புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
68 Posts - 41%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
2 Posts - 1%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
1 Post - 1%
manikavi
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
319 Posts - 50%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
21 Posts - 3%
prajai
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:37 pm

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:48 am

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 PHOTO_06c


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:48 am

டி.வி.ஆர்., வரவேற்புரை

எழுத்தாளர் மாநாட்டில், "தினமலர்' நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்., நிகழ்த்திய வரவேற்புரையை அப்படியே தருகிறோம்:

"இது தமிழ் எழுத்தாளர் ஆறாவது மாநாடு என்பதை நீங்கள் அறிவீர்கள் இதன் வரவேற்புக் குழுத் தலைமை என்னும் பெருமையை எனக்கு அளித்த இந்த மாவட்ட எழுத்தாளர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"இன்று மாநாடு கூடும் இந்த ஜில்லாவைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்... தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது, அதங்கோட்டு ஆசான் தலைமையில் என்று வரலாறு கூறும். அந்த ஆசான் வாழ்ந்த ஊரான ஆதங்கோடு இங்கிருந்து பத்து மைல் தூரத்தில் தான் இருக்கிறது. இங்கு எத்தனையோ தமிழ் அறிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள். ஸ்ரீமான்கள் கே.என்.சிவராஜபிள்ளை, செய்கு தம்பி பாவலர், தசாவதானம் ஆறுமுகம் பிள்ளை முதலானவர்களை நீங்கள் அறிவீர்கள். கவிமணி தேசிக விநாயாம் பிள்ளையைப் பற்றி அறியாத தமிழர்களே இல்லை எனலாம்.

"கலை உலகில் புகழ் பரப்பிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், டி.கே.எஸ்.சகோதரர்களும் இந்த ஜில்லா மக்களே. "நீலத்திரைக் கடல் ஓரத்தில் நித்தம் தவம் செய்யும் குமரி' எங்களை எப்பொழுதுமே காத்துக் கொண்டிருக்கிறாள்.

"நாங்கள் அண்மைக் காலம் வரை மலையாள நாட்டுடன் இணைந்திருந்தோம். பெரிய போராட்டம் நடத்தி இப்போதுதான் தமிழகத்தோடு இணைய முடிந்தது. மலையாளச் சூழ்நிலையில் இருந்தும் கூட, இந்தப் பகுதி, தாய் மொழிக்கு எவ்வளவு தொண்டு செய்திருக்கிறது என்பதை நீங்கள் சற்று ஊன்றிக் கவனிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய விசேஷ அழைப்பின் பேரில் இங்கு வந்திருக்கும் எழுத்தாளர் பெருமக்களையும், ஏனைய பெரியோர்களையும் நான் இந்த மாவட்ட மக்களின் சார்பில் பிரதிநிதியாக நின்று வரவேற்கிறேன். நீங்கள் இங்கு வந்து எங்களைக் கவுரவப்படுத்தியதற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:49 am

"பெரியோர்களே!

"எழுத்தாளர்கள் யார் என்று பார்ப்போமாயின், கம்பர், காளிதாசன், முதல் இன்று ஒரு சிறிய பத்திரிக்கைக்கு கதை எழுதுபவராக உள்ள எல்லாருமே ஒரே வர்க்கம்தான். தமிழ் எழுத்தாளர்கள் பாரதத்தின் இதர மொழி எழுத்தாளர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. ஒருபடி மேலாகக் கூடச் சொல்லாம். புதிய படைப்பிலோ, மொழிபெயர்ப்பிலோ, தழுவலிலோ தமிழ் மொழி வேகமாக முன்னேறி வருகிறது. ஆட்சி மொழியாகி, கல்லூரி மொழியாகவும் ஆகிவிட்டால், அது தன் முழுப் பொலிவுடன் விளங்கத் தொடங்கும். அப்போது இன்றிலும் பன்மடங்கு எழுத்தாளர்கள் நாட்டில் தோன்றுவர். அவர்களுக்குக் கவுரவத்தோடு நல்ல ஊதியமும் கிடைக்கும். இன்று தமிழ்நாட்டில் கல்வியறிவு மேற்கு நாடுகளைப் போலவோ, அண்டையிலுள்ள கேரளத்தைப் போலவோ கூடப் பரவ வில்லை. அப்படியிருந்தும், தமிழ் தின, மாத, வாரப் பத்திரிக்கைகள் எல்லாம் இந்தியாவிலேயே கூடுதல் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கின்றன. நூற்றுக்கு நூறு என்ற கல்வி நிலை எய்திவிட்டால் எழுத்தாளர்களுக்கு ஒய்வு எடுக்க முடியாத நிலை வந்து விடும். அவர்களுக்கு ஒளிவீசும் எதிர்காலம் அப்பொழுது உண்டு.

"தமிழ்மொழிக்குப் பாரம்பரியமும், மாபெரும் வரலாறும் உண்டு. அவற்றை நன்றாக உணர்ந்துதான் பாரதியார் புதிய வழிகளை நமக்குக் காட்டினார். "நறை செவிப் பெய்தன்ன' என்ற கம்பனின் சொற்றொடரைத் "தேன் வந்து பாயுது காதினிலே,' என்று புதிய சிருஷ்டி போல் தந்த வியப்பைப் பாருங்கள். நாமும் நம் முன்னோர் தந்த கருவூலத்தைக் காப்பாற்ற வேண்டும். நம்மில் பலர் உலகத்திலுள்ள எல்லா மொழிகளையும் கற்று அதன் சாரத்தை எல்லாம் நம் தாய்மொழியில் கொணரச் செய்ய வேண்டும். ரஷ்ய மொழி விஞ்ஞானத் துறையில் ஆங்கிலத்தை விட முன்னேறிவிட்டது என்று "ஹாலடேன் ' எழுதியிருக்கிறார். ரஷ்ய மொழியை நம்மில் அநேகர் கற்று விஞ்ஞான அறிவைத் தமிழில் வளர்க்க வேண்டும்.

"விஞ்ஞானத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் பொழுது பல சிரமங்கள் ஏற்படலாம், அவற்றைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆரம்பத்தில் ஒரு வித மணிப்பிரவாள நடையோடு எழுதினாலும் குற்றமில்லை. காலப் போக்கில் அது மாறி நல்ல உருவில் அமைந்து விடும். தமிழில் வசனமும் ஆரம்ப காலத்தில் வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கொண்டு ஒரு மணிப்பிரவாள நடையாகத்தான் இருந்தது. இப்பொழுது அந்த நடை முற்றிலும் மாறித் தனக்கென ஒர் உயர்ந்த பாணியில் மிளிருகிறதல்லவா!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:49 am

"வடமொழியில் எத்தனையோ தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். பேனாவின் சக்தி, வாளின் சக்தியை விட மிஞ்சியது என்று ஒரு பெரியார் சொன்னார். நாம் வாளைப் போல் அழிவுப் பாதையில் நம் பேனாவை செலுத்தாமல் ஆக்க வேலைக்குப் பயன்படுத்துவோம் என்று விரதம் கொள்ளுவோமாக.

"தமிழை உலகப் பெருமொழிகளில் ஒன்றென ஆக்குவது நமது கடமை. அதைச் செய்தே தீருவோம். லிபி சீர்திருத்த விஷயத்திலும் நாம் முன்னேற்றக் கொள்கைகளைக் கடைப்பிடித்தல் நலம். எழுத்தாளர்கள் என்றுமே வறுமை நிலையில் இருப்பவர்கள் என்ற அவலச் சொல்லை மாற்றி அவர்களை மேம்பாடுறச் செய்யும் வழிகளை வகுத்தல் வேண்டும்.

"நமது தலைமை அரசாங்கம் இப்பொழுது எழுத்தாளர்களைக் கொஞ்சம் கவனிப்பதாகத் தெரிகிறது. நம்முடைய சுதந்திரத்திற்குப் பங்கம் வராமல் பார்க்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. நாமும் நம்மை அறியாமல் அரசாங்கம் என்ற பொறியில் விழுந்து விடக்கூடாது.

"மாநாட்டின் தலைவராக வீற்றிருக்கும் ஸ்ரீ சாமிநாத சர்மா, ஒரு சிறந்த எழுத்தாளர். தமிழகத்தில் அரசியல் அறிவினை முதிரச் செய்த தொண்டர்களுள் ஒருவர். சிறந்த பத்திரிக்கை ஆசிரியராக விளங்கியவர். பண்பட்ட உள்ளமும், ஒழுக்கமும் சொல்லும் நிரம்பியவர். அவர்கள் இந்த மாநாட்டைச் சிறப்புற நடத்தித் தருவார் என்பது திண்ணம். நமது வேண்டுகோளுக்கிணங்கி இதைத் திறந்து வைக்க வந்திருக்கும் பெரியவர் மத்திய கலாச்சார மந்திரி, பாரத நாட்டிற்குப் பெருமை அளிக்கும் தலை சிறந்த கல்வி அறிவாளர்களுள் ஒருவர். சொல் திறனும், எழுத்துத் திறனும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர். ஆளும் திறனும் உண்டு என்பதனை உலகுக்கு எடுத்துக் காட்டுபவர். அவர்கள் இப்பணியை ஏற்றது நமது பாக்கியமே! ("தினமலர்' செய்தி, ஜூன் 1, 1958)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:50 am

"தமிழ்நாடு' பெயர் சூட்டுக!

தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடக்க நாளில் "தினமலர்'ப் பத்திரிக்கையில் டி.வி.ஆர்., எழுதிய தலையங்கம்.

"நமது ராஜ்ஜியத்தின் பெயரைத் "தமிழ்நாடு' என மாற்றும்படி தமிழ் எழுத்தாளர்கள் கோரியிருக்கின்றனர். இந்தப் பெயர் மாற்றக் கோரிக்கை திடீரென உதித்துள்ள புதிரல்ல. ராஜ்யப் பிரிவினை விவகாரம் தோன்றிய நாள் தொட்டுக் கோரப்படும் கோரிக்கை ஆகும். இந்தக் கோரிக்கையை எக்காரணம் கொண்டோ அதிகாரத்தில் இருப்பவர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்த அலட்சியம் அகம்பாவத்தின் சின்னம் என்று கூட எதிர்க்கட்சிகள் கூறித் தீர்த்து விட்டன. "தமிழ்நாடு' என்று பெயர் சூட்டும்படி கோரி உயிர்த்தியாகம் வரையிலும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பதவியில் இருப்பவர்கள் அசைய வில்லை. சென்னையில் மிகப் பெரும்பான்மைக் கட்சியாகக் காங்கிரஸ் விளங்கி வருவதால், அக்கட்சிக்குச் சர்வாதிகாரமாக நடக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. அந்த மெஜாரிட்டி பலத்தை மனத்தில் கொண்டு, அடம் பிடிப்பது எந்த விதத்திலும் உகந்த நடவடிக்கையாக முடியாது. "தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் கோருவது சாதாரணமான விஷயமே.

"அந்த விஷயத்தின் மீது இவ்வளவு சிக்கல்களை ஏற்படுத்துவது எதற்கு என்று தெரியவில்லை. காங்கிரஸ்காரர்களில் மெஜாரிட்டியினரும் "தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டுவதை விரும்புகின்றனர். கட்சிக் கட்டுப்பாட்டின் காரணமாக அவர்களுக்கு இதர கட்சியிரைப் போல பகிரங்கமாகக் கூற முடியவில்லை. சென்னையிலுள்ள காங்கிரஸ்காரர்கள், தங்கள் கமிட்டியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று அழைத்து வரும் போது தாங்கள் வசிக்கும் ராஜ்ஜியத்தை மட்டும் "தமிழ் நாடு' என்று அழைக்கத் தயங்குவானேன்?

"சென்னை ராஜ்ஜிய மக்கள் அனைவருமே மொழியின் பேரால் பெயர் வழங்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர், தி.மு.க., தி.க., தமிழரசுக் கழகம், பி.சோ., கட்சி, கம்யூ, கட்சி ஆகிய எல்லாக் கட்சிகளுமே "தமிழ்நாடு' என்ற பெயரை எதிர்பார்க்கின்றது. அங்ஙனம் எல்லாரும் ஒருமுகமாக விரும்பும் அப்பெயரை உடனே சூட்ட வேண்டிய கடமைதான் அரசாங்கத் தலைமையாரின் கடமையாகும்.

"அரசியலோடு சம்பத்தப்படுத்திக் கொள்ளாத எழுத்தாளர் சங்கத்தினரும் "தமிழ்நாடு' என்று பெயரிட வேண்டும் என்று விரும்புவதையாவது மதித்து அவர்களின் கோரிக்கையை அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:50 am

அரசாங்க அலுவல் மொழி தமிழாக மாறிவரும் இக்கட்டத்தில் ராஜ்ஜியத்தின் பெயரை மட்டும் "தமிழ்நாடு' என்று மாற்றாமல் இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? மலையாளம், கன்னடம், ஆந்திரம் ஆகிய பகுதிகள் சென்னையோடு இருந்த போது இருந்த பெயரே இப்போதும் தொடரட்டும் என்று கூறுவது வெறும் விதண்டாவாதம். "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாரதியார் பாடினார். அந்தப் பாரதியின் சொல் நடைமுறை சாத்தியமாக வேண்டியது முக்கியம்.

"தமிழ்நாடு' என்று பெயர் ஏற்படும் பொழுதுதான் தமிழுக்கும், தமிழர்களுக்கும் இயற்கையான பெருமிதம் ஏற்பட முடியும். எந்தப் பெயர் இருந்தால் என்ன? என்றெல்லாம் கூறுவது வெறும் வேதாந்தமே. தமிழர்களுக்கென்று தமிழின் பெயர் விளங்கும் ராஜ்ஜியம் தேவை. தமிழர்களின் கலை, பண்பு, கலாச்சாரம் ஆகிய அனைத்தும் முன்னேறத் "தமிழ்நாடு' என்று தனிப்பெயர் தேவை. இந்தத் தேவையை உணர வேண்டும். உணர்ந்தால் பெயரை மாற்றிக் கொள்வதில் கஷ்டம் இல்லை. "தமிழ்நாடு' என்ற பெயரை இதரக் கட்சியினர் விரும்புவதை அரசியல் நோக்கோடு அரசாங்கம் கருதினாலும் எழுத்தாளர்கள் விஷயத்தில் அதேக் கண்ணோட்டம் ஏற்பட வேண்டியதில்லை. "தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றத்திற்காக அவர்கள் இதுவரையிலும் எழுதியும், பேசியும் வருவது தெரிந்ததே. எனினும் அதற்குப் பரிகாரமும் கிடைக்கவில்லையானால் அவர்கள் மனவேதனை அடைவது இயற்கையே. அரசாங்கம் இனியும் வீண்சடங்குகளுக்கு வழி வகுக்காமல் விரைவில் "தமிழ்நாடு' என்ற பெயர் மாற்றத்திற்கு முன் வருவார்களாக?'

* டிசம்பர் 1, 1968 முதல் தான் "தமிழ்நாடு' என்ற பெயர் அண்ணாத்துரை முதலமைச்சராக இருந்த போது சூட்டப்ட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:51 am

'கல்கி' இதழ் கட்டுரை
(லால்குடி கிருஷ்ணமூர்த்தி)

தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி ஜூன் 6, 1958 கல்கி இதழில் எழுதப்பட்ட கட்டுரையின் சுருக்கம்:
எழுத்தாளர் பெருமக்களே! வருக! வருக! மாநில மாநாட்டுத் தலைவர் அவர்களே வருக! புத்துலகச் சிற்பிகளே வருக! வருக!

ஆறாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டை அணி செய்ய வந்துள்ள அழியாப் புகழ் வாய்ந்த அறிஞர்களே வருக! வருக! வருக!

உங்கள் அனைவரையும் எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராகிய நாகர்கோவில் மக்கள் சார்பில் மனமார மகிழ்வுடன் வரவேற்கிறோம். எழுத்தாளர்களாகிய உங்களுக்கு ஒரு சேர நல் வரவேற்பு வழங்கும் வாய்ப்பினைத் தமிழகத்தில் பெற்றுள்ள முதல் நகர்மன்றம் "நாகர்கோவில்' நகர்மன்றமே என்று எண்ணும்போது எங்கள் இதயம் இன்பக் கடலாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:51 am

நாகர்கோவில் நகர மன்றத்தார் அளித்த இந்த வரவேற்புரையைக் கேட்டவுடன் எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. எழுத்தாளர்களுக்கா இத்தகைய வரவேற்பு? இத்தனைப் புகழ்ச்சி மொழிகள்!

ஆட்சிப் பீடத்தில் உள்ள அமைச்சர்களையும், பெரிய பெரிய அரசியல் தலைவர்களையும் மட்டுமே வரவேற்றுப் பெருமை சூடிக் கொள்ளும் நகர்மன்றம் அமைச்சர்களையும், காவியக் கலைஞர்களையும் உருவாக்கும் எழுத்தாளர்களுக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்துத் தன்னுடைய நிலையை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்று வியந்து கொண்டிருக்கும் பொழுது...!

"என்ன அண்ணாச்சி இங்கேயே நிக்கிறீங்களே, ஊர்வலம் கிளம்பி விட்டதே,' என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த அன்பர் ஒருவர் என் தோளில் கைவைத்துக் குலுக்கினார். ஊர்வலத்தை நோக்கி விரைந்தேன்.

பாண்டும், மேளமும் முழங்க அலங்கரிக்கப்ட்ட யானை முன் செல்ல மாநாட்டுப் பிரதிநிதிகளும் நகர்ப் பொது மக்களும் சூழ்ந்திருந்த காரில் மாநாட்டுத் தலைவர் ஸ்ரீ வே.சாமிநாத சர்மா அவர்களும், அமைச்சர் ஸ்ரீ ஹுமாயூன் கபீர் அவர்களும், திருவாளர்கள் எஸ்.குண்டப்பா, எஸ்.சங்கரராஜ் நாயுடு, ப.ஜீவானந்தம், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் டி.வி.ராமசுப்பையர் முதலியோரும் பவனி வந்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அங்கங்கே பலர் தலைவர்களுக்கு மாலை சூட்டி மகிழ்ந்தனர். இதுவரையில் இது போன்ற ஒரு மாபெரும் ஊர்வலத்தை நாகர்கோவில் கண்டதேயில்லை என்று பேசிக் கொண்டனர்.

"வழக்கம்போல் சென்னையிலேயே இந்த ஆறாவது தமிழ் எழுத்தாளர் மாநாடும் நடந்திருந்தால் இத்தகையதொரு காட்சியைக் கண்டிருக்க முடியுமா? "என்று யாரோ கூறியதும் என் காதில் விழுந்தது. ஊர்வலம், மாநாடு நடைபெற இருக்கும் சேது லட்சுமிபாய் உயர்தரப் பாடசாலைக் கட்டடத்தை அடைந்தது. அந்தக் கட்டடத்தைப் பார்த்து, இது உயர்நிலைப் பள்ளியா? மாபெரும் கல்லூரியா? என்று வியக்காதவர்களே கிடையாது. வீதி மட்டத்தில் இருந்து 50 அடி உயரத்திற்குப் படிப்படியாக உயர்ந்து கம்பீரமாகக் காட்சியளித்தது. அந்தப் பள்ளி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:52 am

அதற்குள் ஒலிப் பெருக்கியில் பித்துக்குளி முருகதாசின் பிரார்த்தனை கீதம் கணீரென்று ஒலித்து அனைவரையும் மெய்மறக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் திரு.டி.வி.ராமசுப்பையர் தமது அழகிய வரவேற்புரையை நிகழ்த்தினார்.


தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 12 PHOTO_06d


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:55 am

தமது கருத்துச் செறிவு நிறைந்த தொடக்க உரையில் மத்திய அமைச்சர் ஹுமாயூன் கபீர் அவர்கள் குறிப்பிட்டதாவது:

"இந்திய மொழிகளில், எதற்கும் இல்லாத தனிச்சிறப்பு தமிழுக்கே உண்டு இலக்கிய வளம் நிறைந்தது தமிழ். இனிமை மிக்கது தமிழ் மொழி.



"ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைப் பேரிலக்கிய வளம் நிறைந்த மொழி தமிழே. அது மட்டும் அல்ல, சங்கிலிக் கோவை போல் தடைபடாத விடுபடாத நீண்ட மரபு, தமிழைப் போல் வேறெந்த மொழிக்குமே கிடையாது. ஆண்டுகள் பல்லாயிரம் ஆன பின்பும் இளமைப் பொலிவு குன்றாக் கன்னி மொழி இது.

"அரசியல் ஆதரவு காரணமாக எந்த மொழியும் வளர்வதில்லை, வாழையடி வாழையாகப் பல எழுத்தாளர்கள் தோன்றி மொழிகளை வளம் குன்றாமல் செய்து வந்தார்கள் என்றுதான் சரித்திரம் கூறுகிறது.

"தாகூரின் அறிவத் திறத்தால் வங்காள மொழி சிறந்த மொழியாகி விட்டது. எனவே, அம்மொழி மாகாண மொழியாவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. பல ஐரோப்பிய நாடுகளில் வங்காள மொழி கற்பிக்கப்படுகிறது என்றால் அதற்கு அரசியல் மறைகளோ, பொருளாதாரத் தத்துவங்களோ காரணம் அல்ல. வற்றாத ஊற்றுப் போன்ற அரும்பெரும் கருத்துக்கள் அடங்கிய நூல்களைத் தாகூர் அம்மொழியில் எழுதி அதை வளப்படுத்தி இருப்பதே காரணம்.

"தமிழ் எழுத்தாளர்களும் இதைக் கடைப்பிடித்து கலை அழகும் கருத்தழகும் செறிந்த நூல்களை உருவாக்குவார்களானால் அவர்கள் பெரிய சாதனைகளைச் செய்தவர்கள் ஆவார்கள்.

Sponsored content

PostSponsored content



Page 12 of 14 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக