உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தையின் குறும்பு
குழந்தையின் குறும்பு
அக்பர் சக்கரவர்த்தி சபையில் வந்து, தமது சிம்மாசனத்தில் அமர்ந்தார்.
அமைச்சர், பிரதானிகள் யாவரும் சக்கரவர்த்தியை வணங்கிவிட்டு அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்.
ஆனால், பீர்பால் மட்டும் வரவில்லை; அவருடைய ஆசனம் காலியாக இருந்தது. அக்பரின் பார்வை அங்கே சென்றது. பீர்பால் காணப்படாமையால் அக்பருக்கு உற்சாகம் இல்லை. சிறிது நேரம் பொறுத்திருந்தார்: அப்பொழுதும் பீர்பால் வரவில்லை.
ஒரு சேவகனை பீர்பால் இல்லத்துக்கு அனுப்பி அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்அக்பர்.
' இதோ வருகிறேன்' எனச் சொல்லி அனுப்பினார் பீர்பால்.
நேரம் கடந்தது; ஆனால் அவரோ வரவில்லை.
மறுபடியும் சேவகனை அனுப்பிவைத்தார் அரசர்.
முதலில் கூறியபடியே, ' இதோ வருகிறேன்' எனக் கூறினார் பீர்பால்.
ஒரு மணி நேரம் கடந்தது!
சபையில் வீற்றிருந்தவர்கள் பலதிறத்தினர்; பீர்பாலை விரும்பாத பொறாமைக்காரர்களும் அங்கே இருந்தனர். அவர்கள் இந்தச் சந்தர்ப்பதைதைப் பயன்படுத்திக் கொண்டனர்.
'சக்கரவர்த்தி இருமுறை கூப்பிட்டு அனுப்பியும்கூட அவர் வரவில்லையே, அவருக்கு எவ்வளவு கர்வம்' எனக் கூறி தூபம் போட்டு அக்பருக்குக் கோபத்தை உண்டாக்கத் தொடங்கினர்.
பலரும் சொன்னவுடன் உண்மையிலேயே அக்பருக்குக் கோபம் பொங்கியது.
பீர்பாலைக் கைது செய்து கொண்டு வரும்படி சேவகர்களை அனுப்பினார் அக்பர்.
சேவகர்கள் பீர்பாலிடம் சென்று அரசர் உத்தரவை தெரிவித்தனர்.
பீர்பால் உடனே அரண்மனையை நோக்கிப் புறப்பட்டு வந்தார். அக்பரை வணங்கிவிட்டு தமது ஆசனத்தில் அமர்ந்தார்.
அக்பருக்குக் கோபம் தணியவில்லை. ' இரண்டு முறை சேவகர்களை அனுப்பியும்கூட ஏன் உடனே வரவில்லை?' எனக் கேட்டார்.
'சக்கரவர்த்தியே, என் குழந்தை அழுது தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. அதனால் உடனே வர இயலவில்லை. இப்பொழுதும்கூட அழுது கொண்டிருக்கும் குழந்தையை அப்படியே விட்டுவிட்டுத்தான் இங்கே விரைவாக வந்தேன்' எனப் பதில் கூறினார்.
' இவ்வளவு நேரம் எங்கேயாவது குழந்தை அழுது கொண்டிருக்குமா? இப்படி நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே?' என்றார் அக்பர்.
'என் வார்த்தையைச் சிறிது பொறுமையோடு அரசர் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் உண்மை விளங்கும். சபைக்கு நான் புறப்படும் சமயம் குழந்தை அழத் தொடங்கியது; 'என்ன வேண்டும்? ஏன் அழுகிறாய்?' என்றேன் பதில் கூறாமல் அழுது கொண்டே இருந்தது; என்ன கேட்டும் பதில் கூறவில்லை. நானும் சமாதானம் கூறிக்கூறி அலுத்துப் போனேன். ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. பிறகு, 'கரும்பு வேண்டும்' என்று கேட்டது 'வாங்கி வரச் சொல்லிக் கொடுத்தேன். மறுபடியும் அழுகை; 'கரும்பை நறுக்கித் துண்டுகளாக்கித் தருமாறு' கேட்டது. அப்படியே செய்து கொடுத்தேன். தின்று கொண்டே இருந்த குழந்தை மறுபடியும் அழத் தொடங்கியது. மறுபடியும் ஏன் அழுகிறாய்? என்று கேட்டேன்; குழந்தையின் கோரிக்கை விநோதமாயிருந்தது. சுவைத்துத் துப்பிய சக்கைகளை எல்லாம் எடுத்து மறுபடியும் முழுக் கரும்பாக ஆக்கித் தருமாறு அடம் பிடித்தது.
நான் என்ன செய்வேன்? அற்புதங்கள் செய்யும் மந்திர சக்தி என்னிடம் இருக்கிறதா? எதுவும் தோன்றாமல் திகைத்துப் போனேன்; குழந்தையின் தொந்தரவு தாங்க இயலவில்லை!
இந்தக் குழந்தைகளே இப்படித்தான். நினைத்த நேரத்தில் எதையாவது கேட்டு அழுது, அழுது துன்புறுத்துகின்றன. நல்ல வேளையாக சேவகர்கள் வந்தார்கள்; நான் தப்பித்தேன் என வந்து விட்டேன்' என்றார்.
சபையில் இருந்தோர், பீர்பால் கூறுவது உண்மைதான் என்பதைப் போல் மெளனமாகத் தலையை அசைத்தார்கள்.
அக்பரின் கோபமும் ஒருவாறு தணிந்தது. 'எந்த வீட்டிலும் குழந்தைகளின் தொந்தரவு பொறுக்க முடியவில்லைதான். முடிவில் குழந்தைகளின் பிடிவாதமே வெற்றி பெறுகின்றது; தாய்க்குத்தான் பொறுமை அதிகம்; தந்தைக்குக் குறைவுதான். கரும்புச் சக்கையை மீண்டும் கரும்பாக்க பீர்பால் என்ன, தெய்வமா?' என்றார் அக்பர்.
அமைச்சர், பிரதானிகள் யாவரும் சக்கரவர்த்தியை வணங்கிவிட்டு அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்.
ஆனால், பீர்பால் மட்டும் வரவில்லை; அவருடைய ஆசனம் காலியாக இருந்தது. அக்பரின் பார்வை அங்கே சென்றது. பீர்பால் காணப்படாமையால் அக்பருக்கு உற்சாகம் இல்லை. சிறிது நேரம் பொறுத்திருந்தார்: அப்பொழுதும் பீர்பால் வரவில்லை.
ஒரு சேவகனை பீர்பால் இல்லத்துக்கு அனுப்பி அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்அக்பர்.
' இதோ வருகிறேன்' எனச் சொல்லி அனுப்பினார் பீர்பால்.
நேரம் கடந்தது; ஆனால் அவரோ வரவில்லை.
மறுபடியும் சேவகனை அனுப்பிவைத்தார் அரசர்.
முதலில் கூறியபடியே, ' இதோ வருகிறேன்' எனக் கூறினார் பீர்பால்.
ஒரு மணி நேரம் கடந்தது!
சபையில் வீற்றிருந்தவர்கள் பலதிறத்தினர்; பீர்பாலை விரும்பாத பொறாமைக்காரர்களும் அங்கே இருந்தனர். அவர்கள் இந்தச் சந்தர்ப்பதைதைப் பயன்படுத்திக் கொண்டனர்.
'சக்கரவர்த்தி இருமுறை கூப்பிட்டு அனுப்பியும்கூட அவர் வரவில்லையே, அவருக்கு எவ்வளவு கர்வம்' எனக் கூறி தூபம் போட்டு அக்பருக்குக் கோபத்தை உண்டாக்கத் தொடங்கினர்.
பலரும் சொன்னவுடன் உண்மையிலேயே அக்பருக்குக் கோபம் பொங்கியது.
பீர்பாலைக் கைது செய்து கொண்டு வரும்படி சேவகர்களை அனுப்பினார் அக்பர்.
சேவகர்கள் பீர்பாலிடம் சென்று அரசர் உத்தரவை தெரிவித்தனர்.
பீர்பால் உடனே அரண்மனையை நோக்கிப் புறப்பட்டு வந்தார். அக்பரை வணங்கிவிட்டு தமது ஆசனத்தில் அமர்ந்தார்.
அக்பருக்குக் கோபம் தணியவில்லை. ' இரண்டு முறை சேவகர்களை அனுப்பியும்கூட ஏன் உடனே வரவில்லை?' எனக் கேட்டார்.
'சக்கரவர்த்தியே, என் குழந்தை அழுது தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. அதனால் உடனே வர இயலவில்லை. இப்பொழுதும்கூட அழுது கொண்டிருக்கும் குழந்தையை அப்படியே விட்டுவிட்டுத்தான் இங்கே விரைவாக வந்தேன்' எனப் பதில் கூறினார்.
' இவ்வளவு நேரம் எங்கேயாவது குழந்தை அழுது கொண்டிருக்குமா? இப்படி நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே?' என்றார் அக்பர்.
'என் வார்த்தையைச் சிறிது பொறுமையோடு அரசர் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் உண்மை விளங்கும். சபைக்கு நான் புறப்படும் சமயம் குழந்தை அழத் தொடங்கியது; 'என்ன வேண்டும்? ஏன் அழுகிறாய்?' என்றேன் பதில் கூறாமல் அழுது கொண்டே இருந்தது; என்ன கேட்டும் பதில் கூறவில்லை. நானும் சமாதானம் கூறிக்கூறி அலுத்துப் போனேன். ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. பிறகு, 'கரும்பு வேண்டும்' என்று கேட்டது 'வாங்கி வரச் சொல்லிக் கொடுத்தேன். மறுபடியும் அழுகை; 'கரும்பை நறுக்கித் துண்டுகளாக்கித் தருமாறு' கேட்டது. அப்படியே செய்து கொடுத்தேன். தின்று கொண்டே இருந்த குழந்தை மறுபடியும் அழத் தொடங்கியது. மறுபடியும் ஏன் அழுகிறாய்? என்று கேட்டேன்; குழந்தையின் கோரிக்கை விநோதமாயிருந்தது. சுவைத்துத் துப்பிய சக்கைகளை எல்லாம் எடுத்து மறுபடியும் முழுக் கரும்பாக ஆக்கித் தருமாறு அடம் பிடித்தது.
நான் என்ன செய்வேன்? அற்புதங்கள் செய்யும் மந்திர சக்தி என்னிடம் இருக்கிறதா? எதுவும் தோன்றாமல் திகைத்துப் போனேன்; குழந்தையின் தொந்தரவு தாங்க இயலவில்லை!
இந்தக் குழந்தைகளே இப்படித்தான். நினைத்த நேரத்தில் எதையாவது கேட்டு அழுது, அழுது துன்புறுத்துகின்றன. நல்ல வேளையாக சேவகர்கள் வந்தார்கள்; நான் தப்பித்தேன் என வந்து விட்டேன்' என்றார்.
சபையில் இருந்தோர், பீர்பால் கூறுவது உண்மைதான் என்பதைப் போல் மெளனமாகத் தலையை அசைத்தார்கள்.
அக்பரின் கோபமும் ஒருவாறு தணிந்தது. 'எந்த வீட்டிலும் குழந்தைகளின் தொந்தரவு பொறுக்க முடியவில்லைதான். முடிவில் குழந்தைகளின் பிடிவாதமே வெற்றி பெறுகின்றது; தாய்க்குத்தான் பொறுமை அதிகம்; தந்தைக்குக் குறைவுதான். கரும்புச் சக்கையை மீண்டும் கரும்பாக்க பீர்பால் என்ன, தெய்வமா?' என்றார் அக்பர்.
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|