புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
75 Posts - 36%
i6appar
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
1 Post - 0%
prajai
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
75 Posts - 36%
i6appar
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
1 Post - 0%
prajai
 எது நாத்திகம்? Poll_c10 எது நாத்திகம்? Poll_m10 எது நாத்திகம்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நாத்திகம்?


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Thu Sep 09, 2010 6:11 am



"ஆனந்த் நீ ஒரே ஒரு தடவை வந்து அவரைப் பார். அப்புறம் நீ அவர் பக்தனாயிடுவாய்"

கதிர் இதைச் சுமார் நூறு தடவையாவது சொல்லியிருப்பான். கடைசியில் அவன் தொந்தரவு பொறுக்க முடியாமல் ஆனந்த் புவனகிரி சுவாமிகளைப் பார்க்கச் சம்மதித்தான்.

புவனகிரி சுவாமிகள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர். கீதையாகட்டும், திருவாசகமாகட்டும் சுவாமிகள் பேசும் போது எப்படிப்பட்ட மனதும் கரைந்து விடுமாம். பௌர்ணமி அன்று பூஜை முடிந்து அவர் கொடுக்கும் குங்குமத்திலும் விபூதியிலும் பலருக்கு குட்டிக் கிருஷ்ண விக்கிரகமும், லிங்கமும் கிடைத்திருக்கின்றனவாம். அவர் அன்று பூஜை செய்யும் போது அவர் தலைக்கு மேலே சில சமயம் ஏதோ ஜோதி தெரிவதுண்டாம். இப்படிப் பலரும் பல கதைகள் அவரைப் பற்றிச் சொன்னார்கள். கதிர் ஒரு முறை அவரை தரிசித்து விட்டு அவரது பரம பக்தனாகி விட்டான். அவரது பக்தராக அங்கீகரிக்கப் படுபவர்களுக்கு அவரது படம் டாலராகத் தொங்கும் செயின் ஒன்றைத் தருவாராம். முதல் சந்திப்பிலேயே அந்தச் செயினைக் கதிர் பெற்றுக் கொண்டு வந்து விட்டான். அன்றிலிருந்து தன் நண்பனையும் அவரிடத்திற்கு அழைத்துப் போக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறான்.

ஆனந்திற்கு இது போன்ற பௌர்ணமி பூஜை அற்புதங்கள் எல்லாம் ஆன்மீகத்திற்கு அவசியம் என்று தோன்றவில்லை. ஆகவே முடிந்த வரை அங்கு போவதைத் தள்ளிப் போட்டான். இன்று போய்த் தான் பார்ப்போமே என்று அவரது ஆசிரமத்திற்குக் கிளம்பியுள்ளான்.
நண்பர்கள் ஆசிரமத்தை அடைந்த போது அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. சுவாமிகள் ஒரு சிம்மாசனம் போன்ற நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். ஒரு பக்தர் அவருக்குப் பாத பூஜை செய்து கொண்டிருந்தார். அங்கு வரிசையாக சிலர் நிற்பதைப் பார்த்து ஆனந்த் கதிரிடம் விசாரித்தான்.

"அதுவா. அவர்களும் சுவாமிகளுக்குப் பாத பூஜை செய்ய நிற்கிறார்கள். ஆயிர ரூபாய் கட்டணும்" என்று சொன்ன கதிர் ஆனந்தின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு "அது... ஆசிரமத்தைப் புதுப்பிக்கிறாங்க. அதுக்காகத் தான் வாங்கறாங்க" என்றான்.

சுவாமிகளின் பாத பூஜை முடிந்தது. அவர் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அன்று பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயம் பற்றிப் பேசினார். பிழையில்லாமல் சமஸ்கிருத சுலோகங்களும் பெரும் தத்துவ சிந்தனைகளும் அவர் வாயிலிருந்து சரளமாக வந்தன. 'ஸ்திதப் ப்ரக்ஞன்' யாரென அழகாக விவரித்தார். எவனொருவன் தன் ஆசைகளை எல்லாம் களைகிறானோ, இன்ப துன்பங்களை ஒரு போல பாவிக்கிறானோ, பற்றுதலோ, கோபமோ, பயமோ இல்லாதிருக்கிறானோ அவனே ஸ்திதப் ப்ரக்ஞன் என்று சொல்லச் சொல்ல அவர் பின்னால் ஓடிக் கொண்டிருந்த டேபிள் ·பேன் திடீரென்று தன் ஓட்டத்தை நிறுத்தியது. அவர் பேச்சும் நின்றது. ஒரு சிஷ்யன் அதைச் சரி செய்ய முயன்று முடியாமல் சிறிது நேரம் திணறினான். வியர்த்து தவித்துப் போன சுவாமிகள் அவனை எரிச்சலுடன் பார்த்தார். வேறொருவன் எங்கிருந்தோ ஓடோடி வந்து சரி செய்யும் வரை ஏதோ நடக்கக் கூடாத விபரீதம் நடந்து விட்டது போன்ற ஒரு உணர்வுடன் கூட்டத்தினர் அந்தக் காட்சியைப் பார்த்தனர்.

ஒரு வழியாக ·பேனும் ஓட அவர் பேச்சும் தொடர்ந்தது. அந்த சமயத்தில் ஒரு பிரபல பத்திரிக்கை நிருபர் வந்து சுவாமிகளைப் படம் எடுக்கத் துவங்கினார். அந்த நிருபர் தன் பணியை முடிக்கும் வரை சுவாமிகளின் பேச்சு கீதையிலும் கண்கள் நிருபர் மீதும் இருந்தன. பின்பு அறுபத்தி ஏழாவது சுலோகத்தை அழகாகச் சொன்னார். 'கடலில் உள்ள ஓடத்தை பெருங்காற்று அடித்துச் செல்வது போல தன்வசப்படுத்தாத ஒரு புலனும் மனிதனின் புத்தியை கவர்ந்து செல்கிறது.'

ஆனந்த் கதிரைப் பார்த்தான். கதிர் பக்தியுடன் சுவாமிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுவாமிகளின் பேச்சு முடிந்தவுடன் கூட்டத்திலிருந்து பலரும் ஒவ்வொருவராகச் சென்று சுவாமிகளின் பெருமைகளைப் பேசினார்கள். அவரை ஆன்மீக சிகரம் என்றார்கள். மஹா யோகி, மகரிஷி என்றெல்லாம் அழைத்தார்கள். சுவாமிகள் மலர்ந்த முகத்துடன் அதை ரசித்ததாகத் தோன்றியது. அப்படிப் பேசிய சில பக்தர்களை அழைத்து தனது பட டாலர் உள்ள செயினையும் தந்து ஆசிர்வதித்தார். ஆனந்த் எதிர்பாராத விதமாக கதிரும் எழுந்து போய் பேசினான். ஒரே சந்திப்பில் தான் சுவாமிகளின் பக்தனாகியது எப்படி என்று விவரித்தான். அதோடு அவன் நிறுத்த்¢யிருக்கலாம். தொடர்ந்து வேண்டிக் கொண்டான். "என் நண்பன் ஆனந்தும் இங்கு வந்திருக்கிறான். அவனையும் தங்கள் பக்தனாக ஏற்றுக் கொண்டு ஆசி வழங்கும்படி சுவாமிகளை நமஸ்கரித்து கேட்டுக் கொள்கிறேன்"

ஆனந்த் பெரிய தர்மசங்கடத்தில் சிக்கித் தவித்தான். கதிர் அவனருகே வந்து அவனைப் போகச் சொல்ல, எல்லோரும் அவனையே பார்த்தார்கள். அவனது தயக்கத்தைக் கூச்சம் என்று எடுத்துக் கொண்ட சுவாமிகள் பெருந்தன்மையோடு அவனை பேச அழைத்தார். வேறு வழியில்லாமல் ஆனந்த் போனான்.

"மன்னிக்கணும். எனக்கு உங்கள் பக்தனாகும் எண்ணமே இல்லை. நான் பேசினால் இதற்கு முன்னால் பேசியவர்கள் பேசிய மாதிரி இருக்காது. என் மனதில் பட்டதை அப்படியே சொல்வேன். அது நல்லாயிருக்காது" என்று வெளிப்படையாக அவன் சொன்னவுடன் சுவாமிகள் அந்தப் பத்திரிக்கை நிருபரைப் பார்த்து புன்னகை செய்த படி "பரவாயில்லை. சொல்" என்றார். அவனது எந்த விமரிசனத்திற்கும் வேதங்களில் இருந்தும் ஆன்மீக இலக்கியங்களில் இருந்தும் பல எடுத்துக் காட்டுகள் சொல்லி அந்த நிருபரைப் பிரமிக்க வைக்க ஒரு சந்தர்ப்பமாக இதை அவர் நினைத்த மாதிரி இருந்தது.


அதற்கு மேல் ஆனந்த் தயங்கவில்லை. "சுவாமி. ஒரு சராசரி மனிதனுக்குத் தேவையான பணம், சௌகரியங்கள், மற்றவர்களுடைய அங்கீகாரம் எல்லாம் உங்களுக்கும் தேவைப்படுகிறது என்பதை இங்கே நானே கண்கூடாகப் பார்த்தேன். ஒரு மகரிஷி ஸ்தானத்தில் உங்களை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. "

அவன் இப்படிச் சொல்வான் என்று யாருமே அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. சுவாமிகளின் முகம் கறுத்தது. அவரது சீடர்களில் ஒருவர் அவனுக்குப் பதில் சொல்ல விரைந்து வந்தார்.

"வேதங்களையும் உபந்¢ஷத்துகளையும், தேவாரம் திருவாசகங்களையும் கரைத்துக் குடித்த சுவாமிகளை சாதாரண மனிதன் என்று சொல்வது குருடன் ஓவியனைக் குறை சொல்வது போலத்தான். அவர் அளவுக்கு வேண்டாம், அவருக்குத் தெரிந்த இந்த ஆன்மீக நூல்களில் இருந்து கொஞ்சமாவது உன்னால் சொல்ல முடியுமா தம்பி"

சுவாமிகள் முகம் மலர்ந்தது. ஒருசிலர் கை தட்டினார்கள்.

ஆனந்த் புன்னகை மாறாமல் பதில் சொன்னான். "என்னால் முடியாது என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இத்தனையும் என் கம்ப்யூட்டர் டிஸ்கின் உள்ளே இருக்கின்றன. அதற்காக நான் என் கம்ப்யூட்டரைக் கும்பிட முடியுமா? இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் மகரிஷி ஆகி விடுவதில்லை. இந்த போதனைகளை ஒவ்வொரு கணமும் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுபவர் தான் மகரிஷி. அந்தப் பெயருக்குப் பொருத்தமாய் ஒருவர் திருவண்ணாமலையில் ஒரு காலத்தில் இருந்தார்...."

மேலே அவனைப் பேச விடாமல் சுவாமிகளின் சில பக்தர்கள் கத்த ஆரம்பித்தனர். அந்த ஆசிரமம் கிட்டத் தட்ட ஒரு மினி சட்டசபையாக மாறியது. ஆனந்த் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான். கதிர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, ஓரிருவர் ஆனந்தைத் தொடர்ந்து வெளியேறினார்கள்.

கோபத்தில் முகம் சிவக்க புவனகிரி சுவாமிகள் சொன்னார். "இது போன்ற நாத்திகம் பேசும் மூடர்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இனி இது போன்ற ஆட்களை அழைத்து வந்து யாரும் ஆன்மிகத்தைக் களங்கப் படுத்த வேண்டாம்".


- என்.கணேசன்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 09, 2010 7:15 am

வருகைக்கு நன்றி.
நன்றாக இருக்கிறது.தொடருங்கள்.

ரமணீயன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 09, 2010 7:22 am

///"என்னால் முடியாது என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இத்தனையும் என் கம்ப்யூட்டர் டிஸ்கின் உள்ளே இருக்கின்றன. அதற்காக நான் என் கம்ப்யூட்டரைக் கும்பிட முடியுமா? இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் மகரிஷி ஆகி விடுவதில்லை///


நச்சுன்னு இந்தக் கருத்து மட்டும் மூளைக்குள் பதிவாகிக் கொண்டது!



 எது நாத்திகம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 7:24 am

சிவா wrote:///"என்னால் முடியாது என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இத்தனையும் என் கம்ப்யூட்டர் டிஸ்கின் உள்ளே இருக்கின்றன. அதற்காக நான் என் கம்ப்யூட்டரைக் கும்பிட முடியுமா? இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் மகரிஷி ஆகி விடுவதில்லை///


நச்சுன்னு இந்தக் கருத்து மட்டும் மூளைக்குள் பதிவாகிக் கொண்டது!

யெஸ். கரெக்ட்...... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சோகம் சோகம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 9:15 am

தங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழரே மகிழ்ச்சி நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Sep 09, 2010 9:27 am

நல்லதொரு பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 09, 2010 9:38 am

இந்த போதனைகளை ஒவ்வொரு கணமும் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுபவர் தான் மகரிஷி. அந்தப் பெயருக்குப் பொருத்தமாய் ஒருவர் திருவண்ணாமலையில் ஒரு காலத்தில் இருந்தார்...."

மேலே அவனைப் பேச விடாமல் சுவாமிகளின் சில பக்தர்கள் கத்த ஆரம்பித்தனர். அந்த ஆசிரமம் கிட்டத் தட்ட ஒரு மினி சட்டசபையாக மாறியது. ஆனந்த் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான். கதிர் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, ஓரிருவர் ஆனந்தைத் தொடர்ந்து வெளியேறினார்கள்.

கோபத்தில் முகம் சிவக்க புவனகிரி சுவாமிகள் சொன்னார். "இது போன்ற நாத்திகம் பேசும் மூடர்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. இனி இது போன்ற ஆட்களை அழைத்து வந்து யாரும் ஆன்மிகத்தைக் களங்கப் படுத்த வேண்டாம்".


உண்மையா சொன்னா நாத்திகம்

கோபம்

அருமை நண்பா

fleximan
fleximan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009
http://try2get.blogspot.com/

Postfleximan Thu Sep 09, 2010 10:17 am

நல்ல கருத்து.. நன்றி...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக