புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செபம் என்றால் என்ன? Poll_c10செபம் என்றால் என்ன? Poll_m10செபம் என்றால் என்ன? Poll_c10 
366 Posts - 49%
heezulia
செபம் என்றால் என்ன? Poll_c10செபம் என்றால் என்ன? Poll_m10செபம் என்றால் என்ன? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
செபம் என்றால் என்ன? Poll_c10செபம் என்றால் என்ன? Poll_m10செபம் என்றால் என்ன? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
செபம் என்றால் என்ன? Poll_c10செபம் என்றால் என்ன? Poll_m10செபம் என்றால் என்ன? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
செபம் என்றால் என்ன? Poll_c10செபம் என்றால் என்ன? Poll_m10செபம் என்றால் என்ன? Poll_c10 
25 Posts - 3%
prajai
செபம் என்றால் என்ன? Poll_c10செபம் என்றால் என்ன? Poll_m10செபம் என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
செபம் என்றால் என்ன? Poll_c10செபம் என்றால் என்ன? Poll_m10செபம் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
செபம் என்றால் என்ன? Poll_c10செபம் என்றால் என்ன? Poll_m10செபம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
செபம் என்றால் என்ன? Poll_c10செபம் என்றால் என்ன? Poll_m10செபம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
செபம் என்றால் என்ன? Poll_c10செபம் என்றால் என்ன? Poll_m10செபம் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செபம் என்றால் என்ன?


   
   

Page 1 of 2 1, 2  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:40 am

செபம் என்றால் என்ன? செபிப்பது எப்படி? எத்தனை வகையான செபங்கள் உண்டு? எனக்குப் பிடித்த செபம் எது? இந்த கேள்விகளுக்கு பதில் காண்போம்.

செபங்கள் பலவகை.அவைகளில் முக்கியமானவைகள்.

1) ஆராதனை செபம் 2) மன்னிப்பு செபம் 3) புகழ்ச்சி செபம் 4) செவிமடுத்தல் செபம்
5) மன்றாட்டு செபம் 6) அர்ப்பண செபம் 7) நன்றி செபம்.


ஒரு நண்பரை சந்திக்கும்போது என்ன செய்கிறோம்? முதலில் வணக்கம் செலுத்துகிறோம். (ஆராதனை) , மனநோகச் செய்திருந்தால், அவரிடம் மன்னிப்புக் கேட்கிறோம் (மன்னிப்பு செபம்). அவரது நல்ல குணங்களுக்காக அவரை பாராட்டுகிறோம்(புகழ்ச்சி செபம்), அவரோடு கலந்து பேசி அவர் ஆலோசனையை கேட்கிறோம் (செவிமடுத்தல் செபம்), அவரது உதவியை நாடுகிறோம் (மன்றாட்டு), அவருக்கு உதவியளிக்க உறுதி கூறுகின்றோம். (அர்ப்பணம்), இறுதியில் நன்றி கூறி விடை பெறுகின்றோம்(நன்றி).

இறைவனை சந்திக்கும்போதும் இவை அனைத்தும் நிகழவேண்டும். திருப்பலியில் இறைவனை சந்திக்கிறோம். திருப்பலிதான் சிறந்த செபம். அதில் எல்லா வகையான செபங்களும் அடங்கியுள்ளன. இதை சிறிது விளக்கமாகக் காண்போம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:42 am

ஆராதனை செபம்

திருப்பலிக்கு ஆலயம் சென்றவுடன் நாம் செய்வது என்ன? முழந்தாளிட்டு நம்மை தாழ்த்தி, நித்திய ஸ்துதிக்குரிய சொல்லுகிறோம். இறைவனை ஆராதிக்கிறோம். பிதா, சுதன், ஆவியைப் பணிந்து ஆராதிப்போம். பாடல்களால் ஆராதிக்கலாம். அமைதியில் ஆராதிக்கலாம். இறைவன் ஆராதனைக்குரியவர். இறைவனை மட்டுமே நாம் ஆராதிக்க வேண்டும்.

மன்னிப்பு செபம்

திருப்பலி ஆரம்பமாகிறது. நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறோம். நான் பாவி என்று ஏற்றுக்கொள்;கிறேன். ஆண்டவரே இரக்கமாயிரும், ஆண்டவரின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெறுகின்றோம்.

புகழ்ச்சி செபம்

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை உண்டாகுக என்று பாடி ஆண்டவரை புகழ்கிறோம். இது சிறப்பான செபம். இசையிலும், இசைக்கருவிகளாலும் ஆண்டவரைப் புகழ்வோம். திருப்பலியே புகழ்ச்சி பலிதான். இயேசுவோடு, இயேசு வழியாக தந்தையை புகழ்கிறோம். ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன். அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும். (திபா 34-1)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:43 am

செவிமடுத்தல் செபம்

திருப்பலியில் அடுத்து வருவது வார்த்தை வழிபாடு, விவிலியத்திலிருந்து வாசகங்கள் வாசிக்கப்படுகின்றன. இறைவார்த்தை வழியாக இறைவன் பேசுகிறார். அவர் குரலுக்கு செவிமடுக்கின்றோமா? இவரே என் அன்பார்ந்த மகன்! இவருக்கு செவிசாயுங்கள்! (மத் 17-5). ஆண்டவரே பேசும், அடியவன் கேட்கிறேன் (1சாமு 3-10). அநேகத் தீமைகளுக்குக் காரணம்;, இறைவார்த்தையை கேட்டு, இறை சித்தத்தை நாம் நிறைவேற்றுவதில்லை.

மன்றாட்டு செபம்

அடுத்து மன்றாட்டு. கேட்ட இறை வார்த்தையின்படி வாழ செபிப்பதே சிறந்த மன்றாட்டு. மேலும் திருச்சபைக்காகவும், உலகிற்காகவும் செபிக்கிறோம். இதுவே விசுவாசிகளின் மன்றாட்டு.

அர்ப்பண செபம்

திருப்பலியில் அப்ப, இரசத்தோடு நம்மையே காணிக்கையாக்குகிறோம். இதுவே அர்ப்பணம். நமது வாழ்வே ஒரு பலி. தினமும் திருப்பலியில் நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம். நமது அர்ப்பணத்தை தினமும் புதுப்பிப்போம். நம்மையும் நம் வாழ்வையும் நம் இன்ப துன்பங்கள், வேலை வருத்தங்கள், பாவங்கள், பலவீனங்கள், வெற்றி தோல்விகள், பகை வெறுப்புக்கள், நமது குடும்பப் பிரச்சனைகள், செபங்கள், தவங்கள், அனைத்தையும் பலியாக ஒப்புக் கொடுப்போம். எனக்குப் பிடித்தது அர்ப்பண செபம்தான். நான் விரும்பி செபிப்பது இந்த செபம் தான். புனித மார்க்கிரேட் மரியம்மாளின் சேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கும் செபத்தை தினமும் நற்கருணை வாங்கியபின் சிறு வயதிலிருந்தே செபிப்பேன். இந்த செபமே என் வாழ்வை மாற்றியது.

நன்றி செபம்

இறுதியில் நன்றி செபம். நமது வாழ்வே ஒரு நன்றி செபமாக மாற வேண்டும். எந்நேரமும் நன்றி கூறுங்கள் (எபே 5-20)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:44 am

நமது செபம் எப்படி இருக்க வேண்டும்?

பெறுவதிலும் தருவதிலே தான் அதிக இன்பம்

நமது செபம் எப்படி இருக்க வேண்டும்? எவ்வாறு செபிக்க வேண்டும்? என்று இறைமகன் இயேசு கற்பித்துள்ளார். நாம் செபிக்கும் நேரத்தில் தாம் நாம் இனி வாழ வேண்டிய பொழுதிற்கான மூச்சுக்காற்றை பெறுகின்றோம். வாய்ப்பேச்சு மட்டும் செபமல்ல.

செபம் என்பது உள்மனதில் தோன்றி மனதின் ஆழத்தில் உடைந்து வார்த்தை வழியாக வெளிவருவது எவ்வளவு அதிகமாக நாம் ஒருவரை சந்திக்கின்றோமோ அவ்வளவு அதிகமாக அவரோடு நாம் கொண்டுள்ள உறவு வலுப்படும். அது போலவே, எவ்வளவு அதிகமாக நாம் இறைவனோடு உரையாடுகிறோமோ எவ்வளவு அதிகமாக இறைவனோடு நாம் கொண்டுள்ள நெருக்கமும் உறவும் அதிகமாகும். காரணம் 'செபம் என்பது உரையாடல்' வானகத் தந்தை மீது நமக்குள்ள உறவு நாளுக்கு நாள் வளரவேண்டும்.

'செபம் என்பது செயல்' நாம் எப்போதெல்லாம் ஒய்வு, விளையாட்டு, உண்ணுதல், உதவுதல் போன்ற நிகழ்வகளை,செயல்களை இறைவன் பெயரால் செய்கின்றோமோ அப்போது அச்செயல்கள் செபமாக உருவெடுக்கிறது. இறைவனைத் துதித்து,புகழ வேண்டியது நம் கடமை அவர் கேட்கும் போதும் தருவார். கேட்காவிடினும் நம் தேவையறிந்து தருவார். காரணம் பெறுவதிலும் தருவதிலே தான் அதிக இன்பம் காண்பவர் அவர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:46 am

செபிப்பது எப்படி?

நண்பனோடு நண்பனாக


நண்பன் நண்பனோடு அன்புடன் உரையாடுவது போல மனிதன் இறைவனோடு உரையாடுவதே செபம். இரு நண்பர்களும் ஒரிடத்தில் கூடுவார்கள். பேசுவார்கள். முடியாதபோது கடிதம் எழுதி உரையாடுவார்கள். தொலைவில் உள்ள நண்பருக்குக் கடிதம் எழுதுவதுபோல் இன்று நாம் உணரவேண்டும். வேறுசில சமயங்களில் அவர் நம் அருகில் இருப்பதை உணர்ந்து நெருக்கமாக அவருடன் உரையாடமுடியும்.

நண்பனைப் பார்க்கலாம். கடவுளைப் பார்க்கமுடியாது. நண்பனுடைய குரலைக் கேட்கலாம். கடவுளுடைய குரலைக் கேட்க முடியாதென்று நினைப்பீர்கள். நண்பனைவிட இறைவன் உண்மையாகவே நம் அருகில் இருப்பவர். நம்முள் நம் இதயத்தில் வீற்றிருக்கிறார். நம் நண்பர் நம் அருகில் இருந்து உரையாடலைக் கேட்பதைவிட இறைவன் அதிக நெருக்கமாக நம்மோடு இருக்கின்றார்.

என்றும் எங்கும் நம்மோடு இருக்கும் இறைவன், நம்மோடு பேச எப்பொழுதும் ஆவலோடு இருக்கிறார். அவர் நம்மை நினைக்காத நேரமில்லை. நாம் தான் அவரோடு பேச நேரம் வேண்டும். மனம் வேண்டும். ஆவல் வேண்டும்.

அவரை அன்புடன் நினைக்கும்பொழுது அவரிடம் பேசுகிறோம். நம் எண்ணத்தில் அவரிடம் சென்று அவரிடம் பேசலாம். வாழ்த்தலாம். வணங்கலாம். நமக்குத் தேவையானவற்றைச் சொல்லலாம். நாம் பெற்றுள்ள நன்மைகளுக்காக அடிக்கடி நன்றி கூறவேண்டும்..

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:46 am

செபத்திற்கு அடிப்படையானது நம்பிக்கை


செபத்திற்கு அடிப்படையானது நம்பிக்கை. "நீங்கள் இறைவனிடத்தில் வேண்டும்போது எவற்றைக் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று வீட்டீர்கள் என நம்புங்கள். நீங்கள் கேட்டபடியே நடக்கும்" மாற்கு 11:24 என்கிறார் இயேசு.

இயேசு செபித்தார் என்பதை பைபிளில் பல இடங்களில் காணலாம். நாம் எப்பொழுதும் செபிக்க வேண்டுமென்று இயேசு முன்மாதிரி காட்டினார். மேலும் நாம் செபிக்க வேண்டுமென்று கட்டளையும் கொடுத்தார். 'அவரோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று தனித்திருந்து இறைவனிடம் வேண்டி வந்தார்," லூக் 15:6. இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார், அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார். மாற் 1:35 இயேசு செபிப்பதை சீடர்கள் கவனித்து வந்தனர். அவர் செபித்து திரும்பி வரும்பொழுது முகமலர்ச்சியுடன், உடல்புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார். சீடர்கள் இயேசுவை அணுகி எங்களுக்கும் செபிக்கக் கற்றுத் தாரும் என்று கேட்டனர். நீங்கள் இவ்வாறு செபியுங்கள் என்றார் இயேசு.

'விண்ணுலகிலிருக்கிற எங்கள் தற்தையே,
உமது பெயர் தூயதெனப் பேற்றுப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக!
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்!
எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துளள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும்!
எங்களைச் சோதமைக்கு உட்படுத்தாதேயும்!
தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்! மத்6:9-13

இதுவே இயேசு கற்பிக்க செபம். செபத்தைப்போல பயன்தரும் சீரிய செயல் வேறெதுவும் இல்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:47 am

உமக்கு விருப்பமானால்

நாம் உருக்கமாக செபிக்கும்பொழுது உள்ளம் உயருகின்றது. இறைவன் மனம் இரங்குகின்றார். குறிப்பாக நமக்குத் துன்பமும். துயரமும். கவலையும் மேலிடும்பொழுது தந்தையாகிய இறைவனிடம் செபிக்கவேண்டும். களைப்புறாமல் விடாது விழித்துதிருந்து செபிக்கவேண்டும்.

இயேசு தனக்கு வரும் துன்பங்கள் சித்திரவதை அனைத்தையும் முன்னறிந்து செபத்தினால் தம்மையே திடப்படுத்திக் கொண்டார். 'தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல. உம் விருப்பப்படியே நிகழட்டும்." என்று செபித்தார்.


செபம் ஆன்மாவின் உயிர்நாடி. செபம் வீணாகப் போவதில்லை என்பது உண்மை. மிக எளியவரும் வலிமையற்றவரும் கூட செபத்தினால் மாபெரும் செயல்களைச் சாதித்து விடலாம். அவர் நம் அன்புள்ள தந்தை. எனவே அவர் நமக்க உதவி செய்ய வல்லவர். செபத்தில் இன்பம் காணும் வரையில் செபித்துப்பழகுவோமாக. வாழ்நாளெல்லாம் செபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:48 am

தொடர்ந்துச் செபியுங்கள்

செபத்தைப் பற்றி காலங்காலமாக திருச்சபைக்குள்ளும், வெளியிலும் திறனாய்வு செய்பவர்களும், மாறுபட்ட கருத்துடையவர்களும் பலர் உள்ளனர். இருப்பினும் பிரச்சனை இதுதான். ஒரு சிலர் செபத்தின் தேவையைப் பற்றி சிறிதே அறிந்தவர்களாகவோ அல்லது மனித வாழ்வில் அடிக்கடியும், மீண்டும் மீண்டும் செபிப்பதன் அவசியத்தை உணராதவர்களாகவோ இருப்பது தான். அவர்களது விவாதம் மாறுபட்டவை, பலதரப்பட்டவை. அவர்கள் போன்றே மக்களைப் பற்றி எண்ணும்போது கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.


குருவும் அவரது சீடரும்

ஒரு குருவும் அவரது சீடரும் தங்கள் கிராமத்தின் வழியே ஓடும் ஆற்றின் கரை ஓரமாக பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். சீடன் திடீரென்று குருவிடம் ஒரு கேள்வியை எழுப்பினான்.குருவே, கடவுள் நம்மைப் பற்றியும் நமது தேவைகளைப் பற்றியும் நன்றாக அறிந்திருக்கிறார் என்று சொல்கிறீர்கள், அப்படியிருக்க நாம் ஏன் நமது தேவைகளை அவரிடம் கேட்டு செபிக்க வேண்டும்? என்று கேட்டான்.

நீ சிறுவனாக இருந்தபோது உன் பெற்றோர் உன் மீது அக்கறையுடைவர்களாய் உனது எல்லாத் தேவைகளையும் நீ கேட்பதற்கு முன்பாகவே அறிந்து நிறைவு செய்தனர். ஆனால் நீ வளர்ந்த பிறகோ, உனது தேவைகளை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்... அல்லவா? என்று சீடனிடம் கேட்டார் குரு. சீடனோ, குருவே நாம் ஏன் அடிக்கடியும், திரும்பத் திரும்பவும் செபித்துக் கொண்டே இருக்க வேண்டும்? என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே வந்தான். இம்முறை குரு பதிலேதும் கூறாமல் அவனை அப்படியே பிடித்து ஆற்றில் தள்ளி விட்டார். சீடன் நீரில் மூழ்கினான். மூச்சு திணறியது. காப்பற்றும் குருவே,காப்பற்றும்,காப்பற்றும் என்று கூச்சலிட்டுக் கத்தினான். சற்று நேரம் கழித்து குரு தன் கையை நீட்டி சீடனை ஆற்றுக்கு வெளியே இழுத்தார். உன்னை நான் ஆற்றில் ழுழ்க விடமாட்டேன் என்பது உனக்குத் தெரியுமே...,பின் ஏன் நீ அவ்வாறு மீண்டும் மீண்டும் உதவிக் கேட்டு அலறினாய்? என்று கேட்டார் குரு. நெருக்கடியும், அச்சமும் நிறைந்த அத்தருணத்தில் என்னால் கூச்சல் போடாமல் இருக்க முடியவில்லை குருவே எனறு கூறினான் சீடன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:49 am

தொடர்ந்துச் செபியுங்கள்

உதவியற்ற நிலை மனிதனில் இயற்கையாகவே உள்ளது என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். நாம் கடவுளை சார்ந்திருப்பது தொடர்ச்சியற்ற ஒன்று அல்ல. மாறக உறுதியானதும், நிலையானதும் ஆகும். பெரும்பாலான நேரங்களில் நாம் நம்முடைய வாழ்க்கையை நாமே நிர்வகித்துக் கொள்ளலாம். நமக்கு எப்போதாவது கடவுள்தான் தேவை என்ற எண்ணத்தில் வாழ்கிறோம். இங்கு தான் நாம் தவறு செய்கிறோம். உண்மையாகவே நாம் எப்போதும் அவர் கரங்களில் தான் இருக்கிறோம். இல்லையென்றால் நம் வாழ்வு என்றோ முடிந்திருக்கும். ஏனவே நாம் இயேசு செபம் செய்தது போலவும், தம் சீடருக்கு செபிக்கக் கற்பித்தது போலவும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் செபிக்க வேண்டும் (லூக் 6:12 9:28 18:1-5: மார்க்; 26:41) இயேசு தன் தந்தையின் விடுப்பத்தை ஆழ்ந்து உணர்ந்தவராய் அவரது திட்டத்தை தன் வாழ்வில் நிறைவேற்ற தேவையான எல்லா ஆற்றலையும் செபத்தின் வழியாகவே தந்தையிடமிருந்து பெற்றார்.

அன்னையின் பரிந்துரை

செபமாலை செபிப்பதன் வழியாக நம் தாய் மரியாள் நமக்குக் காட்டிய இயேசுவோடு ஒன்றிணையும் ஆழ்ந்த உணர்வினைப் பெறுவதுடன், தந்தை நமக்கென வைத்திருக்கும் இறை திட்டத்தை நிறைவேற்ற தேவையான ஆற்றலையும் அன்னையின் பரிந்துரை மூலம் பெற்றுக் கொள்வோம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:50 am

அன்னை தெரேசாவின் செபம்


இறைவா!

அமைதியின் தூதுவனாய் என்னைப் பயன்படுத்தும்.
பகையுள்ள இடத்தில் பாசத்தையும்
மனவேதனையுள்ள இடத்தில் மன்னிப்பையும்
ஐயமுள்ள சூழலில் விசுவாசத்தையும்
அவநம்பிகையுள்ள மனத்தில் நம்பிக்கையையும்
இருள்சூழ்ந்த இடத்தில் ஒளியையும்
துயரம் நிறைந்த உள்ளத்தில் மகிழ்ச்சியையும்
வழங்கிட, எனக்கு அருள் புரியும்.


ஓ! தெய்வீக குருவே!!
ஆறுதல் பெறுவதை விட ஆறுதல் அளிக்கவும்
பிறர் என்னைப் புரிந்து கொள்ள விரும்புவதை விட
பிறரைப் புரிந்து கொள்ளவும்
பிறருடைய அன்பை அடைய ஆசிப்பதை விட
பிறருக்கு அன்பை அளிக்கவும்
எனக்கு அருள்வீராக! ஏனெனில்,
கொடுக்கும் பொழுது மிகுதியாகப் பெறுகிறோம்,
மன்னிக்கும் பொழுது, மன்னிப்பை அடைகிறோம்
மரிக்கும் பொழுது, நித்திய வாழ்விற்குப் பிறக்கிறோம்
எனவே, சுயநலமற்ற வாழ்வில் ,அமைதியை அடைகிறோம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக