புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_m10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 
32 Posts - 55%
heezulia
 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_m10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_m10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_m10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_m10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 
32 Posts - 55%
heezulia
 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_m10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_m10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_m10 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 28, 2010 1:33 am

இலங்கையில் அதிக படங்களுக்கு இசையமைத்திருப்பவர் ஒரு தமிழர் என்று எங்களில் நிறையப் பேருக்குத் தெரியாத ஒரு உண்மையாகும். சிறுவயதிலேயே தன்னை இசைக்கு அர்ப்பணித்து கொண்ட இவர் மொத்தம் 225 தமிழ் மற்றும் சிங்கள படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படங்களில் இடம்பெற்ற சில பாடல்கள் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன. தென்னிந்திய பாடகர்கள் மட்டுமின்றி இலங்கையில் முன்னணி பாடகர்கள் அனைவருமே இவரது இசையமைப்பில் பாடியுள்ளனர்.

திரைப்பட இசையில் மட்டுமின்றி கர்நாடக இசையிலும் பாண்டித்தியம் பெற்றுள்ள இவர் ஒரு பாடகருமாவார். இத்தனை பெருமைகளுக்கும் உரிய இந்த இசையமைப்பாளர்
ஆர். முத்துசாமி மாஸ்டர். இவரது 22வது நினைவு தினம் இன்றாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.


தமிழ் நாட்டில், கேரள எல்லையில் அமைந்துள்ள நாகர்கோவில் என்ற கிராமத்தில் 1926 ஜனவரி 5ஆம் திகதி முத்துசாமி பிறந்தார்.

இவரது முழுப்பெயர் ராமையா ஆசாரி முத்துசாமி என்பதாகும். இவரது தந்தை ராமையா பாகவதர். அவரும் ஒரு இசையமைப்பாளர்.

சிறு வயதிலேயே மகனுக்கு இருந்த இசையார்வத்தை கண்ணுற்ற ராமையா பாகவதர் பேபி வயலின் ஒன்றை மகன் முத்துசாமிக்கு வாங்கிக் கொடுத்தார். 10 வயதாகும் போது அந்த பேபி வயலினை நன்கு இசைக்கும் அளவுக்கு பழகியிருந்தார் மகன். அதன் பின் பெரிய வயலினை வாங்கி இசை அறிவை வளர்த்துக் கொண்டதையடுத்து சென்னையில் (அப்போது மெட்ராஸ்) நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் வயலின் இசைக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது 35 எம். எம். சிங்கள திரைப்படம் ‘கடவுனு பொருந்துவ’ 1947 ஜனவரி 21 ஆம் திகதி இது திரையிடப்பட்டது. இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் ஆர். நாராயண ஐயர். அந்தப் படத்தின் இசையமைப்பு மற்றும் இசைப்பதிவு வேலைகள் அனைத்தும் இந்தியாவிலேயே இடம்பெற்றன. இந்நிலையில் தனது இசைக்குழுவில் வயலின் கலைஞராக சேர்ந்து கொள்ளுமாறு நாராயண ஐயர் முத்துசாமிக்கு அழைப்பு விடுத்தார். வயலின் இசைப்பதில் அவருக்கு இருந்த திறமையை கண்ணுற்ற ஐயர் அவரை தனது உதவியாளராக ஆக்கிக்கொண்டார்.

‘கடவுனு பொருந்துவ’ சிங்களப் படத்தின் தயாரிப்பாளரான எஸ். எம். நாயகம் ஒரு தமிழர். இந்தியாவில் நடந்த படத்தின் இசையமைப்பு மற்றும் இசைப்பதிவுகளின் போது சுறு சுறுப்பாகப் பணிபுரிந்த இளைஞர் முத்துசாமியை தயாரிப்பாளர் நாயகத்துக்கு நன்கு பிடித்துப் போய்விட்டது. இலங்கைக்கு வருமாறு நாயகம் அவரை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று இலங்கைக்கு வந்த முத்துசாமி இங்கு ஒரு இசைக் கலைஞராக முதலில் ரேடியோ சிலோனில் சேர்ந்து கொண்டார்.

1952 அக்டோபரில் ரேடியோ சிலோனில் சேர்ந்து கொண்ட முத்துசாமி 1953 லேயே அதிலிருந்து விலகினார்.

திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எம். நாயகம் கந்தானையில் 1953ஆம் ஆண்டு ஒளிப்பதிவு கலையகம் ஒன்றை நிறுவினார். சுந்தர முருகன் நவகலா சவுன்ட் ஸ்டூடியோ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கலையகம் பின்னர் எஸ். பி. எம். ஸ்டூடியோ என்று அழைக்கப்பட்டது.

இந்தக் கலையகத்தின் இசைப்பிரிவினை பொறுப்பேற்குமாறு நாயகம் விடுத்த அழைப்பை முத்துசாமி ஏற்றுக் கொண்டார்.

இதனையடுத்து 1953 இல் ‘பிரேம தரங்கய’ படத்தின் மூலம் தனது 27வது வயதில் முத்துசாமி முதல் முதலாக இசையமைப்பாளரானார். அப்படத்தின் சிறப்பாக இசையமைத்ததற்காக தென்னிந்திய ஊடகவியலாளர்கள் சங்கம் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வழங்கியது.

இதனையடுத்து ‘புதும லேலி’ (1953) ‘அஹங்கார ஸ்திரீய’, ‘மாதலங்’, ‘ஹித்த ஹொத்த மினிஹெக்’ ஆகிய படங்கள் மூலம் இவரது இசையமைப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பிரபல டைரக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் சந்தேஷய படத்தில் ‘பிருதுகீசிகாரயா’ என்ற பாடல் முத்துசாமியின் சிறப்பை மேலம் பறைசாற்றியது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இப்பாடலை பாடுவதற்கு எச். ஆர். ஜோதிபால என்ற புதிய பாடகருக்கு முத்துசாமி வாய்ப்பளித்திருந்தார்.

சிங்களப் படவுலகில் அப்போது இருந்த பிரபல பின்னணிப் பாடகர் தர்மதாச வல்பொல அவருக்கு பதிலாக சந்தேஷய பாடலைப் பாடுவதற்கு அழைக்கப்பட்ட எச். ஆர். ஜோதிபாலவுக்கு அது சுக்கிரதிசையாக மாறியது. அப்பாடல் மூலம் கிடைத்த புகழ் ஜோதிபாலவுக்கு இறக்கும் வரை செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அப்பாடலின் இசைத்தட்டு கார்கில்ஸ் நிறுவனத்தில் அந்தக் காலத்திலேயே விற்பனையில் ஒரு லட்ச ரூபாவை தாண்டி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிக படங்களில் இசையமைத்தமைக்காக 1974இல் முத்துசாமி மாஸ்டருக்கு ‘தீபசிகா’ விருது வழங்கப்பட்டது. சிங்கள படவுலகில் இவரது இசைப் பங்களிப்பை அங்கீகரித்த லிவியிவி அமைப்பும் இவரை கெளரவித்தது. 1987 இல் அப்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சி. இராசதுரை இவருக்கு ‘லயஞானவாருதி’ என்ற பட்டத்தை வழங்கினார். அதேசமயம் முத்துசாமி மாஸ்டரின் மகனான மோகன் ராஜுக்கு மெல்லிசை மன்னன் பட்டமும் வழங்கப்பட்டது.

தென் இந்திய பாடகர்கள் பலர் முத்துசாமி மாஸ்டரின் இசையமைப்பில் பாடியுள்ள அதேவேளை இலங்கையில் உள்ள முன்னணி பாடகர்கள் அனைவருமே இவரது இசையமைப்பில் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பிரபல பாடகி நந்தாமாலினி இவரது இசை யமைப்பில் ‘தருவா காகெத’ என்ற படத்தில் 1960இல் பாடியதன் மூலம் திரைப்படங்களில் பாடுவதை ஆரம்பித்திருந்தார்.

சிங்கள இசையுலகிற்கு ஆற்றிய சேவையை கெளரவிக்கும் வகையில் 1956 இல் அப்போதைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல இவருக்கு கெளரவ இலங்கை பிரஜாவுரிமையை வழங்கினார்.

கர்நாடக இசை ஆசிரியராக இருந்த முத்துசாமி மாஸ்டர் நல்ல பாடகரும் ஆவார். ‘சிதக மஹிம’ என்ற படத்தில் சுஜாதா அத்தநாயக்கவுடன் இவர் பாடிய ‘மதுரயாமே’ என்ற பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடலாகும். பல தசாப்தங்களின் பின்னர் இவரது மகனான மோகன்ராஜ் அதே பாடலை நிரோஷா விராஜினியுடன் பாடியிருந்தார். இலங்கை இசையுலகில் மோகன்ராஜின் செல்வாக்கை உயர்த்த இப்பாடல் பெரிதும் உதவியுள்ளது.

1958இல் மீண்டும் ரேடியோ சிலோனில் சேர்ந்து கொண்ட முத்துசாமி மாஸ்டர் 1981 வரை 24 வருடங்கள் அந்த நிறுவனத்தில் சேவையாற்றியிருந்தார்.

1961 அக்டோபர் 7ஆம் திகதி முத்துசாமி மாஸ்டர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். நீலியா பெரேரா என்ற சிங்கள யுவதியை இவர் திருமணம் செய்தார். முத்துசாமி மாஸ்டர் நீலியா தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் மோகன்ராஜ் இவர் தற்போது அப்சராஸ் என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று தங்கைகள் உள்ளனர்.

1988 ஜூன் 27ஆம் திகதி முத்துசாமி மாஸ்டர் தனது 62 ஆவது வயதில் மரணமானார். அச்சமயம் அவர் 225 சிங்களப் படங்களுக்கு இசையமைத் திருந்தார்.


இன்று முத்துசாமி மாஸ்டரின் நினைவு தினம்




 அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக