீண்ட பயணத்திலோ அல்லது சிறு சத்திரத்திலோ ஒரு மனிதன் தன்னுடைய நண்பனைப்பற்றித் தெரிந்துகொள்கிறான்.
# மயில் ஓசையோடு அகவும்போது நாம் மழையையும் சண்டையையும் பெறலாம்.
# மரியாதையை விரும்புகிறவர்கள் மரியாதைக்குத் தகுதி உடையவர்கள் அல்லர்.
# அடிக்கடி வரும் விருந்தாளிளுக்கு நல் வரவேற்பு இல்லை.
# கடனாக வாங்குவதைவிட விலைக்கு வாங்குவதே மேல்.
# எசமான்னாக இருக்கும் முன் ஒருவன் வேலைக்காரனாக இருக்கவேண்டும்.
# வைகறையில் எழாதவன் ஒருபோதும் ஒருநல்ல நாள் வேலையைச் செய்யமாட்டான்.
# சாந்தமான மனசாட்சி இடியோசையில் உறங்குகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:21 am

இஸ்ரேல்

* அச்சம் இதயத்தின் சிறை.
* அடுப்படியில் அடைகாக்கும் கணவன் அடிவயிற்றில் வலி.
* அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத யுத்தம் நடந்துகொண்டே இருக்கிறது.
* ஆரோக்கியத்திற்கு அடிப்படை நோயை அடையாளம் காணுதல்.
* ஆண்டவன் எல்லா இடத்திலும் இருக்க முடியவில்லை. அதனால்தான் அன்னையைப் படைத்தான்.
* இதயம் நல்லதாக இருந்தால் துரதிரஷ்டங்களையும் தகர்த்துவிடலாம்.
* இத்தாலியில் பிறந்து, குழந்தை பாதி அநாதை. தாயில்லாக் குழந்தை மீதி அநாதை.
* தந்தை இல்லாக் குழந்தை பாதி அநாதை. தாயில்லாக் குழந்தை மீதி அநாதை.
* கோடி கலைகளும் வயிற்று உணவுக்காகத்தான்.
* ஒரு வீட்டை வாங்குவதற்கு முன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
* எந்த விரலை கடித்தாலும் வலி ஒன்றுதான்.
* பொய்கள் அமர்வதற்கு சிம்மாசனம் அமைத்துக் கொடுக்காதீர்கள். அப்படி அமைத்தால் நீங்கள் உண்மைக்குத் தூக்கு மேடை அமைத்தவர்களாவீர்கள்.
* விளைச்சல் நன்றாக இருந்தால் தானியங்களை உடனே விற்று விடுங்கள். விளைச்சல் குறைவாக இருந்தால் தாமதித்து விற்க வேண்டும்.
* எட்டு மனிதர்கள் உள்ள கிராமத்திலும் ஒருதேச இருப்பான்.
* உங்களையே கிள்ளிப்பாருங்கள். மற்றவர்களுக்கு இதனால் ஏற்படும் துன்பம் எப்படி இருக்குமென்று புரியும்.
* மேற்கே பார்த்துக்கொண்டிருந்தால் சூரிய உதயத்தை காணவே முடியாது.
* பத்து மனிதர்கள் 11 வித நிறம் கொண்டவர்கள்.
* ஒரே எண்ணம் உடையவர்கள் சேர்ந்தால் கடலையும் வற்ற வைக்க முடியும்.
* இன்று செய்த நன்மை நாளைய இன்பம்
* இழந்த பொருள் இறைவனுக்கு அர்ப்பணம்.
* அகம்பாவம் ஒரு முரட்டுக் குதிரை போன்றது. ஒரு முறையாவது சொந்தக்காரனையே வீழ்த்தும்.
* அயோக்கியன் கூட மேடை ஏறிவிட்டால் நல்லதையே பேசுவான்.
* ஆத்திரம் செயல் வேகத்தை மட்டுப்படுத்தும்.
* இளமையில் பட்ட அடிகள் முதுமையில் உணரப்படுகின்றன.
* அதிர்ஷ்டம் உள்ளவனுகு நண்பன் கிடைப்பான். துரதிர்ஷ்டம் பிடித்தவனுக்குப் பெண் கிடைப்பாள்.
* அன்புள்ள பெற்றோர்கள் உண்டு. அன்புள்ள பிள்ளைகள்தான் இல்லை.
* அற்பத் தொல்லைகளுக்கு அஞ்சுபவன் அரிய சாதனை செய்யமாட்டான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:21 am

# அதிகமாக யாரும் எதையும் கொடுத்தால் ஏற்காதே!
# அருகில் இருப்பவர்களுக்கு உதவி செய்தால் தூரத்தில் இருப்பவர்களும் தேடி வருவார்கள்.
# அறிவு என்னும் கதிர் அறுக்க கண்ணீர் மழை பொழிய வேண்டும்.
# அறிந்தவர்கள் அதிகம் பேசுவதில்லை, அதிகம் பேசுபவர்கள் அறிந்தவர்கள் இல்லை.
# ஆகாயத்திலிருந்து ஈச்சம் பழம் விழுந்தால் நீயும் வாயைத்திறக்கத்தான் வேண்டும்.
# அறிவிலி கூறும் பொன்மொழி, வாயில் உருளும் கூழாங்கல்.
# அன்பு இருந்தால் யானையைக்கூட ஒரு மயிரில் கட்டி இழுக்கலாம்.
# அறிவுப் பெருக்கத்திற்குச் சரியான சாவி ‘ஐயம்’
# அந்நியர்களுடன் நந்தவனத்தில் உலவுவதைவிட நண்பர்களுடன் விலங்கிட்டிருப்பதே மேல்.
# ஆட்டு மந்தை கிளப்பும் தூசி ஓநாய்க்கு இன்பமான காட்சி.
# இந்த உலகில் மூன்று நண்பர்கள் உண்டு. புத்தி, தைரியம், பகுத்தறிவு.
# ஆணின் சொற்கள் அம்பு, பெண்ணின் சொற்கள் ஒடிந்த விசிறி.
# இன்பமாக வாழ வேண்டுமா? செவிடாக,குருடாக, ஊமையாக இருந்துவிடு.
# இழந்துவிட்ட சட்டைப் பையில் இருந்ததெல்லாம் தங்கம்தானாம்.
# அறிவாளி பயன்படுத்தும் மேற்கோள் விரலில் பளிச்சிடும் மோதிரம்.
# அறிவில் போடும் முதலீடு அதிக இலாபம் தரும்.
# அம்பு வேகமுள்ளது. பழி வாங்கல் படுவேகம் உள்ளது செய்த தவறுக்கு வருந்துதல் அதைவிட வேகமானது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:22 am

இலங்கை

* உரையாடல் பயணத்திற்கு ஏணி.
* பொன்னாலான ஆயுதத்தால் குத்திய குத்தும், மற்ற எந்த ஆயுதங்களையும் போலவே வலி நிறைந்ததே!
* சுய கட்டுப்பாடு ஒருவனை இறைவனிடம் சேர்க்கிறது.
* உன் மகன் நல்லவனாக இருந்தால் நீ ஏன சேமிக்க வேண்டும்? உன் மகன் தீயவனாக இருந்தால் அவனுக்காக நீ ஏன் சேமிக்க வைக்க வேண்டும்?
* குழந்தைக்குச் சோறு கொடுத்தால் தாய்ப்பாலை மறக்கும். பெண்ணுக்குக் கணவன் வந்தால் தாயை மறப்பாள்.
* திட்டுவதில் ஐம்பது நாக்குகள் படைத்தவன் கூட ஒரு நாக்கு படைத்த பெண்ணிற்கு நிகராக முடியாது.
* பழக்கமில்லாமல் ஒருவன் தன் பற்களைக்கூட சுத்தம் செய்ய முடியாது.
* யாராவது உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைக்கும்பொழுதெல்லாம் உங்களிடம் உள்ள கேடயம் ஞாபகம் வந்து அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். என்ன கேடயம்? நீங்கள் அவர்களிடத்தில் காட்டிய அன்பு.
* உரையாடல் காதுகளின் உணர்வு.
* நல்ல உரையாடல் நல்ல படுக்கையைவிட மேலானது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:22 am

எகிப்து

* அவசரம் பிசாசின் குணம்.
* இருவர் கூடியிருப்பது என்பது கிடையாது. இறைவனையும் சேர்த்து மூன்று பேர்.
* உருவம் சிறியதென்று எண்ணாதே! ஊசி உருக்கினால் செய்யப்பட்டது.
* உன் மனைவி குள்ளமாக இருந்தால் நீ குனிய வேண்டும்.
* ஒவ்வொருவரும் தன் வீட்டு வாசலைச் சுத்தம் செய்தால் தெரு தானாகவே சுத்தம் ஆகிவிடும்.
* உலகம் ஒரு நாட்டியக்காரி மாதிரி. ஒவ்வொருவருக்காகவும் அது கொஞ்ச நேரம் ஆடுகிறது.
* ஒரு நல்ல காரியத்திலிருந்து மற்றொரு நன்மை உண்டாகிறது. பாலிலிருந்து வெண்ணெய் வருகிறது.
* தாயிலே கெட்டவருமில்லை. சாவிலே நல்லதும் இல்லை.
* கடன் வாங்குதல் ஏழைக்கப் பிறக்கும் முதல் குழந்தை.
* நல்ல மாற்றாந்தாய்கு சொர்க்கத்தில் தங்க நாற்காலி காத்திருக்கிறது.
* தாயை அழவிடுவதில் மனிதர்கள் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால், ஆண்டவன் அவர்களுடைய கண்ணீரை எண்ணிப் பார்க்கிறான்.
* களங்கமற்ற மனம் மிகச் சிறந்த அறிவாற்றலைவிட மேலானது.
* நிலவு உன்னோடு இருந்தால் நட்சத்திரங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:23 am

எஸ்டோனியா

* ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருபோதும் புகழ்ந்து பேசமாட்டாள்.
* உயர்வான இடத்தைச் சுற்றிப் போ; தாழ்வான இடத்தைத் தாண்டிப் போ.
* அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை.
* பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம் அவர்கள் விற்பனைக்கு உரிய பொருள்கள்.
* பெண் குழந்தைகள் உன் முழங்கால் அளவிற்கு வளர்ந்து விட்டால் அவர்களின் சீதனப் பெட்டிகள் மார்பு அளவு இருக்க வேண்டும்.
* தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.
* முதலில் முட்டையிடு; பின்னர் கொக்கரி.
* நல்ல மனசாட்சி இறைவனின் குரல்.
* அழுதுகொண்டே உலகிற்கு வருகிறாய். ஆனால், சிரித்துக் கொண்டே அதை விட்டுச் செல்லும்படி வாழ்வாயாக!
* நாய்க்கு உணவளிக்காதவன் கள்வனுக்கு அளிப்பான்.
* பொய் கனவின் ஆரம்பம்.
* நல்ல மனசாட்சி மென்மையான தலையணை.
* குறைவாகச் சாப்பிட்டு விட்டோம் என்று ஒருபோதும் கவலை கொள்ளாதே!
* வேறொருவனிடம் சொல்ல வேண்டியதை முதலில் உனக்கே சொல்லிப் பார்.
* இலாபமும் நட்டமும் இரட்டைச் சகோதரர்கள்
* நரகத்தில் விசிறிகள் இல்லை.
* ‘உழைப்பே வாழ்வு’ என்பதை உணர்ந்து உழைத்திடு.
* நடக்காதவன் கால்களில் சிலந்தி கூடு கட்டும்.
* பெருமை மடமையின் மிகத் தெளிவான அடையாளம்.
* பணக்காரனிடம் பணம் இருக்ககிறது. ஏழைகளிடம் மன அமைதி இருக்கிறது.
* சாவுக்குப் பயந்தவன வாழ்வை இழந்துவிட்டான்.
* வானில் பறவையின் பாதையைக் காண முடியாது. காதலியை நாடும் காதலன் காதையையும் காண முடியாது.
* வீட்டைக் கட்டிப் பாராதவன் மணிலிருந்து அவர்கள் முளைத்து இருப்பதாகக்கூட நினைக்கக் கூடும்.
* பிறர் புகழும் குதிரையை வாங்கு. பிறர் குறை பேசும் பெண்ணை மணந்துகொள்.
* மதிய உணவிற்குப் பிறகு இரண்டடியாவது நட.
* மடையனைத் திருத்தலாம். ஆனால், முரடனைத் திருத்த முடியாது.
* சோம்பேறி இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அத்தகைய கடிகாரம் ஓடினால் என்ன? நின்றால் என்ன?
* நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உனது உயருள்ளபோதே நீ தேடிவைத்துக்கொள்ள வேண்டும்.
* அன்னை உன்னைப் பத்து மாதங்கள் சுமந்தவள். மூன்று ஆண்டுகள் பாலூட்டி வளர்த்தவள். உனக்கு எல்லாம் அவள்தான். அவள் உன்னைப்பற்றி ஆண்டவனிடம் முறையிடும்படியாக நடந்துவிடாதே!

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக