புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:42
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:11
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
by ayyasamy ram Today at 16:42
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:11
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காயா பழமா?
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
First topic message reminder :
காயா பழமா?
ராஜ்ய சபாவின் காலி இருக்கைகளுக்கு ஆள் நிரப்பும் திருவிழாவிற்கு அநேகமாக நாள் குறித்ததிலிருந்து குழந்தைகளிடமிருந்த "காயா பழமா?" விளையாட்டு அரசியலுக்கு நகர்ந்திருக்கிறது.
காய் விட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் வசைந்து கொண்டிருந்தவர்கள் "பழம்" விட்டுக் கொள்ளலாமா என்று பரிசீலிக்கத் தொடங்கி விட்டார்கள். "காய்" காலத்தின் லாப நட்டக் கணக்கே பழம் விடுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கப் போகிறது.
"காய்" , "பழ" சைகைகளால் " தோட்டங்களும்" , "ஆலயங்களும்" , சந்தடி சாக்கில் சில "பவன்" களும் சுறு சுறுப்பாய் மாறும்.
"லாபம்" மட்டுமே குறியாகிப் போன "காய்" , "பழ" கூட்டணி விளையாட்டு ஏதோ அரசியலில் மட்டுமல்ல , வாழ்க்கையில், வணிகத்தில், தொழிலில் என்று சகல தளங்களுக்கும் விரிந்து பொருந்தும்.
" இல் வாழ்க்கை கூட்டணியே" கூட இவரோடு சம்பந்தம் கொண்டால், இவரோடு இணைந்தால், பிள்ளை கண்ணை கசக்காமல் இருப்பாள், அல்லது சாகிற வரைக்கும் நமக்கு நிம்மதியான சோறு என்கிற வகையில் ஏதாவது ஒரு லாபக் கணக்கோடுதான் பெரும்பாண்மை அமைகிறது.
இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். "காய்" விட்டு பிரிவதில் பெரும் பகுதி கூட லாபம் கருதிதான்.
விடுங்கள் போகட்டும்.
" நட்டம்" தான் என்பது உறுதியாய் தெரிந்த பின்பும், அது சமூகத்திற்கு நன்மை தருமெனில் அதை மகிழ்வோடு ஏற்று அமைந்து விடும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி ஒரு அபூர்வ கூட்டண் "தியாக தீபங்கள்" மோகன கிருஷ்ணனுக்கும் "யுகமாயினி" சித்தனுக்கும் இடையில் வாய்த்திருக்கிறது.
அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கை காசை செலவழித்து
, "நட்டம்" விரும்பி ஏற்று ஊர் ஊராய் சென்று விழா எடுத்து கொண்டாடி நல்ல புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அதில் இரண்டு ஊர்களில் பேசுகிற வாய்ப்பை பெருந்தன்மையோடு தந்தார்கள்.
அதிலொன்று சென்னை கருணாநிதி நகரின் பிரதான சாலையில் முதல் தளம் முழுவதும் வியாபித்து நிற்கும் "டிஸ்கவரி புக் பேலஸில்" . மிகப் பெரிய தளம். கூட்டத்திற்காக புத்தகங்களை ஒதுக்கி வைத்து உதவிக் கொண்டிருந்தார்கள் புத்தகக் கடையின் உரிமையாளர் வேடியப்பனும் அவரது மொத்தக் குடும்பமும். சழுவாய் கசியக் கசிய யாரைப் பார்த்தும் பொக்கை வாய் புன்னகைத்து வரவேற்றாள் அவரது ஒரு வயது குழந்தை.
இத்தனை சின்ன வயதில் இத்தனை பெரிய முதலீட்டை ஒரு புத்தகக் கடையில் முடக்குவது சற்றேரக் குறைய தற்கொலைக்கு சமமான ஒன்றாகவே எனக்குப் பட்டது.
வேடியப்பனிடம் கேட்டேன்.
"யோசித்துப் பார்த்ததில் தற்கொலைக்கு புத்தகக் கடை கொஞ்சம் தேவலாம் எனப் பட்டது. அதுதான்."
எத்துனை மேன்மை. எத்தகைய மேன்மை. மோகனக் கிருஷ்ணனும் , சித்தனும் நட்டம் ஏற்று விழா எடுப்பதில் எனக்கான வரவு வேடியப்பன்.
விழா தொடங்கியது. பேசப் போனால் எதிரே ஐயா இ.பா. எத்தனை அழகு எத்தனை இளமை, அடடா, எத்தனை இனிமையான கம்பீரமான உடை ரசனை. அவரைப் பார்த்ததும் நான் எண்பதுகளிலும் அவர் இன்னு நாற்பதுகளிலுமாய் வாழ்வது புரிந்தது.
அவரது மேன்மைகளுள் ஆகப் பெரியதாய் நான் பார்ப்பது வேலு சரவணனை குழந்தைகள் வெளிக்கு மடை மாற்றம் செய்தது.
சித்தன் குழந்தைகளிடமிருந்து களவாடப் படும் குழந்தைத் தனம் குறித்தும், வெம்பிப் போன பக்குவத்தை குழந்தைகளின் மீது திணிப்பதோடு அதைக் கொண்டாடி ரசிக்கும் பெரியவர்களின் அயோகியத் தனம் குறித்தும் கொஞ்ச நாட்களாக மனதுக்குள் அழுது கொண்டிருந்தார். அதனால்தான் அன்றையக் கூட்டத்தில் "மழலைப் பக்குவம்" குறித்து பேசுவது என்று முடிவெடுத்தோம்.
குழந்தைகளிடமிருந்து கேள்விகளை அப்புறப் படுத்தி விட்டோம். அதற்கு ஒரே காரணம் அவர்களின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதான் எனப் பேசிக் கொண்டே வந்தவன் "எங்க பக்கத்து வீட்டுப் பையன் மறக்குறதுன்னா என்ன மாமாங்கறான். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் என்றேன். என் பேச்சில் இந்த இடம் சேர்த்து ஆறேழு முறை
இ.பா சிரித்தார். அது போதும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொண்டை பழுது படவே தண்ணீர் பாட்டிலை மூடி திறந்து நீட்டுகிறார் தோழர். மோகனக்கிருஷ்ணன். எவ்வளவு பெரிய பாரம்பரியம். அப்ப அந்தக் காலத்திலேயே பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். அண்ணன் பத்திரிக்கை ஆசிரியர். இவர் பதிப்பகம் நடத்துகிறார். மூன்று பேரும் எழுத்தாளர்கள். மூன்று பேருமே எழுத்து கொண்டு சம்பாரிக்காதவர்கள்.
மோகனக்கிருஷ்ணன் நல்ல நூல்களாகத் தேடிப் பிடித்து வெளியிடுகிறார் என்பதுகூட அல்ல விஷயம். எனது நூல்களை நூலகங்களுக்கு தர மாட்டேன் என்ற அடத்தோடு கூடிய இவரது வைராக்கியத்தின் கம்பீரமே இங்கு கொள்ளத் தக்கது.
இதுவும் மேன்மைதான். ஆனாலும் தோழர் அவர்கள் தனது விரதத்தை கூடிய விரைவில் முரித்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடும் மிகுந்த அக்கறையோடும் வேண்டுகிறோம். நூலகங்களை மட்டுமே நம்பி சார்ந்து நிற்கும் சில நூறு ந்ல்ல ஆழமான படிப்பாளிகளையாவது எனக்குத் தெரியும்.
டஜன் கணக்கில் நூல்களை ஒரே மேடையில் வெளியிடுவது என்பது தற்போது மிகச் சாதாரன நிகழ்வுகளாய் போனது. தினமும் தினமும் புத்தக வெளியீடுகள். வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் வருகிற விளைச்சலில் எத்தனை தேறும்?
பணம் இருக்கிற காரணத்தால் "போல" படைப்புகளும் குப்பைகளும்கூட வெளி வந்து விடுவதும் , வாய்ப்பும் போதிய வழி முறைகளும் தெரியாத காரணத்தால் வீரியமிக்க படைப்புகள் கூட கை எழுத்துப் பிரதிகளாகவே செல்லரித்து, மக்கி மண்ணோடு மண்ணாய் அழிந்து போவதும் நடக்கிறது.
"உலகம் உன்றன் கைகளில்தான்
உருளுமோ?----ஏழை
உரிமை பெற்றால் இயற்கை என்ன
மருளுமோ?
கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை
நீக்கடா---- பேதம்
முறைமயைத்
தூள் ஆக்கடா"
என்று கொதித்த தமிழ் ஒளிக்கே இதுதான் நடந்திருக்கிறது. நல்ல வேளையாக படாத பாடு பட்டு அய்யா செ. து. சஞ்சீவி அவர்கள் தமிழ் ஒளி நூல்களை தனது "புகழ் புத்தகாலயம்" மூலமாக கொண்டு வந்திருக்கிறார். அதற்காக தமிழ் வாசகர்கள் அவருக்கு நிறையவே கடன் பட்டிருக்கிறோம்.
கொள்ளுதலுக்கும், விமர்சனத்திற்குமான படைப்புகளை சகல வடிவங்களிலும் போதும் போதும் என்கிற அளவிற்கு எழுதித் தளியிருக்கிறார்.
சாகிற காலமட்டும் சரியான வெளிச்சமின்றியே இருந்திருக்கிறார்.
பாரதி தாசனுக்கும் இவருக்கும் நண்பராயிருந்ஹ ஒருவர் இவரது படைப்புகளை நூலாக்க வாங்கி சென்றிருக்கிறார். நூல் வெளி வரவே இல்லை. அதற்கு காரணமாக கையெழுத்துப் பிரதி தொலைந்து போனதாக தமி்ழ் ஒளியிடம் சொல்லியிருக்கிறார்.
அதே நண்பர் பிரிதொரு நண்பரிடம் பேசும் போது " இருபது வயதுகூட ஆகல. அதுக்குள்ள புத்தகங்கள் வந்துட்டா பிறகு நம்ம எப்படி மதிப்பான். அடான் போடல" என்று சொன்னதாகவும் தகவல்கள் உண்டு.
இன்னொரு பக்கம், தமிழ் ஒளி போக வேண்டிய உயரம் போகாததற்கு அவர்தான் காரணம். யாரோடும் ஒத்துப் போகாதவர் எங்இற கருத்தும் உள்ளது.
இன்றைக்கும் தமிழ் மண்ணில் கவனம் பெறாத தமிழ் ஒளிகள் ஏராளம்.
சமூகம் அவர்களை கண்டு கொள்ள வேண்டுமென்பதும் தமிழ் ஒளிகள் புரிதலோடு கொஞ்சம் ஒத்திசைய வேண்டும் என்பதும் நம் ஆசை.
காயா பழமா?
ராஜ்ய சபாவின் காலி இருக்கைகளுக்கு ஆள் நிரப்பும் திருவிழாவிற்கு அநேகமாக நாள் குறித்ததிலிருந்து குழந்தைகளிடமிருந்த "காயா பழமா?" விளையாட்டு அரசியலுக்கு நகர்ந்திருக்கிறது.
காய் விட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் வசைந்து கொண்டிருந்தவர்கள் "பழம்" விட்டுக் கொள்ளலாமா என்று பரிசீலிக்கத் தொடங்கி விட்டார்கள். "காய்" காலத்தின் லாப நட்டக் கணக்கே பழம் விடுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கப் போகிறது.
"காய்" , "பழ" சைகைகளால் " தோட்டங்களும்" , "ஆலயங்களும்" , சந்தடி சாக்கில் சில "பவன்" களும் சுறு சுறுப்பாய் மாறும்.
"லாபம்" மட்டுமே குறியாகிப் போன "காய்" , "பழ" கூட்டணி விளையாட்டு ஏதோ அரசியலில் மட்டுமல்ல , வாழ்க்கையில், வணிகத்தில், தொழிலில் என்று சகல தளங்களுக்கும் விரிந்து பொருந்தும்.
" இல் வாழ்க்கை கூட்டணியே" கூட இவரோடு சம்பந்தம் கொண்டால், இவரோடு இணைந்தால், பிள்ளை கண்ணை கசக்காமல் இருப்பாள், அல்லது சாகிற வரைக்கும் நமக்கு நிம்மதியான சோறு என்கிற வகையில் ஏதாவது ஒரு லாபக் கணக்கோடுதான் பெரும்பாண்மை அமைகிறது.
இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். "காய்" விட்டு பிரிவதில் பெரும் பகுதி கூட லாபம் கருதிதான்.
விடுங்கள் போகட்டும்.
" நட்டம்" தான் என்பது உறுதியாய் தெரிந்த பின்பும், அது சமூகத்திற்கு நன்மை தருமெனில் அதை மகிழ்வோடு ஏற்று அமைந்து விடும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி ஒரு அபூர்வ கூட்டண் "தியாக தீபங்கள்" மோகன கிருஷ்ணனுக்கும் "யுகமாயினி" சித்தனுக்கும் இடையில் வாய்த்திருக்கிறது.
அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கை காசை செலவழித்து
, "நட்டம்" விரும்பி ஏற்று ஊர் ஊராய் சென்று விழா எடுத்து கொண்டாடி நல்ல புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அதில் இரண்டு ஊர்களில் பேசுகிற வாய்ப்பை பெருந்தன்மையோடு தந்தார்கள்.
அதிலொன்று சென்னை கருணாநிதி நகரின் பிரதான சாலையில் முதல் தளம் முழுவதும் வியாபித்து நிற்கும் "டிஸ்கவரி புக் பேலஸில்" . மிகப் பெரிய தளம். கூட்டத்திற்காக புத்தகங்களை ஒதுக்கி வைத்து உதவிக் கொண்டிருந்தார்கள் புத்தகக் கடையின் உரிமையாளர் வேடியப்பனும் அவரது மொத்தக் குடும்பமும். சழுவாய் கசியக் கசிய யாரைப் பார்த்தும் பொக்கை வாய் புன்னகைத்து வரவேற்றாள் அவரது ஒரு வயது குழந்தை.
இத்தனை சின்ன வயதில் இத்தனை பெரிய முதலீட்டை ஒரு புத்தகக் கடையில் முடக்குவது சற்றேரக் குறைய தற்கொலைக்கு சமமான ஒன்றாகவே எனக்குப் பட்டது.
வேடியப்பனிடம் கேட்டேன்.
"யோசித்துப் பார்த்ததில் தற்கொலைக்கு புத்தகக் கடை கொஞ்சம் தேவலாம் எனப் பட்டது. அதுதான்."
எத்துனை மேன்மை. எத்தகைய மேன்மை. மோகனக் கிருஷ்ணனும் , சித்தனும் நட்டம் ஏற்று விழா எடுப்பதில் எனக்கான வரவு வேடியப்பன்.
விழா தொடங்கியது. பேசப் போனால் எதிரே ஐயா இ.பா. எத்தனை அழகு எத்தனை இளமை, அடடா, எத்தனை இனிமையான கம்பீரமான உடை ரசனை. அவரைப் பார்த்ததும் நான் எண்பதுகளிலும் அவர் இன்னு நாற்பதுகளிலுமாய் வாழ்வது புரிந்தது.
அவரது மேன்மைகளுள் ஆகப் பெரியதாய் நான் பார்ப்பது வேலு சரவணனை குழந்தைகள் வெளிக்கு மடை மாற்றம் செய்தது.
சித்தன் குழந்தைகளிடமிருந்து களவாடப் படும் குழந்தைத் தனம் குறித்தும், வெம்பிப் போன பக்குவத்தை குழந்தைகளின் மீது திணிப்பதோடு அதைக் கொண்டாடி ரசிக்கும் பெரியவர்களின் அயோகியத் தனம் குறித்தும் கொஞ்ச நாட்களாக மனதுக்குள் அழுது கொண்டிருந்தார். அதனால்தான் அன்றையக் கூட்டத்தில் "மழலைப் பக்குவம்" குறித்து பேசுவது என்று முடிவெடுத்தோம்.
குழந்தைகளிடமிருந்து கேள்விகளை அப்புறப் படுத்தி விட்டோம். அதற்கு ஒரே காரணம் அவர்களின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதான் எனப் பேசிக் கொண்டே வந்தவன் "எங்க பக்கத்து வீட்டுப் பையன் மறக்குறதுன்னா என்ன மாமாங்கறான். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் என்றேன். என் பேச்சில் இந்த இடம் சேர்த்து ஆறேழு முறை
இ.பா சிரித்தார். அது போதும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொண்டை பழுது படவே தண்ணீர் பாட்டிலை மூடி திறந்து நீட்டுகிறார் தோழர். மோகனக்கிருஷ்ணன். எவ்வளவு பெரிய பாரம்பரியம். அப்ப அந்தக் காலத்திலேயே பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். அண்ணன் பத்திரிக்கை ஆசிரியர். இவர் பதிப்பகம் நடத்துகிறார். மூன்று பேரும் எழுத்தாளர்கள். மூன்று பேருமே எழுத்து கொண்டு சம்பாரிக்காதவர்கள்.
மோகனக்கிருஷ்ணன் நல்ல நூல்களாகத் தேடிப் பிடித்து வெளியிடுகிறார் என்பதுகூட அல்ல விஷயம். எனது நூல்களை நூலகங்களுக்கு தர மாட்டேன் என்ற அடத்தோடு கூடிய இவரது வைராக்கியத்தின் கம்பீரமே இங்கு கொள்ளத் தக்கது.
இதுவும் மேன்மைதான். ஆனாலும் தோழர் அவர்கள் தனது விரதத்தை கூடிய விரைவில் முரித்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடும் மிகுந்த அக்கறையோடும் வேண்டுகிறோம். நூலகங்களை மட்டுமே நம்பி சார்ந்து நிற்கும் சில நூறு ந்ல்ல ஆழமான படிப்பாளிகளையாவது எனக்குத் தெரியும்.
டஜன் கணக்கில் நூல்களை ஒரே மேடையில் வெளியிடுவது என்பது தற்போது மிகச் சாதாரன நிகழ்வுகளாய் போனது. தினமும் தினமும் புத்தக வெளியீடுகள். வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் வருகிற விளைச்சலில் எத்தனை தேறும்?
பணம் இருக்கிற காரணத்தால் "போல" படைப்புகளும் குப்பைகளும்கூட வெளி வந்து விடுவதும் , வாய்ப்பும் போதிய வழி முறைகளும் தெரியாத காரணத்தால் வீரியமிக்க படைப்புகள் கூட கை எழுத்துப் பிரதிகளாகவே செல்லரித்து, மக்கி மண்ணோடு மண்ணாய் அழிந்து போவதும் நடக்கிறது.
"உலகம் உன்றன் கைகளில்தான்
உருளுமோ?----ஏழை
உரிமை பெற்றால் இயற்கை என்ன
மருளுமோ?
கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை
நீக்கடா---- பேதம்
முறைமயைத்
தூள் ஆக்கடா"
என்று கொதித்த தமிழ் ஒளிக்கே இதுதான் நடந்திருக்கிறது. நல்ல வேளையாக படாத பாடு பட்டு அய்யா செ. து. சஞ்சீவி அவர்கள் தமிழ் ஒளி நூல்களை தனது "புகழ் புத்தகாலயம்" மூலமாக கொண்டு வந்திருக்கிறார். அதற்காக தமிழ் வாசகர்கள் அவருக்கு நிறையவே கடன் பட்டிருக்கிறோம்.
கொள்ளுதலுக்கும், விமர்சனத்திற்குமான படைப்புகளை சகல வடிவங்களிலும் போதும் போதும் என்கிற அளவிற்கு எழுதித் தளியிருக்கிறார்.
சாகிற காலமட்டும் சரியான வெளிச்சமின்றியே இருந்திருக்கிறார்.
பாரதி தாசனுக்கும் இவருக்கும் நண்பராயிருந்ஹ ஒருவர் இவரது படைப்புகளை நூலாக்க வாங்கி சென்றிருக்கிறார். நூல் வெளி வரவே இல்லை. அதற்கு காரணமாக கையெழுத்துப் பிரதி தொலைந்து போனதாக தமி்ழ் ஒளியிடம் சொல்லியிருக்கிறார்.
அதே நண்பர் பிரிதொரு நண்பரிடம் பேசும் போது " இருபது வயதுகூட ஆகல. அதுக்குள்ள புத்தகங்கள் வந்துட்டா பிறகு நம்ம எப்படி மதிப்பான். அடான் போடல" என்று சொன்னதாகவும் தகவல்கள் உண்டு.
இன்னொரு பக்கம், தமிழ் ஒளி போக வேண்டிய உயரம் போகாததற்கு அவர்தான் காரணம். யாரோடும் ஒத்துப் போகாதவர் எங்இற கருத்தும் உள்ளது.
இன்றைக்கும் தமிழ் மண்ணில் கவனம் பெறாத தமிழ் ஒளிகள் ஏராளம்.
சமூகம் அவர்களை கண்டு கொள்ள வேண்டுமென்பதும் தமிழ் ஒளிகள் புரிதலோடு கொஞ்சம் ஒத்திசைய வேண்டும் என்பதும் நம் ஆசை.
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
Aathira wrote:இரா எட்வின் ஐயா அவர்களுக்கு அன்பு வணக்கங்கள்,
இப்போதுதான் யுகமாயினியில் வந்த ’எலிகளை அழித்த ஊரை முன்வைத்து’ என்ற கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு உலகம் போகிற போக்கை எண்ணி சிந்தனையுடனும், புன்னகையுடனும் ஈகரையில் நுழைகிறேன்.. இங்கும் இரா. எட்வின் அவர்களின் பதிவு.. நான் நேரம் கிடைக்கும்போது தமிழ் ஒளியின் கவிதைகளை ஈகரையில் பதிவிட வேண்டும் என்று அடிக்கடி நினைத்ததுண்டு. அந்த அற்புதமான கவிஞரைப் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி...ஈகரையில் தங்களின் காலடி பதிந்தமைக்கு நாங்கள் மிகவும் மகிழ்கிறோம்..உங்களது ஆக்க பூர்வமான பதிவுகளால் ஈகரை மட்டுமல்ல எங்கள் மனமும் தெளிவு பெறும்....நன்றியும் தொடர் பதிவுகளை வேண்டியும்...
அன்புடன்![]()
![]()
ஆதிரா..
உண்மையிலுமே நான் மிகுந்த மரியாதையோடும் நெகிழ்ச்சியோடும் பார்த்த பின்னூட்டம் ஆதிரா.
காயா பழமா கூட யுகமாயினியில் வந்ததுதான்.
தமிளி பற்றிக் கூட பதிவிடுவேண்டும். பார்க்கலாம் எங்கிருக்கிறீர்கள் ஆதிரா? எனது நூல் அனுப்ப வேண்டும்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
Aathira wrote:மிக்க நன்றி..எட்வின் ஐயா,.. நான் என் முகவரியைத் தங்களுக்கு தனிமடலில் அனுப்புகிறேன்....தமிழ் ஒளி பற்றிய பதிவுகளைக் காணும் ஆவலுடன்...
தமிழ் ஒளி பற்றியெல்லாம் பேசும் போது லூசு என்பார்கள்.
நெசத்துக்கும் நன்றி ஆதிரா
இரா.எட்வின் wrote:Aathira wrote:மிக்க நன்றி..எட்வின் ஐயா,.. நான் என் முகவரியைத் தங்களுக்கு தனிமடலில் அனுப்புகிறேன்....தமிழ் ஒளி பற்றிய பதிவுகளைக் காணும் ஆவலுடன்...
தமிழ் ஒளி பற்றியெல்லாம் பேசும் போது லூசு என்பார்கள்.
நெசத்துக்கும் நன்றி ஆதிரா
அது அவர் கவிச்சுவையை ருசிக்காது நுனிப்புல் மேய்ந்தவர்களின் கருத்து என்று கூறலாம். நூலகத்தில் தேடிப் பிடித்து, வியந்து படித்து, பாரதிதாசனை நினைவூட்டும் கவிதைகளைத் தொகுத்து இருவரையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.. அத்துனை சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகள்...(குறிப்பாக விதவைப்பற்றியது) அந்த நினைவையும் அசை போட வைத்துள்ளீர்கள்..மிக்க நன்றி..எட்வின் அவர்களுக்கு...
![காயா பழமா? - Page 4 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![காயா பழமா? - Page 4 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
Aathira wrote:இரா.எட்வின் wrote:Aathira wrote:மிக்க நன்றி..எட்வின் ஐயா,.. நான் என் முகவரியைத் தங்களுக்கு தனிமடலில் அனுப்புகிறேன்....தமிழ் ஒளி பற்றிய பதிவுகளைக் காணும் ஆவலுடன்...
தமிழ் ஒளி பற்றியெல்லாம் பேசும் போது லூசு என்பார்கள்.
நெசத்துக்கும் நன்றி ஆதிரா
அது அவர் கவிச்சுவையை ருசிக்காது நுனிப்புல் மேய்ந்தவர்களின் கருத்து என்று கூறலாம். நூலகத்தில் தேடிப் பிடித்து, வியந்து படித்து, பாரதிதாசனை நினைவூட்டும் கவிதைகளைத் தொகுத்து இருவரையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளேன்.. அத்துனை சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகள்...(குறிப்பாக விதவைப்பற்றியது) அந்த நினைவையும் அசை போட வைத்துள்ளீர்கள்..மிக்க நன்றி..எட்வின் அவர்களுக்கு...![]()
உரை நடையில் தமிழ் ஒளி இதை விட அட்டகாசம். என்ன பிழைக்கத் தெரியாமலே செத்துப் போனவன்
- அண்ணா சுந்தரம்புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 23/07/2010
இரா.எட்வின் wrote:காயா பழமா?
ராஜ்ய சபாவின் காலி இருக்கைகளுக்கு ஆள் நிரப்பும் திருவிழாவிற்கு அநேகமாக நாள் குறித்ததிலிருந்து குழந்தைகளிடமிருந்த "காயா பழமா?" விளையாட்டு அரசியலுக்கு நகர்ந்திருக்கிறது.
காய் விட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் வசைந்து கொண்டிருந்தவர்கள் "பழம்" விட்டுக் கொள்ளலாமா என்று பரிசீலிக்கத் தொடங்கி விட்டார்கள். "காய்" காலத்தின் லாப நட்டக் கணக்கே பழம் விடுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கப் போகிறது.
"காய்" , "பழ" சைகைகளால் " தோட்டங்களும்" , "ஆலயங்களும்" , சந்தடி சாக்கில் சில "பவன்" களும் சுறு சுறுப்பாய் மாறும்.
"லாபம்" மட்டுமே குறியாகிப் போன "காய்" , "பழ" கூட்டணி விளையாட்டு ஏதோ அரசியலில் மட்டுமல்ல , வாழ்க்கையில், வணிகத்தில், தொழிலில் என்று சகல தளங்களுக்கும் விரிந்து பொருந்தும்.
" இல் வாழ்க்கை கூட்டணியே" கூட இவரோடு சம்பந்தம் கொண்டால், இவரோடு இணைந்தால், பிள்ளை கண்ணை கசக்காமல் இருப்பாள், அல்லது சாகிற வரைக்கும் நமக்கு நிம்மதியான சோறு என்கிற வகையில் ஏதாவது ஒரு லாபக் கணக்கோடுதான் பெரும்பாண்மை அமைகிறது.
இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். "காய்" விட்டு பிரிவதில் பெரும் பகுதி கூட லாபம் கருதிதான்.
விடுங்கள் போகட்டும்.
" நட்டம்" தான் என்பது உறுதியாய் தெரிந்த பின்பும், அது சமூகத்திற்கு நன்மை தருமெனில் அதை மகிழ்வோடு ஏற்று அமைந்து விடும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி ஒரு அபூர்வ கூட்டண் "தியாக தீபங்கள்" மோகன கிருஷ்ணனுக்கும் "யுகமாயினி" சித்தனுக்கும் இடையில் வாய்த்திருக்கிறது.
அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கை காசை செலவழித்து
, "நட்டம்" விரும்பி ஏற்று ஊர் ஊராய் சென்று விழா எடுத்து கொண்டாடி நல்ல புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அதில் இரண்டு ஊர்களில் பேசுகிற வாய்ப்பை பெருந்தன்மையோடு தந்தார்கள்.
அதிலொன்று சென்னை கருணாநிதி நகரின் பிரதான சாலையில் முதல் தளம் முழுவதும் வியாபித்து நிற்கும் "டிஸ்கவரி புக் பேலஸில்" . மிகப் பெரிய தளம். கூட்டத்திற்காக புத்தகங்களை ஒதுக்கி வைத்து உதவிக் கொண்டிருந்தார்கள் புத்தகக் கடையின் உரிமையாளர் வேடியப்பனும் அவரது மொத்தக் குடும்பமும். சழுவாய் கசியக் கசிய யாரைப் பார்த்தும் பொக்கை வாய் புன்னகைத்து வரவேற்றாள் அவரது ஒரு வயது குழந்தை.
இத்தனை சின்ன வயதில் இத்தனை பெரிய முதலீட்டை ஒரு புத்தகக் கடையில் முடக்குவது சற்றேரக் குறைய தற்கொலைக்கு சமமான ஒன்றாகவே எனக்குப் பட்டது.
வேடியப்பனிடம் கேட்டேன்.
"யோசித்துப் பார்த்ததில் தற்கொலைக்கு புத்தகக் கடை கொஞ்சம் தேவலாம் எனப் பட்டது. அதுதான்."
எத்துனை மேன்மை. எத்தகைய மேன்மை. மோகனக் கிருஷ்ணனும் , சித்தனும் நட்டம் ஏற்று விழா எடுப்பதில் எனக்கான வரவு வேடியப்பன்.
விழா தொடங்கியது. பேசப் போனால் எதிரே ஐயா இ.பா. எத்தனை அழகு எத்தனை இளமை, அடடா, எத்தனை இனிமையான கம்பீரமான உடை ரசனை. அவரைப் பார்த்ததும் நான் எண்பதுகளிலும் அவர் இன்னு நாற்பதுகளிலுமாய் வாழ்வது புரிந்தது.
அவரது மேன்மைகளுள் ஆகப் பெரியதாய் நான் பார்ப்பது வேலு சரவணனை குழந்தைகள் வெளிக்கு மடை மாற்றம் செய்தது.
சித்தன் குழந்தைகளிடமிருந்து களவாடப் படும் குழந்தைத் தனம் குறித்தும், வெம்பிப் போன பக்குவத்தை குழந்தைகளின் மீது திணிப்பதோடு அதைக் கொண்டாடி ரசிக்கும் பெரியவர்களின் அயோகியத் தனம் குறித்தும் கொஞ்ச நாட்களாக மனதுக்குள் அழுது கொண்டிருந்தார். அதனால்தான் அன்றையக் கூட்டத்தில் "மழலைப் பக்குவம்" குறித்து பேசுவது என்று முடிவெடுத்தோம்.
குழந்தைகளிடமிருந்து கேள்விகளை அப்புறப் படுத்தி விட்டோம். அதற்கு ஒரே காரணம் அவர்களின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதான் எனப் பேசிக் கொண்டே வந்தவன் "எங்க பக்கத்து வீட்டுப் பையன் மறக்குறதுன்னா என்ன மாமாங்கறான். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் என்றேன். என் பேச்சில் இந்த இடம் சேர்த்து ஆறேழு முறை
இ.பா சிரித்தார். அது போதும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொண்டை பழுது படவே தண்ணீர் பாட்டிலை மூடி திறந்து நீட்டுகிறார் தோழர். மோகனக்கிருஷ்ணன். எவ்வளவு பெரிய பாரம்பரியம். அப்ப அந்தக் காலத்திலேயே பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். அண்ணன் பத்திரிக்கை ஆசிரியர். இவர் பதிப்பகம் நடத்துகிறார். மூன்று பேரும் எழுத்தாளர்கள். மூன்று பேருமே எழுத்து கொண்டு சம்பாரிக்காதவர்கள்.
மோகனக்கிருஷ்ணன் நல்ல நூல்களாகத் தேடிப் பிடித்து வெளியிடுகிறார் என்பதுகூட அல்ல விஷயம். எனது நூல்களை நூலகங்களுக்கு தர மாட்டேன் என்ற அடத்தோடு கூடிய இவரது வைராக்கியத்தின் கம்பீரமே இங்கு கொள்ளத் தக்கது.
இதுவும் மேன்மைதான். ஆனாலும் தோழர் அவர்கள் தனது விரதத்தை கூடிய விரைவில் முரித்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடும் மிகுந்த அக்கறையோடும் வேண்டுகிறோம். நூலகங்களை மட்டுமே நம்பி சார்ந்து நிற்கும் சில நூறு ந்ல்ல ஆழமான படிப்பாளிகளையாவது எனக்குத் தெரியும்.
டஜன் கணக்கில் நூல்களை ஒரே மேடையில் வெளியிடுவது என்பது தற்போது மிகச் சாதாரன நிகழ்வுகளாய் போனது. தினமும் தினமும் புத்தக வெளியீடுகள். வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் வருகிற விளைச்சலில் எத்தனை தேறும்?
பணம் இருக்கிற காரணத்தால் "போல" படைப்புகளும் குப்பைகளும்கூட வெளி வந்து விடுவதும் , வாய்ப்பும் போதிய வழி முறைகளும் தெரியாத காரணத்தால் வீரியமிக்க படைப்புகள் கூட கை எழுத்துப் பிரதிகளாகவே செல்லரித்து, மக்கி மண்ணோடு மண்ணாய் அழிந்து போவதும் நடக்கிறது.
"உலகம் உன்றன் கைகளில்தான்
உருளுமோ?----ஏழை
உரிமை பெற்றால் இயற்கை என்ன
மருளுமோ?
கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை
நீக்கடா---- பேதம்
முறைமயைத்
தூள் ஆக்கடா"
என்று கொதித்த தமிழ் ஒளிக்கே இதுதான் நடந்திருக்கிறது. நல்ல வேளையாக படாத பாடு பட்டு அய்யா செ. து. சஞ்சீவி அவர்கள் தமிழ் ஒளி நூல்களை தனது "புகழ் புத்தகாலயம்" மூலமாக கொண்டு வந்திருக்கிறார். அதற்காக தமிழ் வாசகர்கள் அவருக்கு நிறையவே கடன் பட்டிருக்கிறோம்.
கொள்ளுதலுக்கும், விமர்சனத்திற்குமான படைப்புகளை சகல வடிவங்களிலும் போதும் போதும் என்கிற அளவிற்கு எழுதித் தளியிருக்கிறார்.
சாகிற காலமட்டும் சரியான வெளிச்சமின்றியே இருந்திருக்கிறார்.
பாரதி தாசனுக்கும் இவருக்கும் நண்பராயிருந்ஹ ஒருவர் இவரது படைப்புகளை நூலாக்க வாங்கி சென்றிருக்கிறார். நூல் வெளி வரவே இல்லை. அதற்கு காரணமாக கையெழுத்துப் பிரதி தொலைந்து போனதாக தமி்ழ் ஒளியிடம் சொல்லியிருக்கிறார்.
அதே நண்பர் பிரிதொரு நண்பரிடம் பேசும் போது " இருபது வயதுகூட ஆகல. அதுக்குள்ள புத்தகங்கள் வந்துட்டா பிறகு நம்ம எப்படி மதிப்பான். அடான் போடல" என்று சொன்னதாகவும் தகவல்கள் உண்டு.
இன்னொரு பக்கம், தமிழ் ஒளி போக வேண்டிய உயரம் போகாததற்கு அவர்தான் காரணம். யாரோடும் ஒத்துப் போகாதவர் எங்இற கருத்தும் உள்ளது.
இன்றைக்கும் தமிழ் மண்ணில் கவனம் பெறாத தமிழ் ஒளிகள் ஏராளம்.
சமூகம் அவர்களை கண்டு கொள்ள வேண்டுமென்பதும் தமிழ் ஒளிகள் புரிதலோடு கொஞ்சம் ஒத்திசைய வேண்டும் என்பதும் நம் ஆசை.
![காயா பழமா? - Page 4 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
![காயா பழமா? - Page 4 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
![காயா பழமா? - Page 4 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
![காயா பழமா? - Page 4 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
அண்ணா சுந்தரம் wrote:இரா.எட்வின் wrote:காயா பழமா?
ராஜ்ய சபாவின் காலி இருக்கைகளுக்கு ஆள் நிரப்பும் திருவிழாவிற்கு அநேகமாக நாள் குறித்ததிலிருந்து குழந்தைகளிடமிருந்த "காயா பழமா?" விளையாட்டு அரசியலுக்கு நகர்ந்திருக்கிறது.
காய் விட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் வசைந்து கொண்டிருந்தவர்கள் "பழம்" விட்டுக் கொள்ளலாமா என்று பரிசீலிக்கத் தொடங்கி விட்டார்கள். "காய்" காலத்தின் லாப நட்டக் கணக்கே பழம் விடுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கப் போகிறது.
"காய்" , "பழ" சைகைகளால் " தோட்டங்களும்" , "ஆலயங்களும்" , சந்தடி சாக்கில் சில "பவன்" களும் சுறு சுறுப்பாய் மாறும்.
"லாபம்" மட்டுமே குறியாகிப் போன "காய்" , "பழ" கூட்டணி விளையாட்டு ஏதோ அரசியலில் மட்டுமல்ல , வாழ்க்கையில், வணிகத்தில், தொழிலில் என்று சகல தளங்களுக்கும் விரிந்து பொருந்தும்.
" இல் வாழ்க்கை கூட்டணியே" கூட இவரோடு சம்பந்தம் கொண்டால், இவரோடு இணைந்தால், பிள்ளை கண்ணை கசக்காமல் இருப்பாள், அல்லது சாகிற வரைக்கும் நமக்கு நிம்மதியான சோறு என்கிற வகையில் ஏதாவது ஒரு லாபக் கணக்கோடுதான் பெரும்பாண்மை அமைகிறது.
இன்னொரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும். "காய்" விட்டு பிரிவதில் பெரும் பகுதி கூட லாபம் கருதிதான்.
விடுங்கள் போகட்டும்.
" நட்டம்" தான் என்பது உறுதியாய் தெரிந்த பின்பும், அது சமூகத்திற்கு நன்மை தருமெனில் அதை மகிழ்வோடு ஏற்று அமைந்து விடும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி ஒரு அபூர்வ கூட்டண் "தியாக தீபங்கள்" மோகன கிருஷ்ணனுக்கும் "யுகமாயினி" சித்தனுக்கும் இடையில் வாய்த்திருக்கிறது.
அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கை காசை செலவழித்து
, "நட்டம்" விரும்பி ஏற்று ஊர் ஊராய் சென்று விழா எடுத்து கொண்டாடி நல்ல புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அதில் இரண்டு ஊர்களில் பேசுகிற வாய்ப்பை பெருந்தன்மையோடு தந்தார்கள்.
அதிலொன்று சென்னை கருணாநிதி நகரின் பிரதான சாலையில் முதல் தளம் முழுவதும் வியாபித்து நிற்கும் "டிஸ்கவரி புக் பேலஸில்" . மிகப் பெரிய தளம். கூட்டத்திற்காக புத்தகங்களை ஒதுக்கி வைத்து உதவிக் கொண்டிருந்தார்கள் புத்தகக் கடையின் உரிமையாளர் வேடியப்பனும் அவரது மொத்தக் குடும்பமும். சழுவாய் கசியக் கசிய யாரைப் பார்த்தும் பொக்கை வாய் புன்னகைத்து வரவேற்றாள் அவரது ஒரு வயது குழந்தை.
இத்தனை சின்ன வயதில் இத்தனை பெரிய முதலீட்டை ஒரு புத்தகக் கடையில் முடக்குவது சற்றேரக் குறைய தற்கொலைக்கு சமமான ஒன்றாகவே எனக்குப் பட்டது.
வேடியப்பனிடம் கேட்டேன்.
"யோசித்துப் பார்த்ததில் தற்கொலைக்கு புத்தகக் கடை கொஞ்சம் தேவலாம் எனப் பட்டது. அதுதான்."
எத்துனை மேன்மை. எத்தகைய மேன்மை. மோகனக் கிருஷ்ணனும் , சித்தனும் நட்டம் ஏற்று விழா எடுப்பதில் எனக்கான வரவு வேடியப்பன்.
விழா தொடங்கியது. பேசப் போனால் எதிரே ஐயா இ.பா. எத்தனை அழகு எத்தனை இளமை, அடடா, எத்தனை இனிமையான கம்பீரமான உடை ரசனை. அவரைப் பார்த்ததும் நான் எண்பதுகளிலும் அவர் இன்னு நாற்பதுகளிலுமாய் வாழ்வது புரிந்தது.
அவரது மேன்மைகளுள் ஆகப் பெரியதாய் நான் பார்ப்பது வேலு சரவணனை குழந்தைகள் வெளிக்கு மடை மாற்றம் செய்தது.
சித்தன் குழந்தைகளிடமிருந்து களவாடப் படும் குழந்தைத் தனம் குறித்தும், வெம்பிப் போன பக்குவத்தை குழந்தைகளின் மீது திணிப்பதோடு அதைக் கொண்டாடி ரசிக்கும் பெரியவர்களின் அயோகியத் தனம் குறித்தும் கொஞ்ச நாட்களாக மனதுக்குள் அழுது கொண்டிருந்தார். அதனால்தான் அன்றையக் கூட்டத்தில் "மழலைப் பக்குவம்" குறித்து பேசுவது என்று முடிவெடுத்தோம்.
குழந்தைகளிடமிருந்து கேள்விகளை அப்புறப் படுத்தி விட்டோம். அதற்கு ஒரே காரணம் அவர்களின் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்பதுதான் எனப் பேசிக் கொண்டே வந்தவன் "எங்க பக்கத்து வீட்டுப் பையன் மறக்குறதுன்னா என்ன மாமாங்கறான். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் என்றேன். என் பேச்சில் இந்த இடம் சேர்த்து ஆறேழு முறை
இ.பா சிரித்தார். அது போதும்.
பேசிக் கொண்டிருக்கும் போது தொண்டை பழுது படவே தண்ணீர் பாட்டிலை மூடி திறந்து நீட்டுகிறார் தோழர். மோகனக்கிருஷ்ணன். எவ்வளவு பெரிய பாரம்பரியம். அப்ப அந்தக் காலத்திலேயே பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். அண்ணன் பத்திரிக்கை ஆசிரியர். இவர் பதிப்பகம் நடத்துகிறார். மூன்று பேரும் எழுத்தாளர்கள். மூன்று பேருமே எழுத்து கொண்டு சம்பாரிக்காதவர்கள்.
மோகனக்கிருஷ்ணன் நல்ல நூல்களாகத் தேடிப் பிடித்து வெளியிடுகிறார் என்பதுகூட அல்ல விஷயம். எனது நூல்களை நூலகங்களுக்கு தர மாட்டேன் என்ற அடத்தோடு கூடிய இவரது வைராக்கியத்தின் கம்பீரமே இங்கு கொள்ளத் தக்கது.
இதுவும் மேன்மைதான். ஆனாலும் தோழர் அவர்கள் தனது விரதத்தை கூடிய விரைவில் முரித்துக் கொள்ள வேண்டுமாய் அன்போடும் மிகுந்த அக்கறையோடும் வேண்டுகிறோம். நூலகங்களை மட்டுமே நம்பி சார்ந்து நிற்கும் சில நூறு ந்ல்ல ஆழமான படிப்பாளிகளையாவது எனக்குத் தெரியும்.
டஜன் கணக்கில் நூல்களை ஒரே மேடையில் வெளியிடுவது என்பது தற்போது மிகச் சாதாரன நிகழ்வுகளாய் போனது. தினமும் தினமும் புத்தக வெளியீடுகள். வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் வருகிற விளைச்சலில் எத்தனை தேறும்?
பணம் இருக்கிற காரணத்தால் "போல" படைப்புகளும் குப்பைகளும்கூட வெளி வந்து விடுவதும் , வாய்ப்பும் போதிய வழி முறைகளும் தெரியாத காரணத்தால் வீரியமிக்க படைப்புகள் கூட கை எழுத்துப் பிரதிகளாகவே செல்லரித்து, மக்கி மண்ணோடு மண்ணாய் அழிந்து போவதும் நடக்கிறது.
"உலகம் உன்றன் கைகளில்தான்
உருளுமோ?----ஏழை
உரிமை பெற்றால் இயற்கை என்ன
மருளுமோ?
கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை
நீக்கடா---- பேதம்
முறைமயைத்
தூள் ஆக்கடா"
என்று கொதித்த தமிழ் ஒளிக்கே இதுதான் நடந்திருக்கிறது. நல்ல வேளையாக படாத பாடு பட்டு அய்யா செ. து. சஞ்சீவி அவர்கள் தமிழ் ஒளி நூல்களை தனது "புகழ் புத்தகாலயம்" மூலமாக கொண்டு வந்திருக்கிறார். அதற்காக தமிழ் வாசகர்கள் அவருக்கு நிறையவே கடன் பட்டிருக்கிறோம்.
கொள்ளுதலுக்கும், விமர்சனத்திற்குமான படைப்புகளை சகல வடிவங்களிலும் போதும் போதும் என்கிற அளவிற்கு எழுதித் தளியிருக்கிறார்.
சாகிற காலமட்டும் சரியான வெளிச்சமின்றியே இருந்திருக்கிறார்.
பாரதி தாசனுக்கும் இவருக்கும் நண்பராயிருந்ஹ ஒருவர் இவரது படைப்புகளை நூலாக்க வாங்கி சென்றிருக்கிறார். நூல் வெளி வரவே இல்லை. அதற்கு காரணமாக கையெழுத்துப் பிரதி தொலைந்து போனதாக தமி்ழ் ஒளியிடம் சொல்லியிருக்கிறார்.
அதே நண்பர் பிரிதொரு நண்பரிடம் பேசும் போது " இருபது வயதுகூட ஆகல. அதுக்குள்ள புத்தகங்கள் வந்துட்டா பிறகு நம்ம எப்படி மதிப்பான். அடான் போடல" என்று சொன்னதாகவும் தகவல்கள் உண்டு.
இன்னொரு பக்கம், தமிழ் ஒளி போக வேண்டிய உயரம் போகாததற்கு அவர்தான் காரணம். யாரோடும் ஒத்துப் போகாதவர் எங்இற கருத்தும் உள்ளது.
இன்றைக்கும் தமிழ் மண்ணில் கவனம் பெறாத தமிழ் ஒளிகள் ஏராளம்.
சமூகம் அவர்களை கண்டு கொள்ள வேண்டுமென்பதும் தமிழ் ஒளிகள் புரிதலோடு கொஞ்சம் ஒத்திசைய வேண்டும் என்பதும் நம் ஆசை.![]()
![]()
![]()
நன்றி தோழர்
- துரை.மணிவன்னன்புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 27/07/2010
![காயா பழமா? - Page 4 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காயா பழமா? - Page 4 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காயா பழமா? - Page 4 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காயா பழமா? - Page 4 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காயா பழமா? - Page 4 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காயா பழமா? - Page 4 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![காயா பழமா? - Page 4 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
துரை.மணிவன்னன் wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றியும் வணக்கமும் தோழர். அது என்ன ரோஜா?
- நூருல்லாபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 23/07/2010
உண்மைய சொல்லனும்னா பட்டய கிளப்பிட்டீங்க எட்வின். மோகனகிருஷ்னன் அவர்களை பார்க்கனுமே
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|