புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
by ayyasamy ram Today at 4:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
manikavi | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளியெனும் பழக்காடு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
First topic message reminder :
பள்ளியெனும் பழக்காடு
வெள்ளக் கோவிலில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் சுமார் பத்து கிலோ மீட்டர் பயணித்தால் அமராவதி ஆறு. அதன் பாலத்தைக் கடந்தவுடன் வலது பக்கமாக திரும்பும் சற்றே குறுகலான சாலையில் மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாகவே இருக்கிறது பட்டத்திப் பாளையம்.
பேருந்துகளே வராத அந்தக் கிராமத்தில் திரும்பிய திசைகளிலெல்லாம், பார்க்கிற இடமெல்லாம் வண்ண வண்ணமாய், அழகாய், நேர்த்தியாய் அன்றைய நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரத் தட்டிகள். நிகழ்விடம் வரைக்கும் சாலையின் இரு மருங்கும் கம்புகளை ஊன்றி குழல் விளக்குகளை எரிய விட்டிருந்தார்கள். அறுபது எழுபது இரு சக்கர வாகனங்கள் ஒழுங்கான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்தன. ஏழெட்டு கார்கள் ஓரமாய் ஒழுங்காய் நிறுத்தப்பட்டிருக்க அந்த சின்னப் பாதையில் மாட்டு வண்டிகளும் டிராக்டர்களும் எந்த வித இடயூருமின்றி பயணித்தன
கம்பீரமான பெரிய மேடை. மேடையின் முதுகு சுவராய் நிகழ்வுகளை சொல்லும் கலையழகு பொங்கிக் கசியும் வண்ண பேனர். நன்கு தண்ணீர் தெளிக்கப் பட்டு மண் வாசனை கமழும் திடலில் முன்னூருக்கு குறையாத எண்ணிக்கையில் நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. காம்பௌண்ட் வாசலில் நின்று வருபவர்களை கைகூப்பி வணங்கி குங்குமம் சந்தனம் கல்கண்டு கொடுத்து புன்னகையோடு ஒரு குழு வரவேற்றார்கள். வந்த அணைவருக்கும் சுண்டலும் தேனீரும் ஒரு குழு வழங்க இன்னொரு குழு காலி காகித தட்டுகளையும் குப்பிகளையும் சேகரித்து தொட்டிகளில் போட்டுக் கொண்டிருந்தார்கள்
ஒரு கலை இரவுக்குரிய அத்தனை தயாரிப்புகளோடும் அம்சங்களோடும் நகர்ந்து கொண்டிருந்த விழா ஒரு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்றால் வியப்பாய்தான் இருக்கும். இருபத்தி மூன்றே குழந்தைகள், அதிலும் பெரும்பகுதி முதல் தலைமுறை குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்பது வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடும்.
"நீங்க படித்த பள்ளிதானே, சார்? காலையிலிருந்து வேட்டியோடு வந்து பிள்ளைகளோடு பிள்ளைகளாய் தரையில் அமர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் கூர்மையாய் கவனித்து கொடி ஒட்டி, நிகழ்ச்சிதொடங்கும் முன் அவசர அவசரமாய் வீடு போய் குளித்து உடை மாற்றிக் கொண்டு குடும்பத்தோடு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் அவர்களை கேட்டபோது சொன்னார் "அப்படி இல்ல எட்வின், என்னை மனுஷனா செதுக்கிய பள்ளி"
ஒரு நாள் நள்ளிரவுக்கு கொஞ்சம் முந்தி செல் ஒலித்தது. ஒன்று விஷ்ணுபுரம் சரவணனாக இருக்க வேண்டும் அல்லது கார்மேகம் சாராக இருக்க வேண்டும். கணிணியிலிருந்து சன்னமாய் விலகி செல்லை எடுத்தால் சார்தான்.
"எங்க கிராமத்துல நான் படித்த துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா. ஒரு நல்ல நாடகக் கலைஞன் வேண்டும். அவர் மேடையை விட்டு இறங்கும் வரைக்கும் குழந்தைகள் கொண்டாடிக் குதூகலித்து கூத்தாட வேண்டும்."
"பிள்ளை பிடிக்கிற குழந்தைகளுக்கான கலைஞன் இருக்கான். மேடையை விட்டு அவன் இறங்கும்போது பிள்ளைகள் அவனோடே கிளம்பத் தயாராகி விடுவார்கள். ஆனால் அவனும் அவனது குழுவும் பாண்டியிலிருந்து வரணுமே சார்"
"அது ஒரு பிரச்சினையே இல்ல எட்வின். பாத்துக்கலாம்,குழந்தைங்க கல கலன்னு சந்தோசமா இருக்கனும் அவ்ளோதான். ஆமாம் யாரு?"
"பாண்டியிலிருந்து வேலு சரவணன் ."
"ஓஓஓ தெரியும் தெரியும், 'மக்கள் தொலைக் காட்சியில்' வருவாரே அவர்தானே? இந்தக் கிராமத்துக்கெல்லாம் வருவாரா?"
"வருவார்."
"அப்ப பேசிடுங்க"
அப்படியாகப் பேசிக் கூட்டி வரப்பட்ட வேலு சரவணன் உள்ளே ஒப்பனை செய்து கொண்டிருந்த போதுதான் நானும் சாரும் வேலு சரவணனை எப்போது மேடை ஏற்றுவது, மேடையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் பார்த்து நீர் முட்டவே கழிவறை எங்கிருக்கிறது என்று சாரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கி நெளிவதை புரிந்து கொண்ட சார் என்ன பிரச்சினை என்றார். தயங்கித் தயங்கி ஒரு வழியாய் சொல்லவும் "இதுக்குத்தானா இவ்வளவு தயக்கம்?" என்றவர் "நாம் இப்போது நிற்பதே கழிவறைதானே" என்றார்.
புடனியில் அரை வாங்கியது போல் இருந்தது. ஏறத்தாழ அரைமணி நேரமாக அங்குதான் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம். கழிவறை என்பதற்கான அறிகுறியயே இல்லை. அங்கு நின்று கொண்டுதான் தேநீர் குடித்திருக்கிறேன். அவ்வளவு சுத்தம். மூக்கைப் பிடிக்காமல், முகத்தை சுளிக்காமல் அதற்குப் பிறகும் அங்கு நின்றுதான் பேசிக் கொண்டிருந்தோம்.
பெரிய பெரிய பள்ளிகளில், வெளிப்படையாக பேசி விடுவதெனில் கோடீஸ்வரக் குழந்தைகள் கொட்டி அழுது படிக்கும் தனியார் சர்வதேசப் பள்ளிகளில் காணக் கிடைக்காத சுத்தம், உள்மறைந்து கிடக்கும் ஒரு சிற்றூரில், ஏழைக் குழந்தைகளே பெருமளவு படிக்கும் ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் கழிவறையில் எப்படி சாத்தியம்?
கேட்டே விட்டேன்.
நம்ம பள்ளிக் கூடம்"ங்கிற அக்கறையும் அர்ப்பணிப்பும் அதோடு கொஞ்சம் திட்டமிடலும் இருந்தா எல்லாமே சாத்தியம்தான் சார்," சொல்லிக்கொண்டே மேடையிலிருந்து கீழே இறங்க வேண்டிய குழந்தையை இறக்கி விட நகர்ந்துவிட்டார் அந்தப் பள்ளியின் உதவி ஆசிரியர் திரு. பொன்.ராஜ்
வேலு சரவணன் தயாரா எனப் பார்க்கலாம் என உள்ளே நுழைந்தால் ... இத்தனையா? எத்தனை என்று எண்ணிதான் பார்த்து விடுவோமே என்று எண்ணிப் பார்த்தால் ஒன்பது கணிணிகள் ஒவ்வொன்றும் தனித் தனியே யூ பீ எஸ் உடன் இணைக்கப்பட்டு. ஆச்சரியம் கண்களிலிருந்து முழுதாய் கழன்று போவதற்கு முன்னமே மேடையில் இன்னொன்று. ஆண்டறிக்கையை மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் வாசிக்க ஆரம்பித்து இருந்தான். ஒரு ஸ்டூலில் அவனை ஏற்றி ஃபுல் ஃபிட் ஸ்டேண்டிற்கு அவனை சமப் படுத்தி இருந்தார்கள். இந்த வேலை எவ்வளவு கடினம் என்பது பல பள்ளிகளில் "வேண்டாம் விடுங்கப்பா" என்று பாய்ந்து ஓடும் ஆசிரியர்களின் வேகத்தைப் பார்த்தாலே புரியும். எந்தப் பயமும் இன்றி பொடிசு சும்மா பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு விஷயமாய் அவன் முடிக்கும் போதும் யுவராஜின் "ஆறு"கள் கண்டு கொந்தளிக்கும் ரசிகர்களைப் போல் கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது.
"ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு அமெரிக்காவில் உள்ளது போல் மலர்களின் பெயரை சூட்டுங்கள்." தங்கள் குழந்தையின் நியாயமான கோரிக்கையை மக்கள் மிக நீண்ட கரவொலியால் ஆமோதிக்கிறார்கள். ஆபத்தான விஷயங்களில் எல்லாம் ஒன்...டூ...த்ரீ என்று எல்லா எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவை பின் பற்றும் அரசியல் வாதிகள் பிஞ்சுகளின் கோரிக்கையை அமல் படுத்த வேண்டும்.
" எங்கள் பெற்றோர்களும் பெரியோர்களும் கேஸ் அடுப்பு வாங்கித் தந்து ஈர விறகோடும் புகையோடும் அல்லல் படும் லட்சுமி அக்காவை காப்பாற்ற வேண்டுமாய்" அவன் சொன்ன போதும் அனைவரும் ஆர்ப்பரித்தனர். நாடு முழுவதும் சத்துணவு சமையல் கூடங்களில் அம்மாக்களும் , அக்காக்களும் ஈர விறகோடும் புகையோடும் படும் அல்லல்களுக்கு ஒரு விடிவு கிடைக்காதா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் நாமும் கை தட்டினோம்.
பரிசளிப்பின் போது நாங்கள் வியப்பின் எல்லை தாண்டினோம். ஒவ்வொரு குழந்தையும் ஐந்தாறு பரிசுகளாவது அள்ளிச் சென்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒன்று அல்லது இரண்டு முதல் பரிசுகளாவது வாங்கினர்.
எங்களது வியப்பை துடைக்க முன் வந்தார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.கலைச்செல்வி." கொஞ்சம் மாத்தி யோசிச்சா வழி பிறக்கும். எல்லாரும் போட்டிய வச்சுட்டு யாரு முதல் பரிசு என்று தீர்மானிப்பார்கள். நாங்க இந்தப் புள்ள முத பரிசு வாங்க என்ன போட்டி வைக்கலாம்னு யோசிச்சோம். பலன் கிடச்சுது."
" எதுக்குமே லாயக்கு இல்லாத.."
முடிக்க விடாமல் வேக வேகமாய் இடை மறித்தார்கள் " அப்படி யாரும் உலகத்துல இல்லீங்க சார். ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. உடுக்கு அடிக்கிறது அல்லது ஓணான் பிடிக்கிறது. இப்படி அவனுக்கு தோதான ஏதாவது ஒன்னு வச்சு அவன பரிசு வாங்க மேடை ஏத்திடுவோம்"
ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் தான் பார்த்த மிக நல்ல பள்ளி இது என்றும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன் வர வேண்டும் என்றும் மிக சரியான வேண்டுகோளை முன் வைத்தார்.
வந்திருந்த அணைவருக்கும் பொங்கல், பூரி, தோசை, கம்மங்கூழ், இனிப்பு என விருந்து. கூலித் தொழிலாளி முதல் பெரிய செல்வந்தர் வரை அணைவரும் ஒன்றாய் சாப்பிட்டு விட்டுதான் சென்றனர். நிதி மற்றும் அணைத்தும் எப்படி சாத்தியப் படுகிறது?
"கோயில் திருவிழாவுக்கு மாதிரியே ஊர்க்காரங்க பூராம் ரெண்டு வாரத்துக்கு நேரங் கிடைக்கறப்ப எல்லாம் இங்கேயே தானே கிடந்து உழலுவோம்" பரிமளம் கூற்றில் கிடைத்தது வெற்றியின் ரகசியம்.
எத்தனையோ பள்ளிகளுக்கு தான் சென்றிருப்பதாகவும் இது போன்ற ஒரு பள்ளியை இப்போதுதான் முதன்முறையாக பார்ப்பதாகவும் , தன் வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத பள்ளியென்றும் வேலு சரவணன் சொன்னார்.
நன்றியுரை சொல்ல வந்த குழந்தை சொன்னாள்
"ஊரோரம் கிளிக்காடு
ஒவ்வொன்றும் பஞ்சவர்ணம்
பஞ்ச வர்ண கிளி உறங்க
பழத்தாலே கூடு செஞ்சோம்"
தங்கள் குழந்தைகளுக்காக அரசாங்கம் கட்டிக் கொடுத்த பள்ளிக் கூடத்தை பழக் கூடாக மாற்றி , நாடு முழுமையும் சுமை தூக்கிகளாகவே பிள்ளைகள் இருக்கையில் தங்கள் பிள்ளைகளுக்கு சிறகு கட்டி பறக்க வைத்து அழகு பார்க்கிறார்கள் ஊர்க் காரர்களும் ஆசிரியர்களும்.
நானும், வேலு சரவணனும், விஷ்ணுபுரம் சரவணனும் அழ்தப் பள்ளியை பற்றியே அசை போட்டுக் கொண்டு வந்தோம்.
கல்வியும் மருத்துவமும் பொதுப்பட வேண்டும். தமிழ் நாட்டில் தோராயமாக 34500 ஊ.ஒ.துவக்கப் பள்ளிகளும், 10000 ஊ.ஒ.நடுநிலைப் பள்ளிகளும், 4500 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. எழுபது சதம் மாணவர்கள் இவற்றிலும் . பத்து சதம் மாணவர்கள் அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளிலும் படிக்கிறார்கள். இந்த பள்ளிகள் எல்லாம் பட்டத்திப் பாளையம் பள்ளியைப் போல் பழக்காடுகளாக மாறிவிட்டால் பொதுக் கல்வி தானாய் வெற்றி பெரும்.
என்ன செய்யலாம்?
பள்ளியெனும் பழக்காடு
வெள்ளக் கோவிலில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் சுமார் பத்து கிலோ மீட்டர் பயணித்தால் அமராவதி ஆறு. அதன் பாலத்தைக் கடந்தவுடன் வலது பக்கமாக திரும்பும் சற்றே குறுகலான சாலையில் மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாகவே இருக்கிறது பட்டத்திப் பாளையம்.
பேருந்துகளே வராத அந்தக் கிராமத்தில் திரும்பிய திசைகளிலெல்லாம், பார்க்கிற இடமெல்லாம் வண்ண வண்ணமாய், அழகாய், நேர்த்தியாய் அன்றைய நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரத் தட்டிகள். நிகழ்விடம் வரைக்கும் சாலையின் இரு மருங்கும் கம்புகளை ஊன்றி குழல் விளக்குகளை எரிய விட்டிருந்தார்கள். அறுபது எழுபது இரு சக்கர வாகனங்கள் ஒழுங்கான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்தன. ஏழெட்டு கார்கள் ஓரமாய் ஒழுங்காய் நிறுத்தப்பட்டிருக்க அந்த சின்னப் பாதையில் மாட்டு வண்டிகளும் டிராக்டர்களும் எந்த வித இடயூருமின்றி பயணித்தன
கம்பீரமான பெரிய மேடை. மேடையின் முதுகு சுவராய் நிகழ்வுகளை சொல்லும் கலையழகு பொங்கிக் கசியும் வண்ண பேனர். நன்கு தண்ணீர் தெளிக்கப் பட்டு மண் வாசனை கமழும் திடலில் முன்னூருக்கு குறையாத எண்ணிக்கையில் நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. காம்பௌண்ட் வாசலில் நின்று வருபவர்களை கைகூப்பி வணங்கி குங்குமம் சந்தனம் கல்கண்டு கொடுத்து புன்னகையோடு ஒரு குழு வரவேற்றார்கள். வந்த அணைவருக்கும் சுண்டலும் தேனீரும் ஒரு குழு வழங்க இன்னொரு குழு காலி காகித தட்டுகளையும் குப்பிகளையும் சேகரித்து தொட்டிகளில் போட்டுக் கொண்டிருந்தார்கள்
ஒரு கலை இரவுக்குரிய அத்தனை தயாரிப்புகளோடும் அம்சங்களோடும் நகர்ந்து கொண்டிருந்த விழா ஒரு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்றால் வியப்பாய்தான் இருக்கும். இருபத்தி மூன்றே குழந்தைகள், அதிலும் பெரும்பகுதி முதல் தலைமுறை குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்பது வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடும்.
"நீங்க படித்த பள்ளிதானே, சார்? காலையிலிருந்து வேட்டியோடு வந்து பிள்ளைகளோடு பிள்ளைகளாய் தரையில் அமர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் கூர்மையாய் கவனித்து கொடி ஒட்டி, நிகழ்ச்சிதொடங்கும் முன் அவசர அவசரமாய் வீடு போய் குளித்து உடை மாற்றிக் கொண்டு குடும்பத்தோடு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் அவர்களை கேட்டபோது சொன்னார் "அப்படி இல்ல எட்வின், என்னை மனுஷனா செதுக்கிய பள்ளி"
ஒரு நாள் நள்ளிரவுக்கு கொஞ்சம் முந்தி செல் ஒலித்தது. ஒன்று விஷ்ணுபுரம் சரவணனாக இருக்க வேண்டும் அல்லது கார்மேகம் சாராக இருக்க வேண்டும். கணிணியிலிருந்து சன்னமாய் விலகி செல்லை எடுத்தால் சார்தான்.
"எங்க கிராமத்துல நான் படித்த துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா. ஒரு நல்ல நாடகக் கலைஞன் வேண்டும். அவர் மேடையை விட்டு இறங்கும் வரைக்கும் குழந்தைகள் கொண்டாடிக் குதூகலித்து கூத்தாட வேண்டும்."
"பிள்ளை பிடிக்கிற குழந்தைகளுக்கான கலைஞன் இருக்கான். மேடையை விட்டு அவன் இறங்கும்போது பிள்ளைகள் அவனோடே கிளம்பத் தயாராகி விடுவார்கள். ஆனால் அவனும் அவனது குழுவும் பாண்டியிலிருந்து வரணுமே சார்"
"அது ஒரு பிரச்சினையே இல்ல எட்வின். பாத்துக்கலாம்,குழந்தைங்க கல கலன்னு சந்தோசமா இருக்கனும் அவ்ளோதான். ஆமாம் யாரு?"
"பாண்டியிலிருந்து வேலு சரவணன் ."
"ஓஓஓ தெரியும் தெரியும், 'மக்கள் தொலைக் காட்சியில்' வருவாரே அவர்தானே? இந்தக் கிராமத்துக்கெல்லாம் வருவாரா?"
"வருவார்."
"அப்ப பேசிடுங்க"
அப்படியாகப் பேசிக் கூட்டி வரப்பட்ட வேலு சரவணன் உள்ளே ஒப்பனை செய்து கொண்டிருந்த போதுதான் நானும் சாரும் வேலு சரவணனை எப்போது மேடை ஏற்றுவது, மேடையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் பார்த்து நீர் முட்டவே கழிவறை எங்கிருக்கிறது என்று சாரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கி நெளிவதை புரிந்து கொண்ட சார் என்ன பிரச்சினை என்றார். தயங்கித் தயங்கி ஒரு வழியாய் சொல்லவும் "இதுக்குத்தானா இவ்வளவு தயக்கம்?" என்றவர் "நாம் இப்போது நிற்பதே கழிவறைதானே" என்றார்.
புடனியில் அரை வாங்கியது போல் இருந்தது. ஏறத்தாழ அரைமணி நேரமாக அங்குதான் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம். கழிவறை என்பதற்கான அறிகுறியயே இல்லை. அங்கு நின்று கொண்டுதான் தேநீர் குடித்திருக்கிறேன். அவ்வளவு சுத்தம். மூக்கைப் பிடிக்காமல், முகத்தை சுளிக்காமல் அதற்குப் பிறகும் அங்கு நின்றுதான் பேசிக் கொண்டிருந்தோம்.
பெரிய பெரிய பள்ளிகளில், வெளிப்படையாக பேசி விடுவதெனில் கோடீஸ்வரக் குழந்தைகள் கொட்டி அழுது படிக்கும் தனியார் சர்வதேசப் பள்ளிகளில் காணக் கிடைக்காத சுத்தம், உள்மறைந்து கிடக்கும் ஒரு சிற்றூரில், ஏழைக் குழந்தைகளே பெருமளவு படிக்கும் ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் கழிவறையில் எப்படி சாத்தியம்?
கேட்டே விட்டேன்.
நம்ம பள்ளிக் கூடம்"ங்கிற அக்கறையும் அர்ப்பணிப்பும் அதோடு கொஞ்சம் திட்டமிடலும் இருந்தா எல்லாமே சாத்தியம்தான் சார்," சொல்லிக்கொண்டே மேடையிலிருந்து கீழே இறங்க வேண்டிய குழந்தையை இறக்கி விட நகர்ந்துவிட்டார் அந்தப் பள்ளியின் உதவி ஆசிரியர் திரு. பொன்.ராஜ்
வேலு சரவணன் தயாரா எனப் பார்க்கலாம் என உள்ளே நுழைந்தால் ... இத்தனையா? எத்தனை என்று எண்ணிதான் பார்த்து விடுவோமே என்று எண்ணிப் பார்த்தால் ஒன்பது கணிணிகள் ஒவ்வொன்றும் தனித் தனியே யூ பீ எஸ் உடன் இணைக்கப்பட்டு. ஆச்சரியம் கண்களிலிருந்து முழுதாய் கழன்று போவதற்கு முன்னமே மேடையில் இன்னொன்று. ஆண்டறிக்கையை மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் வாசிக்க ஆரம்பித்து இருந்தான். ஒரு ஸ்டூலில் அவனை ஏற்றி ஃபுல் ஃபிட் ஸ்டேண்டிற்கு அவனை சமப் படுத்தி இருந்தார்கள். இந்த வேலை எவ்வளவு கடினம் என்பது பல பள்ளிகளில் "வேண்டாம் விடுங்கப்பா" என்று பாய்ந்து ஓடும் ஆசிரியர்களின் வேகத்தைப் பார்த்தாலே புரியும். எந்தப் பயமும் இன்றி பொடிசு சும்மா பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு விஷயமாய் அவன் முடிக்கும் போதும் யுவராஜின் "ஆறு"கள் கண்டு கொந்தளிக்கும் ரசிகர்களைப் போல் கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது.
"ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு அமெரிக்காவில் உள்ளது போல் மலர்களின் பெயரை சூட்டுங்கள்." தங்கள் குழந்தையின் நியாயமான கோரிக்கையை மக்கள் மிக நீண்ட கரவொலியால் ஆமோதிக்கிறார்கள். ஆபத்தான விஷயங்களில் எல்லாம் ஒன்...டூ...த்ரீ என்று எல்லா எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவை பின் பற்றும் அரசியல் வாதிகள் பிஞ்சுகளின் கோரிக்கையை அமல் படுத்த வேண்டும்.
" எங்கள் பெற்றோர்களும் பெரியோர்களும் கேஸ் அடுப்பு வாங்கித் தந்து ஈர விறகோடும் புகையோடும் அல்லல் படும் லட்சுமி அக்காவை காப்பாற்ற வேண்டுமாய்" அவன் சொன்ன போதும் அனைவரும் ஆர்ப்பரித்தனர். நாடு முழுவதும் சத்துணவு சமையல் கூடங்களில் அம்மாக்களும் , அக்காக்களும் ஈர விறகோடும் புகையோடும் படும் அல்லல்களுக்கு ஒரு விடிவு கிடைக்காதா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் நாமும் கை தட்டினோம்.
பரிசளிப்பின் போது நாங்கள் வியப்பின் எல்லை தாண்டினோம். ஒவ்வொரு குழந்தையும் ஐந்தாறு பரிசுகளாவது அள்ளிச் சென்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒன்று அல்லது இரண்டு முதல் பரிசுகளாவது வாங்கினர்.
எங்களது வியப்பை துடைக்க முன் வந்தார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.கலைச்செல்வி." கொஞ்சம் மாத்தி யோசிச்சா வழி பிறக்கும். எல்லாரும் போட்டிய வச்சுட்டு யாரு முதல் பரிசு என்று தீர்மானிப்பார்கள். நாங்க இந்தப் புள்ள முத பரிசு வாங்க என்ன போட்டி வைக்கலாம்னு யோசிச்சோம். பலன் கிடச்சுது."
" எதுக்குமே லாயக்கு இல்லாத.."
முடிக்க விடாமல் வேக வேகமாய் இடை மறித்தார்கள் " அப்படி யாரும் உலகத்துல இல்லீங்க சார். ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. உடுக்கு அடிக்கிறது அல்லது ஓணான் பிடிக்கிறது. இப்படி அவனுக்கு தோதான ஏதாவது ஒன்னு வச்சு அவன பரிசு வாங்க மேடை ஏத்திடுவோம்"
ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் தான் பார்த்த மிக நல்ல பள்ளி இது என்றும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன் வர வேண்டும் என்றும் மிக சரியான வேண்டுகோளை முன் வைத்தார்.
வந்திருந்த அணைவருக்கும் பொங்கல், பூரி, தோசை, கம்மங்கூழ், இனிப்பு என விருந்து. கூலித் தொழிலாளி முதல் பெரிய செல்வந்தர் வரை அணைவரும் ஒன்றாய் சாப்பிட்டு விட்டுதான் சென்றனர். நிதி மற்றும் அணைத்தும் எப்படி சாத்தியப் படுகிறது?
"கோயில் திருவிழாவுக்கு மாதிரியே ஊர்க்காரங்க பூராம் ரெண்டு வாரத்துக்கு நேரங் கிடைக்கறப்ப எல்லாம் இங்கேயே தானே கிடந்து உழலுவோம்" பரிமளம் கூற்றில் கிடைத்தது வெற்றியின் ரகசியம்.
எத்தனையோ பள்ளிகளுக்கு தான் சென்றிருப்பதாகவும் இது போன்ற ஒரு பள்ளியை இப்போதுதான் முதன்முறையாக பார்ப்பதாகவும் , தன் வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத பள்ளியென்றும் வேலு சரவணன் சொன்னார்.
நன்றியுரை சொல்ல வந்த குழந்தை சொன்னாள்
"ஊரோரம் கிளிக்காடு
ஒவ்வொன்றும் பஞ்சவர்ணம்
பஞ்ச வர்ண கிளி உறங்க
பழத்தாலே கூடு செஞ்சோம்"
தங்கள் குழந்தைகளுக்காக அரசாங்கம் கட்டிக் கொடுத்த பள்ளிக் கூடத்தை பழக் கூடாக மாற்றி , நாடு முழுமையும் சுமை தூக்கிகளாகவே பிள்ளைகள் இருக்கையில் தங்கள் பிள்ளைகளுக்கு சிறகு கட்டி பறக்க வைத்து அழகு பார்க்கிறார்கள் ஊர்க் காரர்களும் ஆசிரியர்களும்.
நானும், வேலு சரவணனும், விஷ்ணுபுரம் சரவணனும் அழ்தப் பள்ளியை பற்றியே அசை போட்டுக் கொண்டு வந்தோம்.
கல்வியும் மருத்துவமும் பொதுப்பட வேண்டும். தமிழ் நாட்டில் தோராயமாக 34500 ஊ.ஒ.துவக்கப் பள்ளிகளும், 10000 ஊ.ஒ.நடுநிலைப் பள்ளிகளும், 4500 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. எழுபது சதம் மாணவர்கள் இவற்றிலும் . பத்து சதம் மாணவர்கள் அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளிலும் படிக்கிறார்கள். இந்த பள்ளிகள் எல்லாம் பட்டத்திப் பாளையம் பள்ளியைப் போல் பழக்காடுகளாக மாறிவிட்டால் பொதுக் கல்வி தானாய் வெற்றி பெரும்.
என்ன செய்யலாம்?
- நூருல்லாபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 23/07/2010
இந்த மாதிரி கூட ஒரு பள்ளியா. உண்மை எனில் பஸ் ரூட் வேண்டும்
உண்மையிலே உங்கள் படைப்புகள் அனைத்தும் மிகவும் அழகிய விரும்பத்தக்க தகவல்களை தாங்கிவருகின்றது மிக்க நன்றிதோழரே.
மிக அற்புதமான ஒரு பள்ளியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
மிக அற்புதமான ஒரு பள்ளியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
நூருல்லா wrote:இந்த மாதிரி கூட ஒரு பள்ளியா. உண்மை எனில் பஸ் ரூட் வேண்டும்
கரூர் அருகில் வெள்ளக் கோவில். அங்கிருந்து மூலனூர் போகும் வழியில் அமராவதி ஆற்றங்கரையின் மேல் புறம் போனால் பட்டத்திப் பாளையம்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
சபீர் wrote:உண்மையிலே உங்கள் படைப்புகள் அனைத்தும் மிகவும் அழகிய விரும்பத்தக்க தகவல்களை தாங்கிவருகின்றது மிக்க நன்றிதோழரே.
மிக அற்புதமான ஒரு பள்ளியை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
அன்பின் தோழர்,
வணக்கம். உங்கள் கருத்து உண்மையிலேயே மகிழ்ச்சியை தந்தது. உங்களது அன்பிற்கும் பெருந்தன்மைக்கும் மிக்க நன்றி.
- சோமாபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 30/07/2010
இப்படி ஒரு பள்ளியா? அதுவும் தமிழ் நாட்டிலா?
- தீபாபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 25/07/2010
அற்புதமான பள்ளி
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
கலை wrote:ஒரு...ஆசிரியனாக...என்னை...மெய்சிலிர்க்கச்செய்தது...பாராட்டுக்களும்
நன்றிகளும்...எட்...!
நன்றி தோழர்
- வேதமுத்துபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 24/07/2010
இரா.எட்வின் wrote:பள்ளியெனும் பழக்காடு
வெள்ளக் கோவிலில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் சுமார் பத்து கிலோ மீட்டர் பயணித்தால் அமராவதி ஆறு. அதன் பாலத்தைக் கடந்தவுடன் வலது பக்கமாக திரும்பும் சற்றே குறுகலான சாலையில் மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாகவே இருக்கிறது பட்டத்திப் பாளையம்.
பேருந்துகளே வராத அந்தக் கிராமத்தில் திரும்பிய திசைகளிலெல்லாம், பார்க்கிற இடமெல்லாம் வண்ண வண்ணமாய், அழகாய், நேர்த்தியாய் அன்றைய நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரத் தட்டிகள். நிகழ்விடம் வரைக்கும் சாலையின் இரு மருங்கும் கம்புகளை ஊன்றி குழல் விளக்குகளை எரிய விட்டிருந்தார்கள். அறுபது எழுபது இரு சக்கர வாகனங்கள் ஒழுங்கான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்தன. ஏழெட்டு கார்கள் ஓரமாய் ஒழுங்காய் நிறுத்தப்பட்டிருக்க அந்த சின்னப் பாதையில் மாட்டு வண்டிகளும் டிராக்டர்களும் எந்த வித இடயூருமின்றி பயணித்தன
கம்பீரமான பெரிய மேடை. மேடையின் முதுகு சுவராய் நிகழ்வுகளை சொல்லும் கலையழகு பொங்கிக் கசியும் வண்ண பேனர். நன்கு தண்ணீர் தெளிக்கப் பட்டு மண் வாசனை கமழும் திடலில் முன்னூருக்கு குறையாத எண்ணிக்கையில் நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. காம்பௌண்ட் வாசலில் நின்று வருபவர்களை கைகூப்பி வணங்கி குங்குமம் சந்தனம் கல்கண்டு கொடுத்து புன்னகையோடு ஒரு குழு வரவேற்றார்கள். வந்த அணைவருக்கும் சுண்டலும் தேனீரும் ஒரு குழு வழங்க இன்னொரு குழு காலி காகித தட்டுகளையும் குப்பிகளையும் சேகரித்து தொட்டிகளில் போட்டுக் கொண்டிருந்தார்கள்
ஒரு கலை இரவுக்குரிய அத்தனை தயாரிப்புகளோடும் அம்சங்களோடும் நகர்ந்து கொண்டிருந்த விழா ஒரு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்றால் வியப்பாய்தான் இருக்கும். இருபத்தி மூன்றே குழந்தைகள், அதிலும் பெரும்பகுதி முதல் தலைமுறை குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்பது வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடும்.
"நீங்க படித்த பள்ளிதானே, சார்? காலையிலிருந்து வேட்டியோடு வந்து பிள்ளைகளோடு பிள்ளைகளாய் தரையில் அமர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் கூர்மையாய் கவனித்து கொடி ஒட்டி, நிகழ்ச்சிதொடங்கும் முன் அவசர அவசரமாய் வீடு போய் குளித்து உடை மாற்றிக் கொண்டு குடும்பத்தோடு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் அவர்களை கேட்டபோது சொன்னார் "அப்படி இல்ல எட்வின், என்னை மனுஷனா செதுக்கிய பள்ளி"
ஒரு நாள் நள்ளிரவுக்கு கொஞ்சம் முந்தி செல் ஒலித்தது. ஒன்று விஷ்ணுபுரம் சரவணனாக இருக்க வேண்டும் அல்லது கார்மேகம் சாராக இருக்க வேண்டும். கணிணியிலிருந்து சன்னமாய் விலகி செல்லை எடுத்தால் சார்தான்.
"எங்க கிராமத்துல நான் படித்த துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா. ஒரு நல்ல நாடகக் கலைஞன் வேண்டும். அவர் மேடையை விட்டு இறங்கும் வரைக்கும் குழந்தைகள் கொண்டாடிக் குதூகலித்து கூத்தாட வேண்டும்."
"பிள்ளை பிடிக்கிற குழந்தைகளுக்கான கலைஞன் இருக்கான். மேடையை விட்டு அவன் இறங்கும்போது பிள்ளைகள் அவனோடே கிளம்பத் தயாராகி விடுவார்கள். ஆனால் அவனும் அவனது குழுவும் பாண்டியிலிருந்து வரணுமே சார்"
"அது ஒரு பிரச்சினையே இல்ல எட்வின். பாத்துக்கலாம்,குழந்தைங்க கல கலன்னு சந்தோசமா இருக்கனும் அவ்ளோதான். ஆமாம் யாரு?"
"பாண்டியிலிருந்து வேலு சரவணன் ."
"ஓஓஓ தெரியும் தெரியும், 'மக்கள் தொலைக் காட்சியில்' வருவாரே அவர்தானே? இந்தக் கிராமத்துக்கெல்லாம் வருவாரா?"
"வருவார்."
"அப்ப பேசிடுங்க"
அப்படியாகப் பேசிக் கூட்டி வரப்பட்ட வேலு சரவணன் உள்ளே ஒப்பனை செய்து கொண்டிருந்த போதுதான் நானும் சாரும் வேலு சரவணனை எப்போது மேடை ஏற்றுவது, மேடையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் பார்த்து நீர் முட்டவே கழிவறை எங்கிருக்கிறது என்று சாரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கி நெளிவதை புரிந்து கொண்ட சார் என்ன பிரச்சினை என்றார். தயங்கித் தயங்கி ஒரு வழியாய் சொல்லவும் "இதுக்குத்தானா இவ்வளவு தயக்கம்?" என்றவர் "நாம் இப்போது நிற்பதே கழிவறைதானே" என்றார்.
புடனியில் அரை வாங்கியது போல் இருந்தது. ஏறத்தாழ அரைமணி நேரமாக அங்குதான் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம். கழிவறை என்பதற்கான அறிகுறியயே இல்லை. அங்கு நின்று கொண்டுதான் தேநீர் குடித்திருக்கிறேன். அவ்வளவு சுத்தம். மூக்கைப் பிடிக்காமல், முகத்தை சுளிக்காமல் அதற்குப் பிறகும் அங்கு நின்றுதான் பேசிக் கொண்டிருந்தோம்.
பெரிய பெரிய பள்ளிகளில், வெளிப்படையாக பேசி விடுவதெனில் கோடீஸ்வரக் குழந்தைகள் கொட்டி அழுது படிக்கும் தனியார் சர்வதேசப் பள்ளிகளில் காணக் கிடைக்காத சுத்தம், உள்மறைந்து கிடக்கும் ஒரு சிற்றூரில், ஏழைக் குழந்தைகளே பெருமளவு படிக்கும் ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் கழிவறையில் எப்படி சாத்தியம்?
கேட்டே விட்டேன்.
நம்ம பள்ளிக் கூடம்"ங்கிற அக்கறையும் அர்ப்பணிப்பும் அதோடு கொஞ்சம் திட்டமிடலும் இருந்தா எல்லாமே சாத்தியம்தான் சார்," சொல்லிக்கொண்டே மேடையிலிருந்து கீழே இறங்க வேண்டிய குழந்தையை இறக்கி விட நகர்ந்துவிட்டார் அந்தப் பள்ளியின் உதவி ஆசிரியர் திரு. பொன்.ராஜ்
வேலு சரவணன் தயாரா எனப் பார்க்கலாம் என உள்ளே நுழைந்தால் ... இத்தனையா? எத்தனை என்று எண்ணிதான் பார்த்து விடுவோமே என்று எண்ணிப் பார்த்தால் ஒன்பது கணிணிகள் ஒவ்வொன்றும் தனித் தனியே யூ பீ எஸ் உடன் இணைக்கப்பட்டு. ஆச்சரியம் கண்களிலிருந்து முழுதாய் கழன்று போவதற்கு முன்னமே மேடையில் இன்னொன்று. ஆண்டறிக்கையை மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் வாசிக்க ஆரம்பித்து இருந்தான். ஒரு ஸ்டூலில் அவனை ஏற்றி ஃபுல் ஃபிட் ஸ்டேண்டிற்கு அவனை சமப் படுத்தி இருந்தார்கள். இந்த வேலை எவ்வளவு கடினம் என்பது பல பள்ளிகளில் "வேண்டாம் விடுங்கப்பா" என்று பாய்ந்து ஓடும் ஆசிரியர்களின் வேகத்தைப் பார்த்தாலே புரியும். எந்தப் பயமும் இன்றி பொடிசு சும்மா பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு விஷயமாய் அவன் முடிக்கும் போதும் யுவராஜின் "ஆறு"கள் கண்டு கொந்தளிக்கும் ரசிகர்களைப் போல் கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது.
"ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு அமெரிக்காவில் உள்ளது போல் மலர்களின் பெயரை சூட்டுங்கள்." தங்கள் குழந்தையின் நியாயமான கோரிக்கையை மக்கள் மிக நீண்ட கரவொலியால் ஆமோதிக்கிறார்கள். ஆபத்தான விஷயங்களில் எல்லாம் ஒன்...டூ...த்ரீ என்று எல்லா எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவை பின் பற்றும் அரசியல் வாதிகள் பிஞ்சுகளின் கோரிக்கையை அமல் படுத்த வேண்டும்.
" எங்கள் பெற்றோர்களும் பெரியோர்களும் கேஸ் அடுப்பு வாங்கித் தந்து ஈர விறகோடும் புகையோடும் அல்லல் படும் லட்சுமி அக்காவை காப்பாற்ற வேண்டுமாய்" அவன் சொன்ன போதும் அனைவரும் ஆர்ப்பரித்தனர். நாடு முழுவதும் சத்துணவு சமையல் கூடங்களில் அம்மாக்களும் , அக்காக்களும் ஈர விறகோடும் புகையோடும் படும் அல்லல்களுக்கு ஒரு விடிவு கிடைக்காதா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் நாமும் கை தட்டினோம்.
பரிசளிப்பின் போது நாங்கள் வியப்பின் எல்லை தாண்டினோம். ஒவ்வொரு குழந்தையும் ஐந்தாறு பரிசுகளாவது அள்ளிச் சென்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒன்று அல்லது இரண்டு முதல் பரிசுகளாவது வாங்கினர்.
எங்களது வியப்பை துடைக்க முன் வந்தார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.கலைச்செல்வி." கொஞ்சம் மாத்தி யோசிச்சா வழி பிறக்கும். எல்லாரும் போட்டிய வச்சுட்டு யாரு முதல் பரிசு என்று தீர்மானிப்பார்கள். நாங்க இந்தப் புள்ள முத பரிசு வாங்க என்ன போட்டி வைக்கலாம்னு யோசிச்சோம். பலன் கிடச்சுது."
" எதுக்குமே லாயக்கு இல்லாத.."
முடிக்க விடாமல் வேக வேகமாய் இடை மறித்தார்கள் " அப்படி யாரும் உலகத்துல இல்லீங்க சார். ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. உடுக்கு அடிக்கிறது அல்லது ஓணான் பிடிக்கிறது. இப்படி அவனுக்கு தோதான ஏதாவது ஒன்னு வச்சு அவன பரிசு வாங்க மேடை ஏத்திடுவோம்"
ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் தான் பார்த்த மிக நல்ல பள்ளி இது என்றும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன் வர வேண்டும் என்றும் மிக சரியான வேண்டுகோளை முன் வைத்தார்.
வந்திருந்த அணைவருக்கும் பொங்கல், பூரி, தோசை, கம்மங்கூழ், இனிப்பு என விருந்து. கூலித் தொழிலாளி முதல் பெரிய செல்வந்தர் வரை அணைவரும் ஒன்றாய் சாப்பிட்டு விட்டுதான் சென்றனர். நிதி மற்றும் அணைத்தும் எப்படி சாத்தியப் படுகிறது?
"கோயில் திருவிழாவுக்கு மாதிரியே ஊர்க்காரங்க பூராம் ரெண்டு வாரத்துக்கு நேரங் கிடைக்கறப்ப எல்லாம் இங்கேயே தானே கிடந்து உழலுவோம்" பரிமளம் கூற்றில் கிடைத்தது வெற்றியின் ரகசியம்.
எத்தனையோ பள்ளிகளுக்கு தான் சென்றிருப்பதாகவும் இது போன்ற ஒரு பள்ளியை இப்போதுதான் முதன்முறையாக பார்ப்பதாகவும் , தன் வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத பள்ளியென்றும் வேலு சரவணன் சொன்னார்.
நன்றியுரை சொல்ல வந்த குழந்தை சொன்னாள்
"ஊரோரம் கிளிக்காடு
ஒவ்வொன்றும் பஞ்சவர்ணம்
பஞ்ச வர்ண கிளி உறங்க
பழத்தாலே கூடு செஞ்சோம்"
தங்கள் குழந்தைகளுக்காக அரசாங்கம் கட்டிக் கொடுத்த பள்ளிக் கூடத்தை பழக் கூடாக மாற்றி , நாடு முழுமையும் சுமை தூக்கிகளாகவே பிள்ளைகள் இருக்கையில் தங்கள் பிள்ளைகளுக்கு சிறகு கட்டி பறக்க வைத்து அழகு பார்க்கிறார்கள் ஊர்க் காரர்களும் ஆசிரியர்களும்.
நானும், வேலு சரவணனும், விஷ்ணுபுரம் சரவணனும் அழ்தப் பள்ளியை பற்றியே அசை போட்டுக் கொண்டு வந்தோம்.
கல்வியும் மருத்துவமும் பொதுப்பட வேண்டும். தமிழ் நாட்டில் தோராயமாக 34500 ஊ.ஒ.துவக்கப் பள்ளிகளும், 10000 ஊ.ஒ.நடுநிலைப் பள்ளிகளும், 4500 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. எழுபது சதம் மாணவர்கள் இவற்றிலும் . பத்து சதம் மாணவர்கள் அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளிலும் படிக்கிறார்கள். இந்த பள்ளிகள் எல்லாம் பட்டத்திப் பாளையம் பள்ளியைப் போல் பழக்காடுகளாக மாறிவிட்டால் பொதுக் கல்வி தானாய் வெற்றி பெரும்.
என்ன செய்யலாம்?
பழக்காடு என்பதே எனக்கு புதிதாய்தான் படுகிறது.
என்னமோ இருக்கு உங்களிடம்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
வேதமுத்து wrote:இரா.எட்வின் wrote:பள்ளியெனும் பழக்காடு
வெள்ளக் கோவிலில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் சுமார் பத்து கிலோ மீட்டர் பயணித்தால் அமராவதி ஆறு. அதன் பாலத்தைக் கடந்தவுடன் வலது பக்கமாக திரும்பும் சற்றே குறுகலான சாலையில் மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாகவே இருக்கிறது பட்டத்திப் பாளையம்.
பேருந்துகளே வராத அந்தக் கிராமத்தில் திரும்பிய திசைகளிலெல்லாம், பார்க்கிற இடமெல்லாம் வண்ண வண்ணமாய், அழகாய், நேர்த்தியாய் அன்றைய நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரத் தட்டிகள். நிகழ்விடம் வரைக்கும் சாலையின் இரு மருங்கும் கம்புகளை ஊன்றி குழல் விளக்குகளை எரிய விட்டிருந்தார்கள். அறுபது எழுபது இரு சக்கர வாகனங்கள் ஒழுங்கான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்தன. ஏழெட்டு கார்கள் ஓரமாய் ஒழுங்காய் நிறுத்தப்பட்டிருக்க அந்த சின்னப் பாதையில் மாட்டு வண்டிகளும் டிராக்டர்களும் எந்த வித இடயூருமின்றி பயணித்தன
கம்பீரமான பெரிய மேடை. மேடையின் முதுகு சுவராய் நிகழ்வுகளை சொல்லும் கலையழகு பொங்கிக் கசியும் வண்ண பேனர். நன்கு தண்ணீர் தெளிக்கப் பட்டு மண் வாசனை கமழும் திடலில் முன்னூருக்கு குறையாத எண்ணிக்கையில் நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. காம்பௌண்ட் வாசலில் நின்று வருபவர்களை கைகூப்பி வணங்கி குங்குமம் சந்தனம் கல்கண்டு கொடுத்து புன்னகையோடு ஒரு குழு வரவேற்றார்கள். வந்த அணைவருக்கும் சுண்டலும் தேனீரும் ஒரு குழு வழங்க இன்னொரு குழு காலி காகித தட்டுகளையும் குப்பிகளையும் சேகரித்து தொட்டிகளில் போட்டுக் கொண்டிருந்தார்கள்
ஒரு கலை இரவுக்குரிய அத்தனை தயாரிப்புகளோடும் அம்சங்களோடும் நகர்ந்து கொண்டிருந்த விழா ஒரு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்றால் வியப்பாய்தான் இருக்கும். இருபத்தி மூன்றே குழந்தைகள், அதிலும் பெரும்பகுதி முதல் தலைமுறை குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்பது வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடும்.
"நீங்க படித்த பள்ளிதானே, சார்? காலையிலிருந்து வேட்டியோடு வந்து பிள்ளைகளோடு பிள்ளைகளாய் தரையில் அமர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் கூர்மையாய் கவனித்து கொடி ஒட்டி, நிகழ்ச்சிதொடங்கும் முன் அவசர அவசரமாய் வீடு போய் குளித்து உடை மாற்றிக் கொண்டு குடும்பத்தோடு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் அவர்களை கேட்டபோது சொன்னார் "அப்படி இல்ல எட்வின், என்னை மனுஷனா செதுக்கிய பள்ளி"
ஒரு நாள் நள்ளிரவுக்கு கொஞ்சம் முந்தி செல் ஒலித்தது. ஒன்று விஷ்ணுபுரம் சரவணனாக இருக்க வேண்டும் அல்லது கார்மேகம் சாராக இருக்க வேண்டும். கணிணியிலிருந்து சன்னமாய் விலகி செல்லை எடுத்தால் சார்தான்.
"எங்க கிராமத்துல நான் படித்த துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா. ஒரு நல்ல நாடகக் கலைஞன் வேண்டும். அவர் மேடையை விட்டு இறங்கும் வரைக்கும் குழந்தைகள் கொண்டாடிக் குதூகலித்து கூத்தாட வேண்டும்."
"பிள்ளை பிடிக்கிற குழந்தைகளுக்கான கலைஞன் இருக்கான். மேடையை விட்டு அவன் இறங்கும்போது பிள்ளைகள் அவனோடே கிளம்பத் தயாராகி விடுவார்கள். ஆனால் அவனும் அவனது குழுவும் பாண்டியிலிருந்து வரணுமே சார்"
"அது ஒரு பிரச்சினையே இல்ல எட்வின். பாத்துக்கலாம்,குழந்தைங்க கல கலன்னு சந்தோசமா இருக்கனும் அவ்ளோதான். ஆமாம் யாரு?"
"பாண்டியிலிருந்து வேலு சரவணன் ."
"ஓஓஓ தெரியும் தெரியும், 'மக்கள் தொலைக் காட்சியில்' வருவாரே அவர்தானே? இந்தக் கிராமத்துக்கெல்லாம் வருவாரா?"
"வருவார்."
"அப்ப பேசிடுங்க"
அப்படியாகப் பேசிக் கூட்டி வரப்பட்ட வேலு சரவணன் உள்ளே ஒப்பனை செய்து கொண்டிருந்த போதுதான் நானும் சாரும் வேலு சரவணனை எப்போது மேடை ஏற்றுவது, மேடையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் பார்த்து நீர் முட்டவே கழிவறை எங்கிருக்கிறது என்று சாரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கி நெளிவதை புரிந்து கொண்ட சார் என்ன பிரச்சினை என்றார். தயங்கித் தயங்கி ஒரு வழியாய் சொல்லவும் "இதுக்குத்தானா இவ்வளவு தயக்கம்?" என்றவர் "நாம் இப்போது நிற்பதே கழிவறைதானே" என்றார்.
புடனியில் அரை வாங்கியது போல் இருந்தது. ஏறத்தாழ அரைமணி நேரமாக அங்குதான் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம். கழிவறை என்பதற்கான அறிகுறியயே இல்லை. அங்கு நின்று கொண்டுதான் தேநீர் குடித்திருக்கிறேன். அவ்வளவு சுத்தம். மூக்கைப் பிடிக்காமல், முகத்தை சுளிக்காமல் அதற்குப் பிறகும் அங்கு நின்றுதான் பேசிக் கொண்டிருந்தோம்.
பெரிய பெரிய பள்ளிகளில், வெளிப்படையாக பேசி விடுவதெனில் கோடீஸ்வரக் குழந்தைகள் கொட்டி அழுது படிக்கும் தனியார் சர்வதேசப் பள்ளிகளில் காணக் கிடைக்காத சுத்தம், உள்மறைந்து கிடக்கும் ஒரு சிற்றூரில், ஏழைக் குழந்தைகளே பெருமளவு படிக்கும் ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் கழிவறையில் எப்படி சாத்தியம்?
கேட்டே விட்டேன்.
நம்ம பள்ளிக் கூடம்"ங்கிற அக்கறையும் அர்ப்பணிப்பும் அதோடு கொஞ்சம் திட்டமிடலும் இருந்தா எல்லாமே சாத்தியம்தான் சார்," சொல்லிக்கொண்டே மேடையிலிருந்து கீழே இறங்க வேண்டிய குழந்தையை இறக்கி விட நகர்ந்துவிட்டார் அந்தப் பள்ளியின் உதவி ஆசிரியர் திரு. பொன்.ராஜ்
வேலு சரவணன் தயாரா எனப் பார்க்கலாம் என உள்ளே நுழைந்தால் ... இத்தனையா? எத்தனை என்று எண்ணிதான் பார்த்து விடுவோமே என்று எண்ணிப் பார்த்தால் ஒன்பது கணிணிகள் ஒவ்வொன்றும் தனித் தனியே யூ பீ எஸ் உடன் இணைக்கப்பட்டு. ஆச்சரியம் கண்களிலிருந்து முழுதாய் கழன்று போவதற்கு முன்னமே மேடையில் இன்னொன்று. ஆண்டறிக்கையை மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் வாசிக்க ஆரம்பித்து இருந்தான். ஒரு ஸ்டூலில் அவனை ஏற்றி ஃபுல் ஃபிட் ஸ்டேண்டிற்கு அவனை சமப் படுத்தி இருந்தார்கள். இந்த வேலை எவ்வளவு கடினம் என்பது பல பள்ளிகளில் "வேண்டாம் விடுங்கப்பா" என்று பாய்ந்து ஓடும் ஆசிரியர்களின் வேகத்தைப் பார்த்தாலே புரியும். எந்தப் பயமும் இன்றி பொடிசு சும்மா பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு விஷயமாய் அவன் முடிக்கும் போதும் யுவராஜின் "ஆறு"கள் கண்டு கொந்தளிக்கும் ரசிகர்களைப் போல் கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது.
"ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு அமெரிக்காவில் உள்ளது போல் மலர்களின் பெயரை சூட்டுங்கள்." தங்கள் குழந்தையின் நியாயமான கோரிக்கையை மக்கள் மிக நீண்ட கரவொலியால் ஆமோதிக்கிறார்கள். ஆபத்தான விஷயங்களில் எல்லாம் ஒன்...டூ...த்ரீ என்று எல்லா எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவை பின் பற்றும் அரசியல் வாதிகள் பிஞ்சுகளின் கோரிக்கையை அமல் படுத்த வேண்டும்.
" எங்கள் பெற்றோர்களும் பெரியோர்களும் கேஸ் அடுப்பு வாங்கித் தந்து ஈர விறகோடும் புகையோடும் அல்லல் படும் லட்சுமி அக்காவை காப்பாற்ற வேண்டுமாய்" அவன் சொன்ன போதும் அனைவரும் ஆர்ப்பரித்தனர். நாடு முழுவதும் சத்துணவு சமையல் கூடங்களில் அம்மாக்களும் , அக்காக்களும் ஈர விறகோடும் புகையோடும் படும் அல்லல்களுக்கு ஒரு விடிவு கிடைக்காதா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் நாமும் கை தட்டினோம்.
பரிசளிப்பின் போது நாங்கள் வியப்பின் எல்லை தாண்டினோம். ஒவ்வொரு குழந்தையும் ஐந்தாறு பரிசுகளாவது அள்ளிச் சென்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒன்று அல்லது இரண்டு முதல் பரிசுகளாவது வாங்கினர்.
எங்களது வியப்பை துடைக்க முன் வந்தார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.கலைச்செல்வி." கொஞ்சம் மாத்தி யோசிச்சா வழி பிறக்கும். எல்லாரும் போட்டிய வச்சுட்டு யாரு முதல் பரிசு என்று தீர்மானிப்பார்கள். நாங்க இந்தப் புள்ள முத பரிசு வாங்க என்ன போட்டி வைக்கலாம்னு யோசிச்சோம். பலன் கிடச்சுது."
" எதுக்குமே லாயக்கு இல்லாத.."
முடிக்க விடாமல் வேக வேகமாய் இடை மறித்தார்கள் " அப்படி யாரும் உலகத்துல இல்லீங்க சார். ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. உடுக்கு அடிக்கிறது அல்லது ஓணான் பிடிக்கிறது. இப்படி அவனுக்கு தோதான ஏதாவது ஒன்னு வச்சு அவன பரிசு வாங்க மேடை ஏத்திடுவோம்"
ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் தான் பார்த்த மிக நல்ல பள்ளி இது என்றும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன் வர வேண்டும் என்றும் மிக சரியான வேண்டுகோளை முன் வைத்தார்.
வந்திருந்த அணைவருக்கும் பொங்கல், பூரி, தோசை, கம்மங்கூழ், இனிப்பு என விருந்து. கூலித் தொழிலாளி முதல் பெரிய செல்வந்தர் வரை அணைவரும் ஒன்றாய் சாப்பிட்டு விட்டுதான் சென்றனர். நிதி மற்றும் அணைத்தும் எப்படி சாத்தியப் படுகிறது?
"கோயில் திருவிழாவுக்கு மாதிரியே ஊர்க்காரங்க பூராம் ரெண்டு வாரத்துக்கு நேரங் கிடைக்கறப்ப எல்லாம் இங்கேயே தானே கிடந்து உழலுவோம்" பரிமளம் கூற்றில் கிடைத்தது வெற்றியின் ரகசியம்.
எத்தனையோ பள்ளிகளுக்கு தான் சென்றிருப்பதாகவும் இது போன்ற ஒரு பள்ளியை இப்போதுதான் முதன்முறையாக பார்ப்பதாகவும் , தன் வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத பள்ளியென்றும் வேலு சரவணன் சொன்னார்.
நன்றியுரை சொல்ல வந்த குழந்தை சொன்னாள்
"ஊரோரம் கிளிக்காடு
ஒவ்வொன்றும் பஞ்சவர்ணம்
பஞ்ச வர்ண கிளி உறங்க
பழத்தாலே கூடு செஞ்சோம்"
தங்கள் குழந்தைகளுக்காக அரசாங்கம் கட்டிக் கொடுத்த பள்ளிக் கூடத்தை பழக் கூடாக மாற்றி , நாடு முழுமையும் சுமை தூக்கிகளாகவே பிள்ளைகள் இருக்கையில் தங்கள் பிள்ளைகளுக்கு சிறகு கட்டி பறக்க வைத்து அழகு பார்க்கிறார்கள் ஊர்க் காரர்களும் ஆசிரியர்களும்.
நானும், வேலு சரவணனும், விஷ்ணுபுரம் சரவணனும் அழ்தப் பள்ளியை பற்றியே அசை போட்டுக் கொண்டு வந்தோம்.
கல்வியும் மருத்துவமும் பொதுப்பட வேண்டும். தமிழ் நாட்டில் தோராயமாக 34500 ஊ.ஒ.துவக்கப் பள்ளிகளும், 10000 ஊ.ஒ.நடுநிலைப் பள்ளிகளும், 4500 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. எழுபது சதம் மாணவர்கள் இவற்றிலும் . பத்து சதம் மாணவர்கள் அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளிலும் படிக்கிறார்கள். இந்த பள்ளிகள் எல்லாம் பட்டத்திப் பாளையம் பள்ளியைப் போல் பழக்காடுகளாக மாறிவிட்டால் பொதுக் கல்வி தானாய் வெற்றி பெரும்.
என்ன செய்யலாம்?
பழக்காடு என்பதே எனக்கு புதிதாய்தான் படுகிறது.
என்னமோ இருக்கு உங்களிடம்
மிக்க நன்றி வேதமுத்து
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|