புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Today at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
9 Posts - 43%
heezulia
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
8 Posts - 38%
mohamed nizamudeen
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
1 Post - 5%
Guna.D
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
1 Post - 5%
mruthun
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
1 Post - 5%
Sindhuja Mathankumar
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
83 Posts - 51%
ayyasamy ram
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
2 Posts - 1%
mruthun
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_m10பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்


   
   
avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Fri May 14, 2010 9:24 pm

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்


இதுக்குப் போய் பயப்படலாமா?


‘‘நான் தினமும் ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்கிறேன். இந்த பயிற்சியால் பெரிய பலன் இல்லை என்கிறார்களே… இது உண்மையா?’’ பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் P39a

டாக்டர். கண்ணன் புகழேந்தி, விளையாட்டு மருத்துவ ஆலோசகர், சென்னை:

‘‘ஸ்கிப்பிங் செய்வதால் பலனில்லை என்று சொல்லிவிட முடியாது. மற்ற உடற்பயிற்சிகளோடு சேர்த்து, ஸ்கிப்பிங்கையும் சிறிது நேரம் செய்யலாம் . ஷூ அணிந்து காயர் மேட்டில் முறையானபடி ஸ்கிப் செய்ய வேண்டும். இதன்மூலம் கணுக்காலின் தசை நார்கள் வலுப்பெறும். ஸ்கிப்பிங்கை மட்டுமே முழு உடற்பயிற்சியாக நினைத்து அதிக நேரம் செய்தால், மூட்டுவலி வந்து அதற்கு மருத்துவம் பார்க்க நேரிடும். எந்த உடற்பயிற்சியையுமே, முறையாக, வல்லுநர் ஆலோசனை பெற்றுச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அளவுக்கு மீறினால் ஆபத்துதான்!’’

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் End_bar

‘‘எனக்கு வயது 22. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஒவ்வொரு மாதமும் முறையாக மாதவிலக்கு ஆகும் நாள் எனக்குத் தெரியும். ஆறு மாதங்களுக்கு முன், அந்த நாளைக் கணக்கிட்டு கோயிலுக்குச் செல்வதற்காக மாதவிலக்கு தள்ளிப் போவதபகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் P36ற்கான மாத்திரையை சாப்பிட்டேன். அதன்பிறகு எனக்கு மாதவிலக்கு ஆகவேயில்லை. பரிசோதனையில் நான் கர்ப்பமாகி இருப்பது தெரிந்தது. இப்போது நான் ஆறுமாத கர்ப்பிணி.

மாதவிலக்கை தள்ளிப்போட நான் எடுத்துக் கொண்ட மாத்திரையால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமோ என்று என் மனது உறுத்துகிறது. இதைப் பற்றி விளக்குங்களேன்… ப்ளீஸ்!

அதோடு சமீபமாக எனக்கு தயிர் போன்று வெள்ளை அதிகமாக படுகிறது. மார்பகக் காம்புகளை அழுத்தினால் லேசாக வெள்ளை மற்றும் தண்ணீர் போன்று திரவம் கசிகிறது. இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?’’

டாக்டர். தமிழரசி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், நெய்வேலி:

‘‘கர்ப்பம் தரிக்கக்கூடிய வாய்ப்புள்ள பெண்கள் ‘குழந்தை வேண்டாம்’ என்கிற பட்சத்தில் மாதவிலக்கான பதினான்காம் நாள் முதல் தாம்பத்ய உறவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். இல்லாவிட்டால், இது போன்ற சங்கடங்களை தவிர்க்க முடியாது.

மாதவிலக்கு என்பது ஹார்மோன் சுழற்சியால்பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் P36a ஏற்படுவது. மாத விலக்கை தள்ளிப்போடும் மாத்திரைகளும் ஹார்மோன் மாத்திரைகள்தான். இவை ஹார்மோன் சுரப்பில் மாற்றத்தைக் கொண்டுவரும். வயிற்றில் கரு உருவானதுமே மாதவிலக்குக்கான வேலைகள் நின்றுபோய் விடும். ஆகவே மாதவிலக்கை தள்ளிப்போடும் மாத்திரையின் செயல்பாடும், வீரியமும் வெகுவாகக் குறைந்துவிடும். இந்த மாத்திரையால் கருவுக்கு பெரிய அளவில் பாதிப்பு உண்டாகாது என்றாலும், பொதுவாகவே கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு மருந்து, மாத்திரை விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

கரு உருவான 20-ம் வாரத்தில் குழந்தையின் ஆரோக்கிய நிலையைக் கண்டறிய மூன்றாம் நிலை ஸ்கேன் சென்டரில் (3rd level Scan Centre) பரிசோதனை செய்துகொள்வது நல்லது (நீங்கள் இப்போதும் பரிசோதனை செய்யலாம். இருபதாவது வாரம் என்பது பிரச்னையைக் கண்டறியவும், இருந்தால் அதைச் சரி செய்யவும் சரியான காலகட்டம்).

உங்களுடைய அடுத்த பிரச்னையான வெள்ளைபடுதலுக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. ரத்தசோகை, கர்ப்பப்பையை சுற்றி புண் இருத்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல்… இதெல்லாம்கூட வெள்ளைபடுதலை உண்டாக்கும்.

தயிர் போல சற்று கெட்டியாக வெள்ளை பட்டு, கூடவே துர்நாற்றமும், அரிப்பும் இருந்தால் அது இன்ஃபெக்ஷனாக இருக்கும். இது கர்ப்ப காலத்தில் அதிகமாக வரும். இதனை மாத்திரைகள் மூலமே குணப்படுத்தி விடலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும் இதுபோல வெள்ளை படுதல் பிரச்னை ஏற்படும். அப்படி இருந்தால் அதனை பரிசோதித்து சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

உங்களுடைய அடுத்த சந்தேகம் மார்பில் திரவக் கசிவு…

குழந்தை பிறந்த பிறகுதான் மார்பில் பால் சுரக்கும். ஆனால், பால் சுரப்பதற்கான வேலைகள் கருத்தரித்த காலகட்டத்திலேயே ஆரம்பித்துவிடுகின்றன. கர்ப்ப காலத்தில் மார்பை அழுத்தக் கூடாது. அழுத்த அழுத்த, பால் உற்பத்தியை அதிகரிக்கிற புரோலேக்டின் என்கிற ஹார்மோன் அதிகம் சுரப்பதால் பால் சுரக்கும். மார்பை அழுத்தாதபோதும் தானாக பால் சுரந்தால், அது வயிற்றில் இருக்கும் கருவின் ஆரோக்கிய நிலையில் ஏதேனும் தடங்கல் என்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். ஸ்கேன் பரிசோதனை மூலம் அதைக் கண்டறிந்து சரிப்படுத்தலாம்.’’



பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் End_bar

‘‘என்னுடைய பையனுக்கு 19 வயதாகிறது. அவனை எட்டு மாத கர்ப்பமாக சுமந்தபோது, என் மீது திடீர் என்று ஒரு பெரிய பாம்பு உட்கார்ந்து விட்டது. நான் பயந்து பெரிதாக அலறிவிட்டேன். என் பையன் சாதாரண டெலிவரியில் பிறந்து, ரொம்பவும் துறுதுறுவென இருந்தான். 12\ம் வகுப்புவரை எந்தப் பாடத்திலும் பெயில் ஆனது இல்லை.

ஆனால், இப்போது கல்லூரியில் பி.காம் முதல் வருடம் தேர்வில் ஃபெயில் ஆகிவிட்டான். அதிலிருந்து ‘என்னை யாரோ சில பெண்கள் எங்கு சென்றாலும் பின்தொடருகிறார்கள். செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். ராத்திரி முழுவதும் வீட்டு முன் நின்று என்னைப் பார்க்கிறார்கள். நிர்வாணமாக என்னை ஹாலுக்கு வரச் சொல்கிறார்கள்’ என்று உளறுகிறான். ‘அந்தப் பெண்கள் என்னை கொன்று விடுவார்கள். உணவில் விஷம் கலந்து ஓட்டல்காரரிடம் சொல்லி கொடுக்கச் சொல்கிறார்கள்’ என்கிறான். ஏன் இப்படி? அவனால் திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் வாழ முடியுமா? ஆபீஸ் சென்று வர முடியுமா?’’

டாக்டர். வெங்கடேஸ்வரன், மனநல மருத்துவர், கோவை:

‘‘முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்பு கிறேன். இப்போது உங்கள் பையனுக்கு வந்திருக்கும் பிரச்னைக்கும் அவன் கர்ப்பத்தில் இருந்தபோது உங்கள்மேல் பாம்பு உட்கார்ந்ததற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. குழப்பிக் கொள்ள வேண்டாம்.

உங்கள் பையபகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் P39னுக்கு வந்திருக்கும் பிரச்னைக்கு ‘சைகோசிஸ்’ என்று பெயர். இந்த ‘சைகோசிஸ்’ இவர்களுக்குத்தான் வரும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பெரிய நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருப்பவர்களுக்குக்கூட திடீரென்று வரும். பொதுவாக, நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு இது வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம். ஜீன் கோளாறு காரணமாகவும், மனதை பாதிக்கக்கூடிய வகையில் நடைபெற்ற ஏதேனும் சம்பவம் காரணமாகவும்கூட இதுபோல் ஆகலாம்.

நரம்புகளுக்கிடையே செய்திகளை கடத்துகிற டோப்பமின் (dopamine) என்கிற கெமிக்கலில் ஏற்படும் கோளாறுதான் ‘சைகோசிஸ்‘ ஏற்படக் காரணம். அந்த கெமிக்கல்தான் தப்பு தப்பாக செய்திகளைக் கடத்தி உங்கள் மகனை இதுபோல் உணர வைக்கிறது. சைகோசிஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இருக்கிற சூழ்நிலைக்குத் தக்கவாறு பிரச்னைகள் வரும். வெளிநாட்டில் வசிக்கும் சைகோசிஸ் நோயாளி ‘என்னை வேற்று கிரக மனிதர்கள் பின்தொடருகிறார்கள்’ என்பார். உங்கள் பையன் விடலைப் பருவத்தில் இருப்பதால் அவனுக்கு செக்ஸை அடிப்படையாகக் கொண்ட குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இது குணப்படுத்தக்கூடியதுதான். பயப்படத் தேவையில்லை. சிறந்த மனநல மருத்துவரின் துணையோடு தொடர்ச்சியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்னையில் இருந்து படிப்படியாக விடுபடலாம். பிரச்னையின் தன்மையைப் பொறுத்து முற்றிலும் குணமாக ஒன்றிலிருந்து ஐந்து வருடங்கள் வரை ஆகும். சிகிச்சையில் இருக்கும்போதே படிப்பைத் தொடரலாம். வேலைக்குப் போகலாம். ஆனால், திருமணத்தை மட்டும் தள்ளிப் போடுவது நல்லது. அதுவும், பெண் வீட்டாரிடம் திருமணத்துக்கு முன்னரே பையனுக்கு ஏற்பட்ட பிரச்னை பற்றி எடுத்துச் சொல்லிவிடுதல் உத்தமம்!’’



பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் End_bar

‘‘எனக்கு 27 வயதாகிறது. நான் திருமணத்துக்கு முன், மூன்று வருடம் எக்ஸ்போர்ட் கம்பெனியில் பவர் மெஷினில் வேலை செய்திருக்கிறேன். குழந்தை பிறந்தபிறகு செல்லவில்லை. மறுபடியும் நான்கு வருடங்கள் கழித்து வேலைக்குச் சென்றால் இடுப்பு, கை, கால் எல்லாம் பயங்கரமாக வலிக்கிறது. வேலையே செய்ய முடியவில்லை. ஏன் இப்படியானது? எலும்பு நன்றாக வலுவடைய என்ன உணவு சாப்பிட வேண்டும்? இதற்கு டாக்டரிடம் போனால் கரண்ட் வைக்கவேண்டி வருமா? பயமாக இருக்கிறது…’’

டாக்டர் சதீஷ், எலும்பு சிறப்பு மருத்துவர், மதுரை:

‘‘உங்கள் வயதுக்கு மூட்டுத் தேய்மானமோ, எலும்புத் தேய்மானமோ ஏற்பட வாய்ப்பில்லை. உங்களால் வேலை செய்ய முடியாததற்கு, சத்துப் பற்றாக்குறையும் போதிய உடற்பயிற்சி இல்லாமையுமே காரணங்கள். பொதுவாக, பெண்களுக்கு நாற்பது வயதுக்குமேல் எலும்புகள் வலுவிழக்கும் என்பதால், இளம் வயதிலேயே கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பவர் மெஷினில் வேலை பார்ப்பதால், ஒரே பொசிஷனில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பீர்கள். இதனாபகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் P38ல் கழுத்துக்குச் செல்லும் நரம்புகளில் அழுத்தம் அதிகமாகி கை, கால், உடம்பு எல்லாம் வலி எடுக்கும்.

நீங்கள் பால், முட்டை போன்ற கால்சியம் அதிகமுள்ள உணவு வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்வதுடன், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை உங்கள் பொசிஷனை மாற்றி, குனிந்து, நிமிர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். ஃபிஸியோதெரபிஸ்ட்டை கலந்தாலோசியுங்கள். தேவைப்பட்டால் கரண்ட் வைப்பதும் நல்லது தான். தொடர்ந்து ஐந்து நாட்கள் வைத்தால் போதுமானது. பயப்படத் தேவையில்லை. இது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.’’

‘‘என் தோழிக்கு நேர்ந்த விசித்திரமான பிரச்னை இது. அவளுக்கு 37 வயது இருக்கும்போது ஒரு நாள் அவள் கணவருக்கு சாலை விபத்து ஏற்பட்டதாக ஒரு தகவல் வந்தது. அந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அந்த நிமிடமே அவளுக்கு அளவற்ற ரத்தப் போக்கு ஏற்பட்டது. அன்று மாதவிலக்குக்கான நாளும் அல்ல. அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களாக அவளுக்கு மாதவிலக்கு ஏற்படவேயில்லை. அதிர்ச்சியில் அவளுக்கு மெனோபாஸ் ஆகிவிட்டதா? இதனால் ஏதேனும் பிரச்னைகள் வருமா? விளக்குங்கள் ப்ளீஸ்…’’

டாக்டர். ஞானசெளந்தரி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், கன்யாகுமரி:

‘‘உங்கள் தோழிக்கு ஏற்பட்டுள்ளது ‘ப்ரிமெச்சூர் மெனோபாஸ்’. அதாவது, இளமையிலேயே ஏற்படுகிற மெனோபாஸ். மாதவிலக்கு முழுமையாக முற்றுப் பெறுவதற்குமுன்பே அதிர்ச்சியால் இப்படி நேர்ந்துள்ளது. இதனால் மெனோபாஸ் எனப்படுகிற மாதவிலக்கு முற்று நிகழாது. முட்டைப் பையில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் மெனோபாஸ் நிர்ணயிக்கப்படுகிறது. உயிரணுக்களின் எண்ணிக்கை குறையக் குறைய மாதவிலக்கில் ஒழுங்கின்மை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் முழுமையாக நின்றுவிடும். உங்கபகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் P37ள் தோழி விஷயத்தில் அவருக்கு மாதவிலக்கு நின்ற காலகட்டத்தில் அவர் மெனோபாஸுக்கான, வயதையோ மெனோபாஸ் நிலையையோ அடைந்திருக்கவில்லை (பொதுவான மெனோபாஸ் வயது 48). உடனடியாக அவர் மருத்துவரை அணுகியிருக்க வேண்டும்.

இனியாவது தாமதிக்காமல் அவர் மருத்துவரிடம் செல்லவேண்டும். ஏனெனில், இதனால் அவர் உடலில் கால்சியச் சத்து வெகுவாகக் குறைந்திருக்க வாய்ப்புண்டு. அதை சரிப்படுத்தக்கூடிய மாத்திரைகள், உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். தினசரி ஒரு மணி நேர வேக நடைப் பயிற்சியும் அவசியம்.’’



பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் End_bar

நன்றி:- டாக்டர். கண்ணன் புகழேந்தி, விளையாட்டு மருத்துவ ஆலோசகர், சென்னை:

நன்றி:- டாக்டர். தமிழரசி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், நெய்வேலி:

நன்றி:- டாக்டர். வெங்கடேஸ்வரன், மனநல மருத்துவர், கோவை:

நன்றி:- டாக்டர் சதீஷ், எலும்பு சிறப்பு மருத்துவர், மதுரை:

நன்றி:- டாக்டர். ஞானசெளந்தரி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், கன்யாகுமரி:




நன்றி:- அ.வி

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் End_bar

பகுதி-01 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-02 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-03 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-04 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-05 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள்

பகுதி-06 டாக்டரிடம் கேளுங்கள் End_bar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக