புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசம் பேருந்தில் பகை ராக்கெட்டில்
Page 8 of 8 •
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
First topic message reminder :
பாசம் பேருந்தில்
பகை ராக்கெட்டில்
ஏறத்தாழ ஏழெட்டு ஆண்டுகள் கடந்திருக்கும் இது நடந்து. கிஷோர் அப்போது நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம்.
ஒரு வெய்யில் ஞாயிறு நண்பகல். நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன்.
தெருவில் குழந்தைகள் "கயிறு பஸ்" விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
முதலில் "கயிறு பஸ்" என்றால் என்ன என்று விளக்கி விடுவதுதான் உத்தமம்.
கிரிக்கெட்டும் , தொலைக் காட்ச்சியும், வீடியோ கேம்ஸும் மென்று, தின்று , ஏப்பம் விட்ட விளையாட்டுகளில் "கயிறு பஸ்" மிக முக்கியமான ஒன்று.
சணல் அல்லது நூல் கயிறின் நுனிகளை முடிச்சிட்டு ஒன்றிணைத்து விட்டால் ஒரு கயிறு வளையம் கிடைக்கும். அந்த கயிறு வளையத்திற்குள் குழந்தைகள் ஒரு நீள் வரிசையில் நுழைந்து கொண்டு ஒரே சீரான வேகத்தில் ஓடத் துவங்குவார்கள். இடுதான் "கயிறு பஸ்" விளையாட்டு.
முதலில் ஓடுபவனது வயிறையும் இறுதியாய் ஓடுபவனது முதுகையும் கயிறு இறுக்கும். கயிறு வயிறை இறுக்கினால் அவன் ஓட்டுனர், முதுகை இறுக்கினால் அவன் நடத்துனர். இரண்டும் தப்பித்து விட்டால் அவன் பயணி.
அன்றைய விளையாட்டில் பக்கத்து வீட்டுக் குழந்தை பாத்திமாதான் ஓட்டுனர், கிஷோர் நடத்துனர் . வீட்டூ நூலகத்திலிருந்து ஏதோ ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து வந்து டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தான். ஏதோ அவனால் முடிந்த இலக்கிய சேவை.
பயணிகள் ஏறியதும் பேருந்து கிளம்பியது. என்னருகில் வந்ததும் கையை நீட்டினேன். நகரப் பேருந்துகள் மாதிரி தள்ளிப் போய் நிற்காமல் சரியாய் நின்றது பேருந்து.
” சீக்கிரமா ஏறுங்க மாமா. ஏற்கனவே வண்டி லேட்ல போகுது" பக்காவாய் சர்வீஸ் போட்ட ஓட்டுனராகவே பேசினாள் பாத்திமா. கு ழந்தைகள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
”அவரு இப்படித்தான் ஆட்டத்தக் கெடுப்பாரு. நீ ஏன் பாத்தி நிறுத்தின?. விளையாடாம வெலகுப்பா. இல்லாட்டி அம்மாட்ட சொல்லிடுவேன்," எகிறினான் பையன்.
பேருந்து கிளம்புவதற்க்குள் முந்திக் கொண்டேன். " பஸ் எங்கடா போகுது?
"கராச்சிக்கு. நீயெல்லாம் வரமாட்ட. விடுப்பா , நேரமாகுது," ப்றந்த்தான்.
நெசத்துக்கும் கொஞம் மிரண்டுதான் போனேன்.
"கார்கிலுக்கா? , ஏண்டா? "
சகலத்தையும் கட்டுமீறி கசிந்தது பதட்டம்.
" காஷ்மீர் அவுங்க வீட்டுன்னு பாகிஸ்தான் காரன் சொல்றானாம். அதான் முஷாரப்போட சண்ட போடப் போறோம்” கோரஸாக கத்தினார்கள் குழந்தைகள்.
அப்படியே ஆடிப் போனேன் ஆடி. மேம்போக்காய் மேய்பவர்கள் வேண்டுமானால் இதை தேச பக்தியாய் கொண்டு கூத்தாடி மகிழலாம். சராசரிக்கும் கொஞசம் சன்னமான அளவில் விசாலப் பட்ட பார்வைக்கே இதில் உள்ள விஷத்தின் வீரியம் புலப்படும்.
"காஷ்மீர்" இந்தியாவுடையதா? அல்லது பாக்கிஸ்தானுடையதா? இல்லை வேறு யாருடையதோவா? என்று அந்தக் குழந்தைகளுள் யாருக்கும் தெரியாது. பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் பெரியவர்களில் பெரும்பான்மையோருக்கும் இது தெரியாத விஷயம்தான்.
எங்கே புரிந்து கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில்தான் அவர்களை உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே வைத்திருக்கப் படாத பாடு பாடுகிறார்கள் இரு மருங்கிலும் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள்.
எதன் விளைவு இது?
மும்பையில் குண்டு வெடித்தாலும், அல்லது மினி பஸ்ஸே இன்னும் எட்டிப் பார்க்காத குக்கிராமமான சுருமான் பட்டியில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் மழையில் இடிந்து விழுந்தாலும் அல்லது ஏதோ ஒரு முகத்தோடு இந்தியாவிற்குள் அழிவு வேலை நிகழ்ந்தாலும் அதற்கு காரணம் பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்ற பொதுப் புத்தியை ஏற்படுத்திவிட பெரும்பான்மை இந்திய ஊடகங்களும் பெரும்பான்மை அரசியல்வாதிகளும் பெரும்பாடு படுகிறார்கள் என்பதோடு அதில் அவர்கள் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இந்தியாவை நாசப் படுத்த ஒவ்வொரு முறை முயற்சி நடக்கிறபோதும் ஏற்படும் இந்தியக் கோபத்தை ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் மேல் மடை மாற்றம் செய்வதில் இவர்கள் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதுதான் அக்கறையுள்ளவர்களை கவலைப் பட வைக்கிறது.
இது ஏதோ இந்தியாவில் மட்டும்தான் என்றும் கொள்ளக் கூடாது.
இதே நேரத்தில் பாக்கிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்தும் குழந்தைகள் கயிறு பஸ்ஸில் " காஷ்மீர் ஒங்க வீட்டுன்னு சொல்றீங்களாமே? என்று மன்மோகன் அவர்களிடம் சண்டை போட டில்லி நோக்கி வந்து கொண்டிருக்கவும் கூடும்.
வெறுப்பையும் பகையையும் விதைப்பதில் அங்குள்ள ஊடகக் காரர்களும் அரசியல்வாதிகளும் நம்மவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல.
அவ்வப்போது இரு மருங்கிலும் இருந்து சில நல்லெண்ண முயற்சிகள் எடுக்கப் படுவதென்னவோ உண்மைதான். டில்லியும் கராச்சியும் பேருந்துகளால் இணைக்கப்பட்டதை வீச்சான நல்லெண்ண முயற்சியாகக் கொள்ளலாம். ஆனால் ஒருவருக்கொருவர் பாசத்தை பேருந்திலும் பகையை ராக்கெட்டிலும் அல்லவா பறிமாறிக் கொண்டோம்.
இப்போதெல்லாம் குழந்தைகள் பாட்டி வடை சுட்ட கதையின் முடிவை மாற்றி சொல்கிறார்கள். வடை காகத்திற்கா? நரிக்கா? என்று கேட்டால் நம்மைப் போல் அல்லாமல் "வடை பாட்டியோடது" என்று பளிச்சென சொல்கிறார்கள். இதை யாரேனும் காஷ்மீரோடு பொருத்திப் பார்த்தால் அதற்கு நாம் ஒன்றும் பொறுப்பல்ல.
பாட்டியின் உரிமை வடை என்பதை புரிந்து கொண்ட குழந்தைகள் வருங்காலத்தில் வடை யை காஷ்மீரின் குறியீடாக மட்டுமல்ல யார் பாட்டி என்பதையும் தெளிவாகத் தீர்மானிப்பார்கள்.
சிதைவுகளையும் , ரணங்களையும் , வலிகளையும் மட்டுமேஊடகங்களில் பார்க்கும் வாய்ப்பை பெற்ற நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கவே செய்கின்றன. அப்படிப் பட்ட நிகழ்ச்சிகள்தான் மத வெறியின் வேரினை அசைக்கும். அது மாதிறி நல்லவைகள் கிடைத்து விட்டால் அவைகளை முடிந்த அளவிற்கு கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படிப் பட்ட ஒன்றோடு முடிக்கிறேன்ன்.
வெய்யில் வந்தால் மட்டுமே உருகி ஓடும் "லைடர்" நதிக் கரையில் இருக்கிறது அந்தக் கிராமம்.அந்த ஊரின் பெயரை அநேகமாக " பகல்காம்" என்று உச்சரிக்கலாம். அங்கு ஒரு சிவன் கோவில்.சற்றேரக் குறைய தொள்ளாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜா ஜெய் சூர்யா அவர்களால் கட்டப் பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக இந்துக்களால் அதிலுங் குறிப்பாக காஷ்மீர் பண்டிட்டுகளால் நம்பப் படுகிற ஆலயம். அமர்நாத் செல்லும் பக்தர்கள் நம்பிக்கையோடு வந்து வழிபடும் ஆலயம்.
உறைந்து கிடக்கும் பனிக் கட்டிகளே போர்வை தேடும் ஒரு குளிர் காலை.அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது மிகுந்த பக்தியோடும் நம்பிக்கையோடும் பக்தர்கள் வரிசையில் நிற்கிறார்கள். சூட மணம் கமழ்கிறது. பூசாரி நீட்டும் ஆரத்தித் தட்டை தொட்டு மிகுந்த பக்த்தியோடு கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.
இன் செய்த ஜீன்ஸ் பேண்ட்டோடும் நேர்த்தியாக நறுக்கி விடப்பட்ட தாடியோடும் இருக்கிறார் பூசாரி. அவர் பெயர் "குலாம் கஸன்". ஆம் அவர் ஒரு இஸ்லாமியர்.
1989 வாக்கில் பண்டிடுகள் அந்தப் பகுதியை விட்டு புலம் பெயர்ந்தபோது அப்போதைய பூசாரி திரு. ராத கிரிஷனால் தமக்கு கையளிக்கப் பட்ட பணியினை ஈன்று வரை மிகுந்த பக்தியோடும் சிரத்தையோடும் செய்து வருகிறார்.
சொல்கிறார், " சிவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது பண்டிட்டுகளின் ஆலயம்.அவர்கள் நிச்சயம் வருவார்கள்". அவரது நம்பிக்கை பலிக்கட்டும்.
இந்துக்களின் சகிப்புத் தன்மையும் அரவணைப்பும் எழுத எழுத மாளாது. இந்தத் தேசம் முழுமையும் அவர்களது பெருந்தன்மையால் நிரம்பிக் கசிகிறது. ஆளாளுக்கு அவைகளையும் அவசியம் பதிவோம்.
இத்தகையப் பதிவுகள்தான் வருங்காலப் பிள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டும்.
பாசம் பேருந்தில்
பகை ராக்கெட்டில்
ஏறத்தாழ ஏழெட்டு ஆண்டுகள் கடந்திருக்கும் இது நடந்து. கிஷோர் அப்போது நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம்.
ஒரு வெய்யில் ஞாயிறு நண்பகல். நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன்.
தெருவில் குழந்தைகள் "கயிறு பஸ்" விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
முதலில் "கயிறு பஸ்" என்றால் என்ன என்று விளக்கி விடுவதுதான் உத்தமம்.
கிரிக்கெட்டும் , தொலைக் காட்ச்சியும், வீடியோ கேம்ஸும் மென்று, தின்று , ஏப்பம் விட்ட விளையாட்டுகளில் "கயிறு பஸ்" மிக முக்கியமான ஒன்று.
சணல் அல்லது நூல் கயிறின் நுனிகளை முடிச்சிட்டு ஒன்றிணைத்து விட்டால் ஒரு கயிறு வளையம் கிடைக்கும். அந்த கயிறு வளையத்திற்குள் குழந்தைகள் ஒரு நீள் வரிசையில் நுழைந்து கொண்டு ஒரே சீரான வேகத்தில் ஓடத் துவங்குவார்கள். இடுதான் "கயிறு பஸ்" விளையாட்டு.
முதலில் ஓடுபவனது வயிறையும் இறுதியாய் ஓடுபவனது முதுகையும் கயிறு இறுக்கும். கயிறு வயிறை இறுக்கினால் அவன் ஓட்டுனர், முதுகை இறுக்கினால் அவன் நடத்துனர். இரண்டும் தப்பித்து விட்டால் அவன் பயணி.
அன்றைய விளையாட்டில் பக்கத்து வீட்டுக் குழந்தை பாத்திமாதான் ஓட்டுனர், கிஷோர் நடத்துனர் . வீட்டூ நூலகத்திலிருந்து ஏதோ ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து வந்து டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தான். ஏதோ அவனால் முடிந்த இலக்கிய சேவை.
பயணிகள் ஏறியதும் பேருந்து கிளம்பியது. என்னருகில் வந்ததும் கையை நீட்டினேன். நகரப் பேருந்துகள் மாதிரி தள்ளிப் போய் நிற்காமல் சரியாய் நின்றது பேருந்து.
” சீக்கிரமா ஏறுங்க மாமா. ஏற்கனவே வண்டி லேட்ல போகுது" பக்காவாய் சர்வீஸ் போட்ட ஓட்டுனராகவே பேசினாள் பாத்திமா. கு ழந்தைகள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
”அவரு இப்படித்தான் ஆட்டத்தக் கெடுப்பாரு. நீ ஏன் பாத்தி நிறுத்தின?. விளையாடாம வெலகுப்பா. இல்லாட்டி அம்மாட்ட சொல்லிடுவேன்," எகிறினான் பையன்.
பேருந்து கிளம்புவதற்க்குள் முந்திக் கொண்டேன். " பஸ் எங்கடா போகுது?
"கராச்சிக்கு. நீயெல்லாம் வரமாட்ட. விடுப்பா , நேரமாகுது," ப்றந்த்தான்.
நெசத்துக்கும் கொஞம் மிரண்டுதான் போனேன்.
"கார்கிலுக்கா? , ஏண்டா? "
சகலத்தையும் கட்டுமீறி கசிந்தது பதட்டம்.
" காஷ்மீர் அவுங்க வீட்டுன்னு பாகிஸ்தான் காரன் சொல்றானாம். அதான் முஷாரப்போட சண்ட போடப் போறோம்” கோரஸாக கத்தினார்கள் குழந்தைகள்.
அப்படியே ஆடிப் போனேன் ஆடி. மேம்போக்காய் மேய்பவர்கள் வேண்டுமானால் இதை தேச பக்தியாய் கொண்டு கூத்தாடி மகிழலாம். சராசரிக்கும் கொஞசம் சன்னமான அளவில் விசாலப் பட்ட பார்வைக்கே இதில் உள்ள விஷத்தின் வீரியம் புலப்படும்.
"காஷ்மீர்" இந்தியாவுடையதா? அல்லது பாக்கிஸ்தானுடையதா? இல்லை வேறு யாருடையதோவா? என்று அந்தக் குழந்தைகளுள் யாருக்கும் தெரியாது. பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் பெரியவர்களில் பெரும்பான்மையோருக்கும் இது தெரியாத விஷயம்தான்.
எங்கே புரிந்து கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில்தான் அவர்களை உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே வைத்திருக்கப் படாத பாடு பாடுகிறார்கள் இரு மருங்கிலும் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள்.
எதன் விளைவு இது?
மும்பையில் குண்டு வெடித்தாலும், அல்லது மினி பஸ்ஸே இன்னும் எட்டிப் பார்க்காத குக்கிராமமான சுருமான் பட்டியில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் மழையில் இடிந்து விழுந்தாலும் அல்லது ஏதோ ஒரு முகத்தோடு இந்தியாவிற்குள் அழிவு வேலை நிகழ்ந்தாலும் அதற்கு காரணம் பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்ற பொதுப் புத்தியை ஏற்படுத்திவிட பெரும்பான்மை இந்திய ஊடகங்களும் பெரும்பான்மை அரசியல்வாதிகளும் பெரும்பாடு படுகிறார்கள் என்பதோடு அதில் அவர்கள் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இந்தியாவை நாசப் படுத்த ஒவ்வொரு முறை முயற்சி நடக்கிறபோதும் ஏற்படும் இந்தியக் கோபத்தை ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் மேல் மடை மாற்றம் செய்வதில் இவர்கள் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதுதான் அக்கறையுள்ளவர்களை கவலைப் பட வைக்கிறது.
இது ஏதோ இந்தியாவில் மட்டும்தான் என்றும் கொள்ளக் கூடாது.
இதே நேரத்தில் பாக்கிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்தும் குழந்தைகள் கயிறு பஸ்ஸில் " காஷ்மீர் ஒங்க வீட்டுன்னு சொல்றீங்களாமே? என்று மன்மோகன் அவர்களிடம் சண்டை போட டில்லி நோக்கி வந்து கொண்டிருக்கவும் கூடும்.
வெறுப்பையும் பகையையும் விதைப்பதில் அங்குள்ள ஊடகக் காரர்களும் அரசியல்வாதிகளும் நம்மவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல.
அவ்வப்போது இரு மருங்கிலும் இருந்து சில நல்லெண்ண முயற்சிகள் எடுக்கப் படுவதென்னவோ உண்மைதான். டில்லியும் கராச்சியும் பேருந்துகளால் இணைக்கப்பட்டதை வீச்சான நல்லெண்ண முயற்சியாகக் கொள்ளலாம். ஆனால் ஒருவருக்கொருவர் பாசத்தை பேருந்திலும் பகையை ராக்கெட்டிலும் அல்லவா பறிமாறிக் கொண்டோம்.
இப்போதெல்லாம் குழந்தைகள் பாட்டி வடை சுட்ட கதையின் முடிவை மாற்றி சொல்கிறார்கள். வடை காகத்திற்கா? நரிக்கா? என்று கேட்டால் நம்மைப் போல் அல்லாமல் "வடை பாட்டியோடது" என்று பளிச்சென சொல்கிறார்கள். இதை யாரேனும் காஷ்மீரோடு பொருத்திப் பார்த்தால் அதற்கு நாம் ஒன்றும் பொறுப்பல்ல.
பாட்டியின் உரிமை வடை என்பதை புரிந்து கொண்ட குழந்தைகள் வருங்காலத்தில் வடை யை காஷ்மீரின் குறியீடாக மட்டுமல்ல யார் பாட்டி என்பதையும் தெளிவாகத் தீர்மானிப்பார்கள்.
சிதைவுகளையும் , ரணங்களையும் , வலிகளையும் மட்டுமேஊடகங்களில் பார்க்கும் வாய்ப்பை பெற்ற நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கவே செய்கின்றன. அப்படிப் பட்ட நிகழ்ச்சிகள்தான் மத வெறியின் வேரினை அசைக்கும். அது மாதிறி நல்லவைகள் கிடைத்து விட்டால் அவைகளை முடிந்த அளவிற்கு கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படிப் பட்ட ஒன்றோடு முடிக்கிறேன்ன்.
வெய்யில் வந்தால் மட்டுமே உருகி ஓடும் "லைடர்" நதிக் கரையில் இருக்கிறது அந்தக் கிராமம்.அந்த ஊரின் பெயரை அநேகமாக " பகல்காம்" என்று உச்சரிக்கலாம். அங்கு ஒரு சிவன் கோவில்.சற்றேரக் குறைய தொள்ளாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜா ஜெய் சூர்யா அவர்களால் கட்டப் பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக இந்துக்களால் அதிலுங் குறிப்பாக காஷ்மீர் பண்டிட்டுகளால் நம்பப் படுகிற ஆலயம். அமர்நாத் செல்லும் பக்தர்கள் நம்பிக்கையோடு வந்து வழிபடும் ஆலயம்.
உறைந்து கிடக்கும் பனிக் கட்டிகளே போர்வை தேடும் ஒரு குளிர் காலை.அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது மிகுந்த பக்தியோடும் நம்பிக்கையோடும் பக்தர்கள் வரிசையில் நிற்கிறார்கள். சூட மணம் கமழ்கிறது. பூசாரி நீட்டும் ஆரத்தித் தட்டை தொட்டு மிகுந்த பக்த்தியோடு கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.
இன் செய்த ஜீன்ஸ் பேண்ட்டோடும் நேர்த்தியாக நறுக்கி விடப்பட்ட தாடியோடும் இருக்கிறார் பூசாரி. அவர் பெயர் "குலாம் கஸன்". ஆம் அவர் ஒரு இஸ்லாமியர்.
1989 வாக்கில் பண்டிடுகள் அந்தப் பகுதியை விட்டு புலம் பெயர்ந்தபோது அப்போதைய பூசாரி திரு. ராத கிரிஷனால் தமக்கு கையளிக்கப் பட்ட பணியினை ஈன்று வரை மிகுந்த பக்தியோடும் சிரத்தையோடும் செய்து வருகிறார்.
சொல்கிறார், " சிவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது பண்டிட்டுகளின் ஆலயம்.அவர்கள் நிச்சயம் வருவார்கள்". அவரது நம்பிக்கை பலிக்கட்டும்.
இந்துக்களின் சகிப்புத் தன்மையும் அரவணைப்பும் எழுத எழுத மாளாது. இந்தத் தேசம் முழுமையும் அவர்களது பெருந்தன்மையால் நிரம்பிக் கசிகிறது. ஆளாளுக்கு அவைகளையும் அவசியம் பதிவோம்.
இத்தகையப் பதிவுகள்தான் வருங்காலப் பிள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டும்.
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
கலை wrote:இரா.எட்வின் wrote:மஞ்சுபாஷிணி wrote:எட்வின் கலைக்கிட்ட பாராட்டு என்பது வசிஷ்டர் கையால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதை போன்றது....கலை எது சொன்னாலும் அது நூறு சதவீதம் சரியாவே இருக்கும்பா
அப்படியெல்லாம் நான் ஒன்றும் பிரும்ம ரிஷி இல்ல சுபா.
உழைக்கும் மக்களின், ஒடுக்கப் பட்ட ஜனத் திரளின் , சாதாரண எழுத்து ஊழியன் நான். இந்தக் கட்டுரை வெளி வந்தபோதும், பிறகு என் கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற போதும் மிரட்டப் பட்டேன். இனிய தோழர் கலை மற்றும் உங்களைப் போன்ற எழுத்துப் பிரபலங்கள் ஆகியோரின் அன்பும் அரவணைப்பும். இவைதான் என்னை முப்பது ஆண்டுகளாக எழுதவும் இயங்கவும் உந்தித் தள்ளுகின்றன. நன்றி சுபா
தன்னடக்கம் என்பதைத் தங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் நண்பரே..!
நீங்க வேற கலை,
உண்மையைத்தான் சொன்னேன். உங்களைப் போன்றவர்களின் அன்பும் அரவணைப்பும்தான் என்னை இயக்கும் சக்திகள்.
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
இரா.எட்வின் wrote:பாசம் பேருந்தில்
பகை ராக்கெட்டில்
ஏறத்தாழ ஏழெட்டு ஆண்டுகள் கடந்திருக்கும் இது நடந்து. கிஷோர் அப்போது நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம்.
ஒரு வெய்யில் ஞாயிறு நண்பகல். நண்பர் ஒருவர் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன்.
தெருவில் குழந்தைகள் "கயிறு பஸ்" விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
முதலில் "கயிறு பஸ்" என்றால் என்ன என்று விளக்கி விடுவதுதான் உத்தமம்.
கிரிக்கெட்டும் , தொலைக் காட்ச்சியும், வீடியோ கேம்ஸும் மென்று, தின்று , ஏப்பம் விட்ட விளையாட்டுகளில் "கயிறு பஸ்" மிக முக்கியமான ஒன்று.
சணல் அல்லது நூல் கயிறின் நுனிகளை முடிச்சிட்டு ஒன்றிணைத்து விட்டால் ஒரு கயிறு வளையம் கிடைக்கும். அந்த கயிறு வளையத்திற்குள் குழந்தைகள் ஒரு நீள் வரிசையில் நுழைந்து கொண்டு ஒரே சீரான வேகத்தில் ஓடத் துவங்குவார்கள். இடுதான் "கயிறு பஸ்" விளையாட்டு.
முதலில் ஓடுபவனது வயிறையும் இறுதியாய் ஓடுபவனது முதுகையும் கயிறு இறுக்கும். கயிறு வயிறை இறுக்கினால் அவன் ஓட்டுனர், முதுகை இறுக்கினால் அவன் நடத்துனர். இரண்டும் தப்பித்து விட்டால் அவன் பயணி.
அன்றைய விளையாட்டில் பக்கத்து வீட்டுக் குழந்தை பாத்திமாதான் ஓட்டுனர், கிஷோர் நடத்துனர் . வீட்டூ நூலகத்திலிருந்து ஏதோ ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து வந்து டிக்கெட் கிழித்துக் கொண்டிருந்தான். ஏதோ அவனால் முடிந்த இலக்கிய சேவை.
பயணிகள் ஏறியதும் பேருந்து கிளம்பியது. என்னருகில் வந்ததும் கையை நீட்டினேன். நகரப் பேருந்துகள் மாதிரி தள்ளிப் போய் நிற்காமல் சரியாய் நின்றது பேருந்து.
” சீக்கிரமா ஏறுங்க மாமா. ஏற்கனவே வண்டி லேட்ல போகுது" பக்காவாய் சர்வீஸ் போட்ட ஓட்டுனராகவே பேசினாள் பாத்திமா. கு ழந்தைகள் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
”அவரு இப்படித்தான் ஆட்டத்தக் கெடுப்பாரு. நீ ஏன் பாத்தி நிறுத்தின?. விளையாடாம வெலகுப்பா. இல்லாட்டி அம்மாட்ட சொல்லிடுவேன்," எகிறினான் பையன்.
பேருந்து கிளம்புவதற்க்குள் முந்திக் கொண்டேன். " பஸ் எங்கடா போகுது?
"கராச்சிக்கு. நீயெல்லாம் வரமாட்ட. விடுப்பா , நேரமாகுது," ப்றந்த்தான்.
நெசத்துக்கும் கொஞம் மிரண்டுதான் போனேன்.
"கார்கிலுக்கா? , ஏண்டா? "
சகலத்தையும் கட்டுமீறி கசிந்தது பதட்டம்.
" காஷ்மீர் அவுங்க வீட்டுன்னு பாகிஸ்தான் காரன் சொல்றானாம். அதான் முஷாரப்போட சண்ட போடப் போறோம்” கோரஸாக கத்தினார்கள் குழந்தைகள்.
அப்படியே ஆடிப் போனேன் ஆடி. மேம்போக்காய் மேய்பவர்கள் வேண்டுமானால் இதை தேச பக்தியாய் கொண்டு கூத்தாடி மகிழலாம். சராசரிக்கும் கொஞசம் சன்னமான அளவில் விசாலப் பட்ட பார்வைக்கே இதில் உள்ள விஷத்தின் வீரியம் புலப்படும்.
"காஷ்மீர்" இந்தியாவுடையதா? அல்லது பாக்கிஸ்தானுடையதா? இல்லை வேறு யாருடையதோவா? என்று அந்தக் குழந்தைகளுள் யாருக்கும் தெரியாது. பாக்கிஸ்தான் மற்றும் இந்தியப் பெரியவர்களில் பெரும்பான்மையோருக்கும் இது தெரியாத விஷயம்தான்.
எங்கே புரிந்து கொண்டுவிடுவார்களோ என்ற பயத்தில்தான் அவர்களை உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே வைத்திருக்கப் படாத பாடு பாடுகிறார்கள் இரு மருங்கிலும் உள்ள பெரும்பான்மை அரசியல்வாதிகள்.
எதன் விளைவு இது?
மும்பையில் குண்டு வெடித்தாலும், அல்லது மினி பஸ்ஸே இன்னும் எட்டிப் பார்க்காத குக்கிராமமான சுருமான் பட்டியில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடம் மழையில் இடிந்து விழுந்தாலும் அல்லது ஏதோ ஒரு முகத்தோடு இந்தியாவிற்குள் அழிவு வேலை நிகழ்ந்தாலும் அதற்கு காரணம் பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்ற பொதுப் புத்தியை ஏற்படுத்திவிட பெரும்பான்மை இந்திய ஊடகங்களும் பெரும்பான்மை அரசியல்வாதிகளும் பெரும்பாடு படுகிறார்கள் என்பதோடு அதில் அவர்கள் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இந்தியாவை நாசப் படுத்த ஒவ்வொரு முறை முயற்சி நடக்கிறபோதும் ஏற்படும் இந்தியக் கோபத்தை ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் மேல் மடை மாற்றம் செய்வதில் இவர்கள் பெருமளவு வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதுதான் அக்கறையுள்ளவர்களை கவலைப் பட வைக்கிறது.
இது ஏதோ இந்தியாவில் மட்டும்தான் என்றும் கொள்ளக் கூடாது.
இதே நேரத்தில் பாக்கிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்தும் குழந்தைகள் கயிறு பஸ்ஸில் " காஷ்மீர் ஒங்க வீட்டுன்னு சொல்றீங்களாமே? என்று மன்மோகன் அவர்களிடம் சண்டை போட டில்லி நோக்கி வந்து கொண்டிருக்கவும் கூடும்.
வெறுப்பையும் பகையையும் விதைப்பதில் அங்குள்ள ஊடகக் காரர்களும் அரசியல்வாதிகளும் நம்மவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல.
அவ்வப்போது இரு மருங்கிலும் இருந்து சில நல்லெண்ண முயற்சிகள் எடுக்கப் படுவதென்னவோ உண்மைதான். டில்லியும் கராச்சியும் பேருந்துகளால் இணைக்கப்பட்டதை வீச்சான நல்லெண்ண முயற்சியாகக் கொள்ளலாம். ஆனால் ஒருவருக்கொருவர் பாசத்தை பேருந்திலும் பகையை ராக்கெட்டிலும் அல்லவா பறிமாறிக் கொண்டோம்.
இப்போதெல்லாம் குழந்தைகள் பாட்டி வடை சுட்ட கதையின் முடிவை மாற்றி சொல்கிறார்கள். வடை காகத்திற்கா? நரிக்கா? என்று கேட்டால் நம்மைப் போல் அல்லாமல் "வடை பாட்டியோடது" என்று பளிச்சென சொல்கிறார்கள். இதை யாரேனும் காஷ்மீரோடு பொருத்திப் பார்த்தால் அதற்கு நாம் ஒன்றும் பொறுப்பல்ல.
பாட்டியின் உரிமை வடை என்பதை புரிந்து கொண்ட குழந்தைகள் வருங்காலத்தில் வடை யை காஷ்மீரின் குறியீடாக மட்டுமல்ல யார் பாட்டி என்பதையும் தெளிவாகத் தீர்மானிப்பார்கள்.
சிதைவுகளையும் , ரணங்களையும் , வலிகளையும் மட்டுமேஊடகங்களில் பார்க்கும் வாய்ப்பை பெற்ற நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய நிகழ்ச்சிகளும் இருக்கவே செய்கின்றன. அப்படிப் பட்ட நிகழ்ச்சிகள்தான் மத வெறியின் வேரினை அசைக்கும். அது மாதிறி நல்லவைகள் கிடைத்து விட்டால் அவைகளை முடிந்த அளவிற்கு கொண்டு போய் சேர்த்து விட வேண்டும். அப்படிப் பட்ட ஒன்றோடு முடிக்கிறேன்ன்.
வெய்யில் வந்தால் மட்டுமே உருகி ஓடும் "லைடர்" நதிக் கரையில் இருக்கிறது அந்தக் கிராமம்.அந்த ஊரின் பெயரை அநேகமாக " பகல்காம்" என்று உச்சரிக்கலாம். அங்கு ஒரு சிவன் கோவில்.சற்றேரக் குறைய தொள்ளாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜா ஜெய் சூர்யா அவர்களால் கட்டப் பட்டது. மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாக இந்துக்களால் அதிலுங் குறிப்பாக காஷ்மீர் பண்டிட்டுகளால் நம்பப் படுகிற ஆலயம். அமர்நாத் செல்லும் பக்தர்கள் நம்பிக்கையோடு வந்து வழிபடும் ஆலயம்.
உறைந்து கிடக்கும் பனிக் கட்டிகளே போர்வை தேடும் ஒரு குளிர் காலை.அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது மிகுந்த பக்தியோடும் நம்பிக்கையோடும் பக்தர்கள் வரிசையில் நிற்கிறார்கள். சூட மணம் கமழ்கிறது. பூசாரி நீட்டும் ஆரத்தித் தட்டை தொட்டு மிகுந்த பக்த்தியோடு கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள் பக்தர்கள்.
இன் செய்த ஜீன்ஸ் பேண்ட்டோடும் நேர்த்தியாக நறுக்கி விடப்பட்ட தாடியோடும் இருக்கிறார் பூசாரி. அவர் பெயர் "குலாம் கஸன்". ஆம் அவர் ஒரு இஸ்லாமியர்.
1989 வாக்கில் பண்டிடுகள் அந்தப் பகுதியை விட்டு புலம் பெயர்ந்தபோது அப்போதைய பூசாரி திரு. ராத கிரிஷனால் தமக்கு கையளிக்கப் பட்ட பணியினை ஈன்று வரை மிகுந்த பக்தியோடும் சிரத்தையோடும் செய்து வருகிறார்.
சொல்கிறார், " சிவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது பண்டிட்டுகளின் ஆலயம்.அவர்கள் நிச்சயம் வருவார்கள்". அவரது நம்பிக்கை பலிக்கட்டும்.
இந்துக்களின் சகிப்புத் தன்மையும் அரவணைப்பும் எழுத எழுத மாளாது. இந்தத் தேசம் முழுமையும் அவர்களது பெருந்தன்மையால் நிரம்பிக் கசிகிறது. ஆளாளுக்கு அவைகளையும் அவசியம் பதிவோம்.
இத்தகையப் பதிவுகள்தான் வருங்காலப் பிள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டும்.
நிறைய மகிழ்ச்சியாயிருக்கிறது. இரண்டாயிரமாவது பார்வையாளனாக நான். வழ்க்கமாக சலனப் படாதவன். கொஞ்சமாய் இன்று. இந்த இரண்டாயிரம் தடவைகளில் ஒரு முன்னூறு முறை நானே கடந்திருப்பேன். ஐனூறு என்றே வைத்துக் கொண்டாலும் ஆயிரத்து ஐனூறு முறை தோழர்கள் பார்த்திருக்கிறார்கள். மகிழ்ந்து, கடமைபட்டு, நன்றி சொல்கிறேன். மிக எளிமையான மொழி நடையில் பதியப் பட்ட ஆகச் சாதாரண்மான பதிவினை அன்போடு வருடிக் கொண்டாடிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- Sponsored content
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 8
|
|