புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிஸ்டர்.மொக்கை I_vote_lcapமிஸ்டர்.மொக்கை I_voting_barமிஸ்டர்.மொக்கை I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
மிஸ்டர்.மொக்கை I_vote_lcapமிஸ்டர்.மொக்கை I_voting_barமிஸ்டர்.மொக்கை I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மிஸ்டர்.மொக்கை I_vote_lcapமிஸ்டர்.மொக்கை I_voting_barமிஸ்டர்.மொக்கை I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டர்.மொக்கை


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 02, 2009 3:14 pm

மிஸ்டர்.மொக்கை தன்னுடைய காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மனதுக்குள் ஏதோ குறுகுறுப்பு. எதையோ ஒன்றை தவறவிட்டதைப்போல உணர்வு. காரை ஓரமாக நிறுத்தி, தான் ஷாப்பிங் செய்த பொருட்களை சரிபார்த்தார்

மனைவிக்கு வாங்கிய புடவை, மகளுக்கு வாங்கிய பொம்மை, தனக்கு வாங்கிய அலைபேசி, மற்றும் பணப்பை, கடன் அட்டை, இத்யாதி எல்லாம் சரியாகவே இருந்தன.
மீண்டும் காரைக் கிளப்பினார். மறுபடியும் அதே தவற விட்ட உணர்வு. ஓட்டுநர் உரிமம்..? காரை நிறுத்தி சரிபார்க்க அதுவும், மற்ற ஆவணங்களும் இருக்கவே, திருப்தியுடன் இல்லம் வந்தடைந்தார்.
மொக்கையைக் கண்ட மகள் ஆவலோடு ஓடிவந்தாள்..

” ஹையா…!!!!!!… டாடி வந்தாச்சு.. டாடி… அம்மா எங்கே..? காரில் காணோமே..?”

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Thu Jul 02, 2009 3:15 pm

சூப்பர் மச்சி நன்றி



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 3:16 pm



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 02, 2009 3:17 pm

இது மறதியினால் ஏற்பட்டதல்ல ஷெரீன்!!!
வேண்டுமென்றே தொலைத்துவிட்டு வந்துவிட்டார்!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 02, 2009 3:18 pm

வீட்டில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரிக்கவே, மொக்கையிடம் அவர் மனைவி தெளிப்பான் குப்பி (ஸ்ப்ரே கேன்) வாங்கிவரச் சொன்னாள். அவரோ தவறுதலாக, கரப்பான்பூச்சி தெளிப்பானை வாங்கிவந்துவிட, மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினாள்.. மொக்கை, உதவிக்கு வந்தார்..
” கேன்ல “கரப்பான்க‌ளுக்கானது” போட்டிருக்கறதை அந்த மூட்டைபூச்சிகளுக்கு,காட்டாம அடி..!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 02, 2009 3:19 pm

மிஸ்டர்.மொக்கையின் முதல் விமானப் பயணம்..!

மொக்கை முதன்முதல் விமானம் ஏறியது அன்றுதான்.. எதைக் கண்டாலும் பயந்து மொக்காலியாக இருந்தபோது பக்கத்து இருக்கையில் ஒரு முரட்டு நாய் வந்து அமர்ந்தது. அதை அடுத்து நாயின் உரிமையாளர் வந்து அமர்ந்தார். நாய் ஒரு விரோதப்பார்வையை மொக்கையின்மீது வீச, எப்போது நாய் குரல்வளையையோ, அல்லது வேறேதாவதையோ கொத்தோடு கவ்விவிடுமோ என்ற பயம் வேறு அவரை வாட்டியது. இருந்தாலும் தைரியத்தைத் திரட்டி, நாய்க்காரரைக் கேட்டார்..

எப்புடிங்க? நாயெல்லாம் ப்ளேனுக்கு உள்ள விட்டுருக்காங்க..?

“இது சாதாரண நாய் இல்லீங்க.. ரொம்ப புத்திசாலி.. அரசாங்க மெடல் எல்லாம் வாங்கியிருக்கு.. இப்போ பாருங்களேன்..
( நாயை நோக்கி) சாம்சன்.. தேடு..!”

நாய் இருக்கையிலிருந்து குதித்து ப்ளேனுக்குள் மோப்பம் பிடித்தவாறே சென்றது. ஒரு இளைஞன் அருகில் போய் நின்றது. பின் திரும்ப வந்து தன் இருக்கையில் ஏறி ஒரு முன்னங்காலைத் தூக்கி தன் எஜமானன் மீது வைத்தது.

மொக்கை கேட்டார்..”என்னாச்சுங்க?”
“அந்த இளைஞன் போதை மருந்து வச்சிருக்கான்.. சாம்சன் கண்டுபிடிச்சிட்டுது. ப்ளேன் இறங்கியதும் அவன் கைது செய்யப்படுவான்.”

“அட.. ஆச்சரியமா இருக்கே..!”

“இன்னும் பாருங்க.. சாம்சன்… தேடு..!”

மீண்டும் நாய் ஒரு யுவதி அருகில் நின்று திரும்பி, தன் இரண்டு முன்னங்கால்களையும் உரிமையாளர் மீது வைத்தது.

“இப்போ என்னாச்சுங்க?”
“அந்தப்பொண்ணு தங்கம் கடத்தறா..!”

“அடேடே.. ரொம்பப் புத்திசாலி நாய்தான்.. இது இருக்கும்போது எனக்கென்ன பயம்?”
நாய் மீண்டும் இறங்கி, விமானத்தின் பிற்பகுதிக்குப் போய் சற்று நேரத்தில், மனிதன் துரத்துவதுபோல அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்தது. இருக்கையின்மீது தாவி ஏறி பம்மிப் பதுங்கியது. அதன் முகத்தில் மரணக்களை..! தன் வாலால் எஜமானரைத் தட்டியது. அதன் கால்கள் உதறலெடுத்தன.

“இப்போ என்னங்க சொல்லுது..?”
“அட சும்மா இருந்து தொலை..! எந்தப் படுபாவியோ குண்டு எடுத்துட்டு வந்திருக்கான்.. அதைக் கண்டுபிடிச்சிருக்கு..!”

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 02, 2009 3:20 pm

மிஸ்டர்.மொக்கை ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். மொக்கையாருக்கும் அவரது முதலாளிக்கும் இருந்த பனிப்போர் காரணமாக, இம்முறை போனஸ் (எல்லாப் பிடித்தங்களும் போக,) 200 ரூபாய்தான் வந்தது. இதனால் வெகுண்ட மொக்கை, முதலாளி குறித்து இல்லாததும் பொல்லாததுமாக முதலாளியின் மனைவியிடம் வத்தி வைத்துவிட்டார். வத்தி புகைந்து வெடித்து பெரும் பிரச்னை ஆகிவிடவே, பயந்துபோன மொக்கை ஒரு பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கப் போனார்.

எல்லா விவரத்தையும் கவனமாகக் கேட்ட பாதிரியார் சொன்னார்..

“மகனே.. நீ பெரும் பாவமிழைத்துவிட்டாய்.. உடனே 7 எலுமிச்சம்பழங்களை ஒரு கிளாஸ் தண்ணீரில் பிழிந்து அதைக் குடி..!

அதைக் குடித்தால் என் பாவங்கள் கழுவப்பட்டுவிடுமா ஃபாதர்..?

அது எனக்குத் தெரியாது.. ஆனா ஒரு குடியக் கெடுத்துட்டு பாவமன்னிப்பு கேட்க வந்திருக்கும்போதுகூட உன் முகத்தில் தெரியுதே.. ஒரு இளிப்பும் சந்தோஷமும்…. அது முதலில் ஓடிப்போகும்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 02, 2009 3:22 pm

இந்த மொக்கை மொக்கைனு சொல்றீங்களே, யாருங்க அது?
தைரியமா சொல்லுங்க யாருன்னு!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 02, 2009 3:22 pm

மிஸ்டர் மொக்ஸ் உடம்பைக் குறைக்க உதவும் உணவு ஒன்றை வாங்கி வந்தார்.. அதில் போட்டிருக்கும் முறைப்படி வெந்தது பாதி..வேகாதது பாதியாக சமைத்து சாப்பிட்டார். அதன் கேவலமான ருசியைப் பொறுத்துக்கொண்டு சிரமப்பட்டு 1 மாதம் சாப்பிட்டு எடை பார்க்க 5 கிலோ கூடியிருந்தது. கோபமாக கடைக்காரனிடம் பாய்ந்தார்..

தினம் வந்து ஒரு பாக்கெட் வாங்கிட்டுப் போறேனே.. ஒருநாளாவது சொல்லியிருக்கியா.. இது உடம்பு உப்புற உணவுன்னு..?
இல்லையே.. இது இளைக்க வைக்கிற உணவுதானே..?

பின்ன ஏன் எனக்கு மட்டும் உப்புது..?

கடைக்காரன், மொக்ஸ் சமைக்கும் முறை, சாப்பிடும் முறை எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பாக்கெட்டின் மேல் இருந்த அறிவிப்பைச் சுட்டிக் காட்டினான்..அதில்….

” 6 பேருக்கு தேவையான உணவு..”
என்று இருந்தது..!

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 3:23 pm

சிவா wrote:இந்த மொக்கை மொக்கைனு சொல்றீங்களே, யாருங்க அது?
தைரியமா சொல்லுங்க யாருன்னு!

Mr.Bean ஆ இ௫க்கும் ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக