புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
98 Posts - 49%
heezulia
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
7 Posts - 4%
prajai
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
3 Posts - 2%
Barushree
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
2 Posts - 1%
cordiac
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
225 Posts - 52%
heezulia
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
18 Posts - 4%
prajai
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
2 Posts - 0%
Barushree
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பட்டினிக்கு வயது பத்து Poll_c10பட்டினிக்கு வயது பத்து Poll_m10பட்டினிக்கு வயது பத்து Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினிக்கு வயது பத்து


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 1:25 am

பட்டினிக்கு வயது பத்து

யாருக்காகவோ அவர்கள் நீண்ட நேரமாய் காத்திருக்கிறார்கள். அவர்கள் கண்களில் கசிந்த விடுதலை வேட்கையும், கொந்தளித்துப் பொங்கிய உணர்வு நிலையும் களம் நுழையும் முன்னால் தங்களது தலைவனின் கட்டளைக்காக காத்திருக்கும் போராளிகளின் நிலையை ஒத்திருந்தது.

ஆனால் அவர்கள் காத்திருந்தது அவர்களது கவிஞனுக்காக. தங்களது விடுதலைப் போருக்கான வெறியை, ஆவேசத்தை, வேட்கையை அவனது நான்கைந்து வரிகளால் சானை பிடித்து கூர் தீட்டிக்கொள்ளவே அவர்கள் காத்துக் கிடந்தார்கள்.

அவர்கள் அந்தக் கவிஞனின் ஜனங்கள்: அவனோ அந்த ஜனங்களின் கவிஞன்.

அவன் மாயோகோவஸ்கி

"தோழர்களே..."

அவனது ஒற்றை வார்த்தையில் கொந்தளித்து, ஆர்ப்பரித்து அடங்கியது கூட்டம்.

தொடர்ந்தான்

"தோழர்களே !
லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும் ஏந்தி..."

அவனை முடிக்க விடவில்லை கூட்டம். ஒரே குரலெடுத்து உரக்க முழங்கினார்கள்

" லெனினைத் தலையிலும்
ஆயுதங்களை
கரங்களிலும்
எங்கள் மாயோகோவஸ்கியை
இதயங்களிலும் ஏந்தி
களத்திற்கு போகிறோம்"

உயிரோடு இருக்கும் போதே மாயோகோவஸ்கிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் நமது பாரதி மற்றும் பாரதி தாசன் இருவருக்கும் கிடைக்காத அங்கீகாரம். இன்குலாப் உள்ளிட்ட நமது சம கால மக்கள் கவிகளுக்கும் இதுதான் கதி. என்ன செய்வது உயிரோடு இருக்கும் வரை நல்லவர்களை கொண்டாடு வதில்லை என்று நாம்தான் யாருக்கோ சத்தியம் செய்து கொடுத்து விட்டோமே.



அதனால்தான் பெரும்பான்மை ஆசு கவிகள் காசு கவிகளாய் மாறி சொகுசாகிப் போனார்கள்.

எழுதுவது, பதிப்பிப்பது, பேட்டிகளை அளிப்பது, வாழ்வை சொகுசாக்கிக் கொள்வது என்று சுருங்கிப் போகாமல் மக்களோடு மக்களாய் பசியில், அவலத்தில், போராட்டத்தில் அவர்களோடு நிற்பது என்பதாக தனது எழுத்துக்கு வாழ்க்கையை பொழிப்புரையாக தந்தவன் மாயோகோவஸ்கி. அவனது நேர்மைக்கும் தியாகத்திற்கும் கொஞ்சமும் குறையாத அங்கீகாரத்தை மக்கள் அவனுக்கு வழங்கினார்கள் என்பதும் சேர்த்தே கொள்ளத் தக்கது.

" பேனாதான் இருக்கும்
எப்போதும்
என் கைகளில்
என்று சொல்ல
நான் ஒன்றும் நீஅல்ல
நண்பனே

தேவைப் படுமெனில்
என் கைகள் காலம் தரும்
கருவி ஏந்தும்"

என்று வண்ணை வளவன் ஒரு முறை எழுதியாதாய் ஞாபகம். இந்த வரிகளில் பெருகி வழியும் மாயோகோவஸ்கியின் தாக்கத்தை யாரு இல்லை என்று சொல்லிவிட முடியாது.

பரவசமான வாசிப்பு அனுபவங்களைத் தரும் தம்பி சுபாஷ் (கன்னகன்) அவர்களின் "பறவைக்குள் அடையும் கூடு" நூலை வெளியிட்டு பேசும் போது மனதைப் பிசையும் ஒரு காட்சியை ஏதோ ஒரு வேற்று மொழிப் படத்திலிருந்தோ சிறு கதையிலிருந்தோ சொன்னார் எஸ். ராமகிருஷ்ணன்.

குழந்தைகளையும் கூடைகளையும் முதுகுகளிலும் ரணங்களையும் வலியையும் தங்கள் உடல் முழுமையும் சுமந்தபடி தேயிலை கிள்ளிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள்.

முதுகிலே சுமக்கும் தங்களது குழந்தைகளுக்கு பசியெடுத்து அலறினாலும் அவர்களுக்கு தாய்ப் பால் கொடுக்க அனுமதித்ததில்லை ஆண்டைகள். பசியால் அலறி அலறியே செத்துப் போன குழந்தைகள்

ஏராளம்: மாரிலே பால் கட்டி இறந்துபோன தாய்மார்களும் ஏராளம்.

கீழத் தஞ்சையில் நம் அம்மாயி மற்றும் அப்பாயிகளுக்கும் கிடைத்த அதே அனுபவம். உலகம் முழுவதும் ஆண்டைகள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள்.

ஒரே வித்தியாசம் அவர்கள் குழந்தைகளை முதுகிலே சுமந்தபடி வேலை பார்த்தார்கள். நம் தாய்மார்கள் வரப்போரத்தில் இருக்கும் மரங்களின் கிளைகளில் தொட்டில் கட்டிப் போட்டிருப்பார்கள்.

இந்த வேதனையிலிருந்து தப்பிக்க நமது தாய்மார்கள் ஒரு மார்க்கம் கண்டனர். மார்கட்டி வலி எடுக்கும் பெண்ணை மற்ற பெண்கள் மறைத்தபடி சுற்றி நின்று கொள்வார்கள். அந்தப் பெண் தனது முலைப் பாலை வயலிலே பீய்ச்சி தன்னைத் தற்காத்துக் கொள்வாள். இதிலுங்கூட தாய்மார்களை காப்பாற்ற முடிந்ததே தவிர குழந்தைகளின் இழப்பை மட்டுப் படுத்த முடியவில்லை.

இப்படி காவேரித் தண்ணீரோடு எங்கள் தாய்மார்களின் தாய்ப் பாலையும் சேர்த்தே குடித்து வளர்ந்த நெல் சோறு சாப்பிட்டு வளர்ந்த ஒரு பெரியவர் தான் சொன்னார் "வேலைக்குப் போகும் பெண்களில் பெரும்பகுதி பேர் அவுசாரிகள்" என்று.

அவரிடம் போய் வந்த பத்துப் பன்னிரண்டு பேரைத் தவிர மற்றவர்களை அவருக்கு அப்படித்தான் தெரியும் பெருந்தன்மயோ என்னவோ " உழைக்கும் பெண்களில் பெரும் பகுதி பேர் அவுசாரிகள் என்று உனக்கு எப்படி ஐயா? " என்றுகூட கேட்காமல் இன்று வரை நீண்ட மௌனம் காக்கிறது தமிழ்ச் சமூகம்.

அந்தக் கதைக்கு வருவோம் .

தேயிலைக் கிள்ளிக்கொண்டிருக்கும் பெண்களை நோக்கி வருகிறான் அவர்களின் கவிஞன். அவர்களது அவலத்தில், வாழ்வில், வலியில், கண்ணீரில், புன்னகையில் அவர்களோடு ஒருவனாய், அவர்களில் ஒருவனாய் அவர்களிடமிருந்து ஒரு அங்குளம் கூட அந்நியப் படாதவனாய் வாழ்பவன். அந்த ஜனங்கள் தங்கள் கவிஞனது வாக்கு பலிக்கும் என்று நம்பினார்கள்.

புன்னகைத்தவாரே அந்தப் பெண்களின் அருகே வந்தான் கவிஞன். அவனைக் கண்டதும் அவர்களது கவலைகளும் வலியும் பறந்தே போனது. மலர்ந்த முகத்தோடு அவனை வரவேற்றார்கள்.

"நலமா?"

நலமென்று எப்படி சொல்ல முடியும் அவர்களால்.



"நலமென்று கூட சொல்ல முடியாமல் என் ஜனங்களை மௌனக் கடலுக்குள் தள்ளியது எது?"

"உம்மால் எமக் கொன்று ஆக வேண்டும் கவியே!"

" என்னிடம் கேட்க என்ன தயக்கம். எது வேண்டும், கேள் தாயே!"

"முன் பக்கம் தொங்கும் எங்கள் முலைகளை முதுகுப் பக்கமாய் நகர்த்திவிடு கவியே! . மார் கட்டாது நாங்களும் பசியாறி குழந்தைகளும் பிளைத்துக் கொள்வோம்."

அவர்களது சோகத்தில் கறைந்து நெகிழ்ந்து போன கவிஞன் சொன்னான் "அப்படியே ஆகட்டும்"

முதுகுக்கு நகர்ந்தன முலைகள்.

நடக்குமா? மூடத்தனமல்லவா? அதுபற்றியெல்லாம் நாம் கவலைப் படப் போவதில்லை. தங்களுக்காகவும் தங்களோடும் வாழ்ந்த கவிஞன் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் காட்டவே மேற்சொன்ன காட்சியை ஞாபகம் கொண்டோம்.

சமீபத்தில் "பெண்ணியம்" இணையதளம் வழியே ஒரு மாபெரும் மக்கள் கவியைக் கண்டேன். வாசித்து முடிந்ததும் கண்ணீரைக் கட்டுப் படுத்த படாத கஷ்டம் பட்டேன்.

"ஐரோம் ஷர்மிளா" மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த கவிஞர். 1958ஆம் ஆண்டு "ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம்" கொண்டு வரப் பட்டது. இதன்படி சந்தேகப் படும் யாரையும் விசாரனையின்றி கைது செய்யலாம், சுட்டும் கொல்லலாம். இந்த சட்டம் காவு கொண்ட எண்ணிக்கை மிக அதிகம்.

"பாலியல் இம்சைகள்" பற்றி எழுதினால் நீளும் , நீளும் , நீண்டுகொண்டே போகும்.

இதைக் கண்டித்து 02.11.2000 முதல் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிளா. பல் துலக்கினால் வாய் வழியே நீர் போய்விடும் என்பதால் பல் துலக்குவதை தவிர்க்கிறார். ஒரு பருத்தித் துணியால் பற்களைத் துடைத்துக் கொள்கிறார்.

அவரைக் கைது செய்த அரசாங்கம் கட்டாயப் படுத்தி மூக்கு வழியே அவருக்கு திரவ உணவை செலுத்திக் கொண்டிருக்கிறது.



எனக்கு இருக்கிற கேள்வி ஒன்றுதான். தங்களோடும் தங்களுக்காகவும் வாழ்ந்த கவிகளை அந்தந்த சமூகங்கள் அங்கீகரித்து கொண்டாடியிருக்கின்றன.

"கல்வி பாஷை" யில் சொன்னால் இரண்டு பிரிவேளைகளுக்கும் சற்று குறைவான நேரமே நடைபெற்ற , மிகச் சரியாய் சொல்வதெனில் "காலை சாப்பாட்டிற்கும் மதிய சாப்பாட்டிற்கும் இடைப் பட்ட நேரத்தில்" நடந்த ஒரு கூத்தினை "உண்ணா விரதம்" என்றும் "தியாகத்தின் உச்சம்" என்றும் கூத்தாடிக் கொண்டாடிய நாம், தனது உடலை, இளமையை, வாழ்க்கையை தியாகித்துப் போராடும் இந்தப் போராளிக்கு என்ன செய்யப் போகிறோம்?

பின் குறிப்பு

இந்தக் கட்டுரையை முடிக்கிற தருவாயில் ஐரினா ஷர்மிளா விடுதலை செய்யப்பட்ட செய்தி வந்தது. இந்த தகவலை பத்துப் பேரிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்னமே சுகன் சொன்னார் "திரும்பவும் அந்த அம்மாவ கைது பண்ணீட்டாங்களாம் எட்வின்"


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 07, 2010 9:38 am

அருமையான பதிவு நன்றி நண்பரே பாராட்டுக்கள்
ஹாசிம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்



நேசமுடன் ஹாசிம்
பட்டினிக்கு வயது பத்து Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 10:54 am

ஹாசிம் wrote:அருமையான பதிவு நன்றி நண்பரே பாராட்டுக்கள்


நன்றி தோழர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 07, 2010 11:37 am

மிகவும் சிறந்த பதிவு ,பகிர்வுக்கு நன்றி தோழரே

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 12:00 pm

ரபீக் wrote:மிகவும் சிறந்த பதிவு ,பகிர்வுக்கு நன்றி தோழரே


மிக்க நன்றி ரபீக்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 07, 2010 12:09 pm

அருமையான பகிர்வு எட்வின்... உண்மையே பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் கிடைக்காத அங்கீகாரம் அவர்கள் இறந்தப்பின் தான் கிடைத்ததே....

ஆசு கவிகள் காசு கவிகளாய் .... சொல்லாடல் அருமை...

பகிர்வுக்கு நன்றிகள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பட்டினிக்கு வயது பத்து 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 12:41 pm

[quote="மஞ்சுபாஷிணி"]அருமையான பகிர்வு எட்வின்... உண்மையே பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் கிடைக்காத அங்கீகாரம் அவர்கள் இறந்தப்பின் தான் கிடைத்ததே....

ஆசு கவிகள் காசு கவிகளாய் .... சொல்லாடல் அருமை...

பகிர்வுக்கு நன்றிகள்...[/q

நன்றி சுபா,

நல்ல ரசணை உங்களுக்கு . உங்கள் ரசணையைக் கொண்டாட வேண்டும் முதலில்.

இவை கடந்து ஐரோம் போற்றிக் கொண்டாடப் பட வேண்டியவர்.

இயலுமெனில் எனது வலை தளம் பாருங்கள்

www.eraaedwin.blogspot.com

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 10, 2010 3:30 am

ஹாசிம் wrote:அருமையான பதிவு நன்றி நண்பரே பாராட்டுக்கள்

நன்றி ஹாசிம்

அமுதா
அமுதா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 12/07/2010

Postஅமுதா Fri Jul 16, 2010 9:59 pm

ஆமாம் எட்வின்

அந்தம்மா இப்ப விடுதலை ஆயிட்டாங்களா?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 16, 2010 11:28 pm

பட்டினிக்கு வயது பத்து 677196 பட்டினிக்கு வயது பத்து 677196 பட்டினிக்கு வயது பத்து 677196 பட்டினிக்கு வயது பத்து 677196




பட்டினிக்கு வயது பத்து Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக