புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_c10கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_m10கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_c10 
30 Posts - 83%
heezulia
கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_c10கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_m10கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_c10கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_m10கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_c10கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_m10கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_c10கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_m10கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டது சட்ட விரோதம்-திமுக


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 01, 2010 10:39 am

நாடாளுமன்றத்தின் ஒப்புதலையோ, தமிழக அரசின் ஒப்புதலையோ பெறாமல், அரசியல் சட்டத்தை திருத்தாமல், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத் தீவு இலங்கைக்குத் தரப்பட்டுள்ளது. எனவே இது ஒரு சட்டவிரோதமான ஒப்பந்தம் என்று திமுக கூறியுள்ளது.

எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று திமுக எம்பி டி.ஆர்.பாலு கவன தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதன் மீது நடைபெற்ற விவாதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தவிர்த்த பிற கட்சி எம்.பிக்கள் கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விவாதத்தில் பேசிய பாலு, கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் ஒப்பந்தம், கடந்த 1974ம் ஆண்டு ஜுன் மாதம் கையெழுத்தானது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஸ்வரண் சிங், தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையும், கடற்பயண உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒப்பந்தப்படி, சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், கச்சத்தீவு பகுதியில் ஓய்வு எடுக்கவும், வலைகளை உலர்த்தவும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த 1976ம் ஆண்டு முதல் நிலைமை மாறியது. இந்திய-இலங்கை செயலாளர்கள் இரண்டு கடித தொகுப்புகளை பரிமாறிக் கொண்டார்கள். அந்தக் கடிதங்கள், கச்சத்தீவு ஒப்பந்தத்தின் அங்கமாக ஆக்கப்பட்டன. அதன்படி, இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டது.

இந்த கடிதங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையோ, அப்போதைய தமிழக அரசின் ஒப்புதலையோ பெறவில்லை. அரசியல் சட்டத்தை திருத்துவதன் மூலமும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமும் மட்டுமே, இந்தியாவின் எந்தப் பகுதியையும் பிற நாட்டுக்கு கொடுக்க முடியும். அப்படிச் செய்யப்படாததால், இது ஒரு சட்டவிரோதமான ஒப்பந்தம்.

எனவே, கச்சத் தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும்.கச்சத் தீவு பகுதி, உலகிலேயே இறால் மீன்கள் அதிகமாக கிடைக்கும் பகுதி.

ஆனால் அங்கு செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள். இத்தகைய தாக்குதலைத் தடுக்க, இந்திய கடற்படையின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்றார்.

அதிமுக எம்பி தம்பிதுரை பேசுகையி்ல்,

கச்சத் தீவு, தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. ஒப்பந்தம் கையெழுத்தானபோது, தமிழக அரசை மத்திய அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதால், இதுவரை 500 மீனவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரம் பேர் முடமாக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரம் பேரைக் காணவில்லை.

எனவே, இலங்கையுடன் நட்பு வேண்டும் என்பதற்காக, தமிழக மீனவர்களின் நலன்களை மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. தமிழ்நாடு- இலங்கை தமிழ் மீனவர்கள் இடையிலான தொப்புள் கொடி உறவை துண்டிப்பதற்காகவே, இந்த ஒப்பந்தம் போடப்பட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறது.

மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா முகாமிட முயன்று வருகிறது. அங்கு சீனா நிலைகொண்டால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆகவே, கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்.

வெறும் கடிதம் எழுதுவதால் மட்டும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்றார் தம்பிதுரை.

அவர் இவ்வாறு கூறியதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு கட்சி எம்பிக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். என்றார்.

பின்னர் மார்க்சிஸ்ட் எம்.பி. நடராஜன், மதிமுக எம்.பி கணேசமூர்த்தி ஆகியோரும் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று பேசினர்.

அது இலங்கைக்கே சொந்தம்-கிருஷ்ணா:

இந்த விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,
கச்சத் தீவு, இலங்கைக்கே சொந்தம். அதை திரும்பப் பெற முடியாது. இரு அரசுகளுக்கிடையிலான அந்த புனிதமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது. இலங்கை, நமது நட்பு நாடு. அந்த அம்சத்தை மனதில் கொள்வது அவசியம்.

மீன்பிடி விவகாரம் தொடர்பாக, கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியா-இலங்கை இடையே ஒரு புரிந்து கொள்ளல் ஒப்பநதம் ஏற்பட்டது.

அதன்பிறகு, தமிழக மீனவர்கள் பிடிக்கப்படுவதும், சுடப்படுவதும் கணிசமாக குறைந்துள்ளது. 2008ம் ஆண்டு, 1,456 மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். ஆனால், 2009ம் ஆண்டு, அது 127 ஆகக் குறைந்தது. இந்த ஆண்டு ஜுலை மாதம்வரை, 26 மீனவர்கள் மட்டுமே பிடித்துச் செல்லப்பட்டனர்.

கடந்த 2008ம் ஆண்டு 5 மீனவர்கள் கொல்லப்பட்டனர். 2009ம் ஆண்டு, யாரும் கொல்லப்படவில்லை. நடப்பு ஆண்டில், ஒருவர் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்துள்ளது.

எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் நடக்கிறதோ, அப்போதெல்லாம் நாங்கள் இலங்கை அரசின் கவனத்துக்கு அதை எடுத்துச் செல்கிறோம். ஆனால், அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று இலங்கை மறுத்து விடும். தங்களது கடற்படை, இந்திய கடல் பகுதிக்குள் நுழையவில்லை என்றும் கூறும்.

எனவே, இத்தகைய சம்பவங்கள் இலங்கை கடல் எல்லைக்குள்தான் நடக்கின்றன என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன். ஆகவே, எல்லையை மதிக்க வேண்டும் என்றும், இலங்கை பகுதிக்குள் நுழையக்கூடாது என்றும் நமது மீனவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

அதுபோல, இலங்கை மீனவர்களும் நமது பகுதிக்குள் வரக்கூடாது என்று இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

ஆனால், கிருஷ்ணாவின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, அதிமுக, மதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக எம்பிக்களும் அவரது பதிலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் டி.ஆர்.பாலு தொடர்ந்து கேள்விகள் எழுப்பியபடி இருந்தார். ஆனால், விவாதத்தை இத்துடன் முடிப்பதாக அறிவித்து அடுத்த அலுவலை எடுத்துக் கொண்டார் சபாநாயகர் மீரா குமார்

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக