புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அய்யாவாடியில் அதிசயம் - ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி
Page 1 of 1 •
பக்தன் பிரகலாதனுக்காக தூணிலிருந்து தோன்றிய நரசிம்மர், கொடுங்கோலன் இரண்யனை வயிற்றைக் கிழித்து, குடலை உருவி வதம் செய்தார். இரண்யனை கொன்ற பிறகும் பிரகலாதனுக்கு அவன் செய்த கொடுமைகளை நினைத்து உக்கிரம் தணியாமல் இருந்தார். பிரகலாதனும் மகாலட்சுமியும் ஒருபக்கம் அவருடைய கோபத்தைத் தணிக்க, சிவ அம்சமான சரபேஸ்வரர் அவருடைய கோபத்தை அப்படியே தான் உறிஞ்சிக் கொண்டதாக புராணம் கூறுகிறது.
அந்த சரபேஸ்வரரின் ஓர் இறக்கை அம்சம்தான் பிரத்யங்கிரா தேவி. பயங்கரமான உக்கிரம் கொண்ட அம்மன். தன் பக்தர்களைத் துன்புறுத்தும் வக்கிரங்களையும், கொடுவினைகளையும் தான் உறிஞ்சி எடுத்துக் கொண்டு பக்தர்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டுபவள். இந்த அன்னைக்கு கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஓர் அற்புத கோயில் இருக்கிறது. 11.6.09 அன்று இக்கோயிலுக்கு நடைபெற்ற கும்பாபிஷேகத்தைக் காண சூரியனே நேரடியாக இறங்கி வந்த காட்சி கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.
ஆமாம், பிரத்யங்கிராதேவி சந்நதி விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றியபின் தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது சூரியனின் ஒளிக்கதிர் விமானத்தின் மீது ஒரே நேர்கோடாக விழுந்தது. பக்கத்தில் எங்கும் சூரிய ஒளி சிதறவில்லை!பில்லி, சூனியம், தீராத நோய், மரண பயம், 64 வகையான சாபங்கள், பெற்றோர் சாபம், மிருக, பறவைகள் சாபம் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்யும் அன்னையுடன் பக்தர்களைக் காக்க சூரியனும் இறங்கிவந்த அற்புதம், பார்த்தவர்களுக்கு என்றென்றும் நினைவில் நிற்கும்.
அந்த சரபேஸ்வரரின் ஓர் இறக்கை அம்சம்தான் பிரத்யங்கிரா தேவி. பயங்கரமான உக்கிரம் கொண்ட அம்மன். தன் பக்தர்களைத் துன்புறுத்தும் வக்கிரங்களையும், கொடுவினைகளையும் தான் உறிஞ்சி எடுத்துக் கொண்டு பக்தர்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டுபவள். இந்த அன்னைக்கு கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஓர் அற்புத கோயில் இருக்கிறது. 11.6.09 அன்று இக்கோயிலுக்கு நடைபெற்ற கும்பாபிஷேகத்தைக் காண சூரியனே நேரடியாக இறங்கி வந்த காட்சி கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.
ஆமாம், பிரத்யங்கிராதேவி சந்நதி விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றியபின் தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது சூரியனின் ஒளிக்கதிர் விமானத்தின் மீது ஒரே நேர்கோடாக விழுந்தது. பக்கத்தில் எங்கும் சூரிய ஒளி சிதறவில்லை!பில்லி, சூனியம், தீராத நோய், மரண பயம், 64 வகையான சாபங்கள், பெற்றோர் சாபம், மிருக, பறவைகள் சாபம் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்யும் அன்னையுடன் பக்தர்களைக் காக்க சூரியனும் இறங்கிவந்த அற்புதம், பார்த்தவர்களுக்கு என்றென்றும் நினைவில் நிற்கும்.
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இது உண்மையா சிவா அண்ணா??? எப்ப நடந்தது??
- GuestGuest
வாவ் சூப்பர்
இறைவனின் திருவிளையாடல்
இறைவா உன் கருணையே தனிப் பெருங்கருணை
இறைவனின் திருவிளையாடல்
இறைவா உன் கருணையே தனிப் பெருங்கருணை
முகவரி: அருள்மிகு பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில், அய்யாவாடி – தஞ்சாவூர் மாவட்டம்.
எப்போதெல்லாம் அநீதிகள் நடக்கிறதோ அப்போதெல்லாம் தெய்வ அவதாரங்கள் உருவாகும். இதற்கு எடுத்துகாட்டாக பிரத்தியங்கிரா தேவி உருவானார். நல்லவர்கள் செய்யும் நல்லவற்றுக்கு துணை இருந்து, அவர்களை வெற்றியடைய செய்கிறாள். தீயவர்கள் இந்த தேவியை வணங்கினால் அவர்களுக்கு இந்த அம்மன் உதவி செய்வாரா என்றால் நிச்சயமாக இல்லை. நல்ல உள்ளத்தோடு வணங்கினால் அவர்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாதபடி நிழல் போல் தேவி துணை நின்று காப்பாள்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர்தான் பிரத்தியாங்கிர தேவி. ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றினார். தேவி தன் சக்தியால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை தன்னுள் விழுங்கி, ஸ்ரீநரசிம்மரை அமைதிப்படுத்தி, அவரின் உக்கிரத்தை ஸ்ரீபிரத்தியங்கிரா ஏற்று, இன்றுவரை உக்கிரத்தின் உச்சியில் இருக்கிறார். சிவனால் தோன்றியதால் இந்த அம்மனுக்கு “சரபேஸ்வரி” என்ற பெயரும் இருக்கிறது.
ஸ்ரீராமரை வீழ்த்த “நிகும்பலா யாகம்” செய்த இந்திரஜித்
இராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க, இராம-இராவண யுத்தம் நடந்தது. அந்த போரில் பலரை இழந்தான் இராவணன். இருந்தாலும் பின்வாங்காமல் தன் மகன் இந்திரஜித்தை போர் களம் அனுப்பி வைத்தான். ஆனாலும் ஏனோ இராவணனின் மனம் பயந்தது. தன் மகனையும் இழந்து விடுவோமோ என்று மனம் கலங்கினான். தன்னுடைய தவறுக்கு பல உயிர்களை இழந்து, இப்போது தன் மகனையே பலி அட்டைபோல் அனுப்புகிறோமே என்று அஞ்சினான் இராவணன். புலி வாலை பிடித்த கதையாகிவிட்டதே என்று நினைத்த இராவணன், போரில் தன் மகன் இந்திரஜித்தை இழந்து விடக் கூடாது. அதே சமயம் இராமனையும் வீழ்த்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தான். தன் மகன் இந்திரிஜித், “ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி பக்தன்” என்று ஞாபகம் வந்தது. அதை வைத்து ஒரு திட்டம் தீட்டினான் இராவணன்.
இந்திரிஜித்திடம் சொன்னான், “நீ ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் பக்தன். ஆகவே நீ வெற்றி பெற, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோன்றுவித்து, ஸ்ரீபிரத்தியங்கிர தேவிக்கு “நிகும்பலா யாகம்” நடத்து. இந்த யாகம் செய்த பிறகு யாராலும் உன்னை வீழ்த்த முடியாது” என்றான் இராவணன்
தன் தந்தை இராவணன் ஆலோசனைப்படி பிரம்மாண்டமான “நிகும்பலா யாகம்” யாகம் செய்தான் இந்திரஜித்.
ஸ்ரீராமரை எச்சரித்த அனுமார்
இராவணனின் திட்டத்தையும், இந்திரஜித்தின் நிகும்பலா யாகத்தையும் அறிந்தார் ஆஞ்சனேயர். உடனே இராமரிடம் விரைந்து வந்தார். “தங்களை வீழ்த்த இந்திரஜித் “நிகும்பலா யாகம்” செய்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை தனக்கு உதவி செய்ய அழைக்கிறான்” என்று அனுமார் ஸ்ரீராமரிடம் எச்சரிக்கை செய்தார். இதை கேட்ட ஸ்ரீராமசந்திரர்,
“கவலை வேண்டாம். தேவி பிரத்தியங்கிரா, எப்போதும் நல்லமுறையில் நடப்பவர்களுக்குதான் துணை இருப்பாள். நேற்றுவரையில் இந்திரஜித் நல்லமுறையில் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பக்தனாக இருந்தான். அதனால் அவனுக்கு தேவி துணை இருந்தாள். ஆனால் இன்றோ அவன் தவறான காரியத்துக்கு தேவியை துணைக்கு அழைக்கிறான். நிச்சயமாக அவன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் அருள் பெற மாட்டான்.“ என்று கூறிய ஸ்ரீராமர், ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை மனதால் வணங்கி நல்ல எண்ணத்தோடு பூஜை செய்தார்.
“ஸ்ரீஇராமர்-இந்திரஜித் ஆகிய இரண்டு பேரும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பக்தர்கள். இவர்களில் யாருக்கு ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி துணையிருந்து உதவி செய்வாள்?” என்று தேவலோகமே ஆர்வத்துடன் பார்த்து கொண்டு இருந்தது.
ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி இந்திரஜித்தின் முன் தோன்றினாள்.
“இந்திரஜித். நீ மிகச் சிறந்த என்னுடைய பக்தன். ஆனால் ஏன் உன் புத்தி இப்படி மாறியது.? தந்தையாக இருந்தாலும் இராவணனின் தீய எண்ணத்துக்கு நீ துணை போகலாமா.? நிகும்பலா யாகம் செய்தாலும் உன்னிடம் நியாயம் இல்லை. ஆகவே நான் உனக்கு துணை இருக்கமாட்டேன். இருந்தாலும் உலகம் இருக்கும்வரை உன் புகழ் இருக்கும். நீ யாகம் செய்த இந்த இடமும் உன் புகழ் பேசும்” என்று ஆசி வழங்கினாள் தேவி.
அத்துடன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி, சீதைக்காக ஸ்ரீராமருக்கு துணையிருந்து வெற்றி பெற செய்தார்.
பாண்டவர்கள்
அதே போல் மகாபாரதத்தில் பாண்டவர்களும் இந்த ஊரில் உள்ள ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை வணங்கி போருக்கு சென்று வெற்றி பெற்றார்கள்.
இந்திரஜித் யாகம் நடத்திய இடம்
இந்திரஜித் யாகம் நடத்திய இந்த இடம் “அய்யாவாடி” என்கிறது ஸ்தலபுராணம். அதனால்தான் இன்றுவரை அமாவாசைதோறும் “நிகும்பலா யாகம்” நடக்கிறது. இந்த யாகத்தில் மிளகாய் வத்தலை கூடை கூடையாக கொட்டுகிறார்கள். இருந்தாலும் எந்தவித மிளகாய் நெடியும் வராததை கண்டு பக்தர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள். இந்த யாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஸ்ரீபிரத்யங்கிராதேவியை வணங்கினால் விரோதிகளின் தொல்லையும், செய்வினை தோஷங்களும், ஜாதக தோஷங்களும் விலகும். வீண் வழக்கு இருந்தாலும் அந்த வழக்கில் நியாயம் கிடைக்கும். இந்த ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி, உக்கிர சக்தி படைத்தவர் என்பதால், சூரியனை கண்டு இருள் விலகுவது போல், தன் பக்தர்களின் கஷ்டங்கள் என்கிற இருளை விலக்கி அவர்களுக்கு சகல நலங்களை அள்ளித் தருவாள் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி.!
எப்போதெல்லாம் அநீதிகள் நடக்கிறதோ அப்போதெல்லாம் தெய்வ அவதாரங்கள் உருவாகும். இதற்கு எடுத்துகாட்டாக பிரத்தியங்கிரா தேவி உருவானார். நல்லவர்கள் செய்யும் நல்லவற்றுக்கு துணை இருந்து, அவர்களை வெற்றியடைய செய்கிறாள். தீயவர்கள் இந்த தேவியை வணங்கினால் அவர்களுக்கு இந்த அம்மன் உதவி செய்வாரா என்றால் நிச்சயமாக இல்லை. நல்ல உள்ளத்தோடு வணங்கினால் அவர்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாதபடி நிழல் போல் தேவி துணை நின்று காப்பாள்.
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர்தான் பிரத்தியாங்கிர தேவி. ஆயிரம் சிங்கமுகங்கள், இரண்டாயிரம் கைகளுடன் தோன்றினார். தேவி தன் சக்தியால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தை தன்னுள் விழுங்கி, ஸ்ரீநரசிம்மரை அமைதிப்படுத்தி, அவரின் உக்கிரத்தை ஸ்ரீபிரத்தியங்கிரா ஏற்று, இன்றுவரை உக்கிரத்தின் உச்சியில் இருக்கிறார். சிவனால் தோன்றியதால் இந்த அம்மனுக்கு “சரபேஸ்வரி” என்ற பெயரும் இருக்கிறது.
ஸ்ரீராமரை வீழ்த்த “நிகும்பலா யாகம்” செய்த இந்திரஜித்
இராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க, இராம-இராவண யுத்தம் நடந்தது. அந்த போரில் பலரை இழந்தான் இராவணன். இருந்தாலும் பின்வாங்காமல் தன் மகன் இந்திரஜித்தை போர் களம் அனுப்பி வைத்தான். ஆனாலும் ஏனோ இராவணனின் மனம் பயந்தது. தன் மகனையும் இழந்து விடுவோமோ என்று மனம் கலங்கினான். தன்னுடைய தவறுக்கு பல உயிர்களை இழந்து, இப்போது தன் மகனையே பலி அட்டைபோல் அனுப்புகிறோமே என்று அஞ்சினான் இராவணன். புலி வாலை பிடித்த கதையாகிவிட்டதே என்று நினைத்த இராவணன், போரில் தன் மகன் இந்திரஜித்தை இழந்து விடக் கூடாது. அதே சமயம் இராமனையும் வீழ்த்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்தான். தன் மகன் இந்திரிஜித், “ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி பக்தன்” என்று ஞாபகம் வந்தது. அதை வைத்து ஒரு திட்டம் தீட்டினான் இராவணன்.
இந்திரிஜித்திடம் சொன்னான், “நீ ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் பக்தன். ஆகவே நீ வெற்றி பெற, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோன்றுவித்து, ஸ்ரீபிரத்தியங்கிர தேவிக்கு “நிகும்பலா யாகம்” நடத்து. இந்த யாகம் செய்த பிறகு யாராலும் உன்னை வீழ்த்த முடியாது” என்றான் இராவணன்
தன் தந்தை இராவணன் ஆலோசனைப்படி பிரம்மாண்டமான “நிகும்பலா யாகம்” யாகம் செய்தான் இந்திரஜித்.
ஸ்ரீராமரை எச்சரித்த அனுமார்
இராவணனின் திட்டத்தையும், இந்திரஜித்தின் நிகும்பலா யாகத்தையும் அறிந்தார் ஆஞ்சனேயர். உடனே இராமரிடம் விரைந்து வந்தார். “தங்களை வீழ்த்த இந்திரஜித் “நிகும்பலா யாகம்” செய்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை தனக்கு உதவி செய்ய அழைக்கிறான்” என்று அனுமார் ஸ்ரீராமரிடம் எச்சரிக்கை செய்தார். இதை கேட்ட ஸ்ரீராமசந்திரர்,
“கவலை வேண்டாம். தேவி பிரத்தியங்கிரா, எப்போதும் நல்லமுறையில் நடப்பவர்களுக்குதான் துணை இருப்பாள். நேற்றுவரையில் இந்திரஜித் நல்லமுறையில் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பக்தனாக இருந்தான். அதனால் அவனுக்கு தேவி துணை இருந்தாள். ஆனால் இன்றோ அவன் தவறான காரியத்துக்கு தேவியை துணைக்கு அழைக்கிறான். நிச்சயமாக அவன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் அருள் பெற மாட்டான்.“ என்று கூறிய ஸ்ரீராமர், ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை மனதால் வணங்கி நல்ல எண்ணத்தோடு பூஜை செய்தார்.
“ஸ்ரீஇராமர்-இந்திரஜித் ஆகிய இரண்டு பேரும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பக்தர்கள். இவர்களில் யாருக்கு ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி துணையிருந்து உதவி செய்வாள்?” என்று தேவலோகமே ஆர்வத்துடன் பார்த்து கொண்டு இருந்தது.
ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி இந்திரஜித்தின் முன் தோன்றினாள்.
“இந்திரஜித். நீ மிகச் சிறந்த என்னுடைய பக்தன். ஆனால் ஏன் உன் புத்தி இப்படி மாறியது.? தந்தையாக இருந்தாலும் இராவணனின் தீய எண்ணத்துக்கு நீ துணை போகலாமா.? நிகும்பலா யாகம் செய்தாலும் உன்னிடம் நியாயம் இல்லை. ஆகவே நான் உனக்கு துணை இருக்கமாட்டேன். இருந்தாலும் உலகம் இருக்கும்வரை உன் புகழ் இருக்கும். நீ யாகம் செய்த இந்த இடமும் உன் புகழ் பேசும்” என்று ஆசி வழங்கினாள் தேவி.
அத்துடன் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி, சீதைக்காக ஸ்ரீராமருக்கு துணையிருந்து வெற்றி பெற செய்தார்.
பாண்டவர்கள்
அதே போல் மகாபாரதத்தில் பாண்டவர்களும் இந்த ஊரில் உள்ள ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியை வணங்கி போருக்கு சென்று வெற்றி பெற்றார்கள்.
இந்திரஜித் யாகம் நடத்திய இடம்
இந்திரஜித் யாகம் நடத்திய இந்த இடம் “அய்யாவாடி” என்கிறது ஸ்தலபுராணம். அதனால்தான் இன்றுவரை அமாவாசைதோறும் “நிகும்பலா யாகம்” நடக்கிறது. இந்த யாகத்தில் மிளகாய் வத்தலை கூடை கூடையாக கொட்டுகிறார்கள். இருந்தாலும் எந்தவித மிளகாய் நெடியும் வராததை கண்டு பக்தர்கள் ஆச்சரியம் அடைகிறார்கள். இந்த யாகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஸ்ரீபிரத்யங்கிராதேவியை வணங்கினால் விரோதிகளின் தொல்லையும், செய்வினை தோஷங்களும், ஜாதக தோஷங்களும் விலகும். வீண் வழக்கு இருந்தாலும் அந்த வழக்கில் நியாயம் கிடைக்கும். இந்த ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி, உக்கிர சக்தி படைத்தவர் என்பதால், சூரியனை கண்டு இருள் விலகுவது போல், தன் பக்தர்களின் கஷ்டங்கள் என்கிற இருளை விலக்கி அவர்களுக்கு சகல நலங்களை அள்ளித் தருவாள் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பாண்டிச்சேரி அருகில் மொரட்டாண்டி என்ற ஊரில் கூட ஒரு ப்ரிதியங்கார தேவி கோவில் இருக்கிறது. தேவி மிகவும் உக்கிரமாக இருப்பதால், நேருக்கு நேர் நிற்காமல் பக்கவாட்டில் நின்று தான் தரிசிக்கவேண்டுமாம். அந்த கோவிலில் சொன்னார்கள்.
பிரத்யங்கிரா
பஞ்சபாண்டவர்கள் காட்டில் வசித்த போது, சக்திதேவியின் சிலையைக் கண்டனர். அந்த தேவியை பூஜிக்கபூக்களைத் தேடி அலைந்தனர். பூ கிடைக்காததால், ஒரு ஆலமரத்தின் இலைகளை பூக்களாக எண்ணித் தூவி தேவியை வணங்கினர். தேவியும் அவர்களுக்கு அருள்செய்தாள்.
பக்திக்கு தேவை இன்ன பொருள் என்பது முக்கியமல்ல. நிஜமான பக்தியுடன் எந்தப் பொருளை காணிக்கையாக்கினாலும் அதை இறைவன் ஏற்பான் என்பதற்கு இது உதாரணம்.
பஞ்சபாண்டவர் வழிபாடு செய்த இந்த இடம் தற்போது "அய்யாவாடி' என்று அழைக்கப்படுகிறது.
சிவனின் அம்சமான சரபேஸ்வர மூர்த்தியின் இரண்டு இறக்கைகளில் இரண்டு சக்திகள் உள்ளனர். ஒரு சக்தி சூலினி துர்க்கை. மற்றொரு சக்தி பிரத்யங்கிரா. இவளை "அதர்வண பத்ரகாளி' என்றும் அழைப்பர். எதிரிகளை ஒடுக்கி நம்மைக் காப்பவளாக விளங்கும் இவளை அமாவாசையன்று வழிபடுவது சிறப்பு.
ராவணனின் பிள்ளையான மேகநாதனுக்கு, தேவர்களின் தலைவனான இந்திரனை வெல்லும் சக்தியை பிரத்யங்கிராதேவியே அளித்தாள்.
அய்யாவாடியில் அமாவாசை நாளில் நடைபெறும் நிகும்பலா யாகத்தில் பழங்கள், பூக்களுடன், மிளகாய் வத்தலையும் யாகத்தீயில் இடுவர். எவ்வளவு வத்தலை தீயிலிட்டாலும் நெடி தெரிவதில்லை.
பஞ்சபாண்டவர்கள் காட்டில் வசித்த போது, சக்திதேவியின் சிலையைக் கண்டனர். அந்த தேவியை பூஜிக்கபூக்களைத் தேடி அலைந்தனர். பூ கிடைக்காததால், ஒரு ஆலமரத்தின் இலைகளை பூக்களாக எண்ணித் தூவி தேவியை வணங்கினர். தேவியும் அவர்களுக்கு அருள்செய்தாள்.
பக்திக்கு தேவை இன்ன பொருள் என்பது முக்கியமல்ல. நிஜமான பக்தியுடன் எந்தப் பொருளை காணிக்கையாக்கினாலும் அதை இறைவன் ஏற்பான் என்பதற்கு இது உதாரணம்.
பஞ்சபாண்டவர் வழிபாடு செய்த இந்த இடம் தற்போது "அய்யாவாடி' என்று அழைக்கப்படுகிறது.
சிவனின் அம்சமான சரபேஸ்வர மூர்த்தியின் இரண்டு இறக்கைகளில் இரண்டு சக்திகள் உள்ளனர். ஒரு சக்தி சூலினி துர்க்கை. மற்றொரு சக்தி பிரத்யங்கிரா. இவளை "அதர்வண பத்ரகாளி' என்றும் அழைப்பர். எதிரிகளை ஒடுக்கி நம்மைக் காப்பவளாக விளங்கும் இவளை அமாவாசையன்று வழிபடுவது சிறப்பு.
ராவணனின் பிள்ளையான மேகநாதனுக்கு, தேவர்களின் தலைவனான இந்திரனை வெல்லும் சக்தியை பிரத்யங்கிராதேவியே அளித்தாள்.
அய்யாவாடியில் அமாவாசை நாளில் நடைபெறும் நிகும்பலா யாகத்தில் பழங்கள், பூக்களுடன், மிளகாய் வத்தலையும் யாகத்தீயில் இடுவர். எவ்வளவு வத்தலை தீயிலிட்டாலும் நெடி தெரிவதில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|