புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
6 Posts - 24%
heezulia
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
5 Posts - 20%
i6appar
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
88 Posts - 37%
i6appar
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
2 Posts - 1%
prajai
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Sep 19, 2010 1:59 pm



WDகனவே கலையாதே படத்துக்குப் பிறகு வ.கௌதமன் இயக்கியிருக்கும் படம் மகிழ்ச்சி. படத்தை இயக்கி நடித்திருக்கும் வ.கௌதமன், இன்னொரு கதை நாயகனாக நடித்திருக்கும் சீமான், படத்தை தயா‌ரித்திருக்கும் அதிர்வு திரைப்பட்டறை மணிவண்ணன் என இப்படத்தைச் சார்ந்த அனைவருமே தமிழ் உணர்வாளர்கள் என்பது நமது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் செய்தி.

எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1968 எழுதிய தலைமுறைகள் நாவலையே மகிழ்ச்சி என்ற பெய‌ரில் கௌதமன் திரைப்படமாக்கியிருக்கிறார். இதற்காக அவர் 12 வருடங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டார் என்பது சிலருக்கு ஆச்ச‌ரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

தலைமுறைகள் நீல.பத்மநாபனின் முதல் நாவல். இந்த நாவல் தீவிர இலக்கிய பரப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தமிழின் சிறந்த யதார்த்தவகை நாவல்களில் தலைமுறைகள் முக்கியமானது என எழுத்தாளரும் விமர்சகருமான க.நா.சு. கொண்டாடினார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிறுகதை, நாவல், நாடகம் போன்ற இலக்கிய வடிவங்கள் அ‌ரிதாகவே படமாக்கப்பட்டுள்ளன. அதுவும் கடந்த பத்து வருடங்களில் இப்படியான முயற்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே சாத்தியமாகியுள்ளன. இது தமிழ் சினிமாவின் மிகப்பெ‌ரிய குறை என்றே சொல்ல வேண்டும்.

உலக அளவில் சிறந்த திரைப்படங்கள் எனக் கூறப்படுபவை பெரும்பாலும் நாவலை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் ஆகச்சிறந்த திரைப்படமாகக் கருதப்படும் பதேர் பாஞ்சாலியும் விபூதி பூஷணின் பதேர் பாஞ்சாலி நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே. தமிழின் சிறந்த திரைப்படமாகக் கருதப்படும் மகேந்திரனின் உதி‌ரிப்பூக்கள் கூட புதுமைப்பித்தனின் சிற்றன்னை கதையின் பாதிப்பில் எடுக்கப்பட்டதே.

இந்த ச‌ரித்திர உண்மைகள் வெளிப்படையானவை. இருந்தும் இலக்கியத்தை திரைப்படமாக்கும் போக்கு தமிழில் ஒரு பழக்கமாக உருக்கொள்ளவில்லை. இலக்கியத்துக்கும் திரைப்படத்துக்கும் நெருக்கமான உறவும் கொடுக்கல் வாங்கலும் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் கமல்ஹாசனும்கூட நாவலையோ, சிறுகதையையோ திரைப்படமாக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. சில இலக்கியவாதிகளை தனது கமர்ஷியல் படங்களுக்கு வசனம் எழுதச் செய்வதுடன் அவரது இலக்கிய தேடல் முடிந்துவிடுகிறது.

இலக்கியத்தைப் பற்றி சதா பேசிக்கொண்டிருக்கும் கமல்ஹாசனின் நிலையே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

இந்த‌ச் சூழலின் அடிப்படையில் பார்க்கும் போதுதான் மகிழ்ச்சி எத்தனை மகத்தான முயற்சி என்பதை பு‌ரிந்து கொள்ள முடியும். தலைமுறைகள் கன்னியாகும‌ரி மாவட்டம் இரணியல் பகுதியை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. அப்பகுதி மக்களின் வாழ்வை, குணாம்சத்தை நெருக்கமாகவும் நுணுக்கமாகவும் விவ‌ரிக்கும் கதை. நாவலை அப்படியே திரைப்படமாக்குவது என்பது இயலாத விஷயம். தலைமுறைகள் என்றில்லை எந்தவொரு இலக்கிய படைப்பையும் திரைப்படமாக்குவது என்பது ஒரு படத்தை ‌ரிமேக் செய்வதைப் போன்று எளிதானதல்ல. அது சிக்கலானது, சவாலானது.

விபூதி பூஷணின் பதேர் பாஞ்சாலி நாவலை சத்ய‌ஜித்ரே அப்படியே திரைப்படமாக்கவில்லை. நாவலில் உள்ள கிளைக்கதைகள் பலவும் படத்தில் இல்லை. நாவலின் ஆன்மாவை வெளிப்படுத்தக் கூடிய நிகழ்வுகளை மட்டுமே சத்ய‌ஜித்ரே தனது படத்தில் பயன்படுத்திக் கொண்டார். அதனாலேயே அப்படம் இன்றும் கொண்டாடப்படடுகிறது. மாறாக நாவலை பிரதியெடுத்திருந்தால் திரைப்படம் தோற்றுப் போயிருக்கும்.

இலக்கியத்தை திரைப்படமாக்கும் போது இயக்குனர் எதிர்கொள்ளும் முதல் சவால் நாவலில் இருந்து எதனை எடுத்துக் கொள்வது, எதனை தவிர்ப்பது என்பதை முடிவு செய்வதாகும். இது சாதாரணமானதல்ல. நுட்பமான அறிவும், ஆழ்ந்த தேடலும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். நாற்பது நாட்கள் படப்பிடிப்பு அறுபதாவது நாள் பட வெளியீடு, எண்பதாவது நாள் லாபம் என கலெ‌க்சனை குறி வைத்து நாலுகால் பாய்ச்சலில் செல்லும் மனங்களால் ஒரு இலக்கிய படைப்பை திரைப்படமாக்க இயலாது. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் இல்லாமல் போனதற்கு இந்த நாலுகால் பாய்ச்சலே முதல் காரணம்.


WDஒரு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மூன்றையும் சொந்தமாக எழுதினால் மட்டுமே இயக்குனருக்கு பெருமை என்பதான ஒரு போலி மனப்பதிவு தமிழ் திரையுலகில் நிலவுகிறது. வேறொருவ‌ரின் கதை, திரைக்கதை, வசனத்தில் படம் இயக்கினாலும் இயக்குன‌ரின் புகழ் மாய்ந்து போவதில்லை என்பதை நாம் இன்னும் உணர்வதாக இல்லை. இதன் காரணமாகவே அடுத்தவர்களின் படைப்பை திரைப்படமாக்குவது என்ற எண்ணமே நமக்கு தோன்றுவதில்லை. தமிழில் இலக்கியங்கள் திரைப்படமாகாததற்கு இது இன்னொரு காரணம்.

இந்த இரு காரணங்களையும் கௌதமன் தாண்டி வந்திருக்கிறார். அவரது இலக்கிய ஆர்வமும், நல்ல கதையை படமாக்க வேண்டும் என்ற உறுதியுமே இதனை சாத்தியமாக்கியிருக்கிறது. கனவே கலையாதே திரைப்படத்துக்குப் பிறகு ஆட்டோ சங்கர், சந்தனக்காடு போன்ற தொலைக்காட்சி தொடர்களை கௌதமன் இயக்கினார். இவை மிகுந்த கவனம் பெற்றன. இந்த காலகட்டத்தில் அவர் ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையை குறும்படமாக எடுத்தார். அப்படம் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது.

எம்.‌ஜி.ஆ‌ரின் அளவுக்கு மீறிய தனி மனித வழிபாட்டை விமர்சனம் செய்யும் விதமாக ஜெயகாந்தன் எழுதிய கதையே சினிமாவுக்குப் போன சித்தாளு. அன்றைய சூழல்தான் அந்தக் கதையின் மிகப்பெ‌ரிய பலம். கௌதமன் அதனை படமாக்கும் போது தனி மனித வழிபாடுகள் இருந்தாலும் சூழல் பொருத்தமாக இல்லாததால் படம் ஒரு பிரச்சாரம் போலவே தோற்றமிளித்தது.

அத்தகைய சறுக்கல்கள் ஏதும் நீல.பத்மநாபனின் நாவலுக்கு நேராது என நம்புவோம்.

நன்றி வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக