புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
75 Posts - 54%
heezulia
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
70 Posts - 53%
heezulia
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மரணத்தின் நிழல்... Poll_c10மரணத்தின் நிழல்... Poll_m10மரணத்தின் நிழல்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தின் நிழல்...


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 20, 2010 4:12 pm

என்னாச்சு ஆண்ட்டி சத்யாவுக்கு?? அதிர்ச்சி நீங்கா முகத்துடன் மஞ்சு...

தெரியலம்மா நல்லா தான் இருந்தா ராத்திரி தண்ணி வேணும்னு கேட்டா கொண்டு வந்து கொடுக்கிறதுக்குள்ள.... என்று நிறுத்தி வாய் பொத்தி அழுதார் சத்யாவின் அம்மா....

இதோடு இது எத்தனையாவது சாவு என்று யோசித்துக்கொண்டே நடந்து வந்ததில் வீடு வந்ததை அறியாது போய்க்கொண்டே இருக்க....

நீயும் உண்டு காத்திரு என்ற சப்தம் அவள் நடையை நிறுத்தியது...

பயத்துடன் திரும்பி பார்த்தாள் யாரு யாரு என்று கத்த நினைத்து தொண்டைக்குழிக்குள் என்னவோ அடைத்தது போல் உணர்ந்தாள்....

பயத்தில் வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள் மஞ்சு....

நான்கே நாட்களில் சகுந்தலாவின் மறைவு.....

என்ன தான் நடக்கிறது தலையை பிய்த்துக்கொண்டாள்....

பாட்டி வீடு போய் வந்தால் கொஞ்சம் மனசு சாந்தியாகுமா என்று எண்ணியபடி வீட்டில் வேலைகளை வேகமாக முடித்துவிட்டு பஸ் பிடித்து போய் பாட்டி வீட்டில் இறங்கினாள்...

வசந்தி அங்கே வாழை மரத்தடியில் உட்கார்ந்து அரிசி புடைத்துக்கொண்டிருப்பதை கண்டாள்...

வசந்தி சிநேகபாவத்துடன் சிரித்துக்கொண்டே எப்டி இருக்கீங்க மஞ்சு என்ன இந்த பக்கம் என்று கேட்டுக்கொண்டே இருந்தபோது தான் அந்த மாறுதலைக்கண்டாள்....

சகுந்தலாவை எப்படி கொண்டு போனோம் தெரியுமா என்ற குரல் சத்தியமாக வசந்தியுடையது இல்லை...

அதிர்ச்சியுடன் கால்கள் நகரமுடியாது நாக்கு ஒட்டிக்கொள்ள பயம் விலகா கண்களுடன் பார்த்தாள்....

கும்பலாக தான் போனோம்... கதை பேசிக்கொண்டே இருந்தோம்..... கிளம்பும் நேரம் வந்தது..... பாடத்தொடங்கினோம்..... எம்மில் ஒருவர் சகுந்தலாவைத்தூக்கிக்கொண்டு போனோம்.... அடுத்து நீ காத்திரு எங்களுக்காக..... சொல்லி முடித்து உடல் உலுக்க வசந்தி சகஜ நிலைக்கு மாறினாள்... என்ன இங்கயே நிக்கிறீங்க? குடிக்க நீர் கொடுக்கவா என்று தன் இயல்பான குரலில் கேட்டாள் வசந்தி....

மஞ்சு திரும்ப எத்தனிப்பதற்குள் பாட்டி அங்கே முருங்கைக்கீரையுடன் தட்டில் வைத்துக்கொண்டு அம்மிக்கல்லில் மிளகாய் வைத்து அரைக்க வந்துக்கொண்டிருந்தார்....

மஞ்சு இதை அரைத்துக்கொடு என்றபடி தட்டை மஞ்சுவின் பதிலுக்காக காத்திராமல் வீட்டுக்குள் போனார்...

செத்தவர் உயிர்க்கமுடியுமா? என்ன நடக்கிறது ஒன்றுமே புரியவில்லையே என்று பயத்துடன் முருங்கைக்கீரை மிளகாய் உப்பு எல்லாம் ஒன்றாய் அம்மிக்கல்லில் வைத்து அரைக்கும்போது கருப்பு உருவத்துடன் சிவந்த கண்களுடன் மண்டைஓட்டு தலைகள் கோர்த்த மாலையுடன் கோரப்பற்களுடன் காளி தோற்றத்தில் சிரித்தாள் ஒரு பெண் மஞ்சுவின் முன்....

பயத்தில் கண்கள் சுழற்ற மயக்கத்தில் போகுமுன் காளியின் அசரீரி குரல் காதில் கேட்டது.....

மஞ்சு அடுத்து உன்னை தான் குறி வைத்திருக்கிறார்கள்... இதே போல் கும்பலாய் வருவார்கள்.... நீ அவர்கள் கண்ணுக்கு தென்படாது ஒளியப்பார்ப்பாய்... விடமாட்டார்கள்.... உன்னையும் கொண்டுப் போவார்கள்.... கதைப்பேசிக்கொண்டே இருப்பார்கள்.... கிளம்பும் நேரம் பாட்டுப்பாடும் வைபவம் தொடங்கும்.... உன்னை கொண்டுப்போவார்கள்.... கொண்டுப்போவார்கள்.... மயக்கத்தில் பூரணமாய் ஆழ்ந்தாள் மஞ்சு.....

என்னாச்சு என்னாச்சு என்று எல்லோரும் பதறி ஓடி வர சற்றுமுன் முருங்கை கீரை தட்டில் கொடுத்த பாட்டி அங்கே படத்தில் சிரித்துக்கொண்டிருக்க மாலை வாடிப்போய் காய்ந்து ஆடிக்கொண்டு இருந்தது....

மஞ்சு வந்து என்னிடம் பேசிக்கிட்டு இருந்தாங்க குடிக்க தண்ணி வேணுமான்னு கேட்டேன் ஒன்னும் பதில் சொல்லாம இங்க வந்து மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களே மம்மிக்கு போன் போட்டு சொல்லிருவோமா? டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகலாம் தூக்குங்க....

மருந்து வாசனையும் டெட்டால் வாசனையும் பிடிக்காத மூக்கு மெல்ல விரிந்து கண்கள் மலர்த்தினாள் மஞ்சு.....

ஆஸ்பிட்டலில் இருப்பதை உணர்ந்தாள்... சுற்றி குடித்தனக்காரர்கள் நிற்பதை பார்த்து என்னாச்சு எனக்கு என்றாள்...

ஒன்னுமில்லம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டீங்க... ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம்... ஒன்னுமில்லை சின்ன மயக்கம் தானாம் சோர்வுன்னு டாக்டர் சொன்னார் நீங்க தூங்குங்க நாங்க மம்மிக்கு போன் பண்ணிட்டோம் இதோ வராங்களாம் இடைவிடாத குரலில் வசந்தி சொல்லிக்கொண்டே போக இதெல்லாம் கனவா இல்லை நான் இதற்கு முன் கண்டது கனவா என்ற பிரம்மை விலகாத நிலையில் மஞ்சு திரும்ப ஆழந்த உறக்கத்தில் போனாள்....

வீடே ஒரே கொண்டாட்டமாக இருந்தது... குடும்பத்தினர் உறவுகள் எல்லோரும் ஒரே இடத்தில் சேரும்போது சிரிப்புக்கும் சத்தத்துக்கும் குறைவே இருப்பதில்லை....

பெரியம்மா குடும்பத்தினர் , அத்தை குடும்பத்தினர் மாமா குடும்பத்தினர் இப்படி எல்லாரும் சேர்ந்து வீட்டில் குமிந்திருப்பதை கண்டு மஞ்சுவுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது....

எல்லோரும் சாப்பிட்டு ஒரு சிலர் கண்ணயர ஒரு சிலர் சிரித்து பேசிக்கொண்டிருக்க சத்தமே இல்லாது நாலைந்து பேர் ஒன்றாய் வீட்டில் நுழைவதை மஞ்சு பார்த்தாள்... உடல் முழுதும் சிலிர்த்து அடங்கியது.... யாரும் இவளை பார்க்கவில்லை.... ஆனால் மஞ்சுவின் பார்வை அவர்கள் மேல் படுவதை அவர்கள் அறிந்துவிட்டார்களோ என்ற பயத்தில் அவள் உடல் பதற தொடங்கியது....ஐயோ இவர்கள் கண்ணில் நான் படக்கூடாது படவே கூடாது என்று சொல்லிக்கொண்டே போய் ஒரு ரூமில் ஒளிந்துக்கொண்டாள் பீரோவின் பக்கம் இருந்த கொஞ்சம் இடத்தில்.....

வந்த கும்பல் எல்லோரிடம் உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தது..... எல்லோரும் இவர்களுக்கு உபசரிப்பதையும் நீர் குடிக்க கொடுப்பதையும் பயத்துடன் சத்தங்கள் மூலம் உணர்ந்தாள்...

அத்தைப்பெண் சுகன்யாவும் தங்கை ஷோபியும் கதவை திறந்துக்கொண்டு வர இவள் பீரோவின் அருகே ஒளிந்திருப்பதை கண்டு சிரித்தனர்.

ஏன் மஞ்சு ஒளிஞ்சிருக்கே?

பயமா இருக்கு...

ஏன்?

என்னை கொண்டு போக வந்திருக்காங்க...

யாரு இப்ப வந்தவங்களா? இவங்க உங்க டாடி ஃப்ரெண்ட் குடும்பமாம்... வந்து பேசிக்கிட்டு இருக்காங்க.... இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிருவாங்க... ஏன் மஞ்சு இப்படி பயந்து வியர்த்திருக்க?

ப்ளீஸ் ப்ளீஸ் ஷோபி.... என்னை காப்பாத்து...

என்னாச்சுடி ?

என்னை இவர்கள் பார்க்க கூடாது... நான் இங்கிருப்பதை இவர்கள் அறியக்கூடாது ப்ளீஸ் ப்ளீஸ் என்று அழத்தொடங்கினாள் மஞ்சு....

மஞ்சு நீ ஏன் இப்படி சம்மந்தா சம்மந்தம் இல்லாம நடந்துக்கிறே? அவங்க கிட்ட வாங்க எப்படி இருக்கீங்க வணக்கம்னு சொல்லிட்டு வந்துருன்னு கையை பிடிக்கும்போது....

மஞ்சுவின் கண்களில் மரண பயம் தேங்கி இருப்பதை கண்டு ஷோபி கலக்கமுற்றாள்....

மஞ்சு என்னாச்சு ஏன் இப்படி பயப்படறே?

என்னை இந்த ஒரு முறை காப்பாற்றிடு ஷோபி ப்ளீஸ் என்று ஷோபி கைப்பிடித்து அழுதாள் மஞ்சு....

சரி சரி பீரோவின் அருகே ஒளியாதே..... மூச்சு முட்டும்... நானே கதவை சாத்திக்கிட்டு போறேன்... ஃபேன் போட்டு படு நீ என்று சொல்லிவிட்டு கதவை வெளிப்புறம் சாத்திவிட்டு போனாள் வந்தவர்களுக்கு டீ வைக்க....

மஞ்சு பயத்துடன் உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டே அவர்கள் குரலை கேட்டுக்கொண்டு இருந்தாள்.....

கொண்டு போவோம் கலக்கமில்லாமல் இயல்பாய் இரு..... இந்தப்பயணம் எளிது உனக்கு... சொன்னால் கேளு என்ற சப்தம் மண்டையில் இடியாய் இடித்தது.... மனம் பயத்தில் உதறிப்போட உடல் சக்தியே இல்லாது போவதை உணர்ந்தாள் மஞ்சு....

சடாரென்று கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டு பதறி எழுந்தாள்....

அத்தைப்பெண் அனு கதவை திறந்துக்கொண்டு நின்றிருந்தாள்... ஆஜானுபாவ தோற்றம் அனுவுக்கு....

மஞ்சு அதிர்ச்சியுடன் அனுவை பார்த்தாள்... கால்கள் நன்றாய் இருக்கிறதே அனுவுக்கு..... நம்பமாட்டாது பார்த்தாள்... அனுவின் கால்கள் ஊனம் அல்லவா? எத்தனையோ வருடங்களாக வீல்சேரில் தானே அனுவின் வாழ்க்கை இன்று எப்படி எப்படி என்று அவள் அதிர்ச்சியுடன் யோசிக்கும்போதே ஷோபி வேகமாக ஓடி வந்து கதவை மூடிவிட்டு அனுவை கடிந்த சப்தம் கேட்டது.....

ரூம் முழுக்க அமானுஷ்யமாய் என்னவோ உணர்ந்தாள் மஞ்சு.....

திரும்ப கதவு திறக்கும் சப்தம் கேட்டு பயத்துடன் பார்த்தாள் மஞ்சு...

ஷோபி உள் நுழைந்து கவலைப்படாதே அவங்க எல்லாரும் கிளம்பறாங்க... நீ பயமில்லாம இரு என்று சொல்லி சிரித்துவிட்டு போனாள் கதவை வெளிப்புறம் சாத்திக்கொண்டு...

இடைப்பட்ட அந்த சின்ன கதவின் இடுக்கில் ரெண்டு நெருப்பாய் எரியும் கண்களும் பஞ்சுபொதியான தலைமுடியை பார்த்து அலறினாள் மஞ்சு....

அந்த கிழவியின் கண்கள் நெருப்பாய் ஜொலித்தது... பாடத்தொடங்கினாள் கதவருகே நின்றுக்கொண்டு.....

பெற்றவரும் உற்றவரும் அருகே இருந்து சூழ.....
கொண்டு போக வந்திருக்கும் விதியை நோக.....
போடா அவளை கொண்டு வா என்று கர்ஜிக்கும் குரலில் பாட

சட்டென சுவரில் ஒரு பக்கம் திறக்க அதிர்ச்சியுடன் மஞ்சு பார்த்துக்கொண்டிருக்க....

ஆஜானுபாவ தோற்றம் கொண்ட அவன் மஞ்சுவை அலாக்காய் தூக்க....

மஞ்சு அருகே இருக்கும் பீரோவின் பிடியை பிடித்துக்கொண்டு அலறினாள்...

காப்பாத்துங்க காப்பாத்துங்க....யாரேனும் காப்பாத்துங்க என்று அலறிக்கொண்டே திரும்பினாள்...

இதுவரை அந்த ரூமில் அவள் மட்டும் இருந்தது போக இப்போது சுற்றம் முழுக்க உறவினர்கள் முழுக்க சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டாள்.... அவள் அலறலை யாருமே லட்சியம் செய்யவில்லை... இன்னும் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்க....

மஞ்சு தூக்கியவனின் கைகளில் உடல் பாரம் முழுதும் இருக்க கைகளை மட்டும் பீரோவின் பிடியில் இருந்து எடுக்காமல் அலறிக்கொண்டிருக்க அலாரம் சத்தம் அடிக்க சட்டென கண் விழித்தாள் மஞ்சு......

விண் விண் என்று தலை வலிக்க ஆரம்பித்தது....

திரும்ப கண் மூடினாள் எங்கே அந்த கனவு தொடருமோ என்று பயந்தாள்.... இத்தனை பயங்கரமான கனவு ஏன் எனக்கு இப்படி என்று யோசிக்கும்போது காதருகே ஒரு குரல் கேட்டது....

உன்னை கொண்டு போகாமல் விடமாட்டாங்க..... நீ தப்பிக்கவே முடியாது.....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணத்தின் நிழல்... 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 4:51 pm

அக்கா இந்த உலகத்தில உயிரோட வாழ்றதவிட பயங்கரமான விஷயம் எதுவுமேஇல்ல அதையே சமாளிச்சு வாழறோம் இது என்ன சுண்டக்கா, அதுசரி இனிமே தூங்கறதுக்கு முன்னாடி சண் டிவி சீரியல்களா பாருங்க அப்புறம் இந்த கனவு எப்போ பலிக்குமுனு நீங்க கேப்பிங்க.

பின் குறிப்பு :- நல்லா கேளபுராங்கப்பா பீதிய ஐயோ என் காதுல யாரோ ஏதோ பேசராமாதிரியே இருக்கே, இணைக்கி தூக்கம் ஊ ஊ ஊ



ஈகரை தமிழ் களஞ்சியம் மரணத்தின் நிழல்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 20, 2010 5:13 pm

எப்டி இருக்கே பாலா? ரொம்ப நாளைக்கப்புறம் தான் உன்னை பார்க்க முடிந்தது... நலமாப்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணத்தின் நிழல்... 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 5:16 pm

மஞ்சுபாஷிணி wrote:எப்டி இருக்கே பாலா? ரொம்ப நாளைக்கப்புறம் தான் உன்னை பார்க்க முடிந்தது... நலமாப்பா?

சூப்பர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் மரணத்தின் நிழல்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 25, 2010 5:40 pm

ஐயொ மஞ்சு பாலா இன்னிக்கு எழுதின கதைக்கு நீதான் இன்ச்பிரேசனா? ஏன் மஞ்சு என்னா ஆச்சு உனக்கு?
இப்படி கதை எழுதி எத்தனை நாளா எங்கள பயமுறுத்தணும்ன்னு நினைச்சுட்டு இருந்த?
யம்மாடி எனக்கும் என்னமொ காதுல யாரோ பேசுற மாதிரி கேக்குதே.




மரணத்தின் நிழல்... Uமரணத்தின் நிழல்... Dமரணத்தின் நிழல்... Aமரணத்தின் நிழல்... Yமரணத்தின் நிழல்... Aமரணத்தின் நிழல்... Sமரணத்தின் நிழல்... Uமரணத்தின் நிழல்... Dமரணத்தின் நிழல்... Hமரணத்தின் நிழல்... A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Sep 25, 2010 10:39 pm

உதயசுதா wrote:ஐயொ மஞ்சு பாலா இன்னிக்கு எழுதின கதைக்கு நீதான் இன்ச்பிரேசனா? ஏன் மஞ்சு என்னா ஆச்சு உனக்கு?
இப்படி கதை எழுதி எத்தனை நாளா எங்கள பயமுறுத்தணும்ன்னு நினைச்சுட்டு இருந்த?
யம்மாடி எனக்கும் என்னமொ காதுல யாரோ பேசுற மாதிரி கேக்குதே.

ஒன்னும் ஆகலை சுதா.... ஆனால் எப்படி சொல்வது அந்த பயங்கரத்தை?

நான் கண்ட கனவும் அதனால் பயந்து கண்விழிச்சதும் பயத்துல கண் மூடாமல் மூடினால் எங்க கனவு தொடர்ந்து வருமோ என்ற பயத்தில் ஓம் கணேஷாய நமஹ கீர்த்தி வினாயகான்னு விடாம சொல்லிட்டு இருந்ததும் திடிர்னு அலாரம் சத்தம் போட்டதும் முழிச்சு பயத்துல லைட் எல்லாம் போட்டுட்டு இபானை எழுப்பியதும் அன்னிக்கு முழுக்க நினைக்க நினைக்க உடம்பெல்லாம் நடுங்கிட்டே இருந்திச்சு சுதா.... என் கனவை ஒரு சின்ன மாற்றம் கூட இல்லாமல் அப்டியே எழுதினேன்பா..... அம்மா கிட்டயும் தங்கை கிட்டயும் சொன்னப்ப இப்படி ஏன் பயப்படறேன்னு திட்டினாங்க.. அதெல்லாம் ஒன்னுமில்லன்னு சமாதானப்படுத்தினாங்க. கலை கிட்ட சொன்னால் கலை என்னை ஒரே கிண்டல் செய்ய ஆரம்பிச்சிட்டார்.....கனவு எப்படியோ ஆனால் ஒரு த்ரில்லிங்கான கதை கிடைச்சுதேப்பா....

அன்பு நன்றிகள் சுதா அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணத்தின் நிழல்... 47
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 26, 2010 7:24 am

கனவுகளின் பலன் என்ன என்று கேட்கவேண்டியதுதான்.
நல்லதொரு திகில் கதை எழுதுவீர் என்று பலன் வந்தாலும் வரும். அன்பு மலர்

ரமணீயன்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 3:39 pm

அருமையான எழுத்து நடை மஞ்சு.. கதை என்பது வாழ்வியல் நிகழ்வுகளுடன் பொருந்திப் போதல் முக்கியம்.

உன் கதைகளில் அதை நிறைய பார்த்திருக்கிறேன்..

உண்மை சம்பவம் உனக்கு வந்த கனவு என்றாலும் அதை விவரித்திருக்கும் முறை மிக அருமை மஞ்சு..!

பாராட்டுக்கள் மஞ்சு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Oct 17, 2010 4:04 pm

கெளம்பிட்டாங்கையா...பீதியைக் கிளப்ப..

மர்மக்கதை மஞ்சு என்று இனி அழைக்க வேண்டியது தான்.....

அன்பு மஞ்சு.. அழகாக கோவையாக எழுதியுள்ளீர்கள்.. இந்த நடை உங்களுக்கு நன்றாக வந்துள்ளது.. தொடருங்கள்...
ஈகரையின் விட்டலாச்சார்யா....வாழ்க!!!
ஈகரையின் விட்டலாச்சார்யா....வாழ்க!!!



மரணத்தின் நிழல்... Aமரணத்தின் நிழல்... Aமரணத்தின் நிழல்... Tமரணத்தின் நிழல்... Hமரணத்தின் நிழல்... Iமரணத்தின் நிழல்... Rமரணத்தின் நிழல்... Aமரணத்தின் நிழல்... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 4:09 pm

Aathira wrote:கெளம்பிட்டாங்கையா...பீதியைக் கிளப்ப..

மர்மக்கதை மஞ்சு என்று இனி அழைக்க வேண்டியது தான்.....

அன்பு மஞ்சு.. அழகாக கோவையாக எழுதியுள்ளீர்கள்.. இந்த நடை உங்களுக்கு நன்றாக வந்துள்ளது.. தொடருங்கள்...
ஈகரையின் விட்டலாச்சார்யா....வாழ்க!!!
ஈகரையின் விட்டலாச்சார்யா....வாழ்க!!!

ஈகரையின் விட்டலாச்சாரியை என்று இருக்கனுமோ..? ரிலாக்ஸ்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக