புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_m10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_m10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_m10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_m10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_m10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_m10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_m10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_m10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_m10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_m10கவலைகள் போக்கும் கயிலாயம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைகள் போக்கும் கயிலாயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 11:37 pm

தென்கயிலாயம் எனப்போற்றப்படும் வெள்ளியங்கிரி, ஏழு மலைகள் சேர்ந்த தொகுப்பாகும். கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் ‘வெள்ளியங்கிரி’ என்ற பெயர் பெற்றது.

இந்த மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார்! இந்த வெள்ளியங்கிரியை அடைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பது அனுபவபூர்வமான உண்மை.

இந்த தெய்வீக மலையில் இயற்கையின் பொலிவும், முனிவர்களின் தவ வெம்மையும் பரிபூரணமாக நிறைந்திருப்பதால், இன்றுவரை எந்தவிதமான செயற்கை அம்சமும், ஏன், போக்குவரத்து வசதிகூட இல்லாதிருக்கிறது. தேவ ரகசியங்கள் பொதிந்துள்ள மலை இது. திகில் நிறைந்த அமானுஷ்யமான அனுபவங்களை ஒவ்வொரு பக்தருக்கும் வழங்குகிறது.

அடர்ந்த வனமாக திகழ்ந்த வெள்ளியங்கிரிக்கு சென்ற நூற்றாண்டிலிருந்துதான் மக்கள் போய்வரும் வழக்கம் ஏற்பட்டது. உறுதியான உடல் நலமும், திட சிந்தையும் உள்ள ஆண்களும், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், 45 வயதுக்கு மேலான பெண்களுமே மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

இதன் புராதன புனிதம் சீண்டப்படாத வகையில் வின்ச், வாகனங்கள் செல்ல மலைச்சாலை என்று எந்த நவீன வசதியுமே செய்யப் படவில்லை. 16&ம் நூற்றாண்டில் பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கும், அன்னை மனோன்மணிக்கும் ஒரு ஆலயம் கட்டப்பட்டது.

அது சிதைந்து சிதிலமடைந்துவிட, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் சௌந்தர பாண்டிய சுவாமிகள் முதலானோர் கைங்கர்யத்தால் தெப்பக்குளம், சுனை அருகே மேடை கட்டி அதில் லிங்க பிரதிஷ்டை, மண்டபங்கள், அடுத்து கற்கோயில் என்று அடுத்தடுத்து உருவாயின.

ஈசன், ஈஸ்வரி, விநாயகருக்கு தனித்தனி சந்நதிகளும் மற்றும் பஞ்ச விநாயகர், நவகிரக கற்குடை ஆகியவையும் நிறுவப்பட்டன. கோயிலுக்கு முன்னும், பின்னும் முற்றங்கள் விரிவாக்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில் இருமுறை நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்வுகள் யாவும் தூய தமிழிலேயே மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. அதையட்டி, தமிழிலேயே தின வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

பூண்டி கோயிலுக்கு வடபுறம் மலையேற்ற பக்தி பணியை தொடங்கலாம். மொத்தம் ஏழு மலைகளை அடுத்தடுத்து ஏறிக் கடந்தால்தான் வெள்ளியங்கிரியை அடைய முடியும். பூண்டி கோயிலுக்கு அருகே உள்ள படிகளில் ஆதாரத்தில் முதல் மலை ஏறுவோம். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்கள் பக்தர்கள் மலைக்குச் செல்ல ஏதுவான காலமாகும். மலை ஏறும் பக்தர்கள் ஆளுக்கு ஒரு மூங்கில் தடியினை என்ன விலை கொடுத்தாவது வாங்கிச் செல்வார்கள்.

மலை மீது ஏறும்பொழுது ஊன்றுகோலாக அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். பிறகு இந்தக் கழியை இந்த மலையேற்றத்தின் நினைவாகவும், இறைவனின் பிரசாதமாகவும் பக்தர்கள் தம் வீட்டு பூஜையறையில் வைத்துக் கொள்கிறார்கள். அடிவாரத்திலிருந்து வெள்ளியங்கிரி வரை சுமார் 5,400 மீட்டர் தொலைவாகும்.

முதல் மலையில் வெள்ளி விநாயகருக்கு ஆலயம் உள்ளது. கோயிலுக்கு கிழக்கே மயில் நதி ஓடுகிறது. இங்கே அகிலாண்டவர் சித்தர் குகையும் உள்ளது. இரண்டாவது மலையை வழுக்கைப்பாறை மலை என்பர். இங்கே

பாம்பாட்டி சுனையும், பாம்பாட்டி சித்தர் ஆசிரமும் உள்ளது. இம்மலையில் கொடிய விஷப்பாம்புகள் நடமாடுவதாக கூறுவர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 11:37 pm

மூன்றாவது மலையான பூவூற் மலையையும் கடந்து மேலேறினால், ஓர் உண்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். ஆமாம், மொத்தத் தொலைவில் பாதி& 3000 மீட்டர் தூரம் பயணப்பட்டிருப்போம். அடுத்து நான்கா வது மலையாகிய மஞ்ச மலையில் ஒட்டன் சமாதி உள்ளது. சித்தர்கள் உலவி வந்த காலத்தில், அவர்கள் வசித்த குகைகளுக்கும், ஆசிரமங்களுக்கும் அவரவருடைய பெயர்களே வைக்கப்பட்டிருந்தன.

கோரக்க முனிவர், அடிவாரத்து ஊராகிய முட்டத்து நல்லூரில் பிறந்து வெள்ளியங்கிரியில் தெய்வகடாட்சம் பெற்று பலகலை மேடையில் (பலகார மேடை) சகல கலை ஞானங்களையும் கற்று, அற்புதங்கள் பல புரிந்தார் என கோவம்ச சரித்திர நூல் கூறுகின்றது. இம்முனிவர் தாம் இயற்றிய நூல்களுள் ஒன்றான மலை வாகடத்தில், இந்த மலைத் தொடரின் அருமைகளையும், பெருமைகளையும் விளக்கியுள்ளார்.

நாட்டை இழந்து ஆரண்யம் வந்த பஞ்சபாண்ட வர்கள், ஓராண்டு விராடபுரம் என்ற தாராபுரத்தில் மறைந்து வாழ்ந்த பொழுது வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளனர். அதன் காரணமாக மலையில் உள்ள சில இடங்கள் அர்ஜுனன் தவப்பாறை, பீமன் ராசிக்கல், பீமன் களியுருண்டை என்ற பெயர்கள் பெற்றன.

அதேபோல் ராமாயண சம்பவங்களும் இங்கே நிகழ்ந்துள்ளன. பேச்சிக்கானல், சீதை வனமாகியது. ராமர் நதி, அனுமன் நதி, அனுமக்குமார மலை ஆகியவை இங்கே இப்போதும் விளங்குகின்றன. இம்மலையில் சல்லிக்குச்சிகளும், வசுவாதி என்ற துவர்ப்பு சுவை மிகுந்த பாக்கும், சீற மஞ்சள் என்ற வாடா மஞ்சளும் விளைகின்றன.

வால்மீகி ஆசிரமமும் உண்டு என்பார்கள். ஐந்தாவது மலை பொள்ளாச்சி மலை என்று அழைக்கப்படுகிறது. அங்கே பீமன் களியுருண்டை என்ற பாறை மீது ஏறி நின்று பார்த்தால் நம் பார்வையில் பொள்ளாச்சி நகரமே விரியும். இங்கே விளையாட்டு சித்தர் குகையும் உண்டு. வடபகுதியில் செண்பக மரங்கள் அடர்ந்திருக்க, குறிஞ்சி மலரும் இங்கே பூக்கிறது.

ஆறாவது மலை, நந்தி மலை. இங்கே ஆண்டி சுனை உள்ளது. ஆண்டி சுனைக் குக் கீழ் திசையில் பறையன் பாறை என்று ஒன்று உள்ளது. இந்தப் பாறையிலிருந்து தானாகவே பறை ஒலி கேட்குமாம். அர்ஜுனன் தவம் செய்த 5வது, 6வது மலைகளுக்கு இடையே ஒரு குகை உள்ளது. இதில் தாராளமாக 70 பேர் வரை தங்கலாம்.

ஏழாவது மலையான கிரிமலை அருகே கருட நதி உள்ளது. வெள்ளைக் கருடன்கள் இங்கு வந்து குளிக்குமாம். கிரிமலையின் கீழ்ப்பக்கத்தில் உள்ள காஞ்சியாற்றுக்கு கல்லணை கட்டியவன் கரிகால சோழன் ஆவான். இயற்கையாகவே கோபுர வாசல் போல் உள்ள பாறைகளின் இடைவெளியை தோரணங்கள் என்று அழைக்கின்றனர்.

ஆறாதார வீடு, பஞ்ச தீப வீடு என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மலை பஞ்ச பூதத் தலமாகும். இறைவி மனோன்மணியாக பக்தர்களுக்கு காட்சி தருகின்றாள். மலையில் உள்ள ஆண்டாள் குகை (ஆண்டவர் குகை) என அழைக்கப்படும் கிரி சந்நிதானத்தில் பஞ்சபூத லிங்கங்களும் மற்றும் வெள்ளியங்கிரி ஆண்டவரும் உள்ளனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 11:37 pm

இக்குகைக்குள் சென்று ஆண்டவனை வணங்குவது என்பது பெரும்பாடாகும். படாதபாடு பட்டு 5,400 மீ. தூரமும், இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க, தாளா உடல் துன்பம் தாங்கி வந்த நேரம் எல்லாம் வெள்ளியங்கிரி ஆண்டவனையும், மனோன்மணியையும் தரிசித்த அந்தக் கணமே எங்கோ ஓடிப்போய் விடுகின்றன.

வானத்தையே எட்டிவிட்டதுபோல மேகங்கள் நம்மைத் தொட்டு தழுவி நகர்ந்துபோகும் அனுபவம் சொற்களில் விவரிக்க இயலாதது. கயிலாயங்கிரிக்கே வந்துவிட்டோமோ, இன்னும் சற்று எட்டிப் பார்த்தால், பரமேஸ்வரனையும் பார்வதியையும் தரிசித்துவிடலாமோ என்றே தோன்றும்.

மலை மீது கனக மண்டபம் உள்ளது. அதிலே சக்தி தேவியும், விநாயகரும், முருகக் கடவுளும், பிரம்மா மற்றும் விஷ்ணுவும், தேவர்க ளும் வழிபடும் வண்ணம் சிவலிங்கப் பெருமான் எழுந்தருளியிருப்பார்.

தினமும் அதிகாலையில் இறைமேனிகளை தேவர்களும், முனிவர்களும் வழிபடும்பொழுது தேவ துந்துபிகள், பஞ்சவாத்தியங்கள் முழங்கும் என்றும், இந்த தேவ ஆராதனையை மிக மிக புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே கேட்க முடியும் என்று கச்சியப்ப முனிவர், தன்னுடைய பேரூர் புராணத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த தேவ வழிபாடு இன்றும் நடப்பதாகவும், 70 வருடங்களுக்கு மேலாக இங்கு வந்து போகின்ற பெரியவர்கள் குறிப்பிடும்போது நம் உள்ளத்தோடு உடலும் சிலிர்ப்பதை தெய்வீக அனுபவமாக உணரமுடிகிறது.

மூவராலும், அருணகிரியாலும் பாடப்பெற்ற இத்தலத்தில் கிரிமலையில் உள்ள லிங்கம் தவிர, தெய்வங்கள், தேவர்கள், சித்தர்கள் ஆகியோர் நிர்மாணித்த ஏராளமான லிங்கங்களையும் தரிசிக்கலாம்.

இங்கே நாம் காணும், கேள்விப்படும் விந்தைகள் யாவும் ஈசனின் பேரருளால் மட்டுமே நடக்கின்றது என்பதுதான் உண்மை. வெள்ளியங்கிரி, கோவை நகரின் எல்லையில் மேற்கே சுமார் 20 மைல் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் வானைத் தொடுவது போல அமைந்துள்ளது.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காலை முதலே பேருந்து வசதி இருக்கிறது. மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊர் வரைதான் பேருந்து வசதியுள்ளது. முடிந்தவரை மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது. இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 8:44 am

ஆஹா மிகவும் அருமையான தகவல்

படிக்கும் பொழுதே பரவசம் உண்டாகிறது அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக