புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
91 Posts - 61%
heezulia
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
1 Post - 1%
viyasan
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
283 Posts - 45%
heezulia
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
19 Posts - 3%
prajai
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_m10பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 6:47 pm

பரிதாப நிலையில் கோபுரம்... விமானம்.... சந்நிதி..! Sakthivikadannews_78528994322


ஊர்விட்டு ஊர்வந்து அடைக்கலம் தேடுவோர், இந்த ஊரில் கோயில் குளம் இருக்கிறதா? மூன்று போகமும் விளைகிற பூமிதானா இது? இங்கே குடிவந்தால் கஞ்சிக்கு குறையிருக்காதுதானே... என்றெல்லாம் யோசித்து குடியேறுவார்கள்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை படர்ந்திருக்கும் பசுமையே. ஊரின் செழுமையைச் சொல்லிவிடும். கோயில்? ஊருக்குள் இருக்கிற கோயிலின் நெடிதுயர்ந்த கோபுரத்தை ஊரின் எல்லையில் இருந்தே கண்டு கொள்ளலாம். வயிற்றுப் பிழைப்புக்கு பூமியும் வாழ்க்கை நிம்மதிக்கு சாமியும் இருக்க. எந்த கவலையுமின்றி மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். இப்படி கோபுர தரிசனம் கோடி புண்ணியம் எனத் துவங்கி, கோபுரத்தின் சிறப்புகளை யோசிக்க யோசிக்க வியப்பும், பக்தியும் பெருக்கெடுப்பது நிச்சயம். இத்தனை புகழுக்கம் பெருமைக்கும் உரியது கோபுரம்.


நான் எப்போது விழுவேன், சரிவேன் என்று எனக்கே தெரியவில்லை என்பதுபோல் ஓங்கி உயர்ந்த கோயில் கோபுரம் ஒன்று உங்கள் கண்ணில் படலாம். மனதின் ஆழத்தில் சொல்ல முடியாத வலி ஒன்று ஒட்டுமொத்தமாக உங்களை இம்சிக்கும்தானே?


இப்படியொரு அவமான நிலையில் உள்ள கோபுரத்துக்குச் சொந்தக்காரர்.... ஸ்ரீதடாகபுரீஸ்வரர்! தன் அம்பிகையாம் பிறஸ்ரீன்நாயகரியுடன் இவர் கோலோச்சம் ஆலயத்தின் கோபுரம் மட்டும்தான் சேதாரம். மற்றவையெல்லாம் பிரமாதம் என்று எண்ணி விடாதீர்கள். கோயிலின் ஒவ்வொரு அங்குலத்திலும் கொட்டிக் கிடக்கிறது சோகம்.


நமக்கு அருள்பாலிக்கும் சிவனின் கோயில் சிதிலமடைந்து இருக்கலாமா? எத்தனையோ ராஜாக்கள் காசு பணத்தை இழைத்துக் கட்டிய ஆலயம். அவலநிலையில் இருந்தால் அகிலத்துக்கு நல்லதுதானா?


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ளது மடம் எனும் அழகிய கிராமம். இந்த ஊரின் மையப் பகுதியல் கனகம்பீரமாக எழுந்தருளியிருக்கிறார் தடாகபுரீஸ்வரர் பிரமாண்ட ஆலயம். தெற்கு நோக்கிய ஏழு அடுக்கு ராஜகோபுரம்; ராஜ என்ற சொல்லுக்கே உண்டான கம்பீரம் தொலைந்து களையிழந்து விழுகின்ற நிலையில் இருக்கிறது!


ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பல்குறைக் கோட்டத்து தென்னாற்றூர்... இதுதான் இந்த ஊரின் ஆதிகாலத்துப் பெயர். கல்வெட்டுகள் இந்த ஊரை இப்பத்தான் குறிப்பிடுகின்றன. பிறகு திருவண்ணாமலை தலத்துக்கு மாத்திரை மேற்கொள்ளும் மகான்கள். ஞானிகள் மற்றம் அடியார்கள். பயணத்தின் போது இளைப்பாறுவதற்காக மடம்,ஒன்று இங்கே கட்டப்பட்டது. காலப்போக்கில் மடம் என்பதே ஊரின் பெயராகிப் போனது.


முதலாம் குளத்துங்கச் சோழனால் எழுப்பப்பட்ட இந்த ஆலயத்துக்கு விக்கிரமச் சோழன், வீரபாண்டியன், சடையவர்மன், இரண்டாம் ராஜராஜன், சம்புவராயர்கள், விஜயநகரத்து மன்னர்கள் ஆகியோர் அடுத்தடுத்து திருப்பணிகள் பலவும் செய்துள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 6:47 pm

கோயில் அமைத்தவுடன் குளமும் வெட்டிக் கொடுத்துள்ளான் குலோத்துங்கச் சோழன். கூடவே பூந்தோட்டம் ஒன்றும் அமைத்துத் தந்திருக்கிறான் விக்கிரம பாண்டியன். கோயிலின் விழாச் செலவுகளுக்காக அருகில் உள்ள மழையூர் மற்றும் கோதண்டபுரம் எனும் ஊர்களையே தானமாக வழங்கியுள்ளான். இதேபோல் சுந்தரபாண்டியன் கோயில் பராமரிப்புச் செலவுகளுக்காக ஆளியூறையும் கம்பண்ண உடையார், ஏந்தல் கிராமத்தையும் தடாகபுரீஸ்வரருக்காக தானம் அளித்துள்ளனர் என்பதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.


ஊர்மக்களின் தாகத்தைத் தனிக்கும் பொருட்டு இங்கே குளம் வெட்டப்பட்டது. அப்போது குளத்தில் இருந்து சுயம்பு மூர்த்மாகத் தோன்றியதாம் சிவலிங்கம்! தாகத்தைப் போக்கும் குளத்து நீரில் இருந்து மக்களது பாவங்களைப் போக்கும் சிவனாரும் காட்சி தர... பிறகென்ன பிரமாண்டமாக எழுப்ப்பபட்டது ஆலயம்! தடாகத்தில் இருந்து வெளிக் கிளம்பியதால் ஸ்வர்மிகுக்கு தடாகபுரீஸ்வரர் எனும் திருநாமம்! ஸ்ரீஅக்னீசுவரமுடையார், ஸ்ரீகுளந்தை ஆண்டார் என்றும் இவுருக்குப் பெயர்கள் இருந்ததாகத் துறவிகளும், மகான்களும் வணங்கி வழிபட்ட ஆலயம்... சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் காணாமல் உருக்குலைந்து கிடக்கிறது.


உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சி! நந்தியும் பலிபீடமும் ஓர் மூலையில் கிடக்கின்றன. அருகில் வசந்த மண்டபம், அலங்கோலமாக அதேநேரம் அழகாக கம்பீரமாக அதேவேளை களையிழந்தபடி காட்சி தருகிறது 88 தூண்கள் கொண்ட இங்குதான் திருவிழாக் காலங்களில் சர்வ அலங்காரத்தில் காட்சி தருவாராம் தடாகபுரீஸ்வரர். கூடவே அம்பாள் பிரஹன்நாயகியும் அருள்பாலிப்பாளாம்! இன்னொரு சோகம்... ஆடல்வல்லான் நடராஜ பெருமானுக்கு தனி மண்டபமே உண்டாம்! இங்குதான், விஸ்வகர்மா இனத்து மக்களால், நடராஜ பெருமானுக்கு ஆரூத்ரா தரிசன விழா விமர்சையாக நடைபெறுமாம். ஆனால் மொத்தமும் சின்னாபின்னமாகிப் போனதால், பிரஹன்நாயகியைப் போலவே ஸ்ரீநடராஜருக்கும் சிறிதாக சந்நிதி அமைத்து பூஜை செய்கின்றனர்.


முழுவதும் கருங்கல் திருப்பணிகளால் அமைக்கப்பட்ட ஆலயம். இரண்டு பிராகாரங்களைக் கொண்டு திகழ்கிறது. ஆனால் வெளிப் பிராகாரத்தை வலம் வரமுடியாதபடி, புல்லும் புதருமாக மண்டிக் கிடக்கிறது. முன்மண்டபத்தில் வரசித்தி விநாயகர், அழகே உருவான ஆறுமுகப் பெருமான்! மகா மண்டபத்தைக் கடந்து செல்ல... கருவறையில் காட்சி தருகிறார் தடாகபுரீஸ்வரர். தரணி செழிக்க தடாகத்தில் இருந்து வெளிவந்த சுயம்பு மூர்த்தியை தரிசிக்க... மனமே குளிர்ந்து போகிறது.


சிவனாருக்கு சற்றும் சளைக்காதவளாயிற்றே சக்தி! கிழக்கு நோக்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் அபயவரத முத்திரை மற்றும் தாமரை மலரை ஏந்தி கருணையே உருவெனக் கொண்டு காட்சி தருகிறாள். எத்தனை கவலைகளுடன் இவள் சந்நிதயியைத் தேடி வந்தாலும் நம் கவலைகள், துன்பங்களையும் போக்கும் வல்லமையும் கனிவும் கொண்டவளாம் பிரஹன்நாயகி! ஆண்டுதோறும் நாயகிக்கு நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 6:47 pm

கோபுரத்துக்குப் போட்டியாக ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதியின் விமானங்களும் சிதிலமடைந்து பரிதாபமாகக் காட்சி தருகின்றன. இறை உருவங்களுக்கு குடைவிரித்திருந்தாற்போல் இருக்கிற இந்த இரண்டு விமானங்களையும் புதுப்பிக்க...இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு நிதி ஒதுக்கித் தந்தருக்கிறதாம் அரசாங்கம்! இதேபோல், கோயில் ராஜகோபுரம் புதுப்பித்தல் மற்றும் மதில் அமைத்தல் ஆகிய பணிகளுக்காக, மத்திய அரசின் 12வது நிதியுதவிக்குழு தொல்லியல்துறைக்கு நிதி அளித்திருக்கிறது. ஆமாம்... புராதனமான இந்த ஆலயம் அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.


இந்தக் கோயில் தொடரப்�ன கல்வெட்டுகள் மொத்தம் 56 உள்ளன. இதில் 34 கல்வெட்டுகள் கோயிலிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ன. பெரும்பான்மையான கல்வெட்டுகள்... ஆலயத்தில் விளக்கு எரிவதற்கு தானம் வழங்கப்பட்டதை பறை சாற்றுகின்றன. உதாரணத்துக்கு ஒன்று.


கி.பி.1113ம் ஆண்டு அடர்ந்த வனப்பகுதியில் இரண்டு பேர் வேட்டையாடுவதற்காகச் சென்றனர். அப்போது அழகிய புள்ளிமான் ஒன்று இவர்களுக்குக் குறுக்கே பாய்ந்து ஓடியது. இவர்களில் ஒருவன் மானை வீழ்த்த அம்பு எய்தான். ஆனால் அந்த அம்பு, அடுத்தவன் மீது பாய.... அந்த இடத்திலேயே அவன் இறந்தான். இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த ஊரின் இறைவனுக்கு விளக்க எரிக்க... 48 ஆடுகளை தானமாக வழங்க வேண்டும் என்று தீர்பு வெளியானதாம்! இப்படி ஒவ்வொரு கல்வெட்டில் இருந்தும் கோயில் நலனுக்கான செயல்பாடுகளை அறிய முடிகிறது.


கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, கோயிலில் நவக்கிரிக சந்நிதி கிடையாது. நவக்கிரக சந்நிதி முழுவதும் சிதைந்து உருவத்தைத் தொலைத்துவிட்டதோ என்னவோ... என்று முனம் வருந்திய அன்பர் ஒரவர், நவக்கிரக சந்நிதியை அமைத்துக் கொடுத்தாராம். இதேபோல் நல்லுள்ளம் கொண்டோரின் முயற்சியால், கோயிலுக்கு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் மெள்ள நடந்தேற... இன்னும் இன்னும் நல்ல உள்ளங்கள் தேவை என்கின்றனர் தடாகபுரீஸ்வரர் ஆலய திருப்பணிக் கமிட்டியினர்.


கோயிலும் ராஜகோபுரமும் பொலிவுற வேண்டும். பிறஹன்நாயகி மற்றும் ஸ்ரீநடராஜர் பழையபடி தனிக் கோயிலில், தனி மண்டபத்தில் எழுந்தருள வேண்டும்; டிராக்டருக்கு பதில், ரிஷப வாகனத்திலேயே ஸ்வாமி வீதியுலா வரவேண்டும். முக்கியமாக.... கும்பாபிஷேக வைபவம் கோலாகலமாக நடந்தேற வேண்டும்.... இவையே மடம் கிராமத்து மக்களின் மனம் குவிந்த பிரார்த்தனை!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jul 27, 2009 6:48 pm

இதை மேம்படுத்த அரசு முன் வர வில்லையா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 27, 2009 6:51 pm

ஐயோ கேட்கவே மனம் பதறுகிறது ... ஏன் தான் நமக்கு மட்டும் இந்த சோதனையோ

cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Mon Jul 27, 2009 6:57 pm

தமிழகத்திலே இப்படியா??? அப்போ எனது நாடு பரவால.....போல.....

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 9:34 pm

கொத்தனார் சரியா கட்டிருக்க மாட்டார்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 27, 2009 10:06 pm

நிலாசகி wrote:கொத்தனார் சரியா கட்டிருக்க மாட்டார்

இந்த கண்டு பிடிப்புக்கு இகரை சார்பாக நோவேல் பரிசுக்கு உங்களை சிபார்சு செய்கிறோம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 10:08 pm

kirupairajah wrote:
நிலாசகி wrote:கொத்தனார் சரியா கட்டிருக்க மாட்டார்

இந்த கண்டு பிடிப்புக்கு இகரை சார்பாக நோவேல் பரிசுக்கு உங்களை சிபார்சு செய்கிறோம்
நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக