புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_m10நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 20, 2010 10:30 am

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நின்றிருந்த ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 64 பேர் பலியாயினர். இன்று அதிகாலையில் நடந்த விபத்தில் மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. ரயில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு , தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஸ் கட்டர்கள் மூலம் ரயில் பெட்டிகளை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமுற்ற 100 க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மே., வங்கம் பாகர்பூரில் இருந்து, வனன்சால் எக்ஸ்பிரஸ் ரயில் ராஞ்சிக் நோக்கி புறப்பட்டது. பீர்பூம் மாவட்டம் சாயிந்தியா ரயில் நிலையத்தில் நின்ற போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்நேரத்தில் வந்த உத்தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வனன்சால் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. ரயில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்டன. என்ன நடக்கிறது என்று அறியாத பயணிகள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் சுமார் 50பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இன்று ( 20 ம் தேதி ) காலை 2 மணி முதல் 3 மணிக்குள் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. இதனையடுத்து பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்வே துறை அமைச்சர் மம்தா சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

ஒரே பிளாட்பாரத்தில் ரயில் வந்தது எப்படி : ஒரே பிளாட்பாரத்தில் நேருக்கு நேர் ரயில் வந்தது எப்படி இதற்கு காரணமானவர்கள் யார் உத்தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நிற்க வேண்டிய தருணத்தில் மிக வேகமாக வந்ததாக அருகில் நின்று கொண்டிருந்த பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மீட்பு பணியில் ராணுவம் : சம்பவம் நடந்த இடத்திற்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7 அதிகாரிகள் தலைமையில் 160 ராணுவ வீரர்கள் சென்றனர். விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காயமுற்றவர்களுக்கு உதவிக்தொகையும், ‌ரயில்வேயில் வேலை வாய்ப்பும் வழங்கப்படும் . விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் கூறுகையில்; இந்த சம்பவம் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரயில்வே சம்பவத்திற்கு முன்னாள் ரயில்வே துறை அமைச்சர்கள் லாலுபிரசாத் யாதவ் , ராமர்விலாஸ் பஸ்வான் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். ரயில்வேயின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம் என்றனர். காங்., தலைவர் சோனியாவும், பா.ஜ., தரப்பிலும் விபத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவி்த்துள்ளனர்.



ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 20, 2010 10:31 am


பேர் பலியான ரயில் விபத்தின் பின்னணியில் சதி?

சைந்தியா : மேற்கு வங்க மாநிலம் பிர்கம் மாவட்டம் சைந்தியா ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் மீது, வேகமாக வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மோதியதில், மூன்று பெட்டிகள் சுக்கல், சுக்கலாக நொறுங் கின; 62க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர்;150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சமீப நாட்களில் நடந்த இரண்டாவது பெரிய ரயில் விபத்து சம்பவத்தில் சதி இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலம் கூச்பெகர் - சீல்டா இடையே உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு சீல்டா நோக்கி புறப்பட்டது. நேற்று அதிகாலை 1.54 மணி அளவில் பிர்காம் மாவட்டம் சைந்தியா ரயில் நிலையத்தை நெருங்கியது. நான்காம் எண் பிளாட்பாரத்தில் அந்த ரயில் நிற்க வேண்டும்.ஆனால், ரயில் நிலையத்திற் குள் நுழைய அந்த ரயிலுக்கு சிக்னல் தரப்படவில்லை. ஏனெனில், இந்த ரயில் சென்று நிற்க வேண்டிய நான்காம் எண் பிளாட்பாரத்தில் ஏற்கனவே பகல்பூர் - ராஞ்சி இடையே இயக்கப்படும் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. ஐந்து மணி நேரம் தாமதமாக வந்த அந்த ரயில், அங்கிருந்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

மோதல்: சிக்னல் தரப்படாததால், சைந்தியா ரயில் நிலையத் திற்கு வெளியே நிற்க வேண்டிய உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் அதற்கு மாறாக, சிக்னலை மீறி அசுர வேகத்தில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. நான்காம் எண் பிளாட்பாரத்திற்குள் வந்த அந்த ரயில், அங்கு நின்று கொண்டிருந்த வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்பகுதியில் பயங்கர வேகத்தில் மோதியது.மோதிய வேகத்தில், வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் சுக்கு நூறாக உடைந்து சிதறி, இரும்புக் குவியல்களாக மாறின. இதில், இரண்டு பெட்டிகள் பொதுப் பெட்டிகள்; அதில், ஒரு பெட்டி, ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே நடை மேம்பாலத்தின் மீது ஏறி நின்றது.சேதமடைந்த ரயில் பெட்டிகளில்,முன்பதிவு செய்யாத பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்தனர். அதேபோல், மோதிய உத்தர்பங்கா ரயிலின் இரண்டு பெட்டிகளும் கடும் சேதமடைந்தன; அதன் இன்ஜினும் இரும்புக் குவியலானது.உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் மோதிய வேகத்தில் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் உடைந்து சிதறியதால், அவற்றின் பாகங்கள் அங்கிருந்த ரயில் பாதைகளில் எல்லாம் சிதறிக் கிடந்தன.

இந்த கோர விபத்தில், உத்தர் பங்கா எக்ஸ்பிரசின் டிரைவர் எம்.சி.டே, உதவி டிரைவர் என்.கே.மண்டல், வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டு முகர்ஜி என, ரயில்வே ஊழியர்கள் மூன்று பேர் உட்பட 62 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.விபத்து நிகழ்ந்த போது, பயணிகள் எல்லாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். என்ன நிகழ்ந்தது என்பது தெரியாமலேயே உயிரை விட்டனர். மோசமாக சேதமடைந்த பெட்டிகள், கேஸ் கட்டர்கள் மூலம் துண்டிக்கப் பட்டு இறந்த பலரின் உடல்கள் மீட்கப்பட்டன.மேலும், ரயில்வே நடை மேம்பாலத்தில் ஏறி நின்ற பெட்டியை கிரேன் மூலம் அகற்றி சாதாரண நிலைக்கு கொண்டு வந்து, அதிலிருந்த பயணிகளின் உடல்களை மீட்பது, மீட்புப் படையினருக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள், வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்கள்.

சம்பவம் நிகழ்ந்த இடம் கோல்கட்டாவிலிருந்து 191 கி.மீ., தொலைவில் உள்ளது.விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும், ரயில்வே உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். "இந்த விபத்திற்கு சதியே காரணம்' என, அமைச்சர் மம்தாவும், கிழக்கு ரயில்வே பொது மேலாளர் வி.என்.திரிபாதியும் கூறினர்.

திரிபாதி மேலும் கூறுகையில், ""உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில், சைந்தியா ரயில் நிலையத்திற்குள் நுழைந் துள்ளது. ஏன் அப்படி வந்தது என்பது தெரியவில்லை. அதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். டிரைவர் நல்ல டிரைவர். இருந்தாலும், நடந்த சம்பவம் எங்களை திகைப்படைய வைக்கிறது. விபத்திற்கு சதியும் காரணமாக இருக்கலாம்; அதை மறுப்பதற்கில்லை,'' என்றார்.

உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டும். நிற்க வேண்டிய ரயில் ஏன் வேகமாக வந்தது என்பது தான் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு தரப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி
அறிவித்துள்ளார். மே.வங்க அரசும் இறந்தவர் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் தருவதாக அறிவித்திருக்கிறது.

சோனியா இரங்கல்: ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா, தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

விபத்தில் சந்தேக பின்னணி: மம்தா: ""ரயில் விபத்திற்கான காரணம் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எங்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. நடந்தவை தற்செயலாக நடந்தவை அல்ல. இந்த சதியின் பின்னணியில் உள்ளவர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்,'' என, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ரயில் விபத்து தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறுகையில், ""ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் உண்மை விவரம் தெரியவரும். உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், 25 நிமிடத்திற்கு முன்னதாக ஏன் வந்தது என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்துவர்,'' என்றார்.

ரயில்வே வாரிய தலைவர் விவேக் சகாய் கூறுகையில், ""விபத்து நிகழ்ந்த இடத்திற்கு ஐந்து கி.மீட்டருக்கு முன்னதாக ரயிலை டிரைவர் நிறுத்தியுள்ளார். அதன்பின் எப்படி ஐந்து கிலோ மீட்டருக்குள் 63 கி.மீ., வேகத்தில் உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது என்பது தெரியவில்லை.""இதுபோன்ற தவறை டிரைவர் செய்திருக்க முடியாது. சைந்தியா ரயில் நிலையத்திற்குள் வர சிக்னல் தரப்பட்டதா என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. அப்படியே சிக்கனல் கொடுக்கப்பட்டிருந்தாலும், சைந்தியா நிலையத்திற்குள் ரயில் மெதுவான வேகத்தில் தான் வந்திருக்க வேண்டும்,'' என்றார்.

ரயில் பயணிகள் பற்றி மம்தாவுக்கு அக்கறை உள்ளதா?எதிர்க்கட்சிகள் விமர்சனம்: மேற்கு வங்கத்தில் நேற்று நிகழ்ந்த ரயில் விபத்திற்கு கட்சித் தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, மம்தாவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "மேற்கு வங்க அரசியலில் தீவிர கவனம் செலுத்துவதால், மம்தாவால் ரயில்வே துறையை சிறப்பாக கவனிக்க முடியவில்லை' என்றும் விமர்சித்துள்ளனர்.

ரயில் விபத்து குறித்து கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள்:

தருண் விஜய் - பா.ஜ., தகவல் தொடர்பாளர்: ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் திறமை மீது, மக்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதில் அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா என்ற ஐயப்பாடும் எழுகிறது. ரயில்வே விவகாரத்தில் மம்தா பானர்ஜி கவனம் செலுத்த வேண்டும். மேற்கு வங்க அரசியலுக்கான ஒரு பிளாட்பாரமாக ரயில்வேயை மம்தா பயன்படுத்திக் கொண்டிருந்தால், அவரை இலாகா இல்லாத அமைச்சராக மாற்றுவதே சரியாக இருக்கும். மம்தா ரயில்வே அமைச்சரான பின், ஐந்து பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

சீதாராம் யெச்சூரி - மா.கம்யூனிஸ்ட்: அமைச்சராக இருக்கும் மம்தாவின் கவனம் வேறு எங்கோ இருக்கிறது. அதனால் தான், நாடு இப்படிப்பட்ட விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் தான் அதிக அளவில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதை பிரதமர் மன்மோகன் சிங் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ராம்விலாஸ் பஸ்வான் - லோக் ஜனசக்தி: மேற்கு வங்க அரசியல் வேண்டுமா அல்லது ரயில்வே அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை மம்தா பானர்ஜி முடிவு செய்ய வேண்டும். இரண்டையும் ஒன்றாக கொண்டு செல்ல முடியாது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏராளமான உயிர்கள் பலியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இது, ரயில்வே தரப்பில் நிகழ்ந்த தவறு. நக்சலைட் நடவடிக்கைகள் விபத்திற்கு காரணம் அல்ல; பனி மூட்டமும் காரணம் அல்ல. இது ஒரு துயர சம்பவம்.

நிதிஷ்குமார் - பீகார் முதல்வர்: மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்கும் முன்னரே, ரயில் பயணிகளின் பாதுகாப்பு முறைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. லாலுவின் காலத்தில் ரயில்வேயின் பாதுகாப்பில் அக்கறை காட்டதது, தற்போது மம்தாவிற்கு பெரும் பிரச்னையாகியுள்ளது. கொங்கன் ரயில்வேயில் அறிமுகப்படுத்தியது போல, ரயில்கள் மோதிக் கொள்வதை தவிர்க்கும் கருவிகள் பொருத்த எனது பதவிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், லாலு பதவியில் இருந்த போது அதை கண்டு கொள்ளவில்லை. மோதலை தவிர்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தால், இதுபோன்ற விபத்து நிகழ்ந்திருக்காது. மம்தா ஒரு ஆண்டாகத்தான் ரயில்வே அமைச்சராக உள்ளார். அதற்கு முன்னால் இருந்தவர்கள் செய்த தவறே தற்போதைய விபத்திற்கு காரணம்.

லாலு பிரசாத் யாதவ் - முன்னாள் ரயில்வே அமைச்சர்: இதுபோன்ற விபத்துகள் ஏன் நிகழ்கின்றன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது ஒரு துயரமான சம்பவம். குளறுபடி காரணமாகவே இது நிகழ்ந்துள்ளது.

பிரணாப் முகர்ஜி - மத்திய நிதி அமைச்சர்: விபத்து என்பது விபத்தே. விபத்து எப்போது நிகழும் என, யாரும் முன்பே சொல்ல முடியாது.

மனாஸ் பூனியா - மேற்கு வங்க காங்., தலைவர்: சைந்தியா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டது சதியே. இது பற்றி உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்த வேண்டும். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் சோனியாவுக்கு நாங்கள் அறிக்கை அனுப்புவோம்.

மீட்புப் பணியில் எல்லை ராணுவம் : ரூ.3 லட்சம் மே.வங்கம் நிவாரணம் : மேற்கு வங்க மாநிலம், சைந்தியா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் நிவாரண படையைச் சேர்ந்த ஐந்து குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.சேதமடைந்த பெட்டிகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்பதற்காக பானாகார்க் என்ற இடத்திலிருந்து "காஸ் கட்டர்கள்' கொண்டு வரப்பட்டன. தேசிய பேரிடர் மேலாண்மை படையினருடன் சேர்ந்து போலீசார் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் சூரி மற்றும் சைந்தியா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு செலுத்த போதிய ரத்தம் இல்லாததால், பர்த்வான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டது. அத்துடன் ரத்ததானம் செய்பவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ராம்புர்கத், பர்த்வான் மற்றும் அசன்சால் ஆகிய இடங்களில் இருந்து மருத்துவ வேன்கள் உட்பட மூன்று நிவாரண ரயில்கள் வரவழைக்கப்பட்டதால், நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றன. மருத்துவ வேனுடன் முதல் நிவாரண ரயில் அதிகாலை 3.30 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்தது. உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் துவங்கின.இந்த விபத்து காரணமாக, மால்டா டவுன் - ஹவுரா உட்பட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. மேற்குவங்க நிதி அமைச்சர் ஆசிம் தாஸ் குப்தா உட்பட அம்மாநில அமைச்சர்கள் சிலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு மே,வங்க அரசின் சார்பில் தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பெட்டிகளின் கூரை மீது சடலங்கள் : வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர வேகத்தில் மோதியதில், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் பலர் உடனே உயிரிழந்தனர். அவர்களில் சிலரின் உடல்கள் அடுத்த பெட்டிகளின் கூரை மீது விழுந்திருந்தன.சேதமடைந்த வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் பயணித்த பலரின் உடல்கள் மோதிய வேகத்தில் சிதைந்திருந்தன. அந்த பகுதி முழுவதும் ரத்தம் வழிந்தோடியது. சிதைந்த பெட்டி ஒன்றில் ஒரு குழந்தை வீறிட்டு அழுவது கேட்டது. அதை அறிந்த மீட்புப் படையினர் காஸ் கட்டர்கள் மூலம் அந்தப் பகுதியை வெட்டி எடுத்து குழந்தையை மீட்க முற்பட்ட போது, அது ஏற்கனவே உயிரை விட்டிருந்தது. உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் மோதிய வேகத்தில் வனாஞ்சல் எக்ஸ்பிரசின் பின்பகுதியில் இருந்த மூன்று பெட்டிகளில் ஒன்று, ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தின் மேலே ஏறி நின்றது. மற்ற இரண்டு பெட்டிகளும் சுக்கல் சுக்கலாக நொறுங்கின. மோதிய உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜினும் இரும்புக் குவியல்களாக உருக்குலைந்து போனது. அதிலிருந்த டிரைவரும், உதவி டிரைவரும் பலியாகினர். உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் பயங்கர வேகத்தில் வருவதை அறிந்த பிளாட்பாரத்தில் இருந்த நடைபாதை வியாபாரிகள் சிலர், வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டை எச்சரித்துள்ளனர். அவர் சுதாரித்து குதிப்பதற்குள் ரயில் மோதி அவரின் உயிரை பலிவாங்கி விட்டது.

தடுக்க அறிவித்த அறிவிப்பு வீண் : ""உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ், ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போது, அதை நிறுத்தும்படி ஒலி பெருக்கி மூலம் நாங்கள் பல முறை அறிவித்தோம். இருந்தாலும், ரயில் வேகமாக வந்ததால், அந்த அறிவிப்பால் பலன் இல்லாமல் போய் விட்டது,'' என, சைந்தியா ரயில் நிலைய உதவி ஸ்டேஷன் மாஸ்டர் புலக் சக்கரவர்த்தி கூறினார்.

இதுதவிர விபத்தை நேரில் பார்த்த சிலர் கூறியதாவது: சைந்தியா ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் அசுர வேகத்தில் வந்து வனாஞ்சல் எக்ஸ்பிரசின் பின்பகுதியில் மோதியது. அப்போது பயங்கர சப்தம் கேட்டது. முதலில் பாதுகாப்பு தேடி ஓடிய நாங்கள், பின்னர் திரும்பி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டோம். விபத்திற்கு உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் டிரைவர் தவறே காரணம். ரயில்கள் மோதியதும் தண்ணீர் பாட்டில்கள் உட்பட, ரயிலில் வந்த பயணிகள் வைத்திருந்த பொருட்கள் எல்லாம் பிளாட்பாரம் மற்றும் ரயில் பாதைகளில் சிதறிக் கிடந்தன. சாக்குப் பையால் சுற்றப்பட்டிருந்த மூன்று மோட்டார் பைக்குகளும் ரயில் பாதைகளில் விழுந்து கிடந்தன. சிதறிக் கிடந்த பொருட்களில் சில, வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் இருந்தவை. இவ்வாறு சம்பவத்தைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ரயில் நிலையத்திற்குள் 63 கி.மீ., வேகத்தில் வந்த ரயில் : உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சைந்தியா ரயில் நிலையத்திற்குள் வந்த போது, 63 கி.மீ., வேகத்தில் வந்ததாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:மேற்கு வங்க மாநிலம் கூச்பெகாரிலிருந்து சீல்டா நோக்கிச் சென்ற உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில், சயிந்தியா ரயில் நிலையில் நிற்க வேண்டும்; ஆனால், அது நிற்கவில்லை. அதற்கு பதிலாக பயங்கர வேகத்தில், அதாவது 63 கி.மீ., வேகத்தில் வந்து, வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியுள்ளது. இந்த சம்பவம், நேற்று அதிகாலை 1.53 மணி அளவில் நடந்துள்ளது. நிற்க வேண்டிய ரயில் நிலையத்தில் எப்படி 60 கி.மீட்டருக்கு மேலான வேகத்தில் ரயிலை டிரைவர் ஓட்டி வந்தார் என்பது வியப்பாக உள்ளது. ரயில் நிலையத்திற்குள் வரும் ரயிலை 20 கி.மீ., வேகத்தில் தான் டிரைவர் ஓட்டி வர வேண்டும். அதை விட 40 கி.மீ., அதிகமான வேகத்தில் ரயில் வந்துள்ளது. இந்த அடிப்படையான தவறை ரயில் டிரைவர் எப்படி செய்தார் என்பது பற்றி விசாரணை நடத்தப்படும். உத்தர்பங்கா ரயிலை ஓட்டி வந்த டிரைவர் எம்.சி.டே, விபத்தில்லாமல் ரயில்களை ஓட்டியதற்காக சமீபத்தில் பதவி உயர்வு பெற்றவர்.

மேலும், ரயிலை ஓட்டுவதற்கான பொறுப்பை மால்டா ரயில் நிலையத்தில் ஏற்கும் முன், நன்றாக ஓய்வெடுத்துள்ளார். சயிந்தியா ரயில் நிலையத்திற்கு முன்னதாக உள்ள பாலத்தில் 30 கி.மீ., வேகத்தில் தான் ரயிலை ஓட்டி வர வேண்டும். ஆனால், அதை மீறி நல்ல வேகத்தில் ஓட்டி வந்துள்ளார். விபத்து நிகழ்வதற்கு முன்னர், ராம்புர்கத் ரயில் நிலையத்தில் இதே ரயில் நின்றுள்ளது. அங்குள்ள ரயில்வே ஊழியர்களிடம் டே பேசியுள்ளார். அப்போது நன்றாகத்தான் பேசியுள்ளார். ரயிலை நல்ல முறையில் தான் அவர் ஓட்டி வந்துள்ளார் என்பதும் அதன் மூலம் தெளிவாகிறது. அவர் போதையில் ரயிலை ஓட்டி வந்தார் என்று சொல்ல முடியாது. ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 148 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்து இரண்டு மாதத்திற்குள் மீண்டும் ஒரு கோர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளதால், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விரிவான விசாரணை நடத்துவார். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் குடும்பத்தினருடன் பலியான பரிதாபம் : சயிந்தியாவில் நடந்த ரயில் விபத்தில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் பலியாகினர்.

மேற்கு வங்க மாநிலம் ஆசன்சாலைச் சேர்ந்தவர் பல்ராம். இவரது மனைவி சங்கீதா, மகள் சகுந்தலா. பாகல்பூரில் உள்ள சங்கீதாவின் சகோதரி பபிதா வீட்டில், சகுந்தலாவின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தூரத்து உறவினர் ஒருவர் தான் மாப்பிள்ளை. நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சகுந்தலாவும், அவரின் தந்தை பல்ராம், தாயார் சங்கீதா மற்றும் அத்தை ரேணுவும், வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊர் திரும்பினர். ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் அவர்கள் பயணித்தனர். அந்தப் பெட்டி மீது தான், உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், சகுந்தலா உட்பட நால்வரும் பலியாகினர். ""அனைவரையும் இழந்து விட்டோம். இனி எங்களுக்கு என்ன இருக்கிறது. நிச்சயதார்த்தத்தின் போது சகுந்தலா உட்பட அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். இப்போது எல்லாரையும் இழந்து விட்டோம்,'' என சங்கீதாவின் சகோதரி பபிதா கண்ணீர் மல்க கூறினார்.

அதே நேரத்தில், ககல்கானில் தன் மகள் பூஜாவின் திருமணத்தை முடித்து விட்டு, அவருடன் வனாஞ்சல் எக்ஸ்பிரசில் சொந்த ஊரான தன்பத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த விஜய் என்பவரும், அவரின் மனைவி துர்கா மற்றும் 12 வயது மகன் சோட்டு ஆகியோரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். ரயில்கள் மோதிய போது, அவர்கள் எல்லாம் வெளியில் தூக்கி எறியப்பட்டனர். தூக்கியெறியப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னரே தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்தனர். சிறிய காயங்கள் மட்டுமே அவர்களுக்கு ஏற்பட்டன.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 12:07 pm

நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Icon_eek நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  440806 நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Icon_eek




நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக