புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
44 Posts - 58%
heezulia
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
3 Posts - 4%
viyasan
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
236 Posts - 42%
heezulia
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
13 Posts - 2%
prajai
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
7 Posts - 1%
mruthun
சித்தரால் வந்த அழகு Poll_c10சித்தரால் வந்த அழகு Poll_m10சித்தரால் வந்த அழகு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தரால் வந்த அழகு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 8:26 am

போகர் அளித்த பெருஞ்செல்வம்

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களின் வரலாறுகளைப் பார்க்கும்போது அவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அல்லது விஜயநகரப் பேரரசு, நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இங்கு உள்ள முருகனின் திருவுருவம் போகர் எனும் சித்தரால் உருவானதாகும். தமிழிலக்கியங்களில் பழநி தலம் 'சித்தன் வாழ்வு' எனவும் கூறப்பட்டுள்ளது.

சித்தரான போகர் தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன், ஆன்மிக உணர்வையும் வளர்த்து வந்தார். திருமலையின் மீது போகரின் கருணைப் பார்வை விழுந்ததால் முருகன் எனும் ஞான தண்டாயுதபாணியின் திருமேனி உருவானது என்கின்றனர். மருத்துவ உதவி செய்த போகரால் உருவான தண்டாயுதபாணியைத் தரிசிப்பவர்களுக்கு நோய் நொடிகள் தீரும் என்பது நம்பிக்கை.

அகத்தியருக்கு அளிக்கப்பட்ட மலைகள்

பழநி 12, 13, 14-ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நாயக்க மன்னர்கள், சோழர்கள் ஆகியோரின் ஆட்சியின் கீழிருந்தது. 18-ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசின் கீழிருந்தது. நான்காவது மைசூர் போருக்குப் பிறகு ஆங்கில அரசின் கீழ் பழநி வந்தது.

சிவனும், பார்வதியும் முருகனை 'ஞானப்பழம் நீ' என அன்புடன் அழைத்ததால் 'பழம் நீ' என அழைக்கப்பட்டுப் பிறகு அச்சொல் மருவி பழநி என வழங்கப்பட்டது. பழநி மலையும், இடும்பன் மலையும் முன்பு சிவகிரி, சத்திகிரி என்ற பெயரில் கயிலாயத்தில் இருந்துள்ளது. சிவன் இந்த மலைகளை அகத்திய முனிவருக்குக் கொடுத்தார் என்பது ஐதீகம்.

அகத்திய முனிவர் இந்த மலைகளைக் கொண்டு வரும்படி இடும்பாசுரனுக்கு ஆணையிட்டார். மலைகளைக் கொண்டு வரும் வழியில் ஓய்வெடுப்பதற்காக இடும்பன் மலைகளை இறக்கி வைத்தார். சிவகிரி மலையின் மீது முருகன் தோன்றியதால் பழநி மலையானது. இன்னொரு மலையான சத்திகிரி இடும்பன் பெயரில் இடும்பன் மலை என வழங்கப்பட்டது என தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

பழநியின் கிரி வீதி


பழநி மலை நில மட்டத்திலிருந்து 450 அடி உயரமுடையதாகும். மலை மீது ஏறிச் செல்ல 697 படிகள் உள்ளன. பக்தர்கள் மலையின் மேல் உள்ள முருகனைத் தரிசிக்கும் முன் அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோயிலை வலம் வந்து தரிசிக்கின்றனர்.

அதன் பின்னரே பக்தர்கள் கிரி வீதி சுற்றுகின்றனர். பழநி மலையைச் சுற்றி அழகிய கிரிப் பிரகாரம் உள்ளது. இந்தக் கிரிப் பிரகாரம் ஒன்றேகால் மைல் சுற்றளவுடன் உள்ளது. கிரி வீதி முழுவதும் அழகிய மரங்கள் உள்ளன.

கிரி வீதியின் சுற்றுப் பிரகாரத்தில் ஐந்து மயில் மண்டபங்கள், பல மடாலயங்கள், மதுரை வீரசாமி, ஐந்து முக விநாயகர் உட்பட பல சிறிய கோயில்கள் உள்ளன. திருக்கோயிலுக்குச் சொந்தமான நாதசுரத் தவில் பள்ளிகள், கருணை இல்லம் எனும் சிறுவர்கள் பராமரிப்பு இல்லம் ஆகியவையும் உள்ளன.

நவ பாஷாண மூர்த்தி


பழநி மலைக்கோயில் மேற்குத் திசையை நோக்கி உள்ளது. திருவாயில் முன்பு கட்டைக் கோபுர வாயிலும், அதன் அருகில் சுப்பிரமணியர் கோயிலும் உள்ளது. இதன் இரு புறமும் நாயக்கர் மண்டபம் உள்ளது.

அடுத்ததாக வைசியர் மண்டபம் தாண்டியவுடன் ஐந்து நிலை மாடங்களுடன் ராஜகோபுரம். ராஜகோபுரத்தைக் கடந்தால் இரண்டாம் பிரகாரம் வருகிறது. இரண்டாம் பிரகாரத்தில் 12 கல்தூண்களுடன் கூடிய பாரவேல் மண்டபம் பளிச்சிடுகிறது. இந்தக் கல் தூண்கள் அழகிய வேலைப்பாடுகள் உடையவையாகும். இவற்றில் பீமசேனன் புருடா எனும் மிருகத்துடன் போராடும் காட்சி, நாயக்கர், பாளையக்காரர் ஆகியோரது உருவச் சிலைகள் உள்ளன.

பாரவேல் மண்டபத்தை ஒட்டி வாத்திய மண்டபம் காணப்படுகிறது. வாத்திய மண்டபத்திற்கு எதிரே தட்சிணாமூர்த்தி, சிவன், அம்மன் ஆகியோருடைய திருத்தலங்கள் உள்ளன. இதற்கடுத்த திருவாயில் துவாரபாலகர்கள் காப்புடையது. இங்கு நுழைந்ததும் மகாமண்டபம் காணப்படுகிறது. பக்தர்கள் இருபுறமும் நின்று இறைவனைத் தரிசிப்பதற்காக இந்த மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மகாமண்டபத்தின் உள் நுழைந்ததும் இடப்பக்கத்தில் கல் மேடை மீது நடராஜர், சிவகாமியம்மை திருவுருவங்கள் உள்ளன. அதற்கடுத்து ஆண்டவன் பள்ளியறையும், சண்முகநாதர் திருக் கோயிலும் காணப்படுகிறது. இவற்றைக் கடந்து சென்றால் முருகப் பெருமான் கோயிலை அடையலாம்.

மேற்கு நோக்கிய நிலையில் இறைவன் காட்சியளிக்கிறார். இணையற்ற திருமுகம், அருள் கனிந்த திருநோக்கமும், புன்னகை தவழும் திருவாயும், மருதாணி துலங்கும் திருமார்பும், ஞானதண்ட ஏந்திய வலத்திருக்கரத்து எழிலும், திருத்தாள்களின் பொலிவும், திருத்தண்டைகளின் அழகும் காண்போரைப் பரவசமடையச் செய்கிறது.

முருகனின் திருமேனி போக முனிவரால் செய்யப்பட்ட நவபாஷாணம் எனப்படும் ரச(லிங்க) மூர்த்தியாகும். ஆண்டவன் மேற்கு நோக்கி இருக்கும் காரணத்தால் கேரள மாநிலம் அளவற்ற செழிப்பும், எழிலும் கொண்டுள்ளது என்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 8:30 am

தங்க ரதமும் தைப்பூசமும்

சித்திரை மாதத்தில் பெளர்ணமிக்கு மறு நாள் மலை மேல் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அக்கினி நட்சத்திர விழா சித்திரை மாதத்தின் பிற்பகுதியிலும், வைகாசி மாதத்தின் முற்பகுதியிலும் நடைபெறும். அக்கினி நட்சத்திரத்தின் 14 நாள்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி மலையைக் கிரி வலம் சுற்றி வருகின்றனர். வைகாசி விசாகம் தைப்பூச விழா ஆகியவற்றின்போது பத்து நாள்களுக்குச் சுவாமி புறப்பாடுடன் சிறப்பான உற்சவம் நடைபெறுகிறது.

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு வருகின்றனர். இப்படி வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் விரதமிருந்து பாத யாத்திரையாக நடந்தே பழநியை அடைகின்றனர். பாத யாத்திரை வரும் பக்தர்களில் பலர் காவடி எடுத்தல், முதுகில் கம்பியைக் கோர்த்து அதனுடன் சிறிய தேர் இழுத்து வருதல், பால் குடம் எடுத்து வருதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

தைப்பூசத் திருவிழாவைப் போல பங்குனி உத்திர விழாவும் பழநியில் சிறப்பாக நடைபெறுகிறது. ஏழு நாள்களும் சுவாமி உலா நடைபெறுகிறது. பங்குனி உத்திர விழாவின்போது பத்து நாள்கள் சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தமிழர்களில் பெரும்பாலானோர் முருகனைத் தங்களின் குல தெய்வமாகக் கொண்டுள்ளதால் பழநிக்கு வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர்.

வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள பக்தர்கள் தபால் மூலம் அபிஷேகம், அர்ச்சனை செய்வதற்கான ஏற்பாடுகளையும், கோயில் நிர்வாகம் செய்துள்ளது. அர்ச்சனை, அபிஷேகம் செய்வதற்கான கட்டணங்கள் மணியார்டர்கள், செக்குகள், டிராப்ட்கள் மூலம் பெறப்பட்டு அர்ச்சனைப் பிரசாதங்கள் தபால் மூலம் உரியவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

பழநி மலையின் இழுவை ரயில்

பக்தர்கள் பழநி மலை மீது ஏற இழுவை ரயில் விடப்பட்டுள்ளது. மலை மீது ஏற இழுவை ரயில் முதன்முதலில் பழநியில் மட்டுமே விடப்பட்டுள்ளது. வேறு எந்த மலைக் கோயிலிலும் இந்த வசதியில்லை. மின்சாரத்தின் உதவியால் இந்த இழுவை ரயில் இயங்குகிறது.

முதியவர்களுக்கும், நடக்க முடியாதவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்த இழுவை ரயில் மிக உதவியாக உள்ளது. அடிவாரத்திலிருந்து புறப்பட்டு எட்டு நிமிடங்களில் ரயில் மலை உச்சியை அடைகிறது. மீண்டும் எட்டு நிமிடங்களில் மலை அடிவாரத்தை அடையும். மூன்று இழுவை ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 9 வரை இயங்குகின்றன. இதில் பயணம் செய்ய சிறுவர், பெரியவர் எனத் தனித்தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள் வசதிக்காகக் கோயில் நிர்வாகம், தகவல் நிலையங்களை அமைத்துள்ளது. இந்தத் தகவல் நிலையங்கள் மலைக் கோயில், இழுவை ரயில் நிலையம், கிரி வீதி, மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இந்தத் தகவல் நிலையங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகின்றது.

பஞ்சாமிர்தத்தின் சிறப்பு

திருப்பதிக்கு லட்டு என்பது போலப் பழநி என்றவுடன் பஞ்சாமிர்தம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பஞ்சாமிர்தம் மா, பலா, வாழை என்ற முக்கனிகள் தேன், கற்கண்டு, பேரீச்சம்பழம் ஆகியவை சேர்ந்து தயாரிக்கப்படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக