புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்த ஊருக்கு எழுதும் மடல்
Page 1 of 1 •
அம்மாவைப்போல்
என்னை
வளர்த்த ஜென்மபூமியே
உன்மணல்
புழுதியில்
உருண்டு விளையாடிய
சின்னமகன் எழுதும் அன்புக் கடிதம்
நீ நலமா ?
உன் கருவேலம் முட்களும்
கள்ளிச் செடிகளும் நலமா?
என்னை
நீ நலமாவென திருப்பிக்கேட்டால்
சொல்லுவதற்கு
என்னடம்
நல்ல பதிலே இல்லை
உன்னை விட்டு
வெகுதூரம் சென்ற நான்
எப்போதாவது வரும்
உன்னினைவால் பெருகின்ற
சந்தோஷத்தை தவிற
பெரிதாக எதையும் பெற்றிடவில்லை
ஒட்டைவிழுந்த
கால்சட்டையும்
ஒருபிடி சோறும்தான்
உன்னிடம் இருக்கும்போது இருந்தது
ஆனாலும்
நெஞ்சம் எல்லாம் நிறைந்துக் கிடந்தது
உன்னோடு
உள்ளபோது பெற்ற சாந்தியை
இங்கே வந்து
விற்று வசதிகளை வாங்கினேன்
இன்று
வசதிகளை விற்றாலும்
அமைதி கொள்ள வழியில்லை
நாசியை விற்று
பூக்களை வாங்கியவன்போல்
கண்களை விற்று
கண்ணாடி வாங்கியவன்போல்
மழலையை விற்று
வீணை வாங்கியவன்போல்
மனைவியை விற்று
இல்லறம் வாங்கியவன்போல்
உன்னை விற்று
ஆடம்பரம் வாங்கிய நான்
ஒரு முட்டாள் வியாபாரி!
கல்யாணம் செய்த
பிறகுதான்
பிரமச்சரியத்தின் பெருமை தெரியும்
விடிந்த பிறகுதான்
இரவின் இனிமை புரியும்
கொத்தியப்
பிறகுதான் நாகத்தின் அழகு தெரியும்
கொட்டியப் பிறகுதான்
பாதரசத்தின் வலிமை புரியும்
இழந்தப் பிறகுதான்
எளிமையின் வளமை தெரியும்
ஆம்!
உன்னை இழந்தப் பிறகுதான்
உன் சௌந்தர்யம் தெரிகிறது
உன் சௌகர்யமும் புரிகிறது
பானையை உடைத்து விட்டு
பதபதைத்து ஆவதென்ன
உன்னை
பிறிந்து விட்டு உருகி
அழுவதால் என்ன பயன்
என் கதை கிடக்கட்டும்
எப்போதும் அது திருப்பதி குப்பைதான்
கிளரகிளர சிக்கல்களே வரும்
என்னைப்போல்
உனக்கு
ஏராளமான பிள்ளைகள் உண்டு
அவர்களெல்லாம் நலமா ?
அவர்களின் வாரிசுகளும் நலமா ?
காலையும் மாலையும்
உன்னை
அலங்கரிக்க நீண்ட துடப்பத்துடன்
கம்பீரமாய் நடப்பானே பகடை!
அவனும்
அவன் சாராயபுட்டியும்
அவனின் ஒவ்வொறு அடிக்கும்
புதுப்புது கெட்ட வார்த்தைகளை உதிர்ப்பாளே
அவன் மனைவி
அவளும் நலமா ?
சலவைக்குப் போட்ட
கால் சட்டையை
தொலைத்து விட்டதனால்
கல்லால் அடிப்பதாக
கந்தனை திட்டினேன்
அந்தக் கந்தன் நலமா ?
அவனுக்கு அழகான
ஒருபெண் உண்டே
அவள்
பெயர் கூட மறந்து விட்டது
அவளும் நலமா?
உன் வடபுரத்தில்
வரிசையாக
நிற்குமே தென்னை மரங்கள்
அதில் அசைந்தாடியப்படி
தொங்குமே
தூக்கணாங் குருவிக் கூடுகள்
அவைகள் நலமா ?
வாசகச்சாலை
மதில்சுவர் மீது வரிசையாய்
உட்கார்ந்து
கிசுகிசு பேசுமே சிட்டுக் குருவிகள்
அந்தக் குருவிகளை பிடிக்க
பதுங்கி நிற்பார்களே
கால்சட்டை போடாத பொடிசுகள்
பொடிசுகளை
சின்னக்கல் வீசி துறத்துமே
பல்போன பெருசுகள்
அவர்கள் எல்லோரும் நலமா?
நாராயண ஸ்வாமி கோயில்
கிணற்றிலிருந்து
தண்ணீர் எடுத்துவரும்
மங்கையரின் நடையழகை
கண்களால் தின்பதற்கு
வீட்டுத் தின்ணைகளில்
வரிசையாய்
காத்திருக்குமே வாலிபக் கொக்குகள்.....
கொக்குகளை துறத்துவதாய்
பாசாங்கு செய்து
தானும் மேயுமே கிழட்டு நாரைகள்.....
கொக்குகளையும்
நாரைகளையும் கண்மறைத்து
படகுகளுக்கு தூண்டில்
போடுமே மான்விழி மீன்கள்.....
அந்தக்
காட்சிகளை இப்போதும்
காண முடியுமா
உன் வீதி முனையில் ....?
பைப்படியில்
சத்தமிடும் பெண்கள்
அந்த சந்தத்திற்கு
தலையாட்டும் ஆண்கள்
கைப்பிடியில்
அடங்காத பிள்ளைகள்
பம்பரம் கோலி
பந்தாட்டம்
கில்லி என்று
குதியாட்டம் போடும்
அரைக்கால் சட்டைகள்
பிரண்டையில் ராட்டிணம்
பப்பாளி கிழையில் ஊதுகுழல்
ஆட்டாம் புழுக்கை குத்திய ஓலைக்காற்றாடி
குருவி முட்டை அவியல்
தலை உடைந்தப் பானையில்
கூட்டாஞ்சோறு
ஓணானுக்கு துண்டுபீடி
பிஞ்சுபோன சைக்கிள் டையரில் ரேஸ்
என்று எவ்வளவோ கும்மாளம்
இந்தக் கும்மலில்
காலத்தை
மறந்த சில நரைமுடிகள்
நெஞ்சை நிமிர்த்தி
கைகளை பின்னால் கட்டி
ஆண்பிள்ளைப் போல் நடப்பாளே
நவலடியாள்!
அவள்
முதுகுக்குப்பின்
பதுங்கி நடப்பாரே பூனை புருஷன்?
அவர்
முதுகு இப்போதாவது நிமிர்ந்திருக்கிறதா?
ஆவணிமாதத்து
அம்மன் கொடைவிழாவில்
தாவணிப்போட்ட
பட்டம்பூச்சிக்களை வலைவீசி பிடிக்க
தலைசீவி
நடைபழகும் விடலைமீசைகள்
முளைப்பாரி பின்னால்
கையில் பக்தியும் கண்ணில் தூண்டிலுமாய்
திரிவார்களே
அவர்கள்
இப்பவும் அப்படியே இருக்கிறார்களா?
ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்
கோரோசனை வாங்கலையோ கோரோசனை!
குடை ரிப்பேர்
அம்மி கொத்தனுமா அம்மி
என்ற குரல்கள்
வளையல்காரனிடமும்
பூக்கார முனியனிடமும்
வம்பளக்கும் பெண்களின் வெடிச்சிப்பு
வண்டியிழுக்கும்
மாடுகளின் மணியோசை
அவ்வப்போது ஏழும்பும்
குடிகாரர்களின் ஓலம்
இப்படி எல்லா ஓசைகளும்
இப்போதும் உன் வீதிகளில் கேட்கிறதா?
சங்குடு பாட்டி
இன்றைய மாலை
நேரத்திலும்
வைகுண்டஸ்வாமி கோயிலுக்கு போகிறார்களா?
மதியக் குழம்புக்கு
மீன் வாங்க
மீன்கார துரைராஜ் வீட்டுக்கு முன்னால்
காலையிலிருந்தே காத்திருக்கிறார்களா கிழவிகள்?
காதலனுடன்
ஓடிப்போகும் போது மாட்டிக் கொண்ட
சிவராஜக்கனி அக்காவிற்கு
அர்த்தராத்தியில்
கல்யாணம் நடந்த அரசமர மேடை
இன்னும் அப்படித்தான் இடிந்து கிடக்கிறதா?
அந்த மேடையில்தான்
பிடிபட்ட
சில்லரைத் திருடர்களை
இன்னும் கட்டி வைக்கிறார்களா?
மாதாக் கோயில் மணியோசையும்
அம்மன் கோயில் மேளமும்
ஒரே நேரத்தில்தான் ஒலிக்கிறதா?
சுருட்டுப் புகைத்தப்படி
நகைச்சுவை நறுக்குகளை
வாரி இரைப்பாரே
லிங்கத்துரை அண்ணன்
அவர் அதே இளமையோடுதான்
வாழைக்கு நீர் பாய்க்க செல்கிறாரா?
தினம்தினம்
இரவு நேரம்
விளக்கு கம்பத்தின் கீழ்
குழந்தைகளை
வட்டமாய் உட்கார வைத்து
நல்லத்தங்காள் அல்லி அரசானி
கதைகளை
ஒப்பாரி பாடலுடன் சொல்வார்களே
தங்கபுஷ்பம் பெரியம்மா
அவர்கர்கள் இன்னும்
அதே வித்தைக் கர்வத்துடன்தான் நடக்கிறார்களா?
எல்லாமே அப்படித்தான்
உள்ளதென்றால்
ஒரு சின்ன அஞ்சல் அட்டையில்
""ஆம்''
என்று மட்டும் எழுதிப்போடு
அடுத்த நொடியே
அங்குவருகிறேன்
இல்லையென்றால்
மௌனமாய் இங்கு முடங்கிக்
கொள்கிறேன்
மொட்டை மரத்தைப்
பார்க்கும் தைரியம் எனக்கில்லை
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
நீண்-----------------------------------------ட கவிதை,
கிராமிய மணம் கலந்த கதை,
ரம்மியமான உபமான உபமேயங்கள்,
பாரதிராஜா நினைவு வந்தது.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
கிராமிய மணம் கலந்த கதை,
ரம்மியமான உபமான உபமேயங்கள்,
பாரதிராஜா நினைவு வந்தது.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|