புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
3 Posts - 6%
heezulia
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_m10இடித்தது தின்னையை அல்ல என்னை Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடித்தது தின்னையை அல்ல என்னை


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Aug 07, 2010 8:48 am

இடித்தது தின்னையை அல்ல என்னை 1234567


உயிரைவிட
மேலான
என்று தொடங்கினால்
உலக வழக்கில் அது சாதாரணமாய் படும்
சம்பிரதாயமாகக் கூட தோன்றலாம்
எனவே
உன்னை
என்னைவிட மேலானவன்
என அழைப்பதுதான் சரியானதாக இருக்கும்
எனவே
நண்பா
அப்படி அழைத்தே
இந்தக் கடிதத்தை துவங்குகின்றேன்


படிப்பு ஏனோ
எனக்கு ஏறவில்லை
ஆயினும்
நீ படித்தாய்
அவனோடு சேர்ந்தால்
மாடுமேய்க்க கூட லாயக்கில்லாமல்
போய்விடுவாய்
உன்னோடு
அவனைப் பார்த்தால்
தோலை உரித்துவிடுவேன்
என மிரட்டிய அப்பாவை
அலட்சியம் செய்துவிட்டு
என்னோடு தோப்பிற்கு வருவாய்


ஒரே மாங்காய்க்கு
இரண்டுபேர் கல்லெறிவோம்
புளிப்பும் காரமுமாய்
தின்றுவிட்டு
மொட்டைப் பாறையில்
மல்லாந்துப் படுத்து
வானத்தை அளப்போம்
சிலநேரம்
இங்கிலீஷ் டீச்சரின்
பெண்ணின் அழகையும் அளப்போம்


நம் வகுப்பு தோழர்கள்
பலவேசமுத்து, இசக்கியப்பன்,
பெருமாள், அப்துல்லா
இவர்களெல்லாம்
எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை
ஆனால்
என் கனவுகளில்
இன்னும் மீசைமுளைக்காத
முகத்தோடு வந்து பேசுகிறார்கள்


அவர்களோடு
நீயும் நானும்
என் வீட்டுக் கூடத்தின்
தூண்களில் மறைந்து கண்ணாமூச்சி
விளையாடினோமே
நினைவிருக்கிறதா
பரண்மீது
ஒளிந்திருந்த மணி
தூங்கி விட்டதனால்
எல்லா இடமும்
தேடி அலைந்து கிடைக்காமல்
பயத்தோடு
திண்னையில் முடங்கிக் கிடந்தோமே
அந்தத் திண்னை
எவ்வளவு அழகாக இருக்கும்
வெள்ளிக் கிழமைதோறும்
சாணம் மெழுகி
பூப் பூவாக
சுண்ணாம்புக் கோலமிட்டு
அகல் விளக்கு ஏற்றிவைப்பாள் பாட்டி


விளக்கில் வந்து
விழுகின்ற விட்டில் பூச்சிக்களை
பிடிக்க
சுவற்றில் தவமிருக்கும் பல்லி
பல்லியைப் பிடிக்க
பதுங்கி
அசையாமல் படுத்திருக்கும் பூனை
இப்படி எத்தனையோ
இந்திரஜாலங்களை
அதில் கண்டிருப்போம்


அத்தனையும் தந்த
என் வீட்டுத் தின்னையை
இடித்து விட்டார்களாம்
அடி வயிற்றில் நெருப்புக் கத்தியை
செருகியது போலிருந்தது


எனக்கும் தின்னைக்கும்
உள்ள உறவு
தாய்க்கும் மகனுக்கும்
உள்ள உறவென்று யாருக்குத் தெரியும்




பணக்கட்டுக்களையும்
நகை நட்டுகளையும்
தொட்டு உறவாடுபவர்களுக்கு
மனதிற்குள் இசைக்கும்
ஆத்ம கீதத்தின்
ஸ்ருதியின்
சுகம் தெரியாது


இந்த தின்னையில் இருந்து தான்
மேற்கு வானத்தின் அழகையும்
அங்கே தெரியும்
மலை முகட்டையும் ரசித்திருக்கிறேன்


வானமும் மலையும்
மௌனமாக சொல்லும்
காட்சித் தத்துவம்
வெறும் கல்லையும் சிற்பமாக்கும்
கல்லே சிலையாகும் போது
மனிதனுக்குள் எத்தனை
ரசாயன மாற்றம் ஏற்படும்
மாற்றத்தின் விளைநிலம்
தின்னை அல்லவா


தன்னைத்தான் உண்பவன்
தின்னையைத் தின்பான்
தின்னையில் இருந்து துவங்கிய
ஆன்னா ஆவன்னா தான்
கதையாய் பிறந்து
கவிதையாய் வளர்ந்து
பரிசும் பாராட்டும்
விருதுகளுமாய்
வாகனமுமாய் அணிவகுத்து நிற்கின்றன


பாட்டியின் மடியில்
தலை வைத்து
பழங்கதைகள் கேட்டதும்
கற்பனை சுகத்தில் மிதந்ததும்
இந்த
தின்னையில்தான்


கண்ணாமூச்சிக்கு
அம்மா மடிக்குள் ஒளிந்து
அப்படியே தூங்கிப் போனது
இந்த தின்னையில் தான்


அப்பா கொண்டுவரும்
கடலை முறுக்கை
திருடி யாருக்கும் தெரியாமல்
தின்பதும் தின்னை ஓரத்தில் தான்


பாட்டி வெற்றிலை இடிப்பதும்
அம்மா கதைபேசுவதும்
அப்பா காலாட்டுவதும்
அக்கா தலை வாருவதும்
தம்பி தூங்குவதும்
பாப்பாவுக்கு எண்ணை தேய்ப்பதும்
கோழிக்கு தவிடு பிசைவதும்
பிச்சைக்காரன் இளைப்பாறுவதும்
இந்த
தின்னையில் தான்




இப்போது
தின்னை இல்லை
அதன் உறவுமில்லை
வெறும் கனவுகள்
மட்டும் தான்
காய்ந்த நிலத்தில்
பாளங்கள் போல வெடித்துக் கிடக்கிறது
இப்போது
கடந்த காலத்து
நினைவுகளை மட்டுமே
அசைபோடும் மாடுகளாகி விட்டோம்
நமது
உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும்
உள்ள உயிர்
இங்கு யாருக்கு தெரியப்போகிறது




Read More click here 







இடித்தது தின்னையை அல்ல என்னை Sri+ramananda+guruj+3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2010 9:09 am

திண்ணை பற்றியும், பள்ளி நினைவுகள் பற்றியும் மீண்டும் மனதிற்குள் மத்தாப்பாய் ஞாபக அலைகளை தோற்றுவித்து விட்டீர்கள்! அருமை!


இடித்தது தின்னையை அல்ல என்னை Dsc01710

http://www.eegarai.net/-f2/-t2869.htm
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



இடித்தது தின்னையை அல்ல என்னை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Aug 07, 2010 9:23 am

  உங்கள் கருத்துக்கு நன்றி  


Read More click here 











sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Aug 07, 2010 11:06 am

sriramanandaguruji wrote:இடித்தது தின்னையை அல்ல என்னை 1234567


உயிரைவிட
மேலான
என்று தொடங்கினால்
உலக வழக்கில் அது சாதாரணமாய் படும்
சம்பிரதாயமாகக் கூட தோன்றலாம்
எனவே
உன்னை
என்னைவிட மேலானவன்
என அழைப்பதுதான் சரியானதாக இருக்கும்
எனவே
நண்பா
அப்படி அழைத்தே
இந்தக் கடிதத்தை துவங்குகின்றேன்


படிப்பு ஏனோ
எனக்கு ஏறவில்லை
ஆயினும்
நீ படித்தாய்
அவனோடு சேர்ந்தால்
மாடுமேய்க்க கூட லாயக்கில்லாமல்
போய்விடுவாய்
உன்னோடு
அவனைப் பார்த்தால்
தோலை உரித்துவிடுவேன்
என மிரட்டிய அப்பாவை
அலட்சியம் செய்துவிட்டு
என்னோடு தோப்பிற்கு வருவாய்


ஒரே மாங்காய்க்கு
இரண்டுபேர் கல்லெறிவோம்
புளிப்பும் காரமுமாய்
தின்றுவிட்டு
மொட்டைப் பாறையில்
மல்லாந்துப் படுத்து
வானத்தை அளப்போம்
சிலநேரம்
இங்கிலீஷ் டீச்சரின்
பெண்ணின் அழகையும் அளப்போம்


நம் வகுப்பு தோழர்கள்
பலவேசமுத்து, இசக்கியப்பன்,
பெருமாள், அப்துல்லா
இவர்களெல்லாம்
எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை
ஆனால்
என் கனவுகளில்
இன்னும் மீசைமுளைக்காத
முகத்தோடு வந்து பேசுகிறார்கள்


அவர்களோடு
நீயும் நானும்
என் வீட்டுக் கூடத்தின்
தூண்களில் மறைந்து கண்ணாமூச்சி
விளையாடினோமே
நினைவிருக்கிறதா
பரண்மீது
ஒளிந்திருந்த மணி
தூங்கி விட்டதனால்
எல்லா இடமும்
தேடி அலைந்து கிடைக்காமல்
பயத்தோடு
திண்னையில் முடங்கிக் கிடந்தோமே
அந்தத் திண்னை
எவ்வளவு அழகாக இருக்கும்
வெள்ளிக் கிழமைதோறும்
சாணம் மெழுகி
பூப் பூவாக
சுண்ணாம்புக் கோலமிட்டு
அகல் விளக்கு ஏற்றிவைப்பாள் பாட்டி


விளக்கில் வந்து
விழுகின்ற விட்டில் பூச்சிக்களை
பிடிக்க
சுவற்றில் தவமிருக்கும் பல்லி
பல்லியைப் பிடிக்க
பதுங்கி
அசையாமல் படுத்திருக்கும் பூனை
இப்படி எத்தனையோ
இந்திரஜாலங்களை
அதில் கண்டிருப்போம்


அத்தனையும் தந்த
என் வீட்டுத் தின்னையை
இடித்து விட்டார்களாம்
அடி வயிற்றில் நெருப்புக் கத்தியை
செருகியது போலிருந்தது


எனக்கும் தின்னைக்கும்
உள்ள உறவு
தாய்க்கும் மகனுக்கும்
உள்ள உறவென்று யாருக்குத் தெரியும்




பணக்கட்டுக்களையும்
நகை நட்டுகளையும்
தொட்டு உறவாடுபவர்களுக்கு
மனதிற்குள் இசைக்கும்
ஆத்ம கீதத்தின்
ஸ்ருதியின்
சுகம் தெரியாது


இந்த தின்னையில் இருந்து தான்
மேற்கு வானத்தின் அழகையும்
அங்கே தெரியும்
மலை முகட்டையும் ரசித்திருக்கிறேன்


வானமும் மலையும்
மௌனமாக சொல்லும்
காட்சித் தத்துவம்
வெறும் கல்லையும் சிற்பமாக்கும்
கல்லே சிலையாகும் போது
மனிதனுக்குள் எத்தனை
ரசாயன மாற்றம் ஏற்படும்
மாற்றத்தின் விளைநிலம்
தின்னை அல்லவா


தன்னைத்தான் உண்பவன்
தின்னையைத் தின்பான்
தின்னையில் இருந்து துவங்கிய
ஆன்னா ஆவன்னா தான்
கதையாய் பிறந்து
கவிதையாய் வளர்ந்து
பரிசும் பாராட்டும்
விருதுகளுமாய்
வாகனமுமாய் அணிவகுத்து நிற்கின்றன


பாட்டியின் மடியில்
தலை வைத்து
பழங்கதைகள் கேட்டதும்
கற்பனை சுகத்தில் மிதந்ததும்
இந்த
தின்னையில்தான்


கண்ணாமூச்சிக்கு
அம்மா மடிக்குள் ஒளிந்து
அப்படியே தூங்கிப் போனது
இந்த தின்னையில் தான்


அப்பா கொண்டுவரும்
கடலை முறுக்கை
திருடி யாருக்கும் தெரியாமல்
தின்பதும் தின்னை ஓரத்தில் தான்


பாட்டி வெற்றிலை இடிப்பதும்
அம்மா கதைபேசுவதும்
அப்பா காலாட்டுவதும்
அக்கா தலை வாருவதும்
தம்பி தூங்குவதும்
பாப்பாவுக்கு எண்ணை தேய்ப்பதும்
கோழிக்கு தவிடு பிசைவதும்
பிச்சைக்காரன் இளைப்பாறுவதும்
இந்த
தின்னையில் தான்




இப்போது
தின்னை இல்லை
அதன் உறவுமில்லை
வெறும் கனவுகள்
மட்டும் தான்
காய்ந்த நிலத்தில்
பாளங்கள் போல வெடித்துக் கிடக்கிறது
இப்போது
கடந்த காலத்து
நினைவுகளை மட்டுமே
அசைபோடும் மாடுகளாகி விட்டோம்
நமது
உணர்வுகளுக்கும் நினைவுகளுக்கும்
உள்ள உயிர்
இங்கு யாருக்கு தெரியப்போகிறது




Read More click here







இடித்தது தின்னையை அல்ல என்னை Sri+ramananda+guruj+3


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக