புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_m10ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Dec 13, 2010 6:31 pm

இதன்கதை சுருக்கம்.

காலையில் கண் விழித்து வெளியே வருகிறேன். தமிழீழ அன்னை காலை வேளையில்
மௌனமாக துயரத்தை தாங்காமல் நடனமாடிக் கொண்டிருக்கிறாள். அப்போது மக்களின்
மரண ஓலம் கேட்கிறது. அன்னையின் நடனம் ஆவேசமாகிறது. கோபம் மிகுதியில் ”பொறுத்து
போதும் முன்னால் வா”, என கூப்பிடுகிறாள். ஒரு மன்னன் தலைவன் வெளியே வருகிறான்.
”நேர்மை காத்தது போதும். பகையை அழித்துவிடு” என்கிறாள். போர் எழுகிறது. என்னைப்பார்த்து
ஈழம் காக்க வேண்டும். கண் விழித்து எழு என்கிறாள். ( மறைந்த கருத்து இதுகனவா?)

கிரிகாசன்


என்னதொரு சத்தம் கேட்டுக் கண்விழிக்கின்றேன்
இதயமது படபடக்க துயில் கலைகின்றேன்
பின்னிலவு சாளரத்தின் உள்ளே வந்துமே
பொன்னொளியை என்னருகே பிய்த்து வைத்தது
வெண்ணொளியில் பெண்ணொருத்தி வெளியினிலாட
வேல்விழியாள் அழகுரூப சுந்தரிதன்னை
தண்ணொளியில் துள்ளியாடும் தோற்றமும்கண்டே
தங்கமகள் யாரறியத் தாவி எழுந்தேன்

எட்டிநடைபோட்டுமுற்றம் ஏகியபோது
இளையவளோ கண்டுமௌனம் இழையவிருந்தாள்
தட்டியொரு தாளமிட்டு தென்றல் இசைக்க
தளிர்மலராள் கொடியசையும் தன்மையிலாடும்
வட்டமெனும் தோகைவிரித்தாடு மயிலாய்
வான்நிலவில் மின்னும் எழில் தன்னில் மறந்தேன்
கிட்டவந்து ஆடுமவள் கோலம் காணவே
கேள்வியின்றி யாரிவளோ காண விழைந்தேன்

சுற்றி யெங்கும் பூமலர்கள் சுந்தரவாசம்
சுழலும்விரி தென்றல்கொண்டு சென்றிடும் வேகம்
சற்று ஒளி சிதறக் கீழை சரிவெடு வானில்
சார்ந்துறைந்த நீள்படர்வெண் முகிலதின்கோலம்
வெற்று நீலக்கருமையூடு விரைகின்ற பறவை
விடியல்வேளை கண்டுமகிழ் வானது பொங்க
பொற்சிலையாள் பெண்ணிவளோ பொங்கிஆடிடும்
புதுமையேது என்றவளைப் பேசவிழைந்தேன்

தேன் மொழியாம் தேகமிசை தேர்ந்தவள் காணும்
தேர் அசையும் இடையில்வளை யாபதிபூண்டும்
நான்அகங்கள் நூறும் இன்னும்நாற்புற நூறும்
நல்மணிமே கலையுடனே நங்கையில்காணும்
பொன்னணிகள் கண்டிவளோ பூந்தமிழ்தேகம்
பொலிந்தவளாம் என்னபெயர் என்று வியந்தேன்
பின்னும் சடை கன்னங்கரு கூந்தல் விரித்த
பெண்ணவளோ அன்னைதமிழ் ஈழம் நானென்றாள்

வற்றிவாடிக் கண்கள் நீரும் வழிந்ததுபோலும்
வெண்ணிலாவை ஒத்தமுகம் இருண்டதுபோலும்
சுற்றி நின்ற தேகம் நோகச் செய்ததுபோலும்
சுந்தரியோ வாடி ஏதோ சொல்ல விழைந்தாள்
கற்றபாடம் போதும்அன்பு கண்ணிய மெல்லாம்
கடையிலென்னவிலை என்றோதும் இவ்புவிமீதில்
பெற்றபிள்ளை தாயை அப்பன் விட்டொழிந்தோமே
பேசரிய பொற்குலத்தைப் பாழடித்தோமே

நேர்மை பார்த்த நெஞ்சைக்கீறி நஞ்சுபோடவும்
நினைவிழந்து துடிதுடிக்க படமெடுக்கவும்
கூர்மை கொண்டகத்தியாலே குத்திஆடியும்
கொல்பவரைப் பாவமென்று கொல்ல அஞ்சினோம்
பார்வைதன்னில் குருடரென்று பாவிஎண்ணியே
பாலகரைத் தானும்விட்டு வைக்கவில்லையே
வார்த்தை பொங்க துடிதுடித்து வஞ்சியானவள்
வந்தகீத போர்ப்பறைக்குத் துள்ளிஆடினாள்


பகுதி 2
(தந்தன தானன தந்தன தானன
தந்தன தானனனா - தன)

கொட்டிய மேளமும் சத்தமெழுந்திட
கோதைசுழன் றெழவே - ஒரு
வட்டம டித்துயிர் பட்டகொடுந்துயர்
வாடித் துடித்தலற...
தட்டிந டஞ்செயும் பொற்திரு பாதங்கள்
தாங்கி அனலெரிய - அதில்
சொட்டிச் சிவப்பென ரத்தங் கசிந்திட
சுற்றிநடம் பயின்றாள்...

விழிகள் தீயிட மொழிசொல்தேவதை
விரைந்து நடமிடவே - பெரு
ஒளிகள் பொறிபடநிலமும் தடதட
வெனவெ பொடியெழவே...
மழைகொள் இடியென மனதும் துடித்திட
மங்கை குதித்தனள்காண் - கால்
தளதள வென்று சதங்கை கலீரிட
தாவி நடம் பயின்றாள்...

வீறொடு கோபமும் வீரமெ ழுந்திட
வேகச்சுழல் புயலாய் - பெரும்
நீறுஎ ரித்திட நேரும் விழிக்கனல்
நிலையொடு கொடும்பார்வை...
ஆறுகு தித்திடும் ஆகமணிக்கொடி
ஆடிச் சினத்திடவே - அவள்
ஊறு விளைத்திட சீறும்புலிக்கெனும்
கோபமெடுத்திருந்தாள் ...

சித்தம் கொதித்தவள் செய்யு நடந்தனை
சுற்றி நின் றாடுகையில் - குரல்
கத்தி அழிந்துமே செத்திடு மோலங்கள்
காதினில் கேட்டதடா..
ரத்த வெறியெடு தீயகொடுஞ்செயல்
புத்தரைப் போற்றுபவர் - உடல்
குத்திஅழித்திடக் கொன்றிடு மெம்மவர்
கூக்குரல் நெடிதெழுவே

வைத்தநெ ருப்பினில் வெந்த இரும்பினை
வார்த்தது காதிலென - நெடும்
கத்தி எடுத்துக் கிழித்துபோல் நெஞ்சு
பட்ட பெரும்துயரோ..
பித்துப் பிடித்தவள் போல நின்றாடிட
ரத்தினச் செவ்விழியாள் - அவள்
வைத்தஅடி தனை வைத்தபடி ஒரு
கற்சிலையாய் உறைந்தாள்

சுற்றிஎ ழும்பிய தூசிஅடங்கிட
முத்த தமிழீழமகள் - அவள்
முற்றிப் பெருத்தது இத்தருணம் இனி
முன்னே எழுந்திடென்றாள்...
சற்றுத் தயங்கிட என்னையழைத்தனள்
என்று மயங்கிவிட - ஒளி
சுற்றிஅடர் பெருஞ்சூரியக் குஞ்செனச்
சோதி விரிந்ததடா..

இத்தனைகால மிழைத்த கொடுஞ்செயல்
அத்தனையும் பொறுத்தேன் - குறை
செத்தவனாய்க் கிடந்தேன் தமிழா இனி
விட்டு எழுந்துவிடு...
புத்தனின் வம்சம் புரிந்திடுமத்தனை
குற்றம் கொலைநிறுத்த - அவை
சத்தியம் நீதி அறம் தனைமீளவும்
சற்று எழுப்பிவிடு..

கெட்டது பூமியும் கேடுபெருத்தது
கள்ளரும் காடையரும் - புவி
விட்டதுபோதும் விரைந்திடு எம்மினம்
வேகுது வெந்தணலில்...
கட்டிஉணர்வினை மற்ற இனம்தனை
காத்து இருந்ததெல்லாம் . எமை
வெட்டிஅழித்திட பக்கதுணை இனி
வேண்டாம்விட்டுவிடு...

வல்லவன் மட்டு மெனப்புவி கொள்வது
வைத்த கொடும்வழக்கு - ஒரு
நல்லவ னாகி நலிந்து சரிந்தது
நம்பிழை தான்உணரு..
கொல்லுமிக் கூட்ட மழித்திடு கூடிடு
சொல்லு தமிழ்மகற்கு - நீ
இல்லையெனும்குறை தீர எழுந்திடு
ஏறிடுஆதவனே..

என்ன வியப்பொரு கண்ணைப் பறித்திடு
மின்னல் ஒளிக்குழம்பு - பெரு
மன்னன் அவன் ஒளியூடு எழுந்தொரு
மாமலையாய் நடந்தான்..
பின்னை இருந்ததுபோதும் இனிப்பகை
வென்று முடித்து விடு - உன
தன்னை தமிழ் இவள்மண்ணின் உரித்திவள்
ஆணையிட்டேன் தொடர்வாய்..

சொன்ன கணத்தினில் மன்னன்கரம்தனில்
சின்னது விரலசைய - உடன்
மின்னிவெடித்தொரு மேகமுடைந்தது
போலமுழக்கமுடன்..
என்னவியப்பது எழுந்துவிரைந்தது
இன்னொரு போர்செறிவு - படை
பின்னிஉடைத்தது பகைவர்நிலத்தினில்
புகைய பெரும் நெருப்பு...

வண்ண மத்தாப்புகள் வானில் பொழிந்தன
வாரி மழையெனவே - பெரும்
விண்ணு மதிர்ந்திட வேகமெடுத்தொரு
போரும் நடந்ததுவே..
கண்ணை விழித்தவள் என்னைக் குறித்துமே
கனவினை விட்டெழுந்து - எம்
மண்ணினை மக்களை காத்திடு என்றனள்
மங்கை, விழித்தெழுந்தேன்..

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Dec 13, 2010 6:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Dec 13, 2010 8:24 pm

சந்தம் நிறைந்த அழகு கவிதை சொற்களில் படரும் கோபம் அழகு

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Dec 13, 2010 8:37 pm

நன்றி உறவுகளே!

இன்று பலர்மனதில் காணும் கனவை நானும் காணுகிறேன்! அது கனவா தெரியவில்லை!

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 15, 2010 1:32 pm

கொட்டிய மேளமும் சத்தமெழுந்திட
கோதைசுழன் றெழவே - ஒரு
வட்டம டித்துயிர் பட்டகொடுந்துயர்
வாடித் துடித்தலற...
தட்டிந டஞ்செயும் பொற்திரு பாதங்கள்
தாங்கி அனலெரிய - அதில்
சொட்டிச் சிவப்பென ரத்தங் கசிந்திட
சுற்றிநடம் பயின்றாள்...


அருமையான சந்தம்....

எழுந்திடும் போர்முரசு
உங்கள்
எழுத்தினில் ஒலிக்கிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக