புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
64 Posts - 48%
heezulia
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
3 Posts - 2%
prajai
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இரு துறவிகள் Poll_c10இரு துறவிகள் Poll_m10இரு துறவிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு துறவிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:04 am

காசி மாநகரில் ஒரு துறவி வசித்து வந்தார். எளிமையும், தன்னடக்கமும் மிகுந்த அவரை யாரும் தரிசிக்காமல் செல்ல மாட்டார்கள். அவர் எப்போதும் மவுனமாகவே இருப்பார். முகத்தில் அமைதியும் சாந்தமும் ததும்ப பொலிவுடன் அவர் காணப்படுவார். அவரை வந்து தரிசித்தாலே தங்களுக்கு மனக்குறை நீங்கப்பெற்றதாக பக்தர்கள் கருதினர். மக்கள் கூட்டம் அலை மோதினாலும் அவர் செருக்கடையாமல் இருந்தது அவர் பெருமையை மேன்மேலும் மக்களுக்கு உணர்த்தியது.

அந்தத் துறவி எப்போதாவது ஒரு சில வார்த்தைகளே பேசுவார். சிறுவர் சிறுமிகளாக இருந்தால் கல்வி கற்பது அவசியம் என்பார். வாலிபர்களாகவோ, இளம்பெண்களாக வோ இருந்தால் பெற்றவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார். திருமணம் ஆன தம்பதிகளாக இருந்தால் குழந்தைகளை அன்புடன் பேணி வளர்க்க வேண்டும் என்பார்.

ஒளி வாய்ந்த கண்களும், புன்னகை முகமுமாக அத்துறவி இனிமையாகப் பேசும்போது எல்லோரும் வாய் அடைத்து, பக்தியுடன் கேட்டுச் செல்வர். காசித் துறவியின் பெருமை அக்கம்பக்கம் உள்ள நாட்டு மக்களுக்கெல்லாம் தெரிந்தது. அப்போது காசிக்கு விந்திய பர்வதத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து ஒரு துறவி யாத்திரையாக வந்தார். அவருடன் ஐம்பது சீடர்களும் வந்தனர். அவருக்குக் காசித் துறவியை பற்றிப் பலர் கூறவும் அவரை காண ஆர்வத்துடன் சென்றார்.

``ஏன் சீடர்களே... இந்தக் காசித்துறவி மிகவும் மதிப்புமிக்க துறவியாம். இவரைப் பற்றி மக்கள் சொல்லும்போது இவரிடமும் நிறைய சீடர்கள் இருப்பார்கள் என்று தெரிகிறது. எனவே நீங்கள் என்னை மதித்து அவர் முன் என்னை பெருமைப்படுத்த வேண்டும் புரிகிறதா?'' என்றதும் அனைத்துச் சீடர்களும் சரி என்பதாக தலை அசைத்தனர்.

பின்னர் அவரை ஒரு பல்லக்கில் அமர்த்திச் சீடர்கள் மாறி மாறித் தூக்கிச் சென்றனர். அப்போது வழி நெடுகிலும், `விந்திய பர்வதத்தின் கீழ்த்திசை ஆளும் ஆசைத்துறவி வருகிறார்... வருகிறார்...!' என்று பெருஞ்சத்தமிட்டுச் சென்றனர்.

அதைக் கேட்ட மக்களும் அவர் களைப் பின்பற்றிச் சென்றனர்.

காசித்துறவி இருந்த ஓலை குடிலைக் கண்டதும் பல்லக்கில் இருந்த ஆசைத் துறவியார் ஏளனம் செய்தபடி தன் சீடர்களை பார்த்தார். ஒரு சீடனை அழைத்து உள்ளே யாராவது இருக்கிறார்களா என்று பார் என்று கட்டளை கொடுக்கவும் சீடன் குடிலுக்குள் ஓடினான். பின் திரும்பி வந்தான்.

``குருவே... ஒரு துறவி இருக்கிறார். அவர் பார்ப்பதற்குச் சாதாரணமாகக் காணப்படுகிறார். அவர் முகத்தை ஜடா முடி மூடியிருக்கிறது. நீண்ட தாடியோ வயிறு வரை வளர்ந்திருக்கிறது. ஆனால் முகத்தில் மட்டும் புன்முறுவல் மாறாமல் இருக்கிறது. இவர்தான் மக்கள் போற்றும் காசித்துறவியா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது'' என்றான் சீடன்.

பல்லக்கில் இருந்து இறங்கிய ஆசைத்துறவி குடிலுக்குள் சென்று காசித்துறவியிடம் ஏளனமாகப் பேச, அதற்குத் தக்க பதில் கூறினார் அவர்.

உடனே ஆசைத்துறவி, ``சரி துறவியாரே... ஒரு பந்தயம் வைத்துக்கொள்வோம். நான் இந்தக் காசியில் சில காலம் தங்க ஆவலாய் உள்ளேன். நான் எனது சீடர்களுடன் உங்கள் குடிலில் தங்குகிறேன். தாங்கள் என் இருப் பிடம் சென்று எனது ஆசிரமத்தில் தங்குங்கள். அங்கு ஒரு துறவியாக நான் என்னெவல்லாம் செய்துள்ளேன் என்பதைத் தெரிந்து கொள் ளுங்கள். பின்னர் என் பெருமை தங்களுக்குப் புரியும். விந்திய பர்வதத்தின் அரசனே எனக்கு அடிமை!'' என்றார் ஆசைத்துறவி.

காசித்துறவி எதுவும் சொல்லவில்லை. அமைதி யாக அவர் விந்திய பர்வதத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அவர் சென்றபின் புதிய குருவின் ஆடம்பர மும், சீடர்களின் பந்தாவும் சிறிது காலத்துக்கே மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தன. அவரின் போலியான ஆசீர்வாதம், நடவடிக்கைகளில் மக்கள் வெறுப்படைந்தனர். ஒருகட்டத்தில் முற்றிலுமாக குடிலுக்கு வருவதையே நிறுத்திவிட்டனர்.

அதேசமயம் விந்திய பர்வதம் சென்று காசித்துறவியோ மிகத் தன்னடக்கத்துடன் மிக எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். அவரின் உண்மையான எளிமை, தூய்மை, வாய்மை மக்களுக்கு வியப்பளித்தது. தினந்தோறும் பெரும் எண்ணிக்கையில் அவர்கள் துறவியின் குடிலுக்கு வந்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்லத் தொடங்கினர்.

விந்திய பர்வத மன்னன் ஒருநாள் எப்போதும் போல் துறவியை சந்திக்க வந்தான். தங்கத் தட்டில் பழங்களும், நிறையப் பொற்காசுகளும் எடுத்துக்கொண்டு அமைச்சர்கள், தளபதியோடும் அவன் வந்தான்.

முதலில் தன்னைக் கண்டுகொள்ளாத துறவி மீது மிகுந்த கோபம் கொண்டான் அரசன். பின்னர்தான், அவர் அங்கு முன்பிருந்த ஆசைத்துறவி அல்ல, புதிய துறவி என்று அறிந்தான். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், காசித்துறவியின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறினர். உடனே மனம் மாறிய மன்னன், தனது தட்டிலிருந்து தங்கத்தை அவர் முன் பணிவோடு வைத்து ஏற்றுக்கொள்ளும்படி கூறினான்.

ஆனால் அவரோ, ``முற்றும் துறந்த துறவியான எனக்கு இதெல்லாம் அனாவசியம். நíங்கள் இந்தச் செல்வத்தைக் கொண்டு மக்களுக்கு உதவுங்கள்'' என்று மாறாத புன்னகையோடு கூறினார். மன்னன் உண்மையிலேயே காசித்துறவியின் சிறப்பை உணர்ந்தான். அவரிடம் ஆசி பெற்றுச் சென்றான்.

அதே நேரம் காசியில் இருந்த ஆசைத் துறவியின் மீது மக்களின் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. அவர்கள் துறவியின் இருப்பிடத்துக்குச் சென்று, ``எங்கள் துறவி எங்கே? அவரது இருப்பிடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் யார்?'' என்று கோபமாக விசாரிக்கத் தொடங்கினர். அப்போது மக் களைத் தடுக்க முயன்ற காவலர்களுடன் அவர் களுக்குப் பிரச்சினை ஏற்பட்டது.

காசித்துறவியின் இருப்பிடத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவது காசி மன்னனின் காதுக்கு எட்டியது. அங்கே என்ன நடக்கிறது என்று விசாரிக்கும்படி அவர் தனது அதிகாரிகளிடம் கூறினார். விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கு பழைய துறவி இல்லாமல் யாரோ ஒரு புதிய துறவி இருப்பதாகக் கூறினர்.

உடனே அவரை கைது செய்ய உத்தரவிட்டான் மன்னன். அதிகாரிகள் விரைந்து வந்து துறவியைக் கைது செய்ய முயன்றனர். தனது நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று மனம் வருந்தினார் ஆசைத் துறவி. தன்னைக் கைது செய்ய வேண்டாம் என்று அவர் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அதிகாரிகள் விடுவதாயில்லை. அப்போது காசிக்குத் திரும்பி வந்த பழைய துறவி, அவரை விடுவிடுக்கும்படி மன்னனைச் சந்தித்துக் கேட்டார். அவர் மீது பெருமதிப்புக் கொண்ட மன்னனும் அதற்கு ஒப்புக் கொண்டான். எளிமையே எப்போதும் பெருமை தரும் என்பதை உணர்ந்தபடி விந்திய பர்வதத்துக்குப் புறப்பட்டார் ஆசைத்துறவி.

***
ஜி. சுப்பிரமணியன்




இரு துறவிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக