புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
44 Posts - 59%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
23 Posts - 31%
வேல்முருகன் காசி
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
3 Posts - 4%
viyasan
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
236 Posts - 42%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
220 Posts - 39%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
13 Posts - 2%
prajai
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்


   
   

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 7:06 pm

குலோத்துங்க சோழனுக்கும் பாண்டிய நாட்டு இளவரசிக்கும் திருமணம் முடிந்ததும் பல விதமான சீர்வரிசைகளுடன் புகழேந்திப் புலவரையும் சீதனமாக சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தான் பாண்டிய மன்னன். தன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டுரைத்த புகழேந்திப் புலவரை எவ்வித விசாரணையுமின்றி ஒட்டக்கூத்தர் சிறையிலடைத்துவிட்டார். அவர் மன்னனுக்கு குருவாக இருந்ததால் அவருக்கு நாட்டில் சகல அதிகாரங்களும் இருக்கவே, அவரது செயல் எதற்கும் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க அஞ்சினார்கள்.

புகழேந்திப் புலவர் சிறையிலிந்த பொழுது ஒரு நாள் அவர் சிறைக்கட்டடத்தின் மேல் மாடியில் நின்றுகொண்டு தெருவைப் பார்த்தவண்ணமிருக்கையில், குலோத்துங்க சோழன் ஒட்டக்கூத்தருடன் அத்தெருவழியே நகர்வலம் வந்துகொண்டிருந்தான். புகழேந்திப்புலவரைப் பார்த்ததும் மன்னன் பரவசமடைந்து ஒட்டக்கூத்தரை நோக்கி, "பார்த்தீரா, அவர்தான் புகழ்மிக்க புகழேந்திப் புலவர்" என்றுரைக்க ஒட்டக்கூத்தர், "வேங்கைப்புலி வரக்கண்டால் மான் நிற்காமல் ஓடிவிடும், வற்றி உலர்ந்த காட்டின் செடிகொடிகள் எரியும் தீயில் பொசுங்கிவிடும், சுறறா மீன் வரக்கண்டால் மற்ற சிறிய மீன்கள் அனைத்தும் அஞ்சி ஓடும், சூரியனைக் கண்டால் பனி மறைந்துவிடும்" எனும் பொருள்பட,

மானிற்குமோவந்த வாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
கானிற்குமோவவ் வெரியுந் தழல்முன் கனைகடலின்
மீனிற்குமோவவ் வெங்கட் சுரவமுன் - வீசுபனி
தானிற்குமோவக் கதிரோனுதயத்தில் தார்மன்னனே

என்ற பாடலைக் கூறினார். இதைக்கேட்ட புகழேந்திப் புலவர் அரசனை நோக்கி, "மன்னா, இபபடலை நான் ஒட்டிப்பாடவா? வெட்டிப்பாடவா?" என்று கேட்டார். புலவர்களுக்குள் சண்டை வரரக்கூடாது என்ற எண்ணத்தில், "ஒட்டியே பாடுங்கள், வெட்டிப்பாட வேண்டாம்" என்று மன்னன் கூறவே, "இப்பாடலில் முதலில் வரும் மான், உலர்ந்தத செடிகொடிகள், சிறு மீன்கள், பனி ஆகியவை ஒட்டக்கூத்தனென்றும், பின்ன் வரும் வேங்கை, தீ, சுறா, சூரியன் முதலானதெல்லாம் தானென்றும் பொருள்பட,

மானவன்நானந்த வாளரி வேங்கையும் வற்றிச்செத்த
கானவன்நானவ் வெரியுந் தழலும் கனைகடலின்
மீனவன்நானவ் வெங்கட் சுறவமும் வீசுபனி
தானவவன்நானக் கதிரோ னுதயமுந் தார்மன்னனே.


எனும் பாடலைக்கூறினார்.




ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 8:57 pm

பாலாவின் பல்சுவைத் திறன் வியக்க வைக்கிறது! மிகவும் சிறப்பாக உள்ளது அனைத்து சிலேடைகளும்! ஆனால் உங்களுடன் போட்டியிடத்தான் இங்கு விகடகவிகள் யாரும் இல்லை!



சிலேடை சிரிப்புகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 9:58 pm

சிவா wrote:பாலாவின் பல்சுவைத் திறன் வியக்க வைக்கிறது! மிகவும் சிறப்பாக உள்ளது அனைத்து சிலேடைகளும்! ஆனால் உங்களுடன் போட்டியிடத்தான் இங்கு விகடகவிகள் யாரும் இல்லை!

தல நீங்க தயாருனா சொல்லுங்க மேளதாளமே வாசிக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 10:29 pm

திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும்.

அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார்.

“அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்" என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்."

அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காமதகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன்தான். அவன் அனைவருக்கும் COMMON(காமன்)" என்றார்



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 10:32 pm

balakarthik wrote:
சிவா wrote:பாலாவின் பல்சுவைத் திறன் வியக்க வைக்கிறது! மிகவும் சிறப்பாக உள்ளது அனைத்து சிலேடைகளும்! ஆனால் உங்களுடன் போட்டியிடத்தான் இங்கு விகடகவிகள் யாரும் இல்லை!

தல நீங்க தயாருனா சொல்லுங்க மேளதாளமே வாசிக்கலாம்

அடடா, “மேளதாளமே”! இரு பக்கமும் ஒரே அர்த்தத்துடன் வருகிறதே!



சிலேடை சிரிப்புகள் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 10:35 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:பாலாவின் பல்சுவைத் திறன் வியக்க வைக்கிறது! மிகவும் சிறப்பாக உள்ளது அனைத்து சிலேடைகளும்! ஆனால் உங்களுடன் போட்டியிடத்தான் இங்கு விகடகவிகள் யாரும் இல்லை!

தல நீங்க தயாருனா சொல்லுங்க மேளதாளமே வாசிக்கலாம்

அடடா, “மேளதாளமே”! இரு பக்கமும் ஒரே அர்த்தத்துடன் வருகிறதே!

நீங்க சொன்ன விகடகவியும் அப்படிதான் வரும் அதான் இப்படி சொன்னேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Dec 02, 2010 12:13 pm

ஒரு முறை காளமேகப் புலவர் திருமலைராயன் என்ற மன்னன் ஆண்டுவந்த திருமலைராயன் பட்டணம் என்ற நாட்டுக்குச்சென்றார். அரச சபைக்கு வந்த அவரை யாரும் வரவேற்கவில்லை. இருக்க ஆசனமும் தரவில்லை. இந்த அவமானத்தைப் போக்க காளமேகம் கலைவாணியை மனதில் தியானித்து

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பனிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தில ரசரோ டென்னைச்
சரியா சனத்து வைத்த தாய்

எனும் வெண்பாவைப் பாடவும், அன்னை கலைவாணியின் அருளா அரசனது சிம்மாசனம் வளர்ந்து இடம் கொடுக்கவே, அவ்வாசனத்தில் அரசனுக்குச் சரிசமமாக அமர்ந்து அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாரானார்.

அரசன் அவரை யாரென்று விசாரிக்கவே, அவர் தான் "காளமேகம்" என்று பதிலுரைத்தார். அங்கு ஆஸ்தான கவியாக இருந்த அதிமதுரகவி என்பவர் அப்பொழுது காளமேகத்தைப் பார்த்து இகழ்க்சியுடன், "மேகமென்றால் பொழிய வேண்டுமே?" என்று கேட்க அதற்குக் காளமேகம் "பொழியத்தான் வந்தது"என்று பதிலிறுத்தார். அதற்கு "எப்படி?" என்று மீண்டும் அதிமதுரகவி வினவவே,

"உலகைச்சூழ்ந்துள்ள கடல் நீரில் உப்பு மிகுந்திருப்பதால், தொல்காப்பியர் எழுடதிய நன்னூல் சூத்திரரமெனும் இலக்கண நூலாகிய கடலில் மொண்டு, அகத்தியன் தமிழ்படைத்த பொதிகை மலைமேல் நின்று, வானளாவிய கவிதைகளை உரைக்கின்ற புலவர்களின் மனதில் இடியென இடித்தது, மின்னலென முழங்கி, கவிமழை பொழியக் காளமேகம் புறப்பட்டது" எனும் பொருள்படட,

கழியுந் திரைகட லுப்பென்று நன்னூற் கடலின் மொண்டு
வழியும் பொதிய வரையினிற் கால்வைத்து வான்கவிதை
மொழியும் புலவர் மனத்தே யிடித்து முழங்கி மின்னிப்
பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்பட்டதே

எனும் பாடலைக் கூறினார்.




ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 02, 2010 11:44 pm

சிலேடை நயம் வியந்தேன்... அதிலும் அந்த மேளதாளமே அருமை பாலா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 03, 2010 7:50 am

உண்மையில் மேளதாளமே சிலேடை சிரிப்புகள் - Page 5 806360
கொட்டி வாழ்திடவேண்டும் பாலா!

அருமையான சிலேடை..

ரமணீயன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 03, 2010 7:59 am

ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார், கதா காலஷேபம் பண்ணும் பொது முருகனின் தந்தை பெயர் என்ன என்று அங்கு வந்திருந்த சிறுவர்களை கேட்டார். "திருவிளையாடல்" சினிமா வந்த சமயம் அது. ஒரு பையன் " சிவாஜி" என்று கூற கூட்டத்தில் பலத்த சிரிப்பு. பையனின் முகத்தில் இனம் தெரியா குழப்பம். வாரியாரும் 'அழகாக மரியாதையாக ,"சிவா ஜி" என கூறுகிறான்.எனக் கூற கூட்டத்தில் பலத்த கரகோஷம்.


ரமணீயன்.

Sponsored content

PostSponsored content



Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக