புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_c10எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_m10எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_c10எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_m10எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_c10எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_m10எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_c10எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_m10எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_c10எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_m10எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 17, 2010 11:33 am

சென்னை: புகழ் பெற்ற எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் தகனம் இன்று நடைபெறுகிறது.

62 வயதாகும் அனுராதா ரமணன், தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய, முற்போக்குச் சிந்தனைகளுடன் கூடிய எழுத்தைத் தந்தவர் அனுராதா.

சிறை, கூட்டுப் புழுக்கள், ஒரு மலரின் பயணம், நாளைக்கு நேரமில்லை, ஒரு வீடு இருவாசல், நித்தம் ஒரு நிலா, முதல் காதல் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகள் ஆகியவற்றை படைத்துள்ளார்.

சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகியவை திரைப்படங்களாக உருவெடுத்து வெற்றியும் பெற்றன.

பாசம், புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்டவை தொலைக்காட்சி நாடகங்களாக மாறி புகழ் பெற்றவையாகும்.

1978-ம் ஆண்டு சிறுகதைகளுக்கான போட்டியில் எம்.ஜி.ஆரிடம் இருந்து தங்க பதக்கம் பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறந்த தேசிய சமூக நல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது பெற்றார்.

அனுராதா ரமணன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அடிக்கடி பரிசோதனை செய்து வந்தார்.

கடந்த 5ம் தேதியும் வழக்கமான பரிசோதனைக்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று உடல் நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மாலை நாலரை மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மரணமடைந்தார்.

அதன் பின்னர் அனுராதாவின் உடல் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சொந்த ஊராகக் கொண்ட அனுராதாவுக்கு சுபா, சுதா என இரு மகள்களும், பேரன், பேத்திகளும் உள்ளனர்.

இன்று மாலை வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் கிளம்பி, மாலை நாலரை மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.

அனுராதா ரமணனின் மரணத்திற்கு எழுத்துலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காஞ்சி சங்கராச்சாரியார்...:

சில ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தொடர்பாக அனுராதா ரமணண் வெளியிட்ட பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சங்கராச்சாரியாருக்கு எதிராக ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார் அனுராதா.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 1:03 pm

கலையுலகில் கொடிகட்டிப்பறந்த எழுத்தாளர்களுள் ரமணா மிகச்சிறந்தவர் இவரின் இழப்பு கவலைக்குரியது இவரது எழுத்துக்கள் ரசனைமிகுந்தது இவரின் சோகத்தில் நாமும் பங்கேற்போம் எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் 440806 எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் 440806



நேசமுடன் ஹாசிம்
எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon May 17, 2010 1:25 pm

இந்த மரணத்தையும் தாண்டி எங்களுடன் இருக்கிறீர்கள் அம்மா
என்றும் உங்கள் புன்சிரிப்பான முகம் எங்கள் கண்களுக்குள்
உங்கள் ஊன்றுகோல் வார்த்தைகளும் எழுத்துக்களும் எங்கள் நெஞ்சுக்குள்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் ..................நான் அறிந்த முதல் பெண்
எழுத்தாளர் ,சமூகவாதி நீங்களே அம்மா ..நீங்கள் சொன்ன வலியை பற்றி மரணத்தை
பற்றி சொன்ன வார்த்தைகள் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் 67637



தீதும் நன்றும் பிறர் தர வாரா எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 1:29 pm

எழுத்தாளர் அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம் 440806
அவரது ஆத்மா சாதிடைய இறைவனை பிரார்த்திப்போம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக