புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
37 Posts - 82%
heezulia
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_m10ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 23, 2010 7:56 pm

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகள் தொடங்கி அறுபது வரை திரை இசை மெல்லிசை வடிவத்தில் பல்வேறு உத்திகளைக் கையாள ஆரம்பித்தது. இந்த முயற்சியில் ஏராளமான கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள், வாத்திய இசைக் கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பிரபல நடிகர்கள், நடிகைகள், விமரிகர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக ரசிகர்கள் தங்கள் திறமைகளையும் எதிர்பார்ப்புகளையும் அள்ளி வீசி மெல்லிசையை அனைவரும் அங்கீகரிக்கும் ஒரு தேர்ந்த இசை அமைப்பாக மாற்றினர்.

இந்தக் கால கட்டத்தில் தமிழ்த் திரை இசைக்கு ஒரு தனி முத்திரையைப் பதிக்க வந்தார் கவியரசர் கண்ணதாசன் (தோற்றம் 24-6-1927; மறைவு 17-10-1981). தன் சிறந்த சொல்லாட்சி, சொற்பிரயோகம், உவமை நயம், புதிய புதிய உத்திகள், சந்தங்கள், இலக்கிய நயம், பொருள் நயம், இசை நயம் ஆகியவற்றால் சுமார் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை அள்ளிக் கொட்டி 54 வயதிலேயே தன் பயணத்தை முடித்துக் கொண்டார் கவியரசர்.

சேரக் கூடாத இடத்தில் சேர்ந்து நல்ல அனுபவம் பெற்று சேர வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்து உலகத்திற்கு தன் அனுபவங்களையும் வாழ வேண்டிய நெறிகளையும் அவர் போதிக்க முற்பட்ட காலத்தில் காலன் சற்று அவசரப்பட்டு விட்டான். விளைவு தமிழுக்கு நஷ்டம்!

தன்னைப் பற்றி ரத்த திலகம் படத்தில் (1963ம் ஆண்டு சீனப் போருக்குப் பின்னர் தேசபக்தியை வலியுறுத்தி வெளிவந்த படம்) அவரே தோன்றிப் பாடும் பாடல் (இரண்டு நிமிடம் 39 விநாடிகள் நீடிக்கும் பாடல்) ஒன்று உண்டு:

"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன் .. (நான் காவியத் தாயின்)
பாமர ஜாதியில் தனி மனிதன் நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்

நான் மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை"

உமர் கய்யாமின் மதுக் கோப்பை பாடல்களில் மனம் தோய்ந்த கண்ணதாசன் தன் நிலையையும் சற்று சிந்தித்து ஒப்பிட்டுப் பார்த்து தன்னைப் பற்றித் தானே விமரிசனம் செய்து கொண்டு தீர்க்க தரிசனத்துடன் "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை" என்று முத்தாய்ப்பாகக் கூறினார். உண்மைதான். அவர் பாடல்களுக்கு அழிவில்லை; அவர் இயற்றிய பாடல்களில் அவர் வாழ்கிறார்.

பெண்மையின் சிறப்பையும் காதலின் நளினத்தையும் அவர் நூற்றுக் கணக்கான இடங்களில் திறம்படச் சுட்டிக் காட்டுகிறார்!

"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால் போல் சிரிப்பதில் பிள்ளை அவள்
பனி போல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை"

பாவ மன்னிப்பு படத்தில் (1961ம் ஆண்டு வெளியான படம்) இடம் பெறும் பாடல் இது. பி.பி ஸ்ரீனிவாஸ் தன் தேனினும் இனிய மெல்லிய குரலால் மிருதுவாகப் பாடிய பாடல் இது. மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இசை அமைக்க தமிழகமெங்கும் பாடல் ஹிட் ஆகி அனைவரையும் ஆட்கொண்டது.

சிறுகூடல் பட்டியில் தோன்றி உயர்நிலைப் பள்ளியிலே தன் படிப்பை முடித்த முத்தையா கருவிலே திரு பெற்றுத் தமிழில் தேர்ந்து கவியரசர் கண்ணதாசனாக மாறி தமிழ் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

5000 பாடல்களில் அவர் தந்த தமிழ் நயமும் இசை நயமும் திரை இசை வரலாற்றில் தருவது ஒரு தனி நயம்!

நன்றி: நிலாச்சாரல் கலைராஜன்.



gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 8:08 pm

எங்கள் கண்ணதாசன் அழியா பொக்கிஷம் அய்யா.
அவரது படைப்புகள் அத்தனையும் வைரமணி மாலை.....
உலகம் அழியும் வரை அவரது படைப்புக்கள் அழியாது என்பது உறுதி.....
பகிர்ந்ததற்கு வாழ்த்துகள்....... மகிழ்ச்சி நன்றி நன்றி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 23, 2010 8:13 pm

அருமையான கவியாளன் .........
எல்லோர் மனதிலும் நிலத்து நிற்கும் ஒரு கவியரசு ....


பகிர்வுக்கு நன்றி ஐயா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக