புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
2 Posts - 50%
viyasan
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
21 Posts - 4%
prajai
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_m10கைதுக்கு முன் சீமான் பேட்டி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைதுக்கு முன் சீமான் பேட்டி


   
   
avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Thu Jul 15, 2010 12:15 am

என் மீனவனை அடித்தால், உன் மாணவனை அடிப்பேன்!

இலங்கை போர்க் குற்ற விசாரணைக்கு ஆதரவாகவும், தமிழக மீனவர் படுகொலையைக் கண்டித்தும், கடந்த 10-ம் தேதி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், 'நாம் தமிழர் இயக்கம்' ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பேசிய சீமான், 'அடிக்கு அடி' என்கிற பாணியில், தமிழகத்துக்கு வரும் சிங்களர்களை அடிப்பேன் என்று பேச, கூட்டத்தில் ஏகமாக கை தட்டல்கள்!



உடனே, சீமான் மீது வழக்கு பதிவுசெய்தது போலீஸ். அவரைக் கைது செய்ய வீடு, அலுவலகத்துக்குப் படை யெடுத்தது. சீமான் தலைமறைவாகிவிட்டார். 12-ம் தேதி


காலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களைச் சந்திக்க வந்த சீமான், ஏக தள்ளு முள்ளுகளுக்கு இடையில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கைதுக்கு முன்பு அவரை, தொலைபேசியில் பிடித்தோம்.

''இந்த முறை சற்று பலமாகவே உங்களை வழக்குகள் துரத்தும்போல் இருக்கிறதே... அப்படி என்ன பேசினீர்கள்?''

''இலங்கையில் இறக்கிவிடப்பட்டுள்ள 25,000 சீனர்களில், 5,000 பேர் கைதிகள், 10,000 பேர் பயங்கர வாதிகள் என்று தகவல்கள் வருகின்றன. இதனால் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பேராபத்து. தமிழக மீனவனை சீனாக்காரன் வந்து சுடப்போகிறான் என்று எச்சரித்தால், அது தவறா? கொக்கு, குருவியை சுட்டால்கூட ஏன்னு கேட்கிற நாட்டில், இதுவரை 501 மீனவத் தமிழர்களைக் கொலை செய்திருக்கிறான். எல்லை தாண்டியதால் சுட்டோம் என்கிறான். எல்லை தாண்டும் சிங்களனை, இந்தியப் படை இது வரை தாக்கியதுண்டா? ஆனால், தமிழன் மட்டும் கொல்லப்படுவான். இதனால்தான் வெகுண்டு, 'என் தமிழனைக் கடலில் நீ அடித்தால், இங்கு படிக்கும் சிங்கள மாணவனை அடிப்பேன். சென்னை எழும்பூரில் புத்த விகாரைக்கு எந்தெந்த சிங்களன் வந்துபோகிறான் என்பது எனக்குத் தெரியும். திருப்பூரில் எங்கெங்கே சிங்களன் வேலை பார்க்கிறான் என்பது தெரியும். இங்கு பெரும் கடைகளை வைத்து வியாபாரம் செய்யும் சிங்களனை எனக்குத் தெரியும். என் மீனவனை அடித்தால், உன் மாணவனை அடிப்பேன்' என்று பேசினேன்!''



''இந்திய சட்டப்படி மட்டுமல்ல... 'பல்லுக்குப் பல்' என்பதெல்லாம் தவறுதானே?''

''இரு இனங்களுக்கு இடையில் கலவரத்தை, வன்முறையைத் தூண்டியதாக சொல்வது மிகப் பெரிய வேடிக்கை. நான் பேசி என்ன வன்முறை நடந்துவிட்டது இப்போது? எந்தக் காலத்தில் சிங்களனுக்கும் தமிழினத் துக்கும் நட்பு இருந்தது, நான் அதைக் கெடுக்க? இரண்டு இனங்களுக்கும் இடையில் 60 வருடப் பகை, யுத்தம் இன்னும் முடியவில்லை!''

''புதுச்சேரியில் ஒருமுறை தமிழகத் தலைவர்களை அதிர்ச்சிகரமாக ஒப்பிட்டு, 'இவர்களுக்கு இறையாண்மையைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?' என்று பேசி, பின்பு வருத்தம் தெரிவித்தீர்கள். அதைப்போல இப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டதாக நினைக்கிறீர்களா?''

''புதுச்சேரியில் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தது உண்மைதான். அதற்காகத்தான் சிறைவைத்து விட்டார்களே... இப்போது, உண்மையை... ஆழ்மனதில் இருந்து நேர்மையாகப் பேசி இருக்கிறேன். இதுவரையிலும் இனியும் நான் இப்படித்தான். என் பேச்சில் எங்காவது தவறு என யார் சொன்னாலும் அதைத் திருத்திக்கொள்ளத் தயார். சென்னையில் நான் பேசியதை ஊடகங்களில் வெளியிடாமல் தடுக்கிறார்கள். கருணாநிதிக்குத் துணிவு இருந்தால், நேர்மை இருந்தால், என் பேச்சை வரிவிடாமல் முழுமையாக வெளியிடவேண்டும். என் தமிழ் மக்கள் அதைத் தவறு என்று சொன்னால், அதற்காக ஆயுள் தண்டனையைக்கூட ஏற்றுக்கொள்வேன். இதற்கு அவர் தயாரா? நான் கேட்கும் கேள்விகளை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் பிரச்னை. சென்னையில்கூட, 'இலங்கையில் போர்க் குற்ற விசாரணைக்கு அமைக்கப்பட்டுள்ள குழுவை வரவேற்கச் சொல்லி, மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் போடுங்கள்' எனப் பேசினேன். அவரிடம் இதற்கு பதில் இல்லை. எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுகிறார். எவ்வளவோ நவீனம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் இது எவ்வளவு பெரிய நகைச்சுவை!

உலகத் தமிழன் இதைக் கண்டு சிரிக்கிறான். இப்படியே கடிதம் எழுதி ஒரு காலத்தில் அதையும் புத்தகம் போட்டு விற்கலாம். குடும்பத்தாருக்குப் பதவி வேண்டும் என்றால் மட்டும் நேரில் போகிறீர்களே... மீனவத் தமிழன் உயிர் மட்டும் அவ்வளவு அலட்சியமா?

பேச்சில், எழுத்தில் மட்டும், 'புறநானூற்றுத் தமிழனே, வரிப் புலி இனமே, சிங்கக் கூட்டமே சிலிர்த்து வா' என எழுதுகிறார். இவர் இப்படி எழுதுகிறாரே என்று பட்டிதொட்டியில் இருந்து எழுச்சியோடு வந்தால், 'சிங்களன் அடிப்பான்... கொஞ்சம் பொறுத்துக்கொள்' என்கிறார். அதற்கு நீங்கள் எங்களை உசுப்பேற்றாமல், 'மண்புழுவே, நாயே, நரியே' என எழுதி இருக்கலாமே? தன்மானம், இனமானம், சுயமரியாதை என்று சொல்வதெல்லாம் கூழைக் கும்பிடு போடுவதற்காகத்தானா? இனிமேல் புறநானூற்று தமிழ் வீரத்தைப்பற்றி எழுதுவதை இவர் நிறுத்தட்டும்!''

''ஈழ ஆதரவுத் தளத்தில் பல தலைவர்கள் தொடர்ந்து இயங்கினாலும், நீங்களும் உங்கள் அமைப்பும் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாவது ஏன்?''

''பொதுவாக இறையாண்மைக்கு எதிராகப் பேசிவிட்டதாக என் மீது வழக்குப் போடுவார்கள். இந்த முறை மட்டும் வன்முறையைத் தூண்டியதாக வழக்கு. நான் பேசியது வன்முறையைத் தூண்டுகிறது என்றால், என் மீனவத் தமிழனை ராஜபக்ஷேவின் சிங்களக் கடற்படை கொன்றது என்ன நன்முறையா? ஆனால், இதைப்பற்றி இங்கே பேசக் கூடாது. நான் எந்த ஊருக்கு, கூட்டத்துக்குப் போனாலும் தங்கும் விடுதியில் இடம் தரக் கூடாது என அரசு மிரட்டிவைத்துள்ளது. என் கார் எரிக்கப்பட்டது. இதுவரை வழக்கே பதிவு செய்யப்படவில்லை. ஒரே காரணம், சீமான் தமிழர்களைப்பற்றிப் பேசுகிறான். அவன் பேச்சை நிறுத்த வேண்டும். என் தம்பிகள் செயல்படக் கூடாது. அவர்கள் களத்தில் இறங்கவே அச்சப்படவேண்டும். இதுதான் ஆள்வோரின் எண்ணம்!''

''வெளிநாட்டுப் பிரச்னைகளைப் பேசி இங்கு பிரச்னை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளாரே?''

''என்னை முன்னிட்டு இந்த நாட்டில் ஒரு சட்டம் கொண்டுவந்தால், அதைவிட வேறு என்ன பெருமை இருக்க முடியும்? 'எதையும் சந்தேகி' எனக் கேட்கச் சொன்ன பெரியாரின் வாரிசு என சொல்பவர்களின் லட்சணம் இதுதான். சாகத் துணிந்துதான் போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறேன். 'ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததே இல்லை' என என் தலைவன் பிரபாகரன் சொல்வார். மான் ஓடிக்கொண்டே இருக்கிறது... நான் போராடிக்கொண்டே இருக்கிறேன்... இருப்பேன்!'


நன்றி

ஜூனியர் விகடன்[b]



தன்னம்பிக்கையுடன்
விருதை பாரி [embed-flash(width,height)]
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 15, 2010 6:44 am

யாரோ எங்கோ நெடுமாறன் மற்றும் சீமான் பற்றி தவறாக கூறியிருந்தார்கள் , அதாவது அவர்கள் சுநல வாதிகள் என்று ஆனால் என்னதான் அவர்களுக்கு லாபம் எனினும் ஒருவர் வாழ்கையில் நிம்மதி இல்லாமலும் சிறையிலும் வாழ விரும்ப மாட்டார்கள் , ஆனால் இவர்கள் ஈழதமிலாருக்காக இதை அனுபவிக்கின்றனர் .ஆகவே அவர்களை அவதூறு செய்யாமல் ஆதரவு அளிக்கவேண்டும் .



thiva
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Thu Jul 15, 2010 7:07 am

திவா wrote:யாரோ எங்கோ நெடுமாறன் மற்றும் சீமான் பற்றி தவறாக கூறியிருந்தார்கள் , அதாவது அவர்கள் சுநல வாதிகள் என்று ஆனால் என்னதான் அவர்களுக்கு லாபம் எனினும் ஒருவர் வாழ்கையில் நிம்மதி இல்லாமலும் சிறையிலும் வாழ விரும்ப மாட்டார்கள் , ஆனால் இவர்கள் ஈழதமிலாருக்காக இதை அனுபவிக்கின்றனர் .ஆகவே அவர்களை அவதூறு செய்யாமல் ஆதரவு அளிக்கவேண்டும் .
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Thu Jul 15, 2010 7:19 pm

paari wrote:. 'ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததே இல்லை' என என் தலைவன் பிரபாகரன் சொல்வார்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 15, 2010 7:22 pm

muthupandian82 wrote:
paari wrote:. 'ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததே இல்லை' என என் தலைவன் பிரபாகரன் சொல்வார்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ்



thiva
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 9:38 pm

போராட்டம் வெல்லட்டும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 15, 2010 9:39 pm

ரபீக் wrote:போராட்டம் வெல்லட்டும்
சியர்ஸ் சியர்ஸ்



thiva
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 15, 2010 9:43 pm

திவா wrote:
ரபீக் wrote:போராட்டம் வெல்லட்டும்
சியர்ஸ் சியர்ஸ்

நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக