புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
81 Posts - 63%
heezulia
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
29 Posts - 23%
வேல்முருகன் காசி
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
1 Post - 1%
viyasan
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
1 Post - 1%
eraeravi
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
226 Posts - 37%
mohamed nizamudeen
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
19 Posts - 3%
prajai
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலர்களின் வேதனை..! Poll_c10மலர்களின் வேதனை..! Poll_m10மலர்களின் வேதனை..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களின் வேதனை..!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jul 14, 2010 7:54 pm

1. விடியல்வேளை
காலைமலர்ந்திடும் பூவைமணந்தொரு காற்றுஎழுந் தோடிப்போகும்
நீலவானவெளி நீந்துமொளிச்சிறு தாரகைகள் விடைகூறும்
வேல்விழிமாதரோ வாசலிருந்துகை கொண்டவளையல்குலுங்க
கோலவண்ணமிட்ட தானஅழகைப் பொறாமைவிழி கொண்டுநோக்கி

கீழத்திசைஅடி வானும்சிவந்திட்ட ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப்போல் ஏதோகீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத்திசையினில் புள்ளியென்றோர் பட்சிக்கூட்டம்
நீலம்சிவந்தது எப்படிஎன்றுதான் காணப்பறந்ததைக் கண்டேன்

காரிருள்கட்டியணைக்கப் புவிமகள் வாழ்விருண்டு போனதென்று
பேரொளிவான்சுடர் பொல்லாச்சினமெடுத்தேயொளி கொண்டதைத்தேட
வாரியடித்தெழுந் தோடிஇருள்வாசல் மூலைக்கத வடிசந்து
ஆலமரத்தடி சோலைநிழலெங்கும் நாடிஅடக் கலம்கோர

மெல்லஒளிவிரிந் தேகும்பொழுதினில் உள்ளம்களித்திட நானும்
செல்லுமிடமேது உள்ளமறியாதோர் சின்ன நடை கொண்டுசென்றேன்
வெள்ளை மலர்களின்கூட்டம் பசுந்தரைவீழும் பனித்துளிதூங்க
துள்ளும்கயல்விழி மங்கையர்புன்னகைபோல எழில் தரக்கண்டேன்

மாடுகள்பூட்டிய வண்டிமெல்ல அசைந்தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக்கிளை சேர்ந்துகொஞ்சிப்பேசிக் கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம்அணைந்திடும் காலைக்குளிர் காற்றின்முத்தம்
கூவிடும்சேவலும் பின்னேகுரைத்தோடும் நாயதும்கண்டு நடந்தேன்

ஆகப்புதுமைக ளேதுமற்றஒரு காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்துமண் மீதுஅடிபதித் தோடிநடந் திட்டபோது
மேகம்மறைநில வாகஒளிகுன்றிக் காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்துகுவிந்திட்ட ஏதிலிகள்இல்லம்கண்டேன்

கண்களில்நீர்கொண்டு சின்னமுகங்களில் வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும் சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப் பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம தென்னென்றுகூறுவீ ரென்றேன்

2..பறித்துப் போட்ட மலர்கள்

தமிழினி பேரெனதென்றாள் - தமிழ்
வாணிஎன்றோர்குரல் பின்னால்
கயல்விழி என்றுஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி குமரி
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்

பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகியசெல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம்நீட்டிக் கொள்ளும்
பழமுமின்சுவை கொண்ட இனி
பண்டமுண்டுஉண்ண என்றேன்

குழல்சீவிப்பின்னலு மிட்டு - இரு
குறும்விழி நிறைந்தொரு சொட்டு
விழும்நீரை விரலாலே தட்டி -முன்னே
நின்றொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற விருப்பமுமில்ல
வளமான வாழ்வழிந்தாச்சு -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்

பேச்சின்றிநான்நிற்க அந்தச்- சிறு
பேதையோ மேலுமுரைப்பாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த -பல
பேரரும் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - வெறும்
அலையும் பிணமென ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் கொடுமையே என்றாள்

3. துயரின் கொடுமை...

நீர்த்திரைகொண்டு விழிவழிய
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீறும் அமைதியுடன்
அங்கவள் பேசிடக் கேட்டு நின்றேன்
பார்த்தவர் போற்றும் நல்வாழ்வுதனும்
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த
வாழ்வுகுலைந்தது போச்சுஎன்றாள்

அன்னைபோன தெங்கு நானறியேன்
அன்புத்தந்தை நிலை ஏதறியேன்
பின்னே பிறந்திட்ட தங்கையவள்
பிழைத்தனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை

வீதியிலேகொலை ஒன்றுகண்டால்
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலைநேர்ந்திடவும்
நெஞ்சம்பொறுத்துநிற்பதுவோ
பாதி கழுத்துகிழியும்வரை
பாவமில்லையென்று பேசுவதோ

எத்தனைபேர் கத்திகூவிநின்றோம்
ஏங்கிக்கதறிஅலறிநின்றோம்
செத்துஅழிந்துசிதறவிட்டு
சிற்பமென சிலையாகி விட்டார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ
மௌனம்கொலை துணைஆகுமன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு
ஒன்றாயிணைந்துஅழித்ததன்றோ

கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
குற்றுயிராகத் துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் திரும்பி வந்து
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ

ஏன் உலகெங்களின் கண்ணீரையும்
ஏழைகதறியகூக்குரலும்
வானில் கரைந்திடவிட்டுஅன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்

கூறி அழுதிட்டு நின்றவளாம்
சின்னவளைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள்
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறி த்திடம் மனம் கொள்ளுஇனி
தெய்வம் இருக்குது என்றுரைத்தேன்

நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும்
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்தும் நீதி நெறி
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த
நானிலம் உள்ளமட்டிலொரு
பூமியல்ல இதுவேறு, வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்

கூறிவிடைபெற்றுநான்திரும்பி
வீடு நோக்கிநடந்து வந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி
பீதியெழும் காற்றின் வேகச்சுழல்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில்
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்

(குறையும் நிறைவும் கூறுங்கள்)

அன்புடன் கிரிகாசன்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 9:20 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thiva
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Wed Jul 14, 2010 9:21 pm

மலர்களின் வேதனை..! 677196 மலர்களின் வேதனை..! 677196 மலர்களின் வேதனை..! 677196 மலர்களின் வேதனை..! 677196



மலர்களின் வேதனை..! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
வேதமுத்து
வேதமுத்து
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2010

Postவேதமுத்து Sat Jul 24, 2010 11:33 pm

kirikasan wrote:1. விடியல்வேளை
காலைமலர்ந்திடும் பூவைமணந்தொரு காற்றுஎழுந் தோடிப்போகும்
நீலவானவெளி நீந்துமொளிச்சிறு தாரகைகள் விடைகூறும்
வேல்விழிமாதரோ வாசலிருந்துகை கொண்டவளையல்குலுங்க
கோலவண்ணமிட்ட தானஅழகைப் பொறாமைவிழி கொண்டுநோக்கி

கீழத்திசைஅடி வானும்சிவந்திட்ட ஜாலவண்ணங் களைப்பூசி
கோலமென்றே சிறுபிள்ளையைப்போல் ஏதோகீறியழித்து கிடந்தான்
ஆழச்சிவந்திட்ட கோபத்திசையினில் புள்ளியென்றோர் பட்சிக்கூட்டம்
நீலம்சிவந்தது எப்படிஎன்றுதான் காணப்பறந்ததைக் கண்டேன்

காரிருள்கட்டியணைக்கப் புவிமகள் வாழ்விருண்டு போனதென்று
பேரொளிவான்சுடர் பொல்லாச்சினமெடுத்தேயொளி கொண்டதைத்தேட
வாரியடித்தெழுந் தோடிஇருள்வாசல் மூலைக்கத வடிசந்து
ஆலமரத்தடி சோலைநிழலெங்கும் நாடிஅடக் கலம்கோர

மெல்லஒளிவிரிந் தேகும்பொழுதினில் உள்ளம்களித்திட நானும்
செல்லுமிடமேது உள்ளமறியாதோர் சின்ன நடை கொண்டுசென்றேன்
வெள்ளை மலர்களின்கூட்டம் பசுந்தரைவீழும் பனித்துளிதூங்க
துள்ளும்கயல்விழி மங்கையர்புன்னகைபோல எழில் தரக்கண்டேன்

மாடுகள்பூட்டிய வண்டிமெல்ல அசைந்தோடின தாளங்கள்தட்டி
பேடுகளைக்கிளை சேர்ந்துகொஞ்சிப்பேசிக் கொள்ளும்குருவிகள் சுற்றி
ஆடுமிலைகளின் சத்தம்அணைந்திடும் காலைக்குளிர் காற்றின்முத்தம்
கூவிடும்சேவலும் பின்னேகுரைத்தோடும் நாயதும்கண்டு நடந்தேன்

ஆகப்புதுமைக ளேதுமற்றஒரு காலைவிடிய லைக்கண்டு
தேகம்சிலிர்த்துமண் மீதுஅடிபதித் தோடிநடந் திட்டபோது
மேகம்மறைநில வாகஒளிகுன்றிக் காணும் முகங்களைக் கொண்ட
சோகமலர்கள் செறிந்துகுவிந்திட்ட ஏதிலிகள்இல்லம்கண்டேன்

கண்களில்நீர்கொண்டு சின்னமுகங்களில் வாழ்வையிழந்த துயரம்
மண்களில்மூடிய உண்மைகளை இன்னும் சீரணிக்காத பருவம்
பெண்கள்நின் றாடிடும்பக்கம் நெருங்கிப் பிள்ளைகளே இங்கு வாரீர்
வண்ணத்துப்பூச்சிகாள் வைத்தபெயர்உம தென்னென்றுகூறுவீ ரென்றேன்

2..பறித்துப் போட்ட மலர்கள்

தமிழினி பேரெனதென்றாள் - தமிழ்
வாணிஎன்றோர்குரல் பின்னால்
கயல்விழி என்றுஒருத்தி - வேறு
கனிமொழி தேன்மொழி குமரி
அழகு தமிழ்ப்பெயர் கொண்டு- அவர்
அன்புமுகமோ மருண்டு
மொழிபேசித் தோற்றதோர் கூட்டம் - என்
முன்னே இருந்திடக் கண்டேன்

பழியிங்கு யாரிடம் சொல்வேன் -சொல்லப்
பலகதை நூறென உண்டு
விழிமீது வழிகின்ற நீரைத் - தம்
விதியெனக் கொண்டவர் நோக்கி
அழகியசெல்லங்காள் உங்கள் - இரு
அன்புக்கரம்நீட்டிக் கொள்ளும்
பழமுமின்சுவை கொண்ட இனி
பண்டமுண்டுஉண்ண என்றேன்

குழல்சீவிப்பின்னலு மிட்டு - இரு
குறும்விழி நிறைந்தொரு சொட்டு
விழும்நீரை விரலாலே தட்டி -முன்னே
நின்றொரு சின்னவள் சொன்னாள்
பழமோ இனிப்பதுமில்லை -ஓர்
பசியென்ற விருப்பமுமில்ல
வளமான வாழ்வழிந்தாச்சு -இனி
அழவேண்டும் அதுபோதும் என்றாள்

பேச்சின்றிநான்நிற்க அந்தச்- சிறு
பேதையோ மேலுமுரைப்பாள்
போர்ச்சினம் கொண்டவர் ஈந்த -பல
பேரரும் பரிசுகள் பெற்றோம்
ஆட்சிக் கொடுமைகளாலே - வெறும்
அலையும் பிணமென ஆனோம்
வாழ்க்கையே போனபின்னாலே - உயிர்
வாழுதல் கொடுமையே என்றாள்

3. துயரின் கொடுமை...

நீர்த்திரைகொண்டு விழிவழிய
நெஞ்சிலே ஆற்றமை பொங்கிவர
ஆத்திரம்மீறும் அமைதியுடன்
அங்கவள் பேசிடக் கேட்டு நின்றேன்
பார்த்தவர் போற்றும் நல்வாழ்வுதனும்
பாசமுடன் அன்னை தந்தையென
கோர்த்தமணியாரம் போலிருந்த
வாழ்வுகுலைந்தது போச்சுஎன்றாள்

அன்னைபோன தெங்கு நானறியேன்
அன்புத்தந்தை நிலை ஏதறியேன்
பின்னே பிறந்திட்ட தங்கையவள்
பிழைத்தனளோ செத்துபோயினளோ?
என்ன செய்தோம் பிழை நாமும் இங்கே
ஏன் பிரிந்தே தனிவாடுகின்றோம்
பென்னம்பெரியது இவ்வுலகம்
பிஞ்சுமனம்காக்க யாருமில்லை

வீதியிலேகொலை ஒன்றுகண்டால்
வெட்டுவோன் கத்தியை ஓங்கிஒரு
காதுவரை கொண்டு போகும்வரை
கண்டும் பொறுத்திரு என்பதுவோ?
நீதியாமோ கொலைநேர்ந்திடவும்
நெஞ்சம்பொறுத்துநிற்பதுவோ
பாதி கழுத்துகிழியும்வரை
பாவமில்லையென்று பேசுவதோ

எத்தனைபேர் கத்திகூவிநின்றோம்
ஏங்கிக்கதறிஅலறிநின்றோம்
செத்துஅழிந்துசிதறவிட்டு
சிற்பமென சிலையாகி விட்டார்
மொத்தமும் அழிந்து போனதய்யோ
மௌனம்கொலை துணைஆகுமன்றோ
உத்தமரை கொடுங்கோலரசு
ஒன்றாயிணைந்துஅழித்ததன்றோ

கீறி கழுத்து சிதையவெட்டி இனம்
குற்றுயிராகத் துடிக்கையிலே
ஆநீதி செத்து அழிந்ததென்று இன்று
ஆர்ப்பரித்து இனி என்னபலன்?
போன அன்னைஉயிர் வந்திடுமோ
புத்துடல் தந்தை எடுப்பதுண்டோ
ஆனதெல்லாம் திரும்பி வந்து
அன்பெனும் வாழ்வு திரும்பிடுமோ

ஏன் உலகெங்களின் கண்ணீரையும்
ஏழைகதறியகூக்குரலும்
வானில் கரைந்திடவிட்டுஅன்று
வாளாதிருந்து மனம் பொறுத்தார்
கானலென் நீரினைக் கண்டதொரு
மானுமுயிர்தப்ப எண்ணியதாய்
வீணில் கரம்கூப்பி நின்றோமன்றோ
வேடிக்கையல்வோ பார்த்துநின்றார்

கூறி அழுதிட்டு நின்றவளாம்
சின்னவளைக் கண்டு சொல்லறியா
ஆறிமனம்கொள்ளு மட்டுமவள்
பூமுகம்கண்டு பொறுமைகொண்டேன்
மாறும் விதிஒருநாளிலம்மா
மங்கலமானதோர் வாழ்வுவரும்
தேறி த்திடம் மனம் கொள்ளுஇனி
தெய்வம் இருக்குது என்றுரைத்தேன்

நீசர்கள் ஆட்சி நொருங்கிடணும்
நேர்மையற்றோர் முடி சாய்ந்திடணும்
தேசமனைத்தும் நீதி நெறி
தேர்ந்தவர் ஆட்சி புரிந்திடணும்
நாசமிழைபவர் கையில் இந்த
நானிலம் உள்ளமட்டிலொரு
பூமியல்ல இதுவேறு, வெறும்
பேய்கள் விளையாடும் பந்து என்றாள்

கூறிவிடைபெற்றுநான்திரும்பி
வீடு நோக்கிநடந்து வந்தேன்
மாறித்தெரிந்தது இவ்வுலகம்
மாமரங்கள் தலையாட்டி நிற்க
பேயெனசீறிடும் சாலைவண்டி
பீதியெழும் காற்றின் வேகச்சுழல்
காயுமுடல்சுட்டுவேகும்வெயில்
கண்டுவிரைந்து நடந்து சென்றேன்

(குறையும் நிறைவும் கூறுங்கள்)

அன்புடன் கிரிகாசன்

மலர்களின் வேதனை..! 677196 மலர்களின் வேதனை..! 677196 மலர்களின் வேதனை..! 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jul 25, 2010 12:30 am

மிக்க நன்றி நண்பர்களே!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 25, 2010 12:13 pm

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் மலர்களின் வேதனை..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக