புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
prajai
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
383 Posts - 49%
heezulia
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பருவமானவர்கள் - Page 2 Poll_c10பருவமானவர்கள் - Page 2 Poll_m10பருவமானவர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவமானவர்கள்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:27 pm

First topic message reminder :

----------------------------------------------------------------------

பருவமானவர்கள்

மூலம்: பெக்கி மோகன் Ph.D

தமிழில்: க. நடனசபாபதி

தேசிய கலை இலக்கியப் பேரவை

--------------------------------------------------------------------------





பருவமானவர்கள்: (ADOLESCENCE)


பருவமானவர்கள் பற்றிய புத்தகம் ஒன்று இரண்டாம் தசாப்த வயதை எட்டிய பிள்ளைகளுக்குத் தேவை தானா?

பருவமானவர்கள் பற்றிய அந்நிய தேசத்து புத்தகமொன்றை மேலெழுந்த வாரியாக வாசிக்கின்ற இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் பிள்ளைகள் சுவாரசியமானதுதான் என்று கூறுவர். ஆனால் இவை எமக்குப் பழக்கப்படாதவை. இதைப்பற்றி நாம் ஏன் இங்கு கவலைப்பட வேண்டும்?

டில்லியில் வாழும் பெண்ணொருத்தி இதனை இப்படிக் கூறினாள். இரண்டாம் தசாப்த வயதை நோக்கி நடைபோடும் பிறநாட்டவருக்கு இவையெல்லாம் பிரச்சினைகளாக இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் தாம் விரும்பியபடி எதனையும் செய்யலாம். ஆனால் எங்களைப் பொறுத்தமட்டில் எங்கள் பெற்றோர் எம்மை எதனையும் செய்ய விடுவதில்லை. இது எங்கள் பிரச்சினை. பருவமான இலங்கையர்கள் தாங்கள் அடைந்து வரும் மாற்றங்களைப் பற்றிய சாதாரணமாக தகவல்களைக் கூட அறியாது பருவமாற்றம் பற்றி கற்பனா உலகில் உலாவருகின்றனர். இந்தக் கற்பனைகள் எல்லாம் இரண்டாம் தசாத்த வயதை நோக்கி நடைபோடுவோரை நம்பிக்கை இழந்த நிலைக்கும் அழகீனமான நிலைக்கும் கவலை தோய்ந்த நிலைக்கும் இட்டுச் செல்கிறது. பிற நாடுகளில் வாழும் பருவமானவர்களின் கற்பனைகளோ பெரிதும் மாறுபட்டவை.

பருவமானவர்கள் என்றால் என்ன?

சிறுபிள்ளைப் பிராயத்திலிருந்து பிள்ளையைப் பெற்றுத்தரக்கூடிய நிலையை வாழ்க்கையில் அடையும் பருவமாகும்.

இதன் படி பெருமளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ரீதியானதும் உளரீதியானதுமான மாற்றங்கள் எம்மை புதிய உறவுகளை ஏற்று பொறுப்புடையோராக ஆக்குகிறது.

இப்புத்தகம் எப்படி உதவ எண்ணியுள்ளது?


முதலாவதாக, பருவமாகின்ற போது உடல் தோற்ற ரீதியான மாற்றங்களைப் பற்றிய சாதாரண தகவல்களை தருகின்றோம். இதன் காரணமாக பாதுகாப்பு இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோமோ என்ற அச்சம் அகலுகிறது. எம்மைப் போலவே அநேகர் உள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இரண்டாவதாக, உளரீதியான மாற்றத்தால் உலக வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது. அனுபவம் நல்லதோர் ஆசிரியன். ஏற்படும் தோல்விகள் பயனுள்ள பாடங்களைத் தருகின்றன. சில சம்பவங்கள் உங்களுக்கு கவலையைத் தரும். இப்புத்தகம் உங்களுக்கு நண்பனாகச் செயல்பட்டு உங்களை வழிநடத்திச் செல்லும்.



பருவமானவர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:41 pm


உடல் மாற்றங்கள்
(இப்போது பையன்கள்)
(PHYSICAL CHANGES - BOYS)


வளர்ச்சி (GROWTH)

எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது?

உடலில் ஏற்படும் மாற்றங்களை பத்து வயதுமுதல் பதின்னான்கு வயது வரை அவதானிப்பீர்கள். சராசரியாக பன்னிரண்டு வயதில் சிலவேளைகளில் பத்து வயதிற்கு முன்பும் பதின்னான்கு வயதிற்குப் பின்பும் எனவும் கூறலாம்.

ஆனால், உடலுக்கு உள்ளே ஏற்படும் மாற்றங்கள் ஏழு வயதிலேயே ஆரம்பமாகிறது. மூளையின் ஒரு பகுதியான உபதலமஸ் ஓமோன்களைத் தயாரிக்க ஆரம்பிக்கும் போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது.

ஓமோன்கள் என்றால் என்ன?

ஓமோன்கள் உடலிலிருந்து சுரந்து பருவம் ஆகி வளர்ச்சியுற்று சிறு பிள்ளை நிலையிலிருந்து மனிதனாகச் செய்கின்றன. ஓமோன்கள் உங்கள் இன விருத்திக்கான அமைப்பை உருவாக்கி பிள்ளைகளைத் தோற்றுவிக்க உதவுகின்றன. அதாவது பருவமாகி தந்தை நிலை அடையச் செய்கிறது.

ஓமோன்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு பையனுக்குக் கூடுதலான பெண்ணுக்குரிய ஓமோனான எஸ்ரஜினைச் செலுத்தினோமாயின் அவனுக்கு மார்பகங்கள் ஏற்பட்டு வளர்ச்சியுற்று தாடி உரோமங்கள் அகல ஆரம்பிக்கும். அதேபோல பெண்ணொருத்திக்கு ஆண்களுக்குரிய ஓமோனான அன்ட்றொஜன் கூடுதலாகச் செலுத்துவோமாயின் அவள் மார்பகங்களை இழந்து முகத்தில் உரோமங்கள் தோன்றி குரலும் கறகறப்பாகிவிடும்.

காணப்படும் முதல் மாற்றம் என்ன?

பருவமானவர் என்பதைக் காட்ட விதைகள் வளர்ச்சியுற்று, பெருத்து சற்று கீழ் இறங்கும். இரண்டில் ஒன்று சிறிது கீழ்முகமாக இறங்கித் தொங்கத் தொடங்கும். இது சராசரி வயது பன்னிரண்டாக இருக்கும் போது ஏற்படுகிறது. விதைகளைத் தாங்கும் விதைப்பை சற்று கருமை நிறமடைகிறது. அதேநேரம் முரட்டுத் தன்மையைப் பெறுகிறது. ஆண்குறியும் பெருத்து விடுகிறது.

விதைகள் பெருப்பதேன்?

விதை ஒவ்வொன்றிலும் இருநூற்று ஐம்பது சிற்றறைகளுண்டு. இவற்றில் இறுக்கமாய்;ச் சுருண்ட குழாய்களுண்டு. இவை விந்துகளைத் தயாரிக்கின்றன. இவை பருவமாகின்ற போது வளர்ச்சியுறுவதனால் விதைகள் பெருக்கின்றன. இந்தச் சிறுகுழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக நீட்டிப் பிடித்தோமாயின் கிட்டத்தட்ட அரை கிலோமீற்றர் நீளம் இருக்கும். இந்தக் குழாய்களை வெளியே எடுத்து நீட்ட முடியாது. அப்படிச் செய்ய இயலுமாயின் பருவமான ஆண்கள் தம்முடையவை மற்றவரைக் காட்டிலும் ஏன் நீண்டுள்ளது என்று போட்டி போடத் தொடங்கிவிடுவார்கள். உங்கள் விதைகள் பருவம் ஆனபின் அநேக காரியங்களைச் செய்ய வேண்டி உள்ளன. அவை ஓமோன்களைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்து கொண்டு ஆண்களாகத் தொடர்ந்து இருக்க செயல்பட வேண்டும். அதோடு உங்களுக்குத் தேவையான விந்துகளை உற்பத்தி செய்ய வேண்டும்.

விந்துகள் என்றால் என்ன?

விந்து என்பது மிக நுண்ணிய கலங்களை உரியன. சகல உயிரியல் தகவல்களையும் தமக்குள் அடக்கி உள்ளன. இதன் காரணமாகத்தான் உரியவனின் பிரதியைப் பெறமுடிகிறது. விந்து பெண்ணின் கருமுட்டையோடு கருக்கட்டும் போது குழந்தை உருவாகிறது. பெண் கர்ப்பிணியாகிறாள்.

விதைகள் கீழ்முகமாக இறங்குவதேன்?

உடல் வெப்பநிலை கூடுதலாக இருப்பதனால் அந்த வெப்பநிலையில் விந்துகள் தயாரிக்க இயலாது. அதன் காரணம் அவை சற்று இறங்கித் தொங்க வேண்டியுள்ளன. அப்பொழுது ஓரளவு குளிர்ச்சியாக இருக்கின்றன. விந்து உருவாகின்றன. குளிர்காலங்களிலும் பயந்து நடுங்கும் போதும் விதைகள் உடலை நோக்கிச் சரிகின்றன. சூழல் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் உடல் வெப்பநிலை அதிகரித்து சுகவீனம் உற்று இருக்கும் போதும் வெந்நீரில் குளித்து இருக்கும் போதும் விதைகள் உடலிலிருந்து விலகித் தொங்கும். அவற்றைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவே இவ்வாறு ஏற்படுகிறது.

ஒருவன் காய்ச்சலாய் இருக்கும்போது தற்காலிகமாக விந்தற்றவர்கள் ஆகிவிடுவர். அந்நேரங்களில் பெண்களைக் கர்ப்பிணிகளாக்க முடியாதிருப்பர். இதனை நன்கு அறிந்த பழங்குடியினர் பாலுறவு வைத்துக் கொள்ளுமுன் விதைகளை சுடுநீரில் நீண்ட நேரம் ஊறவிடுவர். இதனால் கர்ப்பம் தரிப்பது தடைப்படும்.

ஏன் ஒரு விதை மற்றதைக் காட்டிலும் கீழ்முகமாகத் தொங்குகிறது?

இதற்குக் காரணம் இடப்பிரச்சினையே. இரண்டும் இரண்டு கால்களுக்கு இடைப்பட்ட இடத்தைப் பங்கு போடும்போது பாதுகாப்புக்கருதி ஒரே வரிசையில் இராது சற்று மேலும் கீழுமாக அமைந்து உள்ளன. இதனால் ஒன்றோடொன்று மோதிக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.

ஆண்குறி பலமுறை புடைத்து எழ ஆரம்பிப்பது எப்போது?

புடைத்து எழுவது முள்ளந் தண்டின் கீழ்ப்பகுதியிலுள்ள நரம்புத் தொகுதி செய்திகளை அனுப்ப ஆண்குறியிலுள்ள இரத்தக் கொள்கலன்களில் இரத்தம் வேகமாக உந்தப்படுகிறது. இரத்தம் நிரம்பியதும் ஆண்குறிக்கு கீழே உள்ள தசைகள் இறுக்கம் அடைகின்றன. இதனால் மேலதிக இரத்தம் திரும்பிப் போகின்றது. இரத்தம் நிரம்பி விடுவதால் ஆண்குறி பெரிதாகி புடைத்து எழுகின்றது. உடலுக்கு வெளிப்புறமாக புடைத்து எழுந்து நிற்கின்றது. செங்குத்திற்கு மேலாக நிற்கும். அதே சமயம் சற்று கருமை நிறத்தையும் அடைகின்றது.

பலவிதமான தூண்டுதல்களும் கூட புடைத்தெழச் செய்கின்றன. கால்சட்டையோடு ஆண்குறி உராயும் போதும், பாலியல் எண்ணங்கள் ஏற்படும் போதும் புடைத்தெழுகிறது.

காரணம் எதுவுமின்றியும் புடைத்தெழுகிறது

இது திடீர் புடை எழுதலாகும். இயற்கை முன்கூட்டியே பயிற்சி ஒன்றை அளிக்கிறது. உங்களுக்கு பயங்கரமான அனுபவம் உண்டாகிறது. நேரம் கெட்ட நேரத்திலும் ஏற்படுகிறது. உங்களுக்கு பாலியல் வெறி ஏற்பட்டு விட்டதோ என்று பயப்பட வேண்டாம். இப்படியான புடைத்து எழுவதனால் எவ்வித தீமைக்கும் இடம் இல்லை. உங்களுக்கு புடைத்து நிற்கும் நிலை ஏற்படவில்லை என்று கற்பனை செய்து பாருங்கள்.

இத்தகைய திடீர் புடைப்புகள் ஏற்படும் போது பையன்கள்தான் சங்கடப்படுகின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் புடைத்து எழுவதைப் பற்றிப் பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது. துருவித் துருவிப் பார்க்கின்ற பெண்களுக்குக் கூட இது பற்றித் தெரியாது.



பருவமானவர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:42 pm

பையன்களுக்கு எப்போது திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது?

சுமார் பதின் மூன்று வயதாயுள்ளபோது அதாவது விதைகள் வளர்ச்சியுறத் தொடங்கும் போது பையன்களுக்கு பெண்களை விட வேறுபட்டு இத்திடீர் வளர்ச்சி ஏற்படுகிறது. பையன்கள் மிகவும் உயரமாக வளர்ந்து விடுகிறார்கள். ஆண்களின் உடல்கள் பெண்களைக் காட்டிலும் வளர்ச்சி ஓமோன்களைச் சுரக்கின்றன. ஆண்களுக்கான ஓமோன்கள் மற்றைய மாற்றங்களுக்குத் தேவைப்படுகின்றன. வளர்ச்சி ஓமோன்கள் பையன்களின் தோள்களை அகலப்படுத்தி தொண்டைக்கருகிலுள்ள சுவாசக் குழாயையும் விசாலப்படுத்தி குரலைக் கடுமையாக்குகிறது. தசைகளை வளரச் செய்து, முகத்தில் உரோமத்தை வளர்க்கிறது. பையன் வளர்ந்து மனிதனாக மாறிவிடுகிறான். இந்தத் திடீர் வளர்ச்சியின் போது முகத்தில் மூக்கு பெரிதாக வளர்கிறது. உடல் மெலிந்து விடுகிறது. கால்களும் பெருத்து விடுகின்றன. கவலைப்பட வேண்டாம். மற்றைய அவையங்களும் கால கதியில் வளர்ச்சியுறும். ஒரே நேரத்தில் அனைத்தும் ஏற்படுவது எந்திரங்களுக்கு மட்டுமே. இயற்கை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து முடிப்பதில்லை. இந்தத் திடீர் வளர்ச்சியின் போது ஒன்றை அவதானித்திருப்பீர்கள். உங்களுக்கு சற்று கூடுதலான நித்திரை தேவைப்படும். பாடசாலைக்குப் போக வேண்டாத நாட்களிலும் பாடசாலையிலிருந்து திரும்பி வந்ததும் உறங்க வேண்டும் போலவிருக்கும். ஏனெனில் வளர்ச்சி ஓமோன்கள் உறங்கும் நேரத்தில் தான் கூடுதலாகச் செயல்படுகின்றன.

உங்களுக்குப் பயங்கரமான உணவுப் பிரியம் ஏற்பட்டிருப்பதை உங்கள் தாயார் குறிப்பிடுவார். சிறுவயதைவிடவும் இப்போது புதியதும் நிறமானதுமான காய்கறிகளை விரும்புவதைக் காணலாம். ஏனெனில் நீங்கள் தற்போது வளர்ந்துள்ளீர்கள். உங்கள் உடல் காய்கறிகளிலுள்ள இயற்கையான நச்சுத்தன்மையை நடுநிலைமை ஆக்கக் கூடியனவாகி விட்டது. காய்கறிகளும் உயிருள்ளவையே. தம்மை மற்றவர்கள் விரும்பி உண்பதை அவை விரும்புவதில்லை. அதனால் அவை நச்சுப் பொருள்களை உருவாக்கி விரும்பி உண்ணவிடாது செய்கின்றன. இதனால் சிறு பிள்ளைகள் அவற்றை விரும்புவதில்லை.

உடல் வளர்ச்சிக்குக் காரணமான அதே ஓமோன்கள் தான் வளர்ச்சிக்கும் முற்றுவைக்கின்றன. முடிவு என்றால் என்புகள் பூரண வளர்ச்சியை அடைந்து விட்டன. மேலும் நீண்டு விட இடமில்லை. பீங்கான்கள் எரிய10ட்டிய பிறகு மேற்கொண்டு வளராது உள்ளதுபோன்றே தான் உடல் வளர்ச்சியும் என்புகளின் வளர்ச்சியும் முற்றுப் பெறுகிறது. இறுதியான உருவத்தை அடைந்து விடுகின்றன.

அநேக உருவொத்த காகிதங்களைக் கொண்டு பந்து போன்ற உருவங்களைச் செய்வதாகக் கொள்வோம். உருவம் அமைக்கும் போது முதலில் பந்தை விரிவாக்கி நடுமையப்பகுதியை அடைகிறோம். அதே உருவத்தை அடைய பந்து சுருங்கிக் கொண்டே வந்து மறுமுனையில் முடிவுற்று வட்டவடிவமாகிறது. இதே போன்று இயற்கையும் அப்படியே செயல்படுகிறது. அதே ஓமோன் இரண்டு மாறுபட்ட காரியங்களைச் செய்கிறது. மாற்றம் முன்கூட்டியே ஏற்படும். பையன்களுக்கு முன் கூட்டியே முடிவுறுகின்றது. அது போலவே காலம் தாழ்ந்து ஆரம்பிப்பவர்களுக்கு மெதுவாகவே வளர்ச்சி ஏற்பட்டு காலம் தாழ்த்தியே முடிவுறுகிறது. ஆகவே பெண்களுக்குப் பிறகே ஆண்கள் தமக்கு வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்று நினைப்பது சரியான முடிவு அல்ல.

அடுத்த கட்டம் என்ன?

விரைவான வளர்ச்சியின் அடுத்த கட்டம் ஆண்குறி சற்று பெருத்து விரிவடைகிறது. விதைகள் பெருக்கின்றன. ஆண்குறியின் தோலும் விதைப்பையும் கருநிறம் அடைய ஆரம்பிக்கின்றன.

இது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு ஆகும். ஆனால், வைத்தியர்கள் இதனைக் கட்டங்கள் என்பார்கள். ஏனெனில் அவர்கள் விரைவாக பையன் பருவம் ஆன நிலையை அறிந்து கொள்ள இயலும். பருவம் ஆவதை வயதெனக் குறிப்பிடலாம். பருவம் ஆனதென்று கொள்ள விரும்புகின்றனர். ஏனெனில் எல்லாப் பையன்களும் ஒரே வயதில் பருவம் ஆவதில்லை.

அதன் பின்பு

ஒரு சுவாரஸ்யமான மாறுதல். நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகள் கூட சிறிதளவு பெண்களுக்கான ஓமோனான எஸ்ரோஜன் என்பதைச் சுரக்கின்றார்கள். இந்த ஓமோன் செய்வது என்னவென்றால், ஆண் பிள்ளைகளுக்கும் முலைக்காம்புகள் மலர்கின்றன. சிலவேளைகளில் வளர்ச்சி உறுவதும் அவ்விடம் சற்று வீங்கி இருப்பதும் ஆகும். சில ஆண் பிள்ளைகளுக்கு ஒன்று மட்டுமே தோற்றம் அளிக்கும்.

சில பையன்களுக்கு இந்நிலைமை ஏற்படுவதே இல்லை. ஏனெனில், அது தேவையற்றது. கூர்ப்பு முறையில்: ஆனால் கூர்ப்பு என்பது எது தேவை என்று தீர்மானிப்பதில்லை. எந்த உருவம் எளிதாக அமையக் கூடியதோ அதனைச் செய்கிறது. ஆண் பிள்ளையையும் பெண் பிள்ளையையும் ஒரே சீராக அமைத்து விட்டு அதன் பின் மாற்றி அமைப்பது சுலபமானது. கைகளையும் கால்களையும் பெருவிரல்களோடு முதலில் அமைத்துவிடுகிறது. ஆனால் அவை அடிப்படையான உருவமைப்பே.

முலைக்காம்புகள் சில மாதங்களுக்கு உறுதிக் கொண்டும் மிருதுவாகவும் இருக்கும். சட்டைகள் அழுந்தும் போது சிறிது நோகிறது. ஆனால், சில காலங்களுக்குப் பின் இல்லாது போகிறது.

இதற்குப் பிறகு

இந்தக் கட்டத்தில்தான் பூப்புமயிர் தோன்றுகிறது. இது ஆண்குறியின் அடிப்பகுதியிலும் விதைப்பையின் மீதும் பூப்பு மயிர் முளைக்கின்றது. இவை முன்பு அங்கிருந்தவை போலவே தோன்றினும் நீண்டும் கறுத்தும் இருக்கும்.

சில ஆண்பிள்ளைகளுக்கு தோற்றம் அளிப்பது பூப்புமயிர்தான். இதனைக் கண்;டதுந்தான் தாம் பருவம் அடைந்து விட்டதாக நினைக்கின்றனர். விதைகள் வளர்ச்சியடைந்த பிறகே பூப்பு மயிர் முளைக்கத் தொடங்குகிறது.

பூப்பு மயிர் முளைத்து ஓராண்டு கழிந்த பிறகே கை அக்கிள் அடி உரோமம் நீளவும் கருமையடையவும் ஆரம்பிக்கும்.

சகல புதிய அவையங்களும் எப்போது செயல்பட ஆரம்பிக்கின்றன?


இந்தக் கட்டத்தில்தான் மாற்றங்கள் துரிதகதியில் நடைபெற ஆரம்பிக்கின்றன. இதே வேளையில் முதல் வெளியேற்றம் இடம்பெறுகிறது. வெளியேற்றம் என்பது விரும்பியே நடைபெறுவது. நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. இது நடைபெறும் ஒன்று. வெளியேற்றத்தை ‘வந்துவிட்டது’ என்பர்.

பாலியல் உறவின் உச்சக் கட்டத்தின் போது ஆண்குறியின் தசைகளின் சுருக்கம் விந்தை ஆண்குறியிலிருந்து வெளியேற்றுகிறது. ஆண்குறியிலிருந்து சிறுநீர்போக்குப் பாதைய10டாக வெளிவருகிறது. இதே வழியாக வெளிவரும் சிறுநீர் வெளிவராமல் வால்வுகள் செயல்பட விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது. இத்தகைய பாலியல் உறவின் உச்சக் கட்டத்தை உறவின் உச்சக் கட்டம் என்பர். இந்த உச்சக்கட்டம் மன எழுச்சி - இன்ப அதிர்ச்சி ஆகியவை ஆண்குறியில் மட்டுமின்றி உடலெங்கும் வியாபித்து விடுகிறது. விந்து வெளியேறியபின் அனைத்தும் முடிந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் இத்தகைய அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. சிலவேளைகளில் உணர்வின் உச்சக் கட்டம் மிகவும் குறைந்ததாகவே இருக்கும்.

இயற்கை குழந்தையை உருவாக்க பெரிய உந்துசக்தியை வழங்கியுள்ளது.



பருவமானவர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:44 pm

விந்து என்றால் என்ன?

விந்து என்பது உங்கள் விதைகளில் தயாரிக்கப்படும் தடித்த வெள்ளை நிறப் பாய்பொருள். இந்தப் பாய்பொருள் விந்துகளை பெண்ணின் கருமுட்டைகளோடு மோதப் பாய்ந்தோடுகின்றன. புறஸ்ரேட் சுரப்பிகள் வழியாக வரும்போது கூடுதலான திரவம் ஆண்குறியை அடையுமுன் சேர்கிறது. விந்துகளுக்கு இந்தத் திரவமெல்லாம் எதற்கு? மீன் அசைந்து இடம்பெயர்ந்து திரிய நீர் தேவை. அதுபோலவே விந்துகளும் திரிய திரவம் தேவைப்படுகிறது. விந்துத் திரவம் வெறும் திரவம் மட்டுமல்ல. பல விதமான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருக்கும். விந்துகளுக்குத் தேவையான ஊட்டச் சத்தை வழங்குகின்றன. ஆண்குழந்தைக்கான விந்து ஒரு நாள் மட்டும் உயிர்வாழும். ஆனால், பெண்குழந்தைக்கான விந்து மூன்று நாட்கள் வரை உயிர் வாழும்.

ஒவ்வொரு விந்து வெளியேற்றத்தின் போதும் எத்தனை விந்துகளை வெளியேற்றுகிறது?

சராசரி 409,000,000. அதாவது நானூறு மில்லியன்; ஆகும். ஒவ்வொரு முறை விந்து வெளியேற்றத்தின் போதும் வெளியாகும் விந்தின் தொகை இந்தியாவின் சனத்தொகையின் பாதியை உருவாக்கப் போதுமானது. விதைகளில் உருவாகும் விந்துகள் முதிர்ச்சி அடைய ஆறு கிழமைக் காலம் எடுக்கும். ஆரோக்கியமான விந்துகளே விந்து வெளியேற்றத்தின் போது வெளிவருகின்றன. நன்கு பழுக்காதவை மரணிக்கின்றன. அவை விந்து வெளியேற்றத்தின் போது வெளிவருவதில்லை. பயனுள்ள விந்துகளை வீணாக்குகிறோம் என்று நாம் கவலைப்படும் போது இயற்கையானது எவ்வளவு விந்துகளை உங்களுக்குத் தந்து உதவுகிறது எனச் சிந்திக்கலாம்.


திடீரென ஏன் விந்து வெளியேற்றம் நடைபெறுகிறது?

முதல் தரம் எப்போதும் ஆச்சரியமானதே.

சில பையன்கள் தாமாகவே தமது விந்தை வெளியேற்ற முயலும் போதும் தமது ஆண்குறியைத் தட்டி எழுப்பும் போதும். அநேக ஆண்பிள்ளைகள் இளைஞராக உள்ளபோதே இவ்வாறு செய்யத் தொடங்கிவிடுகின்றனர். உணர்வின் உச்சக் கட்டத்தில் விந்து வெளிப்படுகிறது.

சில பையன்களுக்கு நித்திரை செய்து கொண்டிருக்கையில் விந்து வெளிப்படுகிறது. இதற்குக் காம வெறியோடு கூடிய கனவு தோன்றும் போது, அக் காம உணர்வில் உச்சக் கட்டம் அடைந்து விந்து வெளிவருகிறது. நித்திரை கலைந்த பின் ஆடையிலோ படுக்கை விரிப்பிலோ விந்து படிந்திருக்கும். இதனை ஈரக்கனவு என்பர்.

முதல் விந்து வெளியேற்றம் பெருமையுடன் கொண்டாடக்கூடிய சம்பவம் என்பதை அறிந்து கொள்ளாத பையன்கள் விரக்தியும் வேதனையும் அடைவார்கள். பாலியல் பற்றிய நல்ல யோசனையை அறியமாட்டார்கள்.


அடுத்த கட்டம் என்ன?


அடுத்த கட்டம் பதின்னாலரை வயதாய் உள்ள போது ஆண்குறி பெரியதாகி அகலுகிறது. அதேநேரம் விதைப்பையும் பெரிதாகிறது. ஆனால் ஆண்குறியும் விதைப் பையும் வளர்ச்சியுற்ற போது போலக் கருநிறம் அடைவதில்லை.

இதே காலக்கட்டத்தில் பூப்புமயிர் கருமையாகும் போது சுருளுகிறது.

உடல் முழுமையான வளர்ச்சி அடைந்தபின் என்ன நடைபெறுகிறது?

முக்கியதொரு திருப்புமுனை இதுதான். இந்நிலையில்தான் வேகத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. இதுவரை மிக மிக வேகமான வளர்ச்சியை அடைகிறீர்கள். இக்கட்டத்தில் திடீர் வளர்ச்சி முடிவுக்கு வருகிறது. உங்கள் சராசரி வயது பதினைந்தரையாகும் போது வளர்ச்சி முற்றுப் பெறுகிறது. அதன் பின்பும் கூட சுமார் இரண்டு அங்குலம் உயர்வீர்கள். இத்துடன் உயரவளர்வது நின்றுவிடுகிறது. ஆனாலும் இது மிகவும் மெதுவாக நடக்கிறது.

மிகுந்து இருப்பது என்ன?

விதை தொடர்ந்து வளரும். இது பதினாறு வயதை அடையும் வரை நடைபெறுகிறது. பெரிதாகிறது. விதைப்பையும் கருமைநிறமாகிறது.

பூப்புமயிர் தடிப்பாகிக்கொண்டே இருக்கும். பதினெட்டாம் பிராயம் வரும் வரை அது தடிப்படைந்து வயிற்றின் கீழப் பகுதி தொப்புள் வரை பரவும் வரை வளர்ச்சி தொடர்ந்து நடைபெறும். சில நேரங்களில் தொடைப் பகுதியிலும் நடைபெறும்.

அநேக பையன்களுக்கு அவர்களின் கால்களிலும், கை அக்கிளிலும், தோள்களிலும் முதுகுகளிலும் தடித்த கருமையான உரோம வளர்ச்சி காணப்படும். ஆசிய நாடுகளில் உள்ள சில இனங்களுக்கு எவ்வித உரோமமும் முளைப்பதிலலை.

பையன்களின் முகங்களில் எப்பொழுது உரோமம் தோன்றத் தொடங்குகிறது?


சராசரி வயது பதின்னான்கைக் கடந்த பிறகே முதலில் மேலுதட்டின் ஓரங்களிலும் பின்பு கன்னப் பகுதியிலும் மீசையின் பிறபகுதியிலும் இறுதியாக நாடிப் பகுதியிலும் வளரத் தொடங்குகிறது.

ஆசிய நாட்டுச் சில இனங்களிடையே முகத்தில் மயிர் வளருவதேயில்லை.

பதினாறு பதினேழு வயதை அடைந்த பிறகும் கூட பருவம் ஆகாவிட்டால் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு இத்தகைய திடீர் வளர்ச்சி காணப்படாவிட்டால் நீங்கள் காலம் தாழ்ந்த நேரசூசிக்கு இடப்பட்டீர்கள் என்று கருதலாம். இதனை உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஓ கதிர் மூலம் என்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராயுங்கள். எடுக்கப்பட்ட ஓ கதிர்ப் படத்தை ஒரு குழந்தை வைத்தியரிடமோ என்பு வைத்தியரிடமோ காட்டுவது நல்லது. எல்லா வைத்தியர்களாலும் என்பு வளர்ச்சியை அடையாளம் காண இயலாது.

நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. பொறுத்திருந்தால் போதும். நீங்கள் கவலைப்படுவதாயின் ஒரு குழந்தை வைத்தியரை அணுகுங்கள். ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறுவது சிறந்தது. உங்களைப் போன்ற பல் பிணியினரைக் கண்டிருப்பார்கள். ஆதலால் ஆச்சரியம் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு தேவையில்லை என்ற போதிலும் சில ஓமோன் மருந்துகளைச் சிபார்சு செய்வார்கள். ஓமோன்களின் செயல்பாடு இதுதான். துரித கதியில் செயல்படவைக்கும். இதனை காணக்கூடியதாய் இருக்கும். எவ்வளவு விரைவாகச் செயல்படத் தொடங்கியதோ அதேபோல விரைவாக நின்று விடும். ஒரு நடவடிக்கையும் எடுக்காமலிருந்தால் தாமாகவே செயல்படத் தொடங்கி செவ்வையாக முற்றுப் பெறும்.



பருவமானவர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:45 pm

பருக்கள் (PIMPLES)

ஏன் பையன்கள் பருவமாகின்றபோது பருக்களைப் பெறுகிறார்கள்?

பருவமாகின்ற போது ஏற்படும் சகல வளர்ச்சிகளுக்கும் காரணமான ஆண்களுக்கான அன்ட்றோஜன் ஓமோனின் பக்கவிளைவேயாகும். அன்ட்றோஜன் ஓமோன் முகத்திலுள்ள நெய்ச் சுரப்பிகளைத் தீவிரமாக செயல்படுத்துகின்ற காரணத்தால் முகம் நொய்த தன்மையாகக் காணப்படுகிறது. பருவமாகின்றபோது அன்ட்றோஜன் ஓமோன் இச்சுரப்பிகளின் அருகிலுள்ள கலங்களின் ஓரங்களை கூடிய வளர்ச்சியடையச் செய்கிறது. இதனால் நெய்ச் சுரப்பிகள் அடைபட ஏதுவாகிறது. இதனால் குருப்பித்து பருக்கள் தோன்றுகின்றன.

இலேசான பருக்கள் குளிர்காலங்களில் பிரச்சினை தருவதில்லை. கோடை காலங்கள் வேகத்துடன் பொங்கிப் பரவுகிறது. தோல் சூடாகவும் நெய்த்தன்மையாகவும் உள்ள போதும் இது ஏற்படுகிறது.

கடுமையான பருக்கள் பாPட்சைகளுக்கு முன்பும், பெரியதான விழாவிற்கு முன்பும், மன அதிர்ச்சியின் போதும் உடல் கூடுதலான அன்ட்றோஜன் ஓமோனைச் சுரக்கிறது. கடும் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படுகிறது. அதனால் இந்த அன்ட்றோஜன் ஓமோன்தான் பருக்கள் ஏற்படக் காரணமாகிறது.

பருக்களை நீக்குவது எப்படி?

பருக்கள் உண்ணும் உணவு காரணமாக ஏற்படாதபடியால், உணவுப் பழக்கங்களை மாற்றுவதால் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சொக்கலெற் உண்பதைத் தவிர்க்க வேண்டியதில்லை.

ஆனால் முகத்திலுள்ள நெய்த்தன்மையைப் போக்க நாளுக்கு இரு முறை கழுவுவது நல்லது. இது அருகிப்போன சுரப்பிவாய்களின் அடைப்பை ஏற்படுத்தக்கூடிய அழுக்கை அகற்றவும் உதவும். இல்லாது போனால் கரும் புள்ளிகள் பருக்களின் மேற்பகுதிகளில் ஏற்படும். குருப்பிக்காத ஆனால் கடுமையான சிறுபருக்கள் உண்டாகும்.

அநேக பருக்குழம்புகளால் எவ்வித பயனுமில்லை. ஏனெனில் நெய்ச் சுரப்பிகள் ஏன் அடைபடுகின்றன. குருப்பிக்கிக்றன என்ற காரணத்தை அறியாதபடியால் செய்யக்கூடியது இதுதான். முகத்திலுள்ள நெய்த் தன்மையை உலர்த்தி காயவைப்பதே. சுரப்பிகள் அடைபட்டு குருப்பிக்கும் தன்மையை அறிந்து நடவடிக்கை எடுப்பதே உகந்தது. அதாவது குருப்பிப்பதை நிறுத்த நுண்ணுயிர் எதிரிகளைப் பாவிப்பதே. இவை நீண்ட கால நிவாரணி. நீண்ட நாட்களுக்கு உபயோகித்தபடி இருத்தல் வேண்டும்.

வைத்தியர்கள் நம்பும் புறத்தோல் நிவாரணி றெரிநோயிக் அமிலம். இது கறட்டிலுள்ள விற்றமின் யு கொண்ட பீரா கறோட்டினிலிருந்து பெறப்படுகிறது. றெரிநோயிக் அமிலம் செய்வது என்னவென்றால் தோலை மீண்டும் விரைவாகத் தோன்றத் செய்து விரவாக உதிர வைப்பது. தோலோடு கூடுதலாக வளர்ச்சியுற்று சுரப்பிகளை அடைக்கும் கலங்களையும் வெளியே தள்ளுகிறது.

இப்படியான சிக்கலான மருந்துகளை வைத்தியர்கள் சிபார்சு செய்கிறார்கள்.



பருவமானவர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:46 pm

மணம் (ODOR)

உடல் மணத்திற்கும் ஓமோனா காரணம்?

உண்மைதான். இது வேண்டுமென்றே செய்யப்படாத பக்க விளைவு அல்ல. பூப்பு உரோமங்களும் அக்கிள் அடி உரோமங்களும் இம்மணங்களை தம்முள் அடக்கிக் கொள்கின்றன. ஏனெனில் அவைதாம் பாலியல் ரீதியில் கவர்ந்து இழுக்கின்றன. எம்மை அறியாமலேயே உடல் மணங்களால் கவரப்படுகின்றோம். எமக்கு உண்மையில் உணர்வு பூர்வமாக இந்தத் தாக்கம் தெரிவதில்லை. உடல் மணத்தால் தான் விலங்குகள் மற்றைய பால் செழுமையாகவும் புணர்ச்சிக்கு தயார் நிலையிலுள்ளது என்பதையும் அறிந்து கொள்கின்றன. மானிட இனத்தைக் காட்டிலும் விலங்குகள் உடல் மணத்தால் தாக்கத்திற்கு ஆளாகின்றன. ஆகவே உடல் மணம் முதல் இடம் வகிக்கிறது.

உடல் மணத்தைப் போக்கிவிட விரும்பினால்?

முதலாவதாக தினமும் குளித்து கைகளை நன்றாகச் சுரண்டுங்கள். கேவலமான உடல் மணம் இருக்குமிடங்கள் என்பன துர்நாற்றம் அடைந்த அக்குள் அடிவியர்வையும் தூய்மை செய்யப்படாத புற இனவிருத்தி உறுப்புக்களுந்தான் காரணமாகும்.

மனிதர்கள் விலங்குகள் போலின்றி எந்நேரமும் புணர்ச்சிக்குத் தயார் நிலையில் இருக்கிறார்கள். உடல் மணம் எப்பொழுதும் ஒரே நிலையாகவே இருக்கும். ஆண்கள் பாலியல் உறவுக்கு எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளார்கள் என்பதை பெண்களுக்கு ஆண்களின் உடல் மணம் காட்டிவிடும். இம்மணம் கோலோனை விட கூடிய சக்தி வாய்ந்தது. சில ஆண்களின் கோலோனில் கஸ்தூரி மணம் கலந்திருக்கும். கஸ்தூரி மான் இனத்தில் பாலியல் உறவைத் தூண்டும் மணமாகும். இந்த இரு ஆணின் மணங்களும் ஓரளவு ஒத்திருப்பதேன் என்று யோசித்துப் பார்க்கவில்லையா?

கை அக்கிள் பகுதி துர்நாற்றத்தைப் போக்க மணம் போக்கிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. தெளிப்பான்களைப் பயன்படுத்துவது சிறந்தது.தெளிப்பான்களைப் பயன்படுத்துவீர்கள் ஆயின் ஓசோன் படலத்தின் தடிப்பைக் குறைத்து விட்ட குற்றத்திற்கு ஆளாவீர்கள். இவை வெறும் மணம் நீக்கிகளே அல்லது வியர்வை வெளிவருவதைத் தடுப்பவை. ஏனெனில் வியர்வைதான் துர்நாற்றத்திற்குக் காரணம். முகத்திற்குப் பூசும் மாவையோ அல்லது வெறெந்த மாவையோ பயன்படுத்தலாகாது. இவை வியர்வை நாளங்களை அடைத்துவிடும். வேனிற் கட்டியையோ அல்லது கொப்பளங்களையோ மட்டுமே ஏற்படுத்தும்.

தாய்ப்பாலுக்கும் வியர்வைக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? கோடை காலங்களில் தாய்ப்பாலில் நீர்த்தன்மை கூடுதலாக இருக்கும். இதனால் குழந்தையின் தாகம் தணிகிறது. அதனால் மேலதிக நீர் குழந்தைக்கு ஊட்டவேண்டிய தேவை இல்லை. பிரமாண்டமான வியர்வைச் சுரப்பி பற்றிக் கற்பனை செய்து பாருங்கள்.

பூப்பு ரோமப் பகுதி வழி வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க நெய்ச்சுரப்பியிலிருந்து வெளிவந்து படியும் வெண்படலத்தை நன்கு கழுவிவிடவேண்டும். ஆண்களுக்கு ஈஸ்வரைப் போன்ற உடல் மணம் இருக்கிறது.



பருவமானவர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:47 pm

ஆண்களின் குரல் (VOICE - MALE)

ஆண்களின் குரல் பருவமாகையில் ஏன் முரடாகிறது?

பருவம் ஆனதும் ஆண்பிள்ளைகளின் குரல்வளை (ஒலிப்பெட்டி) பெருக்க ஆரம்பிக்கிறது. அதன் ஒலி இழைகள் நீண்டு தடிப்பாகிறது.

ஒரு கிற்றாறையும் சிறிய வயலினையும் கவனியுங்கள். கிற்றாறின் நரம்புகள் வயலினைவிட தடித்திருக்கும். நீண்டும் இருக்கும். ஒலிப்பெட்டியும் பெரிதாய் இருக்கும். இப்பெட்டி ஒலியைப் பெரிதாக்கும். கிற்றார் தரும் ஓசை பெரியதாயும், வயலின் ஓசை சிறியதாயும் இருக்கும். வயலின் வெளிப்படுத்தும் பெரிய ஓசைகள் சரியாக அமைவதில்லை. இது போன்றதே பருவமான ஆண்களின் குரலும்.

எப்படி ஆண்களின் குரல் சிதறுண்டு போகிறது?

மனிதனைப் போன்று பையனின் குரல் கரடுமுரடாகும்போது சங்கீத சுருதியை மீறுகின்றது. பையனுக்கு இரண்டு குரல்கள் தாம் உண்டு. ஒன்று அவனுடைய இளம் பிள்ளைக்குரல் மற்றது பருவமானகுரல்.

ஆகவே குரலில் பெரிய மாற்றம் ஏற்படுகையில் அவன் தனது குழந்தைக்குரலில் முதலில் பேசுவான். பேசிய படி இருக்கும் போது குரல் முரட்டுத்தன்மை அடைய ஆரம்பிக்கிறது. குரல் முழுமையாக மாறுதல் அடைந்து விட்டபின் வயது வந்தவரின் குரல் வந்துவிடுகிறது. குழந்தையின் குரல் கடும் குரலாக மாறிவிடுகிறது. அவனுக்கு பழைய குரல் திரும்பிவராது.

சில பையன்களுக்கு இந்த மாற்றம் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. பெண்ணொருத்தியை இதைப் பற்றிக் கேட்டால் ஒன்றும் தெளிவாக விளக்கக் கூடியதாக இருக்க மாட்டாள். அதே மாதிரி ஒலிக்கவும் முடியாது. ஏதோ நடந்துவிட்டது என்று மட்டுமே கூறமுடியும். எப்படிப் பேசினார்கள் என்பதில் பெண்கள் கவனம் செலுத்தவில்லை.



பருவமானவர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:48 pm

விருத்த சேதனம் செய்தல் (CIRCUMCISION)

இனவிருத்திப் புற உறுப்பின் முன்தோலை அகற்றுதல்

சாதாரண மொழியில் வட்டமாக வெட்டப்படுதல் எனச் சொல்லலாம். அல்லது சுன்னத்துச் செய்தல் என்றும் குறிப்பிடலாம். அதாவது ஆண்குறியின் மேல் பாகத்தை மறைத்துக் கொண்டிருக்கும் தோல். இது உணர்ச்சி மயமான உள்ளே இருக்கும் பாகத்தை மறைத்துக் கொண்டிருக்கும்.

ஆண்குறியின் முன்தோலை அகற்றுவது எதற்காக?

அநேகமாக சமயச் சடங்காக இத்தோல் அகற்றப்படுகிறது. வைத்திய காரணங்களுக்காக பருவமானவர்களுக்கு ஆண்குறி புடைத்து எழும் போது இறுக்கமாகவும் வலியுடனும் இருப்பினும் முன்தோலை அகற்றி விடுவதுண்டு.

தற்காலத்தில் பிறந்த குழந்தைக்கும் சிறுவயதுப் பையன்களுக்கும் மயக்க மருந்து செலுத்தி இந்தச் சத்திர சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் காரணமாக வலி தோன்றுவதில்லை. சில நாடுகளில் மின் செலுத்தப்பட்ட ஊசிகளைப் பயன்படுத்தி வெட்டப்படுகிறது. இதனால் இரத்த வெளியேற்றம் உடன் நின்று போகிறது. குதம்பிவிடுவது தவிர்க்கப்படுகிறது.

அடிப்படை நோக்கம் இந்தச் சத்திரசிகிச்சை செய்துகொள்வது ஆண்குறியை சுத்தமாக வைத்திருக்கவல்ல. பருவமான இளைஞன் இந்த சத்திர சிகிச்சை செய்துகொள்ளும் போது நோவைத் தாங்கிக் கொள்கிறானா என்பதனை அறிந்து கொள்ளவே. அநேக ஆப்பிரிக்க நாடுகளில் இது செய்யப்படுகிறது.

இந்தச் சத்திரசிகிச்சை செய்துகொள்வதனால் ஏதாவது செயல்முறையில் நன்மை இருக்கிறதா?

ஒன்று, தானாகவே ஆண்குறியைச் சுத்தமாக வைத்திருக்கும். இச்சத்திர சிகிச்சை செய்திருக்காத பட்சத்தில் முன்தோலைப் பின்புறம் இழுத்து குளிக்கும் போதெல்லாம் சுத்தம் செய்ய வேண்டும். சில ஆராய்சியாளர் கண்டு பிடித்திருக்கிறார்கள். சத்திர சிகிச்சை செய்து நீக்கப்படாவிட்டால் முன் தோலின் உள்ளே AIDS நோயை உண்டுபண்ணும் HIV வைரஸ் ஒழிந்திருக்கும்.

ஆனால் அதிசயம் என்னவென்றால் வேறொரு பிரயோசனமுமில்லை. ஆண் குறி புடைத்தெழுந்து நின்றால் முன்தோல் அகற்றப்பட்டதா இல்லையா என்ற வேறுபாடேயில்லை.



பருவமானவர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:49 pm

ஆண்குறி (PENIS)

புடைத்து நிற்கும் போது ஆண்குறியின் அளவு எவ்வாறிருக்கும்?

ஒவ்வொருவர் தரும் கணிப்பும் வேறுபட்டு இருக்கிறது. ஆனால் ஒன்று சுவாரஸ்யமான தகவல். புடைத்து நிற்கும்போதும் சாதாரண நிலையில் இருக்கும் போதும் ஆண்குறியின் பரிமாணம் ஓரளவானதே. சிறிய ஆண்குறிகள் புடைத்து நிற்கும் போது பெரியதாகத் தோன்றும்.

இந்த ஆண்குறியின் அளவு சம்பந்தான ஈடுபாடு வேதனையைத் தரும் போட்டி உணர்வில் முடியும். மற்றவைபோன்று ஆண்குறியின் அளவினை மாற்றி அமைக்கவே முடியாது. பையன்கள் ஒவ்வொரு முறையும் மேலும் சிறப்பாகச் செய்ய விரும்பி முயன்றால் ஏமாற்றமாகவே முடியும்.

பெண்கள் உண்மையில் இதனைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். பெண்களின் மார்பகங்களின் அளவினைப் பற்றி ஆண்கள் பேசிக்கொள்வதை அறிந்திருக்கிறார்கள். பெண்கள் ஆண்களைப் புண்படுத்தும்படியான கருத்துக்களை வெளிப்படுத்திய போதிலும் ஆண்குறியின் அளவுக்காக தாம் காதலித்த வாலிபனைக் கைவிடுவதில்லை. சில பெண்கள் பெருத்திருக்கும் ஆண்குறியைப் பற்றிப் புளுகித் திரிவதுண்டு.

ஆண்குறியின் அளவுக்காக வேதனைப்படுவீர்களாயின் இதனைத் தெரிந்துகொள்ளுங்கள். சில இன பாம்புகளுக்கு இரண்டு ஆண்குறிகள் இருக்கும். இது பெண்களை மிக நெருக்கத்தில் கொண்டுவர உதவும்.

ஆண்குறி நேராக இருக்கவேண்டுமா?

இல்லை. பொதுவாக அவை நேராக இருப்பதில்லை. சில இடது புறமாகவோ வலது புறமாகவோ சரிந்திருக்கும். சில முனையில் மேற்புறமாக வளைந்துள்ளன. இப்படியும் அப்படியுமாகச் சரிந்து இல்லாதிருப்பின் கவலைப்படத் தேவையில்லை.

ஆண்குறியினை பெரிதாக்க விரும்பினால்...

நீங்கள் இதில் தீவிரமாய் இருப்பின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்து கொள்ளலாம். இதனால் அநேக சிரமங்களுக்கு உள்ளாக நேரிடும். ஆண்குறி தற்போது ஒரு பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருள் போலத்தான் இருக்கும்.

ஆண்களுக்கான கருத்தடை உறை தயாரிப்பு நிலையம் இப்படியான விளம்பரத்தைச் செய்துள்ளது. இந்த உறை உங்கள் ஆண்குறியை ஆயிரத்தில் ஒரு பகுதி நீட்டக்கூடியது.



பருவமானவர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:50 pm

ஹிஜ்றாக்கள்! (HIJRAS)

ஹிஜ்றா என்றால் சரியாக என்ன?

விதைகள் அகற்றப்பட்டவர். விதைகள் நீக்கப்பட்டுள்ள பையன். வேறு விதமாக விதைகள் இரண்டும் வெட்டப்பட்டுவிட்டன. இதனால் ஆண்களுக்கான ஓமோன் வழங்கும் நடவடிக்கை நின்றுவிடுகிறது. இதன் காரணமாக வளர்ச்சியுற்று மனிதனாக மாறும் சகல நடவடிக்கைகளும் நின்றுவிடுகிறது. இந்தியாவில் ஆண்குறிகள் கூட வெட்டப்பட்டு விடுகின்றன. பாதிப்புக்கு உள்ளாவோர் அனைவரும் தாமாகவே விரும்பி செய்து கொள்ள முன்வருபவர்களே. இந்த சத்திரசிகிச்சை செய்து கொண்டவர்கள் தம்மைப் போன்றோருடனே சேர்ந்து இருக்க விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் மீண்டும் தமது வீடுகளில் சகஜமான வாழ்க்கை நடத்த இயலாத நிலையை அடைந்துவிட்டார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார்கள்.

இத்தகையோருக்குத் தாடி வளருவதில்லை. வழுக்கையும் ஏற்படுவதில்லை. ஏனெனில் தாடி வளருவதும் வழுக்கை விழுவதும் அன்ட்றோஜன் என்னும் ஆண்களுக்குரிய ஓமோனால் தான் ஏற்படுகிறது. அன்ட்றோஜன் விதைகளில் தயாராகிறது. ஆனாலும் கூட இவர்கள் உயரமாக வளர்ந்திருப்பார்கள். சிறுவயதில் விதைகள் அகற்றப்பட்டிருந்தால் அதுவும் பருவமாவதற்கு முன்பு இவர்கள் பல காலங்களுக்கு உயர்ந்தபடியே இருப்பார்கள். மத்திய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பையன்களுக்கு இத்தகைய சத்திரசிகிச்சை செய்வித்து வைப்பார்கள். ஏனெனில் இந்தப் பையன்களின் இனிய குரல் மாறுபட்டுப் போகாமல் தொடர்ந்தும் வழிபாட்டின் போது தேவாலயத்தில் பாட வேண்டும் என்பதற்காக.

எல்லா ஹிஜ்றாக்களும் விதைகள் அகற்றப்பட்டவர்கள் அல்ல. சிலர் அலிகள். அதாவது இரு பாலினத்திற்கும் உரிய பண்புகளைக் கொண்டவர்கள். ஒரு பெண்ணின் புறபாலியல் உறுப்பு உள்ள இடத்தில் ஆண்களுக்கு மட்டும் உரித்தான ஆண்குறியின் முனை தென்படுகிறது. அதுபோலவே ஆண்களுக்கும் புறபாலியல் உறுப்புகள் பெண்களுக்கு மட்டும் உரியதாக உள்ளதன் ஒருபகுதி காணப்படுகிறது. சில புத்தகங்களில் காணப்படுகிறது. வெளிப்புறத்தில் ஆண் உறுப்பும் உட்புறத்தில் கருப்பையும் சூலகங்களும் இருக்குமாம். ஆண் பெண் இரண்டினையும் கொண்டிருக்கும்.



பருவமானவர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2010 11:51 pm

பாலியல் உந்தல் (SEX DRIVE)

பருவமானவுடன் திடீர் என பாலியல் விருப்பு ஏன் ஏற்படுகிறது?

ஓமோன்கள் குறிப்பாக அன்ட்றோஜன் என்கின்ற ஆண்களுக்கான ஓமோன் ஆண் பெண் இருபாலாருக்கும் உண்டு. அன்ட்றோஜன் தான் பாலியல் உந்துதலை ஏற்படுத்துகிறது. பாலியல் உறவு கொள்ளத் தூண்டுகிறது. பாலியல் உந்துதல் இல்லாவிட்டால் பாலியல் உறுப்புகள் எல்லாம் ஒரு பயனுமற்றுப் போகும். இனமே இல்லாது போகும். எமது உயிர் அங்கிகளின் நோக்கம் இதுவல்லவே.

இதனைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பீர்களாயின் பாலியல் விருப்பேயற்ற குழந்தைகள் பருவம் ஆன பிறகு கூட பல வாரங்களுக்கு பாலியல் சிந்தனை அற்று இருப்பர். அதன் பின்னர் எப்பொழுதும் பாலியல் சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள்.

வயது வந்தவர்களுக்கும் செயற்கை அன்ட்றோஜன் செலுத்தப்பட்டால் பருவமானவர்களைப் போலவே பாலியல் உந்தல் பெறுவார்கள். வயது வந்தவர்கள் பாலியல் உந்துதல் குறைவாக இருப்பதற்குக் காரணம் பரம்பரை அலகு (ஜீன்ஸ்) அவர்களுக்கு ஒத்துவருவதில்லை. குழந்தைகளைப் பெற்று எடுக்க வேண்டுமென்ற ஆர்வமும் இல்லை.

ஏன் பருவமானவர்கள் உடனடியாக பாலியல் உறவு கொள்வதில்லை?

சிலர் ஈடுபடுகிறார்கள். அநேகம் பேர் அப்படியில்லை. ஏனெனில் இது அவ்வளவு சுலபமானதல்ல. மனிதக் குழந்தைகள் நிலையான குடும்பங்களில் தாய் தந்தையர் அரவணைப்பில் வாழ்கிறார்கள். பாலியல் உறவுகொள்ள பெண்ணிற்கும் பையனுக்கும் இடையே நெருக்கம் கூடுதலாக இருத்தல் வேண்டும். குழந்தை பிறக்குமுன்னும் பின்னும் பெண்தானே குழந்தையோடு கூடிய அளவு ஈடுபாடு கொண்டிருப்பதனால் பெண்கள் கூடிய நெருக்கமான உறவுகள் ஏற்படுவதை விரும்புகின்றனர்;. பையன்கள் பாலியல் உறவை வெறும் ஒரு சம்பவமாகவே கருதுகின்றனர். பெண்கள் ஏன் இதில் கூடுதலான தயக்கம் காட்டுகிறர்கள் என்பது ஆண்பிள்ளைகளுக்கு விளங்கவில்லை. (இதே ஆண்கள் தான் பெண்கள் உடன் சம்மதத்தைத் தெரிவித்தால் மிகவும் மலிவானவர்கள் என்றும் கருத்து வெளியிடுகிறார்கள்) இத்தகைய ஆண்களின் அணுகுமுறையைப் பெண்கள் எதிர்க்கிறார்கள. சும்மா பார்த்து ரசிப்போம் என்ற பாணியில் நடக்கிறார்கள். பொறுப்பெதுவும் கட்டுப்பாடு எதுவுமற்ற பாலியல் உறவை விரும்புகிறார்கள். திருமணம் செய்வது பற்றிச் சந்தேகம் கொள்ளுகிறார்கள். (திருமணம் முறிவில் முடிவுற்றுவிடுமோ என்று கருதுகிறார்கள்) சில பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்து கணவன்மார்கள் இன்றியே வளர்த்தெடுக்கிறார்கள்.

பாலியல் உறவுகொள்ள தயார் நிலை அடையாத பருவமானவர்கள் செய்வதென்ன?

உண்மையில் கூடிய நேரத்தை விரக்தியிலும் எட்டாக் கற்பனையிலும் செலவிடுகின்றனர். இது தீமையானது அல்ல. ஏனெனில் பாலியல் உறவு பற்றி அநேக கற்பனை எண்ணங்கள் தோன்றுகின்றன. இதனைப் பற்றி அநேக புத்தகங்கள் பலவற்றைத் தருகின்றன. பெண்கள் அநேக ஆபாசப் புத்தகங்களைப் படிக்கின்றார்கள். பருவமானவர்கள் செய்கின்ற மற்ற நடவடிக்கை தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதாகும். இதனால் பாலியல் வெறி ஓரளவுக்குத் தணிகிறது. தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதால் உள்ள சில நன்மைகள்.

- வேறு ஒருவரும் தேவைப்படாது. எல்லாம் நீங்களே!
- யாருமே கருப்பம் தரிக்கமாட்டார்கள்.
- யாருக்கும் எந்த நோயும் தொற்றிக்கொள்ளாது.
- உங்கள் உடலைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.



பருவமானவர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக