புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
     பார்வைகள் Poll_c10     பார்வைகள் Poll_m10     பார்வைகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
     பார்வைகள் Poll_c10     பார்வைகள் Poll_m10     பார்வைகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
     பார்வைகள் Poll_c10     பார்வைகள் Poll_m10     பார்வைகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
     பார்வைகள் Poll_c10     பார்வைகள் Poll_m10     பார்வைகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
     பார்வைகள் Poll_c10     பார்வைகள் Poll_m10     பார்வைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
     பார்வைகள் Poll_c10     பார்வைகள் Poll_m10     பார்வைகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
     பார்வைகள் Poll_c10     பார்வைகள் Poll_m10     பார்வைகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
     பார்வைகள் Poll_c10     பார்வைகள் Poll_m10     பார்வைகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
     பார்வைகள் Poll_c10     பார்வைகள் Poll_m10     பார்வைகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
     பார்வைகள் Poll_c10     பார்வைகள் Poll_m10     பார்வைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வைகள்


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Tue Sep 14, 2010 5:11 pm




பெரியப்பாவிற்கு முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் "பாசிடிவ்". "எதையும் 'பாசிடிவா' பாருடா. எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒரு 'பாசிடிவ்" அம்சம் இருக்கும். அதிலே கவனம் வை. நீ ஜெயிச்சிடலாம்" என்று அடிக்கடி சொல்வார்.

"அரண்மனை மாதிரி வீடு, ஆறு காரு, ஏக்கர் கணக்கில் பூமி, ஏகப்பட்ட காசு, இதெல்லாம் இருக்கும் போது அவர் வேணும்னா இப்படி பேசலாம். நம்மள மாதிரி அடி மட்டத்தில் இருந்துகிட்டு தினசரி வாழ்க்கையில போராடிட்டு இருக்கிறவனுக்கு தான் கஷ்டம்னா என்னான்னு தெரியும். ஜெயிக்க வேண்டாம், சமாளிக்கறதே பெரிய விஷயம்" என்று அண்ணா அவர் போனவுடன் கிண்டலடிப்பான். அவன் சொன்னதிலும் யதார்த்தம் இருந்தது.

எது எப்படியோ எனக்கு சிறு வயதிலிருந்தே பெரியப்பா மீது ஒரு ஹீரோ வர்ஷிப் இருந்தது. தோற்றத்தில் ஒரு கம்பீரம், நடையில் ஒரு வேகம், எப்போதும் எதிலும் நல்லதே பார்க்கும் ஒரு தனிப் பெரும் குணம் என எல்லாமாய் சேர்ந்து அவரை ஒரு ஆதர்ஷ மனிதராக என் மனதில் ஆக்கியிருந்தன.

வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த பெரியப்பாவிற்கு கடந்த ஐந்து வருடங்களாக இறங்குமுகம். வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாம் போய் அண்ணன் சொன்ன அடிமட்டத்திற்கு அவரும் வந்து விட்டார். திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்ததால் அவரது ஒரே மகனும் தற்போது தான் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டில் படிக்கிறான். அறுபது வயதில் அவர் மும்பையில் இருக்கும் தன் நண்பர் ஒருவர் ஹோட்டலில் மானேஜராக வேலை பார்த்து வருகிறார் என்றும் அவர் மிகச் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்றும் கேள்விப்பட்ட போது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் மும்பை சென்ற பின் அவரை நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது ஆபிஸ் வேலை விஷயமாக மும்பை வந்த எனக்கு அவரைப் பார்க்கவும், இப்போதும் அந்த 'பாசிடிவ்' அணுகுமுறை அவரிடம் இருக்குமா என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தது.

அந்தேரியில் அவர் வீட்டைக் கண்டு பிடிக்க சிறிது சிரமப்பட்டேன். கதவைத் திறந்த பெரியம்மா "வாப்பா" என்று ஆச்சரியத்துடன் வரவேற்றாள். பெரியம்மா கறுத்து, இளைத்திருந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது.

"பெரியப்பா இல்லையா"

"உள்ளே பூஜை செய்யறார். இருக்கிற எல்லாத்தையும் கடவுள் பிடுங்கியாச்சு. ஆனா உன் பெரியப்பாவுக்கு பக்தி குறையலை"

அவள் பேசியது உள்ளே பெரியப்பாவிற்குக் கேட்டிருக்க வேண்டும். "வாடா...உட்கார்" என்றபடி உள்ளே இருந்து வந்தார். அன்று போலவே இன்றும் அவர் உற்சாகமாத்தான் தென்பட்டார். "இவளுக்கு சொன்னாப் புரியறதேயில்லை. இப்பப் புடுங்கிட்டாருன்னு ஏன் நினைக்கிறே. இவ்வளவு நாள் கொடுத்திருந்தாரேன்னு சந்தோஷப் படேன்".

பெரியம்மா அப்படி சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை. பேசாமல் உள்ளே போனாள். அவர்கள் மகன் எங்கோ வெளியே போயிருந்தான். பெரியப்பா வீட்டில் எல்லோரையும் விசாரித்தார். பொதுவாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அரண்மனை போன்ற வீட்டில் அரசரைப் போல இருந்த பெரியப்பாவை இப்படியொரு சூழ்நிலையில் பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாகவும், ஜீரணிக்க முடியாமலும் இருந்தது. அதைக் குரல் கம்ம அவரிடம் சொல்லியே விட்டேன்.

பெரியப்பா அமைதியாக சொன்னார். "கையை விட்டுப் போனதைப் பற்றியே நினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப் படிக்கிற மகன் இருக்கான். எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு. அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்க காசு இல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற அளவு வருமானம் இருக்கு. இப்படி 'இருக்கிற' விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கு"

பெரியம்மா காபியுடன் வந்தாள். "உங்க தத்துவமெல்லாம் கொஞ்சம் நிறுத்துங்களேன். ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே...அனுபவிச்சு இழந்துட்டு கஷ்டப்படறது வேறே... ஊம்...எதுவும் சாசுவதமில்லை"

"எதுவுமே சாசுவதம்¢ல்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம் சாசுவதமா என்ன? இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே" என்று புன்சிரிப்புடன் என்னைக் கேட்டார்.

பிரமிப்புடன் தலையாட்டினேன். வெற்றியின் உச்சாணிக் கொம்பிலிருந்த போது இருந்த இடத்தை விட பெரியப்பா என் மனதில் இன்னும் பல மடங்கு உயர்ந்து போனார். நிஜமாகவே பெரியப்பா 'பாசிடிவ்' தான்.

- என்.கணேசன்

http://enganeshan.blogspot.com/

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 5:49 pm

கையை விட்டுப் போனதைப் பற்றியே நினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப் படிக்கிற மகன் இருக்கான். எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு. அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்க காசு இல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற அளவு வருமானம் இருக்கு. இப்படி 'இருக்கிற' விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கு"

எவ்வளவு தன்னம்பிக்கையான வரிகள்!



     பார்வைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 14, 2010 9:23 pm

எப்போதும் ,எதையும் positive ஆக பார்க்கும் குணம் மிகவும் போற்றக் கூடிய குணம். அதனால் கேடு எதுவும் விளையாது.நன்மை நிச்சயமாக கிடைக்கும். அரை கிளாஸ் நீரை, அரை கிளாஸ் நிறைந்து இருக்கு என்று கூறுதலிலும்,
அரை கிளாஸ் குறைந்து இருக்கு என்று கூறுதலிலும்,
கூறுபவர் மனநிலை எப்படிபட்டது என்று அறியலாம்.

நல்ல பகிர்வு.

ரமணீயன்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக