புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
29 Posts - 34%
prajai
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
3 Posts - 4%
Jenila
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
1 Post - 1%
jairam
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
7 Posts - 5%
prajai
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
6 Posts - 4%
Jenila
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
4 Posts - 3%
Rutu
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
2 Posts - 1%
viyasan
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_m10இறையில்லங்களைப் பாழாக்குவோர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறையில்லங்களைப் பாழாக்குவோர்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 01, 2010 10:18 am

‘இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனின்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் இழிவு உண்டு. மறுமையிலும் இவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு.’ (அல்குர்ஆன் 2:114)

சராசரி அறிவு படைத்தவருக்கும் புரியும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது. மேலதிகமாக விரிவுரையோ விளக்கமோ தேவையில்லாத அளவுக்கு மிகவும் தெளிவாக அமைந்துள்ளது இவ்வசனம். ஆயினும் இவ்வசனம் தமிழக முஸ்லிம்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. எனவே இவ்வசனத்திற்குக் கூட விளக்கம் தரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழாண்டுக் காலம் மதரஸாக்களில் படித்த மவ்லவிகளில் பலர் மார்க்கத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைப் பற்றித் தாங்களே பறைசாற்றிக் கொள்வோர் தமிழகத்துப் பள்ளிகள் தோறும் ‘நான்கு மத்ஹபைப் பின்பற்றாதவர்கள் பள்ளியில் தொழவோ, தொழ வைக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று அறிவிப்புப் பலகையைத் தொங்கவிட்டு தீன்(?) பணி செய்து வருகின்றனர்.

அல்லாஹ்வுடைய தெளிவான இந்த ஒரு வசனத்தைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்க அறிஞர்களாம்! புரிந்தாலும் இறைவனைப் பற்றிச் சிறிதும் அச்சமின்றி அவனது பள்ளியைப் பாழாக்குவோர் மார்க்கத்தின் காவலர்களாம்!

மனிதர்கள் செய்யும் கொடுமைகளில் மிகப் பெரும் கொடுமை அல்லாஹ்வுக்குச் சொந்தமான இல்லத்தில் அவனைத் துதிப்பதற்குத் தடை விதிப்பதாகும்.

அல்லாஹ்வின் பள்ளிவாசலில் எவருக்கும் கூடுதலான உரிமை கிடையாது. எந்த நாட்டைச் சேர்ந்தவனும் அதில் தொழலாம். இறைவனைத் துதிக்கலாம். எந்த மொழி பேசுபவனும் தொழலாம். துதிக்கலாம். உலகம் முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் தான் அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்குத் தடை விதிக்கப்படும் கொடுமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மக்களைத் தொழுகைக்கு அழைக்கும் பணியைச் செய்து வரும் தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபட்டுள்ள தமிழகத்து மவ்லவிகளும் இந்தக் கொடுமைக்குத் துணை போகின்ற காட்சியையும் பார்க்கின்றோம்.

இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு இந்த வசனம் கடுமையான எச்சரிக்கை விடுகின்றது! ஒரு எச்சரிக்கை அல்ல! நான்கு எச்சரிக்கைகள்!
1. உலகிலேயே மிகவும் கொடுமைக்காரர்களாக அவர்கள் இறைவனால் கருதப்படுவார்கள்.
2. இப்படித் தடுப்பவர்கள் பள்ளிக்குப் பயந்து பயந்து செல்லும் நிலை உருவாகும்.
3. இந்த உலகத்திலேயே இழிவை அவர்கள் அடைவார்கள்.
4. மறுமையில் கடுமையான வேதனையைச் சந்திப்பார்கள்.

மறுமையின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இறைவனைப் பற்றி அச்சம் உள்ளவர்களுக்கும், இந்த எச்சரிக்கை மிகப் பெரிய விஷயமாகும்.

தொழுகையாளியைத் தடுப்பவர்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமான அவனது இல்லத்தை தங்கள் சொந்த உடைமை போன்று கருதுவதால் அவர்களுக்கு எதிராக இறைவனே போர்ப் பிரகடனம் செய்கிறான். மற்றோர் இடத்தில் இதைத் தெளிவாக இறைவன் அறிவிக்கிறான். அதுவும் இறைவன் அருளிய முதலாவது அத்தியாயத்திலேயே இவ்வாறு பிரகடனம் செய்கிறான்.

‘தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும் இறையச்சத்தை ஏவியவாறு இருந்தும் அவரைப் பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றான் என்பதை பார்த்தீரா? அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லையா? அவ்வாறல்ல. அவன் (இதிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால் அவனது தலைமயிரைப் பிடித்து நாம் இழுப்போம். தவறிழைத்துப் பொய்யுரைக்கும் (அவனது) தலைமயிரை(ப் பிடித்து) இழுப்போம். ஆகவே அவன் தனது சபையோரை அழைக்கட்டும், நாமும் நரகக் காவலர்களை அழைப்போம்.’ (அல் குர்ஆன் 96: 9-18)

பள்ளிவாசலில் இறைவனைத் தொழுவதற்குத் தடை விதிக்கும் கொடுமைக்காரர்களுக்கு எவ்வளவு கடுமையான எச்சரிக்கை இது!
நீ உன் சபையினரை – உனது ரவுடிப் பட்டாளத்தை உனக்குத் தலையாட்டும் மூடர் கூட்டத்தை அழைத்து வா! நானும் எனது நரகக் காவலாளிகளை அழைக்கிறேன் என்ற எச்சரிக்கையையும் கூடப் பொருட்படுத்தாத கொடுமைக்காரர்கள் இவர்கள்.

தொழுபனுக்கு தடை விதிக்கின்றார்களே! தடுக்கப்பட்டவன் குடிக்கிறான் என்பதற்காகவா? சாராயக் கடை ஏலம் எடுத்திருக்கிறான் என்பதற்காகவா? சினிமாக் கொட்டகை நடத்துகிறான் என்பதற்காகவா? வட்டிக் கடை வைத்திருக்கிறான் என்பதற்காகவா? ஊர்ப்பணத்தைச் சுரண்டி வாழ்கிறான் என்பதற்காகவா? பள்ளிவாசல் சொத்துக்களை தன் பெயருக்குப் பட்டா போட்டுக் கொண்டான் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை.

யாரைத் தடுக்கிறார்கள்? இந்தக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவனை – வரதட்சணை கூடாது என்பவனை – வீண் விரயமும், ஆடம்பரமும் கூடாது என்று கூறுபவனை – குர்ஆன் போதனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பவனை – இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சக் கூடாது என்பவனைத் தடுக்கிறார்கள்.

இப்போது மேலே உள்ள வசனத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! இன்றைய சூழ்நிலைக்காக இறங்கியது போல் தோன்றவில்லையா?





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 01, 2010 10:20 am

‘பள்ளிகள் யாவும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்’ (அல் குர்ஆன் 72:18)

அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளில் இறைவனல்லாத பெரியார்களுக்கு மவ்லூது ஓதி அவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த வசனத்தின் கட்டளை அப்பட்டமாக மீறப்படுகின்றது. இவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

‘நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது’ என்று எழுதி வைக்கும் மூடர்கள், அவர்களே எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை. நான்கு மத்ஹபுகளில் எந்த மத்ஹபும் பள்ளிக்குத் தொழ வருபவர்களைத் தடுக்குமாறு கூறவில்லை. தடுக்கக் கூடாது என்றே நான்கு மத்ஹபுகளும் கூறுகின்றன.

இவ்வாறு எழுதி வைத்ததன் மூலம் நான்கு மத்ஹபுகளையும் ஒரு சேரப் புறக்கணித்தவர்கள் இவர்கள். இந்தத் தடை முதன் முதலாகத் தடுப்பவர்களையே கட்டுப்படுத்தும். ஏனென்றால் நான்கு மத்ஹபுகளுக்கும் மாற்றமாக தொழுபவர்களைத் தடுக்கின்றனர்.

இவ்வாறு எழுதி வைக்கிறோமே! நாம் வக்காலத்து வாங்கும் மத்ஹபுகளில் இதற்கு அனுமதி உண்டா? என்ற ஞானமும் அற்ற ஞான சூன்யங்கள் இவர்கள். நான்கு இமாம்களில் எந்த இமாமாவது இவ்வாறு கூறியதாக அவர்களால் காட்ட முடியாது. மத்ஹபைப் பின்பற்றுவதும் இவர்களின் நோக்கமல்ல என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை.

கத்தம், பாத்தியா, தாயத்து, தட்டு என்று மக்களைச் சுரண்டிப் பிழைப்பதற்கு ஆபத்து என்பதனால் தான் இந்தக் கூப்பாடு! நேரடியாக இதைக் கூறமுடியாதவர்கள் மத்ஹபின் காவலர்கள் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்கிறார்கள். அவ்வளவு தான்!

உண்மையில் மத்ஹபைப் பின்பற்றுவது இவர்களின் நோக்கமென்றால், மத்ஹபைக் காப்பது இவர்களின் இலட்சியம் என்றால் மத்ஹபின் தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு எழுதி வைக்கத் துணிந்தது ஏன்? சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

தமிழகத்தின் தாய்க்கல்லூரி என்று இந்த மவ்லவிகள் மதிக்கின்ற பாக்கியாத் அரபிக் கல்லூரியின் பத்வாவை – தமிழக ஜமாஅதுல் உலமா சபைத் தலைவராகவும் செயலாளராகவும் பணிபுரிந்த கலீலுர் ரஹ்மான் ரியாஜி அவர்கள் தமது ‘ரஹ்மத்’ ஜூன் 88 மாத இதழில் வெளியிட்ட ஒரு பத்வாவை – அப்படியே இவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

வேலூர் அஃலா ஹஜரத் அவர்களின் ஃபத்வா
சவால்: ஒருவர் தன்னை அஹ்லே ஹதீஸ் என்று கூறிக் கொள்கிறார். நான்கு மத்ஹபுகளில் எதனையும் தக்லீத் செய்வதில்லை. ஆனால் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றுபவர் என்றோ வஹ்ஹாபி என்றோ அவரை யாரும் கூறினால் அதிருப்திப்படுகிறார். எனவே இவரை காபிர் என்பதா? முஸ்லிம் என்பதா? அவர் ஹனஃபிகளின் நிர்வாகத்திலிருக்கும் மஸ்ஜிதில் வந்து தொழுக விரும்புகிறார். ஹனஃபி இமாமைப் பின் தொடர்ந்து தொழுவதிலும் அவருக்கு விருப்பமே. ஆனால் ஆமின் இரைந்து கூறுகிறார். ரஃப்வுல்யதைன் (தொழுகையில் கைகளை உயர்த்துதல்) செய்கிறார். ஹனபிகள் அவர் மஸ்ஜிதிற்கு வந்து பின் தொடர்ந்து தொழுவதை ஆட்சேபிக்கிறார்கள். எனவே அவர் மஸ்ஜிதிற்கு வந்து தொழுவதைத் தடுப்பது கூடுமா? கூடாதா? அவர் இரைந்து ஆமீன் கூறுவதால் ஹனபி இமாமின் தொழுகை அல்லது ஜமாஅத் ஃபஸாதாகி விடுமா? அல்லவா?

ஜவாப்:அக்கீதா கிதாபுகளில் எழுதப் பட்டிருப்பது போல் தீனின் முக்கிய அம்சங்களை நம்பியிருப்பவர் முஸ்லிம் ஆவார். சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையின் படி நம்பிக்கை கொண்டிருப்பவர் ஸன்னி முஸ்லிம் ஆவார். நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றியிருப்பவர் முஸ்லிமும் சுன்னத் வல்ஜமாஅத்தைச் சேர்ந்தவருமாவார். தீனின் முக்கிய அம்சங்களை நம்புவதுடன் சுன்னத்து வல்ஜமாஅத்தின் கொள்கைகளையும் நம்பியிருக்கும் ஒருவர் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவராயிருப்பின் அவரும் சுன்னத் வல்ஜமாஅத்தில் சேர்ந்தவராக கருதப்படுகிறார். ஆயினும் அவர் முஸ்லிமாகவும் அஹ்லே கிப்லாவாகவும் இருப்பதால் அவர் மஸ்ஜிதிற்கு வருவதையும் சுன்னத்து ஜமாஅத்தினரைப் பின் தொடர்ந்து தொழுவதையும் தடுப்பது ஜாயிஸாயில்லை. இத்தகையோர்களை எழுபத்தி இரண்டு பிரிவோரில் எவருமே பின் தொடர்வதால் இமாம் முக்கதியின் தொழுகை முறிந்து விடுவதில்லை. வல்லாஹு அஃலமு பிஸ்ஸவாப்.
எழுதியவர்: அப்துல் வஹ்ஹாப் கானல்லா ஹுலஹு

இந்த ஃபத்வா மத்ஹபை நம்பியவர்கள் வழங்கிய – தமிழகத்தின் தாய்க்கல்லூரி என இவர்களே போற்றுகின்ற பாக்கியாத் வழங்கிய – ஃபத்வாவாகும். இதைக் கூட இன்றைய மவ்லவிமார்கள் புறக்கணிக்கிறார்கள் என்றால் சமுதாயம் இவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும்.

தங்களின் புரோகிதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த மவ்லவிமார்கள் தவறான வழிகாட்டும் போதும், தொழுகையாளிகளைத் தடுக்குமாறு தூண்டும் போதும் அவர்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் நிற்கின்ற நிர்வாகிகளும் ஜமாஅத்தார்களும் இறைவனது இந்த எச்சரிக்கை;கு உரியவர்கள் தாம். இவர்களின் துணையின்றி மவ்லவிமார்கள் இத்தகைய அக்கிரமத்தை அரங்கேற்ற முடியாது என்பதால் முதல் குற்றவாளிகளே இவர்கள் தாம்.

சவூதி அரேபியா போன்ற நாடுகளில் எந்த மத்ஹபையும் பின்பற்றுவதில்லை. அவர்களின் நிர்வாகத்தின் கீழ்தான் கஃபா ஆலயம் உள்ளது. சவூதி அரசாங்கம் ‘மத்ஹப்வாதிகள் கஃபாவுக்கு வரக்கூடாது, ஹஜ் செய்ய அவர்களுக்கு அனுமதி இல்லை’ என்று உத்தரவு போடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது இந்த மவ்லவிமார்கள் என்ன செய்வார்கள். 96:9, 2:114 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டி சவூதி ஆட்சியாளரை நார்நாராகக் கிழித்திருப்பார்கள். இப்போது மட்டும் இந்த இருவசனங்களும் இவர்களுக்கு நினைவுக்கு வரும். அவர்களே இந்த அக்கிரமத்தை அரங்கேற்றும் போது மட்டும் இந்த வசனங்களை மறந்து விடுகின்றனர்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக