புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_m10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10 
366 Posts - 49%
heezulia
தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_m10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_m10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_m10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_m10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10 
25 Posts - 3%
prajai
தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_m10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_m10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_m10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_m10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_m10தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா......


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 07, 2010 6:58 pm

தொட்டுத் தொட்டுநமஸ்காரம் செய்யலாமா......

சிலர் தண்ணீரே குடிக்க மாட்டார்கள். ஆடைக்கும் கோடைக்கும் ஏதாவது நோய் என்று கூறிக்கொண்டே இருப்பார்கள். அதிலும் முக்கியமாக நீர்க்கடுப்பு என்பார்கள். இதைப் பொதுவாக ஆங்கிலத்தில் Urinary Track infection என்பார்கள்.
இதற்கு என்ன மருந்து என்று கேட்டுப்பார்த்தால் உளுந்துதான் உடனடி நிவாரணம் என்று அடித்துச் சொல்லுவார்கள். அதாவது எந்த உழளுந்தாக
இருந்தாலும் அதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாகக் கழுவிய பின் நல்ல சுத்தமான தண்ணீரில் ஊரவைத்து வடிகட்டிய நீரைக் குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்குமாம். அடுத்து பத்து இருபது புளியங்கொட்டையை லேசாக இடித்து அந்த பொடியை தண்ணீரில் ஊர வைத்து அந்த நீரைக் குடித்து வந்தாலும் நீர்க்கடுப்பு போகும். பாக்கிலிருந்து இப்போது புளிக்கு வருகிறோம். ஒரு கொட்டைப் பாக்கு அளவு புளியைத் தண்ணீரில் கரைத்து அதில் சர்க்கரையைக் கலந்து கரைத்து குடித்தால் நீர்க்கடுப்புப் போகும். சோடாவில் எழுமிச்சம்பழம் பிளிந்து குடித்தால் நீர்க்கடுப்புப் போகும். நிறைய பழச் சாறுகளைக் குடித்தால் நீர்க்கடுப்பு நீங்கும். நீர் அதிகம் குடித்தாலே நீர்க்கடுப்புப் போகும். கால்களின் கட்டை விரல் நகங்களின் மீது சிறிது சுண்ணாம்பைத் தடவினால் நீர்க்கடுப்புப் போகும். காலையும் மாலயும் இரண்டு வேளை குளித்து உடல் சூடு குறைந்தால் நீர்க்கடுப்புப் போகும். தலையில் எண்ணெய் வைத்து குளித்தால் நீர்க்கடுப்புப் போகும் என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போவார்கள் நம் முன்னோர்கள். அத்தனையும் நீர்க்கடுப்புக்கு உகந்த மருந்துதான். .

இதே போலதான் மூலச்சூடு, ஆசனக் கடுப்பும். மேலே கூறியதுடன் இந்த இரண்டும் வந்தவர்கள் கோடி கொடுத்தாலும் உட்காரவே மாட்டார்கள்.
பாலைக் குடி, இளநீரைக்குடி, வெந்தயம் சாப்பிடு என்று கூறக் கூற எல்லாவர்றையும் குடித்து இறுதியில் வாதத்தில் வந்து மாட்டிக்கொள்வர்.

இயந்திரம் தங்கு தடையின்றி ஓட வேண்டுமாயின் எண்ணெய் போடவேண்டும். தண்ணிரை ஊற்றி வந்தால் சில சமயங்களில் துரு பிடித்து இயங்கு தன்மை குறைந்து விடுவது போல உடல் எலும்புகளின் இயங்கு சக்தியும் எண்ணெய்ப் பசையின்றி குறைந்து விடுகிறது. அப்போது கை கால்கள் நீட்டி மடக்க
முடியாமல் போய் விடுகிறது. முட்டிக்கால்கள் வீங்கிக்கொண்டு வலி எடுக்க ஆரம்பித்து விடும். இதற்கு மருந்து என்னனென்னவோ செய்து பார்த்து ஓய்ந்து போவர்.

இதற்கெல்லாம் மருந்தா ஒரு சிடு மூஞ்சி இருக்காருங்க.. அவரைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? பொது இடங்களில், என்னைப் பறிக்காதே, என்னைத்தொடாதே என்றெல்லாம் பலகையில் எழுதப் பட்டிருப்பதைப் பார்த்து இருப்போம். சில இடங்களில் ஆங்கிலத்திலும் Touch me not என்று எழுதி இருப்பதைப் பார்த்து இருப்போம். இது அந்த மலர்களையோ, சோலையையோ எவரும் வீணடித்து விடக்கூடாது என்ற எச்சரிக்கைக்காக என்பதையும் நாம் அறிவோம்.. இந்த வாசகத்தை சொல்லாமல் சொல்லும் நகைச்சுவை வடிவேலு ஒன்று தாவர இனங்களில் உள்ளது. இந்தக் கோட்டைத் தாண்டி நீங்களும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன். வந்தா என்னடா
செய்வே? நான் அலுதுருவேன் என்று வடுவேலு பாணியில் சொல்லும் இந்தத் தாவரமும். உங்களுக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

புரியல்லன்னா இன்னொரு குறிப்பு. மக்களில் சிலர் சிடு மூஞ்சியாக இருப்பர். எவருடனும் பேச மாட்டார்கள். யாராவது வலுவில் பேசினாலும் முகத்தைச் சுருக்கிக் கொண்டு உம்மனாம் மூஞ்சி போல இருப்பர். இவர்களை இந்தத் தாவரத்தின் பெயர் கூறி அழைப்பது உண்டு. இப்ப தெளிவா புரிஞ்சு இருக்குமே. ஆமா தொட்டால் சிணுங்கிதான். இதுல என்ன சிறப்பு என்றால் தொட்டால் சிணுங்கி தொட்டால் மட்டும் தன்னைச் சுருக்கிக்கொள்ளும். ஆனால் சுட்டால் (திருடரது இல்ல) பறித்துப் பயன்படுத்தினால் விரிந்து நமக்கு பயனளிக்குமாம்.

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Images?q=tbn:ANd9GcT6uCDQbXX5tveANMhfGRYcRz6Z0Oz9Ac27wfVpX3LhMkjK1vM&t=1&usg=__VFqDK7F05MAiKHadSLVQ6EffkEA=

பல நோய்களுக்கு மருந்தாகும் இதனை மூலிகை என்பதே பொருத்தமாகும். இதன் தாவரப் பெயர் MIMOSA PUDICA. இது FABACEAE என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேறு பெயர்கள் நமஸ்காரி, காமவர்த்தினி.
இதன ஆங்கிலப் பெயரே Touch me not என்பது. பொதுவாக எல்லா இடங்களிலும் தானே வளரக்கூடிய இது 5 அடி வரைப் படரும் தன்மையது. சுமார் 60 செண்டி மீட்டர் உயரம் வரை வளரும். ஆற்றோரங்களில் காணப்படும் இது மனிதர்கள் தொட்டாலோ, சிறு அதிர்வு ஏற்பட்டாலோ தன் இலைகளைச் உள்பக்கமாகச் சுருட்டிக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.

இதன் தனிச்சிறப்பு என்னவெனில் இதன் இலைகள் எதிர் எதிர் அடுக்கில் அமைந்து இருக்கும். மேலே சிவப்பாகவும் அடியில் ஊதா நிறத்திலும் இதன் பூக்கள் இருக்கும். இவை இலைகளின் ஊடாக மலர்ந்து காணப்படும். இதன் காய் சுமார் 25 மில்லிமீட்டர் நீளம் இருக்கும்.

மலர்கள் சூரியனைக் காதலிப்ப்து நாம் அறிந்தது. ஆனால் இந்த சிடுமூஞ்சிக்கும் சூரியனுக்கும் காதல் என்றால் ...ஆம இதன் இலைகள் மாலையில் தன் இலைகளைச் சுருக்கிக் கொள்ளுமாம். காலையில் ஆதவனைக் கண்டதும் அழகிய தன் இலைகளை விரித்துக் கொள்ளுமாம்.

சரி இந்தத் தொட்டாச்சிணுங்கியின் மருத்துவக் குணங்களைப் பார்க்கலாம். தொட்டாற் சுருங்கி வேரை பஞ்சு போலத் தட்டி அதனை ஒரு மண்சட்டியில் போட்டு அத்துடன் நீரைச் சேர்த்து பாதியாகச் சுண்டும் வரைக் கொதிக்க வைத்து அந்த நீரை நாளொன்றுக்கு மூன்று வேளை அரை அவுன்ஸ் வீதம்
குடித்து வந்தால் நீர்க்கடுப்பு போயே போய்விடும். இதன் இலையை அரைத்து தினமும் தயிரில் கலந்து குடித்து வந்தாலும் சூட்டால் உண்டாகும் நீர்க்கடுப்புப் பிரச்சனை காணாமல் போய்விடும்.

இதன் வேரையும் இலையையும் சம அளவு எடுத்து காயவைத்து உலர்த்தி பொடி செய்து சூரணமாக வைத்துக்கொண்டு நாள்தோறும் 10 முதல் 15 கிராம் பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு தொடர்பான நோய்கள் போய்விடும். இலைச்சாறை மூலப்புண்ணிலும் அதாவது ரணங்களில் தடவி வந்தால் புண் ஆறி விடும். ஆறாத ரணங்களும் ஆறி விடும்.

இதன் இலையை விழுதாக அரைத்து பற்றுப் போட்டு வர வாதம் தொடர்பான கைகால் மூட்டுகளின் வலி, வீக்கம் குணமாகும். இதன் இலைகளை வெந்நீருடன் போட்டு கொதிக்க வைத்து ஊற்றி குளித்து வந்தால் இடுப்பு, முதுகு வலியும் குணமாகும். இவற்றைக் குறிக்கும் பாடல் இதோ....

இன்னும் என்னனென்னவோ சொல்கிறார்களே...இதில் காந்த சக்தி இருக்கிறதாம். தொடுகின்ற போது இந்தக் காந்த சக்தி மனிதனின் உடலில் ஈர்க்கப்படும். தொடர்ந்து இதனைத் தொட்டு வந்தால் மனோ வசியம் ஏற்பட்டு
மனம் நினைத்ததைச் செய்து முடிக்க முடியுமாம். பிடித்தவர்களை வசியம் செய்யவும் முடியுமாம். இதன் இலையை நாள்தோறும் தொட்டு வர பாலுணர்வு உணர்ச்சியை மிகுவிக்கும். இதனாலேயே இது காமவர்த்தினி என்று அழைக்கப் படுகிறது.
மேகநீரைத் தடுக்க மேதினியிற் பெண்வசிய
மாகவுன்னி னலகு மதுவுமின்றி தேகமிடைக்
கட்டாகக் காட்டுகின்ற சாவைத்தூரத்தி லிடுந்
தொட்டாற் சுருங்கியது சொல்

அது மட்டுமல்ல தெய்வீக சக்தி நிறைந்ததாம். அதன் காரணமாகவே இது நமஸ்காரி என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ குணமும் தெய்வீக குணமும் நிறைந்த வேம்பு, துளசியை எப்படி இல்லத்தில் வைத்து வணங்குகிறோமோ அதே தகுதி இதற்கும் உண்டு. பாடலைப் பார்ப்போமா?
”’ப்கரவே இன்னுமொரு மூலிகைக் கேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டி நிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே

மாரல்: நீர்க்கடுப்பு, மூலக்கடுப்பு, வாத வீக்கம் வலி, உடல் வலி ஆகியவற்றுக்கு அருமருந்து தொட்டாச் சுருங்கி. காம இச்சையை மிகுவிக்கும் மூலிகை வயாகரா தொட்டாச் சுருங்கி. இன்றைய தலை முறைகளிடன் இந்த ஆவல் குறைந்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. நலமான வாழ்வு
வாழ எல்லா உணர்வுகளும் அவசியம் என்ற அடிப்படையில் அனைவரும் நமஸ்காரத்துடன் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



ஆதிரா..







தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Tதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Hதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Iதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Rதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 7:04 pm

இதுல இவ்வளவு இருக்காமகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Mimosa_pudica_01_ies



ஈகரை தமிழ் களஞ்சியம் தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 07, 2010 7:06 pm

தொட்டால் சிருங்கிகு சுட்டால் இவளவு பயனா கட்டுரைய பகிர்தமைக்கு மிகவும் நன்றி அக்கா...................... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 677196 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 677196 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 07, 2010 8:03 pm

balakarthik wrote:இதுல இவ்வளவு இருக்காமகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Mimosa_pudica_01_ies

ஆமாம் கார்த்திக். மிக்க நன்றி.. படித்தமைக்கு.... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 154550 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 678642



தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Tதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Hதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Iதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Rதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Aதொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Aug 07, 2010 8:04 pm

எதற்கும் பயனில்லாத ஒரு தாவரம் என்று நான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்த இந்த தொட்டாற்சிணுங்கி இலைகளுக்கு இத்தனை பவித்ரமான குணங்களா? ஆச்சர்யமாகவும் அதே சமயத்தில் இதைப்பற்றி ஆராய்ந்து தெளிவான கருத்துக்களிலும் நல்லதொரு பாடலிலும் துளசிக்கு இணையாக இதைப்பற்றி உயர்வாக சொல்லி உபாதைகளுக்கான தீர்வுகளாகவும் சொல்லி இருப்பதும் சிறப்பு ஆதிரா....உங்களின் ஆராய்ச்சி தொடரட்டும்பா....

சின்ன வயதில் ஓடிப்போய் தொட்டு தொட்டு அதை சுருங்கவைத்து வேடிக்கைப்பார்ப்பதுண்டு பள்ளியில்...
இத்தனை வருடங்கள் கழித்து அதன் மருத்துவ குணங்கள் அறியத்தந்தமைக்கு என் அன்பு நன்றிகள் ஆதிரா... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 942



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 07, 2010 8:07 pm

மஞ்சுபாஷிணி wrote:எதற்கும் பயனில்லாத ஒரு தாவரம் என்று நான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்த இந்த தொட்டாற்சிணுங்கி இலைகளுக்கு இத்தனை பவித்ரமான குணங்களா? ஆச்சர்யமாகவும் அதே சமயத்தில் இதைப்பற்றி ஆராய்ந்து தெளிவான கருத்துக்களிலும் நல்லதொரு பாடலிலும் துளசிக்கு இணையாக இதைப்பற்றி உயர்வாக சொல்லி உபாதைகளுக்கான தீர்வுகளாகவும் சொல்லி இருப்பதும் சிறப்பு ஆதிரா....உங்களின் ஆராய்ச்சி தொடரட்டும்பா....

சின்ன வயதில் ஓடிப்போய் தொட்டு தொட்டு அதை சுருங்கவைத்து வேடிக்கைப்பார்ப்பதுண்டு பள்ளியில்...
இத்தனை வருடங்கள் கழித்து அதன் மருத்துவ குணங்கள் அறியத்தந்தமைக்கு என் அன்பு நன்றிகள் ஆதிரா... தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 942
தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 359383 தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 359383

நான் எழுத நினைத்த அதே கருத்த அக்கா எழுதியுள்ளீர்கள் மிக்க நன்றி அக்கா இருவருக்கும்.

மிகவும் பயனுள்ள ஒரு பெருமதியான பதிவு இது மிக்க நன்றிக்கா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 07, 2010 8:09 pm

மிகவும் பயனுள்ள பதிவு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 07, 2010 8:58 pm

சூப்பர் அப்புறம் தொட்ட சிணுங்கி நம்முடன் பழகிய பின் அதாவது வளர்ப்பு போல ஆனபின் நாம் தொட்டாலும் சுருங்காது என படித்தேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 07, 2010 9:19 pm

தொட்டார் சிணுங்கி, பல வித மருத்துவ ,மனோதத்துவ,ஆன்மீக, குணங்களை உள்ளடக்கிய ஓர் உன்னத ALL IN ONE தாவரம் என அறிய ஆச்சரியமாக உள்ளது. சிறந்த முறையில் ஆய்வு செய்து எழுதிய பதிவு.

வாழ்த்துக்கள். தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 154550 ஆதிரா அவர்களே. தொட்டுத் தொட்டு நமஸ்காரம் செய்யலாமா...... 154550

ரமணீயன்

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Sat Aug 07, 2010 9:28 pm

இந்த 60-தை தாண்டிய வயதிலும் அதை தொடுவதால் ஏற்படும் ஒரு விதமான மன மகிழ்வுக்காகவே இந்த செடியினை நான் வளர்த்து வருகிறேன். என் பேரக் குழந்தைகள் அதை தொட்டு விளையாடுவதில் பெறும் இன்பத்தை கண்டு ரசித்து இருக்கிறேன். ஆனால் இந்த செடியில் இவ்வளவு விசேஷம் இருக்கிறது என்று அறியும் போது அச்சரியமாக இருக்கிறது. தெரிய வைத்ததிற்கு மிகுந்த நன்றி!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக