புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள் நின்று உடற்றும் பசி.......
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உள் நின்று உடற்றும் பசி.......
”கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்”
இவர்களைத் தொடர்ந்து வாடிய பயிரைக் கண்டு இம்மருத்துவத்தை இடைவிடாது செய்தவர் புரட்சித்துறவி அருட்பிரகாச வள்ளலார்.
”கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்”
ஏதோ வைவது போல இருக்கிறதா? ஆம் நாகைக்காத்தான் சத்திரத்தில் சூரியன் மறையும் நேரத்தில் வழிப்போக்கர்க்களுக்கு சோறு ஆக்குவதற்கு அரிசி வரும். அதனைக் குத்தி உலையில் இடும்போதே நடுச்சாமம் ஆகிவிடும். சாமத்தில்
யார் விழித்திருபார்? ஊர் அடங்கி விடும். உண்பதற்காகச் சோற்றை
அள்ளி இலையில் வைக்க விடிந்தே போகும். இது தானே இதன் பொருள். இது இன்றைய மூன்று, நான்கு, ஐந்து நட்சத்திர உணவகங்களின் நடைமுறை.
ஆர்டர் செய்து விட்டு ஒரு ஊருக்குச் சென்று திரும்பி வந்தாலும் நாம் ஆர்டர் செய்தது வந்திருக்காது. (காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி).
காளமெகம் கூறுவது, பஞ்ச காலத்தில் வழிப்போக்கர்களுக்கான இரவு உணவுக்கு மலையி அரிசிவரும். அரிசியைக் கொதிக்கும் உலையில் இடப் பசியால் கொதித்துக்கொண்டிருக்கிற, தங்கள் வயிறு உலை அடங்கி விடும்.என்று மகிழ்ந்து மக்கள் அமைதியடைவர். உண்பதற்காக ஓர் அகப்பைச் சோற்றை அள்ளி இலையில் இட, சோற்றின் வெள்ளை நிறத்தைக் கண்டு வெட்கப்பட்டு வெள்ளி (மின்னும் நட்சத்திரம்) ஓடிப்போகுமாம்.
மருத்துவத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது இடையில் எங்கு கவி காள மேகம் வந்தார் என்று சிந்திக்கிறீர்களா? அந்தக் காலத்தில் அசோகர் சாலையோரத்தில் நிழல் தரும் மரங்களை நட்டார். குளங்களை வெட்டினார் என்று வரலாற்றுப் பாடம் படித்துள்ளோம். அதே போல ஆங்காங்கு அன்னச் சத்திரங்கள் அமைத்து உணவும் வழங்கி வந்தனர் என்றும் படித்துள்ளோமே, அதனையும் நினைவு படுத்துவதற்குத்தான் இப்பாடல்.
தொடர்ந்து அதிகமாக உண்பதையும் அதனால் ஏற்படும் ஒபிசிடி நோயையும் பார்த்துக் கொண்டிருந்தால் பசியினால் விளையும் நோயைப் பார்க்க வேண்டாமா? ஆம், பசியினால் என்ன நோய் வரப்போகிறது? ஒன்றும்
இல்லை. தலை சுற்றல், மயக்கம், வயிற்று உபாதை, வாயுத்தொல்லை, கடைசியில் முகப்பொலிவு இழந்து, கண்கள் மங்கி, உடல் தளர்ந்து உயிர் போகும். அவ்வளவுதான்.
’மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்பார் உலகப்புகழ் மருத்துவர் திருவள்ளுவர். உடல் நோய், உள நோய் எல்லாவற்றுக்கும் மருந்து
கண்ட தெய்வப் புலவர் ஆயிற்றே. ‘நாம் உண்ணும் உணவில் ஆற்றலுக்கு உதவும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவும்
புரதச்சத்துக்கள், வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்துக்கள், மணிச்சத்து எனப்படும் மினரல்ஸ், நீர்ச்சத்து ஆகியவை அவரவர் பால் பகுப்பு, (ஆண்/பெண்) வயது, உடல் உழைப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு இருத்தல் அவசியம். இது மிகாமலும் குறையாமலும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு சத்து குறைவதாலும் ஒரு நோய் வரும். ஒட்டு மொத்தமாக பசித்து இருந்தால்.... எல்லா சத்துக்கும் குறைபாடு. இக்குறைபாடுகளால் ஏற்படும் நோய்க்குப் பெயர் பசிப்பிணி. உடலின் உள்ளே இருந்து வருத்துவதால் ‘உள் நின்று உடற்றும் பசி’ என்றும், உயிரையே அழித்து விடுவதால் ‘அழிபசி’ என்றும் மிகப் பொருத்தமாகப் பெயர் சூட்டுவார் தெய்வப்புலவர்.
பசிப்பிணி மருத்துவர் மணிமேகலையைப் பற்றி அறியாதவர் இருக்க முடியாது. அவர்களிடம் இக்கால மருத்துவர்களைப் போல எம்.பி.பி.எஸ், எம்.எஸ். போன்ற பட்டங்கள் இல்லை. மெடிசின் கிட் இல்லை. கழுத்தில் ஸ்டெத் இல்லை. ஆனால் அமுத சுரபி மட்டும் இருந்தது. கையில் அமுதசுரபியை ஏந்தி பசித்தவர்களுக்கு எல்லாம் சோறிட்டு அவர்களின் பசிப்பிணியைப் போக்கினார் அந்தப் புத்தத் துறவி. இச்செய்தியைப் பாடத்தில் படிக்கும்போது நமது ஆசிரியர்கள் கொடை, தானம், பிறருக்கு உணவிடுதல் நல்ல பண்பு என்று விளக்கி இருப்பார்கள்.
”மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
ஊண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
என்று உயிர் காக்கும் மருத்துவத்தைச் செய்தவர் மணிமேகலை. இவருக்கும் முன்பே சங்க காலத்தில் ஒரு மருத்துவர் இருந்து இருக்கிறார். சிறு குடிக்குச் சொந்தக்காரரான பண்ணன் என்ற இவர் பசியுற்று வந்தவர்களுக்கெல்லாம் சோற்றை வாரி வாரி வழங்கியுள்ளார். அவருக்கு ’பசிப்பிணி மருத்துவன்’ என்று தமிழ் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளான் சோழன் கிள்ளிவளவன் (இது இக்காலக் கெளரவப் பட்டம் போன்றதல்ல). இதனைச் சுட்டுகிறது ஒரு
புறநானூற்றுப் பாடல்.
யார் விழித்திருபார்? ஊர் அடங்கி விடும். உண்பதற்காகச் சோற்றை
அள்ளி இலையில் வைக்க விடிந்தே போகும். இது தானே இதன் பொருள். இது இன்றைய மூன்று, நான்கு, ஐந்து நட்சத்திர உணவகங்களின் நடைமுறை.
ஆர்டர் செய்து விட்டு ஒரு ஊருக்குச் சென்று திரும்பி வந்தாலும் நாம் ஆர்டர் செய்தது வந்திருக்காது. (காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி).
காளமெகம் கூறுவது, பஞ்ச காலத்தில் வழிப்போக்கர்களுக்கான இரவு உணவுக்கு மலையி அரிசிவரும். அரிசியைக் கொதிக்கும் உலையில் இடப் பசியால் கொதித்துக்கொண்டிருக்கிற, தங்கள் வயிறு உலை அடங்கி விடும்.என்று மகிழ்ந்து மக்கள் அமைதியடைவர். உண்பதற்காக ஓர் அகப்பைச் சோற்றை அள்ளி இலையில் இட, சோற்றின் வெள்ளை நிறத்தைக் கண்டு வெட்கப்பட்டு வெள்ளி (மின்னும் நட்சத்திரம்) ஓடிப்போகுமாம்.
மருத்துவத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது இடையில் எங்கு கவி காள மேகம் வந்தார் என்று சிந்திக்கிறீர்களா? அந்தக் காலத்தில் அசோகர் சாலையோரத்தில் நிழல் தரும் மரங்களை நட்டார். குளங்களை வெட்டினார் என்று வரலாற்றுப் பாடம் படித்துள்ளோம். அதே போல ஆங்காங்கு அன்னச் சத்திரங்கள் அமைத்து உணவும் வழங்கி வந்தனர் என்றும் படித்துள்ளோமே, அதனையும் நினைவு படுத்துவதற்குத்தான் இப்பாடல்.
தொடர்ந்து அதிகமாக உண்பதையும் அதனால் ஏற்படும் ஒபிசிடி நோயையும் பார்த்துக் கொண்டிருந்தால் பசியினால் விளையும் நோயைப் பார்க்க வேண்டாமா? ஆம், பசியினால் என்ன நோய் வரப்போகிறது? ஒன்றும்
இல்லை. தலை சுற்றல், மயக்கம், வயிற்று உபாதை, வாயுத்தொல்லை, கடைசியில் முகப்பொலிவு இழந்து, கண்கள் மங்கி, உடல் தளர்ந்து உயிர் போகும். அவ்வளவுதான்.
’மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்பார் உலகப்புகழ் மருத்துவர் திருவள்ளுவர். உடல் நோய், உள நோய் எல்லாவற்றுக்கும் மருந்து
கண்ட தெய்வப் புலவர் ஆயிற்றே. ‘நாம் உண்ணும் உணவில் ஆற்றலுக்கு உதவும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவும்
புரதச்சத்துக்கள், வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்துக்கள், மணிச்சத்து எனப்படும் மினரல்ஸ், நீர்ச்சத்து ஆகியவை அவரவர் பால் பகுப்பு, (ஆண்/பெண்) வயது, உடல் உழைப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு இருத்தல் அவசியம். இது மிகாமலும் குறையாமலும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு சத்து குறைவதாலும் ஒரு நோய் வரும். ஒட்டு மொத்தமாக பசித்து இருந்தால்.... எல்லா சத்துக்கும் குறைபாடு. இக்குறைபாடுகளால் ஏற்படும் நோய்க்குப் பெயர் பசிப்பிணி. உடலின் உள்ளே இருந்து வருத்துவதால் ‘உள் நின்று உடற்றும் பசி’ என்றும், உயிரையே அழித்து விடுவதால் ‘அழிபசி’ என்றும் மிகப் பொருத்தமாகப் பெயர் சூட்டுவார் தெய்வப்புலவர்.
பசிப்பிணி மருத்துவர் மணிமேகலையைப் பற்றி அறியாதவர் இருக்க முடியாது. அவர்களிடம் இக்கால மருத்துவர்களைப் போல எம்.பி.பி.எஸ், எம்.எஸ். போன்ற பட்டங்கள் இல்லை. மெடிசின் கிட் இல்லை. கழுத்தில் ஸ்டெத் இல்லை. ஆனால் அமுத சுரபி மட்டும் இருந்தது. கையில் அமுதசுரபியை ஏந்தி பசித்தவர்களுக்கு எல்லாம் சோறிட்டு அவர்களின் பசிப்பிணியைப் போக்கினார் அந்தப் புத்தத் துறவி. இச்செய்தியைப் பாடத்தில் படிக்கும்போது நமது ஆசிரியர்கள் கொடை, தானம், பிறருக்கு உணவிடுதல் நல்ல பண்பு என்று விளக்கி இருப்பார்கள்.
”மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
ஊண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
என்று உயிர் காக்கும் மருத்துவத்தைச் செய்தவர் மணிமேகலை. இவருக்கும் முன்பே சங்க காலத்தில் ஒரு மருத்துவர் இருந்து இருக்கிறார். சிறு குடிக்குச் சொந்தக்காரரான பண்ணன் என்ற இவர் பசியுற்று வந்தவர்களுக்கெல்லாம் சோற்றை வாரி வாரி வழங்கியுள்ளார். அவருக்கு ’பசிப்பிணி மருத்துவன்’ என்று தமிழ் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளான் சோழன் கிள்ளிவளவன் (இது இக்காலக் கெளரவப் பட்டம் போன்றதல்ல). இதனைச் சுட்டுகிறது ஒரு
புறநானூற்றுப் பாடல்.
இவர்களைத் தொடர்ந்து வாடிய பயிரைக் கண்டு இம்மருத்துவத்தை இடைவிடாது செய்தவர் புரட்சித்துறவி அருட்பிரகாச வள்ளலார்.
//காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி//
இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?
இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பசித்தவர்களுக்கு உணவிட்டு டாக்டர் பட்டம் பெறுவது என்பது அந்தக் காலத்தில் சாதாரனமாக இருந்திருக்கிறது. இப்போது முடியுமா? இந்திர லோகத்து அமிர்தமே கிடைத்தாலும் இனிமையானது என்று தாம் மட்டுமே உண்ண மாட்டார்கள் நம் முன்னோர்கள். தமிழர்களின் கலாச்சாரச் சிறப்பே பசித்தவர்களுக்குச் சோறிட்டு பிறகு தாம் உண்பதே. இதனை,
“பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது”
என்று கூறும் தமிழ் மறை. அதாவது தனக்குக் கிடைத்த உணவைப் பிறருக்கும் கொடுத்து தானும் உண்டு வாழ்பவனுக்குப் பசி என்னும் தீயைப் போன்ற கொடிய பிணி தீண்டாதாம். பசி என்பது பொது நோய். இது உயிர்கள் யாவற்றையும் பற்றியிருப்பது. உடலில் ஏற்படுகிற அனைத்து நோய்களுக்கும் பசியே மூல காரணம்.
பழைய இலக்கியங்களில் பசியை, நோய் என்று எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. சங்க இலக்கியம் தொடங்கி திருக்குறள், மணிமேகலை வரை
பசியைப் ’பிணி’ அதாவது ’பசிப்பிணி’ என்றே குறித்துள்ளன. எல்லா இலக்கியங்களும் பசியைப் ’பிணி’ என்று ஏன் குறிப்பிடுகின்றன. ஆராய்ந்து
பார்த்தால் ’நோய்’ என்ற சொல்லுக்கும் ’பிணி’ என்ற சொல்லுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. நோய் என்பது நம் உடலை நொய்ந்து போகச்செய்வது. அரிசியின் குருகிய வடிவத்தை நொய் என்பது என்பர். ’நொய்’ - ‘நொய்தல்’ இதுவே நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் விருந்தாளி
போன்றது. அவ்வப்போது வரும் போகும். விருந்தும் மருந்தும் மூன்று நாள் தானே.
ஆனால் பிணி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை நம் உடலைப் பிணித்துக் கொண்டிருப்பது. ஜென்மத்தில் பிடித்தது சாகும் வரை விடாது என்பார்களே. அது இதைத்தான். குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது? தொடர்ந்து தொப்புள்கொடி வழியாகச் சென்று கொண்டிருந்த உணவு வெளியில் வந்தவுடன் ஒரு சில மணி நேரங்கள் தடை படுகிறது. உடனே குழந்தை பசியால் அழுகிறது. கருவில் உண்டான பசி இறப்பு வரை தொடர்ந்து உயிர்களைப் பிணித்துக் கொண்டிருப்பதால் பசியைப் பிணி என்று கூறினர். அது மட்டுமல்ல பசியைப் ‘பாவி’ என்றுரைக்கும் மணிமேகலை.
”குடிப் பிறப்பு அறுக்கும்; விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும்; மாண் எழில் சிகைக்கும்
பூண் முலை மாதரோடு புறங்கடை நிறுத்தும்”
என்று பசிப்பிணியைப் பாவி என்றும், அப்பசிக்கொடுமையால் விளையும் துன்பங்களையும் பட்டியல் இடும் மணிமேகலை. அது உண்மைதானே. உடல் நோய்க்கு மட்டுமல்ல, இன்று பல நோய்களுக்கும், சமூக விரோதச் செயல்கள் நடைபெறவும் காரணமாக இருப்பது இந்தப் பசி என்ற பாவிதானே.
’வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்று
பாடியவன் பாரதி. அவன் அனுபவித்த பசிக்கொடுமைதான் மகாக்கவியாகிய அவனையே, ’தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம்’ என்று ஒரு போராளியைப் போல குரல் கொடுக்க வைத்தது. கவிஞனுக்கும் வயிறு உண்டல்லவா?
இந்தப் பசிக்கொடுமையால் இன்று ஒரு நாடே அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. சோமாலியா என்றால் அனைவர் நினைவிலும் பதிந்துள்ள
காட்சி, விழிகள் குழிவெய்தி, மண்டை பெருத்து, உடல் சுருங்கிய அந்தக் குழந்தைகளின் உருவங்கள்தானே.
மருந்து என்றால் என்ன? உடல் நோய்களைத் தடுப்பது; உள நோய்களைத்
தடுப்பது; நோய் வராமல் தடுப்பது; உயிர் போகாமல் தடுப்பது; உயிர் போகாமல் தடுப்பது. இதைத் திருமூலர் வாக்கால் கேட்க வேண்டுமா?
’
“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தென லாகும்
மறுப்பது இனிநோய் வாரா திருப்ப
மறுப்பது சாவை மருந்தென லாகும்”
உடல், உள்ள நோய்களைப் போக்கி உயிரைக் காப்பது உணவாகிய மருந்து. அதனால் தான் உடல் நோய்க்கு மருந்து கூற வந்த திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் ஆறு குறட்பாக்களில் உணவைப் பற்றிப் பேசுகிறார்.
”ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்”
என்று உணவு வழங்கி அப்பசியைப் போக்குபவரை தவ முனிவர்களை
விடவும் மேலானவர்கள் என்பார்.
மணிமேகலையைக் காற்றோட்டமில்லாத ஒரு அறையில் (புழுக்கறை) அடைத்து பட்டினி போட்டாளாம் உதயகுமாரனுடைய தாய். மணிமேகலைக்குப் பல மந்திரங்கள் தெரியுமாம். அதில் ஒன்று பசி ஒழிக்கும் மந்திரம். அப்போது அவள் அந்த மந்திரத்தை ஓதி உடல் வாடாது மகிழ்ச்சியாகஇருந்தாளாம். இந்த மந்திரம் மட்டும் நமக்குத் தெரிந்திருந்தால்.........!!!!!!!!!!!!!! என்ன....??
நாம் செய்கின்ற ஒன்றிரண்டு வேலைகளையும் செய்ய மாட்டோம்.
உழைப்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவோம்.
மாரல்: பசியைப் பற்றி இலக்கியங்கள் கூறும் சான்றுகள் இருக்கட்டும். ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார்த்தால் நாமும் தான் பாடுவோம் பசிப்பாட்டு, பசித்தொகை, பசிப்புராணம் எல்லாம். அதனால் எவரும் பசித்திருக்க நாம் பார்த்திருக்கக் கூடாது. புசித்திருக்கச் செய்வோம். நாமும் புசிப்போம். இதன் தொடர்ச்சியைப் பிறிதொரு பதிவில் பார்க்கலாம்.. இப்போது ’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்’-- வாருங்கள்.
ஆதிரா..
“பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது”
என்று கூறும் தமிழ் மறை. அதாவது தனக்குக் கிடைத்த உணவைப் பிறருக்கும் கொடுத்து தானும் உண்டு வாழ்பவனுக்குப் பசி என்னும் தீயைப் போன்ற கொடிய பிணி தீண்டாதாம். பசி என்பது பொது நோய். இது உயிர்கள் யாவற்றையும் பற்றியிருப்பது. உடலில் ஏற்படுகிற அனைத்து நோய்களுக்கும் பசியே மூல காரணம்.
பழைய இலக்கியங்களில் பசியை, நோய் என்று எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. சங்க இலக்கியம் தொடங்கி திருக்குறள், மணிமேகலை வரை
பசியைப் ’பிணி’ அதாவது ’பசிப்பிணி’ என்றே குறித்துள்ளன. எல்லா இலக்கியங்களும் பசியைப் ’பிணி’ என்று ஏன் குறிப்பிடுகின்றன. ஆராய்ந்து
பார்த்தால் ’நோய்’ என்ற சொல்லுக்கும் ’பிணி’ என்ற சொல்லுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. நோய் என்பது நம் உடலை நொய்ந்து போகச்செய்வது. அரிசியின் குருகிய வடிவத்தை நொய் என்பது என்பர். ’நொய்’ - ‘நொய்தல்’ இதுவே நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் விருந்தாளி
போன்றது. அவ்வப்போது வரும் போகும். விருந்தும் மருந்தும் மூன்று நாள் தானே.
ஆனால் பிணி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை நம் உடலைப் பிணித்துக் கொண்டிருப்பது. ஜென்மத்தில் பிடித்தது சாகும் வரை விடாது என்பார்களே. அது இதைத்தான். குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது? தொடர்ந்து தொப்புள்கொடி வழியாகச் சென்று கொண்டிருந்த உணவு வெளியில் வந்தவுடன் ஒரு சில மணி நேரங்கள் தடை படுகிறது. உடனே குழந்தை பசியால் அழுகிறது. கருவில் உண்டான பசி இறப்பு வரை தொடர்ந்து உயிர்களைப் பிணித்துக் கொண்டிருப்பதால் பசியைப் பிணி என்று கூறினர். அது மட்டுமல்ல பசியைப் ‘பாவி’ என்றுரைக்கும் மணிமேகலை.
”குடிப் பிறப்பு அறுக்கும்; விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும்; மாண் எழில் சிகைக்கும்
பூண் முலை மாதரோடு புறங்கடை நிறுத்தும்”
என்று பசிப்பிணியைப் பாவி என்றும், அப்பசிக்கொடுமையால் விளையும் துன்பங்களையும் பட்டியல் இடும் மணிமேகலை. அது உண்மைதானே. உடல் நோய்க்கு மட்டுமல்ல, இன்று பல நோய்களுக்கும், சமூக விரோதச் செயல்கள் நடைபெறவும் காரணமாக இருப்பது இந்தப் பசி என்ற பாவிதானே.
’வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்’ என்று
பாடியவன் பாரதி. அவன் அனுபவித்த பசிக்கொடுமைதான் மகாக்கவியாகிய அவனையே, ’தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம்’ என்று ஒரு போராளியைப் போல குரல் கொடுக்க வைத்தது. கவிஞனுக்கும் வயிறு உண்டல்லவா?
இந்தப் பசிக்கொடுமையால் இன்று ஒரு நாடே அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. சோமாலியா என்றால் அனைவர் நினைவிலும் பதிந்துள்ள
காட்சி, விழிகள் குழிவெய்தி, மண்டை பெருத்து, உடல் சுருங்கிய அந்தக் குழந்தைகளின் உருவங்கள்தானே.
மருந்து என்றால் என்ன? உடல் நோய்களைத் தடுப்பது; உள நோய்களைத்
தடுப்பது; நோய் வராமல் தடுப்பது; உயிர் போகாமல் தடுப்பது; உயிர் போகாமல் தடுப்பது. இதைத் திருமூலர் வாக்கால் கேட்க வேண்டுமா?
’
“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தென லாகும்
மறுப்பது இனிநோய் வாரா திருப்ப
மறுப்பது சாவை மருந்தென லாகும்”
உடல், உள்ள நோய்களைப் போக்கி உயிரைக் காப்பது உணவாகிய மருந்து. அதனால் தான் உடல் நோய்க்கு மருந்து கூற வந்த திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் ஆறு குறட்பாக்களில் உணவைப் பற்றிப் பேசுகிறார்.
”ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்”
என்று உணவு வழங்கி அப்பசியைப் போக்குபவரை தவ முனிவர்களை
விடவும் மேலானவர்கள் என்பார்.
மணிமேகலையைக் காற்றோட்டமில்லாத ஒரு அறையில் (புழுக்கறை) அடைத்து பட்டினி போட்டாளாம் உதயகுமாரனுடைய தாய். மணிமேகலைக்குப் பல மந்திரங்கள் தெரியுமாம். அதில் ஒன்று பசி ஒழிக்கும் மந்திரம். அப்போது அவள் அந்த மந்திரத்தை ஓதி உடல் வாடாது மகிழ்ச்சியாகஇருந்தாளாம். இந்த மந்திரம் மட்டும் நமக்குத் தெரிந்திருந்தால்.........!!!!!!!!!!!!!! என்ன....??
நாம் செய்கின்ற ஒன்றிரண்டு வேலைகளையும் செய்ய மாட்டோம்.
உழைப்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவோம்.
மாரல்: பசியைப் பற்றி இலக்கியங்கள் கூறும் சான்றுகள் இருக்கட்டும். ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார்த்தால் நாமும் தான் பாடுவோம் பசிப்பாட்டு, பசித்தொகை, பசிப்புராணம் எல்லாம். அதனால் எவரும் பசித்திருக்க நாம் பார்த்திருக்கக் கூடாது. புசித்திருக்கச் செய்வோம். நாமும் புசிப்போம். இதன் தொடர்ச்சியைப் பிறிதொரு பதிவில் பார்க்கலாம்.. இப்போது ’பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்’-- வாருங்கள்.
ஆதிரா..
”கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்”
படிக்கும் பொழுதுதான் இந்தப் பிரச்சனை என்றால் இங்கேயுமா? எஸ்கேப்......!!!
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்”
படிக்கும் பொழுதுதான் இந்தப் பிரச்சனை என்றால் இங்கேயுமா? எஸ்கேப்......!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
சிறந்த கட்டுரை அக்கா!
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
சிறந்த கட்டுரை அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
[quote="சிவா"]”கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்”
படிக்கும் பொழுதுதான் இந்தப் பிரச்சனை என்றால் இங்கேயுமா? எஸ்கேப்......!!![/quo
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை..
சுகம் பெறும் காலம் இனி உள காலம்..கலங்காதே மனமே....
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்”
படிக்கும் பொழுதுதான் இந்தப் பிரச்சனை என்றால் இங்கேயுமா? எஸ்கேப்......!!![/quo
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை..
சுகம் பெறும் காலம் இனி உள காலம்..கலங்காதே மனமே....
Aathira wrote:சிவா wrote://காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி//
இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?
உங்களைப் பற்றி எல்லாம் தெரியாதா சிவா.. என் தம்பிகளைப் பற்றி நானே தெரிந்து கொள்ளவில்லை என்றால்?? எனக்குத் தெரிந்து விட்டதே என்று வருத்தம் தானே?
தம்பிகள் அனைவரைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள் அக்கா! (இதில் என்னைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|