புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
63 Posts - 56%
heezulia
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
58 Posts - 56%
heezulia
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_m10உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 28, 2010 5:05 pm

இது ஒரு நேர்மையான அதிகாரிக்கு ஆதரவு தெரிவிக்கும் முயற்சி.. இதை வாசிக்கும் எல்லோரும் கருனாநிதியின் குடும்பக் கட்டுப்பாட்டிலுள்ள அதிகாரத்துக்கு எதிரான உங்கள் கண்டனங்களையும், நேர்மைக்கு துணை நிற்க வேண்டும் என்கிற மன உணர்வையும் வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி அவர் மீது ஏவப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதால் ஆத்திரம் தலைக்கேறிப் போய், தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச்சான்றிதழ் கொடுத்து பதவிக்கு வந்துவிட்டாரெனக்கூறி அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.
1995 இல் (ஜெ ஆட்சியில்) மதுரை மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொண்டு வந்தபோதுதான் உமாசங்கர் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜெயலலிதா ஆட்சியின் ஊழலைச் சொல்லி, 1996 இல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதி, ஊழல் கண்காணிப்புத் துறையின் கூடுதல் ஆணையராக உமாசங்கரை நியமித்தார். ஜெ, அவரது அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழல்களை உமாசங்கர் வெளிக்கொணர்ந்த போதிலும், செல்வாக்குள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தது கருணாநிதி அரசு. வெறுப்புற்ற உமாசங்கர், தன்னை இப்பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரியவுடனே, அவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
மே 2006 இல் எல்காட் என்ற அரசு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டதும், அதுவரை மைக்ரோசாப்ட் மென்பொருட்களைச் சார்ந்திருந்த அரசுத்துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து பில்கேட்ஸை வெளியேற்றி விட்டு, 2007 ஆம் ஆண்டு முதல் ‘லினக்ஸ்’ என்ற ஓபன் சோர்ஸ் (இலவச) மென்பொருளை அறிமுகப் படுத்தினார் உமாசங்கர்.
“மைக்ரோசாப்ட் ஆத்திரம் கொண்டால் நம் நாட்டின் மென்பொருள் துறையே தேங்கிவிடும் என்று கருதுவது அபத்தமானது… மைக்ரோசாப்ட் இல்லாமல் இந்தியா வாழ முடியும். முன்னேறவும் முடியும். இந்தியா என்ற மிகப்பெரிய சந்தையை இழப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்குத்தான் பேரிழப்பு. மைக்ரோசாப்டிலிருந்து வெளியேறியதன் விளைவாக தமிழ்நாடு ஆண்டுக்கு 200 முதல் 500 கோடி வரை மிச்சமாக்க முடியும்” என டெக்கான் கிரானிக்கிள் பத்திரிகைக்கு அப்போது அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் உமாசங்கர். மைக்ரோசாப்டின் உயர் அதிகாரி ஒருவர் தமது மென்பொருள் தொகுப்பை 7000 ரூபாய்க்குத் தருவதாக பேரம் பேசினாரென்றும், ஓபன் சோர்ஸில் செலவே இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய மென்பொருளுக்கு நாங்கள் எதற்காக 7000 ரூபாய் செலவழிக்கவேண்டும் என்று கூறி அவரைத் திருப்பி அனுப்பியதாகவும் அப்பேட்டியில் கூறுகிறார் உமாசங்கர்.
எல்காட்டின் பொறுப்புக்கு உமாசங்கர் வருவதற்கு சில ஆண்டுகள் முன்னர், தியாகராச -செட்டியார் என்பவருக்குச் சொந்தமான ‘நியூ எரா டெக்னாலஜீஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து எல்காட் நிறுவனம், ‘எல்நெட்’ என்றொரு கூட்டுப்பங்கு நிறுவனத்தை உருவாக்கியிருந்தது. 24% பங்குகள் தியாகராச செட்டியாரிடமும், 26% பங்குகள் எல்காட்டிடமும், மீதமுள்ள 50% பங்குகள் பொதுமக்களிடமும் இருந்த இந்நிறுவனம், 2004 ஆம் ஆண்டில், ‘இ.டி.எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்’ என்ற கட்டுமான நிறுவனத்தைத் தனது துணை நிறுவனமாக உருவாக்கியிருந்தது. சென்னையில் 18 இலட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.700 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (கட்டிடம்) ஒன்றை இந்நிறுவனம் உருவாக்கியிருந்தது. தமிழக அரசின் 26% பங்குகளையும் பொதுமக்களின் 50% பங்குகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நிறுவனமும், அதன் 700 கோடி சொத்தும், 24% பங்குளை மட்டுமே வைத்திருந்த தியாகராச செட்டியாருக்கு மர்மமான முறையில் கைமாறியிருப்பதை உமாசங்கர் கண்டுபிடித்தார். “2008, ஜூலை 8 ஆம் தேதியன்று தரமணியில் உள்ள எல்நெட் நிறுவனத்தில் இவை தொடர்பான ஆவணங்களை நானே நேரடியாகத் தேடிக்கொண்டிருந்த போது, என்னுடைய பதவி பறிக்கப்பட்ட தகவல் வந்து சேர்ந்தது” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் உமாசங்கர்.
அடுத்து, சன் டிவி – கருணாநிதி மோதலின் தொடர்ச்சியாக, அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனின் நிர்வாக இயக்குநர் பதவியில் அக்டோபர் 2008 இல் நியமிக்கப்பட்டார் உமாசங்கர். அரசு கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை மிரட்டியதுடன், ரவுடிகளை வைத்து வயர்களையும் அறுத்தெறிந்தனர் மாறன் சகோதரர்கள். இவர்களுக்குத் துணை நின்றவர் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி. இது குறித்து பல புகார்கள் கொடுத்தும் போலீசு நடவடிக்கை எடுக்காததால், இவர்களைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கவேண்டும் என்றும், சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றும் உமாசங்கர் அரசுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். உடனே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏவப்படுகிறது. அந்த ஒழுங்கு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் இடைக்காலத்தடை விதித்ததனால், 2009, சனவரி 23 ஆம் தேதியன்று சிறுசேமிப்புத்துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டார் உமாசங்கர். இவற்றின் தொடர்ச்சியாக இப்போது வந்திருப்பதுதான் ஊழல் வழக்கும் தற்காலிகப் பணிநீக்கமும்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் விதிமுறைகள்
குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் ஊழல் தடுப்புச் சட்டத்துக்கும் விரோதமாக, திட்டமிட்டே வடிவமைக்கப்பட்டிருப்பதை அம்பலமாக்கியிருக்கிறார் உமாசங்கர்.
“ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுத்துறை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் போன்றோர் மீது ஊழல் குற்றத்துக்காக யாரேனும் வழக்கு தொடரவேண்டுமானால், அதற்கு அரசின் முன் அனுமதி தேவை” என்று கூறும் இவ்விதிமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே கேள்விக்குள்ளாக்குவதோடு, ஊழல் அதிகாரிகளுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் பயன்படுகிறது என்கிறார் உமாசங்கர். அனுமதி அளிக்கும் அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவிடம் இருப்பதால், நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும், ஊழல் அதிகாரிகளைத் தப்பவைப்பதற்கும் இது பயன்படுத்தப் படுகிறது என்பதையும் ஆதாரங்களுடன் திரைகிழித்திருக்கிறார் உமாசங்கர்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூடுதல் இயக்குநராக 1996 முதல் தான் பணியாற்றிய காலத்தில், கல் குவாரி ஊழல் (1000 கோடி ரூபாய்), சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேசன் தனியார்மயமாக்கல் ஊழல் (200 கோடி ரூபாய்), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழல் (சென்னையின் மையப்பகுதியில் அமைந்த 300 வீடுகள்) போன்ற பல ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் மீது வழக்கே தொடர முடியாததற்குக் காரணம் முதல்வர் தலைமையிலான குழுவின் அனுமதி கிடைக்காததுதான். அதுமட்டுமல்ல, பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, மேற்படி முதல்வர் குழுவின் அனுமதி கிடைக்காததால் தண்டனையிலிருந்து தப்பிவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி மாலதி என்பவர்தான் தற்போது ஊழல் தடுப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்ற கேலிக்கூத்தையும் போட்டுடைத்திருக்கிறார் உமாசங்கர்.
அவருடைய அனுபவத்தைப் படிக்கும்போதே ரத்தம் கொதிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்த போதிலும் எல்லா அதிகார பீடங்களையும் துச்சமாகக் கருதி எதிர்த்து நின்ற அவரது துணிவும், எத்தனை முறை பந்தாடப்பட்டும் தளராத அவரது மன உறுதியும் வியக்கத்தக்கவை. அதிகார வர்க்கத்தில் இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிதினும் அரிது. அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சும் இந்தக் காலத்தில், அதிகாரவர்க்கக் கோட்டையையும் ஆட்டமுடியும் என்று காட்டியிருக்கிறார் உமாசங்கர். அவ்வகையில் அவரது அனுபவம் ஒரு நேர்மறை எடுத்துக்காட்டு. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகி மக்களுக்குத் தொண்டாற்றப் போவதாகக் கூறுவோரின் மடமையையும், ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கத்தை, மக்கள் தொண்டாற்றும்படி மாற்றியமைத்துவிட முடியும் என்று கூறுவோரின் கயமையையும் புரிந்து கொள்வதற்கு, உமாசங்கரின் அனுபவம் ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு. (நன்றி: செங்கொடியின் சிறகுகள்)



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Aug 28, 2010 5:10 pm

தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 28, 2010 5:22 pm

உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம்


உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் 678642 உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் 678642 உமாசங்கர்-நீதிக்கு குரல் கொடுப்போம் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக