புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
42 Posts - 63%
heezulia
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணைத் தாண்டி வருவோமா?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Aug 19, 2010 12:13 pm

காற்றினி லூதிடுஞ் சங்கொலி கேட்டிட கண்விழித்தேன்
போர்பறை யொன்று புறத்தே முழங்கிடக் கேட்டெழுந்தேன்
நாற்றிசை எங்குந் நடந்து கலைந்திடும் காற்றசைவும்
சீற்றமெடுத் ததன் சிந்தனை கெட்டிடச் சென்றதியோ

வேர்வை துளித்து விழிகள் கலங்கிட வீதிவந்தேன்
நீர்த்துளி தூங்குந் நிலமெழு புல்லுங் கண்ணீர்பனிக்க
வார்த்த இரும்புறு வாளெடுத் தாடிடும் வஞ்சகர்கள்
சேர்த்துப் பலர்தலை சீவுதல் போலொரு காட்சிகண்டேன்

வானம் சிவந்த வரிகள் நிறைந்திட்ட கீழ்த்திசையோ
மானமி ழந்திடு ஈழமகள் முகம் போற்சிவக்க
ஊனம ழித்தவள் ஆவிவி டுத்திடச் சிந்தியதாய்
மேகம ழித்திட மீறிச்சி வந்தனன் செங்கதிரோன்

கூக்குர லோசையுங் கூத்திடும் பேய்களின் ஆர்ப்பரிப்பும்
தீக்கொளும் வீடுகள் தீயிடு மோசைகள் போற்பரந்தே
தாக்கிய ழிக்கையில் ஈனம ரணப்பே ரோலங்களாய்
கேட்கும் நினைவுகள் கேட்டன வோஅன்றிக் காற்றலையோ

வீட்டினெ திரொரு வேலியின் பின்புறம் பாக்குமரம்
நாட்டி வளர்ந்திடச் செய்தவன் பிள்ளையோ பார்த்தவனோ
வேட்டி மடித்தவன் வீரமுடன் அதிலேறியொரு
பாட்டி சுவைத்திடப் பாக்குப் பறிக்க விரும்பினனோ

பார்த்திட அங்கவன் பாதிமர மேறிப் பற்றியதும்
வேர்த்திடக் கைகள் வழுக்க விரைந்து சறுக்கியதும்
சேர்த்து மனத்திடம் தீரங்கொண்டே பற்றி ஏறுவதும்
கோர்த்த கரம்விடக் கோலம் பழதென ஆகிநின்றான்

பாவிஈழ அன்னை பெற்றவ னோதமிழ் பேசுபவன்
தாவிச்சாண் ஏறமு ழஞ்சறுக் கிநிலம் வீழுகின்றான்
காவியு டுத்தவர் ஏறிமி தித்திட நோகநின்றும்
மேவி விழிகட்டி நீதிமகள் கண்ணை மூடுகின்றாள்

நீதிசொல் லக்கண்ணை மூடிய அன்னை விழிதிறந்து
ஆதித் தமிழனைக் கூறுக ளாக்கிடும் போர்நிறுத்தி
மீதி மனித வளமொடு ஈழம் தலைநிறுத்தி
சேதி சுதந்திர வாழ்வெனப் பாட விடுவதெப்போ

தூரந டக்குது மோசஅழி வொன்று தீயுதினம்
பார்உரு ளும் சுடு பீரங்கி தானும் படையுமின்றி
போரிடும் ஒசை, பெருங்குண்டு வானக் கழுகுமின்றி
வீரிடும் ஓசைமறைத் தொரு சண்டை நடக்குதங்கே

சாணை பிடித்தகூர் வாளெழுந்தே சத்த மின்றிவெட்ட
ஆணையிட் டங்கே அழிவு தொடருது ஆர்வமின்றி
போனதை விட்டுப் புறந்தள்ளி விண்ணில் உலவலின்றி
வானமிருந்து நாம் கீழிறங்கி வழி செய்திடுவோம்

நீதிமுன் சாதிவெறி பிடித்தே தலை துண்டுசெய்யும்
போதி மரத்தின்கீழ் வாழ்ந்திடு ரத்த வெறியினரைத்
தாவிப் பிடித்தது தண்டனை கொள்ளவும் செய்குவமோ
மீதி யிருக்கும் நிலந்தனைக் காத்திடல் தேவையன்றோ


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 12:16 pm

இந்த கவிதைய படிச்சா என் சொந்தமெல்லாம் சந்தோஷ படும் அவங்க பேரு சொல்றேன் பெரியப்பா சந்திரகாசு படையாச்சி நாயுடுமாமா சித்தப்பா பெரிய அண்ணாச்சி தாத்தா கோவிந்தசாமி தேவர் இவங்கெல்லாம் இதை பார்த்த சந்தோஷ படுவாங்க அப்பு

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 12:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி D மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 19, 2010 12:40 pm

மிக அருமையாக இருக்கிறது அண்ணா ,

விண்ணைத் தாண்டி வருவோமா? 678642 விண்ணைத் தாண்டி வருவோமா? 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 2:58 pm

மீதியிருக்கும் நிலத்தை மட்டுமல்ல, இழந்த நம் ஈழப் பகுதிகளையும் மீட்டெடுக்கத்தான் போகிறோம்.

நண்றி அண்ணா! சிறந்த கவிதை!



விண்ணைத் தாண்டி வருவோமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 2:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




விண்ணைத் தாண்டி வருவோமா? Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Aug 19, 2010 3:03 pm

அருமை கவிதை தந்த அண்ணனுக்கு பரிசு இதோ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Aug 20, 2010 12:03 am

நீண்ட நேரமாக ஈகரைக்கு வரமுடியாமல் போய்விட்டது. பாராட்டிய தங்கள் அனைவ்ருக்கும் நன்றிகள்.
மகிழ்வென்றால் மனம் மலருமே. ஒரு பூவாக இதோ

மல்லிகை தூவினேன் மணிமாலை தூக்கினேன்
மலர்களை இறைத்து வைத்தேன்
பல்லொளிர் வர்ணங்கள் பட்டாடை கொண்டுநற்
பாதையும் செய்துவைத்தேன்
சொல்லிலேபுகழ்தன்னை சூட்டியோர் வார்த்தைகள்
உள்ளமே நுழையும்போது
பல்லக்கில் வைத்ததை பணிவோடு கொண்டுசென்
றுள்ளே ஓர் உயர்வில் வைத்தேன்
.

என்றும் காப்பேன்
கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக