புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
17 Posts - 4%
prajai
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
9 Posts - 2%
jairam
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_m10பாசம் -எஸ்.மணிவண்ணன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசம் -எஸ்.மணிவண்ணன்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:22 am

டாக்டர், சொன்னதைக் கேட்டதும் புவனா, அதிர்ச்சிக்குள்ளானாள். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனாள்.

"உடனே ஆபரேஷன் செய்தாக வேண்டும்... ஐம்பதாயிரம் ரூபாய் பணம் செலவாகும்.... பணத்தைக் கட்டினால்... நாளையே ஆபரேஷன்...'' என்று டாக்டர் உறுதியாய் சொல்லி விட்டார்.

புவனா, நிலைகுலைந்து போனாள். எப்பாடு பட்டாவது கணவனை காப்பாற்றி ஆக வேண்டும்... அது ஒரு மனைவியின் கடமை....

சேகர், சராசரி மனிதன் இல்லை.... வித்தியாசமானவன்.... வெறும் பேச்சு மட்டும் பேசாமல் சொன்னபடி நடந்து காட்டியவன்... பெரிய மனசுக்காரன்....

காலம் பூராவும் அவன் காலடியில் விழுந்து கிடந்தாலும் போதாது... புவனாவுக்கு சேகர் தாலி கட்டிய கணவன் மட்டும் இல்லை.... அதற்கும் மேலாக வணங்க வேண்டிய தெய்வம்.... அவனுக்காக உயிரைக் கூட கொடுக்கலாம்.... அப்பேர்ப்பட்ட குணம் உடையவன்....

சாதாரண வயிற்றுவலி என்று நினைத்து ஆஸ்பத்திரி வந்தவனுக்கு... டாக்டர் சொன்ன செய்தி பெரிய அதிர்ச்சிதான்... வயிற்றில் கட்டி.... உடனே ஆபரேஷன் பண்ண வேண்டும்... கட்டியை டெஸ்ட்டுக்கு அனுப்ப வேண்டும். புற்று நோய் கட்டியா... சாதாரண கட்டியா என்று சோதித்து அறிய வேண்டும் என்ற டாக்டர், கொஞ்சம் கூட அதிர்வு இல்லாமல் மடமடவென்று சொல்ல... புவனா, அதிர்ந்து போய் அலறிவிட்டாள்..... கண்ணீர் விழிகளில் பெருக்கெடுத்தது....

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:23 am

"சேகர்... உங்களுக்குப் போயா இப்படி.... அந்த ஆண்டவனுக்கு கண்ணே தெரியாதா.... நல்லவங்களத்தான் ஆண்டவன் சோதிப்பானா...'' புவனா, புலம்பினாள்...

"வருத்தப்படாதே புவனா... எது நடக்கணுமோ, அது நடந்தே தீரும்... நம்ம கையில் எதுவும் இல்லை...''

"அப்படி சொல்லாதீங்க... நீங்க வாழணும்.... எப்பாடுப்பட்டாவது உங்கள காப்பாத்துவேன்.... என்னை நரகத்துல இருந்து காப்பாத்தி... எனக்கு வாழ்க்கை பிச்சை போட்ட உங்களுக்கு நான் கைமாறு செஞ்சாகணும்... கண்டிப்பாய் செய்வேன்... இது சத்தியம்....'' புவனா, மனதில் உறுதி பூண்டாள்...

சேகர், வேலை பார்த்த அலுவலகத்துக்கு சென்று மானேஜரை சந்தித்து முறையிட்டாள். அவன் பல் இளித்தானே தவிர... பணத்தை நீட்டவில்லை... பச்சையாய் கேட்டான் அவளையே!

அவளால் எதிர்த்துப் பேச முடியவில்லை... கூனிக் குறுகிப் போனாள்.... கண்ணீரை துடைத்துக் கொண்டு கெஞ்சினாள்.... இரக்க குணம் இல்லாதவனாய் இருந்தான்....

"புவனா, உன் அழகு மேல எனக்கு ரெம்ப நாளா ஒரு கண்.... நீ சேகர் கூட ஆபீஸ்க்கு இரண்டு தடவைதான் வந்து இருக்க... முதல் தடவயே உன்னை முழுசா பார்க்கணும்னு துடிச்சேன்... வெட்கத்த விட்டு உன் புருசன் கிட்டயே கேட்டுத் தொலைச்சேன்... பத்தாயிரம் தாரேன்... உன் மனைவிய ஒரு நாள் என்கிட்ட அனுப்பி வைன்னு கேட்டேன்... என் கன்னத்துல பளார்னு அறைஞ்சிட்டான். நல்ல வேளை.... இந்த ரூம்ல நானும் சேகரும் மட்டும்தான் இருந்தோம்... வெளியில் தெரிஞ்சால் அசிங்கம்னு நான் அவமானப்பட்டு... அவன் கைய பிடிச்சி கெஞ்சி மன்னிப்பு கேட்டுத் தொலைச்சேன்... நான் நினைச்சு இருந்தால் உன் புருசனை உடனே வேலைய விட்டு நீக்கி இருக்க முடியும்.... ஆனா நான் அப்படி செய்யல... ஏன் தெரியுமா... வெறி... அடிச்ச வெறி... அடைஞ்சே தீரணுங்கிற ஆவேசம்.... என்னைக்காவது ஒரு நாள் சிக்குவான்... அன்னைக்கு வச்சிக்கிறேண்டா உனக்கு ஆப்புனு.... அமைதியா காத்து இருந்தேன்... பச்சி... இன்னைக்கு நீயே என்கிட்ட வந்து மாட்டிக்கிட்ட... உன் புருசன் உசிரை காப்பாத்த உனக்கு பணம் வேணும்.... அப்படித்தானே.....''

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:23 am

"ஆ... ஆமா.... ஐம்பதாயிரம் வேணும்....''

"தர்றேன் புவனா.... உனக்கு வேண்டிய பணத்தை நான் தர்றேன்.... அதுக்கு முன்னாடி... உன்னை ரசிக்கணும்.... ஒரே ஒரு தடவை.... "மானேஜர் மனோகர் வில்லனாய் கொக்கரித்தான்....

புவனா, பதில் பேசாமல் நின்றாள்... "என்ன யோசிக்கிற... யோசி... நல்லா யோசி.... புவனா, நீ ரெம்ப அழகா இருக்க... என் மனைவிய விட... கலர்லயும் சரி... கவர்ச்சியிலயும் சரி.... தேவதை மாதிரி ஜொலிக்கிற... எப்படி இந்த கருவாயனைப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட... ஜோடிப் பொருத்தம் நல்லா இல்ல...''

"நிறுத்துங்க.... என்னைப் பற்றி நீங்க என்ன வேணும்னாலும்.... எப்படி வேண்டுமானாலும் அசிங்கமா பேசுங்க... பட்... என் சேகரைப் பற்றி தயவு செய்து எதுவும் பேசாதீங்க.... அவர் கால் தூசிக்கு கூட நீங்க பெற மாட்டீங்க! அவரைப் பற்றி தப்பா பேசுறதுக்கு எந்த யோக்கியதையும் இல்ல...''

"ஓ.... இதான் புருச பக்தியோ....கருப்புன்னா உனக்கு ரொம்ப பிடிக்குமோ.... எனக்கு சிகப்புதான் பிடிக்கும்... உன்னை மாதிரி அழகியப் பார்த்தால் எனக்கு ஆசை வந்துடும்... கமான் புவனா... டக்குனு ஒரு முடிவு சொல்... நீ சொல்லப் போற பதில்லதான் உன் புருசனோட உயிர் இருக்கு... அத நல்லா ஞாபகம் வச்சுக்க...''

புவனா, கண்ணீர் விட்டு கதறி அழுதாள்... மானேஜர் மனோகர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்தாள்.... ஆபரேஷனுக்கான பணத்தை கட்டினாள்... வெற்றிகரமாய் ஆபரேஷன் முடிந்தது....

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:23 am

சேகர், உயிருக்கு ஆபத்து இல்லை.... காலையில் இருந்து புவனாவைக் காணோம்... யாரோ ஒருவன் ஒரு கடிதத்தை சேகரிடம் கொடுத்து விட்டுப் போனான்... சேகர், பதட்டமாய் பிரித்தான்....

மன்னித்து விடுங்கள் சேகர்.... உங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நான் மறுபடியும் சாக்கடையில் விழுந்து விட்டேன். என்னை காப்பாற்றி... என்னை தங்கள் மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்வு கொடுத்தீர்கள்.... உங்களை என் தெய்வமாகவே மனதில் பூஜித்து வந்தேன்.... இந்த பிறவியில் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறனோ... என்னை நரகத்தில் இருந்து மீட்டு எடுத்த உங்கள் உயிரை காப்பாற்ற வேண்டியது என் கடமை.... உதவி கேட்டுப் போனவர் என் உடம்பைக் கேட்டார்.... கொடுத்து விட்டேன். உடம்பை கொடுப்பது எனக்கு ஒன்றும் புதிது இல்லையே... மும்பையில் இதைத்தானே தொழிலாக செய்து கொண்டு இருந்தேன். உங்களுக்கு மனைவியான பிறகு... இன்னொருவனுக்கு என் உடம்பைப் கொடுத்ததை என்னால் தாங்க முடியவில்லை...அந்த வகையில் உங்களுக்கு நான் துரோகம் செய்து விட்டேன்... இனி உங்கள் முகத்தில் என்னால் விழிக்க முடியாது... போகிறேன்... என்னை தேட வேண்டாம்....

கடிதம் முடிந்திருந்து.

சேகர், மனம் கனமானது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக