புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
#376039- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை)
- ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
1.மேசம்:-
மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். பழைய இரும்பு, பழமையான இயந்திரங்கள், இரசாயனம், தரகு, ஏஜன்சி, குத்தகை போன்ற தொழிற் செய்வோர்கள், சாயப்பவுடர் வியாபாரிகள், பழைய பேப்பர், பிளாஷ்டிக் போன்ற பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர்கள், மடாலயப் பணிகளைச் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். பணப் புழக்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் காணப்படும். பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத சில தடைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால் மிக எச்சரிக்கையுடன் பயின்று வருதல் நல்லது. உற்றார் உறவினர்களின் எதிர் பாராத வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சிற் சில ஆதாயங்களை அடைவீர்கள். உடல் நிலையில் வயிறு மற்றும் மூல சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து வரவும்.
2.ரிசபம்:-
ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் மற்றும் பொருட்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் வந்து சேரும் காலமாகும். தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் சிற்சில மருத்துவச் செலவுகள் வந்து சேரும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். பூமி, நிலம் சம்பந்தமான தொழில்கள், தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், நெருப்புத் தொழிற்செய்வோர்கள், காவல்துறை ராணுவம், தீயணைப்பு போன்ற துறை சார்ந்தவர்கள்,கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். பொருளாதாரத்தில் இது வரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். ரேஸ்,லாட்டரி போன்ற சூதாட்டம் சம்பந்தமான விசயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாறாமல் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. புதிய வீடு நிலங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வுடன் கூடிய பணி மாற்றங்கள் ஏற்படலாம்.
தொலை தூரப் பயணங்களால் எதிர் பார்த்த காரியம் நிறைவேறும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிவப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து வரவும்.
3.மிதுனம்:-
மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும். சமுதாய வளர்ச்சிக்கான விசயங்களில் ஈடுபடும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.தந்தை, மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். இரும்பு, இயந்திரம், இரசாயனம் போன்ற தொழில் செய்வோர்கள்,
ஆலை அதிபர்கள், எண்ணைய் வியாபாரிகள், பலசரக்குகடை நடத்துவோர்கள், பழைய பொருட்களை விற்பனை செய்வோர்கள், இன்சினியரிங் துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். கண், காதுகளில் சிற்சில உபாதைகள் வந்து போகலாம். நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு வீடு மற்றும் வாகனங்களை மாற்றிப் புதியன வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.
4.கடகம்:-
கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பெண் சம்பந்தமான காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. மற்றவர்களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். உற்றார் உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நறுமண பொருட்களின் வியாபாரிகள், அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், இனிப்புப் பொருட்களின் வியாபாரிகள், கம்பியூட்டர் தயாரிப்பாளர்கள், பேராசிரியர்கள், பொதுப்பணி செய்வோர்கள், பூஜைப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர்கள், கம்பியூட்டர் சாதன வியாபாரிகள், ஆலயப்பணி செய்வோர்கள், அறநிலையத் துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். அரசு வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம். நண்பர்களால் வீண் பொருட் செலவுகளும் மன நிம்மதி இன்மையும் ஏற்படலாம். புதிய வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் உதவிகளால் நீண்ட தூரப் பயணங்களின் மூலம் எதிர் பார்த்து இருந்த காரியங்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
5.சிம்மம்:-
சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் சிற்சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர், புகழ் அடைவீர்கள். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். தீராத நாட் பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய பெண் மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நற்பலன் அடைவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. கணிதம் எழுத்துத்துறை சார்ந்தவர்கள், அச்சு தொழிற் செய்வோர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், தபால் தந்தித் துறைகளை சார்ந்தவர்கள்,
புகைப்பட கலைஞர்கள், வங்கிப் பணியாளர்கள், புகைப் படக் கலைஞர்கள், ஆகியோர்கள் நற்பலன்கள் அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள். தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். குல தெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன நிறைவடைவீர்கள். வங்கிகளின் மூலமாக நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். யாத்திரையின் போது புதிய நபர்களின் சந்திப்பால் சிற் சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள். மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம். குல தெய்வ ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான நீண்ட கால முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.
6.கன்னி:-
கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.நில புலன்கள் வாங்குவோர் விற்போர்கள், கட்டிட சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், கார் லாரி போன்ற வாகனத் தொழிற் செய்வோர்கள், கலைத் துறை சார்ந்தவர்கள், சினிமா மற்றும் நாடகத்துறைகளைச் சார்ந்த நடிகர்கள், ஆபரண அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், சிற்றுண்டி உணவுப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். கண் மற்றும் காதுகளில் மிக கவனமுடன் இருப்பது நல்லது. பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இதுவரையில் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்லதொரு முடிவுக்கு வரும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நாட்பட்ட பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் மன நிம்மதிக் குறைவு ஏற்படலாம்.வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும். நண்பர்களால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் மிககவனமுடன் இருக்கவும். அண்டை அயலார்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.
7.துலாம்:-
துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் வந்து சேரும். உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். கலைத் துறை சார்ந்த நடிகர் நடிகைகள், கலைக் கல்லூரி மாணவர்கள், கட்டிட சம்பந்தமான கல், மணல் சிமிண்ட் செங்கல் போன்ற வியாபாரிகள், சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்தும் வியாபாரிகள், திருமண மண்டபங்களை நடத்துபவர்கள், ஆடு, மாடு, கார், லாரி வேன் போன்ற வாகனங்களை வைத்து இயக்குபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். கணவன், மனைவி உறவுகளில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். வேற்று மதத்தவர்களிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.குடும்பத்தில் தடைபட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வங்கி உதவிகளின் மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.
8.விருச்சிகம்:-
விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்காதீர்கள். தாய் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் நிலையில் மிகவும் கவனமுடன் இருக்கவும். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிக சிரமத்தின் பேரில் சரி செய்வீர்கள். பூ, பழம், பூஜைப்பொருட்கள்,கம்பியூட்டர் துறைகளைச் சார்ந்தவர்கள், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள், பொதுப்பணித் துறைகள் சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்வோர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள். குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். தந்தை வழிச் சொந்த பந்தங்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது. யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வதால் விபத்துக்களை தடுக்கலாம். நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் ஆகியன திரும்பக் கை வந்து சேரும். நீண்ட தூர யாத்திரையின் போது கை மற்றும் கால்களில் கவனம் தேவை. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.
9.தனுசு:-
தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும்.நெருப்பு, ஹோட்டல், மின்சாரம் போன்ற துறை சார்ந்தவர்கள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன்அடைவார்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். சேர் மார்க்கெட்டில் ஈடுபடுவோர்கள் சற்று கவனமுடன் இருக்கவும். மற்றவர்களிடம் இருந்த எதிர் பாரத்த உதவிகள் கிடைக்கக் கூடிய காலமாகும். புதிதாகக் கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமற் போக வாய்ப்பு உள்ளதால் கடன் வாங்குவதை தவிர்க்கவும். அரசியல்வாதிகளுக்கு நல்ல ஆதாயம் பெறக் கூடிய காலமாகும். யாத்திரையின் போது மிக கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லது. சகோதர சகோதரிகளின் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒருசிலருக்கு ஆதாயம் உண்டாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக எச்சரிக்கையாய் பேசி பழகவும். தீராத நாட் பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகள் கிடைக்கும்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்கும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.
10.மகரம்:-
மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். வெகு நாட்களாக வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். தோல் சம்பந்தமான தொழில்கள், இரசாயனப் பொருட்களின் வியாபாரிகள்,
பழைய இரும்பு கழிவுப் பொருள் வியாபாரிகள், நாடகத்துறை சார்ந்தவர்கள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்களை நடத்துபவர்கள், அணு ஆராய்ச்சித் துறைகளைச் சார்ந்த விஞ்ஞானிகள், கழிவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். அரசு வழக்குகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பங்காளியுடன் சேர்ந்த புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. வாகனங்கள் மற்றும் மின்சார பணிகளில் ஈடுபடுவோர்கள் மிக கவனமுடன் இருக்கவும். வேண்டாத விசங்களில் தலையிட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள. வெளி நாடு செல்லுதல் போன்ற விசயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். தீர்த்த யாத்திரை செய்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறையும். காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிவப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-கணபதி வழிபாடு செய்து வரவும்.
11.கும்பம்:-
கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். உடல் நிலையில் முதுகு மூலம் போன்ற தொல்லைகள் வந்து போகும். தண்ணீர் கூல்டிரிங்ஸ், திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், கடல் துறையை சார்ந்தவர்கள், கப்பல் பணி செய்வோர்கள், தாய் சேய் நல விடுதிகளை நடத்து வோர்கள், மருத்துவத்துறை சார்ந்த மாணவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். காதல் விசயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் எந்த விசயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. வீடு வாகனங்களைப் புதுப்பித்தலுக்காகப் புதிய கடன் வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் கவனமுடன் இருக்கவும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய பொருட் செலவுகள் வந்து சேரலாம்.மாணவர்கள் கல்வியில் சிலதடைகள் வர இருப்பதால் கவனமுடன் சென்று வரவும். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.
12.மீனம்:-
மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் காரணமற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். சுப காரிய சம்பந்தமாக வட திசையில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். பூர்வீகச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் கைக்கு வந்து சேரும். குல தெய்வ ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். தந்தை,மகன் உறவுகளில் இது வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப்பார்கள். நெருப்பு சம்பந்தமான கேஸ் வெல்டிங் போன்றதொழில்கள் சார்ந்தவர்கள், காவல் துறையை சார்ந்தவர்கள், தீயணைப்பு நிலையத்தவர்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், விறகு மற்றும் நிலக்கரி போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். உடம்பில் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம். தாயின் உடல் நிலையில் நீண்ட காலமாகப் பிரச்சனைகளில் இருந்து வந்த தொல்லைகள் தீரும். வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேர சற்று கால தாமதம் ஆகலாம்.
பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிவப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து வரவும்.
***************************************************************
- ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
1.மேசம்:-
மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறி சற்று முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். பழைய இரும்பு, பழமையான இயந்திரங்கள், இரசாயனம், தரகு, ஏஜன்சி, குத்தகை போன்ற தொழிற் செய்வோர்கள், சாயப்பவுடர் வியாபாரிகள், பழைய பேப்பர், பிளாஷ்டிக் போன்ற பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர்கள், மடாலயப் பணிகளைச் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். பணப் புழக்கத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி நல்ல முன்னேற்றம் காணப்படும். பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கை வந்து சேரும் காலமாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத சில தடைகள் வந்து போக வாய்ப்பு உள்ளதால் மிக எச்சரிக்கையுடன் பயின்று வருதல் நல்லது. உற்றார் உறவினர்களின் எதிர் பாராத வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சிற் சில ஆதாயங்களை அடைவீர்கள். உடல் நிலையில் வயிறு மற்றும் மூல சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். காணாமற் போன பொருட்கள் மற்றும் நபர்கள் திரும்ப வீடு வந்து சேர வாய்ப்பு உள்ளது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து வரவும்.
2.ரிசபம்:-
ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் மற்றும் பொருட்கள் மிகுந்த சிரமத்தின் பேரில் வந்து சேரும் காலமாகும். தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் சிற்சில மருத்துவச் செலவுகள் வந்து சேரும். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். பூமி, நிலம் சம்பந்தமான தொழில்கள், தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், நெருப்புத் தொழிற்செய்வோர்கள், காவல்துறை ராணுவம், தீயணைப்பு போன்ற துறை சார்ந்தவர்கள்,கேஸ் வெல்டிங் சம்பந்தமான தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். பொருளாதாரத்தில் இது வரையில் இருந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். ரேஸ்,லாட்டரி போன்ற சூதாட்டம் சம்பந்தமான விசயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாறாமல் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. புதிய வீடு நிலங்களை வாங்குவதற்காக வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வுடன் கூடிய பணி மாற்றங்கள் ஏற்படலாம்.
தொலை தூரப் பயணங்களால் எதிர் பார்த்த காரியம் நிறைவேறும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிவப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து வரவும்.
3.மிதுனம்:-
மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும். சமுதாய வளர்ச்சிக்கான விசயங்களில் ஈடுபடும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.தந்தை, மகன் உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையுடன் இருப்பார்கள். இரும்பு, இயந்திரம், இரசாயனம் போன்ற தொழில் செய்வோர்கள்,
ஆலை அதிபர்கள், எண்ணைய் வியாபாரிகள், பலசரக்குகடை நடத்துவோர்கள், பழைய பொருட்களை விற்பனை செய்வோர்கள், இன்சினியரிங் துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். கண், காதுகளில் சிற்சில உபாதைகள் வந்து போகலாம். நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதற்காகப் போட்ட திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுக்களைப் பெறுவார்கள். வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். ஒரு சிலருக்கு வீடு மற்றும் வாகனங்களை மாற்றிப் புதியன வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.
4.கடகம்:-
கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும். பெண் சம்பந்தமான காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. மற்றவர்களை நம்பிப் புதிய கடன்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். உற்றார் உறவினர்களின் எதிர் பாராத திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நறுமண பொருட்களின் வியாபாரிகள், அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், இனிப்புப் பொருட்களின் வியாபாரிகள், கம்பியூட்டர் தயாரிப்பாளர்கள், பேராசிரியர்கள், பொதுப்பணி செய்வோர்கள், பூஜைப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர்கள், கம்பியூட்டர் சாதன வியாபாரிகள், ஆலயப்பணி செய்வோர்கள், அறநிலையத் துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். அரசு வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம். நண்பர்களால் வீண் பொருட் செலவுகளும் மன நிம்மதி இன்மையும் ஏற்படலாம். புதிய வீடு மாற்றம் செய்வதற்கான முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் உதவிகளால் நீண்ட தூரப் பயணங்களின் மூலம் எதிர் பார்த்து இருந்த காரியங்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
5.சிம்மம்:-
சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். பிள்ளைகளால் சிற்சில தொல்லைகள் ஏற்பட்டாலும் அவர்களால் பெயர், புகழ் அடைவீர்கள். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். தீராத நாட் பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய பெண் மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் நற்பலன் அடைவீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. கணிதம் எழுத்துத்துறை சார்ந்தவர்கள், அச்சு தொழிற் செய்வோர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், தபால் தந்தித் துறைகளை சார்ந்தவர்கள்,
புகைப்பட கலைஞர்கள், வங்கிப் பணியாளர்கள், புகைப் படக் கலைஞர்கள், ஆகியோர்கள் நற்பலன்கள் அடைவீர்கள். உற்றார் உறவினர்களின் வரவுகளால் நன்மை அடைவீர்கள். தீராத நோய்கள் தீருவதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள். குல தெய்வ ஆலயத் திருப்பணிகளில் பங்கு கொண்டு மன நிறைவடைவீர்கள். வங்கிகளின் மூலமாக நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். யாத்திரையின் போது புதிய நபர்களின் சந்திப்பால் சிற் சில காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளுவீர்கள். மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம். குல தெய்வ ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான நீண்ட கால முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.
6.கன்னி:-
கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.நில புலன்கள் வாங்குவோர் விற்போர்கள், கட்டிட சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், கார் லாரி போன்ற வாகனத் தொழிற் செய்வோர்கள், கலைத் துறை சார்ந்தவர்கள், சினிமா மற்றும் நாடகத்துறைகளைச் சார்ந்த நடிகர்கள், ஆபரண அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், சிற்றுண்டி உணவுப் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். கண் மற்றும் காதுகளில் மிக கவனமுடன் இருப்பது நல்லது. பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்கான முயற்சிகளில் எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இதுவரையில் ஏற்பட்டு வந்துள்ள மருத்துவச் செலவுகள் குறையும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் நல்லதொரு முடிவுக்கு வரும். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நாட்பட்ட பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்குவதன் மூலம் மன நிம்மதிக் குறைவு ஏற்படலாம்.வெகு காலமாகப் பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேரும் காலமாகும். நண்பர்களால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் மிககவனமுடன் இருக்கவும். அண்டை அயலார்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.
7.துலாம்:-
துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும். குடும்பத்தில் தடைபட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சில பின்னடைவுகள் வந்து சேரும். உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து போகலாம். கலைத் துறை சார்ந்த நடிகர் நடிகைகள், கலைக் கல்லூரி மாணவர்கள், கட்டிட சம்பந்தமான கல், மணல் சிமிண்ட் செங்கல் போன்ற வியாபாரிகள், சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்தும் வியாபாரிகள், திருமண மண்டபங்களை நடத்துபவர்கள், ஆடு, மாடு, கார், லாரி வேன் போன்ற வாகனங்களை வைத்து இயக்குபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். கணவன், மனைவி உறவுகளில் இது நாள் வரையில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். வேற்று மதத்தவர்களிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.குடும்பத்தில் தடைபட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வீடு மற்றும் தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. வங்கி உதவிகளின் மூலம் புதிய வாகனங்களை வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.
8.விருச்சிகம்:-
விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்காதீர்கள். தாய் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் நிலையில் மிகவும் கவனமுடன் இருக்கவும். பொருளாதாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் மிக சிரமத்தின் பேரில் சரி செய்வீர்கள். பூ, பழம், பூஜைப்பொருட்கள்,கம்பியூட்டர் துறைகளைச் சார்ந்தவர்கள், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள், பொதுப்பணித் துறைகள் சார்ந்தவர்கள், ஆலயப் பணி செய்வோர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள். குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள். தந்தை வழிச் சொந்த பந்தங்களால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். புதிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பேசிப் பழகுதல் நல்லது. யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வதால் விபத்துக்களை தடுக்கலாம். நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் ஆகியன திரும்பக் கை வந்து சேரும். நீண்ட தூர யாத்திரையின் போது கை மற்றும் கால்களில் கவனம் தேவை. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.
9.தனுசு:-
தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும்.நெருப்பு, ஹோட்டல், மின்சாரம் போன்ற துறை சார்ந்தவர்கள், அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள் ஆகியோர்கள் நற்பலன்அடைவார்கள். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும். சேர் மார்க்கெட்டில் ஈடுபடுவோர்கள் சற்று கவனமுடன் இருக்கவும். மற்றவர்களிடம் இருந்த எதிர் பாரத்த உதவிகள் கிடைக்கக் கூடிய காலமாகும். புதிதாகக் கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த இயலாமற் போக வாய்ப்பு உள்ளதால் கடன் வாங்குவதை தவிர்க்கவும். அரசியல்வாதிகளுக்கு நல்ல ஆதாயம் பெறக் கூடிய காலமாகும். யாத்திரையின் போது மிக கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லது. சகோதர சகோதரிகளின் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன்கள் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பால் ஒருசிலருக்கு ஆதாயம் உண்டாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக எச்சரிக்கையாய் பேசி பழகவும். தீராத நாட் பட்ட நோய்கள் தீர்வதற்காகப் புதிய மருத்துவர்களின் உதவிகள் கிடைக்கும்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் துலங்கும். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து வரவும்.
10.மகரம்:-
மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். வெகு நாட்களாக வராத கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். தோல் சம்பந்தமான தொழில்கள், இரசாயனப் பொருட்களின் வியாபாரிகள்,
பழைய இரும்பு கழிவுப் பொருள் வியாபாரிகள், நாடகத்துறை சார்ந்தவர்கள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்களை நடத்துபவர்கள், அணு ஆராய்ச்சித் துறைகளைச் சார்ந்த விஞ்ஞானிகள், கழிவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவீர்கள். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். அரசு வழக்குகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பங்காளியுடன் சேர்ந்த புதிய கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது. வாகனங்கள் மற்றும் மின்சார பணிகளில் ஈடுபடுவோர்கள் மிக கவனமுடன் இருக்கவும். வேண்டாத விசங்களில் தலையிட்டு வீண் வம்புகளை விலைக்கு வாங்காதீர்கள. வெளி நாடு செல்லுதல் போன்ற விசயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். தீர்த்த யாத்திரை செய்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறையும். காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிவப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-கணபதி வழிபாடு செய்து வரவும்.
11.கும்பம்:-
கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும். காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். உடல் நிலையில் முதுகு மூலம் போன்ற தொல்லைகள் வந்து போகும். தண்ணீர் கூல்டிரிங்ஸ், திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், கடல் துறையை சார்ந்தவர்கள், கப்பல் பணி செய்வோர்கள், தாய் சேய் நல விடுதிகளை நடத்து வோர்கள், மருத்துவத்துறை சார்ந்த மாணவர்கள், பூஜைப் பொருள் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். காதல் விசயங்களில் நண்பர்களின் உதவியால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் எந்த விசயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. வீடு வாகனங்களைப் புதுப்பித்தலுக்காகப் புதிய கடன் வாங்குவதற்கு முயற்சிகளைச் செய்வீர்கள். மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுக்களில் கவனமுடன் இருக்கவும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.வெளி நாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். வீடு வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் புதிய பொருட் செலவுகள் வந்து சேரலாம்.மாணவர்கள் கல்வியில் சிலதடைகள் வர இருப்பதால் கவனமுடன் சென்று வரவும். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.
12.மீனம்:-
மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை கிரகமாகும். கணவன் மனைவி உறவுகளில் காரணமற்ற சச்சரவுகள் வந்து நீங்கும். சுப காரிய சம்பந்தமாக வட திசையில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும் காலமாகும். பூர்வீகச் சொத்துக்கள் பெரிய மனிதர்களின் தலையிடுதலால் கைக்கு வந்து சேரும். குல தெய்வ ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள். தந்தை,மகன் உறவுகளில் இது வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமையாய் இருப்பார்கள். நெருப்பு சம்பந்தமான கேஸ் வெல்டிங் போன்றதொழில்கள் சார்ந்தவர்கள், காவல் துறையை சார்ந்தவர்கள், தீயணைப்பு நிலையத்தவர்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், விறகு மற்றும் நிலக்கரி போன்ற எரி பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். உடம்பில் நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம். தாயின் உடல் நிலையில் நீண்ட காலமாகப் பிரச்சனைகளில் இருந்து வந்த தொல்லைகள் தீரும். வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவினர்களுடன் தொடர்புகள் ஏற்படும். காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேர சற்று கால தாமதம் ஆகலாம்.
பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிவப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து வரவும்.
***************************************************************
Re: இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
#376042- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
நல்லகாலம் பொறக்குது அம்பலத்தானுக்கும் நல்ல காலம் பொறக்குது ..
Re: இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
#376047- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
மாணவர்களுக்கு என்ன நிலமைன்னு போடவே இல்ல. அதையும் கொஞ்சம் போட்டிங்கன நல்லா இருக்கும். ஏன்ன வகுப்ப கட் அடிக்கலாமா வேண்டாம்னு யோசிக்க வேண்டியது இல்லை பாருங்க...
Re: இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
#376049- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
அலட்டல் அம்பலத்தார் wrote:நல்லகாலம் பொறக்குது அம்பலத்தானுக்கும் நல்ல காலம் பொறக்குது ..
பொறக்கட்டும் அம்பலம்...நாலு சரக்க வாங்கி ஏத்தலாம்ல.........
Re: இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
#376052- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
bhuvi wrote:மாணவர்களுக்கு என்ன நிலமைன்னு போடவே இல்ல. அதையும் கொஞ்சம் போட்டிங்கன நல்லா இருக்கும். ஏன்ன வகுப்ப கட் அடிக்கலாமா வேண்டாம்னு யோசிக்க வேண்டியது இல்லை பாருங்க...
புவி அக்கா..நீ இன்னும் மாணவியாக்கா...என்ன ராசி சொல்லுக்கா....பலன பேஷா போட்டிடலாம்....ஓகேவா...
Re: இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
#376053- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
கன்னிராசி அண்ணா....
Re: இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
#376060- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
bhuvi wrote:கன்னிராசி அண்ணா....
கன்னிராசிக் காரங்களுக்கு நாளைக்கு கண்ணு ரெண்டும் பொங்கும். படிப்பு சரியா வராது...தூங்கிகிட்டே இருக்கத் தோனும்.....நிறைய காப்பிக்குடிச்சா சரியாயிடும்...ஓகேவா.....
Re: இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
#376066- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
இதை தான் நான் தினமும் செய்துகிட்டு இருக்கேனே அண்ணா...
Re: இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
#376071- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
bhuvi wrote:இதை தான் நான் தினமும் செய்துகிட்டு இருக்கேனே அண்ணா...
இததான் அன்னாடம் செய்யுறயா...அப்ப படிக்கிறடே இல்லயா..மண்டு..மண்டு....
Re: இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
#376075- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
எக்ஸாம்கு முந்தைய நாள் படிச்சா போதாதா அண்ணா.... தினமும் வேற படிக்கனுமா
Re: இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
#0- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|