புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 7%
heezulia
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_c10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_m10அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 24 Jun 2010 - 14:36

First topic message reminder :

[ இன்று
பெரும்பாலானோர் தூக்கமின்மையால் அவதி
படுகின்றனர். தூக்கமின்மை
எதனால் இதன் காரணம் என்ன
? நிம்மதியான
தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்
என்பதை பற்றிய
ஆய்வு கட்டுரைகள்
]


[ அகிலத்தின்
அதிபதி அல்லாஹ் நமக்கு இரவு நேரங்களை
ஓய்வு பெறும்
காலமாகவும்
, அமைதியினை தேடிக்கொள்ளக்கூடிய
நேரமாகவும்
அமைத்து
தந்துள்ளான்
. ஆனால் பணம் பணம்
என்று அலைகின்றவர்களுக்கு மட்டுமின்றி இன்றைய
இளைஞர்களுக்கும்
-
ஏன், சிறுவர்களுக்குக்கூட தூக்கம் என்பது
இரவு நேரங்களில்
இல்லாமல்
ஆகிவிட்டது
. ]


அல்லாஹ் நமக்கு கொடுத்த அருட்கொடைகளில் ஒன்றான தூக்கத்தினை
நம்மில் பலர்
பேர் அலட்சியப்படுத்துகிறோம். இன்றைய பாஸ்ட் புட் காலத்தில்
நமக்கு தூக்குவதற்கு
நேரம் கிடைப்பது இல்லை. காலம் தவறி தூங்கி வருகிறோம்.


தூக்கம் சரியாக இல்லையென்றால் நமக்கு நோய்கள் தான் அதிகம்
வரும் என்பது
நமக்கு தெரிந்தும் தூக்கத்தினை குறிப்பிட்ட நேரத்துக்குள்
தூக்கி குறிப்பிட்ட
நேரத்திற்குள் எழும்பி விட வேண்டும் என்பதினை நாம் பேணி
காப்பது இல்லை. ஆகையால்
பலர் இவ்வுலகத்தில் மனக்கஷ்டம், மனச்சுமை, மனப்பாரம் போன்ற காரண
காரியங்களால்
பாதிக்கப்பட்டு அவஸ்தை பாடுகிறார்கள் என்பது நமக்கு
தெரிந்தது
தான்.


மேற்குலகில் உள்ளவர்கள் பலர் பணம் பணம் என்று அலைகிறார்கள்.
இதனால் அவர்கள்
தூக்கம் என்பது என்ன..? என்று கேள்வி கேட்கக்கூடிய
அளவிற்கு போய் விட்டார்கள்.
நிம்மதியினை எங்கேயோ தொலைத்து விட்டவர்களாக ஆகி
விட்டார்கள். போர் மூலமாக பல
நாடுகளில் உள்ள மக்களின் தூக்கத்தினை கெடுத்த இந்த
ஆதிக்கச்சக்திகளுக்கு எங்கே
தூக்கம் வரப்போகிறது..?





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 24 Jun 2010 - 14:41

எவ்வளவு நேர தூக்கம் தேவை?


ஒரு வயதிற்கு உட்பட்ட பாலகர்களுக்கு தினசரி 16 மணிநேர தூக்கம் தேவையாகும். ஆனால் பதின்ம வயதினருக்கு 9 மணிநேர தூக்கம் தேவை என
வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
ஏ.எல் படிக்கும் உங்கள் பிள்ளை எத்தனை மணிநேரம் தூங்கிறது
என்பதை இந்த நேரத்தில்
நினைத்துப் பாருங்கள். இவன் படியாமல் தூங்குகிறான் என நீங்கள் குற்றம்சாட்டுவது உண்டாயின் அது சரிதானா என
மறுபரிசீலனை செய்யுங்கள்.



வளர்ந்த மனிதனுக்கு எவ்வளவு நேரத் தூக்கம் தேவை? எட்டு மணிநேரம் என
வாய்ப்பாடு போல பலரும்
சொல்கிறார்கள். ஆனால் அது சரிதானா? அமெரிக்காவில் ஒரு
மில்லியனுக்கு மேற்பட்ட
மக்களைக் கொண்டு Daniel F. Kripke.MD ஆனு தலைமையிலான குழுவினரால்
ஆறு வருடங்கள்
செய்யப்பட்ட ஆய்வு மனிதர்களுக்கு 8 மணித்தியால் தூக்கம்
தேவையற்றது என உறுதியாகக்
கூறுகிறது. தினமும் ஏழு மணி நேரம் தூங்குவதே திருப்தியானது, அதுவே ஆரோக்கியமானது என அதே ஆய்வு மேலும்
தெளிவுறுத்துகிறது.



இருந்தபோதும் வளர்ந்தவர்களுக்கு தினசரி 7 முதல் 8 மணி தேவை என்பதே பொதுவான கருத்தாகும். ஆனால் 5 மணிநேரம் மட்டும்
தூங்கிவிட்டு தினமும் உற்சாகமாக உலவும்
மனிதர்களும்
இருக்கிறார்கள்.. மறுபுறம்
10மணிநேரம் தூங்கினால்தான் திருப்தி அடைபவர்களும்
இருக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிலும் முக்கியமாக கர்ப்ப
காலத்தின் முதல் மூன்றுமாத
காலத்தில் சாதாரணமானவர்களை விட பல மணிநேர தூக்கம்
மேலதிகமாகத் தேவைப்படுகிறது.


வயதாகும்போது மனிதர்களின் தூக்கம் ஆழமற்றதாகவும், குறுகிய காலத்திற்கே நீடிப்பதாகவும், அடிக்கடி வரும் குறும்
தூக்கமாகவும் இருக்கும். ஆனால் மொத்தமாகக்
கணக்கெடுத்தால் இளமைப்
பருவத்தில் பெற்ற தூக்கத்திற்கு ஏறக்குறையச் சமனாகவே
இருக்கும். ஆயினும் 65ற்கு மேற்பட்ட பலருக்கும்
தூக்கக் குறைபாட்டுப் பிரச்சனைகள்
இருபதுண்டு. இது வயதாவதாலும் ஏற்படலாம், அவர்களுக்கு இருக்கும்
மூட்டுவலி
, ஆஸ்த்மா, இருதய நோய் போன்ற பல்வேறு
நோய்களால் ஏற்படலாம். அல்லது அதற்கு அவர்கள் உட்கொள்ளும்
மருந்துகளும் காரணமாகலாம்.


ஒரு நாளுக்கு ஒழி என்றால் ஒழியாய், இரு நாளுக்கு ஏல் என்றால்
ஏலாய் என ஓளவை
வயிறு பற்றிப் பாடினார். வயிறானது ஒரு நாளுக்கு உண்ணாமல்
இருக்கவும் மாட்டாது. உணவை
ஒழித்த ஒரு நாளுக்காக மறுநாள் இரு மடங்கு சாப்பிடவும்
மாட்டாது. ஆனால் தூக்கம்
அப்படியல்ல. தூக்கத்தை முற்கடனாகக் கொடுக்குமோ தெரியாது.
ஆனால் பாக்கியை வசூல்
பண்ணத் தயங்காது. ஒரு நாள் உங்களுக்கு தூக்கம் போதாது
இருந்தால் மறுநாள் சற்று
அதிகம் தூங்கி உங்கள் உடல் அதனை ஈடு செய்யும் ஆற்றல்
கொண்டது. ஆனால் கடன்
அதிகமானால் கவனஈர்ப்புத் திறன், முடிவு எடுக்கும் திறன், செயற்படும் திறன் போன்ற பல உடற் செயற்பாடுகள்
பாதிப்புறும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 24 Jun 2010 - 14:42

உங்கள் தூக்கம் போதுமானதா என்பதை எவ்வாறு அறிவது?


பகல் நேரத்தில் நீங்கள் தூங்கி வழிந்தால் நீங்கள் முதல்
இரவு கொண்ட தூக்கம்
குறைவானது என்றே அர்த்தமாகும். முக்கிய வேலையின் போது
தூங்கி வழிந்தால்
மட்டுமின்றி, சலிப்படையச் செய்யும் வேலையின் போது தூங்கி வழிந்தால் கூட
போதாது
என்றே கொள்ள வேண்டும்.
ஒருவர் படுக்கையில் சாய்ந்த
5 நிமிடங்களுக்குள் வழமையாகத் தூங்கிவிடுகிறார் எனில்
அவருக்கு பாரதூரமான தூக்கப் போதாமை இருக்கக் கூடும் அல்லது
தூக்கக் குறைபாட்டு நோய்கள்
இருக்கக் கூடும் என இத்துறையில் நிபுணத்துவம்
பெற்றவர்கள் கூறுகிறார்கள்.


கோழித் தூக்கம் என்பதும் இதன் மற்றொரு வெளிப்பாடு ஆகும். கோழித்
தூக்கம் என்றால் என்ன
? முழித்திருக்கும் வேளைகளில் தன்னை அறியாமல் கண்ணயர்வதைத்தான்
நாம் கோழித் தூக்கம் என்கிறோம். ஆங்கிலத்தில்
Microsleep என்கிறார்கள்.


அண்மையில் ஒரு ஆய்வு. ஜெர்மனி நாட்டில் உள்ள டுச்செல்டர்ப் பல்கலைக்கழகத்தில் டொக்டர்
ஒலாப் லஹ்ல் தலைமையில் செய்யப்பட்டது.. தூக்கம்
நினைவாற்றலை அதிகரிக்கச்
செய்கிறது என அவரது ஆய்வின் முடிவு கூறுகிறது. பள்ளி
மாணவர்களிடையே அவர் இந்த
ஆய்வினை நடத்தினார். முதலில் மாணவர்களுக்கு சில
வார்த்தைகளை மனப்பாடம்
செய்யக் கொடுத்தார். அவர்களில் ஒரு பகுதியினரை
5 நிமிடங்கள் தூங்கச் சொன்னார்.
மற்றவர்களை தூங்காது விழித்திருக்கச் சொன்னார். ஒரு மணி நேரம்
கழித்து அவர்களின்
நினைவாற்றலை அவர் பரிசோதித்த போது
, விழித்திருந்த மாணவர்களை விட, தூங்கிய மாணவர்களால்
மனப்பாடம் செய்த வார்த்தைகளை எளிதில் நினைவு படுத்தி சொல்ல
முடிந்தது.


கற்றவற்றை மனத்தில நிறுத்துவதற்கு தூக்கம் அவசியம் என்பது
இதனால் தெரிகிறது
அல்லவா? உங்கள் பிள்ளைகள் திறமாகக் கற்க வேண்டுமாயின் போதிய தூக்கம்
அவசியம் என்பதை
மறந்து விடாதீர்கள்.


மிட்சிகன் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது
குண்டுக்
குழந்தைகள் பற்றியது. போதிய அளவு தூக்கம் அற்ற குழந்தைகள்
அதீத எடையுள்ளவரகளாக
வளரக் கூடும் என்கிறது அவ் ஆய்வு.


உண்மையில் தூக்கம் என்பது ஒரு மர்ம மாளிகையாகும். அதன்
வாசல்களைத்
; திறந்து அதனுள் மறைந்திருக்கும்
இரகசியங்களை விஞ்ஞானிகள் துருவிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆயினும் ஆங்காங்கே சில
கீற்றுக்கள்தான் தென்படுகின்றனவே ஒழிய தூக்கத்தை இன்னும்
ஒருவரும் முழுமையாகப்
புரிந்து கொள்ளவே இல்லை. அது வரை போதிய தூக்கம் கொண்டு
மூளையைச் சுறுசுறுப்புடன்
காப்பாற்றிக்
காத்திருப்போம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 24 Jun 2010 - 14:42

நிம்மதியற்ற தூக்கமும், ஒழுங்கற்ற
தூக்கமும் உடல் நலத்துக்கு
எதிரானவை


முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து
நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு
ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது


தூங்காதே தம்பி தூங்காதே என
பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும்
, பதின்
வயதினரையும் பார்த்து தூங்குங்கள்
, தூங்குங்கள் என
துரத்தும் காலம்.
அவர்களைத்
தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார
நிகழ்ச்சிகளை
நிதமும் அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றன.



நள்ளிரவுக்கு மேலும் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் விளையாடுவதும், செல்போனில் அளவளாவுவதும் என
இன்றைய
இளசுகளுக்கு தூக்கத்தைத்
தவிர்க்கும் வழிகள் ஏராளமாய் இருக்கின்றன.



இவையெல்லாம் உடல்நலத்துக்கு பெரிதும் தீங்கானது, போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த
பதின் வயதினர் அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை.
அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு
எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி
ஒன்று.


பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த
ஆய்வின் முடிவு
ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் குருதி
அழுத்த நோய் வரும் என
அதிர்ச்சிச் செய்தியை அறிவித்திருக்கிறது.


ஒழுங்கான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய்
மாறும் அபாயம்
இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு வெளியிட்டிருந்தது.
இப்போது அதைவிட
அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.


உயர் குருதி அழுத்தம் என்பது இதய நோய் உட்பட பல்வேறு பெரிய
நோய்கள்
வருவதற்கான காரணமாகி விடக்
கூடும் என்பதால் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில்
முக்கியத்துவம் பெறுகிறது.


முழுக்க முழுக்க பதின் வயதினரின் உடல் நலம் தொடர்பாய்
நிகழ்த்தப்பட்ட இந்த
சோதனையில் கலந்து கொண்ட அனைவரும் 13 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதினர்
என்பது
குறிப்பிடத் தக்கது.
அவர்களில் சுமார் நாற்பது விழுக்காடு பேர் குறைந்த தூக்கம்
, அல்லது நிம்மதியற்ற
தூக்கத்தையே கொண்டிருப்பதாக தெரிய வந்திருப்பது
கவலைக்குரியதாகும்.


பல்கலைக்கழக தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவு இயக்குனர்
சூசன் ரெட்லைன்
இது பற்றிக் குறிப்பிடுகையில், இதுவே முழுக்க முழுக்க பதின்
வயதினரை வைத்து
நிகழ்த்தப்படும் தூக்கம் தொடர்பான முதல் ஆராய்ச்சி என
தெரிவித்தார். இதன் முடிவு
தூக்கம் தொடர்பான மற்ற ஆராய்ச்சி முடிவுகளை விட
அச்சுறுத்தக் கூடியது என அவர் கவலை
தெரிவித்தார்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 24 Jun 2010 - 14:43

அருமையான பதிவு ,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 24 Jun 2010 - 14:43

[தூக்கத்தைக் குறித்த ஆய்வு முடிவுகள் ஒட்டுமொத்தமாக
நம்மிடம் சொல்வது ஒன்றே ஒன்று தான்
. நிம்மதியாக தினமும் இரவில் ஏழு, எட்டு மணி நேரம் தூங்குங்கள். தேவையற்ற பல நோய்கள் தானாகவே விலகி
ஓடிவிடும்
.]


தற்போதைய வாழ்க்கை முறை பதின் வயதினரை பல்வேறு விதமான
கேளிக்கைகளுக்குள்
இழுத்துச் சென்று அவர்களுடைய நேரத்தையும், உடலையும் வீணடிக்கிறது.
கிடைக்கும் ஓய்வு
நேரத்தில் உடலுழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளில்
ஈடுபடுவது இரவில் நல்ல
தூக்கத்துக்கு உத்தரவாதம் தரும். அதை விடுத்து வெறுமனே
தொலைக்காட்சி எனும் தூக்குக்
கயிற்றில் தொங்கினால் வாழ்க்கை நலமிழக்கும், அர்த்தமிழக்கும்.


வெங்காய பச்சடி இரவு உண்ண நல்ல தூக்கம் வரும்


சுடு நீரில் எலுமிச்சம் ஜூஸ் போட்டு
அதில் தேன் கலந்து குடித்து வர
தூக்கம் வரும்


ஒரு
கப் பால் குடித்தாலும் நல்ல தூக்கம் வரும்உலக அளவில் தூக்கம் தொடர்பாக நடைபெற்று வரும்
ஆய்வுகள் கணக்கற்றவை. ஒவ்வொர் ஆய்வும் நமக்கு தூக்கத்தைக்
குறித்த விழிப்புணர்வை


' வழங்குகின்றது என்பதே உண்மை. சீரற்ற
தூக்கம் இதய நோய் வரும் வாய்ப்பை இருமடங்கு அதிகரிக்கும்
என்னும் அதிர்ச்சிகரமான
ஆய்வு முடிவு ஒன்றை வெகு சமீபத்தில் லண்டன்
ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.



மிகவும் விரிவான அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இதயம் தொடர்பான நோய்களுக்கும்
தூக்கத்துக்கும் இடையேயான உறவை ஆராய்ந்தது. அதனடிப்படையில் இந்த
முடிவு எட்டப்பட்டிருப்பதாக
ஆராய்ச்சியை நடத்திய வார்விக் பல்கலைக்கழகம்
தெரிவித்துள்ளது.


ஏழு மணி நேர தூக்கம் என்பது சரியான தூக்க அளவு என்றும், இந்த காலத்தை குறைக்கும் போது இதய நோய்கள்
வரும் வாய்ப்புகளும் இரட்டிப்பாகின்றன என்பது அந்த
ஆராய்ச்சியின் முடிவாகும்.


இந்த ஆராய்ச்சி சொல்லும் சுவாரஸ்யமான இன்னோர் முடிவு
என்னவெனில்
, இந்த தூக்க அளவை திடீரென அதிகரித்தால்
கூட இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்
என்பதாகும்.


சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் வயது, வாழ்க்கைத் தரம், பாலினம், பழக்கங்கள் போன்ற அனைத்தும்
கவனத்தில் கொள்ளப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.


நிம்மதியற்ற தூக்கமும், ஒழுங்கற்ற தூக்கமும் உடல்
நலத்துக்கு எதிரானவை என்று
அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.


இதற்கு முன் தூக்கம் தொடர்பாக செய்யப்பட்ட ஒரு ஆய்வு ஷிப்ட்
முறைப்படி வேலை
செய்பவர்களின் உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்படுவதாகவும், அதற்குக் காரணம் அவர்கள் இரவில் தூக்கத்தை இழப்பதும், பகல் தூக்கத்தின் மூலம் அதை
ஈடுகட்ட இயலாமல் போவதுமே
என்று கூறியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. இரவு ஷிப்ட்
வேலை செய்பவர்களுக்கு இதய
நோய் அதிகரிப்பதற்கும் இந்த தூக்கம் கெடுதல் முக்கியமான
காரணமாய்
விளங்குகிறது.


இரவு ஷிப்ட் வேலை பார்க்கும் பெண்களுக்கு மார்பகப் புற்று
நோய் வரும்
வாய்ப்பும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரவில் செயற்கை ஒளியிலேயே
முழு நேரமும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருப்பதும்
இதற்கான ஒரு காரணம் என்பது
அவர்களுடைய ஆய்வு முடிவு. பார்வை தெரியாத பெண்களுக்கு
இத்தகைய பாதிப்பு பாதியாகக்
குறைகிறது என்பதை அவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.


தூக்கம் தொலைவதனால் வரும் இன்னொரு முக்கியமான பிரச்சனை
மூளையின் வளர்ச்சி
மற்றும் செயல்பாடு தொடர்பானது. தூக்கமில்லாமல் இருப்பவர்கள்
சோர்வாகவும்
, கவனக் குறைவாகவும் இருப்பார்கள்
என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் அவர்களுடைய மூளை புதிய
செல்களை உற்பத்தி செய்வதும்
குறைகிறது என்பது இன்னொரு அதிர்ச்சியூட்டும்
தகவலாகும்.

படுக்கையிலிருந்து சரியான தூக்கமில்லாமல் எழுந்திருப்பது
நிறைய நேரத்தைத்
தந்தாலும் கூடவே மன அழுத்தத்தையும் தரும் என்பது மருத்துவ
ஆராய்ச்சிகள் சொல்லும்
இன்னொரு செய்தியாகும். தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே
தூங்கும் பழக்கமுடையவர்கள்
அதிக எடையுள்ளவர்களாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாகவும்
மருத்துவ ஆராய்ச்சிகள்
எச்சரிக்கின்றன





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 24 Jun 2010 - 14:43

இப்படி தூக்கத்தைக் குறித்த ஆய்வு
முடிவுகள் ஒட்டுமொத்தமாக நம்மிடம் சொல்வது
ஒன்றே ஒன்று தான்.
நிம்மதியாக தினமும் இரவில் ஏழு
, எட்டு மணி நேரம்
தூங்குங்கள்.
தேவையற்ற பல
நோய்கள் தானாகவே விலகி ஓடிவிடும்.



தாமஸ் ஆல்வா எடிசன் தூக்கத்தைக் குறித்துப் பேசும்போது
தூக்கம் பொழுதை
வீணடிக்கும் ஒரு விஷயம் என்று குறிப்பிடுகிறார்.
நெப்போலியன் தன்னுடைய வாழ்நாளில்
இரவில் வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கினான்
என்கிறது நெப்போலியன்
வரலாறு.


இப்படி வரலாற்று மனிதர்கள் தூக்கத்தைக் குறித்து பேசியதைப்
போலவே ஒவ்வோர்
காலகட்டத்திலும் மக்கள் தூக்கத்தைக் குறித்து பல விதமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எனினும் மனிதன் தன்னுடைய வாழ்நாளில் சுமார் மூன்றில்
ஒரு பங்கை தூக்கத்தில் தான்
செலவிடுகிறான்.



தூக்கம் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்க
முடியவில்லை. ஒரு
முழுநாளைய சோர்வின் மிச்சங்களைச் சலவை செய்யும் ஓர்
உன்னதமான செயல் தூக்கம் என்பதே
என்னுடைய கருத்து.


தூக்கம் என்பது பகலில் நாம் செலவிடும் ஆற்றலை
மீண்டெடுக்கும் நிலை என்னும்
எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால் விஞ்ஞானம் அதை மறுக்கிறது.
ஒரு நாள் இரவு எட்டு மணி
நேரம் நன்றாகத் தூங்கினால் உடல் சேமிக்கும் ஆரோக்கியமும்
ஒரு துண்டு ரொட்டியில்
கிடைக்கும் ஆரோக்கியமும் ஒரே அளவே எனக் கூறி விஞ்ஞானம்
வியக்க வைக்கிறது.



எனவே ஆற்றலைச் சேமிப்பதற்காக தூக்கம் தேவை எனும் பழங்கால
நம்பிக்கை
பொய்த்துப் போய்விட்டது. ஆனால் மூளையின் செயல்பாடுகள்
கூர்மையடையவும்
, மூளையின் வளர்ச்சி சீராக இருக்கவும்
தூக்கம் தேவை என்னும் உண்மை மருத்துவ உலகத்தால் ஏற்றுக்
கொள்ளப் பட்டிருக்கிறது.


சோர்வு, மறதி, பதட்டம், கவனமின்மை போன்ற பலவிதமான இன்னல்களுக்கு மனிதனை இட்டுச் செல்லும் திறமை
தூக்கமின்மைக்கு இருக்கிறது.



தொடர்ந்து பல நாட்கள் இரவு முழுவதும் கண்விழித்து வேலை
செய்பவர்களிடம்
வேலையின் தரம் குறையும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
நாம் கவனத்தில்
கொள்ளவேண்டிய செய்தி இது.


இன்னும் சொல்லப்போனால் பதினேழு மணி நேரம் தூங்காமல்
இருப்பவனுடைய
செயல்பாடுகள் இரண்டு கப் வைன் குடிப்பவனுடைய செயல்பாடுகள்
போல சற்று மங்கலாகவே
இருக்கும் என்கிறது யூ.கே ஆராய்ச்சி ஒன்று.


உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோய்கள், மூளை சம்பந்தமான குறைபாடுகள் என பல்வேறு
நோய்களுக்கு இந்த தூக்கம்ன்மை காரணமாகி
விடுகிறது.


தூங்கும் போது நமது கண்கள் அசைகின்றனவா
அசையாமல்
இருக்கின்றனவா என்பதைக் கணக்கில் கொண்டு தூக்கத்தை அதிக கண்
அசைவுடைய தூக்கம் (
REM ). கண் அசைவற்ற தூக்கம் ( Non REM ) என இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.


அதிக கண் அசைவற்ற தூக்கத்தை மேலும் நான்கு பிரிவுகளாகப்
பிரிக்கலாம்.
முதலில் வருவது இலகுவான தூக்கம். இந்த தூக்கம் உண்மையில்
தூக்கத்துக்கும்
விழிப்புக்கும் இடையே மனம் பயணப் படும் நேரம் எனக்
கொள்ளலாம்.



இந்த நிலையில் இருப்பவர்கள் சிறு சத்தம் கேட்டாலே
திடுக்கிட்டு எழுந்து
கொள்வார்கள். தசைகள் சற்று இலகுவடையத் துவங்குவது இந்த
இடத்தில் தான்.



இரண்டாவது வகைத் தூக்கம். உண்மையான தூக்கம். இந்த தூக்கம்
சுமார் இருபது
நிமிடம் வரை நீடிக்கிறது. இலகுவான தூக்கத்தின் அடுத்த நிலையில்
வருவது இது. இந்த
நிலையில் தான் பெரும்பாலான தூக்கம் நிகழ்கிறது.


மூன்றாவது நிலை ஆழமான தூக்கம். இந்த நிலையில் இதயம், மூச்சு இரண்டும் மிகவும் குறைந்த அளவிலேயே
இயங்குகின்றன.



நான்காவது நிலை தூக்கம் இன்னும் ஆழமான தூக்கம். இந்த
தூக்கத்தினிடையே ஒருவரை
எழுப்பினால் சூழலுக்குத் தக்கபடி தன்னை மாற்றி கொள்ளவே
அவருக்கு நிறைய நேரமாகுமாம்.
எங்கே இருக்கிறோம் என்ன நிகழ்கிறது என்பதை உணராமல்
குழம்பிப் போய் பார்ப்பது
இத்தகைய தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழும்புபவர்களின்
நிலையாகும்.



அதிக கண் அசைவுடைய தூக்க நேரத்தில் தான் கனவுகள் வருகின்றன.
இந்த
தூக்கத்தில் நமது மூளை
மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. சுவாசமும்
, இதயத் துடிப்பும் இந்த தூக்கத்தில்
அதிகரிக்கின்றன. விழித்திருந்து வேலை செய்யும் போது
செலவாகும் ஆற்றல் இந்த நிலை
தூக்கத்திலும் செலவாகிறது என்கின்றனர்
விஞ்ஞானிகள்.


எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம்
தெளிவான வரைமுறை
இல்லை. ஐந்து மணி நேரம், எட்டு மணி நேரம் என சரியான
தூக்க அளவுகளாக பல்வேறு
நேரங்களைக் குறிப்பிடுகின்றனர். உண்மையில் மறு நாள்
காலையில் எழுகையில்
சுறுசுறுப்பாய் இருக்க முடிந்தால் அதுவே சரியான அளவு
தூக்கம். அது நான்கு மணி
நேரமானாலும் சரி, பத்து மணி நேரமானாலும் சரி.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 24 Jun 2010 - 14:43

விலங்குகளிடமும் தூக்கத்தின் கால அளவு மாறுபடுகிறது.
உதாரணமாக புலி பதினாறு
மணி நேரம் தூங்கி ஓய்வெடுக்கும். அதே வேளையில் ஒட்டகச்
சிவிங்கிக்கோ இரண்டு மணி நேர
தூக்கமே போதுமானதாகி விடுகிறது.


தூக்கமும் பல நோய்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது என்பது
இன்னொரு முக்கியமான
செய்தி. பல தூக்கம் சம்பந்தமான நோய்கள் மனிதனை இன்று
அல்லலுறச் செய்து
கொண்டிருக்கின்றன.


குறட்டை விடுதல் அவற்றில் ஒரு குறைபாடு எனக் கொள்ளலாம்.
குறட்டை விடுவது
நிம்மதியைப் பாதிக்கிறது, தூக்கத்தைப் பாதிக்கிறது
என்று சொல்லி வாழ்க்கைத் துணை
விவாகரத்து வாங்கிக் கொண்ட நிகழ்வுகள் பல மேலை நாடுகளில் நடந்திருக்கின்றன.


தொண்டையின் பின்னால் இருக்கும் மெல்லிய தசைகள் காற்று வரும்
பாதையை
அடைக்கும்போது, அல்லது குறுகலாக்கும் போது
எழும் சத்தமே குறட்டை என்பது மருத்துவ
மொழி.


அதிக உடல் எடையுடன் இருப்பதும், தூங்குவதற்கு முன்னால் மது
அருந்துவதும்
, தூக்க மாத்திரைகள் போடுவதும்
குறட்டை விடுதலை அதிகப்படுத்தும் என்கின்றனர்
மருத்துவர்கள். நல்ல
உடற்பயிற்சியும்
, ஆரோக்கியமான உணவுப்
பழக்கமும் இருந்தால்
நிச்சயம் குணப்படுத்திவிட முடியும் எனும் குறை பாடுதான்
குறட்டை.



குறட்டை விடும் ஆசாமிகள் ஒருக்களித்துப் படுப்பது
குறட்டையிலிருந்து
தற்காலிகமாய் தப்பிக்க உதவும்.


சிலீப் அப்னோவா' எனப்படும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் நோய் ஒன்று இருக்கிறது. இந்த
நோய்க்கான காரணமும்
குறட்டைக்கான காரணமும் ஏறக்குறைய ஒன்று தான் என்றாலும் இது
சற்று பயமுறுத்தும்
நோய்.


தூக்கத்தில் மூச்சுப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு சுமார்
பத்து முதல்
இருபத்து ஐந்து வினாடிகள் வரை மூச்சு தடைபடுவதே இந்த நோயின்
அச்சுறுத்தும் அம்சம்.
மூச்சு மூளைக்கு வரவில்லை என்றதும் மூளை சமிக்ஜை
அனுப்புகிறது. உடனே உடல்
திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறது.


அதன் பின் மீண்டும் மூச்சு சீராகிறது. ஆனால் அதற்குள் உடல்
வியர்த்து
மிகவும் சோர்வடைந்து, படபடப்பாகிவிடுகிறது.
மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதற்கு
இத்தகைய நோய் ஒரு காரணம்
எனலாம்.



சிலருக்கு ஒவ்வோர் இரவும் சுமார் முந்நூற்று ஐம்பது முறை
கூட இத்தகைய மூச்சு
தடை படுதல் நிகழ்கின்றதாம். உயர் இரத்த அழுத்தம், சோர்வு, தலைவலி போன்ற பல நோய்களுக்கும் இது காரணமாகி
விடுகிறது.



இந்த நோய்க்கும் குறட்டைக்கான மருத்துவ தீர்வுகளே
உதவுகின்றன. குறிப்பாக
நல்ல உடற்பயிற்சி, மது அருந்துதலைத் தவிர்த்தல், ஒருக்களித்துப் படுத்தல்
போன்றவை
பயனளிக்கும்.


சிலருக்கு இன்சோமியா என அழைக்கப்படும் தூக்கம் வராத நோய்
இருக்கும்.
குறிப்பாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள்
இத்தகைய நோயினால்
பாதிப்படைகிறார்கள்.


மனதின் நினைவுகளே பெரும்பாலும் இத்தகைய நோய்க்கான காரணம்.
தன்னால் தூங்க
முடியாது என நினைப்பவர்களால் எளிதில் தூங்க முடியாமல் போய்
விடுகிறது. இத்தகைய நோயை
மனக் கட்டுப்பாட்டினால் பெருமளவு நிவர்த்தி செய்து விட
முடியும்.



குறிப்பாக மனதை ஓய்வாக வைத்திருப்பதும், நல்ல ஆரோக்கியமான தூங்குவதற்கு வசதியான படுக்கை அறை
அமைப்புகளும் இந்த தூக்கமின்மை நோயை விரட்டி
விடுகின்றன.


ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் - எனப்படும் தூக்கத்தில் காலாட்டிக்
கொண்டே இருக்கும் ஒரு நோயும் இருக்கிறது. சரியான தூக்கம்
வராததால் காலை ஆட்டிக்
கொண்டிருப்பது
, உடலை முறுக்குவது, உதறுவது, நெளிவது என பலவகைகளில் இந்த நோயின்
தன்மை வெளிப்படும்.



இத்தகைய நோய் உடையோர் மாலையில் நல்ல வெந்நீர் குளியல்
ஒன்றைப் போடுவது
பயனளிக்கும், அல்லது உடலை மசாஜ் செய்து கொள்வது பயனளிக்கும் என்கின்றனர் மருத்துவர்.


பொதுவாகவே தூக்கம் சம்பந்தமான நோய்களுக்கும் ஆரோக்கியமான
வாழ்க்கை
முறைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சீரான
உடற்பயிற்சி செய்பவர்களும்
, உடலின் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்பவர்களுக்கும் தூக்கம்
சுலபமாகி
விடுகிறது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 24 Jun 2010 - 14:44

மது, தூக்க மாத்திரை போன்றவை உடலின் நீர்ச்சத்துகளை உறிஞ்சி
விடுவதால்
இத்தகைய தூக்கம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கின்றன. எனவே
இவற்றையும்
, காஃபி போன்றவற்றையும் மாலை
வேளைகளிலும்
, இரவு வேளைகளிலும் தவிர்க்க
வேண்டியது
அவசியம்.


விழிப்பிற்கும் தூக்கத்திற்கும் நல்ல சீரான ஒற்றுமை இருக்க
வேண்டும். இவை
இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. தூக்கம்
தேவையில்லை என்று அறிவியல்
, தூங்காமலேயே வாழ முடியும் என சிலர் நிரூபித்திருந்தாலும்
நல்ல ஆழமான தூக்கம்
ஆனந்தமான பகல் பொழுதுக்கான உத்திரவாதம் என்பதை
மறுப்பதற்கில்லை.



இரவுத் தூக்கம் கெட்டால் இரத்தக் கொதிப்பு வரும் ஓர்
எச்சரிக்கை! இரவில்
5 மணி நேரத்துக்கு மேல் தூங்க முடியாதவர்களுக்கு இரத்தக்
கொதிப்பு நோய் வரும் என்று
ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


குறைவாகத் தூங்கினால் பசி எடுக்கும். சுரக்கும் இன்சுலின்
அளவு சீராக
இருக்கும் என்பது முந்தைய ஆய்வின் முடிவு. தற்போதைய ஆய்வின்
முடிவின் விளைவு வேறு
விதமாக உள்ளது.


நடுத்தர வயதுள்ளவர்கள் இரவில் குறைந்த நேரம் தூங்கினால்
ரத்தக் கொதிப்பு
வரும் என்று கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மருத்துவ
விஞ்ஞானிகள் குழு
தங்கள் ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளது.


ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட 4,810 பேர்களில் 647 பேர்களுக்கு இரத்தக் கொதிப்பு இருந்தது. இவர்கள்
இரவில்
5 மணி நேரத்துக்கும் குறைவாகவே
தூங்கி
இருக்கிறார்கள். அதோடு
இவர்களின் உடல் உடையும் அதிகரித்து உள்ளது. தவிர இவர்களுக்கு
நீரிழிவு நோய், மன அழுத்த நோய் வருவதற்கான
வாய்ப்பும் அதிகமாகி இருக்கிறது. பகல்
தூக்கத்துக்கும் அடிமையாகி
விடுகிறார்கள். அதே நேரத்தில் இரவு
7 முதல் 8 மணி நேரம் தூங்கியவர்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் ஏற்படவில்லை.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 24 Jun 2010 - 14:44

இரவில் நன்றாகத் தூங்குகிறேனா?


இரவில் நான் நன்றாகத் தூங்குகிறேனா என்பதே குழப்பமாக
உள்ளது. என் மனைவியைக்
கேட்டால் நன்றாகத் தூங்குவதாகச் சொல்கிறாள். இதற்கு என்ன
காரணம்
?


விளக்கம் தருகிறார், அப்பல்லோ மருத்துவமனயின் தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர் ஒருவர்.


நமது தூக்கம் 1,2,3,4, REM என்கிற ஐந்து நிலைகளில் நடக்கிறது.
முதல்நிலை தூக்கம் சிறு சப்தத்தில் கலந்துவிடும்.
இரண்டாம் நிலையும் மூன்றாம்
நிலையும் சிற்சில சமயத்தில் நம்மை திடுக்கிட வைக்கும்.
ஆனாலும் தொடரும். நான்காவது
மற்றும் அதை அடுத்த
REM ஆழ்ந்த தூக்கம். கனவுகள் வருவதெல்லாம்
அப்பொழுதுதான். ஒவ்வொருவருக்கும் இந்த ஐந்து நிலைகளில்
தூக்கம் நிகழ்கிறது.
குறிப்பாக
, நம் தூக்கத்தில் 50 முதல் 60 சதவீதம் இரண்டாவது நிலையிலும், 20 சதவீதம் 3வது, 4வது நிலையிலும், 5 சதவிகிதம் மட்டும் REM மிலும் நிகழ்கிறது. இப்படி, தூக்கம் முறையாக நிகழ்ந்தால், மறுநாள் உற்சாகமாக இருக்கும்.


இப்படி இல்லாமல், நமது தூக்கம் சில நிலைகளில் மட்டுமே முடிவடையும் போதுதான் தூங்கினாலும், மறுநாள் தூக்கமின்மையை
உணர்கிறோம். தூங்குவதற்குமுன் காப்பி
, டீ குடிப்பது, சாக்லெட், பானங்கள் அருந்துவது தூக்கத்தைக் கெடுக்கும். ஒவ்வொரு
நாளும்
ஒரே நேரத்திற்குத் தூங்கச்
செல்ல வேண்டும். இப்படி தவிர்க்க வேண்டியதைத்
தவிர்த்தும் செய்ய
வேண்டியதைச் செய்தும் தூக்கம் நிறைவாக இல்லையென்றால்
, ஸ்லீப் ஸ்டடி செய்து பார்க்கலாம்.
இதிலும் எந்தக் குறைபாடும் தெரியவில்லை என்றால்
கவுன்சிலிங் செய்தால்
சரியாகிவிடும்.
''





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Thu 24 Jun 2010 - 14:52

பொதுவாக 20 வயது வரை தூக்கம் ( நித்திரை )மிக அவசியம் ஏனெனில் தூங்கும் போதுதான் ( ஆழ்ந்த ) growth hormone சுரக்கபடுகிறது இவை மனித வளர்ச்சிக்கு அவசியம் . அதனாலே குழந்தைகள் நீண்டநேரம் உறங்குவது அவசியம் . ஆழ்ந்த தூக்கமற்ற குழந்தைகள் வளர்ச்சி குறை உள்ளவர்களாக காணப்படுவர்



thiva
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக