புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_lcapதகவல் அறியும் உரிமை - Page 2 I_voting_barதகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
தகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_lcapதகவல் அறியும் உரிமை - Page 2 I_voting_barதகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
தகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_lcapதகவல் அறியும் உரிமை - Page 2 I_voting_barதகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
தகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_lcapதகவல் அறியும் உரிமை - Page 2 I_voting_barதகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
தகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_lcapதகவல் அறியும் உரிமை - Page 2 I_voting_barதகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_lcapதகவல் அறியும் உரிமை - Page 2 I_voting_barதகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
தகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_lcapதகவல் அறியும் உரிமை - Page 2 I_voting_barதகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_lcapதகவல் அறியும் உரிமை - Page 2 I_voting_barதகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_lcapதகவல் அறியும் உரிமை - Page 2 I_voting_barதகவல் அறியும் உரிமை - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் அறியும் உரிமை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 2:11 am

First topic message reminder :

தகவல் அறியும் உரிமை - Page 2 Makaltopstrip

தகவல் அறியும் உரிமை - Page 2 Makalgraph

தகவல் அறியும் உரிமைகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 2:24 am

தகவல் வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட பகுதியிலிருந்து பிரித்தளித்தல்


தகவலினை பெறுவதற்கான கோரிக்கையானது, வெளியிடுவதிலிருந்து விலக்களிக்கப் பட்டிருக்கிற தகவலுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்கிற காரணத்தால் நிராகரிக்குமிடத்து,

வெளியிடுவதிலிருந்து விலக்களிப்பட்ட பகுதியிலிருந்து, நியாயமான முறையில் பிரித்தளிக்கப்படக் கூடிய தகவல் எதுவும் அளிக்கலாம். அவ்வாறு வழங்குமிடத்து, பொதுத்தகவல் அலுவலர்,

விண்ணப்பதாரருக்குக் கீழ்க்கண்ட அறிவிப்பை அளித்தல் வேண்டும்:-

1. வெளியிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட தகவலைக் கொண்டுள்ள பதிவுருவிலிருந்து பிரித்தெடுத்தபின், கோரப்பட்ட பதிவுருவின் பகுதி மட்டுமே அளிக்கப்படுகிறது என்றும்;

2. பொருண்மை பற்றிய எந்த முடிவையும் உள்ளடங்கலாக, அந்த முடிவுகளுக்கு ஆதாரமான பொருளைக் குறிப்பிட்டு, அந்த முடிவிற்கான காரணங்கள்;

3. அந்த முடிவினை அளிக்கின்ற நபரின் பெயர் மற்றும் பதவியின் பெயர்;

4. அவரால் கணக்கிடப்பட்ட கட்டணங்களின் விவரங்களையும், விண்ணப்பதாரர் வைப்பீடு

செய்யுமாறு கோரப்பட்ட தொகையையும் தெரிவித்தல்;

5. தகவலின் ஒரு பகுதியை வெளியிடாமை தொடர்பான முடிவை, மறு ஆய்வு செய்வதற்கு, பணி மூப்பு அலுவலர் அல்லது மாநில தகவல் ஆணையம் பற்றிய விவரங்கள்,கட்டணத்தொகை, தகவல் பெறும் முறை மற்றும் காலவரம்பு ஆகியவற்றைத் தெரிவித்தல் வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 2:25 am

விலக்களிக்கப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்கள்


தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி கீழ்க்கண்ட அலுவலகங்களுக்கு மக்கள் தகவல் பெற

அணுகுவதிலிருந்து விலக்களித்துள்ளது. அவை முறையே:

1. தனிப்பிரிவு-குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி.

2. கியூ பிரிவு - குற்றப்புலனாய்வுத்துறை சி.ஐ.டி.

3. தனிப்பிரிவு

4. பாதுகாப்புப்பிரிவு

5. கோர்செல் சி.ஐ.டி.

6. கருக்கெழுத்து அமைவனம்

7. மாவட்டத்தனிப்பிரிவுகள்

8. காவல்துறை ஆணையரப்புலனாய்வுப்பிரிவுகள்

9. தனிப்புலனாய்வு செல்கள்

10. ஆணையரகங்கள்/

11. மாவட்டங்களிலுள்ள நக்சலைட்டு தனிப்பிரிவு

12. குற்றப்பிரிவு சி.ஐ.டி.

13. தனிப்புலனாய்வுக்குழு

14. திரைத்திருட்டு பிரிவு

15. போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு அமைவனம்

16. கொள்கைக்கெதிர் பிரிவு

17. பொருளாதாரக் குற்றச்செயல்கள் சரகம் 1, 2

18. சிலைத்திருட்டுத் தடுப்புச் சரகம்

19. சிசிஐ டபிள்யூ குற்றப்புலனாய்வுத்துறை

20. குடிமைப்பொருள் வழங்கல்/குற்றப்புலனாய்வுத்துறை)

21. கணினி குற்றப்பிரிவு

22. மாவட்டக்குற்றம் - மாநகரக்குற்றப்பிரிவுகள்

23. சிறப்புப்பணிப்படை

24. பயிற்சிப்படை மற்றும் பள்ளி

25. கடலோரக் காவல்படை

26. விரல் ரேகைப்பிரிவு

27. காவல் துறை வானொலிப்பிரிவு

28. உள் (காவல் 6) துறை

29. உள் (கடும் மந்தணம்) துறை

30. பொது (கடும் மந்தணம்) புலனாய்வு மற்றும் ஒடுங்கமைவனம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 2:26 am

மூன்றாம் தரப்பினரின் தகவல்


பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடையதாக அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட அல்லது மூன்றாம் தரப்பினரால் ரகசியம் எனக்கருதப்படுகிற தகவல்கள், பதிவுருக்கள் அதன் பகுதிகள் எதனையும் வெளியிடுமிடத்து, அக்கோரிக்கை பெற்ற ஐந்து நாட்களுக்குள், அக்கோரிக்கையினைப் பற்றியும், அந்த தகவலை வெளியிட விரும்புகிறாரா என்றும் மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவிலான அறிவிப்பை அளிக்க வேண்டும். அதனுடன் மேற்படி தகவலை வெளியிட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது பற்றி எழுத்து வடிவிலோ அல்லது வாய்மொழியாகவோ தனது கருத்தினை அனுப்புமாறு மூன்றாம் தரப்பினரைக் கோருதல் வேண்டும்.

மேலும், அந்த தகவலை வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கும்போது, மூன்றாம் தரப்பினரால் அளிக்கப்பட்ட கருத்தினை கவனத்தில் கொள்ளல் வேண்டும். மேற்படி அறிவிப்பு சார்பு செய்யுமிடத்து, அந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள், அந்தத் தகவலை வெளியிடுவதற்கு எதிராக முறையீடு செய்வதற்கு மூன்றாம் தரப்பினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். பொதுத் தகவல் அலுவலர், மூன்றாம் தரப்பினருடன் தொடர்புடைய தகவல்களை

வெளியிடுவது குறித்து முடிவு எடுத்து, அம்முடிவைப் பற்றிய அறிவிப்பை, மூன்றாம் தரப்பினருக்கு எழுத்து வடிவில் அளிக்க வேண்டும். அதனுடன் அம்முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் உரிமையையும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 2:27 am

மாநில தகவல் ஆணையத்தின் கடமைகள் மற்றும் அதிகாரங்கள்


இச்சட்டத்தின் செயல்பாட்டை மேற்பார்வையிடுவதற்காக, பிரிவுகள் 12(1)-15(1) மைய மாநில தகவல் ஆணையங்கள் தனித்தியங்கும் மேல்முறையீட்டு அதிகார அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் பெறும் உரிமைச்சட்டம் பிரிவு 15-ன் படி, தமிடிநநாடு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டு, அவ்வாணையம், ஒரு மாநில தலைமை ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீடிந 07.10.2005 முதல் இயங்கி வருகிறது. எந்த ஒரு நபரிடமிருந்தும் கீடிநக்காணும் நிலைமைகளில் புகார்களைப் பெற வேண்டியது, மாநில தலைமைத் தகவல் ஆணையத்தின் கடமையாகும்:-

1. பொதுத் தகவல் அலுவலர் நியமிக்கப்படாததால் தகவல் கோரி விண்ணப்பிக்க இயலாத நிலைமை;

2. கோரப்பட்ட தகவல்கள் மறுக்கப்பட்ட நிலைமை;

3. தகவல் கோரி விண்ணப்பித்தும் அதற்குரிய காலக்கெடு கடந்த பின்பும் எந்த பதிலும் அளிக்கப்படாத நிலைமை;

4. நிர்ணயிக்கப்பட்ட கூடுதல்கட்டணம் நியாயமற்றதாக ஒருவர் கருதும் நிலைமை;

5. தனக்கு வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானதல்ல என்றோ, தவறான தகவல்கள் வழங்கப்பட்டன என்றோ ஒருவர் நினைக்கும் நிலைமை. இச்சட்டம் பிரிவு 18 ன்கீடிந ஆணையம்

விசாரணை தொடங்கலாம். நியாயமான காரணங்களின்கீடிந, உரிய விசாரணைக்கு உத்தரவிடுதல் வேண்டும். இப்பிரிவின் படி, ஒரு கோரிக்கையை விசாரிக்கையில், குடிமையியல் நீதிமன்றங்களுக்கு

நிகரான அதிகாரங்கள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவை முறையே:

1. நபர்களின் வருகைக்கு அழைப்பாணை அனுப்பி வலிந்து செயல்படுத்துதல்; வாய்மொழி அல்லது

எழுத்து பூர்வமான சாட்சியத்தை கொடுக்கவும் மற்றும் ஆவணங்களையும், பொருள்களையும் முன்னிலைப்படுத்த கட்டாயப்படுத்துதல்;

2. ஆவணங்களை கண்டறிந்து ஆய்வு செய்திட ஆணையிடுதல்;

3. பிரமாணப்பத்திரங்கள் மூலம் சாட்சியங்கள் பெறுதல்;

4. சாட்சிகள் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக அழைப்பாணை பிறப்பித்தல்;

5. குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொருள் குறித்து;

6. இச்சட்டத்தின்படி, அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களிலுள்ள பதிவுருக்கள் எதனையும் ஆடீநுவு செடீநுயலாம் மற்றும் அத்தகைய பதிவுருக்களை எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படலாகாது. கீழ்க்கண்ட அறிவுப்புகள் மூலம் ஆணையம் தனது முடிவுகளை இச்சட்டத்தின் பிரிவு 19 வகைமுறைகளுக்கு உட்பட்டு, சம்மந்தப்பட்ட அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவை முறையே,

1. குறிப்பிட்ட வடிவத்தில் தகவலை வேண்டுமிடத்து, அவற்றினை அவ்வடிவத்திலேயே அணுகிப் பெறுதல் ;

2. நேர்விற்கேற்ப, பொது தகவல் அலுவலர் ஒருவரை நியமித்தல் ;

3. குறித்த சில தகவலை அல்லது தகவலின் வகைகளை வெளியிடுதல் ;

4. பதிவுருக்களைப் பராமரித்தல், நிர்வகித்தல் மற்றும் அழிப்பதற்கு தொடர்புடைய நடைமுறைகளில், அவசியமான மாற்றங்களைச் செய்தல் ;

5. அலுவலர்களுக்கு, தகவல் பெறும் உரிமை சட்டம் மீதான பயிற்சிக்கு வகை செய்தலை மேம்படுத்துதல் ;

6. ஆண்டறிக்கை தயாரித்து அளித்தல். மேலும் ஆணையத்திற்கு தனது முடிவின் மீது கீடிநக்கண்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன :-

1. இழப்பு அல்லது பாதிப்பு உண்டாக்கிய பிற கேடு எதுவாகிலும், முறையீட்டாளருக்கு இழப்பீடு வழங்குமாறு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களை வேண்டுறுத்தும் அதிகாரம் ;

2. இச்சட்டத்தின்படி வகைசெய்யப்பட்ட தண்டனைகளில் எதனையும் விதிக்கும் அதிகாரம் ;

3. விண்ணப்பத்தினை ஏற்கவோ, மறுக்கவோ உண்டான அதிகாரம்,

இச்சட்டப்பிரிவு 19 (9)ன்படி, ஆணையம், மேல்முறையீட்டாளருக்கும், அரசு மற்றும் அரசு சார்ந்த

அலுவலகங்களுக்கும், தனது முடிவைக் குறித்த அறிவிப்பினைக் கொடுத்தல் வேண்டும்

அதனுடன் மேல்முறையீடு செடீநுவதற்கான உரிமை பற்றியும் கொடுத்தல் வேண்டும். பிரிவு 19(10)-ன்படி வகுத்துரைக்கப்பட்ட நடைமுறைக்கிணங்க, ஆணையம் மேல்முறையீட்டினை முடிவு செய்தல் வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 2:29 am

மேல்முறையீடு

முதல் மேல்முறையீடு :

குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள், கோரிக்கையின் மீது முடிவு பெற்றிராத அல்லது பொது தகவல் அலுவலர் முடிவின் மீது அதிருப்தி அடைந்த எவரும், அத்தகைய கால அளவு முடிவு பெற்றதிலிருந்தோ அல்லது அத்தகைய முடிவினை பெற்றதிலிருந்தோ, 30 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட துறையில், குறிப்பிட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு மேல் மட்டத்திலுள்ள ஒரு முதுநிலை அதிகாரியிடம் மேல் முறையீடு செடீநுயவேண்டும். எனினும் தவிர்க்க இயலாத காரணத்தினால் தாமதமாக முறையீடு செடீநுதால். விசாரணை அலுவலர் அந்த முறையீட்டை விசாரணைக்கு ஏற்கலாம். இதனை விசாரணை அலுவலர் முடிவு செய்வார். இச்சட்டத்தின் பிரிவு 11ன்படி, மூன்றாம் தரப்பினர் தகவலை வெளிப்படுத்துவதற்கு, பொது தகவல் அலுவலரால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செடீநுயுமிடத்து, ஆணையின் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், சம்மந்தப்பட்ட மூன்றாம் தரப்பினர் மேல்முறையீடு செடீநுது கொளல் வேண்டும்.

இரண்டாம் மேல் முறையீடு :

முதல் மேல் முறையீட்டின் மீது முடிவு எடுக்கப்பட்ட தேதியிலிருந்தோ அல்லது அந்த முடிவு பெறப்பட்ட தேதியிலிருந்தோ 90 நாட்களுக்குள் அந்த முடிவுக்கு எதிராக மாநிலதகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்ய உரிமையுண்டு மேலும் தாமதத்திற்கு உரிய காரணம் தெரிவிக்கப்பட்டால், 90 நாட்கள் கழிந்த பின்னரும் மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளலாம். முதல் மேல் முறையீட்டில் மூன்றாம் தரப்பினரின் தகவல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டிற்கு எதிராக பொது தகவல் அலுவலரின் முடிவு இருக்கும் பட்சத்தில், மாநில தகவல் ஆணையம் மூன்றாம் தரப்பினருக்கு கேட்கப்படுவதற்கு நியாயமான வாய்ப்பளித்தல் வேண்டும்.

இச்சட்டப்பிரிவு 19 உட்பிரிவு (1) மற்றும் (2)ன் படியான மேல்முறையீடானது, எழுதி பதிவு செய்யப்படவேண்டிய காரணங்களுக்காக, மேல்முறையீடு பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் அல்லது அது தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து மொத்தம் 45 நாட்களுக்கு

மேற்படாது, முடிவு செய்யப்படுதல் வேண்டும். தகவல் ஆணையத்தின் முடிவு கட்டுப்படுத்துவதாக இருக்கும்.

psrameshece இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 2:31 am

மேல்முறையீட்டு மாதிரி விண்ணப்ப படிவம்


பெறுநர்

( தகுதியுடைய அதிகாரி பற்றி குறிப்பிடப்படவேண்டும்)

1) விண்ணப்பதாரரின் முழுப்பெயர் :

2) முகவரி :

3) வேண்டப்படும் தகவல் விவரங்கள் :

4) வேண்டப்படும் தீர்வு :

5) தகவல் தொடர்புடைய துறை அல்லது அலுவலரின் பெயர்:

6) தகவலின் பொருண்மை :

7) தகவல் தொடர்புடைய பகுதி/ஆண்டு/இடம் :

8) தகவல் வேண்டப்படுவதின் நோக்கம் :

இடம் :

நாள் :

விண்ணப்பதாரரின் ஒப்பம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 2:32 am

தண்டனைகள்


மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும் தீர்மானிக்கும்போது:

1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ;

2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ;

3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன் மறுக்குமிடத்தும் ;

4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ;

5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/-

தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும். எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும்.

பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும்.

மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 23, 2009 2:33 am

தகவல் பெறுவதற்கான படிகள் சுருக்கமாக

1. தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 , பிரிவு 5ன் கீழ் பொது தகவல் அலுவலரிடம் மனு செய்தல் (சட்டப் பிரிவு 7(1)ன்படி தகவல் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் )

2. இச்சட்டப் பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீடு மேல் முறையீட்டு அலுவலருக்கு விண்ணப்பித்தல் (முதுநிலை பொது தகவல் அலுவலர்) விண்ணப்பம் பெற்ற 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட வேண்டும். சில நேர்வுகளில் 45 நாட்களுக்குள் தகவல் அளிக்கலாம்.

3. இச்சட்டப் பிரிவு 19(3)ன்கீழ் 2வது மேல் முறையீடு தமிழ் நாடு தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். (முதல் மேல்முறையீட்டு அலுவலரின் ஆணை பெற்ற 90 நாட்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பிக்க வேண்டும் )

4. இச்சட்டப் பிரிவு 19(9)ன்கீழ் தமிழ் நாடு தகவல் ஆணையம் தனது முடிவினையும் மற்றும் மேல்முறையீட்டுக்கான உரிமைகளையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும். மேற்கூறிய முடிவுகளால் பாதிக்கப்பட்டோர் பரிகாரம் வேண்டி நீதிப் பேராணை வழக்கு இந்திய அரசு அமைப்பு சட்டத்தின்கீழ் தொடரலாம்.

நன்றி:தகவல் அறியும் உரிமை - Page 2 Dina_logo

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 23, 2009 7:02 am

சூப்பர்

ஆங்கிலத்தில் தான் படித்து கொண்டிருந்தோம்

அழகு மற்றும் பழகு தமிழில் வெளியிட்ட சிவா சாருக்கு நன்றிகள் அன்பு மலர்

தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Sat Jan 26, 2013 8:46 pm

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். ஆனாலும் அந்தச் சட்டத்தால் என்ன பயன் என்றும் அந்தச் சட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்றும் – வழக்கறிஞர் திரு. கிறிஸ்டோபர் அவர்கள் விளக்கம் அளித்தார். அவ்விளக்கம்:

அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக் கூடைகளுக்குச் கூட செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு பொதுமக்கள் கேட்கும் தகவலைத் தர மறுத்தால் அரசு ஊழியர் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார். அவருக்கு தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.

இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

விண்ணப்ப மனு ஒரு வெள்ளைத் தாளில் கைகளால் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் அல்லது தட்டச்சு செய்து கொள்ளலாம். மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற வில்லையை ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாகக் கொடுக்க வேண்டும். இந்த நீதிமன்ற வில்லைகள், முத்திரைத்தாள் முகவர்களிடம் கிடைக்கும். நீதிமன்ற வளாகங்களிலும் கிடைக்கும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத் தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்னென்ன தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம் பெற வேண்டும்.

மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்க வேண்டும். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும். மனுக்களை நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்பலாம். தூதஞ்சல் (courier) மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு நகல் எடுத்து வைத்துக் கொண்டு அனுப்பிய பிறகு அஞ்சல் முத்திரையுடன் கூடிய ஆதாரச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.

வெளி நாடுகளில் வாழ்வோர் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக் கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களில் அதற்குண்டான முத்திரைக் கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

பொதுத் தகவல் தொடர்பு அதிகாரியிடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசத்தில் கிடைக்க வேண்டும். தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்தில் கிடைக்க வேண்டும். ஒரு நபரின் உயிர்ப் பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி தகவல் நேரத்தில் தர வேண்டும்.

நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்து கொள்ளலாம். உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்த வேண்டும்.

சாமானிய மக்கள் தாங்கள் அறிய விரும்பும் தகவல்களை உடனே தெரிந்துகொள்ள கொண்டுவரப்பட்டதே இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தின் மூலம் மக்கள் ஆட்சியின் மகத்துவம் உணர்த்தப்படுகிறது. நீங்கள் கேட்கும் தகவலைத் தர கடமைப்பட்டுள்ள அதிகாரிகள் உரிய பதிலைத் தர மறுத்தால் அவர் மீது வழக்குத் தொடுக்கலாம். இந்தச் சட்டத்தின் வழி பொதுமக்களுக்கு பல தகவல்களைப் பெற்றுத் தர தொண்டு நிறுவனங்கள் களப் பணி ஆற்றிவருகின்றன. இவைகளின் மூலமும் நாம் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி பலன் பெறுவோம்.




தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக