புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 சொல் விளையாட்டு - Page 5 Poll_m10 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 
48 Posts - 46%
heezulia
 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 சொல் விளையாட்டு - Page 5 Poll_m10 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 சொல் விளையாட்டு - Page 5 Poll_m10 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 சொல் விளையாட்டு - Page 5 Poll_m10 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 சொல் விளையாட்டு - Page 5 Poll_m10 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 சொல் விளையாட்டு - Page 5 Poll_m10 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 
48 Posts - 46%
heezulia
 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 சொல் விளையாட்டு - Page 5 Poll_m10 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 
46 Posts - 44%
T.N.Balasubramanian
 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 சொல் விளையாட்டு - Page 5 Poll_m10 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 சொல் விளையாட்டு - Page 5 Poll_m10 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 சொல் விளையாட்டு - Page 5 Poll_m10 சொல் விளையாட்டு - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல் விளையாட்டு


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 05, 2010 4:38 pm

First topic message reminder :

சில அழகான சொல்லை/சொற்களை கையாளும்போது அவை இடது பக்கத்திலிருந்தும், வலது பக்கத்திலிருந்தும் ஒரே மாதிரியான சொல்லாய்/ சொற்களாய் ஒலிக்கும்.

உதாரணத்திற்கு: விகட கவி.

இத் திரியில் இதே போன்ற சொல்லை/சொற்களை கையாளுவோம்.

சிந்தனைப் பரவியை சீராய் செலுத்துவோம் வாரீர்.  சொல் விளையாட்டு - Page 5 678642


avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Oct 31, 2011 3:39 am

பாடல்கள் மற்றும் அதன் பொருள்
முதற்பாடல்:

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாம் = சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவனுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை(அனங்கனாக) செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே!
மா = கரிய(கொடிய)
மாயா = மாயையினின்றும்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!

இரண்டாம் பாடல்:

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா

யாகா = வேள்விப் பயனாக விளங்குபவனே
யாழீ = யாழ் இசைப்பவனே
காயா = அருளுருவத்திருமேனி எடுப்பவனே
காதா = "காதுதல்" ஆகிய அழித்தல் தொழிலைச் செய்பவனே
யார் ஆர் = எத்தகையவர்களுக்கும்
ஆதாய் ஆயாய் = ஆகின்ற தாய் ஆயினவனே
ஆயா = ஆராய முடியாத
தார் ஆர் ஆயா = ஆத்திப் பூவை மாலையாகக் கொண்டவனே
தாக ஆயா = வெட்கையுற்ற தாருக வனத்து முனி பத்தினியர் கூட்டத்தை உடையவனே
காழீயா = சீர்காழி இறைவனே
யா = (துன்பங்கள்) எவற்றினின்றும்
கா = எம்மைக்காத்தருள்க

மூன்றாம் பாடல்:

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா

தாவா = அழியாத
மூவா = முதுமை அடையாத
தாசா =தசகாரியங்கள் என்பவற்றால் அடையும் பொருளாக உள்ளவனே
காழீநாதா = சீர்காழிக்குத் தலைவனே
நீ = அஞ்சி நீங்கத்தகுந்த (சுடுகாட்டில்)
யாமா = யாமம் ஆகிய நள்ளிரவில் நடனம் புரிபவனே
மா = பெருமை மிகுந்தவனே
மா மா = மாண்புமிக்க ஐராவணம் என்னும் யானையின்மேல்
யாநீ = ஏறி வருபவனே
தாந ஆழி = கொடைத்தன்மையில் கடல் போன்றவனே
சா கா = சாதலினின்று காத்தருள்க
காசா = பொன் போன்ற ஒளியை உடையவனே
தா = எல்லா வரங்களும் தருக
வா = எங்கள் முன்னே வருக
மூ = எல்லாவற்றுக்கும் முற்பட்டவனே
வாதா = காற்று முதலிய ஐம்பூதங்களீன் வடிவாக உள்ளவனே

நான்காவது பாடல்:

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ

நீவா = நீங்குதல் இல்லாத
வாயா = மெய்ப்பொருளானவனே
கா = காவுகின்ற
யாழீ = யாழையுடையவனே
வான் நோ = கொடிதாகிய பிறவித்துன்பம்
வாராமே = எங்களை அடையாமல்
கா வா = வந்து காப்பாற்றுக
வான் நோவா வா = தேவர்கள் வருந்தாதபடி
மேரா = மேரு மலையை வில்லாக ஏந்தியவனே
காழீயா = சீர்காழி இறைவனே
காயா = ஆகாய வடிவினனே
வாவாநீ = நீ விரைந்து வருவாயாக

ஐந்தாவது பாடல்:

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

யா = எப்பொருள்களுக்கும்
காலா = காலவடிவமாக உள்ளவனே
மேயா = (எல்லாவற்றிலும்) மேவியிருப்பவனே
மேதாவீ = அறிவில் மேம்பாடு மிக்கவனே
தாய் ஆவி = (எல்லோருக்கும்) தாயாகவும், உயிராகவும் விளங்குபவனே
வீயாதா = எக்காலத்தும் அழிவில்லாதவனே
வீ தாமே = கின்னரம் என்னும் பறவைகள் தாமே (இசையில் மயங்கி விழுமாறு)
யாழீ = யாழை மீட்டுபவனே
யாம் = யாங்கள்
மேல் = மேற்கொண்டு
ஆகு = ஆவனவற்றிற்காக
ஆயா = ஆராய்ந்து வருந்தாதபடி
கா = காத்தருள்க

ஆறாவது பாடல்:

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகாலேலாகா ழீதேமேகா போலேமே

மேலே = மார்க்கண்டேயரின் மீது
போகாமே = கூற்றுவன் வெகுண்டு செல்லாமல்
தேழீ = அதட்டித்தெழித்தருளியவனே
காலாலே = திருவடியினாலே
கால் ஆனாயே = காலனுக்கும் காலனாய் விளங்கினையே
ஏல் = எற்றுக்கொள்ளத்தக்க
நால் = சனகர், சனந்தனர், சந்த்குமாரர், சனாதனர் என்னும் நாஉ முனிவர்களுக்கும்
ஆகு = ஞான ஆசிரியராக எழுந்தருளி
ஆல் = கல்லால மர நிழலில்
ஏலா = அவர்களை ஏற்றருளியவனே
காழீதே = சீர்காழியில் விளஉம் முழுமுதல் தெய்வமே
மேகா = மேகம் போன்ற கொடைத்தன்மையுடையவனே
போலேமே = அடியார்களாகிய நாங்கள் உன் தொண்டர்கள் கூட்டத்தில் ஒருவரைப் போல ஆக மாட்டோமா

ஏழாவது பாடல்:

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
நீயா = நீங்குதல் இல்லாத
மாநீ =உமாதேவியை உடையவனே
ஏயா = ஒப்பில்லாத
மாதா = தாயாக விளங்குபவனே
ஏழீ = ஏழு இசையின் வடிவாகத்திகழுபவனே
கா நீ தானே = நீயே எம்மைக் காப்பாற்று
நே = நேயம் மிகுந்த நெஞ்சை
தாநீ = இடமாகக் கொண்டருள்பவனே
காழீ = சீர்காழியில் விளங்கும்
வேதா = வேதங்களின் பொருளானவனே
மாய் = எங்களைக் கொல்லவரும்
ஆநீ = துன்பங்களை
மாயாயே = நீ மாய்த்தருள மாட்டாயா

எட்டாவது பாடல்:

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே

(சம்பந்தரின் தேவாரப்பதிகங்களில் எட்டாவது பாடலில் இராவணனைக் குறிப்பிட்டிருப்பார். அந்த மரபைப்பின்பற்றியே இந்தப் பாடலும் இராவணனைக் குறிக்கிறது.)

நே = நேயம் மிகுந்து
அணவர் = திருவடியை நெருங்கி நிற்கும் மெய்யடியார்களின்
ஆ = ஆவிகள்
விழ = தம் வயமற்று கிடக்க
யா = யாத்துக் கட்டிய
சை = ஆசையாகிய கயிற்றினை
ழியே = (அருளால்) அவிழ்த்தருள்பவனே
வேக = வேகத்தினுடைய மானின்
அதள் ஏரி = தோலினை அழகு பெற அணிந்தருள்பவனே
அளாய = துன்பங்கள் கலந்த
உழி = இடங்களில்
கா = எம்மைக் காத்தருள்க
காழியுளாய் = சீர்காழிப் பதியில் வீற்றிருப்பவனே
அரு = மன்னிப்பதற்கு அரிய
ஏது = குற்றங்களை
இளவெள = எம் சிறுமைத்தன்மையினால் யாம் செய்துவிட்டோம்
அகவே = (ஆதலின்) அவை நின்னருளால் பொறுத்தருளத்தக்கனவே ஆகும்
ஏழிசை = ஏழிசையும் பாடுதலில் வல்ல
இராவணனே = இராவணனும்கூடத் தான் செய்த பெரும்பிழைகளை நின்னால் பொறுக்கப்பட்டனன் அல்லனோ?

ஒன்பதாவது பாடல்:

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா

(ஒன்பதாவது பாடலில் திருமாலும் பிரம்மாவும் தேடியும் அடிமுடி காணமுடியாத பெருஞ்சிறப்பைப் பாடுவார்)

காலேமேலே = எல்லாப் பொருள்களுக்கும் முதலும் முடிவுமாக இருப்பவனே
கானீஈ = அடியார்களுக்குப் பெரும் செல்வமாக விளங்குபவனே
காஅழீ = காழிப்பதியில் உள்ளவனே
மாலே = எல்லாரையும் மயக்கம் செய்பவனே
மேபூ = மேன்மையுடன் பூத்த
பூமேலே = தாமரையின் மேலே வீற்றிருக்கும் பிரம்ம தேவனும்
மாலே = திருமாலும்
காலேமேலே = திருவடியையும் திருமுடியையும்
காண் நீ காழி = காண்பதை நீக்கிய உறுதிப்பாடு உடையவனே
கா = எம்மைக் காத்தருள்க

பத்தாவது பாடல்:

வேரியுமேணவ காழியயே யேனைனிணே மடளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயழிகாவண மேயுரிவே

(பத்தாவது பாடலில் சமணர்களையும் பௌத்தர்களையும் சம்பந்தர் சாடியிருப்பார்).

வேரியும் = வாசனையும்
ஏண் = பெருமையும்
நவம் = புதுமையும் கொண்ட
காழியயே = சீர்காழிப் பதியில் உள்ளவனே
ஏனை = பிறிதாகிய வெறுப்பையும்
நீள்நேம் = நீண்ட நேயத்தையும்
அடு = அடுத்தலும்
அள் = அள்ளுதல்
ஓகரது ஏ = யோகிகளுடைய செயலேயாகும்
தேரகளோடு = புத்தர்களின் சொற்களையும்
அமணே = சமணர்களின் சொற்களையும்
நினை = நினைத்தலையும்
ஏய் = அவர்களுடன் கூடுதலையும்
ஒழி = ஒழியும்படி செய்து
காவணம்(ஏ) = அந்நெறிகளில் யாம் சேராமல் எம்மைக் காக்கும் தன்மைகள்
உரிவே = உமக்கு உரியனவேயாகும்

திருக்கடைக்காப்பு:

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே

(பத்துப் பாடல்கள் கொண்டதுதான் பதிகம். ஆனால் ஞனசம்பந்தரின் பதிகங்களின் இறுதியில்
அந்தப் பதிகத்தைப் பாடிய தன்னைப் பற்றியும் தமிழின் சிறப்பையும், பதிகத்தைப் பாடுவதால் ஆகிய பயனையும் கூறியிருப்பார். இந்தப் பதினோராவது பாடலைத் 'திருக்கடைக்காப்பு' என்று குறிப்பிடுவார்கள்).

அழி = அழிக்கவல்லவனே
தாய் ஏல் = உலகுக்கெல்லம் தாயாகும் தன்மையை ஏற்கத்தக்கவன்
நல் நீயே = நல்லவனாகிய நீ ஒருவனேயாம்
நல் = நன்மை புரிவதில்
நீள் = உயர்வு மிக்கவனே
ஆய் உழி கா = தளர்ச்சி நேரும் இடத்து எம்மைக் காத்தருள்க
காழியுளானின் = சீர்காழிப் பதியில் உள்ள சிவனைப் பற்றிய
நையே = மன உருக்கத்தைத் தரும் இப்பாடல்களையே
நினையே = நினைப்பாயாக
தாழ் இசையா = (அதனால்) உமக்கு ஒரு குறையும் உண்டாகாது
தமிழ் ஆகரனே = தமிழுக்கு உறைவிடம் போன்ற திருஞானசம்பந்தன் உறுதி கூறுவது இது

source:http://www.visvacomplex.com/MaalaiMaaRRu4.html

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 31, 2011 10:57 am

தமிழின் அழகை எடுத்துக்கூறும் அழகான பாடல் பதிந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
 சொல் விளையாட்டு - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 31, 2011 11:32 am

மாலா,போலாமா?
மாமா ,மாறுமா,மாமா ?
ரமணியன்.

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Oct 31, 2011 11:14 pm

சதாசிவம் wrote:தமிழின் அழகை எடுத்துக்கூறும் அழகான பாடல் பதிந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Tue Nov 22, 2011 1:31 am

சில மாலை மாற்று சொற்கள் :
சிவகுரு முருகுவசி
மாடு ஓடுமா

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக