புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
91 Posts - 61%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_m10அரசூர் வம்சம் (நாவல்) - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசூர் வம்சம் (நாவல்)


   
   

Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:00 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
அரசூர் வம்சம் - இரா முருகன்


பாயிரம்

அரசூர் பற்றி எழுது.

முன்னோர்கள் சொன்னார்கள்.

அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்களின் வாடை.

அது புகையிலை வாடை. வீபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. எள்ளுருண்டை வாடை. மாதாகோவில் அப்பத்தின் வாடை.

அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னைப் பார்த்தார்கள்.

அரசூரின் வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.

குடுமி வைத்தவர்கள். நார்மடிச் சேலை போர்த்திய மொட்டைத் தலையோடு பெண்கள். முட்டுக்குக் கீழே தாழ்ந்த அரைவேட்டியோடு மலங்க மலங்க விழித்துப் பார்க்கும் சிறுவர்கள். வியர்வையில் நனைந்த கல்யாணச் சேலையும் நெற்றி முழுக்க மஞ்சள் குங்குமமும், கையில் வரட்டி தட்ட எடுத்த சாணமும், முகத்தை மறைக்கும் மூக்குத்தியுமாக மிரட்சியோடு சிறுமிகள். கழுத்தில் சிலுவை மாட்டிய சிலரும் உண்டு அங்கே.

எல்லோரும் சொன்னார்கள். அன்போடு இழையும் குரல்கள். கட்டளையிடும் குரல்கள். யாசிக்கும் குரல்கள்.

வாசலில் செருப்புச் சத்தம்.

திரும்பிப் பார்த்தேன். பனியன் சகோதரர்கள்.

முன்னோர்கள் இடம் ஒதுக்கிக் கொடுக்க, பனியன் சகோதரர்கள் தரையில் உட்கார்ந்தார்கள். ஐந்து நிமிடம் முன்னால் சிகரெட் குடித்த வாடை அவர்களிடம்.

எழுது.

பனியன் சகோதரர்களும் சொன்னார்கள்.

என்ன எழுதட்டும் ?

இவர்களைப் பற்றி எழுது. எங்களைப் பற்றி எழுது. அரசூர் பற்றி எழுது.

பனியன் சகோதரர்கள் திரும்பவும் சொன்னார்கள்.

எழுதலாம்தான். ஆனால் அரசூருக்கு என்ன வரலாறு இருக்கிறது ? பனியன் சகோதரர்கள் எப்படி சகோதரர்கள் இல்லையோ அரசூருக்கும் அதேபோல் சரித்திரம் இல்லை.

ஆனாலும் பனியன் சகோதரர்கள் இருக்கிறார்கள். நூறு வருடத்துக்கு முந்திய மோட்டார் காரில் பயணம் போய்க்கொண்டு, அரசூரின் சின்னத் தெருக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு, எதிர்ப்படுகிறவர்களில் யார் ஏமாறுகிறான் என்று பார்த்துக்கொண்டு.

முன்னோர்கள் இருக்கிறார்கள். நான் எழுத ஆரம்பித்ததுமே சூழ வந்து கவிந்து கொண்டு.

அரசூரும் இருக்கிறது.

ஆத்தா சாமி கோவில். சுற்றி நாலு தெரு. நேர் எதிர்த்தாற்போல் அய்யா சாமி கோவில். அதற்குச் சுற்றி நாலு வெளிவீதி. குறுக்காக வளைந்து ஓடும் கடைத்தெரு. ராஜா சத்திரம். பிரசவ ஆஸ்பத்திரி. நல்ல தண்ணி ஊருணி. ஃபோட்டோ ஸ்டூடியோ. வால்வ் ரேடியோ ரிப்பேர்க்கடை. தெப்பக்குளம். வேலிகாத்தான் செடிகள் மறைக்கும் பள்ளிக்கூடம். முடவைத்திய சாலை. சத்தியாக்கிரஹ மேடை. கமலாம்பா காப்பி ஓட்டல். முன்சீப் கோர்ட்.

இதெல்லாம் அரசூர்தான். இது மட்டும் இல்லை. அரண்மனை கூட உண்டு. ரொம்பச் சின்னதாக ஒரு அரண்மனை. ராஜா. ஒரு ராணி. மட்டக்குதிரை. கேடயம். வாள். துடைப்பம். கரப்பான் பூச்சி. வரிக்கணக்குப் புத்தகம். காரியஸ்தன். திவசம் கொடுக்க வாழைக்காய். சமையல்காரன். மீன் செதிள் தேய்க்கப் பாறாங்கல். சீயக்காய்ப் பொடி. சேடிப்பெண். பல்லக்கு.

எல்லாமும் எல்லாரும் இருக்க இடம் உண்டு.

நாங்கள் அரண்மனைக்குப் போனோம்.

பனியன் சகோதரர்கள் தொடங்கி வைத்தார்கள்.

அவர்கள் அரண்மனைக்குள் போயிருக்கிறார்கள்.

கோவிலில் பூத்திருவிழா வருது . வசூல் பண்ண வந்திருக்கோம்.

வெள்ளை வேட்டி. ஒட்ட வெட்டின கிராப்பு. ஒருத்தன் நெடுநெடுவென்று நல்ல உயரம். இன்னொருத்தன் குட்டையாக, குண்டாக.

மேலே சட்டை கிடையாது இரண்டு பேருக்கும். பதிலாக பனியன் மட்டும் போட்டிருக்கிறார்கள். எப்போதும் அது தான் வேஷம்.

இந்த வேஷத்தோடு அரண்மனைக்குள் பூத்திருவிழாவுக்கு வசூல் பண்ண நுழைந்ததாகச் சொன்னதும் நான் கேட்டேன் - அங்கே ஆள் அரவமில்லாமல் போய் நூறு வருஷத்துக்கும் மேல் ஆகி இருக்குமே. யாரிடம் பணம் பெயருமா என்று பார்க்கப் போனீங்க ?

இல்லாமே என்ன ? ராஜா இருந்தார். கூடவே ராணி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:34 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் பதினொன்று


ஒரு கையில் வெள்ளிக் கும்பாவும் மற்றதில் சீரகம் சேர்த்துக் காய்ச்சி ஆற வைத்த வென்னீர்ச் செம்புமாக உச்சி வெய்யில் இறங்கிக் கொண்டிருக்கும்போது சுப்பம்மா மாடிப்படி ஏறினாள்.

கதவைத் தட்ட வேண்டாம். ஒருக்களித்துத் திறந்து தான் இருக்கிறது.

இல்லாவிட்டால் கொண்டு வந்ததைத் தரையில் வெய்யில் பட வைத்துவிட்டு கதவை மெல்லவோ பலமாகவோ தட்ட வேண்டி வரும். சாத வாசனைக்கு காகம் எல்லாம் பக்கத்தில் இறங்கி வந்து அதன் பாஷையில் எனக்கும் கொஞ்சம் கொடேண்டி கிழவி என்று கேட்கும்.

குழந்தை சாப்பிட்டது போக மிச்சம் இருந்தா உங்களுக்குத்தான்.

சுப்பம்மா சொல்லும்போது அவை எவ்வி ஆகாயத்தில் பறந்தபடி சிரிக்கும்.

குழந்தையா ? நாலு தலைமுறைக்கு மூத்தவளையே கிரீடைக்குக் கூப்பிட்டவன் ஆச்சே. எதுக்கும் உன் அரைக்கட்டிலே மடிசாரை இறுக்கிக்கோ.

நாசமாப் போவேள் நீங்கள்ளாம்.

சுப்பம்மா வையும்போது மூத்தகுடிப் பெண்கள் அவள் குரலில் ஏறி அதை வேறே மாதிரி மாற்றிச் சொல்லிச் சிரிப்பார்கள். கூடவே சுப்பம்மா கையைக் காலைப் பிடித்து இழுப்பார்கள்.

வேண்டாம். அங்கே போகாதே.

சுப்பம்மாளுக்கு ஒரு மணிக்கூறாவது நிம்மதியாக நித்திரை போக வேண்டும். இருண்ட இந்த வாசலுக்கு வந்ததற்கு அதுவும் ஒரு காரணம்.

அவாள்லாம் போயாச்சா ?

உள்ளே நுழைந்தபோது அவசரமாக விசாரிக்கும் குரல் எதிர்கொண்டது அவளை.

யாரைச் சொல்றே ? அண்டை அயல்லே இருந்து வந்தவாளா இல்லே அல்லூர் மனுஷாளா ?

யாரைக் குறித்து எழுந்த கேள்வி என்று சுப்பம்மாவுக்குத் தெரியும். என்றாலும் ஏதாவது சம்பாஷிக்க வேண்டும்.

நான் உன் சத்ரு இல்லை. பிரியம் வைத்திருக்கிற உறவுக்காரக் கிழவி.

திரும்பத் திரும்ப இதை நிரூபிக்க வேண்டி வந்ததில் அவளுக்கு வருத்தமில்லை.

அவாள்ளாம் போயாச்சான்னு கேட்டேன்.

கொஞ்சம் ஓங்கி ஒலித்த குரல் இருட்டில் புறப்பட்ட இடம் தெரியாமல் சுப்பம்மா தடுமாறினாள். குரலோடு சேர்ந்து சன்னமாக இழைந்து வந்த சங்கீதம் காதுக்கு சுகமாக இருந்தாலும் என்னமோ பயமுறுத்தியது. அவளைப் போன்ற நித்திய சுமங்கலி காதில் படக் கூடாத சாவோலம் அது.

நான் அண்டை அயல் பொண்டுகளைப் பத்திக் கேட்கலை. அவாவா வருவா. முழங்காலை மடிச்சு வச்சுண்டு இலையப் பார்க்கக் குனிஞ்சு இருந்து சாப்பிடுவா. மஞ்சளும் குங்குமமும் வஸ்திரமும் வாங்கித் தாலிச் சரட்டைக் கண்ணில் ஒத்திண்டு கையிலே நாலு ஆமைவடையும் போளியும் வாழை இலையில் பொதிஞ்சு எடுத்துண்டு ஆத்துலே குழந்தைகளுக்குக் கொடுக்கறதுக்காகக் கொண்டு போவா. ஷேமமாகப் போகட்டும். ஆமவடை சாப்பிட வம்சம் விருத்தி பண்ணட்டும். இந்த சாமிநாத சிரவுதிகளோட ஆசீர்வாதம். தேவிடியா சிரவுதிகளோட அனுக்ரஹம்.

சாமிநாதன் பலமாகச் சிரிக்கிறான். புரையேறுகிறது அவனுக்கு. அதோடு தொடர்கிறான்.

மேலே இருந்து இறங்கி வந்த பெண்டுகளுக்கு என் நமஸ்காரம். அவாளைக் கண்டாத்தான் நடுக்கமா இருக்கு. பரதேவதைகளே என்னை இம்சிக்காமே அந்தண்டை விலகி இருந்து இந்தக் கிழவி வாய்லே ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போய் சவுக்கியமா இருங்கோ.

சிரிப்பு உச்சத்துக்குப் போனது இப்போது.

சாமிநாதன் இங்கேதான் பக்கத்தில் எங்கேயோ உட்கார்ந்தபடி சுப்பம்மாவைக் கவனித்துக் கொண்டே இருக்கிறான். சிரிக்கிறான். பயப்படுகிறான்.

இறங்கி வந்தவா எல்லாம் விசேஷம் முடிஞ்சதுமே போயாச்சே.

சுப்பம்மாக் கிழவியும் ரொம்ப முயற்சி செய்து கொஞ்சம் போல் சிரித்துக் கொண்டே சொன்னாள். கையில் வைத்திருந்த கும்பாவும் செம்பும் கை தவறித் தரையில் விழுந்து விடலாம் என்று தோன்றியது. அதை ஒரு ஓரமாக வைத்து விட்டுப் பேசினால் தேவலை.

நீ பொய் சொல்றேடி தேவிடிக் கிழவி. அவா உன்னோட வந்து அந்த வாசலுக்கு வெளியிலே தான் நிக்கறா இப்போ. எனக்கு எல்லாம் தெரியும்.

சாமிநாதன் பெரிதாக எதையோ கண்டுபிடித்தது போல் சிரித்தான்.

நிக்கட்டுமே யாரும். உனக்கு என்ன கவலை ? பாட்டியைத் தேவிடிச்சி அப்பிடான்னு சொல்லாதேடா குழந்தை. உன் நாக்குலே எந்த துர்த்தேவதையோ ஏறி இருக்கா. இல்லாட்டி இந்த மாதிரி வார்த்தை சொல்லப்பட்டவனா நீ ?

சுப்பம்மா இருட்டில் உத்தேசமாகப் பார்த்து எதிர்க் குரல் கொடுக்கிறாள்.

ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் பிரி முறுக்கிக் கொண்டு வசவு மழை பொழிகிறதும் அப்புறம் பாட்டியம்மா என்று பிரியமாக இழைகிறதும் - எல்லாம் சாமிநாதன் தான். அவளுக்குப் பழகியதுதான் எல்லாமே.

அரைஞாண் கொடியும் தரையை நனைக்கும் மூத்திரமுமாக ஓடி வந்தவனை ஈரத்தோடு இடுப்பில் தூக்கிக் கொண்டு ஊர் எல்லாம் அலைந்து இருக்கிறாள். அந்த வாத்சல்யம் எப்போதும் சாமிநாதனுக்கு உண்டு. ஷண நேரம் அலைபாய்ந்து நாக்கூசத் திட்டினாலும் கடைசியில் வழிக்கு வருவது அவன் தான்.

பகல்லே இறங்கி வந்தவ இம்சையே தாளலே. உடம்பைப் படுத்தி எடுத்திடறா விதவிதமாப் படுக்கச் சொல்லி. நாக்குலே இன்னொருத்தியா ? சாமிநாத சிரவுதி நாக்கிலே எந்த முண்டையும் உக்காந்து பிருஷ்டத்தைத் தேய்க்க வேணாம்.

கலகலவென்று சிரிக்கும் சாமா. அந்தச் சிரிப்பு மாத்திரம் அப்படியே இருக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:34 pm

சாமா, நீ நேத்தும் முந்தாநாளும் முழுக்கச் சாப்பிடலேன்னாளே உங்கம்மா ? ஏண்டா குழந்தை ? கொலைப் பட்டினியாக் கிடந்தா உடம்பு என்னாறது ?

சுப்பம்மா விசாரிக்கிறாள்.

இருட்டு கண்ணுக்குப் பழகிக் கொண்டிருக்கிறது.

ஜன்னல் திறந்திருந்தால் வெளிச்சம் வரும். ஆனால் அதற்குக் கொடுப்பினை இல்லை. இங்கே வெளிச்சம் விலக்கப்பட்ட விஷயம்.

சுப்பம்மாவுக்குத் தெரியும். சதா அவள் நாவில் வந்து குடியேறி வார்த்தையாடும் மூத்த குடிப் பெண்டுகள் தலைக்குள் சம்மட்டியால் அறைகிறது போல் மாறி மாறிச் சொல்லிப் போகிறார்கள்.

அவர்கள் எங்கே போனாலும் கூடவே வருகிறார்கள். சதா சுமங்கலி என்பது சமயத்தில் அலுப்புத் தட்டும் உத்தியோகமாகப் போய்க் கொண்டிருக்கிறது சுப்பம்மாவுக்கு.

பல் விளக்கும்போதும் குளிக்கும்போதும் வஸ்திரம் உடுத்தும்போதும் வெந்ததும் வேகாததுமாகச் சாப்பிடும்போதெல்லாம் வந்தால் சரிதான்.

தூரம் நின்று போய் எத்தனையோ வருஷம் கழித்தும் அவளை அவ்வப்போது உதிரம் கழிக்க வைக்கிறார்கள். அறுபது வயதில் யார் யாருக்கோ தூரத்துணியை இடுப்பில் கட்டித் துவைத்து நாலு பேர் கண்ணில் படாமல் காயப்போட வேண்டி இருக்கிறது.

இருந்தாற்போல் இருந்து தாம்பூலம் மெல்லச் சொல்கிறார்கள். கண்ணுக்கு மை அப்பிக் கொள்ளச் சொல்கிறார்கள். தளர்ந்து சுருங்கித் தொங்கும் ஸ்தனங்களைத் தூக்கி நிறுத்தி பிருஷ்டம் குலுங்கி நடக்க வைக்கிறார்கள்.

நாலு பேர் இருக்கும் சபையில் வாயில் வெறும் பாட்டாக வந்தாலும் தனியாக இருக்கும்போது அவள் அவர்களிடத்தில் படும்பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

சுப்பம்மாவை நிழல் போல் தொடரும் அவர்கள் சாமிநாதன் இருக்கும் இந்த அறைக்குள் மட்டும் தான் வருவதில்லை. இங்கே அவள் போவது தெரிந்தாலே வாசல் படிவரை வந்து கையைப் பிடித்து இழுக்கிறார்கள். காலைத் தடுமாறச் செய்கிறார்கள். மீறி உள்ளே போனால், கையைப் பிசைந்தபடி வாசலிலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.

சுற்றட்டும். சுப்பம்மாவுக்குக் கொஞ்சம் கண்ணயர வேண்டும். கொஞ்ச நேரம் அவளாக இருக்க வேண்டும். இங்கே காற்றில்லாமல் புழுங்கினாலும், எத்தனை இருட்டாக இருந்தாலும் சரி.

சாமிநாதன் அவள் தூக்கி வளர்த்த குழந்தை. அவளை ஒன்றும் செய்ய மாட்டான். அவள் சொன்னால் கேட்பான். பிரியமாகப் பேசுவான்.

நேத்து முழுக்கச் சாப்பாடு கொண்டு போய் வாசல்லே வச்சாலும் எடுத்துச் சாப்பிடவே மாட்டேங்கறான். நீங்களாவது கொண்டு போய்க் கொடுத்துப் பாருங்களேன் அத்தை.

சுப்பிரமணிய அய்யரின் வீட்டுக்காரி கல்யாணியம்மாள் சொன்னபோது சுப்பம்மாவுக்கு தேகம் பதறியது.

இங்கே கீழ்த் தளத்தில் வந்தவர்கள், போனவர்கள், ஸ்திரமாக இருக்கப்பட்டவர்கள் என்று எல்லோரும் மூணு வேளை வட்டித்து வக்கணையாகச் சாப்பிட்டு அது ஜீரணமாக இஞ்சி வெள்ளமும் சுக்கு வென்னீரும் ராத்திரி பனங் கல்கண்டு போட்டுச் சுண்டக் காய்ச்சிய பாலுமாக ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்க, இந்த கிரஹத்து மூத்த புத்திரன் இப்படி இருட்டில் ஒடுங்கிப் பசியும் பட்டினியுமாக உட்கார்ந்தபடி.

ஐயோ என் குழந்தைக்கா இந்த அவஸ்தை. ஏண்டி கல்லூ எனக்குச் சொல்லலை இதை மின்னாடியே. நீ போய்க் கொஞ்சம் சாதத்தை ரசத்திலே குழைச்சுக் கொண்டா. ஈயச் சொம்புலே நிறைய கொட்டு ரசம் பாக்கி இருக்கு பார். தெளிவா எடு. வண்டல் வேண்டாம். நான் அவனுக்கு கையைக் காலைப் பிடிச்சாவது ஊட்டிட்டு வரேன்.

சுப்பம்மா மாடிப்படி ஏறியபோது உள்ளபடிக்கே மனம் சாமாவுக்காக மருகியது. அவனுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி ஆகிப் போகிறது.

சாமாவைப் பசியாற வைத்துவிட்டு ஓரமாகப் படுத்துக் கண்ணை அயர்ந்தால் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் விச்ராந்தியாகக் கொஞ்சம் தூங்கி ஓய்வெடுக்கலாம்.

இருட்டு முழுக்கப் பழகி இப்போது அறை புலப்பட்டது சுப்பம்மாவுக்கு.

நாய்க்குடையைப் பக்கவாட்டில் கவிழ்த்து வைத்தது போல் ஒரு பெட்டி. அது ஒரு மர மேசையில் சட்டமாக உட்கார்ந்து கொண்டு சங்கீதம் பொழிந்து கொண்டிருக்கிறது.

பக்கத்தில் கயற்றுக் கட்டிலில் இடுப்பில் தட்டுச் சுற்று வேஷ்டியும், காடாக வளர்ந்த தலைமுடியும் தாடி மீசையுமாகச் சாமிநாதன். விலா எலும்புகள் குத்திட்டு நிற்க அவன் சுப்பம்மாவை உட்காரச் சொல்லிக் கையைக் காட்டுகிறான்.

முன்னூறு நானூறு வருஷம் பிற்பட்டவர்கள் இந்த அறைக்குள் வந்து இவனோடு சம்பாஷணை நடத்துவதும் இந்த இருட்டிலும் புழுக்கத்திலும் தானா ?

சுப்பம்மாக் கிழவி நினைத்தது புரிந்ததுபோல் சாமிநாதன் சிரிக்கிறான்.

அவாள்ளாம் வரபோது இந்த இடம் தானே சுத்தமாயிடும். வெளிச்சமும் காத்தும் நிரம்பி வழியும்.

புரிந்து கொண்டதாகச் சுப்பம்மா தலையசைத்தாள்.

சாப்பிடுடா கண்ணா. கொட்டு ரசத்துலே கொஞ்சம் போல் சாதம் பிசைஞ்சு ஒரு முட்டை பசுநெய் விட்டு மணக்க மணக்க எடுத்துண்டு வந்தேன். உனக்கோசரம் தான்.

எனக்கு என்னத்துக்கு நெய்யும் ஒண்ணும் பாட்டி ? குருவாயூர்லே என் குழந்தைக்கு அன்னப் பிரசன்னமா நெய்ச் சோறு ஊட்டறதுக்குப் போறபோது நானும் ஒரு வாய் சாப்பிட்டுக்கறேன்.

சாமா சித்தம் குழம்பிப் பேச ஆரம்பித்து விட்டான்.

இது அழுகையில் போய் முடியும் கடைசியில். இரண்டு மூன்று முறை இப்படி ஆகி, கையில் கொண்டு போன தட்டு கொண்டு போனபடிக்கே திரும்ப வேண்டிப் போனது சுப்பம்மாவுக்கு. நிமிஷ நேரம் கண்ணயரவும் முடியாமல் போன வேதனையோடு வெளியே வரும்போது மூத்தகுடிப் பெண்டுகள் வழக்கத்தை விட உற்சாகமாகத் திரும்ப மேலே ஏறிக் கொண்டார்கள் அப்போது எல்லாம்.

சாமா. நடந்ததையே நினைச்சுண்டு இருக்காம ஒரு வாய் சாப்பிடு. நீ புதுசா என்னமோ சங்கீதம் எல்லாம் வாங்கி இருக்கியாமே ? எனக்கும் அதெல்லாம் கேக்கறதுக்குக் கொடு. பாட்டிக்குத் திரேகம் தளர்ந்துண்டு வருதுடா குழந்தை. கொஞ்சம் சிரம பரிகாரம் செஞ்சுண்டு கிளம்பறேன். உனக்கு ஆட்சேபணை இல்லியே ?

பேஷா இரு பாட்டி. இது தெரியுமா ? அபிசீனியாவிலே சாவுச் சடங்குலே பாடற பாட்டு.

சாமா உற்சாகத்தோடு எழுந்து போய்ப் பழுக்காத் தட்டை எடுத்து வருகிறான்.

பேச்சு மாறிய உற்சாகத்தில் ரசம் சாதத்தில் ஒரு உருண்டை அவன் வாயில் போடுகிறாள் சுப்பம்மாக் கிழவி.

அபிசீனியா என்றால் என்னவாக இருக்கும் ? எதுவாக வேணுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். மனுஷாள் பிறந்து ஜீவித்து மரிக்கிற இன்னொரு ஸ்தலம். அபிசீனியாவில் நித்திய சுமங்கலிகள் இருப்பார்களா ? எழுபது வயதில் தூரம் குளிப்பார்களா அந்த ஸ்திரிகள் ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:35 pm

பின் மதியக் காற்றில் ஜன்னல் பாதி திறக்க உள்ளே உரிமையோடு நுழைந்தது குளிர்ச்சியான காற்று.

பாட்டி, உனக்குத் தெரியுமா ? ஆதியிலே சாவைப் பார்த்துப் பயந்திருக்கா. இப்போவானா ரொம்பவே பயப்படறாங்கறியா. அதைவிடக் கம்மிதான் முன்னாலே. சாவுச் சடங்கு தான் மனுஷன் ஏற்படுத்தின முதல் சமஷ்டி நடவடிக்கை. செத்தவாளை மத்தவா சாப்பிட்டுடுவா. தீர்ந்தது பிரச்சனை. மலையாளக் கரையிலே தோட்டத்துக்குள்ளேயே வச்சுப் பொணத்தை எரிச்சு, எரிச்ச எடத்துலே பலா மரம் நடுவா. பழம் பழுத்து வந்தா வீட்டோட உக்கார்ந்து சாப்பிடுவா. செத்தவா தேகத்தைச் சாப்பிடறதுலே இருந்து வந்த வழக்கமாக்கும் இது. துண்டுக்காரங்கள் சொல்லிப் போன சமாச்சாரம். இந்த இங்கிலீஷ் புத்தகத்திலே போட்டு இருக்கு. படிச்சு அர்த்தம் சொல்லட்டுமா ?

எனக்கு எதுக்குடா குழந்தை அதெல்லாம். நீ நன்னா சாப்பிட்டு நன்னா உடுத்தி நல்ல தேக ஆரோக்யத்தோட இருந்தா அதுவே எதேஷ்டம். இந்தா இந்தத்

தீர்த்தத்தை ஒரு வாய் எடுத்துக் கொப்பளிச்சுட்டு வந்து கொஞ்சம் குடி. கட்டில்லே தாச்சுக்கோ. நன்னா ஜிலுஜிலுன்னு காத்து வரது பாரு.

சாமிநாதன் கும்பாவில் இருந்த ரசம் சாதம் முழுவதையும் சாப்பிட்டு விட்டான்.

இன்னும் கொஞ்சம் பிசைந்து எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது சுப்பம்மாவுக்கு.

பழுக்காத் தட்டு சுழன்று கொண்டிருக்க, தரையில் படுத்து நித்திரை போனாள் அவள்.

அவள் ஒரு கனவு கண்டாள்.

சின்னதாக ஒரு கிராமம். வரண்டு கிடக்கிறது பூமியெல்லாம். கிராமமே வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது. தேனீக் கூடும் பாம்புப் புற்றுமாக ஊருக்கு வெளியே ஏதோ கோவில்.

உள்ளே ஆணும் பெண்ணுமாக இரண்டு பேர் ஒடுங்கிப் போய் நின்று கொண்டிருக்கிறார்கள். ரொம்பச் சின்ன வயசு ரெண்டு பேருக்கும்.

பீற்றல் உடுப்பும் முகத்தில் வாரக் கணக்கில் சாப்பிடாத பசியால் வந்த அசதியுமாக நின்ற அவர்கள் பக்கத்தில் சிறகடித்துப் பறந்து, கோயில் சுவரில் மோதாமல் லாவகமாகத் திரும்பி உத்தரத்தில் தொங்கிய வெளவால்கள் நீங்களுமா போறீங்க என்று விசாரிக்கின்றன.

மாம்ச போஜனம் பண்ணப் பழகி இருந்தால் இதுகளையாவது பிடிச்சுச் சுட்டுத் திங்கலாம்.

மூக்கும் முழியுமாக இருக்கும் அந்தப் பெண்ணுக்கு பதினைந்து வயது கூடத் திகையாது.

மாம்ச போஜனம் பண்றவாளும் வெளவால் எல்லாம் சாப்பிடறதில்லே. காடை, கெளதாரி இப்படித்தான்.

பதில் சொன்னவன் அவளை விட நாலைந்து வயது பெரியவனாக இருப்பான். குழந்தைத்தனம் போகாத முகம் அவனுக்கும்.

அதுகூட கிடைக்காமத்தானே மத்தவா எல்லாம் ஊரோட பஞ்சம் பிழைக்கப் போனது ?

அந்தப் பெண் சொல்கிறாள்.

வங்காளத்துலே பிராமணாளும் மத்ச்யம் சாப்பிடுவாளாம்.

அவன் அவளுக்கு மூத்த சகோதரனாக இருக்க வேண்டும். அந்தக் கோவிலில் பூஜை வைக்கிற கவுரதையான உத்தியோகம் வாய்க்கப் பட்டவன் போல்

சுவாதீனமாக விக்கிரகங்கள் பக்கத்தில் போய் நின்று எண்ணெய் வரண்ட ஒரு பந்தத்தை ஒரு வினாடி ஏற்றிக் காட்டுகிறான்.

நமஸ்காரம் பண்ணிக்கோ . இனிமே எப்ப வரப்போறோமோ இங்கே திரும்பியும்.

அவன் சொல்லும்போதே அழுது விடுகிறான். அந்தப் பெண்ணுக்கும் அழுகை முட்டிக் கொண்டு வருகிறது.

அம்மா போயாச்சு. அண்ணாவும் போய்ட்டான். நானும் நீயும் தான் பாக்கி. நமக்கும் போற நேரம் வந்துடுத்தோ என்னமோ.

அந்தப் பெண் கோயில் முன்னால் உட்கார்ந்து விம்முகிறாள். அவள் தலையை ஒட்டிப் பறக்கும் வெளவால் வெளிச்சம் முகத்தில் சட்டென்று பட்டதால் நிலை தடுமாறி அவள் மடியிலேயே விழுகிறது.

அது உயிரை விட்டு விடுகிறது அந்த க்ஷணமே.

அவள் அருவருப்புக் காட்டாமல் அதை எடுத்து வீசுகிறாள். பாளம் பாளமாக வெடித்த மண் தரையில் விழுந்து இறக்கை விரித்துக் கிடக்கிற வெளவால் சட்டென்று எழுந்து பல்லைப் பிளந்து சுப்பம்மாக் கிழவியின் மார்க் கூட்டில் புகுந்து கொள்கிறது.

அது அவளுடைய முலைகளை வருடுகிறது. சுப்பம்மா கவனித்துக் கொண்டிருக்கும்போதே அவள் ஸ்தனங்கள் திரும்ப வனப்பும் வலிமையுமாகத் திரள்கின்றன. அரைக்கட்டு அகண்டு போய் யோனி விரிகிறது.

வெளவால் அவள் இடுப்புக்குக் கீழே இறங்கி ஊர்கிறது.

நான் நான் தாண்டி சுப்பம்மா. வந்துட்டேன். கோசாயி ஆனது போறும்னு கிளம்பிட்டேன். இது என்ன ஈரம் ?

தூரமா இருக்கேன். மூத்த குடியாள் யாரோ கொடம் கொடமாக் கொட்ட வைக்கறா.

நான் தான் வந்துட்டேனே. அவாளை எல்லாம் போகச் சொல்லிடறேன். நிக்க வைச்சுடலாம் இதையும் சீக்கிரமே. தூரமீனாவானா என்ன ? ஸ்திரி தானே ? எனக்குப் பாத்யப்பட்ட ஸ்திரி. படுத்துக்கோ. கச்சை அவிழ்த்து விடட்டுமா ? ஜிலுஜிலுன்னு காத்தாட இருக்கலாம்.

சுப்பம்மா வேண்டாம் வேண்டாம் என்கிறபடி புரள்கிறாள். வாயில் எல்லா வசவும் பாட்டாகத் தெரிக்கிறது.

அந்தப் பெண் கோயில் வாசல் படியில் இருந்து எழுந்து வந்து சுப்பம்மாவின் யோனியில் பலமாக மிதிக்கிறாள்.

கெழட்டுச் சிறுக்கி. இங்கே எதுக்கு வந்து விரிச்சுண்டு கிடக்கே ? சாமாவும் நானும் விளையாடணும். எழுந்து போடி புழுத்த நாயே.

இருட்டில் உடுப்பைக் களைந்து விட்டு நிற்கிற சாமா ஒரு பார்வைக்கு சுப்பம்மா வீட்டுக்காரன் போல் தெரிகிறான். இல்லை அவன் தானோ இவன் ? அப்ப இடுப்பிலே குடையற இந்த வெளவால் தலை ?

சுப்பம்மா. ஓடி வந்துடு வெளியே. பிரம்ம ராட்சசியாயிட்டா குருக்கள் பொண்ணு. அவன் பீஜத்தைப் பாரு. விரைச்சுண்டு வரது. சம்போக வாடை இன்னும் கொஞ்ச நேரத்துலே பகல் காத்தோட கலந்து இந்த இடம் முழுக்கப் படிஞ்சு உன்னை மூச்சு முட்ட வைக்கும். வெளவாலை எடுத்து வீசிட்டு வெளியிலே வா. நலுங்குப் பாட்டு புதுசா சொல்லித் தரோம்.

வெளியே இருந்து மூத்த குடிப் பெண்கள் கூப்பிடுகிறார்கள் சுப்பம்மாவை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:36 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் பனிரெண்டு


சுப்பம்மா அத்தை, என்ன ஆச்சு ?

கல்யாணி அம்மாள் அலறலில் பகல் தூக்கத்தில் இருந்த வீடே விழித்துக் கொண்டது.

மலங்க மலங்க விழித்துக் கொண்டு சுப்பம்மாள் மாடியிலிருந்து வந்து உக்கிராண நிலைப்படிப் பக்கம் சாய்ந்து உட்கார்ந்தாள். அவள் தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது. பின்னாலும் முன்னாலுமாக யாரோ அவளை உதைத்து நசித்துக் கொன்று போட வருவது போலவும் அது வேண்டாம் என்று மன்றாடுவது போலவும் அவள் கையைக் கூப்பி எல்லாத் திக்கும் தொழுதபடிக்கு யாருக்கும் புரியாத எதையோ தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

அம்பி மூர்க்கமா நடந்துண்டானா ? அடிச்சு மிதிச்சு ரகளை பண்ணிட்டானா ?

சுப்பிரமணிய அய்யர் விசாரித்தார்.

சாமிநாதன் உபத்திரவம் வரவர அதிகமாகிக் கொண்டே போகிறதே ஒழியக் குறையவில்லை. மாதம் ஒரு விசை பவுர்ணமிக்கு என்று இருந்தது மற்ற நாளிலும் அவ்வப்போது தலையைக் காட்டித் தொலைக்கிறது.

அவனை இழுத்துக் கொண்டு ஒரு நடை ராமேசுவரம் போய் வர வேண்டும். அப்புறம் குணசீலத்தில் பனிரெண்டு பெளர்ணமிக்குக் கோயில் பிரகாரத்தில் உட்கார்த்தி, பிரசாதங்கள் மட்டும் தின்னக் கொடுத்துத் திருக்குளத்தில் ஸ்நானம் செய்வித்துத் தொழுது வர வைக்க வேண்டும்.

சோட்டாணிக்கர பகவதி அம்பலத்திலே ஒரு மண்டலம் இரும்புச் சங்கலையாலே கட்டி வெச்சு பிரதி ராத்திரி குருதி பூஜைக்கு சந்நிதிக்கு அழைச்சுப் போனா ஸ்வஸ்தமாயிடும். பிராந்து பிடிச்சதைச் சரியாக்கறதுக்குன்னே ஏற்பட்ட நம்பூத்திரி மனையுண்டு. நாரணத்துப் பிராந்தன் வழி வந்தவா. அங்கே போனா தைலம் புரட்டி, பிழிச்சை நடத்தி, கஷாயம் குடிக்கக் கொடுத்து ரெண்டு மூணு மாசத்துலே சரியாக்கிடுவா.

அம்பலப்புழையில் இருந்து சங்கரனுக்குச் சம்பந்தம் பேச வந்திருந்தவர்கள் சொன்னது நினைவு இருக்கிறது சுப்பிரமணிய அய்யருக்கு.

இதற்கெல்லாம் யாராவது பொறுப்பாகக் கூட்டிப் போய் அழைத்து வரவேண்டும். தனக்கானால் வயதாகிக் கொண்டிருப்பதால் இதற்கான சக்தி இல்லை. வியாபாரம் மும்முரத்தில் இருப்பதால் சங்கரனைத் தொந்தரவு படுத்த முடியாது.

சாமிநாதன் கூட சோட்டாணிக்கரைக்கு சுப்பம்மாக் கிழவியையும் கூடமாட ஒத்தாசைக்கு ஐயணையையும் அனுப்பி வைக்கலாம் என்று யோசித்து வைத்திருந்தார் ஐயர்.

பார்த்தால் அவள் இப்படி நொந்து நூலாகி வந்து நிற்கிறாள்.

என்ன பண்ணினான் சாமிநாதன் ? தலையை எட்டிப் பிடித்துச் சுவரில் மோதினானோ ? அதுதான் கிழவிக்குத் தலைமுடி இப்படி குத்திட்டு நிற்கிறதோ ? அவள் இடுப்புக்குக் கீழே ஓங்கி உதைத்தானோ ? அடிக்கடி இவள் இடுப்புக்குக் கீழே பொத்திக் கொண்டு விம்மி விதிர்த்துப் போகிறாளே ?

இல்லை, வயது வித்தியாசம், உறவு முறை பாராமல்.

சேச்சே அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. சாமிநாதன் அந்த ஒரு நாள் தவிர வேறெப்போதும் சரீர சுகம் விஷயமாகப் புத்தி கெட்டுப் போனது கிடையாது. அவன் படித்த படிப்பென்ன ? கிரகித்த வேதமும் வேதாந்தமும் பிரம்ம சூத்ரமும் பாஷ்யமும் தான் என்ன ? ஜன்ம வாசனையாகக் கொஞ்சம் போலவாவது புத்தியில் ஒட்டிக் கொண்டு எந்த துர்வழிக்கும் போகாதபடி இனியாவது அதெல்லாம் காப்பாற்றும்.

சாமா ஒண்ணும் பண்ணலை. அது என் குழந்தை. என் கையாலே ஊட்டி விட்டேன். சமர்த்தாச் சாப்பிட்டு ரெண்டு சிராங்காய் தீர்த்தம் வாங்கிக் குடிச்சுட்டு அவன் பாட்டுக்குப் பசு மாதிரி தூங்கிட்டான். நான் கீழே தரையிலே கட்டையைச் சாய்ச்சேனா.

சுப்பம்மாக் கிழவி திரும்ப அலறினாள்.

சட்டென்று அவள் குரல் மாறியது.

நானும் என்னாத்துக்காரரும் இங்கே தான் இருப்போம். வயசாவது தலைமுறையாவது. அவர் புருஷர். நான் அவருக்குன்னு விதிக்கப்பட்ட பொம்மனாட்டி. பஞ்சம் பிழைக்கப் போன இடத்திலே பாழும் கிணத்திலே விழுந்ததெல்லாம் போறும். இனி மேல்கொண்டு எங்கேயும் போறதா உத்தேசம் இல்லே. இங்கே தான் எல்லாம். மாமிசம் சாப்பிடப் பழகிண்டாச்சு. பஞ்சமும் ஆச்சு ஒண்ணுக்குப் போற எடத்துலே சிகையுமாச்சு. காடை கெளதாரி இருந்தா வறுத்து எடுத்துக் கொண்டு வாங்கோ. வெளவால் கிடச்சா இன்னும் விசேஷம். சாப்பிட்டுட்டு சாமா என்னை இங்கே தொட்டு இப்படி விரிச்சு.

சுப்பிரமணிய அய்யர் தலையை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டார். கல்யாணி அம்மாள் சுப்பம்மா நெகிழ்த்திய உடையை அவசர அவசரமாகச் சரி செய்தாள்.

வீட்டு விசேஷத்துக்கு வந்து வேனல் சூடு காரணமாக நாள் கணக்குத் தப்பி மாதவிலக்கு உண்டாகி இங்கே தங்கி இருக்க வேண்டி வந்த அல்லூர் உறவுப் பெண் ஒருத்தி பூஜையறையில் இருந்து கங்கா ஜலத்தோடு ஓடி வந்தாள்.

இதென்ன கிரகசாரம். அத்தை பாட்டியும் ஆத்திலே இல்லே போலே இருக்கே.

சுப்பம்மா அரைக்கட்டு நனைய அதைத் தெளித்தபோது அந்தப் பெண் உதிர வாடை பிடித்தபடி சொன்னாள்.

நாசமாப் போச்சு. இது வேறேயா ?

பட்டப் பகலில் சாமிநாதன் கட்டிலுக்குக் கூப்பிட்ட மூத்த குடிப் பெண்ணை ஏகமாகப் பணத்தை இரைத்துப் புறத்தாக்கினது எல்லாம் என்ன ஆச்சு ?

இனிமேல் அவளுக்கு ஜன்மம் கடைத்தேறி இன்னொரு பிறவி எடுப்பாள். அவள் உபத்திரவம் எல்லாம் தீரும் என்று சுப்பா சாஸ்திரிகள் இடுப்பில் காசை முடிந்து வைத்தபடி சொன்னதெல்லாம் காற்றோடு போச்சோ ?

அவள் அனுக்ரஹித்துத் தானே சாமிநாதன் நாலு மிலேச்ச பாஷை படிக்கவும், காலத்தில் பின்னால் இருந்து வருகிறவர்களோடு புரிபடாத சாஸ்திரங்களை எல்லாம் தர்க்கிக்கவும் பிரசங்கம் செய்யவும் சுவாதீனமானது ?

நிலாக்கால ராத்திரிகளில் மாடியில் கதவைத் திறந்து வைத்து நின்றபடி அவன் பிரசிங்கிக்கும் அழகை அவர் ஒளிந்திருந்து பார்த்திருக்கிறார்.

வெள்ளைக்காரன் கேட்டால் கொண்டாடுவான். பரங்கி உடுப்பு உடுத்திக் கொள்ளக் கொடுத்து லண்டன் பட்டணத்துக்குக் கப்பலில் கூட்டிப் போவான். ஆனால், என்ன செய்ய, கொடுப்பினை இல்லை அதற்கெல்லாம் என்று நினைத்திருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:36 pm

சாமிநாதன் கூடிக் கலந்த அந்த மூத்தகுடிப் பெண் போவது போல் போய்த் திரும்ப வந்து விட்டாளா ?

என்ன செய்து அவளைத் திரும்ப அனுப்பி வைப்பது ? மற்ற மூத்த குடிப் பெண்டுகளிடம் சுப்பம்மாக் கிழவி மூலம் பிரார்த்தித்துப் பார்க்கலாமா ? அவர்கள் ஒதுங்கிப் போன நேரத்தில் இல்லையோ இந்த சண்டாளி கிழவி மேல் படர்ந்திருக்கிறாள் ?

ஆண்களான பித்ருக்களிடம் திவசத்துக்கு வரும்போது சொல்லலாமா ? இதெல்லாம் பொம்மனாட்டி காரியம் என்று அப்பம் வடையை உறிஞ்சி விட்டு அவர்கள் பாட்டுக்குப் போய்விடுவார்கள்.

சுப்பிரமணிய அய்யர் யோசித்தபடி வெளியே நடக்கும்போது உள்ளே பாட்டு சத்தம் கேட்டது.

சுப்பம்மாக் கிழவிதான். சகஜமாகி இருக்கிறாள் மறுபடியும். அவளைப் பிடித்த சிறுக்கி விட்டு விட்டு இறங்கி விட்டாள்.

அவளோடு கூட இருக்கும் நித்ய சுமங்கலிகளாகிய மூத்த குடிப் பெண்களூக்கு எல்லா நமஸ்காரங்களையும் சுப்பிரமணிய அய்யர் தெரிவித்துக் கொண்டார்.

நீங்கள் எப்போதும் இங்கே சர்வ சுதந்திரமாகச் சுற்றி வாருங்கள். துராத்மாக்கள் யாரும் இந்த கிரஹத்தில் பிரவேசிக்க இனியும் அனுமதிக்காதீர்கள்.

அவர் வேண்டிக் கொண்டார்.

பட்டப் பகலில் கதவை எல்லாம் மட்ட மல்லாக்கத் திறந்து வைத்துக் கொண்டு கயிற்றுக் கட்டிலை இழுத்துப் போட்டுக் கவிழ்ந்து படுத்துக் கலவி செய்யும்போது கட்டில் கால் முறிவது பற்றி சுப்பம்மாக் கிழவி பாடிக் கொண்டிருந்தது உள்ளே இருந்து கேட்டது.

அத்தை. நலுங்கு பாடுங்கோ. சாயந்திரத்திலே இதெல்லாம் வேண்டாம். வாங்கோ. பின்னாலே தொழுவத்துக்குப் போகலாம்.

சுப்பிரமணிய அய்யர் திரும்ப உள்ளே தலையைத் திருப்பிப் பார்த்தபோது, கல்யாணி அம்மாள் உக்கிராணத் தரையில் உட்கார்ந்திருந்த சுப்பம்மாளின் கையைப் பற்றி இழுத்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

தூரமீனா உள்ளுக்கு எல்லாம் நான் வரமாட்டேன். இங்கேயே உட்கார்ந்து நலுங்கு பாடறேன் கேளு. வட்டமாய் முகமும் அதின்மேல் பொட்டித்த அப்பளமும் சட்டி போல்.

வாங்கோ வெளியிலே காத்தாட உக்காந்து பாடலாம். காமாட்சி. கொஞ்சம் பசுஞ்சாணி கொண்டு வந்து இங்கே தரையை மெழுகு. உலை வைக்கணும். சங்கரன் ராச்சாப்பாட்டுக்கு வந்துடுவான்.

கல்யாணி அம்மாள் வலுவாகப் பற்றி இழுத்த பிடிக்கு வளைந்து கொடுத்தபடி, உரக்கச் சிரித்துக் கொண்டு சுப்பம்மாள் அவள் கூடத் தொழுவத்துப் பக்கம் நடந்தாள்.

சுப்பிரமணிய அய்யர் இடுப்பில் சேலம் குண்டஞ்சியை நேராக்கி இறுக்கிக் கொண்டார். தட்டுச் சுற்று வேட்டி தான். மேலே துண்டு கூட இல்லை.

சாதாரணமாக வெளியே போகிறபோது பஞ்ச கச்சமும், மேலே சரிகை அங்கவஸ்திரமுமாக நடந்துதான் பழக்கம். உத்தியோகஸ்தர்களை வியாபார நிமித்தம் சந்திக்கப் போகும்போதும், வியாபாரத்தை விருத்தியாக்க பெரிய தனவைசியப் பிரபுக்களைப் பார்த்துப் பேசி வரப் பிரயாணப்படும் போதும் தலையில் அல்பாக்கா தலைப்பாகையும் காலில் ஜோடும் ஏறும்.

அதெல்லாம் இப்போது ஒன்றும் இல்லை. ஒற்றை வேட்டியோடு நடக்கிறது ஆசாரஹீனம் இல்லையா என்று அவர் மனம் துக்கப்பட்டது.

கெளபீனத்தைச் சேர்த்தால் இரண்டு வஸ்திரம். அது தான் கணக்கு.

இன்னொரு மூலையில் தர்க்க புத்தி சமாதானம் சொன்னது.

இந்த ஊருக்கு இதுவே எதேஷ்டம். இங்கே அவரையும் தெரியும். அவர் பணத்தையும் தெரியும். கெளபீனத்தோடு நடந்தாலும் சாதாரணமாகத் தான் பார்ப்பார்கள். கண்ணில் தெரியாத வஸ்திரமாக உடம்பு முழுக்கப் பணம் மறைக்கிறபோது மற்றதெல்லாம் எதுக்கு ?

ஐயர் தெருவைப் பாதி அடைத்து நின்ற பக்கத்து அரண்மனை வளாகத்தை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார்.

பழசாகிக் கொண்டிருக்கும் கல்லுக் கட்டிடம். உள்ளே ஒரு காசுக்கும் பிரயோஜனமில்லாத ஒருத்தன் ஜமீந்தார் என்று பெயர் பண்ணிக் கொண்டு ஷீணித்துப் போய் உட்கார்ந்திருக்கிறான். ஐயரின் வயசு தான் அவனுக்கும். பாடை மாதிரி ஒரு பல்லக்கில் படுத்தபடி போன மாதம் ஒரு நாள் ராத்திரியில் அவனைத் தூக்கிக் கொண்டு பந்தம் பிடித்துக்கொண்டு ஓடினார்கள். அது வெளியிலிருந்து அரண்மனைக்குள் ஓடியது என்பதை நினைக்க சுப்பிரமணிய அய்யருக்குப் பொறுக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.

துரைத்தனம் வந்த பிற்பாடு இருக்கப்பட்ட ஜமீந்தார், மிட்டாதார், மகாராஜா எல்லாம் செல்லாக் காசாகிப் போனார்கள். இவன் இன்னும் விசேஷம். உள்ளபடிக்கே ஏதுமில்லாமல் இரண்டு தலைமுறை முன்னால் திவாலான சமஸ்தானம். இப்போது நித்தியப்படிக்கே சர்க்கார் மானியத்துக்குக் கையேந்தி நின்று சவரட்சணை நடத்த வேண்டி இருக்கிறது. ஊரில் ஒருத்தனும் மதிக்கிறது இல்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:36 pm

இந்த அரண்மனை வளாகத்தை வாடகைக்குக் கொடுத்தால் ஐயர் அதில் புகையிலை அடைத்து வைத்து சென்னைப் பட்டிணத்துக்கும் குண்டூருக்கும் புணேக்கும் நாகபுரிக்கும் இன்னும் தூர தேசத்துக்கும் எல்லாம் அனுப்பி வைத்து வியாபாரத்தை மேலும் விருத்தியாக்குவார். ஜமீந்தாருக்கு வேண்டுமானால் நித்தியப்படி ஒரு சேர் புகையிலை இனாமாகக் கொடுக்கவும் அவர் தயார் தான்.

அய்யர் வீட்டில் மாடியறை இரண்டும் புகையிலையால் நிரம்பி வழிகின்றன. பழைய வீட்டில் வேதபாடசாலையைக் காலி செய்யச் சொல்லி விட்டு அங்கேயும் புகையில் அடைத்து வைக்கலாம் தான். பித்ருக்கள் வந்து பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக் கலகம் செய்வார்கள். அவர்களை அனுசரித்துக் கொண்டு போவதே உத்தமம். இந்தச் சிறுக்கி வேறு திரும்ப வந்து தொலைத்திருக்கிறாள். அவர்கள் அனுக்கிரஹம் அவசியம் தேவை.

அப்பா, நான் பட்டணத்துக்கு ஒரு விசை போய்ட்டு வரேன். மூக்குத் தூள் அங்கே பிரசித்தமாயிண்டு இருக்குன்னு ராவுத்தர் சொன்னாரே. அதுவும் விநியோகிக்கக் குத்தகைக்கு எடுத்தா நன்னா இருக்கும்.

போன வாரம் தான் சங்கரன் சொன்னான்.

சுப்பிரமணிய அய்யருக்கு மூக்குத்தூள் மேல் அப்படி ஒன்றும் பெரிய தோதில் ப்ரீதி இல்லை.

புகையிலை சரக்குப் பிடிக்க வந்த பெங்களூர்ப் பட்டிணக்காரனும் வெகு நாளாக வியாபாரத்தில் நகமும் சதையுமாக இழைகிறவனுமான பிச்சை ராவுத்தன் போன பொங்கல் சமயம் ஒரு டப்பி நிறையக் கொண்டு வந்து ஐயருக்கு இனாமாகக் கொடுத்து பரீட்சித்துப் பார்க்கச் சொன்னான்.

பட்டணத்துக்கு எல்லாம் வாப்பாவான லண்டன் பட்டணத்துலே புகையிலையை பொடிச்சு வாசனாதி திரவியம் சகலமானதும் கலந்து இதைப் பண்றான் மேரா தோஸ்த். மூக்கிலே ஏத்திப் பாரு. சொர்க்கமே தெரியும். ஜின் எல்லாம் இறங்கி வந்து குஷியா இருக்கியான்னு விசாரிக்கும். இன்னும் நாலஞ்சு வருஷத்துலே எல்லாரும் இதுக்காகப் பைத்தியமா அலையப் போறான். சொல்றேன் கேளு. என்னண்டை இதை வாங்கிட்டு, நீ எனக்கு ஹோகசெப்பு அதாம்பா பொகயிலெ கொடு. ரெண்டு பேருக்கும் லாபம்.

மூக்கில் ஏற்றியதும் மண்டைக்குள் சுர் என்ற் ஏறிப் படர்ந்து கண்ணில் ஜலத்தை வரவழைத்தது அந்தத் தூள். அடுக்கடுக்காகத் தும்மல் போட்டு அங்கவஸ்திரத்தில் துடைத்துக் கொள்ள பழுப்பாகப் பொடிக் கரை அதில் ஏறி இருந்து இளித்தது.

இதையெல்லாம் கூறு கெட்ட வெள்ளைக்காரன் தான் உண்டாக்கி உபயோகிப்பான். பனியும் குளிரும் மிகுந்த அவன் நாட்டில் போகமும், குடியும் தவிர நூதனமாக ஏதாவது அவ்வப்போது செய்து வியாபாரம் பண்ணிக் காசு பார்க்க ஏகப்பட்ட பேர் உண்டு.

அவர்களைப் பார்த்து அதே ரீதியில் ஜீவிக்கப் பழகிக் கொள்ள வேணும் என்று இங்கேயும் பலபேர் பித்தம் பிடித்து அலைகிறார்கள்.

அலையட்டும். அதனால் நாலு அணா கூடுதலாகத் தனம் கிட்டினால் ஐயருக்குக் கசக்கவா போகிறது ? மூக்குத் தூளுக்கு பண வாசனை கூடுதலாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு அந்த வாடையும் லட்சுமிகரம் தான்.

சங்கரனை அடுத்த வாரம் சென்னைப் பட்டணம் போய்ப் பார்த்து விட்டு வரச் சொல்லலாமா ?

அம்பலப்புழையில் இருந்து வந்த விவாக ஆலோசனை குதிர்ந்து கொண்டு இருக்கிறது. வது, வரன் ஜாதகம் இரண்டிலும் எல்லாப் பொருத்தமும் அமர்க்களமாக அமைந்திருப்பதாக பஞ்சாங்கம் ராகவ அய்யங்கார் சுபச் செய்தி சொல்லி முழுசாக ஒரு ரூபா தட்சணை வாங்கிக் கொண்டு போனதற்குப் பிற்பாடு வீட்டில் சுபகாரியம் நடக்கத் தொடக்கமாக சுமங்கலிப் பிரார்த்தனையும் நல்லபடி நடந்தேறியாகி விட்டது.

அடுத்த மாதம் முகூர்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்கிறார் சம்பந்தி பிராமணன். நிச்சியதார்த்தத்துக்கு எப்போ வரட்டும் என்று லிகிதம் மேல் லிகிதமாக அனுப்பிக் கொண்டிருக்கிறார் அவர்.

சங்கரன் கல்யாணம் முடிந்து அவனைச் சென்னைப் பட்டணத்துக்கு அனுப்பலாமா ?

மூக்குத்தூள் வியாபாரம் ஆரம்பித்தால் அதற்காக வேறு கடை எடுக்க வேண்டி வருமோ ? தூளை அடைத்து வைக்க எங்கே இடம் பிடிப்பது ?

இந்தக் கூறுகெட்ட ஜமீந்தார் சரியென்றால் நீ ஒரு பக்கம் இருந்துக்கோ நான் இந்தப் பக்கமாக பொடித்தூளை அடைத்து வைத்து எடுத்துப் போகிறேன் என்று கேட்டுப் பார்க்கலாமா ? அவனுக்கும் நாலு காசு கிடைக்கும் என்றால் வேணாம் என்றா சொல்லப் போகிறான் ?

வேண்டாம். போலி கெளரவம் பார்க்கிற ஜந்து அது. பாம்போ பழுதையோ ராஜவம்ச ரத்தம் ஒரு உத்திருணியாவது ஓடும் அவனுக்குள். விலகி இருப்பதே உத்தமம். பொடி அடைக்க அக்ரஹாரத்தில் இன்னொரு வீட்டை சித்தம் பண்ணிவிட வேண்டியதுதான்.

இந்த சுப்பம்மாக் கிழவி வீட்டோடு தங்கி இருக்க சம்மதிக்கும் பட்சத்தில் அவள் வீட்டையே எடுத்துக் கொள்ளலாம். காசியில் இருந்து அவள் வீட்டுக்காரன் வரப் போவதில்லை. சாமிநாதனை முழுநேரம் கவனித்துக் கொள்ள அவளால் மட்டுமே முடியும்.

கிழவிக்கெல்லாம் தூரத்துணி தோச்சுக் கொடுக்கவா எங்கப்பா என்னை இங்கே வாழப் படுத்தினார் ?

கல்யாணியம்மாள் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கேட்க, கடை வந்திருந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:39 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் பதிமூன்று



குப்புசாமி அய்யன் ஊர் எல்லைக்கு வரும்போது நடு மத்தியானமாகி விட்டிருந்தது.

நல்ல வேனல் சூடு. அடுப்படியில் நெருப்புக்குப் பக்கத்தில் நின்று கிண்டிக் கிளறி, வடித்து இறக்கிப் பொறித்து, இலை போட ஏவிக் கொண்டு, மலை மலையாகக் குவிந்த தேங்காயையும், சேனையையும், பூசணிக்காயையும், மூட்டையில் அஸ்காவையும், அரிசியையும் சதா கணக்குப் பார்த்துக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு மாசம் ஓடினதே தெரியவில்லை.

தேடித் தேடி சகல லட்சணமும் குணமும் பார்த்துத் தான் கூட்டுக்கு ஆள் சேர்த்துக் கொண்டு தொழிலுக்குக் கிளம்பியாகிறது. கூட வருகிற ஒருத்தனுக்கும் அரைக்கால் அங்குலம் கூடக் கை நீளம் இருக்கக் கூடாது என்பதில் மறுபேச்சுக்கே இடமில்லை. ஆனாலும் வாய் கொஞ்சம் அகலம் இருப்பதைப் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

கோதுமை ரவை எடுக்கப் போனவன் பக்கத்துத் துணிப்பையில் இருந்து ஒரு பிடி முந்திரிப் பருப்பை வாயில் அடைத்துக் கொண்டு மொச்சு மொச்சென்று மென்று கொண்டு வந்தால் கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டியிருக்கிறது.

கறிகாய் நறுக்கிக் கொடுத்து, எடுபிடி காரியம் வைக்கும் துணையாட்கள் முக்காலே மூணுவீசம் பேர் கஷ்கத்தில் இப்போது தான் ரோமம் அரும்பிக் கொண்டிருக்கும் நவயுவன்கள்.

கருணைக் கிழங்கை நறுக்கக் கொடுத்தால் ஸ்தனம் போல் அதைப் பற்றிப் பிடித்து வருடி மற்றவர்களைச் சிரிக்க வைக்க நையாண்டி பேசுகிறார்கள். மட்டை உரித்துத் தேங்காய் எடுக்க உத்திரவு கொடுத்தால், நட்டுக் குத்தலாக நிமிர்த்தி வைத்த உலக்கையும் அதில் முறிபடும் காயும் அவர்களை நீச வார்த்தை பேச வைக்கிறது.

சமையலறை என்பதால் விசேஷத்துக்கு வந்த பெண்டுகள் சட்டென்று எந்த விதமான தயக்கமும் இல்லாமல் எல்லா நேரமும் உள்ளே வந்து விடுகிறார்கள். இது அவர்களின் சாம்ராஜ்ஜியம். ஒரு நாலு நாளைக்கு ஆண்பிள்ளைகள் கரண்டி பிடிக்க அதை மேற்பார்வையிடுகிற சந்தோஷம் முகம் முழுக்க அப்பி இருக்க, அவர்கள் பதார்த்தம் செய்வது குறித்துப் பலதும் யோசனை தருகிறார்கள். கூப்பிடாமலேயே ஆஜராகி வடையை எடுத்து விண்டு பார்த்து விட்டு உப்புப் போறாது என்று தீர்மானமாகத் தலையாட்டுகிறார்கள். பலாக்கறியில் வெளிச்செண்ணெய் குறைவு என்று அபிப்ராயப்படுகிறார்கள்.

அதையெல்லாம் காதில் போட்டுக் கொண்டதுபோல் காட்டிக் கொண்டு தன் பாட்டுக்கு வேலையைத் தொடரும்படி ஒவ்வொரு இடத்திலும் அடுப்புக்கு பூஜை போடும்போது குப்புசாமி அய்யன், கூட வந்தவர்களுக்குச் சொல்ல வேண்டியதை மறப்பதில்லை.

அதோடு கூட, சின்ன வயசுப் பையன்களோடு இழைய வருகிற ஸ்திரிகளையும், ஒரு புஞ்சிரி பொழிந்த மாத்திரத்தில் புளகாங்கிதமடைந்து விசேஷத்துக்கு வந்த பெண்குட்டியை சதா ஸ்மரித்துக் கொண்டு அலைகிற குட்டன்மாரையும் போதும் நிறுத்தணும் என்று சமிக்ஞையாகச் சொல்லி விலக்க வேண்டி இருக்கிறது.

குப்புசாமி அய்யன் தாடையைத் தடவிக் கொண்டான். நாலு நாள் தாடி வரவர என்று வியர்வையோ டு கையில் புரண்டது.

அமாவாசை, அவிட்டம் பார்த்துச் சிரைத்துக் கொள்வது போக, போன இடத்தில் சவுகரியமும் பார்க்க வேண்டியுள்ளது. சில இடங்களில் நாவிதர்கள் இருப்பதில்லை. இருக்கும் இடத்தில் வேலையிலேயே நேரம் முழுக்கக் கழிந்து போகிறது.

நல்ல வேளை. இது இன்னும் புதர் போல் வளர்ந்து தன்னை ரோகி மாதிரியோ யோகி போலவோ காட்ட ஆரம்பிக்கும் முன்னால் ஊருக்கு வந்தாகி விட்டது. வேலாயுதன் பார்த்துக் கொள்வான் இனிமேல் கொண்டு.

குப்புசாமி அய்யன் இங்கே இல்லாமல் போன இருபது சொச்சம் நாளில் என்னவெல்லாம் நடந்தேறியது என்று முகத்தை மழித்துக் கொண்டே வேலாயுதன் பாண்டித் தமிழில் ஊர் வர்த்தமானம் சொல்லக் கேட்பது நல்ல சுகமான விஷயம்.

இனி வரும் இரண்டு மாதமும் அவ்வளவாகக் கல்யாணம் எல்லாம் நடக்காது. கொஞ்சம் விச்ராந்தியாக வீட்டோடு கிடந்து சிரம பரிகாரம் செய்து கொள்ளலாம்.

ஊர் முழுக்க உண்ண எட்டு வகை பதார்த்தமும், இனிப்பும் மற்றதும் செய்து செய்து அலுத்துப் போய் சமையல்காரர்கள் எல்லோரும் சீரக ரசமும், வற்றல் குழம்புமாக அவ்வப்போது தனியாகச் செய்து கொள்கிற வழக்கம். அதற்கும் மோப்பம் பிடித்து ஆட்கள் வந்து விடுவதுண்டு. வீட்டில் அதையெல்லாம் பங்கு போட யாரும் வரப்போவதில்லை.

ஒப்புக் கொண்ட கடைசி விசேஷமும் நேற்றைக்கு முடிந்து காளை வண்டியில் பாத்திரம் பண்டங்களை ஏற்றி நேற்று ராத்திரிக்கே கூட வந்தவர்கள் வசம் அனுப்பியிருக்க வேண்டாம் என்று பட்டது குப்புசாமி அய்யனுக்கு.

கருநாகப்பள்ளிக்கு ஏழு மைல் தள்ளி ஒரு சின்ன ஊரில் கல்யாணம். இவன் ஒப்புக் கொள்கிற எல்லா விசேஷத்துக்கும் உப்பு, புளி ஆதியாக மளிகைச் சரக்கும் விசேஷமான காய்கறிகளும் வரவழைப்பது கருநாகப்பள்ளி சங்குண்ணி நாயரிடம் இருந்துதான். தொழில் முறையில் ஆரம்பித்து, நெருக்கமாகிப் போன சிநேகிதம்.

சங்குண்ணியும் அந்தக் கல்யாணத்துக்கு வந்திருந்தான். அவன் தாயாதி வழி உறவில் உறவு. அதாவது போன தலைமுறையில் இரண்டு தரவாட்டுக்கும் பந்தம் புலர்த்த ஒரே நம்பூத்திரி வந்து போனானாம். கல்யாணப் பெண்ணும் சங்குண்ணியும் அடுத்த அடுத்த பீஜத்தில் உருவானவர்களாக இருக்கலாம்.

இப்படிக் கெளபீனத்தை நெகிழ்த்திக் கொண்டு நம்பூதிரிகள் மலையாளக் கரை முழுக்க நாயர் குடும்பங்களில் அதி சுந்தரியான பெண்குட்டிகளோடு கூடிச் சுகிக்க மரக் குடை பிடித்து நடந்தது குப்புசாமி அய்யன் தகப்பன் காலத்தில் அதிகமாக இருந்தது. இப்போது அது கொஞ்சம் குறைந்து கொண்டிருக்கிறது தான்.

தேகண்டத்துக்குப் போன இடங்களில் கிழட்டு நம்பூத்திரிகள் தங்கள் பால்ய கால விளையாட்டுகளை விஸ்தாரமாக ஏகத்துக்கு நீர் விளம்பிச் சொல்வார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:39 pm

காத்ரே காத்ரே துடர்ன்னு மதுரிம திரளு

மார்த்வம் நேத்ர ரங்கே

கூத்தாட்டத்தினு லஜ்ஜாயவனிகயில்

மரஞ்ஞம்கஜன்மா விரேஜே

முத்தேலும் கொங்க பங்ஙேருக

மழமங்கலம் நம்பூத்ரி தொடங்கி இன்னும் பல பேர் எழுதிப்போன சிருங்கார ஸ்லோகங்களோடு பழசையும் புதுசையும் அசை போடுவது காதில் விழுவதுண்டு. அதைக் கேட்டுக் கொண்டே பப்படம் பொறிக்க எண்ணெய் திளைக்க வைக்க மறந்து போய் குப்புசாமி அய்யன் கூட்டத்து இளசுகள் வாய் பார்த்தபடி நின்றபோது அவர்களை ஓட்டியதும் உண்டு.

குப்புசாமி அய்யனுக்கு நம்பூத்திரிகள் மேல் அத்தரைக்கொண்ணும் மரியாதை இல்லை. இது பரஸ்பரம் விளைவது. அந்தப் புண்ணியவான்களும் குப்புசாமி அய்யன் போல் தமிழ் பேசும் பிராமணர்களை மதிப்பதில்லை. நம்பூத்திரி மனைகளில் ஆள்கூட்டம் பெருகிப் போனதால் சுயம்பாகமாக சமையல் செய்து விசேஷம் அனுஷ்டிக்க முடிகிறதில்லை சில பொழுது. சரிதான், இதுக்குத் தமிழ்ப் பிராமண சமையல்காரர்களை அமர்த்திக் கொள்ளலாம் என்று ஆசாரங்களை அங்கங்கே நெகிழ்த்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது இந்தப் பகுதியில்.

தமிழ் பிராமணர்களும் அவிட்டத்துக்குப் பூணூல் மாட்டிக் கொள்கிறார்கள். தட்டுத்தடுமாறி காயத்ரி சொல்கிறார்கள். நன்றாகவே சமைக்கிறார்கள். பிழைத்துப் போங்கள் என்று விட்டிருக்கிறார்கள் திருமேனிகள்.

அவர்களுக்கு யார் மேலும் மதிப்புக் கிடையாது. சாமுத்ரி மகராஜாவே வந்தாலும் நாலு அடி தாண்டி அந்தாண்டை நிற்க வைத்து அம்பலத்தில் சந்தனத்தை விரலால் சுண்டிக் கையில் விழ எறிவார்கள். வெய்யில் தாழ அம்பலத்தில் இருந்து திரும்பும்போது வெடி வழிபாடு நடத்தும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி மூத்திரம் ஒழிக்க உட்கார்ந்து விட்டு, லிங்கத்தை பிடித்த பிடி நழுவாமல் நாட்டுத் துப்பாக்கி போல் நீட்டிக் கொண்டு அப்படியே குளத்தில் இறங்கி சுத்தி செய்து கொள்வார்கள். அங்கே குளிக்கிற ஸ்திரிகள் பார்த்துத் தலை கவிழ்ந்து கொள்ள, யாதொன்றையும் சட்டை செய்யாமல் கெளபீனத்தை முடிந்து கொண்டு மெல்லக் கரையேறுவார்கள்.

முகத்தைப் பார்க்காமலேயே எல்லா நம்பூத்திரிகளையும் எல்லோருக்கும் அடையாளம் தெரியும்.

நல்ல வெய்யில் நேரத்தில் நம்பூத்திரிகள் பற்றி யோசிப்பானேன் என்று குப்புசாமி அய்யனுக்குப் விளங்கவில்லை. இந்த மாதம் ஒப்புக் கொண்ட விசேஷங்களில் நாலைந்து அவர்கள் விஷயமாகத்தான். மற்ற ஜாதிக்காரர்கள் கொடுப்பதில் பாதி கூடக் கொடுக்கவில்லை எந்த நம்பூத்திரியும். அதனால் தானோ என்னமோ இழவெடுத்த அவர்களைப் பற்றியே நினைப்பு ஓடுகிறது.

இது நாள் வரை உங்களை நீச ஜாதியாகவே வைத்திருந்தோம். இப்போ, போனால் போகிறது என்று உம்மையும் பிராமணனாக மதித்து தேகண்டத்துக்குக் கூப்பிட்டதே உங்களுக்கு மரியாதை என்கிற தோரணையில் சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் நடந்து கொள்வது மனதில் வந்து கொண்டே இருக்கிறது.

ஆனாலும் எல்லா நம்பூத்திரிக்கும் குப்புச்சாமி அய்யன் போல பாலக்காட்டு மடைப்பள்ளி பிராமணர்கள் மேல் அசூயை உண்டு என்று அவனுக்குத் தெரியும்.

இந்தப் பாண்டிப் பிராமணர்கள் எல்லோரும் தஞ்சாவூரிலும் வடக்கே தெலுங்கு பேசும் பிரதேசத்திலும் அதி வனப்புள்ள கன்யகைகளைக் கல்யாணம் கழித்துக் கூட்டி வந்து வாழ்க்கை பூரா சுகிக்கிறார்கள். நம்பூத்திரி மனையிலோ வீட்டுக்கு மூத்த நம்பூத்திரி மட்டுமே வேளி என்ற கல்யாணம் கழிக்கலாம். இளையவர்களுக்கு யோனிப் பொருத்தமும் ரஜ்ஜுப் பொருத்தமும் பார்த்து வீட்டில் ஸ்திரியைக் கொண்டு வந்து குடித்தனம் நடக்க யோகம் இல்லை. அவர்கள் பந்தம் புலர்த்த நாடு முழுக்க அலைந்து தரவாட்டு ஸ்திரிகளைத் தேட வேண்டியிருக்கிறது.

நேற்று தாசியாட்டத்திலும் குப்புசாமி அய்யன் ஒன்றிரண்டு நம்பூத்ரிகளைப் பார்த்தான். சங்கீதத்தை ரசிக்க வந்தவர்களாகச் சொல்லிக் கொண்டு ராமச்ச விசிறியால் விசிறியபடி, ஆடிய தாசிகளையே தாபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். குப்புசாமி அய்யனும் கூடத்தான்.

உன் ஆட்களை அனுப்பி வைத்து விட்டு என்னோடு வா.

சங்குண்ணி தான் குப்புசாமி அய்யனை நேற்று ராத்திரி தாசி ஆட்டத்துக்குக் கூட்டிப் போனான்.

என்னமா ஒரு நடை. ஆட்டம். கண் அசைப்பு. உதட்டுச் சுழிப்பு. பாண்டி தேசத்துப் பெண்கள். எல்லாமே அங்கே இருந்து தான் வரவேண்டி இருக்கிறது.

அவர்களின் சிருங்கார சேஷ்டைகளும், பாடிய பதங்களும் குப்புசாமி அய்யனை இன்னும் இம்சித்துக் கொண்டிருக்கின்றன. அவ்வப்போது பச்சை மலையாளத்தில் அந்தத் தமிழ்ப் பாட்டுகளை அர்த்தப் படுத்தி சங்குண்ணியிடம் சொல்லும்போது லகரி கூடிக்கொண்டே போனது.

விசாலாட்சி நினைப்பு மனதில் உக்கிரமாகத் தாக்க ஆரம்பித்தது அப்போது தான்.

வீட்டுக்குப் போக வேண்டும்.

வேலாயுதம் தெருவோடு போனால், கூப்பிட்டுத் திண்ணையில் இருத்தி முதலில் இந்தத் தாடியை மழித்துக் கொள்ளவேண்டும்.

விசாலாட்சி தூரம் குளித்திருக்க வேண்டும்.

அவள் கையால் செய்த பருப்புஞ் சாதமும் கத்தரி வதக்கலும் சாப்பிட வேண்டும். தேங்காய் சேராத நல்ல குழம்பும்.

அப்புறம் ராத்திரியில் மழுமழுத்த முகத்தை அவள் ஸ்தனங்களிலே இருத்தி ராத்திரி முழுக்க ரமிக்க வேண்டும்.

சகோதரர்கள் இரண்டு பேரும் இன்னும் ஒரு வாரம் திரும்ப வரப்போவதில்லை என்பதால் நடுராத்திரியில் அரிசி மூட்டை வைத்த அறை வெறுமனே தான் கிடக்கும்.

குப்புசாமி அய்யன் அங்க வஸ்திரத்தால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நடையை எட்டிப் போட்டான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:40 pm

சர்ப்பக்காவின் பக்கம் ஒரு ஸ்திரி தலையில் மீன் கூடையோடு எதிர்ப்பட்டாள்.

அவனைத் தூரத்தில் கண்டதுமே வெற்றிலை எச்சிலை ஓரமாகத் துப்பி, தோளில் துவர்த்தால் வாயையும் முகத்தையும் துடைத்து அந்தத் துண்டையும் கையில் ஏந்தியபடி குப்புசாமி அய்யனை நிறுத்தினாள்.

அவள் ஸ்தன்ய பாரம் தான் குப்புசாமி அய்யன் கண்ணில் முதலில் பட்டது. கோபாலகிருஷ்ணன், கோகுலபாலன் என்னை இங்கே பிடித்தான் என்று தாசியாட்டத்தில் அபிநயம் பிடித்த ஸ்திரிகள் இன்னும் லகரியை மனதில் வற்றவிடாமல் பொழிந்து கொண்டே இருக்கிறார்கள்.

காவின் பக்கம் இப்படி வழி மறிக்கும் பெண் காவில்லம்மவாக, தேவதையாகக் கூட இருக்கலாம். எந்த துர்சிந்தையும் மனதில் வேண்டாம்.

புத்தி எச்சரித்தது.

அவள் முகத்தைப் பார்த்தான் குப்புசாமி அய்யன். வெற்றிலை உலராத சுண்டுகள் இன்னும் லகரி லகரி என்றன. காவிலம்மே. இந்தக் களி நிறுத்தேணம்.

அவன் காயத்ரி முணுமுணுத்தபடி தலையைக் கவிழ்ந்து கொண்டான். யட்சியோ நீலியோ இடையாட வந்திருக்கும் பட்சத்தில் இன்றைக்கு வீட்டுக்குப் போய்ச் சேருவதே முடியாத காரியம் போல் தோன்றியது.

போன சொவ்வாயாழ்ச்ச நல்ல நாளா திருமேனி ?

அந்த மீன்காரப் பெண் விசாரித்தாள்.

அவள் மூத்த மகள் திரண்டிருக்கிறாளாம் போன செவ்வாய்க் கிழமை. ருது ஜாதகம் கணிக்கப் பணம் எல்லாம் கிடையாது. குப்புசாமி அய்யன் போல் சாஸ்திரம் படித்தவன் சொன்னால் தயவாக இருக்குமாம்.

உன் அங்க லட்சணம் பார்த்துத் தானடா அதைத் தீர்மானிக்க வேணும். கூடையை இறக்கி வைத்து விட்டு வியர்வையைத் துடைத்துக் கொண்டு இந்தப் பக்கமாக வா.

பூதங்குளம் நம்பூத்திரியாக இருந்தால் சொல்லி இருப்பான்.

குப்புசாமி அய்யன் சாஸ்திரம் படித்தவன் இல்லை. கரண்டி பிடிக்கிறவன். நாள் கணக்கும் நட்சத்திரக் கணக்கும் கொஞ்சம்போல் தெரியும்.

அதை எல்லாம் மனதில் ஓட்டிப் பார்த்து சுபமான தினம் என்று தரையைப் பார்த்தபடியே அறிவித்தான்.

அவள் இடுப்பில் சுருக்குப் பையில் தட்சணையைத் தேடும்போது வேண்டாம் என்று மறுத்து அவன் நடந்தான்.

குதிரைக் குளம்பு ஒலிக்க ஒரு வெள்ளைக்காரப் பாதிரியும் கூடவே பரிவாரமாகக் குடையும் தடியுமாகப் பத்துப் பேரும் கடந்து போனார்கள்.

துரை ஒரு வினாடி குப்புசாமி அய்யனைப் பார்த்தபோது அய்யனுக்குத் திரேகம் முழுக்க நடுங்கியது.

இல்லை. நான் அந்த ஸ்திரியோடு மனசிலும் சல்லாபிக்கவில்லை.

அவன் தனக்குத்தான் சொல்லிக் கொண்டான்.

அயல் வேதக்காரன் என்றாலும் சபித்துப் போட சக்தி உள்ளவன். அவன் எப்போது எங்கே பேசினாலும் பக்கத்தில் வருகிற கறுப்பன் பாவிகளே என்று தான் அதை நாட்டு மொழியில் சொல்கிறான்.

குப்புசாமி அய்யன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது யாரையும் காணோம்.

விசாலாக்ஷி. விசாலாக்ஷி. விசாலம்.

நித்திரை போயிருப்பாள்.

தம்பி கிட்டாவய்யன் குழந்தைகள் எங்கே ? கீசு கீசென்று இரையும் அவன் பெண்டாட்டி எங்கே ? துரைசாமியைக் கட்டியவளான காமாட்சி என்ன ஆனாள் ? லட்சுமியும் பகவதியும் போன இடம் எது ?

பட்டப் பகலில் வீட்டுக் கதவை விரியத் திறந்து வைத்து விட்டு எல்லோரும் எங்கே போய்த் தொலைந்தார்கள் ?

கொல்லைப் பக்கம் போய்க் கிணற்றில் தண்ணீர் சேந்திக் கால் கை நனைத்துக் கொண்டு மெல்ல விசாரிக்கலாம்.

குப்புசாமி அய்யன் வாசல் நிலைப்படி இடிக்காமல் ஜாக்கிரதையாகக் குனிந்து உள்ளே நுழைந்து அப்படியே பின் கொல்லைக்குப் போனான்.

கிணற்றில் தண்ணீர் சேந்திக் கொண்டிருந்தபோது, பின்னால் ஏதோ ராட்சசப் பறவை மாதிரி நிழல் தட்டிற்று.

திரும்பிப் பார்த்தான்.

தம்பி கிட்டாவய்யனின் மாமனார் மாடியிலிருந்து பறந்த மாதிரி இறங்கிக் கொண்டிருந்தார்.

அவர் தரைக்கு ஒரு அடி மேலே மிதந்து கொண்டு தோட்டத்தில் தென்னை மரங்களுக்குப் பக்கமாகப் போனார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 12:41 pm

அரசூர் வம்சம் - அத்தியாயம் பதினான்கு


கொல்லைக்குப் போய்ட்டு வந்தாச்சு. பச்சை மிளகாயும் புளி இஞ்சியுமாத் தொட்டுண்டு நீத்து பாகமும் சாப்பிட்டாச்சு. குளிக்கக் கிளம்பலியா இன்னும். அதுக்கு மின்னாடி வேலாயுதனைப் பார்த்து தாடி மீசையை நறுக்கிக் குடுமியையும் நேராக்கிண்டு வாங்கோ.

விசாலாட்சி தலையாற்றிக் கொண்டே சொன்னாள் குப்புசாமி அய்யனிடம்.

ராத்திரி முழுக்க ரெண்டு பேரும் எந்த உபத்திரவும் இல்லாமல் பேசிக் கொண்டிருந்த சந்தோஷமும் சந்திருப்தியும் முகத்தில் தெரிந்தது. அதுவே அவளுடைய லட்சணமான முகத்துக்குத் தீபம் கொளுத்தினது போலே மேலதிகம் பிரகாசத்தையும் கொடுத்தது.

குப்புசாமி அய்யன் தஞ்சாவூரிலிருந்து தாசியாட்டத்துக்கு வந்த பெண்டுகளை மறந்தான். கையில் அரிய எடுத்த கருணைக்கிழங்கைப் பந்தாக உருட்டிக் கொண்டு ரதி சுக தாரே பாடும் சமையல்காரர்களை, சிருங்கார சுலோகம் சொல்லும் நம்பூத்ரிகளை, நல்ல நாள் கேட்ட மீன்காரியை எல்லாம் மறந்து விசாலாட்சியில் அமிழ்ந்து உருகிப் போனான்.

அது நேற்று ராத்திரி.

தாடை எல்லாம் ரோமம் காடாக வளர்ந்திருக்கே. சிரைத்துக் கொள்ளக் கூடாதா ?

அவள் வெட்கத்தோடு கேட்டு மாரில் அணைத்துக் கொண்டபோது குதிரை ஏறிப் போன பாதிரி என்னத்துக்கோ நினைவில் வந்தான்.

போகம் முந்தவிடாமல் தடுக்க மனதை வேறே இடத்தில் நிலைக்க வைக்கிறதும் நல்லது தான். இது இன்னும் சில வருடத்தில் கனிந்து யோகமாகும். மனம் தன்பாட்டுக்கு எதிலோ நிலைத்துப் போய்ச் சலனமில்லாது கிடக்க, உடம்பு இயங்கிக் கொண்டு, எல்லாவற்றையும் மூணாம் மனுஷனாகப் பார்த்துக் கொண்டு.

கொதுகு கடிக்கறது போதாம நீங்க வேறே.

அவள் செல்லமாகக் கோபித்தபடி மார்த்தடத்திலிருந்து அவன் முகத்தை அகற்றி தாடி ரோமங்களைத் தீர்க்கமாக வருடினாள். அவை சிலிர்த்தது அந்த இருட்டிலும் தெரிந்தது போல் ஓசைப்படாமல் சிரித்தாள்.

ஏலமும் கிராம்புமாக அவளுடைய வாயிலிருந்து வந்த சுகந்தமான வாடை குப்புசாமி அய்யனை இன்னொரு உலகத்துக்குக் கொண்டு போனது.

இப்போது குளித்து வந்து நிற்கிறபோது எல்லாத் திசையிலும் தெறிக்கும் பரிசுத்தமான வாசனை.

யோகம் அனுபவிக்கப் போகும்போது வாடை எல்லாம் உதவாது. மூக்கும் நாக்கும் செத்திருக்க வேண்டும்.

அதைப் பற்றி இப்போ என்ன என்று அவளோடு சம்பூரணமான பொழுதை அசைபோட்டபடி விசாலாட்சியைப் பார்த்தான் குப்புசாமி அய்யன்.

காவிலே யட்சி போல இருக்கேடி.

அவள் தலைமுடியை முகம் எல்லாம் இரைய விட்டுக் கொண்டு சொன்னான்.

அப்போ நானும் சிநேகாம்பா தோப்பனார் போலப் பறக்கட்டுமா ?

விசாலாட்சி திரும்பச் சிரித்தாள்.

அந்த வயசன், குப்புசாமி அய்யன் ஊருக்குப் போய்த் திரும்பி வந்த இந்த நாலு வாரத்தில் ஒரு தொந்தரவாக மாறியிருக்கிறான். அது அவனையும் அறியாமல் நிகழ்ந்தது.

நேற்றைக்கு மதியம் வீட்டில் நுழைந்தபோதே குப்புசாமி அய்யன் பார்த்தது தான் அது. என்ன கிரகசாரமோ என்று யோசித்தபடி செம்பில் தண்ணீர் சேந்தி உடம்பு கழுவிக் கொண்டிருந்தபோது, வயசன் தோட்டக் கோடியில் மிதந்தபடி சுற்றி மூத்திரம் ஒழித்துக் கொண்டிருந்தான். அவன் கண் இரண்டும் அரைத் தூக்கத்தில் இருப்பதுபோல் பட்டது குப்புசாமி அய்யனுக்கு.

பிரதட்சணமாகவும் அப்பிரதட்சணமாகவும் வேலிப்பக்க மலை வேம்பை இரண்டு முறை சுற்றி வருவதற்குள் காரியம் முடிந்து அந்தப் படிக்கே மிதந்து திரும்ப வீட்டு மாடிக்குப் போனான் வயசன்.

ஆலப்பாட்டு மடத்தில் ஏதாவது துர்தேவதை நுழைந்திருக்கும். இல்லை, அங்கே நிலையாக இருக்கப்பட்ட அம்மாதிரி எதற்கோ வேண்டிய உபச்சாரம் கிடைக்காமல் போயிருக்கும். வயசன் இங்கே வந்து கிட்டத்தட்ட ஸ்திர தாமசமாக ரெண்டு மாதம் ஆகப் போகிறது என்பது குப்புசாமி அய்யனுக்கு நினைவு வந்தது. இரண்டு மாதமாகப் பசியோடு இருக்கிற எந்த நீலியோ அவனை இப்போது கொட்டையைப் பிடித்துக் கசக்கி ஆட்டி வைக்கிறாள் போலிருக்கிறது.

இதெல்லாம் யோசித்தபடி கொல்லையில் இருந்து வீட்டுக்குள் வந்தபோது உயரம் போதாத பின் நிலைவாசல் தலையில் இடித்து விண்ணென்று தலைக்குள் வலி வேறு.

வீட்டில் எல்லோரும் வந்திருந்தார்கள் அப்போது. குழந்தையும் குட்டியும் பெரியவர்களுமாக எப்போதும் போல் இருந்த வீடு. தம்பி துரைசாமி அய்யன் கூட அங்கே இருந்தான்.

என்னவாக்கும் எல்லோரும் ஆத்தை மட்ட மல்லாக்கத் திறந்து போட்டுட்டு எங்கே போய்ட்டேள் ? ஏண்டா தொரை, நீ ஆதிச்ச நல்லூர்லே கைமள் வீட்டுக் கல்யாணத்துக்கு ஒத்துண்டு போகலியோ ? புனலூர்லே ராமேந்திரன் அத்திம்பேரோட தம்பியைப் பார்த்தபோது சொன்னானே ?

அண்ணா அது கிட்டன் போயிருக்கான். நான் மைநாகப்பள்ளி குரூப்பு வீட்டுலே அவனோட அப்பன் அடியந்திரத்துக்குச் சொல்லி விட்டான்னு போயிருந்தேனா. போன இடத்துலே குருப்போட தள்ளைக் கிழவியும் நாலு நாள் முன்னாடி போய்ச் சேர்ந்து. இன்னும் ஏழு நாள் கழிச்சு ரெண்டையும் ஒண்ணா நடத்திக்கலாம்னுட்டான் குரூப்பு. மகா பிசுக்கனாக்கும் அவன். பேசினதுலே கால்வாசிப் பணம் கொடுடா இப்போ சிரத்தைக்குன்னு கேட்டு வாங்கிண்டு வந்தேன்.

மைநாகப்பள்ளியில் இருந்து கருநாகப்பள்ளி போய்க் கிட்டனுக்குக் கூடமாட இருக்கக் கூடாதோ ? காமாட்சி நினைப்பில் ஓடி வந்திருக்கிறான் கழுவேறி. தனியாகப் படுத்துக்கலாம்னு நப்பாசை.

நீங்க எனக்காக வரலியா அது மாதிரித்தான்.

விசாலாட்சி அவனுக்கு மட்டும் புரிகிற மாதிரி சிரித்தாள். அவள் தலையில் மீன்கூடையும் வாய் நிறைய தாம்பூல எச்சிலுமாகச் நிற்கிறது போல் தோன்றியது குப்புசாமி அய்யனுக்கு.

அதொக்கே சரிதான். இப்போ எல்லோரும் எங்கேயாக்கும் ஒருமிச்சுப் போய்ட்டு வரேள் ?

குப்புசாமி அய்யன் பொதுவாகப் பார்த்தபடி சொன்னான். அவனுக்குப் பசி அகோரமாக இருந்தது. விசாலாட்சி படுத்துக் கொள்ள வருவது கிடக்கட்டும். இப்போ சாப்பிட ஏதாவது ஆக்கி வைத்திருக்கிறாளா ?

ராம சாஸ்திரியாத்துலே சீராம நவமி அண்ணா. பூஜை, அப்புறம் சமாராதனை.

வா வான்னு சாஸ்திரிகளோட ஆத்துக்காரி தெலுங்கும் தமிழுமா வந்து வாய் நிறையக் கூப்பிட்டுப் போனாள். கதவைச் சாத்திண்டு தான் போயானது. காத்துலே திறந்திருக்கும்.

கடைசித் தங்கை பகவதி சொன்னாள்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 17 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக