புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
3 Posts - 7%
heezulia
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 26, 2010 11:29 am

தஞ்சை பெரிய கோவிலின் மெயின் கேட் வழியாக செல்வாரா அல்லது வேறு பாதை வழியாக செல்வாரா என்ற கேள்விக்கு முதல்வர் கருணாநிதி நேற்று விடையளித்தார். மெயின் கேட் வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கையை 'மதிக்கும்' வகையில், அதன் வழியாக செல்லாமல் பக்கவாட்டு நுழைவாயில் வழியாக முதல்வர் பெரிய கோவிலுக்குள் சென்றார்.

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இன்றுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று தஞ்சை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் பெரிய கோவிலுக்குள் மெயின் கேட் வழியாக வருவாரா அல்லது பக்கவாட்டு வாயில் வழியாக வருவாரா என்பது பெரும் கேள்விக்குறியதாக இருந்தது.

இதற்குக் காரணம், பெரிய கோவிலின் மெயின் கேட் வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கை பல காலமாக நிலவி வருகிறது. மெயின் கேட் வழியாக நுழைந்த இந்திரா காந்தி பின்னர் சில காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல எம்.ஜி.ஆர். மெயின் கேட் வழியாக நுழைந்த சில மாதங்களிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சரியாக மீளாமலேயே உயிரிழந்தார். எனவே முக்கியப் புள்ளிகள் குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் இந்தப் பாதை வழியாக நுழைவதே இல்லை.

ஆனால் பெரியாரின் தீவிர சீடர்களில் ஒருவரான முதல்வர் கருணாநிதி இந்த மூட நம்பிக்கையைப் புறக்கணித்து மெயின் கேட் வழியாக நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் தீவிர நாத்திகரான முதல்வர் மெயின் கேட் வழியாக நேற்று வரவில்லை. மாறாக அருகில் உள்ள பாதை வழியாக கோவிலுக்குள் வந்தார்.

பின்னர் கோவிலில் நடந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை முதல்வர் கண்டு களித்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக நந்தி மண்டபத்தை சுற்றி பச்சை மற்றும் சிவப்பு நிற கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. மாலை 5 மணிக்கு திருக்குவளை சகோதரிகள் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. திருக்குவளை சகோதரிகள் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பொன்னடை அணிவித்து கவுரவித்தார். அதன்பின்னர் பெண் ஓதுவார்கள் உள்பட 108 ஓதுவார்கள் திருமுறைகள் ஓதினார்கள்.

அதைத் தொடர்ந்து தஞ்சை பெரியகோவிலில் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் 1000 கலைஞர்கள் ஆடிய பரத நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த நடன கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

பட்டுச் சட்டை, வேட்டியில் கம்பீரமாக காட்சி அளித்த முதல்வர், வழக்கமாக அணியும் மஞ்சள் துண்டுக்குப் பதில் பட்டு அங்கவஸ்திரத்துடன் காணப்பட்டார்.

ஆதி சங்கரர் இயற்றிய சிவப்பஞ்சாட்சர ஸ்ருதி, திருஇசைப்பாவிலிருந்து சில பாடல்கள் உள்ளிட்ட பல பாடல்கள் இதில் இடம் பெற்றன.

முதல்வர் அங்கிருந்த ஓதுவார்களிடம் பெரிய கோவிலைப் புகழ்ந்து சில பாடல்களைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் அருணகிரிநாதர் பாடல்கள் சிலவற்றைப் பாடி முதல்வரை மகிழ்வித்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில்,

மாமன்னன் ராஜராஜனுடைய 1000 ஆண்டு விழாவை, அவன் கட்டிய அற்புதக் கோவிலின் பின்னணியை வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்றன. அதில் ஒன்றாக, நம்முடைய முனைவர் பத்மா சுப்பிரமணியம் குழுவினர், குழுவினர் என்றால் பொருந்தாது, சேனையுடன், ஒரு சேனையில் எவ்வளவுபேர் இருப்பார்களோ அதைப்போல 1000 நடனக் கலைஞர்களை திரட்டி வந்து எல்லோரும் மகிழும் வகையில் நடனமாடியிருக்கிறார்.

நடனத்தில், நடன கலைஞர்களின் கலைநயம், ஆர்வம், நம்பிக்கை, பற்று ஆகியவற்றை காண முடிந்தது. இந்த நிகழ்ச்சியை 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் ஆன்றோர், சான்றோர், விஞ்ஞானிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வியந்து போயிருக்கிறார்கள்.

1000 ஆண்டு விழாவையொட்டி 1000 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்போவதாக பத்மா சுப்பிரமணியம் என்னிடம் சொன்னபோது, நீங்கள் சிரமப்பட வேண்டாம், உங்களுடன் அரசும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த தயாராக இருக்கிறது என்று சொன்னேன். அதனை ஏற்றுக்கொண்டு நடன நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்தார்.

பாடல், இசையுடன் 1000 பேருக்கு ஒத்திகை கொடுக்க வேண்டுமே என்று கேட்டேன். அதற்கு அவர் கூறுகையில், பாடல், இசை, நடனத்துடன்கூடிய சி.டி.யை ஆயிரம் பேருக்கும் அனுப்பப் போகிறேன். அவர்கள் அதனைப் பார்த்து ஒத்திகை பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

அவர் சி.டி.யைப் போட்டாரோ என்னவோ தெரியவில்லை. நான் சி.ஐ.டி.யைப் போட்டு விசாரிக்க சொன்னேன். அப்போது நடன நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஏற்பாடு நடக்கிறது என்று தெரியவந்தது. அதன்படி, இந்த நடன நிகழ்ச்சி சிறப்பாக, வெற்றிகரமாக நடந்துள்ளது. நடனத்தின் மூலம் நம்மை மகிழ்வித்த பத்மா சுப்பிரமணியம் குழுவினருக்கு உங்கள் சார்பில் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், கவிஞர் கனிமொழி, அமைச்சர்கள் ராஜா, பழனிமாணிக்கம், பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Sep 26, 2010 11:55 am

வாழ்க தமிழக மாமன்னர் கருணாநிதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

:suspect: 🐰

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக