புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
16 Posts - 59%
heezulia
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
58 Posts - 62%
heezulia
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பிம்பம் Poll_c10பிம்பம் Poll_m10பிம்பம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிம்பம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:26 am

எஸ். திருமலைவடிவு

``சங்கீதா... ஏய் சங்கீதா... எங்கேடி போனே? பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகிட்டு இருக்கு... சங்கீதா...'' என்று அவளின் அம்மா ஒருபுறம் கத்திக் கொண்டிருந்தாள். இடை யிடையே சங்கீதாவின் பச்சைக்கிளி கூண்டுக்குள் இருந்தபடி, ``சங்கீதா வா... சங்கீதா வா...'' என்று தன்பங்குக்கு சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தது.

இவற்றை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் வீட்டின் பின்னால் கிணற்றடி அருகே ஒரு வாளித் தண்ணீரில் தனது பிம்பத்தைப் பார்த்து தலை சீவிக் கொண்டிருந்தாள் சங்கீதா.

கற்பகம் அவள் இருக்கும் இடத்துக்கு வந்து, ``வாடி... பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிட்டுது...'' என்று அழைத்துச் சென்றாள்.

ஒற்றையடிப் பாதையில் சங்கீதாவை கற்பகம் பள்ளிக்கு அழைத்துச் சென்றாள். அப்போது மெதுவாய் சங்கீதா, ``அம்மா... நம்ம வீட்டுக்கு எப்பம்மா கண்ணாடி வரும்? வாங்கித் தாம்மா... அதுல நான் என்னைய பார்க்கணும்மா...'' என்றாள்.

``சரிம்மா... நிச்சயமா வாங்கித் தர்றேன். இப்போ பள்ளிக்கூடத்துக்கு நல்லபிள்ளையா அடம் பிடிக்காம போ...'' என்று அவளை சமாதானம் செய்தாள் அம்மா.

கற்பகத்தின் நிலைமை யாருக்கும் வரக் கூடாது. அவள் என்ன செய்வாள்? பாவம்! நோய்வாய்ப்பட்டு வேலை பார்க்க இயலாத கணவர். சம்பாதிக்க முடியாதவர். நோய் வாய்ப்படுவதற்கு முன்பும் அவர் ஒரு இடத் திலும் உருப்படியாய் வேலை பார்த்தது கிடை யாது. கற்பகத்துக்குப் பணம் கொடுத்ததும் கிடையாது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:26 am

கணவரின் கையை எதிர்பார்க்காமல் தானா கவே கூடை பின்னி ஏதோ அரைவயிற் றுக்கு சம்பாதித்து வந்தாள் கற்பகம். இப்படி அன்றாடப் பொழுது கழிவதே கடினம். இதில் சங்கீதாவின் ஆசையை எப்படி நிறை வேற்றுவது? கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

சங்கீதா அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தாள். அவள் வகுப்பில் படிக்கும் சக மாணவி விஜயா பணக்கார வீட்டுப்பெண். தன் பையில் எப் போதும் பவுடர், கண்ணாடி, சீப்பு, ஸ்டிக்கர் பொட்டு என்று பலவகை அலங்காரப் பொருட்களை வைத்திருப்பாள். அவளது பெயரும் கூட நோட்டுகளில் பளபளவென்று மின்னும் எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும். யாருக்கும் ஒரு பொருள்கூட கொடுக்க மாட்டாள். இரக்கம் என்பது சிறிதும் கிடையாது.

மதிய உணவு இடைவேளையில் அவள் சாப்பிடுவாளோ இல்லையோ, கண்ணாடியும் கையுமா கத்தான் பள்ளிக்கூடத்தை வலம் வந்துகொண்டிருப்பாள்.

விஜயா கண்ணாடியில் பலமுறை தனது பிம்பத்தைப் பார்த்து ரசிக்கும்போதெல்லாம் சங்கீதா வுக்கும் தன்னைக் கண்ணாடியில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆசை ஆசையாய் இருக்கும். விஜயாவிடம் வாய்விட்டுக் கேட்டாலும் நடக்காது என்று தெரிந்திருந்தும் ஒருநாள் மனதைத் திடப்படுத்திக்கொண்டு அவளிடம் கண்ணாடி கேட்டாள். ஆனால் விஜயாவோ முகத்தில் அறைந்தமாதிரி `தர முடியாது' என்று கூறி அவமானப்படுத்தி விட்டாள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:27 am

ஒருநாள் வகுப்பறையில் மதிய உணவு இடைவேளையில் விஜயா தன் பையை வைத்துவிட்டு கேன்டீன் வரை சென்றிருந்தாள். வகுப்பறையில் இருந்து கேன்டீன் வரை போய்விட்டு வர குறைந்தது ஆறேழு நிமிடங்கள் ஆகும்.

விஜயா அன்றைய தினம் மதிய உணவுக்குத் தின்பண்டங்கள் வாங்க கேன்டீனுக்கு சென்றி ருந்தாள். அப்போதுதான் வகுப்பறையில் அது அவசர அவசரமாக அரங்கேறியது.

விஜயாவின் பையிலிருந்து நைசாக கண்ணாடியை எடுத்த சக தோழிகள், தங்கள் அழகைப் பார்த்துப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர்.

விஜயாவின் குணம் தெரிந்திருந்த சங் கீதா, கண்ணாடியில் தன்னைப் பார்க்க ஆசைப்பட்டபோதும் அதைக் கட்டுப்படுத் திக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அப்போது இரு சிறுமிகள், ``ஏய்... ஏய்... எங்கிட்ட தா... ம்ஹூம்... தர முடியாது போ... அஸ்க்கு... புஸ்க்கு...'' என்று கண் ணாடியைப் பிடித்துக்கொண்டு சண்டை போட ஆரம்பித்தனர்.

இறுதியில், `கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது' என்கிற கதையாய் கண்ணாடி தரையில் விழுந்து துண்டு துண்டாய் உடைந்தது. அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த சங்கீதா அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து எழுந்து வந் தாள்.

``ஏண்டி இப்படி செஞ்சீங்க? அனுமதி இல் லாம அடுத்தவங்க பொருளை எடுத்தது தப்பில்லையா?'' என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே அவள் கன்னத்தில் `பளார்' என்று அறை விழுந்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:27 am

அவளை அறைந்தது விஜயா. அவள் முகத்தில் கோபம் தாண்டவமாடியது. ஒரு கணம் அங்கு ஆழ்ந்த அமைதி. பின்னர் புயலாய்ச் சீறினாள் விஜயா. ``ஏய் சங்கீதா... ஏற்கனவே நான் உனக்கு கண்ணாடி தரமாட்டேன்னு சொல்லியும் நீ இவங்கள கூட்டு சேர்ந்துக்கிட்டு கண்ணாடியை உடைச்சிருக்கே...'' என்று திட்டித் தீர்த்தாள். பின்னர் மீண்டும் அங்கு `புயலுக்குப் பின் அமைதி' என்ற நிலை.

அன்று மாலை பள்ளிக்கூடம் முடிந்து விஜயா சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது ரோட் டில் குறுக்கே ஓடிய நாய், அவள் சைக்கிளில் சிக்கியது. அதனால் விஜயா தடுமாறிக் கீழே விழுந்தாள். அவளது கையில் ரத்தக்கறை ஏற்பட்டது. அதை, தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சங்கீதா பார்த்தாள். ஓடோடி வந்து விஜயாவைத் தூக்கிவிட்டு, காயத்தைத் துடைத்து தனது கைக்குட்டையால் கட்டுப் போட்டாள்.

ஆனால் விஜயாவோ கண்ணாடி உடைந்ததை மனதில் வைத்துக்கொண்டு அவள் போட்ட கட்டைக் கழற்றி வீசிவிட்டுச் சென்றாள். சங்கீதா மனம் வாடிப் போனாள்.

மறுநாள் காலை சங்கீதாவும், விஜயாவும் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். விஜயா முகத்தை `உம்'மென்று வைத்திருந்தாள். சங்கீதா எப்போதும்போல் இயல்பாக இருந்தாள்.

சங்கீதாவிடம் விஜயா மோசமாக நடந்துகொண்டது, உண்மையில் கண்ணாடியை உடைத்த இரு சிறுமிகளின் மனதிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க ஆரம்பித்தது.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:27 am

இருவரும் மதிய இடைவேளையில் விஜயாவை சந்தித்து, ``விஜயா... எங்களை மன்னிச் சிடுடி... கண்ணாடியை உடைச்சது சங்கீதா இல்லை... நாங்கதான்! மத்தவங்களோட பொருளை எடுப்பது தப்புன்னு அவ எங்களுக்கு அட்வைஸ்கூட பண்ணாடி'' என்றனர்.

நடந்த உண்மையை உணர்ந்த விஜயா தன் தவறை எண்ணி மனம் வருந்தினாள். சங்கீதா விடம் அழுது புலம்பி மன்னிப்புக் கேட்டாள். சங்கீதா அவளுக்கு ஆறுதல் கூறினாள்.

மறுநாள் பள்ளிக்கூடத்துக்கு வந்த விஜயா கையில் ஓர் அழகிய கண்ணாடி. ``இதை நீ மறுக் காம வாங்கிக்கணும். நம்ம புதிய நட்புக்கு அடையாளமாய் இருக்கட்டும்...'' என்று வற் புறுத்திக்கொடுக்க, வாங்கிக் கொண்டாள் சங்கீதா.

இருவரின் அழகிய புன்னகைகளை காட்டியது கண்ணாடி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக