புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழா சிந்திப்பாயா? இரா .இரவி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
அடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால்
அந்தத் தீ உன்னையும் அழிக்கும்.
ஈழத்தில்தானே படுகொலை என்று
வேடிக்கைப் பார்த்தாய் .
தமிழ்நாட்டுத் தமிழனையும்
படுகொலை செய்கிறது சிங்களப்படை .
உலகில் தமிழன் உயிர் மிக மலிவாகிப் போனது .
கேட்க நாதியற்ற இனமாகிப் போனது .
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார்
இந்திய அரசு பதில் தராது .
இனி அடுத்த படு கொலைக்கும்
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார் .
இமயம் முதல் குமரி வரை இந்தியா
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்
தமிழ் நாட்டுத் தமிழர்கள்குழந்தைக்கு சொல்லித்தருகிறோம்.
இந்திய அரசு மட்டும் தமிழனை இந்தியனாக்கக்கருதாமல்
தமிழனாகக் கருதுகின்றது
தமிழின விரோதி வந்தால் சிகப்புக் கம்பள வரவேற்ப்புத்தந்து
கோடிகளை அள்ளிக் கொடுக்கின்றது .
கவிஞர் இரா.இரவி அவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்த கவிதை! இனிமேல் கவிதைகளை கவிஞரே இங்கு நேரடியாகப் பதிவிடலாம்! உங்களின் கவிதைகளை ரசிக்க ஈகரையின் நெஞ்சங்கள் காத்திருக்கிறது!
அந்தத் தீ உன்னையும் அழிக்கும்.
ஈழத்தில்தானே படுகொலை என்று
வேடிக்கைப் பார்த்தாய் .
தமிழ்நாட்டுத் தமிழனையும்
படுகொலை செய்கிறது சிங்களப்படை .
உலகில் தமிழன் உயிர் மிக மலிவாகிப் போனது .
கேட்க நாதியற்ற இனமாகிப் போனது .
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார்
இந்திய அரசு பதில் தராது .
இனி அடுத்த படு கொலைக்கும்
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார் .
இமயம் முதல் குமரி வரை இந்தியா
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்
தமிழ் நாட்டுத் தமிழர்கள்குழந்தைக்கு சொல்லித்தருகிறோம்.
இந்திய அரசு மட்டும் தமிழனை இந்தியனாக்கக்கருதாமல்
தமிழனாகக் கருதுகின்றது
தமிழின விரோதி வந்தால் சிகப்புக் கம்பள வரவேற்ப்புத்தந்து
கோடிகளை அள்ளிக் கொடுக்கின்றது .
கவிஞர் இரா.இரவி அவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்த கவிதை! இனிமேல் கவிதைகளை கவிஞரே இங்கு நேரடியாகப் பதிவிடலாம்! உங்களின் கவிதைகளை ரசிக்க ஈகரையின் நெஞ்சங்கள் காத்திருக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உடல் மண்ணிற்கு உயிர் தமிழுக்கு உண்மை – கவிஞர் இரா.இரவி
ஈழத்தில் தமிழை தாய் மொழியாகப் பேசியதால்
இலட்சத்திற்கும் மேலான ஈழத் தமிழர்களின்
உடல் மண்ணிற்கு உயிர் தமிழக்குப் போனது
உயிரோடு மண்ணில் போட்டுப் புதைத்தான் ராஜபட்சே
ஈழத்தில் சிங்களனாகப் பிறந்து இருந்தால்
இந்தக் கொடூரக் கொலைகள் நடந்து இருக்காது
உலகத் தழிழர்களில் பலர் வேடிக்கைப்
பார்த்ததைத் தவிர வேறு எதும் செய்யவில்லை
கிராமத்தில் ரத்த சொந்தம் ஒருவர் இருந்தால்
குடும்பத்தில் பொங்கல் கொண்டாடமாட்டார்கள்
ஈழத்தில் ரத்த சொந்தம் லட்சத்திற்கு மேல்
இறந்தால் உணர்வாளர்களுக்கு செம்மொழி மாநாடு இனிக்கவில்லை
மகாகவி இன்று இருந்து இருந்தால்
செந்தமிழ்நாடு எனும் போதினிலே
துன்பக்கண்னீர் வழியுது விழிகளிலே
என்றே பாடி இருப்பான்
தமிழினம் வீழ்ந்து தமிழ் வாழ்ந்து என்ன பயன்?
eraeravi.wordpress.com
ஈழத்தில் தமிழை தாய் மொழியாகப் பேசியதால்
இலட்சத்திற்கும் மேலான ஈழத் தமிழர்களின்
உடல் மண்ணிற்கு உயிர் தமிழக்குப் போனது
உயிரோடு மண்ணில் போட்டுப் புதைத்தான் ராஜபட்சே
ஈழத்தில் சிங்களனாகப் பிறந்து இருந்தால்
இந்தக் கொடூரக் கொலைகள் நடந்து இருக்காது
உலகத் தழிழர்களில் பலர் வேடிக்கைப்
பார்த்ததைத் தவிர வேறு எதும் செய்யவில்லை
கிராமத்தில் ரத்த சொந்தம் ஒருவர் இருந்தால்
குடும்பத்தில் பொங்கல் கொண்டாடமாட்டார்கள்
ஈழத்தில் ரத்த சொந்தம் லட்சத்திற்கு மேல்
இறந்தால் உணர்வாளர்களுக்கு செம்மொழி மாநாடு இனிக்கவில்லை
மகாகவி இன்று இருந்து இருந்தால்
செந்தமிழ்நாடு எனும் போதினிலே
துன்பக்கண்னீர் வழியுது விழிகளிலே
என்றே பாடி இருப்பான்
தமிழினம் வீழ்ந்து தமிழ் வாழ்ந்து என்ன பயன்?
eraeravi.wordpress.com
துளிப்பா : கவிஞர் இரா.ரவி
ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை
ஈவு இரக்கமற்ற கொடூரக் கொலை
வாழ வழியின்றி முள்வேலி
வாடி வதங்கினர் குழந்தைகள்
இழவை கேட்க நாதியில்லை
உலக மகா கொடூர கொலைக்காரன்
உலக வலம் நாளும் வருகிறான்
உலக நாடுகள் மன்றத்தான் வேடிக்கை பார்க்கிறான்
ஒருவரும் தட்டி கேட்கவில்லை
பலகாலம் ஏமாற்றி வாழ்கிறான்
மூட நம்பிக்கைகளில் ஒன்றானது தேர்தல்
மேதினியில் பணம் படைத்தவர்களே வேட்பாளர்கள்
மடயர்கள் மலிந்து விட்டனர்
மூளைக்கு வேலை இல்லை
அட பணம் வாங்கி வாக்களிக்கிறார்கள்.
போட்டி போட்டன தொலைக்காட்சிகள்
பெண்களை அழ வைத்துப் பார்ப்பதில்
ஏட்டிக்குப் போட்டி மாமியார்கள்
ஏதிர் தாக்குதலில் மருமகள்கள்
ஈட்டிக்காரனைத் தோற்கடித்தனர் சண்டையில்
பட்டுச்சேலை ஆசையை விட்டு விடு
பாவம் பட்டுப்பூச்சிகளை வாழ விடு
பட்டு மேனியாளுக்கு தேவையில்லை பட்டு
துட்டு அதிகம் முடங்கி விடுகின்றது
கட்டு கைத்தறி சேலை தினம் கட்டு
பொன் நகை மோகம் மலிந்தது
பெண்கள் பலரது மனமும் அடிமையானது
விண்ணை எட்டியது விலை உயர்ந்தது
வஞ்சியர் இனம் கடையில் குவிந்தது
ஆண்கள் இனம் அவதிப்பட்டது
கோடிகளை உதியம் பெறுகிறான் நடிகன்
கோடம்பாக்கத்து கோமகனாய் வலம் வருகிறான்
கொடி கட்டி பொழுதுபோக்குகின்றான் ரசிகன்
கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்கிறான்
தடியால் அடி வாங்கி காயமும் படுகிறான்
தமிழர்களின் கலைகளை பறைசாற்றிடும் சிலை
பார்த்தவர்கள் வியப்பில் ஆகின்றனர் சிலை
இமி அளவும் இல்லை அதில் செயற்கை
இமைக்காமல் ரசித்து அடைந்தனர் இன்பம்
சாமி நம்பாதவரும் வியப்படைந்த நிலை
நடிகையை சேர்த்தனர் அரசியல் கட்சியில்
நல்லவர்கள் விலகி விட்டனர் அரசியலில்
கோடிகள் குவிக்க வாய்ப்பு வழங்கினார்கள்
கட்சியில் மேல்சபை பதவியும் தருவார்கள்
கேடிகள் பல்கிப் பெருகி விட்டார்கள்
ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மான்
பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மான்
இன்பக் காட்சி தமிழ் இலக்கியத்தில் காண்
இணை பிரியாத ஜோடிகளின் காதல்
எண்ணிலடங்காத இனிய உணர்வு தான்.
www.kavimalar.com
ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை
ஈவு இரக்கமற்ற கொடூரக் கொலை
வாழ வழியின்றி முள்வேலி
வாடி வதங்கினர் குழந்தைகள்
இழவை கேட்க நாதியில்லை
உலக மகா கொடூர கொலைக்காரன்
உலக வலம் நாளும் வருகிறான்
உலக நாடுகள் மன்றத்தான் வேடிக்கை பார்க்கிறான்
ஒருவரும் தட்டி கேட்கவில்லை
பலகாலம் ஏமாற்றி வாழ்கிறான்
மூட நம்பிக்கைகளில் ஒன்றானது தேர்தல்
மேதினியில் பணம் படைத்தவர்களே வேட்பாளர்கள்
மடயர்கள் மலிந்து விட்டனர்
மூளைக்கு வேலை இல்லை
அட பணம் வாங்கி வாக்களிக்கிறார்கள்.
போட்டி போட்டன தொலைக்காட்சிகள்
பெண்களை அழ வைத்துப் பார்ப்பதில்
ஏட்டிக்குப் போட்டி மாமியார்கள்
ஏதிர் தாக்குதலில் மருமகள்கள்
ஈட்டிக்காரனைத் தோற்கடித்தனர் சண்டையில்
பட்டுச்சேலை ஆசையை விட்டு விடு
பாவம் பட்டுப்பூச்சிகளை வாழ விடு
பட்டு மேனியாளுக்கு தேவையில்லை பட்டு
துட்டு அதிகம் முடங்கி விடுகின்றது
கட்டு கைத்தறி சேலை தினம் கட்டு
பொன் நகை மோகம் மலிந்தது
பெண்கள் பலரது மனமும் அடிமையானது
விண்ணை எட்டியது விலை உயர்ந்தது
வஞ்சியர் இனம் கடையில் குவிந்தது
ஆண்கள் இனம் அவதிப்பட்டது
கோடிகளை உதியம் பெறுகிறான் நடிகன்
கோடம்பாக்கத்து கோமகனாய் வலம் வருகிறான்
கொடி கட்டி பொழுதுபோக்குகின்றான் ரசிகன்
கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்கிறான்
தடியால் அடி வாங்கி காயமும் படுகிறான்
தமிழர்களின் கலைகளை பறைசாற்றிடும் சிலை
பார்த்தவர்கள் வியப்பில் ஆகின்றனர் சிலை
இமி அளவும் இல்லை அதில் செயற்கை
இமைக்காமல் ரசித்து அடைந்தனர் இன்பம்
சாமி நம்பாதவரும் வியப்படைந்த நிலை
நடிகையை சேர்த்தனர் அரசியல் கட்சியில்
நல்லவர்கள் விலகி விட்டனர் அரசியலில்
கோடிகள் குவிக்க வாய்ப்பு வழங்கினார்கள்
கட்சியில் மேல்சபை பதவியும் தருவார்கள்
கேடிகள் பல்கிப் பெருகி விட்டார்கள்
ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மான்
பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மான்
இன்பக் காட்சி தமிழ் இலக்கியத்தில் காண்
இணை பிரியாத ஜோடிகளின் காதல்
எண்ணிலடங்காத இனிய உணர்வு தான்.
www.kavimalar.com
துளிப்பா : கவிஞர் இரா.ரவி
ஆளுக்கொரு வாகனம் என்ற நிலை மாற்றிடு
குடும்பத்திற்கொரு வாகனம் என்ற நிலையாக்கிடு
நாளுக்கு நாள் வாகன மாசு பெருகுவதைத் தடு
வான மண்டலத்தில் ஓசோன் ஊட்டை மூடு
தோள் கொடுப்போம்,வெப்பமயமாதலை உடன் தடு
கண்ணே மணியே மானே தேனே
கண்டபடி புகழ்வான் மயங்காதே பெண்ணே
கண் சிமிட்டி அழைப்பான் உன்னை
கன்னியே சபலப்பட்டு விடாதே நீ
கண்ணி வைத்து பிடித்திடப் பார்ப்பானே.
ஆற்று நீரில் நடக்குது அரசியல்
தேற்றுவார் இன்றி சோகத்தில் விவசாயிகள்
ஓற்றை போகத்திற்கு தண்ணீர் விவசாயிகள்
ஓற்றை போகத்திற்கு தண்ணீர் திண்டாட்டங்கள்
மூன்று போகம் கண்ட நிலங்கள்
நாற்று நடும் நிலங்கள் வறட்சியில்
ஜான் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை என்று
ஆண் என்ற ஆணவம் வளர்த்தனர் அன்று
பெண் என்றால் மட்டம் என்பது மடத்தனம்
நான் ஆண் என்ற அகந்தை வந்தது இன்று
ஏன்? இந்த வேறுபாடு சமமாக மதித்திடு நன்று.
ஓடி ஓடி உழைத்துத் தேய்ந்த போதும்
தேடித் தேடி நாளும் அலைந்திட்ட போதும்
நாடி உள்ள குடும்பத்தில் என்றும் பஞ்சம்
வாடி வதங்குகின்றான் உழைப்பாளி நாளும்
விடியல் விளையோதோ? ஏன்ற ஏக்கம்
கோடிஸ்வரன் மேலும் கோடிஸ்வரன் ஆகிறான்
ஏழை மேலும் ஏழை ஆகின்றான்
கேடி எல்லாம் அரசியல்வாதி ஆகின்றான்
நாட்டு நடப்பு நெஞ்சு பொறுக்கவில்லை
பாடிப் பயனில்லை புரட்சி வேண்டும் என்கிறேன்
ஆளுக்கொரு வாகனம் என்ற நிலை மாற்றிடு
குடும்பத்திற்கொரு வாகனம் என்ற நிலையாக்கிடு
நாளுக்கு நாள் வாகன மாசு பெருகுவதைத் தடு
வான மண்டலத்தில் ஓசோன் ஊட்டை மூடு
தோள் கொடுப்போம்,வெப்பமயமாதலை உடன் தடு
கண்ணே மணியே மானே தேனே
கண்டபடி புகழ்வான் மயங்காதே பெண்ணே
கண் சிமிட்டி அழைப்பான் உன்னை
கன்னியே சபலப்பட்டு விடாதே நீ
கண்ணி வைத்து பிடித்திடப் பார்ப்பானே.
ஆற்று நீரில் நடக்குது அரசியல்
தேற்றுவார் இன்றி சோகத்தில் விவசாயிகள்
ஓற்றை போகத்திற்கு தண்ணீர் விவசாயிகள்
ஓற்றை போகத்திற்கு தண்ணீர் திண்டாட்டங்கள்
மூன்று போகம் கண்ட நிலங்கள்
நாற்று நடும் நிலங்கள் வறட்சியில்
ஜான் பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை என்று
ஆண் என்ற ஆணவம் வளர்த்தனர் அன்று
பெண் என்றால் மட்டம் என்பது மடத்தனம்
நான் ஆண் என்ற அகந்தை வந்தது இன்று
ஏன்? இந்த வேறுபாடு சமமாக மதித்திடு நன்று.
ஓடி ஓடி உழைத்துத் தேய்ந்த போதும்
தேடித் தேடி நாளும் அலைந்திட்ட போதும்
நாடி உள்ள குடும்பத்தில் என்றும் பஞ்சம்
வாடி வதங்குகின்றான் உழைப்பாளி நாளும்
விடியல் விளையோதோ? ஏன்ற ஏக்கம்
கோடிஸ்வரன் மேலும் கோடிஸ்வரன் ஆகிறான்
ஏழை மேலும் ஏழை ஆகின்றான்
கேடி எல்லாம் அரசியல்வாதி ஆகின்றான்
நாட்டு நடப்பு நெஞ்சு பொறுக்கவில்லை
பாடிப் பயனில்லை புரட்சி வேண்டும் என்கிறேன்
மாற்றம் வேண்டும் – கவிஞர்.இரா.ரவி
ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும்
இன்னல்கள் யாவும் தீர்ந்திட வேண்டும்
பன்னாட்டு நிறுவனங்கள் விரட்டப்பட வேண்டும்
பாட்டாளியின் கரங்கள் உயர்த்தப்பட வேண்டும்
அரசியலில் ஊழல் அகற்றப்பட வேண்டும்
அரசியலில் நேர்மை விதைக்கப்பட வேண்டும்
உழவனின் உழைப்பு போற்றப்பட வேண்டும்
உழவுத் தொழில் மதிக்கப்பட வேண்டும்
ஏற்றத் தாழ்வுகள் தகர்க்கப்பட வேண்டும்
ஏங்கும் சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
பண்பாட்டுச் சீரழிவு தடுக்கப்பட வேண்டும்
பண்பில் சிறந்தோராக மாற்றப்பட வேண்டும்
சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்திட வேண்டும்
சந்தோச வாழ்க்கை பரவலாக்கப்பட வேண்டும்
சாதிமத சண்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்
சகோதர உணர்வுகள் மலர்ந்திட வேண்டும்
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும்
இல்லாதோர் இல்லை என்றாக்கிட வேண்டும்
மூடநம்பிக்கைகள் முற்றாக தடை செய்திட வேண்டும்
மூளையை பகுத்தறிவிற்கு பயன்படுத்திட வேண்டும்
ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் வேண்டும்
இனவெறி பிடித்த சிங்களர்கள் திருந்திட வேண்டும்
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக தடுக்கப்பட வேண்டும்
ஏழைகள் மேலும் ஏழைகளாவது நிறுத்தப்பட வேண்டும்
ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும்
இன்னல்கள் யாவும் தீர்ந்திட வேண்டும்
பன்னாட்டு நிறுவனங்கள் விரட்டப்பட வேண்டும்
பாட்டாளியின் கரங்கள் உயர்த்தப்பட வேண்டும்
அரசியலில் ஊழல் அகற்றப்பட வேண்டும்
அரசியலில் நேர்மை விதைக்கப்பட வேண்டும்
உழவனின் உழைப்பு போற்றப்பட வேண்டும்
உழவுத் தொழில் மதிக்கப்பட வேண்டும்
ஏற்றத் தாழ்வுகள் தகர்க்கப்பட வேண்டும்
ஏங்கும் சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
பண்பாட்டுச் சீரழிவு தடுக்கப்பட வேண்டும்
பண்பில் சிறந்தோராக மாற்றப்பட வேண்டும்
சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்திட வேண்டும்
சந்தோச வாழ்க்கை பரவலாக்கப்பட வேண்டும்
சாதிமத சண்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்
சகோதர உணர்வுகள் மலர்ந்திட வேண்டும்
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும்
இல்லாதோர் இல்லை என்றாக்கிட வேண்டும்
மூடநம்பிக்கைகள் முற்றாக தடை செய்திட வேண்டும்
மூளையை பகுத்தறிவிற்கு பயன்படுத்திட வேண்டும்
ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் வேண்டும்
இனவெறி பிடித்த சிங்களர்கள் திருந்திட வேண்டும்
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக தடுக்கப்பட வேண்டும்
ஏழைகள் மேலும் ஏழைகளாவது நிறுத்தப்பட வேண்டும்
*கவிஞர் இரா. இரவி
*
வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!
இமயம் செல்லலாம்
இரு கால்களும் இன்றி
தன்னம்பிக்கை இருந்தால்
முடியாதது முடியும்,
நடக்காதது நடக்கும்
தன்னம்பிக்கை இருந்தால்…
தாழ்வு மனப்பான்மையை தகர்த்து
தன்னம்பிக்கையை நிறுத்து
வெற்றி பெற
வெற்றியை
வெறியோடு சாதிக்க
துணை தன்னம்பிக்கை!
வயது தடையல்ல!
எந்த வயதிலும்
புரியலாம் சாதனை.
உடல் ஊனம்
அகற்றிடும்
தன்னம்பிக்கை.
உள்ளத்து ஊனம்
தகர்த்திடும்
தன்னம்பிக்கை
குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தன்னம்பிக்கை
உருவம் இல்லாத உறுப்பு,
உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
தன்னம்பிக்கை
இழந்தவன் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை
தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள்
மனதில் தீ வேண்டும்,
திட்டமிட வேண்டும்
புரியலாம் சாதனை
கவிஞர் இரா. இரவி
மதுரை www.kavimalar.com
*
வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!
இமயம் செல்லலாம்
இரு கால்களும் இன்றி
தன்னம்பிக்கை இருந்தால்
முடியாதது முடியும்,
நடக்காதது நடக்கும்
தன்னம்பிக்கை இருந்தால்…
தாழ்வு மனப்பான்மையை தகர்த்து
தன்னம்பிக்கையை நிறுத்து
வெற்றி பெற
வெற்றியை
வெறியோடு சாதிக்க
துணை தன்னம்பிக்கை!
வயது தடையல்ல!
எந்த வயதிலும்
புரியலாம் சாதனை.
உடல் ஊனம்
அகற்றிடும்
தன்னம்பிக்கை.
உள்ளத்து ஊனம்
தகர்த்திடும்
தன்னம்பிக்கை
குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தன்னம்பிக்கை
உருவம் இல்லாத உறுப்பு,
உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
தன்னம்பிக்கை
இழந்தவன் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை
தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள்
மனதில் தீ வேண்டும்,
திட்டமிட வேண்டும்
புரியலாம் சாதனை
கவிஞர் இரா. இரவி
மதுரை www.kavimalar.com
தோல்வி இல்லை கவிஞர் இரா. இரவி
விரக்தி வேண்டாம் விரட்டி விடு
கவலை வேண்டாம் களைந்து விடு
துக்கம் வேண்டாம் துரத்தி விடு
துயரம் வேண்டாம் துறந்து விடு
மகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இரு
இன்பம் வேண்டும் இன்முகமாய் இரு
புன்னகை வேண்டும் சிரித்தே இரு
தன்னம்பிக்கை வேண்டும் விழித்தே இரு
முயற்சி வேண்டும் வெற்றி பெறு
பயிற்சி வேண்டும் திறமைகள் பெறு
இலட்சியம் வேண்டும் பயணம் தொடரு
உழைப்பு வேண்டும் உறக்கம் குறைத்திரு
நெருப்பு வேண்டும் நெஞ்சில் வைத்திரு
துடிப்பு வேண்டும் நரம்பில் அணிந்திரு
முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில்
முனைப்போடு முயன்றால்
தோல்வி இல்லை உலகில்!
- கவிஞர் இரா. இரவி, மதுரை.http://tamilparks.50webs.com/tamil_padaipugal/ravi_madurai.html
மின்தடை ஹைக்கூ - கவிஞர் இரா.இரவி
பாதித்தவர்கள்
சபிக்கிறார்கள்
மின்தடை
வெட்ட வெளிச்சமானது
கையாலாகாத தனம்
மின்தடை
அறிவித்து பாதி
அறிவிக்காமல் மீதி
மின்தடை
தாமஸ் ஆல்வாய் எடிசனை
தினமும் நினைவூட்டுகின்றனர்
மின்தடை
தடையின்றி
கொசுக்கள் ரிங்காரம்
மின்தடை
வந்தது வெறுப்பு
வாக்குப் பெற்றவர் மீது
மின்தடை
ஆளுங்கட்சியை தோற்கடிக்க
ஏதிர்க்கட்சி வேண்டாம்
மின்தடை போதும்
விவசாயம் பாதிப்பு
தொழில்கள் பாதிப்பு
மின்தடை
வல்லரசாவது இருக்கட்டும்
நல்லரசாகுங்கள்
மின்தடை
வெளிநாடுகளில் இல்லை
இந்தத் தொல்லை
மின்தடை
பாதித்தவர்கள்
சபிக்கிறார்கள்
மின்தடை
வெட்ட வெளிச்சமானது
கையாலாகாத தனம்
மின்தடை
அறிவித்து பாதி
அறிவிக்காமல் மீதி
மின்தடை
தாமஸ் ஆல்வாய் எடிசனை
தினமும் நினைவூட்டுகின்றனர்
மின்தடை
தடையின்றி
கொசுக்கள் ரிங்காரம்
மின்தடை
வந்தது வெறுப்பு
வாக்குப் பெற்றவர் மீது
மின்தடை
ஆளுங்கட்சியை தோற்கடிக்க
ஏதிர்க்கட்சி வேண்டாம்
மின்தடை போதும்
விவசாயம் பாதிப்பு
தொழில்கள் பாதிப்பு
மின்தடை
வல்லரசாவது இருக்கட்டும்
நல்லரசாகுங்கள்
மின்தடை
வெளிநாடுகளில் இல்லை
இந்தத் தொல்லை
மின்தடை
புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் - கவிஞர் இரா.இரவி
காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும்
கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும்
மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும்
மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும்
எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும்
எண்ணெய் வளம் வருங்காலத்திற்கும் வேண்டும்
மரம் வெட்டுதல் தடை செய்திட வேண்டும்
மரம் வளர்த்தல் கடமையாக்கிட வேண்டும்
சுற்றுச்சூழல் மாசு இன்றி காத்திட வேண்டும்
சுகாதாரமான காற்றை சுவாசித்திட வேண்டும்
இயற்கையை இயற்கையாக இருக்க விட வேண்டும்
இயற்கையை இல்லாமலாக்குவதை நிறுத்திட வேண்டும்
செயற்கையை முடிந்தளவு அகற்றிட வேண்டும்
செயல்கள் மனிதனால் நடந்திட வேண்டும்
விவசாய உற்பத்தியை பெருக்கிட வேண்டும்
விசம் கக்கும் தொழில்கள் நிறுத்திட வேண்டும்
இயற்கை உரங்களை பயன்படுத்திட வேண்டும்
இரசாயண உரங்களை தவிர்த்திட வேண்டும்
உடலுக்கும் உலகிற்கும் நலம் மிதிவண்டி
உலகம் செழிக்க குறைப்போம் விசைவண்டி
மகத்தானது மனித ஆற்றல் உணர்ந்திடுவோம்
மாசுக் கட்டுப்பாட்டிற்கு உதவிகள் புரிந்திடுவோம்
வெப்பமயமாதலைத் தடுக்க எல்லோரும் உதவிடுவோம்
வெப்பமாகும் செயல்களை உடன் நிறுத்திடுவோம்
எங்கும் இயந்திரமயமாதலை ஒழித்திட வேண்டும்
எங்கும் மனிதமயமாதலை வளர்த்திட வேண்டும்
நவீனமயமாதல் உடலுக்கு உலகிற்கும் கேடு பயக்கும்
நவீனத்தில் நல்லதை எடுத்து அல்லதை விட்டுவிடுவோம்
எப்போதும் துணிப்பை ஒன்று வைத்திருப்போம்
எங்கும் பிளாஸ்டிக் பை இல்லாது ஒழித்திடுவோம்
மக்காத குப்பையாகி மாசுபடுத்துகின்றது
மண்ணில் நீரை இறங்க விடாமல் தடுக்கின்றது
பாலித்தீன் பயன்பாட்டை உடன் குறைத்திடுவோம்
பாதிப்பு இல்லா உலகம் நாம் அமைத்திடுவோம்
முயன்றால் முடியாது எதுவுமில்லை உலகில்
முயன்றிடுவோம் யாவருமே வெப்பத்தைக் குறைக்க
காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும்
கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும்
மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும்
மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும்
எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும்
எண்ணெய் வளம் வருங்காலத்திற்கும் வேண்டும்
மரம் வெட்டுதல் தடை செய்திட வேண்டும்
மரம் வளர்த்தல் கடமையாக்கிட வேண்டும்
சுற்றுச்சூழல் மாசு இன்றி காத்திட வேண்டும்
சுகாதாரமான காற்றை சுவாசித்திட வேண்டும்
இயற்கையை இயற்கையாக இருக்க விட வேண்டும்
இயற்கையை இல்லாமலாக்குவதை நிறுத்திட வேண்டும்
செயற்கையை முடிந்தளவு அகற்றிட வேண்டும்
செயல்கள் மனிதனால் நடந்திட வேண்டும்
விவசாய உற்பத்தியை பெருக்கிட வேண்டும்
விசம் கக்கும் தொழில்கள் நிறுத்திட வேண்டும்
இயற்கை உரங்களை பயன்படுத்திட வேண்டும்
இரசாயண உரங்களை தவிர்த்திட வேண்டும்
உடலுக்கும் உலகிற்கும் நலம் மிதிவண்டி
உலகம் செழிக்க குறைப்போம் விசைவண்டி
மகத்தானது மனித ஆற்றல் உணர்ந்திடுவோம்
மாசுக் கட்டுப்பாட்டிற்கு உதவிகள் புரிந்திடுவோம்
வெப்பமயமாதலைத் தடுக்க எல்லோரும் உதவிடுவோம்
வெப்பமாகும் செயல்களை உடன் நிறுத்திடுவோம்
எங்கும் இயந்திரமயமாதலை ஒழித்திட வேண்டும்
எங்கும் மனிதமயமாதலை வளர்த்திட வேண்டும்
நவீனமயமாதல் உடலுக்கு உலகிற்கும் கேடு பயக்கும்
நவீனத்தில் நல்லதை எடுத்து அல்லதை விட்டுவிடுவோம்
எப்போதும் துணிப்பை ஒன்று வைத்திருப்போம்
எங்கும் பிளாஸ்டிக் பை இல்லாது ஒழித்திடுவோம்
மக்காத குப்பையாகி மாசுபடுத்துகின்றது
மண்ணில் நீரை இறங்க விடாமல் தடுக்கின்றது
பாலித்தீன் பயன்பாட்டை உடன் குறைத்திடுவோம்
பாதிப்பு இல்லா உலகம் நாம் அமைத்திடுவோம்
முயன்றால் முடியாது எதுவுமில்லை உலகில்
முயன்றிடுவோம் யாவருமே வெப்பத்தைக் குறைக்க
-உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி
கவிஞர் இரா.இரவி
இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி
புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி
கவிஞர் இரா.இரவி
இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி
புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|