புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
80 Posts - 47%
ayyasamy ram
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
4 Posts - 2%
eraeravi
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
1 Post - 1%
சிவா
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
306 Posts - 42%
heezulia
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_m10"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:40 pm

First topic message reminder :



இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு.

அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார்.
-ஆசிரியர்


ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம் செய்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டவர்களைப் போலக் கடந்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய் அங்கே குடியேறியவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள்.

அவர்கள் அந்தத் தீவின் பூர்வ குடியினர். மண்ணின் மைந்தர்கள். இந்நிலையில் இலங்கைத் தமிழர் என்பவர் அந்நாட்டையே பூர்வீகமாக கொண்டவர் என்ற உண்மையை எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா - இல்லையா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில் அவர் இல்லாத ஈழமும், ஈழமக்களும் இனி பெறப்போவது என்ன என்பதைவிட, அவர்கள் எதையெல்லாம் இழந்தார்கள் என்று அறிவது அவசியம்.

விடுதலைப்புலிகளாகட்டும் இன்னபிற அமைப்புகளாகட்டும் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் அறிய வேண்டியது அவசியமாகிறது.

அதேபோன்று இந்தியாவின் பார்வை மற்றும் பங்களிப்பு, தமிழகத் தலைவர்களின் பார்வை மற்றும் பங்களிப்பு, உலக நாடுகளின் பார்வை மற்றும் அதன் பங்களிப்பு குறித்தும், இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அளித்த உதவிகள் குறித்தும் அலசவேண்டியதும் அவசியமாகிறது.

இன்று, இலங்கை வரலாற்று ஏடுகளைப் புரட்டுபவர்கள் யாராக இருந்தாலும், உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவார்களேயானால், அவர்கள், இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலங்கை வரலாற்றை ஒதுக்கிவிட்டு, புதிய உண்மைகளின் அடிப்படையில், புதிய பார்வையுடன் இலங்கை வரலாற்றை அணுகவேண்டியது அவசியமாகும்.

இதுவரை சொல்லப்பட்ட இலங்கைத் தீவின் வரலாறு, கற்பனையின் அடித்தளம் மீது கட்டப்பட்ட இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட மாய வரலாறு என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. இன்று பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் உண்மைகள் வெளிவரத் தலைப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான புதிய உண்மைகள் கிடைக்கலாம்.

மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு இந்தியாவின் வரலாற்றைக் கூறுவது எப்படி உண்மைக்குப் புறம்பாக இருக்குமோ, அதுபோலத்தான் சிங்களவரின் இதிகாசமான மகா வம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு இலங்கை வரலாற்றை எழுதுவது என்பது!

அப்படியென்றால் உண்மையான வரலாற்றை எந்த அடிப்படையில் எழுதுவது அல்லது பார்ப்பது என்ற நியாயமான கேள்வி எழுகிறது. உண்மையான வரலாறு என்பது ஆதாரபூர்வமான உண்மைகளையும், விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுகளையும் கொண்டு முடிவுக்கு வரவேண்டிய ஒன்றாகும்.

இலங்கை இன்றிருக்கும் ரணகள சூழலில், இனவெறித் தாக்குதல்கள் அத்துமீறி நடக்கும் அந்த குட்டித்தீவின் வரலாற்றுப் பின்னணியை அறிவது, இலங்கைத் தமிழர்களுக்காக மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தும் ஜனநாயக உணர்வுகொண்ட ஒவ்வொருவரின் கடமையாகிறது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:54 pm

11. யாழ்ப்பாணத் தமிழரும், மலையகத் தமிழரும்!

இலங்கையின் மக்கள்தொகை சுமார் இரண்டு கோடியாகும் (2006). சிங்களவர்கள் (74%) மத்திய மற்றும் தென் பகுதிகளில் பரவலாக வசிக்கின்றனர்.

மற்றப் பிரிவுகளாக இலங்கைத் தமிழர் 12.6 சதவிகிதமும், மலையகத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளியினர் 5.64 சதவிகிதமும், முஸ்லிம்கள் 7.64 சதவிகிதமும், இந்திய முஸ்லிம்கள் 0.2 சதவிகிதமும், மலேசிய நாட்டினர் 0.3 சதவிகிதமும், ஐரோப்பியர் அல்லது கிறிஸ்தவர் 0.3 சதவிகிதமும் இங்கு உள்ளனர்.

மத அடிப்படையில் பார்த்தால் பெüத்தர்கள் 69.3 சதவிகிதமும், இந்துக்கள் 15.5, கிறிஸ்தவர்கள் 7.6, முஸ்லிம்கள் 7.5 சதவிகிதமாகப் பிரிக்கலாம்.

சிங்களவர்கள் பெரும் பகுதியாக வசிக்கும் மத்திய தென் பகுதி இலங்கையில் தமிழர்கள் மட்டும் 38 சதவிகிதம் என்ற விகிதத்தில் வாழ்கின்றனர்.

இலங்கைத் தமிழர்களை ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். இவர்களின் சமூக வாழ்க்கை நிலைகளைக் கொண்டு பிரிக்கும்போது~

வடக்குப் பகுதி யாழ்ப்பாணத் தமிழர், கிழக்குப் பகுதித் தமிழர், ஈழத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம் தமிழர் என்றும்

தொழில் அடிப்படையில் 1. விவசாயிகள், 2. மீனவர் 3. தோட்டத் தொழிலாளர், 4. அரசு அலுவலர், 5. தொழில்துறை வல்லுநர், 6.வணிக முதலாளிகள் என்றும் பிரிக்கலாம்.

வடக்குப் பகுதி யாழ்ப்பாணத் தமிழர்:

யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையாகவும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் குறைந்த அளவிலும் வசிக்கிறார்கள்.

யாழ் மக்களைப் பெருவாரியாக இரண்டு பிரிவுகளில் அடக்க இயலும். சிலர் நிலப்பிரபுக்களாகவும் பலர் உழவர்களாகவும் இருக்கிறார்கள். நிலப்பிரபுக்களில் பலர் பணப்பயிர்களை பயிரிடுகிறார்கள்.

பெரும்பான்மைச் சமூகமாக உழவர் பிரிவு விவசாயம் செய்வதில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய யாழ்பகுதியினர் என்று கொள்ளலாம். யாழ் மக்களிடையே சாதி முறைகளால் மிகுந்த ஏற்றத் தாழ்வு தொடர்ந்து நிலவி வருகிறது. மேட்டுக்குடி மக்கள் கீழ்ப்பிரிவு மக்களை மிகக் கேவலமானவர்களாக வெறுத்து ஒதுக்குகின்றனர். யாழ் உயர்குடியினர் தங்களைச் சங்கிலி மன்னனின் வாரிசுகளாகக் கருதிக் கொள்கின்றனர். இவர்களிடையே சைவம் தீவிரமான மதமாகக் கொள்ளப்படுகிறது.

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் கல்வி பெறுவதில் முன்னணியில் நின்றதால் அரசு அலுவலர்களாகவும், நிர்வாக இயந்திரங்களில் முக்கியப் பங்கு வகிப்பவராகவும் யாழ் மக்களில் பலர் இருந்து வருகின்றனர்.

கல்வித் துறையில் தரப்படுத்துதலை சிங்கள ஆட்சியாளர் நுழைத்தபோது இவர்களில் பலர் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாகவே படித்த இளைஞர்களும் சிங்கள ஆதிக்க எதிர்ப்பு இயக்கங்களில் தீவிர பங்கெடுக்க முடிந்தது.

இவர்கள் சங்கிலி மன்னனின் நினைவுகளைப் போற்றுவதும், அவன் புகழைப்பாடுதலுமாக இருக்கின்றனர்; இதனாலேயே இவர்கள் மத-இன வெறி கொண்டவர்களாகச் சித்தரிக்கப்பட காரணமாகின்றனர்.

* போர்க்கோலம் (செ.கணேசலிங்கம்), பஞ்சமர் (டேனியல்) போன்ற இலக்கியங்கள் இவர்களின் வெள்ளாள ஆதிக்க மனப்பான்மைக்கான எதிர்ப்பு இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன.

கிழக்குப் பகுதித் தமிழர்:

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இவர்கள் வசிக்கிறார்கள், விவசாயப் பொருளாதாரம் இவர்களின் முதுகெலும்பு. இதனால் இந்தப் பகுதியில் சிங்களவர்களை அரசு அடிக்கடி குடியேற்றம் செய்து வருகிறது. மத, இனக் கலவரங்கள் என்று வந்தால் உடனடிப் பாதிப்புக்கு இங்குள்ள தமிழர்கள் ஆளாகின்றனர். ஆங்காங்கே சிங்கள அரசுகள் நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டு வந்தபோது பாதிக்கப்பட்டவர்களில் இவர்களே முதன்மையானவர்கள். பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.

முதலாளிய வணிகத் தமிழர்:

சிலர் வணிகநிதி ஆதாரத்தைக் கொண்டும் வேறு சிலர் தோட்ட அதிபர்களாகவும் இருக்கின்றனர். லேவாதேவி கடன் தொழில் செய்யும் செட்டி நாட்டுக்காரர்கள் கூட இதில் அடங்குவர்.

கொழும்புச் செட்டித் தெருவில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தமிழரின் நகைக்கடைகள் சிங்களவர் பகுதியில் இவர்களுக்குள்ள ஆதிக்கத்தைக் காட்டும்.

மலையகத் தமிழர்களின் குரலாகக் கருதப்படும் தொண்டமான் சுமார் 800 ஏக்கருக்குச் சொந்தமான தோட்டத்தைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டிருந்தார்.

அமெரிக்க-ஜப்பான் கூட்டுறவு பெற்று உலக வங்கியிடமிருந்து 28 கோடி ரூபாய் கடனுதவியைப் பெற்ற தொழிலதிபர் ஞானம் இதில் அடங்குவார். அவருக்கு ஒப்பான குணரத்தினம், மகாராஜா, வி.வி.ஜி., போன்றவர்களும் தமிழர்களே.

கொழும்பு மாவட்டத்தில் சின்டெக்ஸ் என்ற தொழில் நிறுவனத்தை ஞானம் நடத்துகிறார். இந்தத் தொழிற்சாலையில் ஒப்புக்குக்கூட ஒரு தமிழர் இல்லை. (இருப்பினும் இவரது நிறுவனம் 1983-இல் நடந்த கலவரத்தில் தாக்கப்பட்டது). அதுபோலவே இன்னபிறரது வியாபார நிறுவனங்களும் சிங்களவர்களின் கலவரங்களால் சீர்குலைவதுண்டு.

இவர்கள் தமிழ் ஈழத்துக்கு வெளியே சிங்களவர் பகுதியில் தொழில் நடத்துவதால் ஒவ்வொரு கலவரத்திலும் தாக்கப்படுவார்கள். மீண்டும் அங்கேயே தொழில் தொடங்கி, இழந்த செல்வத்தை மீட்பர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:55 pm

மலையகத் தமிழர்:

1815 முதலாக ஆங்கிலேயர்களால் தென்னிந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள். மிகக் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு ரப்பர், தேயிலை, காப்பித் தோட்டங்களில் வேலை செய்பவர்கள். இவர்களின் பயணக் கதை மிக மோசமானது. ஒப்பந்தக் கூலி முறையில் தென்தமிழகத்தில் பிடித்து இலங்கை காடுகளில் வழி நடத்தி அழைத்து வரும்போதே நாலில் ஒரு பகுதியினர் சாவை அணைத்துக் கொண்டனர்.

கால்நடையாக இராமேஸ்வரம் வரையும், அதற்குப் பிறகு தோணியிலும் மன்னார் கொண்டு செல்லப்பட்டனர். மன்னார் அடைந்ததும் அங்கிருந்தும் பல மைல்களுக்கு அப்பாலுள்ள மத்திய, தென்பகுதி மலைகளுக்கும் கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இப்படி இவர்கள் உடல் நலிவுற்று அங்கு போய்ச் சேரும்போது வழியில் ஏற்படும் மரணங்களுக்குப் பஞ்சமில்லை.

இந்தக் கூலிகளுக்குப் பருவநிலை பாதித்தால் வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லை. மாதக் கணக்கில் பட்டினிப் போராட்டம், ஆயுள் கைதிகளைப் போன்று மாதக்கணக்கில் பட்டினிப் போராட்டம். ஆயுள் கைதிகளைப் போல் இவர்களது வாழ்விடங்கள் சிறு சிறு தடுப்புகளைக் கொண்டிருக்கும் அறைகளைக் கொண்டது.

மகிழ்ச்சி, துன்பம், இறப்பு, பிறப்பு யாவும் இந்த அடுத்தடுத்து இருக்கும் சிறு சிறுதடுப்புகளில்தான்.

இவர்கள் மலையை விட்டுக் கீழே இறங்குவதற்கும், சிறிய நிலங்களைக் கூடச் சொந்தமாய் பெறுவதற்கும் உரிமையற்றவர்கள். இதன்மூலம் கண்டியச் சிங்களப் பகுதிகளில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அடிமைகள் போன்று வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள் ஆதியிலிருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களாலும், சிங்கள ஆட்சியாளர்களாலும் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டன.

அதே சமயம் தமிழ்-சிங்கள பகை மூளுமானால் முதலில் தாக்குதலுக்கு ஆளாவதும் இவர்களே.

நிலச் சீர்திருத்தத்தால் தங்களது நிலங்களையும் கூலி வேலை செய்ய முடியாத நிலையை அடைந்த சிங்கள விவசாயிகளின் கொடுஞ்செயலே இதற்கு காரணமாகிறது. தங்களின் வாழ்க்கை இருண்டு போவதற்கு இந்த மலையகத் தமிழர்களே காரணம் என்பது கண்டியச் சிங்களவரின் கூற்றாகும்.

ஈழத்தில் இருந்த தமிழர்களுக்கும், குடியேறிய தமிழர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமானது. சமீபகாலக் கணக்கெடுப்பில் இவர்களுக்கு சமூக அங்கீகாரமோ, பொருளாதாரச் சலுகைகளோ ஏதுமில்லை என்பது தெளிவாகிறது. இவர்களில் படித்தவர் என்பது கிஞ்சித்தும் இல்லை (Report on consumer finance and socio economic survey 1978-1979)

1928 டொனமூர் சீர்திருத்தத்தின்படி அப்போதைய மலையகத் தமிழருக்கு 40 லிருந்து 50 சதவிகிதம் வரை குடியுரிமை இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தொடர்ந்து ஓராண்டு வசித்த~குடியேறிய தமிழருக்கு அடையாளச் சீட்டினை வழங்கினர்.

ஆனால் 1948-இல் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது வாக்குரிமை நீக்கப்பட்டு, கொடுக்கப்பட்ட அடையாளச் சீட்டினையும் அரசினர் பறித்து விட்டனர்.

1964 வரை இது நீடித்தது. அப்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 9,75,000 பேர் இலங்கையில் நாடற்ற தமிழர்கள் இருந்தார்கள். சிரிமாவோ~சாஸ்திரி ஒப்பந்தப்படி 6,00,000 பேரை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துக் கொள்வதற்காக கையெழுத்தானது.

மீதமுள்ள 3,75,000 பேருக்கு இலங்கையில் குடியுரிமை வழங்குவதாகவும் ஒப்பந்தம் கூறியது. 1988 வரை குடியுரிமை வழங்குவதை இழுத்தடித்த சிங்கள அரசு ஜே.ஆர். ஜெயவர்த்தனா குடியரசுத் தலைவர் ஆனதும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:56 pm

12: முஸ்லிம் தமிழர்கள்

முஸ்லிம்கள் இலங்கை முழுவதும் பரவலாக வாழ்கிறார்கள். அதாவது கொழும்பு, குருநாகல், களுத்துறை, புத்தளம், கம்பஹா, அநுராதபுரம், காலே, பொலனறுவை, மாத்தளை, அம்பாந்தோட்டை, மொனறாகலை, கண்டி, கேகாலை, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், வவுணியா, முல்லைத்தீவு பகுதிகளில் 41 சதவிகிதம் முதல் 1 சதவிகிதம் வரை வாழ்கின்றனர்.

கொழும்பு முதல் மொனறாகலை வரையிலுள்ள 11 மாவட்டங்களில் 5 லட்சத்து 14 ஆயிரம் பேரும், கண்டி முதல் இரத்தினபுரி வரையுள்ள மாவட்டங்களில் 2 லட்சத்து 49 ஆயிரம் பேரும், கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 3 லட்சத்து 18 ஆயிரம் பேரும், வடக்கில் உள்ள 6 மாவட்டங்களில் 61 ஆயிரம் பேரும் வசிப்பதாக 1981-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு உறுதி செய்கிறது.

குருநாகல், கண்டி, புத்தளம் பகுதிகளில் தென்னந்தோப்பு உரிமையாளர்களாக, விவசாயம் சார்ந்த பண்ணை அதிபர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். வடக்கு கிழக்கில் கீழ்த்தட்டு வர்க்கத்தினராகவும், தெற்கிலோ நடுத்தர மற்றும் உயர்தர வகுப்பினராகவும் உள்ளனர்.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் தமிழ் மற்றும் தமிழரோடும், தெற்குப் பகுதி மக்கள் வாழ்நிலை, வசதி காரணமாக சிங்களவரோடும் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தென்பகுதி முஸ்லிம்களின் குழந்தைகள் சிங்களத்தையே கல்வி கற்கும் மொழியாகத் தேர்வு செய்கின்றனர். பெரும்பாலான முஸ்லிம்களின் தாய்மொழி என்னவோ தமிழ்மொழிதான்.

இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அப்போது வெறும் வியாபாரத் தொடர்போடுதான் அவர்கள் இருந்தனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ்வது 9, 10, 12 ஆம் நூற்றாண்டுகளில்தான் தொடங்கியது. இதை ** இரண்டாவது நகரமயமாதல் என்று குறிப்பிடுகிறார்கள். மூன்றாவது நகரமயமாதல் என்பது நவீன மத்தியதர வாழ்க்கை நிலையை உருவாக்கிய காலனி ஆட்சிக் காலமாகும்.

இவர்களில் பெரும்பான்மையோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். பாராளுமன்ற, ஜனநாயகப் பங்களிப்பவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

அம்பாறை போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே நல்ல கவித்திறன் உண்டு. இவர்கள் கழனிகளில் வேலை செய்யும்போது பெண் கவி புனைந்து பாடும்போது, ஆண் எதிர் வரியைப் பாடுவதும் ரொம்ப இனிமையாக இருக்கும். இந்தக் காட்சியைக் கண்டு புல்லரித்துப் போன உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன் முஸ்லிம் ஆண்-பெண்களின் கவித்திறமையை சிலாகித்து அழகான கவிதையொன்றை இயற்றியிருக்கிறார்.

முஸ்லிம்களையும், தமிழர்களையும் தனியாகப் பிரிக்க எண்ணிய சிங்கள அரசு, வானொலி நிகழ்ச்சியில் கூட இஸ்லாமிய நிகழ்ச்சிகள் என்ற ஒரு பிரிவையே ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி தமிழில்தான் வழங்கப்படுகிறது.

1981 கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 11,34,556 ஆகும்.

இங்குள்ள முஸ்லிம்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. இலங்கை வாழ் முஸ்லிம்கள், ""மூர்கள்'' என்று இவர்களை குறிப்பிடுகிறார்கள். 2. இந்திய அல்லது பாகிஸ்தானி முஸ்லிம்கள். 3. மலேயா முஸ்லிம்கள்.

(ண்)"மூர்கள்' இந்தியாவில் இருந்தும், அரேபிய நாட்டில் இருந்தும் வந்தவர்கள். இவர்கள் வியாபாரிகளாக இலங்கை வந்து பின்னர் இங்குள்ள மக்களோடு திருமணத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.

தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய (காயல்பட்டணம், கீழக்கரை) முஸ்லிம்கள் விவசாயிகளாகவும், மீனவர்களாகவும் வாழ்கின்றனர். இவர்களுடைய தாய்மொழி தமிழாகும்.

இவர்கள் பெரும்பாலும் சன்னிப் பிரிவு மற்றும் சாஃபிப்பிரிவைச் (நன்ய்ய்ஹ் & நஹச்ண்)சார்ந்தவர்கள்.

(ண்ண்)இரண்டாவது பிரிவான இந்திய-பாகிஸ்தானி முஸ்லிம்கள் என்பவர் பெரும்பாலும், ""மேமோன்'' ""போக்ராஸ்'' மற்றும் தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தில் இருந்துவந்து குடியேறிய வியாபாரிகள் ஆவர்.

இவர்கள் பெரும்பான்மையோர் ""சாஃபி'' பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் மேமோன் முஸ்லிம்கள் மட்டுமே ""ஷியா'' பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் பெரும்பாலும் தமிழ், மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

மேமோன் மற்றும் போக்ராஸ் பிரிவினர் உருது மற்றும் குஜராத்தியைப் பேசக் கூடியவர்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:56 pm

மூன்றாவது பிரிவான மலேயா முஸ்லிம்கள் சமீப காலத்தில் வந்து குடியேறியவர்கள். இவர்கள் டச்சுக்காரர்கள் காலத்தில் ஜாவாவில் இருந்து வியாபார நிமித்தமாக குடியேறியவர்கள். தாய்மொழி மலேயா மொழியாக இருந்தபோதிலும் தமிழையே பேசுகின்றனர். இவர்கள் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மற்ற பிரிவினரைப்போல் அல்லாது திருமணங்களை சிலோன் மூர்களோடும் கூட நடத்திக் கொள்கின்றனர்.

1. இந்திய, பாகிஸ்தானிய முஸ்லிம்கள் 34,195 பேர். 2. மலேயா முஸ்லிம்கள் 43,378. 3. மூர்கள் 10,56,972.

ஆக்கிரமிப்பாளர்களைப் போலன்றி இம்மூன்று குழுக்களும் படையெடுப்பால் வந்து குடியேறியவர்கள் அல்ல. இவர்கள் இலங்கையில் தங்களுக்கெனத் தனியான ஆட்சி முறையையும் நிலைநாட்டிக் கொள்ளவில்லை. அதனால் அவர்களது மதம் அரசாங்கத்தால் ஒடுக்கக் கூடியதாகவும் இல்லை.

சிலர் விவசாய சமூகத்தில் இருந்தபோதும் பெரும்பான்மையான சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வைர வியாபாரத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்றனர்.

நகர முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் வர்த்தகர்களாகவும் சிறுபான்மையோர் தொழிலாளிகளாகவும் உள்ளனர்.

இதில் மேல்தட்டு சக்திகள் கொழும்பில் தங்கி உள்ளன. மொத்த முஸ்லிம்களின் அரசியல் தன்மை கொழும்பு வாழ் முஸ்லிம்களால் தீர்மானிக்கப்படுகிறது.

பெரும்பாலான முஸ்லிம்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் கணிசமான பகுதியினர் விவசாயிகளாகவும் மற்றவர் சிறு வியாபாரம், நில உரிமையாளர், மீனவர் மற்றும் கூலிகளாகவும் உள்ளனர். கிராமப்புற சமூகத்தில் சிங்களவர்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம்களின் கல்வியறிவு மிகக் குறைவு. சிங்கள மேலாண்மைக் கலாசாரம், இவர்களை "தம்பியா' (பட்ஹம்க்ஷண்ஹ்ஹ) அதாவது கல்வி அறிவற்ற ""நரித்தனம்'' உள்ள வியாபாரிகள் என்று குறிப்பிடுகிறது.

இவர்கள் புத்த இனவெறி கலாசாரத்தால், அடிக்கடி இனவெறித் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். முதன் முதலில் போர்த்துக்கேயர் உள் நுழைந்தபோது அவர்களை எதிர்த்தவர்கள் இவர்களே.

எல்லாக் காலனிவாதிகளுடனும் கடுமையான எதிர்ப்பினைக் காட்டியவர்கள். வியாபாரத்தில் போட்டி நிமித்தமாக அந்நிய ஆட்சியாளர்களும் இவர்களை ஒடுக்கி உள்ளனர். 1613இல் "மதாரா' என்ற இடத்தில் நடந்த படுகொலைகள் இதற்குச் சான்றாகும்.

புத்த மேலாண்மைக் கலாசார உணர்வால் "சிங்கள பெüத்தயா' என்ற பத்திரிகையில் அதன் ஆசிரியரான அநகாரிக தர்மபாலா, ""முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிப்பவர்கள் மட்டுமே உண்மை தேச பக்தர்கள்'' என்று எழுதுகிறார்.

அவர் மேலும் கூறுவதாவது~

"பிரித்தானியருக்கு ஜெர்மானியர் எவ்வாறோ, சிங்களவருக்கு முஸ்லிம்களும் அவ்வாறே. முகமதியர், சிங்களவருக்கு சமயத்தாலும், இனத்தாலும் மொழியாலும் அந்நியர்கள். பௌத்த சமயம் இல்லாவிடின் மரணத்தையே சிங்களவர் வேண்டுவர். பிரித்தானிய உத்தியோகஸ்தர்கள் சிங்களவரைச் சுடலாம்; தூக்கிலிடலாம்; சிறைபிடிக்கலாம். ஆனால், எப்போதும் சிங்களவருக்கு முஸ்லிம்கள் பகைவர்களே. அந்நியரால் இழைக்கப்படும் அவமானங்களை இனியும் பொறுக்க முடியாது என்பதை அமைதிமிக்க சிங்களவர் இறுதியில் உணர்ந்துவிட்டனர். முழு தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட்டது. இதற்கு பொருளாதார ஆன்மீக ரீதியிலான காரணங்கள் இருந்தன' - என்று முஸ்லிம்கள்மீது வெறுப்பைக் கொட்டுகிறார்.

முஸ்லிம்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட முதலாவது வகுப்பு மோதல் 1915இல் ஆகும்.

1948க்குப் பின் சிங்கள புத்த அரசு அதிகாரம், இவர்களை வாழ்க்கையில் சமூகப் பொருளாதார ரீதியில் உயர்த்துவதற்கான எந்த வகையிலும் உதவி செய்யாமல் இருந்ததோடு 1958 தமிழ் எதிர்ப்புக் கலவரத்தில் இவர்களைப் பாதிப்படையவும் செய்தது.

1970இல் ஒரு மிகுந்த அபாயகரமான நிலையை இவர்கள் அடைகிறார்கள். ஏழாண்டு காலத்திற்குள் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வன்முறை வெறியாட்டம் தீவிரமாகியது. புத்தளம் படுகொலை மிகப் பெரிய ஒன்றாகும். அது 1976இல் நடந்தது. அப்போது சிங்கள அரசு ராணுவத்தின் உதவிகொண்டு மசூதியில் தொழுகையில் இருந்த 7 முஸ்லிம்களைப் படுகொலை செய்ததோடு 271 வீடுகளையும், 44 கடைகளையும், இரண்டு தொழிற்சாலைகளையும் தீக்கிரையாக்கியது.

மேலும் இரு மசூதிகளும் இடித்துத் தள்ளப்பட்டன.

** Populing of Srilanka: The national question and some problems of history and ethinicity by Dr. Senake Bandaranayaka (paper submitted in a seminar conducted by Social Scientists Association–Colombo on Nationality problems of Srilanka.)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:57 pm

13. இலங்கையின் பொருளாதாரப் பின்னணி

ஆங்கிலேயர் கையிலிருந்து 2 பிப்ரவரி 1948-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

1977-இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் வரையில் ஓரளவு பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டு, நல்வாழ்வு நடவடிக்கைகளிலும், சமூக நலக்கொள்கைகளிலும் குறிப்பிடத்தகுந்ததொரு நிலைக்கு முன்னேறியது. மக்கள் நல (ரங்ப்ச்ஹழ்ங் நற்ஹற்ங்) அரசுக்குரிய வடிவத்தில் அது இயங்கியது

ஆங்கிலேயர் வெளியேறியபோது, பெரும்பாலான தோட்டங்கள் அனைத்தும் கம்பெனிகளிடம் தொடர்ந்து இருந்தன. உள்நாட்டு மூலதனம்கூட மேலைநாட்டு மூலதனக் கூட்டோடும், தொழில்நுட்ப உதவியோடும் இயங்கி வந்தது.

தனிமனித சராசரி ஆயுள்காலம், இலங்கையுடன் ஒப்பு நோக்கக் கூடிய நாடுகளிலேயே 50 ஆண்டுகள் என்றிருந்தபோது, இலங்கையில் மட்டும் 66 ஆண்டுகளாக இருந்தது. இந்தியாவைவிட இது அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் விகிதம் இலங்கையுடன் ஒப்பு நோக்கக் கூடிய நாடுகளில் 45 சதவிகிதமாக இருந்த வேளையில், இலங்கையில் 85 சதவிகிதம் இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சில இடதுசாரிக் கட்சிகளும் நடத்திய கூட்டாட்சி இதில் தீவிர அக்கறை காட்டியதின் விளைவு இது. இருந்தபோதிலும், வேலை இல்லாத் திண்டாட்டம், குறிப்பாக படித்த இளைஞர் மத்தியில், வேகமாகப் பெருகி வந்தது முந்தைய பொருளாதாரத் திட்டத்தின் குறைபாடாகும். ஜனதா விமுக்தி பெரமுனை (ஒ.ய.ட.) தலைமையில் 1977-ஆம் ஆண்டு நடந்த இளைஞர் கிளர்ச்சிக்கான காரணங்களில் இதுவும் ஒன்று. இன்று தமிழ் இளைஞர்களுக்கு இருக்கக் கூடிய முக்கியமான பிரச்னைகளில் இதுவும் ஒன்று.

பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டதற்கு சுதந்திரக் கட்சி அரசு விதித்த பல கட்டுப்பாடுகளும் அவற்றை ஒட்டிய ஊழலுமே காரணமென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

உலகப் பொருளாதார நெருக்கடியும் 1970-ஆம் ஆண்டுகளில் இலங்கைப் பொருளாதார நிலைமையில் சிக்கல்கள் உருவாகக் காரணமாயின. அதுமட்டுமல்லாமல், சுதந்திர கட்சி கடைப்பிடித்த சில பொருளாதாரக் கொள்கைகளும் திட்டங்களும்கூட இது அதிகமாவதற்குக் காரணமாயின.

விஞ்ஞானப்பூர்வமான விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டது. பணப்பயிர்ப் பொருளாதாரம் சமூகத்தில் சில புனரமைப்புகள் உருவாகக் காரணமாயின. வெங்காயம் போன்ற பணப்பயிர் முறைகளில் புதிய வேகம் உருவானது. அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன.

இந்தக் காலத்தில் பொருளாதார நிலையில் ஒருகட்ட மேம்பாடு அடைந்த சிங்களவர்களின் வளர்ச்சி துரிதமாக்கப்பட்டது. இதை சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மாறுதலாகக் கொள்ளலாம்.

சமூகத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் புதிய கோஷங்களோடு ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் முன்னுக்கு வரவழைத்தது.

""அனைவருக்கும் வேலை, குறைந்தபட்ச வாழ்க்கைத் தரம் தரக்கூடிய சுதந்திரமானதும், நீதியுமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்'' என்று ஐக்கிய தேசியக் கட்சி அப்போது கூறியது.

சிங்கப்பூர், தைவான், தென்கொரியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு பொருளாதாரக் கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்ற முனைந்தது.

இதைத்தான் சர்வதேச மூலதன நிறுவனங்களான உலக நிதி நிறுவனமும் (ஐ.எம்.எப்.) உலக வங்கியும் ஆதரித்தன.

சுதந்திரமானதொரு சந்தை அமைப்பின் கீழே (ஊழ்ங்ங் ற்ழ்ஹக்ங் க்ஷ்ர்ய்ங்) இறக்குமதிக்குப் பதிலான உற்பத்தியிலிருந்து ஏற்றுமதி சார்ந்த உற்பத்திக்கு மாறுவதை இது உள்ளடக்குகிறது.

அந்நிய முதலீட்டையும், அந்நிய உதவியையும் கடனாகப் பெற்றுச் சர்வதேசச் சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபடுவதை இது ஆதரிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:57 pm

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தபின் இந்தக் கொள்கையைத்தான் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டன. பல தொழிற்சாலைகள் பொதுத் துறையில் இருந்து தனியார் துறைக்கு மாற்றப்பட்டன. அந்நிய மூலதனத்திற்குச் சாதகமான நிலைமைகளை வழங்கும் சுதந்திரத் தொழில் மண்டலம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.

நீர்ப்பாசனத்திலும் மின்சாரத்திலும் 39 சதவிகிதத்தைத் தொடுமாறு திட்டமிடப்பட்ட மிகப் பெரிய மகாவெளி அபிவிருத்தித் திட்டமானது 30 ஆண்டுகளுக்குப் பதில் 6 ஆண்டுகளிலேயே நிறைவு பெற்றுவிடும் என்று அறிவிக்கப்பட்டது.

1978-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட (பட்ஜெட்) மூலதனத்தில் 60 சதவிகிதம் அந்நியக் கடன்களாகும். இவை எல்லாம் புதியதொரு பொருளாதார உத்வேகத்தை அளித்தன. வளர்ச்சி விகிதம் 5.6 சதவிகிதமாக உயர்ந்தது. இவை இறக்குமதிப் பொருட்களை வியாபாரம் செய்யும் வியாபாரிகளை மிகவும் உயர்த்தியது. இந்தக் கொள்கையின் எதிர்மறை விளைவுகள் மெல்ல மெல்ல உணரப்பட்டன.

அந்நியக் கடன்கள் மிகவும் அதிகமானதொரு விகிதத்திலேயே உயர்ந்ததும், இலங்கை நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டதும் இதன் எதிர்மறை அம்சங்கள் ஆகும்.

சுற்றுலா மூலமும், ஏற்றுமதி மூலமும் கிடைக்கும் அந்நியச் செலாவணி, கடன்களையும், அதற்குரிய வட்டியையும் அடைப்பதற்கே பெரிதும் போய்விடுகிறது. அந்நியச் செலாவணியில் துண்டு விழுதல் ஒவ்வொரு ஆண்டிலும் மேலும் மேலும் கீழிறக்கமாக மாறிக்கொண்டு வந்தது. குறைந்த ஏற்றுமதி 4 சதவிகிதமாக உயர்ந்த 1977-81 காலக் கட்டத்தில், இறக்குமதி 11 சதவிகிதம் கூடியது என உலக வங்கியின் அறிக்கை கூறியது.

அந்நியப் போட்டிக்கு வழிவிட்டதன் காரணமாக இலங்கையின் சிறுதொழில் அதிபர்களும், உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

கைத்தறித் தொழில் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தேசியப் பஞ்சாலைகள் எல்லாம் அந்நிய கூட்டாளிகளின் கையில் விடப்பட்டன. 1977-ஆம் ஆண்டில், தேயிலை, ரப்பர் ஆகியவைகளின் உற்பத்தியில் ஏற்றுமதி என்பது வீழ்ச்சிப் போக்கில் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தன.

இந்த வீழ்ச்சிப் போக்கானது இத்துறையின்மீது செலுத்தப்படாத அத்தியாவசிய முதலீட்டின் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.

""கடந்த இருபது ஆண்டுகளாகக் காப்பி, கொக்கோ, தேயிலை ஆகிய பயிர்களில் அதன் மதிப்பு எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே உள்ளது. தேயிலையின் உண்மையான விலை மதிப்புக் குறைந்துகொண்டே வருகிறது'' என்று அப்போது கூறினார் அத்துறை அமைச்சர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:58 pm

தேயிலையின் உண்மையான விலை 1960-இல் இருந்ததை விட 1982-இல் 40 சதவிகிதம் குறைந்தது என்பதுதான் உண்மை.

நாட்டின் மூலதனச் சொத்திற்குப் பெரிய பங்களிப்பினை அளிக்கக்கூடிய சாலைப் போக்குவரத்து, பாசன அமைப்பு, பள்ளிகள், மருத்துவ நிலையங்கள், மின்சாரம் நீர்வழிப் போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய அனைத்துத் துறைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை அமைச்சரே ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகள் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பை அளிக்க முடியாது. வேலை இல்லாத் திண்டாட்டம் 15.6 சதவிகிதத்தில் இருந்து 1981-இல் 17.9 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. தற்போதைய புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் இத்தொகை கூடுதலாகவே இருக்கும்.

மேற்கண்ட கொள்கைத் திட்டங்களால் மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்தது. மாதச் சம்பளம் வாங்குவோரும் நகர்ப்புற, கிராமிய ஏழைமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். கூடுதலாகி வரும் சமத்துவமின்மையே நல்வாழ்வுத் திட்டங்களில் செய்யப்பட்டு வரும் வெட்டுகளால் உறுதி செய்யப்பட்டன. அதற்கு மாறாக நாட்டில் பாதுகாப்புச் செலவும், ராணுவத்திற்கான ஒதுக்கீடும் அதிகமாக்கப்பட்டது. *

1983-இல் பாதுகாப்புத் துறைக்கான மூலதனம் 1982-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 82.7 சதவிகிதம் உயர்ந்தது. பாதுகாப்பு நடைமுறைச் செலவானது 82-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83-ஆம் ஆண்டில் 47.6 அதிகரிக்கப்பட்டது. ஆனால் மொத்த நடைமுறைச் செலவு 19.1 சதவிகிதம் மாத்திரம் அதிகரித்தது.

இதனைச் சீர்செய்ய பொதுமக்களுக்கான சலுகைகளில் கைவைக்க வேண்டிய நிலை அரசுக்கு உருவானது. இப்படி மக்கள் நல அரசு என்ற நிலையில் இருந்து மாறி, யுத்தப் பொருளாதார (War Economy)சூழலை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் இக்கொள்கைகளின் மறுபக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகளால் வியாபார வர்க்கம் மிகவும் பயன் அடைந்தது. குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதித் தொழில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் ஆதாயம் அடைந்தனர். சர்வதேச ஏகபோக கம்பெனிகளுடன் கூட்டுறவு கொண்ட சக்திகள் தோன்றின. அதேசமயம், மானியத்தில் செய்யப்பட்ட வெட்டுகளால் கீழ்நிலைச் சமூகப் பிரிவுகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின.

* ஸ்ரீலங்கா: "பாசிசத்தை நோக்கிய போக்கை யார் தடுத்து நிறுத்துவது?' பாஸ்டியன் ஷலேங்கா-பட்ங் ஏண்ய்க்ன் 10.10.84.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:59 pm

14: அரசியல் கட்சிகளின் தோற்றம்!

கண்டிய சிங்களவர்

இலங்கையின் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக 1935-இல் லங்கா சமசமாஜக்கட்சி உருவெடுக்கிறது. இந்தக் கட்சியின் தோற்றமானது தொழிலாளர் இயக்கத்திலிருந்து தொடங்குகிறது.

இலங்கையில் 1860-இல் முதல் தொழிலாளர் போராட்டம் நடந்தபோதிலும் 1899-இல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உருவாகி அதன் விளைவாகத் தொழிற்சங்கக் கட்டமைப்பு வெளிப்பட்டபோதிலும் 1920-இன் காலத்தில்தான் இரண்டு விரிவான தொழிலாளர் அமைப்புகளைப் பார்க்க முடிகிறது.

பிரபல பத்திரிகையாளர் கே. நடேசய்யர் தலைமையில் உருவான இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனமும் ((Ceylon Indian Workers Federation) ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் உருவான தொழிலாளர் சங்கமும்தான் அந்தக் குறிப்பிடத்தக்க அமைப்புகள்.

தோட்ட அதிபர்களிடம் ஓரளவு அங்கீகாரம் பெற்ற இயக்கமாக அய்யர் இயக்கம் அமைந்திருந்தது. இவர் 1925-இன் ஆரம்பத்தில் குணசிங்காவின் தொழிற்சங்கத்துடன் தன்னுடைய தொழிற்சங்கத்தை இணைக்கிறார். ஆனால் 1928-ஆம் ஆண்டுகளில் குணசிங்காவின் இனவாதமும், இந்தியர் எதிர்ப்பும் மேலோங்கியதால் அந்த அமைப்பை விட்டு வெளியேறுகிறார் (இந்தியர் என்பது -மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களைக் குறிக்கும்).

கலாநிதி நியூட்டன் குணசிங்கே ஆய்வுப்படி 1930-க்கு முன்னர் சிங்களவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருந்தனர். அவர்கள் கண்டிய சிங்களவர் என்றும் (உயர்வானவர்கள்), கரையோரச் சிங்களவர் (மீனவர் மற்றும் இதரத் தொழிலில் ஈடுபடுபவர்) என்றும் பிரிக்கப்பட்டு இருந்தனர். ஆங்கிலேயர்கள் இவர்களிருவரையும் தனித்தனிப் பிரிவாகக் கருதும் அளவுக்கு இவர்களிடையே கலாசாரப் பழக்க வழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தன.

1930-இல் இவர்களிடையே ஓர் இணக்கம் ஏற்பட்டு கலப்பு மணங்கள் உருவாகின்றன. இதன் பின்னரே சிங்களவர்கள் ஒரே சமூகசக்தியாகவும், ஓர் இனமாகவும் ஒன்றுபட்டனர். உதாரணமாக கரையோரச் சிங்களப் பிரிவினரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா கண்டியச் சிங்களப் பிரிவினரான ஸ்ரீமாவோவை மணந்தார்.

இதுபோன்ற பல்வேறு திருமணங்கள் இவர்களிடையே நடைபெற்றன.

1933-இல் வெள்ளவத்தைத் தொழிலாளர் போராட்டத்திற்கு குணசிங்கா தலைமையேற்கிறார். அதன்பின் அவர் பிரபலமாகிறார். இவரது தொழிற்சங்கத்தில் பரவலாக இடதுசாரிகள் நிறைந்து இருந்தனர். திடீரெனக் குணசிங்கா முதலாளிகள் சங்கமான எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷனுடன் சேர்ந்து கொண்டு வேலைநிறுத்தத்துக்கு எதிராக மாறினார்.

வேலைநிறுத்தம் முதலாளிகளுடன் செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றார். தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் இருந்ததால் அங்கத்துவம் காலாவதியாகி விடுகிறது. தொடர்ந்து குணசிங்கா சிங்கள இனவாதத்தைக் கடைப்பிடித்ததால் தொழிலாளர்களிடையே அதிருப்தி ஏற்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 4:59 pm

அதே ஆண்டு (1933) பிப்ரவரி 23-இல் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து வாலிப முன்னணியின் கூட்டம் நடக்கிறது. அதில் வெள்ளவத்தைத் தொழிலாளர் சங்கம் உருவாகிறது.

1935-இல் ‘All Ceylon Estate Workers Union’ உருவாகிறது. அவ்வாண்டில் ஏற்பட்ட தொழிற்சங்கச் சட்டத்தின் மூலம் இந்த யூனியன் அங்கீகாரம் பெறுகிறது. குணசிங்கா தொழிற்சங்கத்திலிருந்த அதிருப்தியாளர் அனைவரும் இதில் இணைகின்றனர். முதன்முதல் இடதுசாரிகள் தலைமையிலான சங்கமாக இது அமைகிறது.

இதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்து சென்று திரும்பிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்த அன்றைய தீவிரவாத இளைஞர்களான டாக்டர் என்.எம். பெரேரா, டாக்டர் விக்ரமசிங்கா, பிலிப்குணவர்த்தனா, எம்.ஜி. மென்டிஸ், பீட்டர் கெனமன் போன்றோர் இணைந்து லங்கா சமசமாஜக் கட்சியை நிறுவினர்.

நாட்டின் முழுமையான சுதந்திரத்திற்கும், குடியரசு அமைப்பதற்கும், சமதர்ம சமூக அமைப்பொன்றை நோக்கமாகக் கொண்டு இந்த லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர், விவசாயி, அறிவு ஜீவிகளை ஒன்றிணைத்து ஆங்கில ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து இலங்கையை விடுவித்து, ஒரு சமதர்ம சமுதாய அமைப்புக்கு உதவுவதே இக்கட்சியின் நோக்கம்.

உலக அரங்கில் ட்ராட்ஸ்கிய, ஸ்டாலினிச இயக்கங்கள் என்ற பிளவு தோன்றவே இக்கட்சியில் சித்தாந்த ரீதியான பாகுபாடு தலையெடுத்தது. ட்ராட்ஸ்கியத்தை ஆரம்பித்தவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியின் ஆளும் இயக்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றினர். சோவியத் தலைமையை ஏற்றவர்கள் ஸ்டாலினிஸ்டு என்ற முத்திரை குத்தப்பட்டு லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் 1940-இல் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி (மநட) என்ற பெயருடன் இயங்கத் தொடங்கினர். 1942-இல் இலங்கை பொதுவுடைமைக் கட்சி என்ற பெயருடன் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.

1942-இல் தனது வேலைத் திட்டத்தை வெளியிட்ட இலங்கைப் பொதுவுடைமைக் கட்சி ஏகாதிபத்ய எதிர்ப்பு, சமத்துவ சமதர்மக் குடியரசை நிறுவுதல் போன்ற கொள்கைகளை வற்புறுத்தியதுடன், இலங்கைத் தேசிய இனங்கள் பற்றிய ஜனநாயக நிலைப்பாடும் 1942 "மே'யில் இடம்பெற்ற "மே'தினக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இலங்கை இனப் பிரச்னை சம்பந்தமான ஒரு மார்க்ஸிய, லெனினிச தீர்வாக இது முதன்முறையாக முன் வைக்கப்பட்டது. இதன் சாராம்சம் வருமாறு:

தமிழர் தனித்துவம் பெற்ற தேசிய இனம். அவர்களின் பாரம்பரிய தாயகம் வடக்கு, கிழக்குப் பகுதிகள். இதைத் தமிழர் ஆள, ஏற்ற அரசை அமைத்துக் கொள்ள லெனினிச கோட்பாட்டின்படி, சுய நிர்ணய உரிமையை அனுபவிக்கத் தமிழினம் உரிமையுடையது. அவசியமானால் அவர்கள் பிரிந்து தமது தனித்துவமான அரசை உருவாக்க உரிமை பெற்றவர்கள். இலங்கைவாழ் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜா உரிமை பெறத் தகுதியுடையவர்கள்~என்றெல்லாம் தீர்மானத்தில் கூறப்பட்டது.

இந்தத் தீர்மானம், அன்று அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மையமாகிய இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்திற்கு அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அமைப்பின் அன்றைய செயலாளர் யார் தெரியுமா? பின்னர் இலங்கை அதிபராக வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனேதான்! அப்போது இவர் இடதுசாரி நூல்கள், வெளியீடுகளைத் தருவித்து நூல் நிலையம் அமைத்து~கங்ச்ற் ஆர்ர்ந் இங்ய்ற்ழ்ங்~ இடதுசாரி நூல் மையம் என்ற நூல் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 5:00 pm

15. இடதுசாரிகளை வீழ்த்திய இனவாதம்

லங்கா சமசமாஜக் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை உக்கிரப்படுத்தியதன் விளைவாக என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்த்தனா, லெஸ்லி குணவர்த்தனா, விக்ரமசிங்க போன்றவர்கள் ஆங்கிலேயரால் சிறைப்படுத்தப்பட்டனர். அன்றைய நிலையில் சிறையை உடைத்து வல்வெட்டித்துறை வழியாகத் தோணிகளில் இவர்கள் இந்தியாவுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.

இவர்கள் இந்தியப் பெயர்களை ஏற்று கல்கத்தா, பம்பாய், சென்னை நகரங்களில் தலைமறைவாகத் தொழிற்சங்க, அரசியல் வேலைகளில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இலங்கை இடதுசாரி, இந்திய இடதுசாரி இயக்கங்களுக்கிடையில் நெருங்கிய தொடர்புகள் வளர்ந்தன. பிலிப் குணவர்த்தனா இந்தியப் பற்றின் விளைவாக, தனது இரண்டாவது மகனுக்கு இண்டிகா குணவர்த்தனா என்று பெயரிட்டு அழைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிலிப் குணவர்த்தனா லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து விலகி, புரட்சிகர சமசமாஜக் கட்சி என்ற பெயருடன் ஒரு கட்சிக்குத் தலைவரானார் (பின்னர் பொதுவுடைமைக் கட்சியுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணியை 1951-இல் அமைத்தார்).

இலங்கைத் தமிழர்கள் பற்றி, அவர்கள் தனி இனமென்றும் அவர்களுக்கென தாயகம் இலங்கையில் உண்டென்றும், அதில் அவர்கள் தமக்கென அரசை உருவாக்க உரிமையுடையவர்கள் என்ற நிலைப்பாட்டையும் 1935-இல் முதன் முறையாக கட்டுரை வடிவில் எழுதியவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆவார். சமஷ்டி அமைப்பின் கீழ் இலங்கையின் இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது சாத்தியம் என்ற கொள்கையை அவர் முன்வைத்தார். அப்போது அவர் எந்தவொரு கட்சியையும் சார்ந்திருக்கவில்லை (1945-இல் தான் பண்டா சிங்கள மகாசபை இயக்கத்தை, சிங்களவர் விழிப்புணர்ச்சி நோக்கிற்காக ஆரம்பிப்பதாகக் கூறி, செயல்பட்டார்).

1944-இல் இலங்கைச் சட்டசபையில் சிங்களம் அரச மொழி என்ற தீர்மானத்தை ஜே.ஆர். முதன் முறையாகப் பிரேரித்தார். ஆங்கிலத்தை அகற்றி, சிங்களம் மட்டுமல்லாது, சிங்களமும் தமிழும் அரச மொழிகளாக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இடதுசாரிப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதனால் சிங்களமும்~தமிழும் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சிங்களவர் மத்தியில் படித்தவர் அதிகரிக்கவும் வேலையற்றவர் பிரச்னை சிக்கல் தீர்வு, சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துப் பெற்ற உத்தியோக மொழிகள் என்ற கொள்கையை முன்வைத்தும் இயங்கி வந்த இடதுசாரி இயக்கங்கள், இந்த நிலைப்பாட்டிலிருந்து தடுமாறி வாக்குகளை மையமாகக் கொண்ட சிங்கள இனவாத எழுச்சிக்குப் படிப்படியாக அடிபணிந்தன.

யாழ்ப்பாணம்~கொக்குவில் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் (1954) கலந்துகொண்ட பிரதமர் கொத்தலாவலை ஆற்றிய உரையில், சிங்களத்தையும், தமிழையும் சமத்துவம் பெற்ற மொழிகளாக ஆக்குவதாக உறுதி தந்தார்.

கொழும்பு திரும்புவதற்குள் ஆளும் கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) க்குள் முரண்பாடுகள் தலையெடுத்தன. மொழியை மையமாகக் கொண்டு முதலமைச்சராக யார் வரலாம் என்ற நிலையெழுந்தபடியால் கொத்தலாவலையின் வாக்குறுதி கைவிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் களனியா மாநாட்டில் (1955) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிங்களமே அரச மொழி என்றானது.

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக