புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பல்லவன் மகள் Poll_c10பல்லவன் மகள் Poll_m10பல்லவன் மகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லவன் மகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 10:16 pm

அன்பு நன்பர்களே, புலியை கண்டு பூனை சூடு போட்டு கொள்ளலாமா. இந்த பூனை சூடு போட்டு கொள்ள போகிறது. மனதிற்குள் பல ஆயிரம் கதை இருந்தாலும் எழுத்து வடிவத்தில் வெளி கொணர்வது இதுவே முதல் தடவை. தவறு இருப்பின் மன்னித்து அருள்வது உமது தலயாய கடமை. இனி நாம் நமது கதைக்கு செல்வோம் நம்மை வரவேற்க அரசரும் அரசியரும் தோழியரும் காத்து இருக்கின்றனர். நாம் சற்றே ஆறாம் நூறான்டை நோக்கி பயனப்படுவோம்


ஆதிவராகன் கோவில்

முன்னிறவு வேளையில் கடல் மல்லை சற்றே உறக்க கோலத்தொடு காட்சி அளித்து கொண்டு இருந்தது. வீதிகளிலும் துறைமுகதிலும் அவ்வளவு ஜனக்கூட்டம் இல்லை. பெரிய பெரிய பண்டகசாலைகளில் பண்டங்கள் ஏற்றுமதி இறக்குமதிக்காக காத்து இருந்தது. மல்லையில் அன்று இந்திர விழா கொண்டாடபட்டதால் மக்கள் விரைவாகவே வீடு சென்று விட்டனர் போலும். காஞ்சியில் இருந்து மன்னரும் இளவலும் வந்து சென்றது மக்களுக்கு மன நிறைவை அளித்திருக்க கூடும்.

அந்த முன்னிறவு வேளையில் வெகுதூரம் ஓடி களைத்துவிட்ட தனது குதிரையை விரட்ட மனமில்லாமல் மெதுவாகவே செலுத்தி வந்த அந்த வீரன் தூரத்தில் படகுகள் வரிசை வரிசையாக பன்டங்களை சுமந்து தொலைவில் நிற்க்கும் கப்பல்களை நோக்கி சென்று கொன்டிருந்தன. சிம்ம விஷ்னு சக்ரவர்த்தியின் காலத்தில் இருந்து சிறிய துறைமுகமாக விளங்கிய மல்லை மகேந்திர சக்ரவர்த்தியின் காலத்திலும் பிறகு நரசிம்ம சக்ரவர்த்தியின் காலத்திலும் தலைமை துறைமுகமாக உருவெடுத்து விட்டது. இலங்கைக்கும் கலிங்கதிற்க்கும் கடல் வாணிபம் பெருத்து விட்டது.

கடற்கரை ஓரமாக தனது குதிரையை செலுத்திய அவ்வீரன் மெதுவாக ஊரை தாண்டி பாறைகளை குடைந்து குகை கோவில்களாக மாற்றபட்ட இடத்தை நோக்கி சென்றான். சற்றே தயக்கதுடன் வெளி வரும் நிலவொளியில் அவனை சிறிது உற்று பார்ப்போம். நடுத்தற வயதினை தாண்டினாலும் கஷ்டமில்லாமல் அவன் குதிரை மீது அமர்ந்து வந்தது அவனது இடைவிடாத உடற்பயிற்ச்சியை நமக்கு உணர்த்தியது.

மலைப்பாறை வழிகளிலும் அடர்ந்த தோப்புகளின் வழியாகவும் சுற்றி சென்று ஆதி வராகன் கோவில் எனப்படும் குகையை அடைந்த அவ்வீரன் எரிந்து கொண்டிருந்த சிறு விளக்கை நன்கு தூண்டி பிரகாசமாக்கினான். நரசிம்ம சக்ரவர்த்தியால் உருவாக்க பட்ட அக்கோவிலில் நாரயனான ஆதி வராகர் உக்கிரமும் சாந்தமும் கலந்து நோக்கி கொண்டிருந்தார். ஆதி வராகரை மெய் மறந்து பார்த்து கொண்டிருந்த அவ்வீரனை விளக்கொளியில் உற்று நோக்குவோம். ஆஜானுபாகுவாக இருந்த அவ்வீரனின் அளவோடு சிறுத்த இடுப்பும், பறந்த மார்பும், முதுகும் அவனது உடற்பலத்தினை சற்றே உணர்த்தியது. சற்றே அகற்றி நிற்பதால் அவனது கால்களும் இரும்பினால் செய்யப்பட்டதாகவே தோன்றியது. அதிக சதைபிடிப்பு இல்லாத அவன் தேகமும் இடையில் இருந்த வாளின் மீது வைக்க பட்டிறுந்த நீண்ட கரமும் அவனது வீரத்தை நமக்கு பறைசாற்றின.

விளக்கொளியில் அவனது கூரிய விழிகள் அங்கு ஒரு மூலையில் இருந்த மகேந்திரவர்மரின் சிலையை பார்த்து இருப்பதை கண்டால் அச்சிலை அவனுடன் ஏதோ பேசுவதை போலவே காட்சி அளித்தது. அவன் நின்ற தோரனையும் அடிக்கடி குகை வாயிலை பார்ப்பதையும் கண்டால் யாரையோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறான் என்றே தோன்றும் வேளையில் தூரத்தில் குதிரையின் குளம்பொலி கேட்டது

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 10:17 pm

பழகிய குரல்

குதிரையின் குளம்பொலியை கேட்ட அவ்வீரன் உடனே விளக்கை அணைத்ததால் அக்குகை முன்னை விட மேலும் இருண்டு காட்சி அளித்தது.

வியர்க்க விறுவிறுக்க வேகமாக குதிரையில் வந்த புது மனிதன் அந்த காரிருளில் ஆதி வராக குகை வாயிலை உடனே கண்டுபிடிக்க முடியாமல் திணறினான், குதிரையின் உடல் நடுக்கதில் இருந்து அதன் அவஸ்தையை புரிந்து கொண்டு குதிரையை விட்டு இறங்கி குகையை நோக்கி விரைந்தான்.

குகை வாயிலில் மறைந்து இருந்த நமது வீரன் தன்னை தேடி வருபவனை பார்த்து முன்னேறி சென்று இரு கைகளாலும் அணைத்து கொண்டான்.

"தேவசேனரே, என்ன இவ்வேளையில் தனியாக இவ்வளவு தூரம்? "

குரலை கேட்டு லேசாக அதிர்ந்தாலும் வியப்பெய்தாத தேவசேனன்,"வீரசேனரே, தங்களை காணவே நான் நமது ஆயனரின் கொடி வீட்டிற்க்கு வந்தேன். உறையூரில்...."
என்று ஆரம்பித்த தேவசேனனை சைகையால் நிறுத்த சொன்னான் வீரசேனன்.

வேண்டாம், நாம் இங்கு பேசுவதை விட காஞ்சியில் நாற்சந்தியில் உரக்க பேசுவது மிக எளியது. இந்த பல்லவ தேசத்தில் ஒற்றர்களுக்கு பஞ்சமே இல்லை.... நாம் அந்த கொடி வீட்டிற்க்கு செல்வதே நலம்.

குதிரையில் ஏறிய இருவரும் மீன்டும் மல்லையை நோக்கி செல்லாமல் அடர்ந்த காட்டின் வழியே விரைந்து சென்றனர்.

"தேவசேனா, உனக்கு நம்முடைய முதல் சந்திப்பு நினைவு இருக்கிறதா.."

"மறக்க முடியுமா, பிர....", என்றவனை முறைத்த வீரசேனன்,"உனக்கு எத்தனை முறை சொல்வது, நான் பல்லவ சக்ரவர்த்தியின் ஊழியன், அவ்வப்போது தூதனாகவும், சில நேரம் ஒற்றனாகவும் ஊழியம் செய்பவன், அதற்கு மேல் எவருக்கும் ஏதும் தெரிய வேண்டிய அவசியமில்லை"

தனக்குள் மெல்ல நகைத்த தேவசேனன், இவருக்கு வயதாகி என்ன அன்று போல் தான் இன்றும் அதே பிடிவாதம், கோபம். ஆனால் கோபமுள்ள இடத்தில் தானே குணமுண்டு என்று நினைத்தான். அப்பப்பா, இந்த பல்லவர்களின் குணாதிசயமே அலாதி தான்.

கொடிவீட்டின் கதவை இடித்த வீரசேனனை கண்டு ஒரு கனம் வியப்பெய்திய சேவகன் உடனே சுதாரித்து அவன் காட்டிய சிங்க இலச்சனையை பார்த்து தலைவணங்கி வரவேற்று உண்ண உணவும் கொடுத்தான்.

சுற்றும் முற்றும் பார்த்த தேவசேனன் அங்கு இன்னும் ஜீவகளை அழியாமல் இருந்த சிற்பங்களை கண்டு ஒரு பெருமூச்சு விட்டான்.

"ஆம், எனக்கு இன்னும் நன்றாக நினைவில் உள்ளது. சிவகாமி ஆட, ஆயனர் அதை அப்படியே சிலையாக வடிக்க நான் அவரது சிஷ்யனாகவே இருந்திருக்க கூடாதா என ஒவ்வொரு முறையும் எனக்கு தோன்றுகிறது. விதி எப்படி எல்லாம் அவரவர் வாழ்கையில் விளயாடுகிறது பார்த்தாயா விக்கிரமா"

இதை கேட்டதும் சற்றே முறுவலித்த சோழ மன்னன் விக்கிரமன், "ஐயா, விதி என் வாழ்விலும் எப்படி விளையாடியது என்று உமக்கும் தெரியுமே, என் தந்தை கண்ட கனவு பல்லவ சக்ரவர்த்தியால் ஒரு விதமாய் நிறைவேறியது, ஆனால் தற்போதய நிலவரம் என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது.."

"ஆம், நீங்கள் வருவதாக எனக்கு செய்தி வந்தவுடன் இங்கு தான் வருவீர் என எதிர்பார்த்து காத்திருந்தேன். என்ன அப்படி முக்கியமான செய்தி"...

"ஐயா, காஞ்சியில் இருந்து நல்ல செய்திகள் இல்லை. பரமேஸ்வர பல்லவரின் நடவடிக்கைகள் நம்பிக்கை தரும்படியாக இல்லை. மாமல்லரின் காலத்திலும், இரண்டாம் மகேந்திரவர்மரின் காலத்திலும் இருந்த மதிப்பு குறைகிறது. சோழ மண்டலம் இன்று சிறியதாக இருந்தாலும் அது ஒரு தனி நாடு அதை சபையோர் முன் குறை கூறுவது நல்ல செயல் அல்ல. மகேந்திரரின் அகால மரணதிற்க்கு பின் நமது உறவில் விரிசல் விட ஆரம்பித்துள்ளது"....

முகத்தில் வாட்டத்துடன் கேட்டு கொண்டிருந்த வீரசேனன்," குந்தவி தேவியார் நாளை காஞ்சி வருவதாக எனக்கு செய்தி வந்துள்ளது..."

"கிளம்பி விட்டாளா தேவி!, நான் பேசி பயன் இல்லை என்று சொன்னதை கேளாமல் சென்று இருக்கிறாள்..."

"விக்கிரமா, நான் இன்றே காஞ்சி சென்று நிலமை அறிந்து வருகிறேன். நீ உறையூருக்கு விரைந்து செல். எனக்கும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. வாதாபியில் விக்ரமாதித்தன் நன்றாக கால் ஊன்றிவிட்டான். பல்லவர் செய்த கொடுமையை அவன் என்றும் மறக்க மாட்டான். அவனுக்கு துணையாக கங்க மன்னன் பூவிக்கிரமனும் சேர்ந்து விட்டான். இனி வாளாவிருந்தால் நல்லதல்ல.."

தன்னை அனைத்து விட்டு குதிரை ஏறி சென்ற வீரசேனனை வெகு நேரம் பார்த்து கொண்டு இருந்தான் சோழ மன்னன்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 10:18 pm

காஞ்சி சுந்தரி

நாம் சற்று கடல் மல்லையை விட்டு விலகி பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகரமான காஞ்சி நோக்கி செல்வோம்.

" புஷ்பேஷூ ஜாதி புருஷேஷூ விஷ்ணு
நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி "

என பாரவியால் பாடப்பட்ட நகரம். சைவர்களும், வைணவர்களும், சமணர்களும், பௌத்தர்களும் நிறைந்து வாழும் நகரம் அது. சமணர்களும், பௌத்தர்களும் பல்லவ மன்னர்கள் மீது தற்போது மனஸ்தாபத்தில் உள்ளனர் என்பது வேறு கதை. சைவமும், வைணவமும் தீஞ்சுவை பாடல்களால் மக்களை அடைந்து ஆதலால் நகரத்தில் எங்கு நோக்கினும் கோவில்களாகவே தெரிந்தது. அதோ சற்று முன் செல்லும் பல்லக்கின் பின் சென்று அப்படியே நகரத்தின் அழகினையும் பருகுவோம்.

எங்கு நோக்கினும் மாட மாளிகைகள், புதிய மண்டபங்கள் கோபுரங்கள். சிறிய குன்றினை போல் யானைகள் பரவலாக திரியும் மக்களின் நடுவே அசைந்து சென்று கொண்டிருந்தன. அதோ அங்கு வேத கோஷம் கேட்கின்றதே அது தான் வாகீசர் மடம் போல் தெரிகிறது, ஆம் அது திருநாவுக்கரசர் மடம் தான். வாகீசர் சில காலம் முன் முக்தி எய்தினாலும் அங்கு பக்திக்கு குறைவில்லை.

அடடா, நகரத்தை சுற்றி பார்க்கும் ஆசையில் நமது பல்லக்கை தவற விட்டு விட்டோமே. இல்லை, அதோ அந்த திருப்பத்தில் சென்று மறைகிறதே அது தான் நாம் தேடி வரும் பல்லக்கு. பல்லக்கை தொடர்வது இனி கடினமில்லை, ஏனெனில் அது நகரத்தின் நடுவில் உள்ள பெரிய அரண்மனைக்குத்தான் செல்கிறது. நகரத்தின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் உயர பறக்கும் சிங்க கொடி ஒன்றே போதுமே அரண்மனையை கண்டுபிடிக்க

அரண்மனை வளாகத்தில் நுழைந்து அந்தப்புரத்தை அடைந்த பல்லக்கை எதிர்நோக்கி காத்திருந்தான் பல்லவ மன்னன் பரமேஸ்வரன். தண்டில் இறக்கி வைக்கப்பட்ட பல்லக்கில் இருந்து இறங்கியது ஒரு மானிட பெண் தானா இல்லை இவள் தேவலோகத்தில் இருந்து வந்த தேவதையா என நம்மை ஒரு கணம் சிந்திக்க தூண்டக்கூடிய உருவம்.

" பரமேஸ்வரா, இது முறையல்லவே.. நாடாளும் மன்னன் நீ எனை வரவேற்க்க இங்கு வரலாமா.."

ஆஜானுபாகுவாக இருந்தாலும் தமக்கையை கரம் கூப்பி வணங்கிய மன்னன் சோழ ராணியான குந்தவி தேவியை பார்த்து," நாடாளும் வேந்தனும் ஒரு தாய்க்கு பிள்ளைதானே, என்ன மனவேற்றுமை இருந்தாலும் நான் உங்களுக்கு இளையவன் தானே. நமது தாய்மார்கள் வேறாக இருந்தாலும் தந்தை ஒன்றுதானே.." என்றவனை ஆழ்ந்து பார்த்தாள் அந்த காஞ்சி சுந்தரி
_________________

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 10:19 pm

மந்திராலோச்சனை

பல்லவ மன்னன் பரமேஸ்வர வர்மனின் ஆணைப்படி அரசவை வந்த முதல் மந்திரி குலசேகர பட்டர் மந்திரி மண்டலத்தை கூட்டி மன்னனின் வருகைக்காக காத்திருந்தார்

"குலசேகரரே, மன்னன் முடிவு எப்படி இருக்கும் என நீர் எண்ணுகிறீர்.." என கேட்ட ஒரு மந்திரி பிரதானியை முறைத்த குலசேகர பட்டர், " ஆமாம், மன்னர் எலலாவற்றையும் என்னிடம் சொல்லி விட்டு தான் செய்கிறார் போல் கேட்கிறீரே, ஆனால் எனக்கு ஒன்று நிச்சயம் தெரிந்துவிட்டது. போர் முரசு கொட்டும் நாள் அதிக தூரத்தில் இல்லை."

"போர் என்றால் யாருடன் போர் பட்டரே.."?

" மேலை சாளுக்கியம் கூட வலுவிழந்து இருக்கிறதே, பாண்டியனோ பெண் கொடுத்தவன், சோழனோ பெண் எடுத்தவன், சேர குல விழுது தான் இன்று நாட்டை ஆளுகிறது, பின் யாருடன் தான் போர்...?"

குலசேகர பட்டர் வாய் திறந்து பதில் சொல்லுமுன் மன்னரும், மன்னருடன் இளவரசர் ராஜசிம்மனும், குந்தவி தேவியும் வருவதை கண்டு தலை குனிந்து எழுந்து வரவேற்றனர் மந்திரி மண்டலதார்.

மிக சஞ்சலத்துடன் காணப்பட்ட மன்னன் சபையோரை அமற சொல்லி தானும் அரியணையில் அமர்ந்தான்.

"மந்திரி மண்டலத்தாரை நான் இங்கு அவசரமாக அழைத்த காரணத்தை நான் சொல்லு முன் மூன்று நாட்களுக்கு முன் எனக்கு வந்த முக்கிய செய்தி, உத்திர பாரத சக்ரவர்த்தி ஹர்ஷவர்தனர் பரமனடி எய்தினார் என்பதே..."

சபையில் ஆ........ என்ற குரல்கள் ஓங்கி பரவலாக ஒலித்தது.

"ஆம், இது நமக்கு பெருத்த சோதனைக்காலம். வாதாபி போர் முடிந்த 15 வருடத்தில் 2 முறை பெருத்த பஞ்சம் எற்பட்டு விட்டது. இவ்வருடமும் மழை பொய்த்து விட்டதால் தானிய விளைச்சலும் அமோகமாக இல்லை. இந்நிலையில் விக்ரமாதித்யன் படை பலம் பெறுக்குவான். வடக்கிலுருந்து ஆபத்து இல்லாததால் தஷிண திசை நோக்கி படை எடுப்பான். இந்நேரத்தில் அருகில் இருந்து ஆலோசனை கூற என் தந்தையும் இல்லை. என் முடிசூட்டு விழாவிற்க்கு பிறகு தேசாந்திரம் சென்ற பல்லவ நரசிம்மர் இன்று எங்கிருக்கிறார் என்று கூட தெரியவில்லை, இந்நிலையில் நாம் செய்யகூடியதை பற்றி பேசவே நான் உங்களை அழைதேன். பழம் நழுவி பாலில் விழுந்ததை போல் சோழ ராணியும் என் தமக்கையுமான குந்தவி தேவியாரும் இங்கே உள்ளதால் என் எண்ணம் எளிதே நிறைவேறும் என எண்ணுகிறேன்..."

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 10:20 pm

மிகுந்த அழகானவளும், அழகை விட மதியூகியுமான குந்தவி தேவி புருவத்தை நெரித்து, " சோழர்களிடம் என எதிர்பார்க்கிறாய், பரமேஸ்வரா..?" என்றாள்

குந்தவியின் நேரடி கேள்வியை எதிர்பாராத பல்லவ மன்னன் ஒரு கனம் தடுமாறி," சாம்ராஜியதிற்க்கு சோதனை வந்தால் அந்நேரம் கை கொடுப்பது குறுநிலங்களின் கடமை...."

"சோழ தேசம் பல்லவ தேசத்தின் குறுநிலம் அல்ல, பரமேஸ்வரா.. சோழ நாடு சுதந்திர பூமி. அதன் மேல் பாத்தியதை கொள்ள உனக்கு எவ்வித உரிமையும் கிடையாது."

"தேவி, மன்னர் சொல்லுவது என்னவென்றால்..." என குறுக்கிட்ட குலசேகர பட்டரை எரித்து விடுவது போல் பார்த்த குந்தவி

"என் சகோதரனை நன்கு அறிவேன் குலசேகர பட்டரே. பரமேஸ்வரா, ஒன்று தெரிந்து கொள், தாயாதி சண்டையால் சிதறுண்டு இருக்கும் சோழ நாடு ஒரு போதும் மீண்டும் பல்லவ நாட்டிற்க்கு அடமை ஆகாது..." என கூறி சபையை விட்டு வெளியேறினாள் நரசிம்மபல்லவரின் மகளும் விக்ரம சோழனின் பட்டத்து ராணியுமான குந்தவி தேவி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 10:22 pm

உறையூரில் கலக்கம்

அதோ தூரத்தில் தெரியும் குந்தவிதேவியாரின் பரிவாரங்கள் நகரை அடையுமுன் நாம் சற்று விரைவாக உறையூரில் நுழைந்து நகர்வலம் வருவோம்.

கடந்த 300 வருடங்களில் உறையூர் நன்கு வளர்ந்து விட்டது. புகார் நகரம் கடலுக்கு இரையான பின் சோழர்களால் தலைநகரமாகப்பட்ட நகரத்தில் அனேக மாற்றத்தை காண்கிறோம். அந்நாளில் கட்டப்பட்ட பழைய அரண்மனைகளும், பின்னால் கட்டப்பட்ட புது மாளிகைகளும் நிறைந்து காணப்பட்டது. எங்கு நோக்கினும் பச்சை பசேல் என காட்சி அளித்த இயற்கை அன்னை சோலைகளையும், வயற்காடுகளையும் செழுமையாக காட்சி அளிக்க வைத்தாள். காலம் காலமாக காவிரியால் அடித்து உருட்டி கொண்டு வரப்பட்ட வண்டல் மண் மூன்று போக விளைச்சலை தந்தது. ஊருக்கு வெளியே உள்ள கருமார் குடியிருப்பில் இருந்து அடுப்பு புகையும், இரும்பு இரும்பால் அடிபடும் ஓசையும் கேட்டது. தூரத்தில் எங்கோ கோவிலில் காண்டாமணியின் ஓசை உச்சி கால பூஜையை நமக்கு தெரிவித்தது. சிறுவர்கள் கோழிகளை துரத்தி களைத்து, ஆநிரைகளை குளிப்பாட்ட ஆற்றினில் இறங்கினர். இறைச்சி வதக்கும் மணம் காற்றில் கலந்து நமது நாசிகளை அடைந்தது.

நகரத்தின் மத்தியில் சுண்ணம் அடித்து புது மெருகுடன் பொலியும் பெருமாளிகையின் உச்சியில் புலிக்கொடி கம்பீரமாக பறந்து கொண்டு இருந்தது. இதோ நாம் நகர்வலம் வருமுன் குந்தவிதேவியாரின் பரிவாரங்களும் மாளிகையை அடைந்துவிட்டது. பரிவாரங்களோடு நாமும் கலந்து உள்ளே நுழைவோம்.

மந்திரி பிரதானிகளும், சேவகர்களும் ஒருவித பதட்டத்துடன் உலா வருவதை கண்டால் ராணி வருமுன் காஞ்சி சபையில் நடந்தது ஒற்றர் மூலம் வெளியே கசிந்து விட்டது எனத்தெரிகிறது.

மன்னனை காணாது சிறிது சஞ்சலப்பட்ட குந்தவி சேனாதிபதி கண்டன் மறவனாரை அழைத்தாள்.

"மன்னரிடமிருந்து தகவல் வந்ததா, சேனாபதி?.."

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 10:22 pm

"5 நாட்களுக்கு முன் வீர்சேனரை சந்திக்க சென்ற மன்னரிடமிருந்து இது வரை தகவல் ஏதும் இல்லை தாயே, ஆனால் வீரசேனர் மன்னரை மல்லையில் சந்தித்த பிறகு திருவொற்றியூர் சென்றுள்ளார் என செய்தி கிடைத்துள்ளது., காஞ்சியில்...."என ஆரம்பித்தவரை பார்வையால் தடுத்த குந்தவி," சோழ நாட்டிற்க்கு நேரம் சரியில்லை, கண்டனாரே, பல்லவ மன்னன் சோழ நாட்டை மீண்டும் திறை செலுத்தும் அடிமை நாடாக மாற்ற ஆசைப்படுகிறான். பஞ்சத்தில் வாடும் தொண்டை மண்டலத்திற்க்கு சோழ நாட்டின் வளத்தை அளிக்க முயற்ச்சிக்கிறான் பரமேஸ்வரன். விலை கொடுத்து வாணிபம் செய்ய தயாரில்லை அவன், அடிமையாக்குவதன் மூலம் திறையாக எடுக்க முயல்கிறான். நாடெங்கும் கோவில் கட்டி பொக்கிஷத்தை செலவழித்த பல்லவன் போர் துவங்கும் வேளையில் நமது மடியில் கை வைக்கிறான்.."

"தாயே, இப்படியே போனால் ...?" என கலக்கத்துடன் சொன்ன கண்டன் மறவனாரை வருத்தத்துடன் பார்த்த பல்லவன் மகளும், சோழகுல விளக்குமான் குந்தவி பிராட்டி," புரட்டாசி பௌர்னமி வெண்ணாறங்கரை மறந்து விட்டதா மறவனாரே...?" என்றாள்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 10:23 pm

குருவும் சிஷ்யனும்

ஆதவன் கிழக்கில் நன்கு எழும்பியது நமக்கு சுரீரென்று உறைத்தது. பச்சை தகடாகவும் சில நேரம் நீலப்பட்டாடை விரித்தது போலவும் காட்சி தரும் கடலன்னை அன்று ஏனோ மகிழ்ச்சியுடன் நர்த்தனமாட, அலைகள் பெரிதாக எழும்பி மனதிற்க்குள் சிறிது பயத்தை ஏற்படுத்தியது. கரையை நோக்கி வெகு வேகமாக வந்த அலைகள் கரையில் வெகு தூரம் ஏறி சக்தி இழந்து வந்த வழியே திரும்பின. பயம் எல்லாம் வெளியில் இருந்து பார்க்கும் நமக்குத்தான், மீன் குஞ்சுகள் போல் கடலில் குதித்து நீந்தி விளையாடும் பரதவ குழந்தைகளுக்கு அல்ல. தம் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்து கொண்டு வலை பின்னும் பரதவ பெண்களையும் அங்கு காண்கிறோம். ஆடவர் அனைவரும் ஆதவன் துயிலெழுமுன்னமே கடலில் வலை வீச சென்றுவிட்டனர் போலும்.

இவற்றை நோக்கியபடியே மெதுவாக குதிரையின் மீது அமர்ந்து வரும், நமக்கு ஏற்கனவே பரிச்சயமான வீரசேனன் கடலை உற்று நோக்கியபடியே வந்தான். அவன் பார்வை தொலைதூரத்தில் அசைந்து வரும் படகின் மீது இருந்தது.

படகிலிருந்து இறங்கியவன் நேராக வீரசேனனின் காலில் விழுந்து," குருவே, உங்களை இங்கு ச்ந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.." என்றான்.

காலில் விழுந்தவனை தூக்கி எழுப்பி மார்புற தழுவிக்கொண்ட வீரசேனன்," கரியாட்டி, உன்னை கண்டதும் யானை பலம் வந்துவிட்டதடா, உன்னோடு பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன, உன் வீட்டிற்க்கு செல்வோமா?... என்றார்

சைவர்களும், வைணவர்களும், பௌத்தர்களும், சமணர்களும், சில யவனர்களும் சேர்ந்து வாழும் இடம் அது. கடற்கரையை ஒட்டி திருமயிலையில் சைவர்களும் திருஅல்லிக்கேணியில் வைணவர்களும் தனித்தனியே அக்ரஹாரம் அமைத்து வாழ்ந்து வந்தார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 10:25 pm

குதிரையின் தலைக்கயிறை பிடித்தவாறு நடந்த வீரசேனன்," வெண்ணாற்றங்கரை போர் ஞாபகம் உள்ளதா கரியாட்டி.."? எனெ கேட்க, " அது எப்படி மறக்கும் குருவே, நீங்கள் எத்தனை முறை அதை எனக்கு சொல்லி இருக்கிறீர்கள். அதை மீண்டும் ஒரு முறை கேட்க ஆசைப்படுகிறேன்.."

"அந்த புரட்டாசி பௌர்ணமி இரவில் வெண்ணாற்றில் நீருக்கு பதிலாக குருதி ஓடியது. உறையூரிலுருந்து வந்த 10000 வீரர்களில் ஒருவன் கூட செய்தி சொல்ல திரும்பவில்லை. லக்ஷம் பேர் கொண்ட பல்லவ சைன்யத்தோடு இந்த சிறு படை கொண்டு மோத மிகுந்த தைரியம் வேண்டும். அது பார்த்திபனிடம் இருந்தது, அதுவே மாமல்ல சக்ரவர்த்திக்கு உகந்ததாகப்போக பார்த்திபனின் சுயராஜ்யக்கனவை விக்கிரமன் மூலமாக நிறைவேற்றினார். இன்று அந்த கனவிற்க்கு வந்தது ஆபத்து.."

"குருவே, இப்போது என்ன புதிய ஆபத்து வந்துவிட்டது..?"

கரியாட்டியை கூர்ந்து பார்த்த வீரசேனன்," சிலநேரம் நீ என்னை பரிட்ச்சிக்கிறாயோ என்ற எண்ணம் எனக்கு உண்டு, உத்தரபாரத சக்ரவர்த்தி ஹர்ஷர் சந்ததியின்றி மாண்டது பல்லவ நாட்டின் தலை சிறந்த ஒற்றனுக்கு தெரியாமல் இருக்காது. அங்கு வாரிசு பிரச்சனை தலை ஓங்கி இருக்கும் வேளையில் சளுக்கியரை பற்றிய கவலையில் இருவரும் போரிடா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். இனி சளுக்க மன்னன் விக்ரமாதித்தன் கவலையின்றி தென்திசை நோக்கி படைஎடுக்கலாம். அவனுக்கு போர் மந்திரியாக பொறுப்பு ஏற்று இருப்பவர் ஸ்ரீராமபுண்யவல்லபர்......"

அப்பெயரை கேட்டதும் தேள் கொட்டியது போல் குதித்த கரியாட்டி," அவர் ஒரு அந்தணர், போர் செய்து பழக்கமில்லதவர் என்று கேள்விப்பட்டெனே.." என்றவனைப்பார்த்து சிரித்த வீரசேனன், " ஒரு படையை அயுதம் இல்லாமலும் அழிக்க அவரால் முடியும். விக்ரமாதித்தன் வீரமும், ஸ்ரீராமபுண்யவல்லபரின் மதியூகமும் பல்லவ நாட்டை பொசுக்கப்போகிறது. இதற்கு முதல் களபலி சோழநாட்டின் சுதந்திரம்.."

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 10:26 pm

கரியாட்டியின் கதை


நாள்தோறும் தனது ஏழு குதிரைகள் பூட்டிய தேரின் மூலம் இந்த உலகினை உலா வந்து தன் ஒளியினால் உலகை வாழ வைக்கும் சூரியபகவான் அன்போடு தன் பல்லாயிரம் கரங்களை நீட்ட அதில் ஒன்று மண் தரையில் படுத்து இருக்கும் கரியாட்டியின் முகத்தில் விழுந்தது. திரும்பி படுத்த கரியாட்டியின் கண்கள் அயர்ந்து உறங்கும் வீரசேனனை பார்த்து நின்றது. இவர் இல்லாவிடில் இன்று நான் இல்லை என்று எண்ணிய அவன் மனம் சற்றே இறந்த காலத்தை நோக்கி நடைபோட்டது.

40 ஆண்டுகளுக்கு முன் ஓட்டர்தேசத்தில் கரை இறங்கிய யாசோஸ் கேரியோட்டிஸின் கண்களில் பட்டவள் பத்ரா என்னும் கலிங்க தேசத்து தேவரடியாள். பல தேசங்களை கண்டு பழக்கப்பட்ட மாலுமியான அந்த யவனனுக்கு அவள் ஆட்டமும், பாட்டமும் புதிதாக தெரிய அந்த கணமே அவளிடம் தன் மனத்தை பறி கொடுத்தான்.

அவனது உயரத்தையும் ஆகிருதியையும் கண்டு முதலில் பயந்த பத்ரா நாளடைவில் அவனது வெள்ளை உள்ளத்தில் தன்னை ஐக்கியம் ஆக்கியதின் பலன் ஒரு வருடத்தில் கையில் கிடைத்தது. நீல கண்களும், செம்பட்டை முடியுமாக இருந்த சாவோஸ் கேரியோட்டிஸுக்கு ஆரம்பமே சரியாக அமையவில்லை. சிறு வயதில் தாயை இழந்த அந்த சிறுவனை சரியாக வாழ அந்த சமுதாயம் அநுமதிக்கவில்லை. இதை காண சகிக்காத தகப்பன் அவனை யவனம் செல்லும் கப்பலில் ஏற்றி தன் குடும்பதாரிடம் அனுப்பி வைத்தான். மத்தளத்திற்க்கு இரு பக்கமும் அடி என்பது போல் அங்கும் நிலைமை சரியில்லை. நாள்தோறும் ஆடுகளை மேய்த்து விட்டு பின் ஆட்டுப்பாலினால் செய்யப்பட்ட பாலேடு கட்டிகளும், பிட்டா ரொட்டியும் அவனுக்கு அலுத்து விட்டது. தாய் ஊட்டிய பால் சோறும், நெய் சோறும், கதம்பச்சோறும் அவனுக்கு மறக்கவில்லை. மேலும் தகப்பனை போல் உயரமும், ஆகிருதியும் கொண்ட அவனை அவன் சுற்றத்தார் பார்த்த பார்வையும் அவனுக்கு பிடிக்கவில்லை. வீட்டை விட்டு ஓடிய சாவோஸுக்கு புகலிடம் கொடுத்தது தகப்பனின் தொழிலே. அரபு நாடு வழியாக பாரதம் செல்கிறது என்ற ஒரே காரணத்திற்க்காக அவன் வேலைக்கமர்ந்த அரபுக்கப்பல் அவன் கனவிலும் நினைத்திராத துன்பத்தை அளித்தது. கசையடிகளை தாங்க முடியாத சாவோஸ் ஒரு நாள் கப்பலில் இருந்து கடலில் குதித்து விட்டான். கை சளைத்து மூழ்கும் அவனை காப்பாற்றியது ஒரு பல்லவ நாட்டு கப்பல். பத்து நாள் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த அவனை பேணிக் காத்தது அக்கப்பலின் கலபதி போன்று காட்சியளித்த வீரசேனன். நினைவு திரும்பியதும் இதமாக பேசி அவன் பயத்தை போகிய வீரசெனன், தனக்கும் அவன் வயதில் ஒரு மகன் இருப்பதாக கூறிய பின் அவன் மீது பக்தியே வந்து விட்டது.

வீரசேனனின் ஆலோசனையின் பேரில் பல்லவ கடற்படையில் சேர்ந்த கரியாட்டி ( இனி அவனை மற்றவரைப்போல் இப்பெயரிலேயே அழைப்போம்) விரைவிலேயே தான் வித்தியாசமானவன் என நிறுபித்து விட்டான். கழுகு போன்ற கூரிய பார்வையும் பெருங்காற்றினிலும், அலைகளிலும் குரங்கு போல் பாய்மரங்களில் அவன் தாவி ஏறியது அவன் சிறந்த மாலுமி எக்ஸ் தெரிய வைத்தது. மல்லை வரும் போதெல்லாம் வீரசேனரை தேடி சந்தித்து அவருடன் அளவளாவுவது அவனுக்கு பிடித்தமானதாகவும் இருந்தது. வீரசேனனும் கரியாட்டியை பேச விட்டு அவனிடம் இருந்து உலகத்தை பற்றி நிறைய அறிந்து கொண்டார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக