புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_m10ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்!


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Wed Sep 08, 2010 4:16 pm




வாழ்க்கையில் ஒரு முறையாவது சிலரை சந்தித்து விட வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். அப்படி சந்திக்க விரும்பும் நபர்கள் அவரவர் தன்மையைப் பொருத்து இருக்கும். சிலர் தங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகையரை ஒரு முறையாவது சந்தித்து விட வேண்டும் என்று விரும்புவார்கள். சிலர் விளையாட்டு வீரர்களை சந்திக்க ஆசைப்படுவார்கள். சிலர் மகான்களையும், சிலர் பிரபலங்களையும் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் சந்தித்தே ஆக வேண்டிய ஒரு நபரை மட்டும் சந்திக்க யாரிடமும் பெரிய ஆர்வம் இருப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர் எல்லோராலும் எப்போதும் தவிர்க்கவே படுகிறார். ஒருவேளை அவரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் வருமானால் அச்சமயங்களில் உடனே வேகமாக விலகி ஓடி ஒளிந்து கொள்கிறார்கள். அப்படி ஒரு நபரே இல்லை என்பது போல வேறு யாரையாவது பார்க்க விரைகிறார்கள். அந்த ஒருவரை சந்திப்பதைப் போல மிகக் கசப்பான அனுபவம் இல்லை என்கிற அளவு தப்பியோட பல வழிகளைத் தேடுகிறார்கள். வெகு சொற்பமான விதிவிலக்குகளைத் தவிர இது நம் எல்லோராலும் செய்யப்படுவது தான். அந்த நபரை நாமும் பார்ப்பதில்லை. அவரை மற்றவர்கள் பார்க்க அனுமதிப்பதுமில்லை.

யாரந்த நபர்? நீங்கள் சந்தித்தே ஆக வேண்டியிருந்தாலும் எப்போதும் உங்களால் தவிர்க்கப்படும் அந்த நபர் யார்? அது வேறு யாருமல்ல நீங்கள் தான்! வெளிப்புறத்தில் எல்லோருக்கும் தெரியும் நீங்கள் அல்ல அது. யாராலும் முழுவதுமாகக் காண முடியாத உள்ளே இருக்கும் உண்மையான நீங்கள்!

வெளியே இப்படித் தெரிய வேண்டும், அப்படித் தெரிந்தால் தான் அழகு, மதிப்பு எல்லாம் என்று ஒரு தோற்றத்தை உருவாக்க ஆரம்பிக்கும் மனிதன் தன் சுயரூபத்தை கூடுமான அளவு அடுத்தவரிடமிருந்து மறைத்துக் கொள்ளப் பார்க்கிறான். நாளடைவில் அந்தத் தோற்றமே அவனுக்கு மிக முக்கியமானதாக மாறி விடுகிறது. உலகமும் அந்தத் தோற்றத்தையே பார்க்கிறது, விமர்சிக்கிறது, மதிப்பிடுகிறது. உள்ளே உள்ள நிஜம் கற்பனையால் கூட ஊகிக்க முடியாத அளவு ஆழமாக அமுக்கப்படுகிறது.

காலப்போக்கில் மனிதன் அந்தத் தோற்றத்தையே பிரதானப்படுத்துகிறான். அதையே வளர்த்துகிறான். அதையே மெருகூட்டுகிறான். அடுத்தவர்களை அதையே நிஜம் என்று நம்ப வைக்க முயற்சித்து வெற்றியும் பெறுகிறான். கடைசியில் தானும் அதையே நிஜம் என்று நம்ப முயற்சிக்கிறான். ஓரளவு வெற்றியும் பெறுகிறான். ஆனால் உள்ளே உள்ள நிஜத்திற்கும் வெளியே உள்ள தோற்றத்திற்கும் இடையே உள்ள தூரம் நீண்டு கொண்டே போகின்றது.
பல நேரங்களில் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லை என்னுமளவு வித்தியாசப்படுகிறது.

வெளியே புனித நூல்களை உதாரணம் காட்டி ஆன்மீகக் கடலில் ஆழ்த்தும் சில நபர்கள் உள்ளே சாக்கடையில் ஊறிக் கிடக்கிறார்கள். வெளியே அன்பையும், கருணையையும் போதிக்கும் சிலர் உள்ளே கொடூரமாக இருக்கிறார்கள். நாகரிகத்தின் அடையாளமாக காணப்படும் எத்தனையோ பேர் உள்ளே அநாகரிகத்தின் உச்சமாக இருக்கிறார்கள். இந்த அளவுக்கு இல்லா விட்டாலும் ஒருசில அபூர்வ விதிவிலக்குகள் தவிர எல்லாருமே ஓரளவாவது வெளித்தோற்றத்திற்கு எதிர்மறையான சிலவற்றையாவது உள்ளே மறைத்து வாழ்கிறார்கள்.

எல்லா அந்தரங்கங்களையும் அனைவருக்குமே அறிவித்து விட வேண்டியதில்லை தான். அனைவரும் அனைத்தையும் அறிந்து கொள்ள அவசியமில்லை தான். மற்றவரை பாதிக்காத தனது அந்தரங்கங்களைப் பிறரிடமிருந்து மறைப்பது அவரவர் உரிமை என்றே சொல்லலாம். ஆனால் உள்ளே உள்ள நிஜமான உங்களை நீங்களே அறியாமல் இருப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.

வெளித் தோற்றங்களால் இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை இல்லாததாகவும் பிறரை நம்ப வைப்பது மிக சுலபம். ஆரம்பத்தில் பிறரை நம்ப வைக்க முயற்சிக்கும் ஒரு மனிதன் பின் தானே அதை நம்ப ஆரம்பிக்கும் போது உண்மையான மகிழ்ச்சியையும், மன நிறைவையும் இழக்க ஆரம்பிக்கிறான். ஏனென்றால் உண்மையான மகிழ்ச்சியும், மனநிறைவும் தன்னைத் தானே காண மறுக்கும் ஒரு மனிதனுக்கு, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு மனிதனுக்கு ஒரு போதும் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு வெற்றிடத்தை அவனுக்குள் அவன் உணர ஆரம்பிப்பது அப்போது தான்.

பலர் அந்த வெற்றிடத்தைப் பணத்தால் நிரப்பப் பார்க்கிறார்கள், புகழால் நிரப்பப் பார்க்கிறார்கள், போதையால் நிரப்பப் பார்க்கிறார்கள், அடுத்துவர்களை முந்துவதால் நிரப்பப்பார்க்கிறார்கள். ஆனால் அவ்வப்போது நிரம்புவது போல் தோன்றும் அந்த வெற்றிடம் மிகக் குறுகிய காலத்தில் மீண்டும் வெற்றிடமாகவே மாறி நிற்கும்.


எனவே உங்களுக்குள் இருக்கும் அந்த நிஜமான ‘உங்களை’ அடிக்கடி சந்திக்க மறுக்காதீர்கள். அந்த சந்திப்பு எவ்வளவு கசப்பான அனுபவமாக இருந்தாலும் அதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள். உள்ளதை உள்ளபடி காண்பதில் உறுதியாய் இருங்கள். அங்கே ஏராளமான பலவீனங்கள் இருக்கலாம். பெருமைப்பட முடியாத பல விஷயங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் தயங்காமல் கவனியுங்கள். இருப்பதை இருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனிருக்கிறது, எப்படி உருவாயிற்று, அதை எப்படி வளர்த்தோம் என்றெல்லாம் ஆழமாகச் சிந்தியுங்கள். உள்ளதென்று உணர்வதை நம்மால் எப்போதுமே மாற்றிக் கொள்ள முடியும். ஆழமான, நேர்மையான சுய பரிசோதனையால் எதையும் அறியவும் முடியும். அறிய முடியுமானால் அந்த அறிவு மாறுவது எப்படி என்ற வழியும் தெரியும். ஆனால் இல்லை என்று நினைத்து விட்டால் மாறுதல் என்றுமே சாத்தியமில்லை.

வெளியே காட்டிக்கொள்ளும் தோற்றத்திற்கும், உள்ளே இருக்கும் நிஜத்திற்கும் இடையே உள்ள தூரம் குறையக் குறைய தான் மனிதன் உயர ஆரம்பிக்கிறான். உண்மையான மன நிறைவை உணர ஆரம்பிக்கின்றான். நடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் போகும் போது அவன் உணரும் அமைதியே அலாதியானது. ஆனால் இதற்கெல்லாம் உள்ளே உள்ள நிஜம் அடிக்கடி சந்திக்கப்பட வேண்டும், சிந்திக்கப்பட வேண்டும். அதை மறுப்பதும், தவிர்ப்பதும், மறப்பதும் வாழ்க்கையை என்றும் அதிருப்தியாகவும், துக்ககரமாகவுமே வைத்திருக்கும்.

-என்.கணேசன்
நன்றி: ஈழநேசன்
http://enganeshan.blogspot.com/













tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Wed Sep 08, 2010 7:15 pm

"வெளியே காட்டிக்கொள்ளும் தோற்றத்திற்கும், உள்ளே இருக்கும் நிஜத்திற்கும் இடையே உள்ள தூரம் குறையக் குறைய தான் மனிதன் உயர ஆரம்பிக்கிறான்."

மிகவும் உண்மையான வார்த்தைகள். நல்ல நல்ல கருத்துக்களை கொண்ட ஒரு கட்டுரையை கொடுத்துள்ளீர்கள். நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 08, 2010 9:41 pm

சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி சார்!



ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 08, 2010 10:22 pm

சிவா wrote:சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி சார்!
ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! 359383 ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! 359383

தாங்களின் வருகைக்கு என்வாழ்த்துக்கள் தெரிவித்தவனாக தாங்களைப்பற்றி நமது அன்பு உறவுகளுக்கு அறியத்தருமாறு பணிவோடு வேண்டுகிறேன் .





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Sep 09, 2010 3:13 am

சிறந்த கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
தாங்களின் வருகைக்கு என்வாழ்த்துக்கள் தெரிவித்தவனாக தாங்களைப்பற்றி நமது அன்பு உறவுகளுக்கு அறியத்தருமாறு பணிவோடு வேண்டுகிறேன் .
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ



ஒரே ஒருவரை சந்திக்க மறுக்காதீர்கள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக